அத்தியாயம் 4
அந்த அலுவலகவலாகத்தினுள்ளே தன் வாகனத்தை அதன் தரிப்பிடத்தில் நிறுத்தியவனது கண்கள் அந்த கட்டித்தின் உள்ளே இருப்பவர்களை நினைத்து நெகிழ,அவர்களின் தன்னலமில்லா அன்பில் இதயம் பாகாய் வழக்கம் போல் உருகியது. இவர்களிடம் தனக்கு ஏதோரு ஜென்மாந்திர பிணைப்பு இருந்திருக்க வேண்டும் .இல்லையென்றால் தன் அப்பொழுதைய நிலை நினைத்தவன், அதுவும் வேற்று நாட்டில்,தான் என்னவாகி போயிருப்போமோ... என்றவனின் மனம் நினைவுகளை அசைப்போட தலையை உலுக்கி தன்னை தாக்கும் கடும் நினைவுகளிலிருந்து தன்னை தற்காத்து கொள்ள முயன்றவன் வாகனத்தை சாவியை பத்திரப்படுத்தி விட்டு , உள்ளே சென்றான்.ஆங்காங்கே வேலை செய்தவர்கள் வணக்கம் கூற பதில் வணக்கம் வைத்தவாறு அவர்களை கடந்து வந்தவன் கண்களில் பட்டதென்னவோ தன் வேலையில் கவனமாக இருந்த சாருவை தான்.
"ஹாய் சாரு ...ஹாப்பி மார்னிங் என்றவன்….' கண்களை சுழற்றியவனது பார்வையில் அவன் தேடியது கிடைக்காமல் போக, "எங்க? உன்னுடைய இன்னொரு பாகத்தை காணவில்லை", என்றவனது கேள்விக்கு பதிலளிக்காமல் தனது வேலைகளுக்கான ஆயத்தங்களை மேற்கொண்டவாரே….கண்கள் அங்கிங்கும் அலையவிட்டவாரு தன் வேலையில் கவனமாக இருப்பதும், அங்கிருந்தவைகளை புரட்டுவதும்,பின்னர் மேலும் கீழுமாக தேடுவதும் என அங்கொருவன் இருப்பதையே அறிந்திடாதவள் போல வேலை செய்ய , அவள் காதை நான்றாக திருகி தலையை பிடித்து ஆட்டினான்.
"ஹேய்! தலையை கலைக்காதனு எத்தனை தடவை சொல்றது பார்த்தி", என்று அவன் முடியை எட்டி பிடித்து உலுக்கியவாரு அவன் தலையை திருப்பி கண்களால் காண்பித்து
"உம்பின்னடி தான் என்னுடைய இன்னொரு பாகம் தொங்கிட்டு இருக்கு...கொஞ்சம் பிடிச்சு ஒட்டி விடு" என்றாள்.…
"ஹாய் ..ஹாய்...ஹப்பி மார்னிங்...என்ன புதுசா என்னையெல்லாம் தேடற...வழக்கமா நான் தான் நண்பா ….பார்த்தி...பார்த்தினு தேடுவேன்....இன்னைக்கென்ன அதிசயமெல்லாம் நடக்குது…ஆனாலும் இந்த மாற்றமும் நல்லாதான் இருக்கு. இந்த உலகத்தில் நம்மள தேடவும் ஆளிருக்கே , என வந்து அணைத்த ப்ரியனை
ஒருத்தவங்களுக்கு ஒரு தடவை தான் விஷ் பண்ண முடியும் ...சோ…"என தோளை குலுக்கி கண்களை சுருக்கி உதட்டை பிதுக்கிவிட்டு,அசதியாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
"அப்படினா? …என்னடா! என்னைக்குமில்லா திருநாளா நம்மையெல்லாம் இவன் தேடியிருக்கானேனு கொஞ்சம் நேரம் குழம்பிட்டேன்...இப்ப தான் தெரியுது இவன் மண்ட காஞ்சுபோய், கோளாறு பாலாற ஓடி,அதுல ஒரு துளி நம்ம பக்கமும் அடிச்சிருச்சி போல….
அட ஆண்டவா …ஏன்?...ஏன்?...
ஒரு ஹாப்பி மார்னிங் சொன்னதுக்கே என்ன இப்படி இவங்கிட்ட கோர்த்துவிட்டு காலையிலே வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிட்டீயே…"என்று கடவுளிடம் மனசீகமாக மல்லுக்கு நின்றவன் மனதில்
"அப்படி என்னத்த கேட்டேன் ...இவரு இவ்வளவு பிள்டப்பூ கொடுக்கறதுக்கு என யேசித்தவன் சிந்தனையில் உதயமானது அந்த தாரளபிரபுவின் தாராளம் தான்....இவன் கையில எதையாவது கொஞ்ச நேரம் பார்த்துக்க கொடுத்துட்டு மறுநிமிஷம் வாங்கினாலே...அதுக்கு நொடி வட்டி, நிமிஷ வட்டி, கமிஷன்னு ,வரி நிமிஷத்துல குட்டிப் போட வச்சு பாதிய வெட்டிக்கிட்டு மீதிய கொடுக்கலாமா ...அதையும் ஆட்டைய போடலாமானு யேசிக்கற அளவுக்கு நல்லவன்.
இவன்கிட்ட நானெல்லாம் கனவுல கூட மறந்து போய் கடனா கூட எதையும் கேட்டு இருக்க மாட்டேனே….அப்படி எதை மனசில வச்சிட்டு இப்படி பேசறான்,என மண்டை காய்ந்தவன் என்னவென்று அங்கிருந்தவளிடம் கண்களால் கேள்வி தொடுக்க…
"பார்த்தி கொடுத்த போஸ்ஸ விட ,அவன் கொடுக்கற போஸ் இன்னும் கேவலமாயிருக்கு...ரெண்டையும் கட்டி மேய்க்கனும்னு என் தலையில எழுதி ஒட்டியிருக்கு...ஆண்டவா…."என அவள் பங்குக்கு ஆண்ஞவனை சபைக்கு அழைத்து உள்ளுக்குள் குமுறியவள்தலையில் மானசீகமாக அடித்துக்கொள்ள மட்டுமே முடிந்தது.
"ஏற்கனவே சார் எனக்கு ஹப்பீஈஈஈஈஈ மார்னிங் சொல்லிட்டாரம் ,அதனால உனக்கு தனியா சொல்ல மாட்டாராம்,பேரு பாரு 'பார்த்தா பார்த்திபன்'...பாக்கலனா, வெறும் டீபன்னா என று வாரியவள், ஏதோ இவங்க அப்பா அம்மா வச்சதால இவ்வளவு நீளபேரு…இவன் மட்டும் இவனையே பேரு வச்சிக்கனு விட்டுயிருந்தா வெறும் பன் மட்டும் வச்சிருப்பான்…." .கருமிபய என தோளில் முகத்தை இடித்து பழிப்பு காண்பித்தவள்,பார்த்தியை விட்டுவிட்டு ப்ரியனை முறைத்தாள்.
"அடியேய்! என் கார்ரரரரரமிளகாய்!...எந்த படுபாவி எங்க என்ன செய்ஞ்சாலும்,மறக்காம என்ன வந்து முறைச்சிட்டு போ"...என மனதுக்குள் வருத்தவன்…'அய்யோ அய்யோ ….நீ முறைக்கறதும் ,நான் பம்மறதும்...ம்கும் பம்மற மாதிரி நடிக்கிறதும் ...அது தெரிஞ்சும் கண்டுக்காத போறதும் 'மூச்சும் பேச்சும்' போல ஆச்சு" ...என் பார்வை பார்த்தவன் பார்த்தியை ப்ரியமாக பார்க்க ஆரம்பித்திருந்தான் ப்ரியன்.
"அட, இதுக்கு கூடவாடா கணக்கு வச்சிருப்ப படுபாவி..ஶ்ரீ..சீக்கிரம் நாடு திரும்ப ஆசைப்படறது எல்லாம் சரிதான்.அதுக்காக காலை வணக்கத்தை கட் பண்ணியெல்லாம் காசக்க முடியாது...என விளையாட்டுக்கு அவனை வார, நாடு திரும்பும் ஆசை, அந்த சொற்களால் ஏற்பட்ட தாக்கம் மனத்தை தாக்க அவன் முகம் சோர்வை காட்டியது....
அதை பார்த்த சாரு…"ப்ரியாஆஆஆ",, என முறைத்து அவன் தலையில் அவள் பாசமாக தன் கைக்கொண்டு நங்கூரம் பாய்ச்சிருந்தாள்.
அப்பொழுது விளையாட்டு போக்கில் தான் பேசியதின் வீரியம் உணர்ந்தவன்,என்னடா பேசி வச்சிருக்க என்று தன்னை தானே முறைத்தவன்....ஆனாலும் இவளுக்கு நம்ம நிஜமா பாசம் இருக்கா, இல்ல போர் அடிக்கக்குள்ள டைம் பாஸ் பண்ண பாசத்த நம்ம வாலையண்டரா வளர்த்திருக்காளா...இவ கொட்டன கொட்டுக்கு உள்ள இருக்கறதெல்லாம் உருப்பெல்லாம் யாருடாதுனு வரிசையா வந்து பார்த்துட்டு போனாலும் ஒன்னும் சொல்றதுகில்ல….அவன் ஏதாவது பேசினாலும் என்ன தான் முறைக்கிறா...நான் ஏதாவது வது பேசினாலும் என்ன தான் முறைக்கிறா...இதுங்க பாசமரத்தை வளர்க்க என்னை ஏண்டா உரமாக்கிறீங்க….என்று புசுபுசுவென மூச்சு விட்டவாறு தலையை நன்றாக தேய்த்தவன்... அச்சோ! என மண்டை வலியை அவள் மண்டகபடிக்கு பயந்து கையை வைத்து மறைத்தவன், பார்த்தியை திசை திருப்பும் வேலையில் இறங்கினான்.
"டேய் !காலையில ஓட்டின படத்துக்கு இப்ப கனவா...என்ன சொன்னா 'மதுர விழியாள்...அழகு மொழியாள்'
"என் செல்ல குட்டி என்ன பண்ணாலாம்….இந்த மாமாவ மிஸ் பண்ணத சொன்னால….எப்பொழுதும் போல உங்க படத்தை மட்டும் ஓட்டிட்டு விட்டுடாளா…என்று சோகமாக முகத்தை வைத்துகொண்டு குற்ற பத்திரிகை வாசிக்க ஆரம்பித்தவன் பார்த்தியை" மேலும் கீழுமாக பார்த்து வைத்தான்..
"டேய் அவளுக்கு தான் நீ தனியா ரூட் போட்டு ட்ராக் ஓட்டரியே….அப்புரம் ஏன்டா அப்பாவுக்கும் பொண்ணுக்கு இடையில வர..".என அவனை முறைத்தான்…தன் மண்டையில் வண்டாய் குடையும் ஏக்கத்தை அப்படியே அந்தரத்தில் விட்டு விட்டு மகளின் புராணத்தில் பாசபோருக்கு தாயாராகிவிட்டான்.
நிம்மதி பெருமூச்சு விட்ட ப்ரியன் இளநகை ஒன்றை படரவிட்டவாரு சாருவை பார்த்து எப்படி என புருவஙகளை ஏற்றி இறக்கியவன் தான் நின்றிருந்த இடத்திலிருந்து அகன்று சாரு வேலை பார்த்த மேசையின் ஓரத்தில் சாய்ந்தவாரு வசதியாக வம்பிழுத்தான். ,பார்த்தியை பற்றி அறியாதவனா என்ன ...அவன் பலவீனமும் அறிவான் பலமும் அறிவான்...
"ம்ம்ம்...அது அப்படி தான்… அவ எப்ப உங்கிட்ட பேசனாலும் இந்த மாமனையும் ...இதோ இருக்கால்ல என் இன்னொரு பாதி அவளையும் விசாரிக்கனும்…"என ஏக்கம் இழையோடியதோ! குரலில் .
"உன்னை கேட்காமால….உன்னை பத்தி பேசைலைனா அவளுக்கு பொழுதே போகாதுப்பா.₹, வாய தெறந்தா மாமாவ எப்ப கூட்டிட்டு வருவீங்கனு ஒரே நச்சரிப்பு தான்டா.."
"இரு இரு நிறுத்து நிறுத்து.."என அவசரமாக இடையிட்டான் ப்ரியன்.
"இப்ப என்னடா?" என கண்களை சுறுக்கியவன் வார்த்தையில் கோபம் எப்பொழுது வரலாம் என வாசலில் வழி அடைத்து கொண்டு நின்றிருந்தது.பின்னே மகளை பற்றி பேசும் பொழுது குறுக்கே வந்தால்…. "நீ தான்டா கேட்ட..சொல்லி முடிக்கறதுக்குள்ள அம்பூட்டு அவசரமா எதுக்கு கேட்ட சொல்ல வந்தா இழுத்து சீல் வைக்கற", என வார்த்தைகளை மென்று துப்ப அது தப்பித்தோம் பிழைத்தோம் என தெரித்து சிதறி ஓடியது.
"அடேய் ...அல்வா நாங்க கடையிலையே வாங்கி சாப்பிட்டுட்டோம்".
"அதை என்கிட்ட ஏன்டா என்கிட்ட சொல்லற என ப்ரியனை பார்த்தவன், சரி சொல்றதால கேட்கிறேன், எனக்கு"
என்றான்.
என்னது? உனக்கா!..இது உலகமகா நடிப்புடா சாமி,.கிண்டனவனுக்கே அல்வாவா...
அதுக்காக எங்ககிட்ட கூடவாடா …
நா என்ன சொல்றோம்னு உனக்கு புரியலை இல்ல…"
"இல்லையே.. "என்றுபார்த்தி அப்பாவி தோற்றத்தை அவசரமாக அணிய
"நல்ல்ஆஆஆஆ வருது".....பற்களை நறநறத்தான்.
"ஆனா உம்பொண்ணுக்காக அவ பெத்த அப்பன்ற ஒரே காரணத்துக்காக ஒன்னும் பண்ணாம மன்னிச்சு விடேறேன்".
"உம் பொண்ண பத்தி பேச ஆரம்பிச்சா ,இன்னைக்கு நீ நிறுத்துவ என அவனை பார்த்து கண்களை உருட்ட…"
"ஈஈஈஈஈஈஈ….கண்கள் பனித்தோ..ப்ரியா! நீ கேட்டதால தானே சொல்ல வந்தேன்,இல்லைனா…."
இல்லைனா!..., நீ அவள பத்தி வாய திறந்திருக்க மாட்டல்ல..?என உதடு சுழிக்க...
"ஆமாம்,நானா எப்ப ஆரம்பிச்சிருக்கேன்… நீங்க கேட்டா, கேட்டதுக்காக ஒன்னு ரெண்டு வார்த்தை சொல்ல தான் செய்வாங்க…"
"எத…!.நீங்க ஆம்பிச்சா, ஒன்னு ரெண்டோடு வார்த்தையேடு
நீறுத்திடுவீங்களோ ...அப்ப இவ்வளவு நாள் நீங்க அவள பத்தி ஒன்னு ரெண்டு வார்த்தை தான் சொல்லியிருக்கங்களா...அப்ப எனக்கு அவள பத்தி ஆசை தீர சொல்லனும்னு நினைக்கறன்னைக்கு சொல்லி அனுப்பூங்க,நல்ல காது ஸ்பெலிஸ்ட்டா கூட்டிட்டு வந்து பக்கத்திலேயே வச்சிக்கிறேன்" என்று கலாய்க்க....
பார்த்திபனா கொக்கா...அசந்தால் தானே….ஆதுவும் பேச்சு பெணாணை பற்றி என்பதில் விட்டுகொடுதாதிடுவானா? எனான? என் பொண்ணு பத்தி பேசினா,அதை கேட்டா உனக்கு காது டாக்டர பார்க்கறளவுக்கு கஷ்டமா இருக்கா..இனிமே வருவல்ல மாமா மச்சி, விழி மொழினுட்டு... ஆவள பத்தி கேட்டுட்டு ,அன்னைக்கியிருக்கு உனக்கு விடுவேணா என பேச ,இடையில் பேச வந்த பாரியனை விட்டால் தானே…
"என்னடா செய்வ?" ,அழமாட்டாமல் கேட்க…
"டாக்டருக்கு வைத்தியம் பார்க்க நல்லா டாக்டரா விசாரிச்சு வைக்கனும் என தன்பாட்டில் பேச ",
"அவருக்கு ஏண்டா வைத்தியம் பார்க்கனும்,அவர என்ன செய்ய போற".
"நான் அவள பத்தி பேச ஆரம்பிச்சாலே நீவாய பிளந்துட்டு கேட்க ஆரம்பிச்சுடுவ...அந்த ஆளு தான் கொஞ்ச நேரத்தில மொழி புரியாம முழிக்க ஆரம்பிச்சு , முழிக்க ஆரம்பிச்சு ,அப்புறம் மெது மெதுவா பிச்சுக்க ஆரம்பிச்சுடுவார்".
"அவர் ஏண்டா அப்படி பண்ண போறாரு…"
"ஆங்...சூப்பர்...குட்..நைஸ்...ஷார்ப்…
என்ன கேட்கறத விட்டுட்டு நீயே ட்ரை கொடேன், கண்டுப்பிடி பார்ப்பேம் என மேலும் சீண்ட"
"டேய் அவர் வந்தவுடனே கோபத்துல அவர் மேல கைய கியை வைக்கப்போறீயா..நீ பேசறதே ஒரு மார்க்கமா இருக்கு…"
"ச்ச்ச..ச்ச்ச்சச...அப்படியெல்லாம் இல்லடா...அப்படியே அந்த நேரம் தோணினாலும் நீ இருக்கும் பொழுது அவர் மேல ஏன் கைய வைகக போறேன்…"
ஆங் ,அந்த பயம் இருக்கட்டும்…
"ம்கும்...விழிகளை மட்டும் திருப்பி அவனை பார்த்ததவன்,ஏம்மா சாரு உனக்கு அண்ணா நல்ல மாப்பிள்ளையா பார்க்கிறேன்...இத்து போன கீத்து மட்டை உனக்கு சரியா வரமாட்டான்",என்று கிடைத்த கேப்பில் அவன் காலை வாரினான்..
எத, இத்து போன கீத்து மட்டையா!….முகத்தை அஷ்ட கோணாலாக்கியவன்….மலேசியா வந்தாலும் மண்வாசனை மாற மைந்தனா வாழ்ற மச்சான்…!என்றவன்
சாருவை பார்த்து ஏய்! சார்ர்ர்ரு….பே...இங்க என்ன வேடிக்கை… கூப்படறத்துக்குள்ள அத்தனை வேலையும் அம்போனு விட்டுட்டு வந்துட வேண்டியது..மாமனுக்கு மச்சானுக்கு ஒரு ஃப்ரைவசி இருக்கா…என்று
அவளை துரத்த பார்க்க…
"சாரும்மா ...உங்கிட்ட என்னத்த கேட்டு என்னத்த முடிவெடுக்க….அண்ணா சொன்னா வேண்டாம்னா சொல்ல போற …
இப்பவே இந்த விரட்டு விரட்றான்….
சரிவராது...சரிவராது….
இவனை ஒத்தையில விட்டுட்டு நான் நம்மமூரு பக்கம் மாப்பிள்ளை பாக்கறேன்…"என்றான் பிர்த்தி அவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் பேச்சு போகும் திசையறியாமல்.
"நட்பு துரோகி, ஊருக்கு போய் இருக்குடா", உனக்கு என மனதில் மட்டுமே கருவ முடிந்தது ப்ரியனால்.
பார்த்திபனுக்கு கையயெடுத்து கும்பிட்டு ...ஏண்டா என ஒரு பார்வை பார்த்தவன் …அவள் பக்கத்தில் சென்று கையை பிடித்து அழைத்து வந்து இருக்கையில் அமர்த்தியவனது வாய் வார்த்தைகளை சத்தமில்லாமல் அரைத்து கொண்டிருக்க, மனமோ சாருவை பக்கத்தில் அமர வைத்த பிறகே மனம் சற்று அமைதி அடைந்நது,ஆனாலும் இன்னொரு மனமோ ,அவள் மீதான கோபத்தில் அந்த நாற்காலி தள்ளிவிட உத்தேசத்தில் கால்களை தயார் செய்தது..
சட்டென விழித்துக்கொண்ட புத்தியோ…"அடமுட்டாள்பயலே….உன்னையே மாப்பிள்ளை பார்க்க வைக்கற வரைக்கும் அடங்க மாட்ட போல என புத்தி சொல்லி மண்டையில் தட்ட…"
மண்டையிலிருக்கும் கொண்டையை மறத்திட பார்த்தோம் என முகத்தை சரியாக வைத்துக்கொண்டு பார்த்தியை பார்க்க ...அவனும் இவனை சந்தேகமாக தான் பார்த்து கொண்டிருந்தான்.
"டேய்…!எத பேச ஆரம்பிச்சு எங்க வந்து நிற்கற...ம்ம்ம்….
படுத்தாத சொல்லி தொலை…"என்றான் இதற்கு மேல் இவனிடம் முடியாது என்ற்.
"ம்க்கும் சரி சொல் சொல்றேன்.."
டேய்…! நான் சும்மா ஊஊஊலுலாய்க்கு தான் பேசினேன்….நீ விடாம நோண்டன…
அததேன் ஒரு டைம்பாசுக்கு போற வரைக்கு போகட்டும் னு விட்டுட்டேன்.
ஈன்னது….ச்சும்மாவா….
என்னை வச்சு டைம்பாச பண்ணீங்காளா...கொலைகார பாவிகளா...உங்களுக்கு பாவ தோஷமே கிடையாது….போங்கடா ...என முருக்கி கொண்டு செல்ல ...இவர்கள் இருவரும் அவனை தொங்கி கொண்டு சென்றனர்.
விளையாட்டாக எல்லோரும் கூறுவது தான்...ஆனால் அவ்வார்த்தை ப்ரியனின்.உள்ளத்தை எவ்வளவு வீரியமாக தைக்கும் என பார்த்தி அறிந்தே வைத்திருந்தான். ஆனால் பேச்சு சுவாரஸ்யத்தில் வந்து வீழ்ந்துவிட்டது...அல்லவா முடியும்..அதை உடனே முகத்தில் காண்பித்தால் அவனை இன்னும் தைக்கும். ஒருவரும் உள்ளத்திலும் அவன் வலி அவனை விட அதிகமாக வலிக்க, ப்ரியனை சமாதான படுத்த சென்றனர்.
இதற்கு மேல் தான் அங்கிருப்பது அதிகம் என.நினைத்த பார்த்திபன் தனக்கு வேலையிருப்பதாக கூறி அங்கிருந்து அகன்று சென்றுவிட்டான்.
"டேய் …!டேய்ய்ய்…"சாரு கத்திகொண்டே பின்னால் செல்ல நின்றால் தானே.
"எங்கிட்ட பேசமாட்ட…" அவள் கேட்கும் முன்னே அந்த வார்ததைகள் கமிறி இடறியது ,அழுகை அடைத்ததனால்.
"சாரி என்ன பாருடா…!"என கூறுவதற்குள் சாருவின் கண்களில் கோடாக வழிய ,இதற்கு மேல் கோபத்தை எங்கே இழுத்து பிடித்து வைக்க..
"இதுகொன்னும் குறைச்சலில்லை..!".என்றவன் சட்டென திரும்பி அவள் கண்களை துடைத்துவிட்டான்.
'அவர் சொன்னதும் ஈஈஈஈ எல்லா பல்லையும் இளிச்சிகாட்டிடு நிற்கற ம்ம்ம்..புசுபுசுவென மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.." சாருவின் ப்ரியனுக்கு
அவனுக்கு தெரியும் பார்த்திபன் ,சொன்னதும் இவள் முகத்தை தானே பார்த்தான்...ஒரு நிமிடம் சுருங்கி விரிந்ததும் ,சர் என ஏறிய கோபத்தையே அதனால் தானே கட்டுப்படுத்த முடிந்தது. ஆனாலும் ஆசை கொண்ட மனம் அவளது சமாதானங்களை வாய்மொழியாக எதிர்பார்த்தது காதல் கொண்ட இதயம்.
"நான் தான் ஒன்னுமே பேசலையே...
அப்புறம ஏன் இவ்வளவு கோபம் .."
"நீ வேணும்னா இதயத்திடம் கேட்டு பாருங்க அது ப்ரியா,ப்ரியானு தான் மூச்சு விடுதே...."
"அடிப்பாவி இது எப்போ...நான் கூட ப்ரியன் ப்ரியன் மூச்சு விடும்னு இல்ல நினைச்சேன்….யாருடி அந்த ப்ரியா…"என முகத்தில் ஒவ்வாமையை டன் கணக்காக வழிய விட்டு மேலும் கீழுமாக பார்த்து வைத்தான்.
"அடேய்…!வீணாப்போனவனே...உன்ன போய் சமாதானம் படுத்த வந்தேன் பாரு" என்று சராமாரியாக கவனிக்க…
அவளை வாகாக வளைத்தவன்….இனிமே ஃப்ரியா...ஃரியானு இந்த வாயில வந்தது...என ஆரம்பித்தவனின் செயலில்...என்னங்க இது நான் கூட இந்த பயலை இந்த சமாதானபடுத்தக்குள்ள ஒருவழியாடும் பார்த்தா...இப்பாடியாயிடுச்சு...சரிவிடுங்க….அவனுக்கு தெரிச்ச வழியில அவள கவனிச்சு ஒருவழியா ஆக்கிட்டான்.
"அடேய் …!.இப்பதானங்க சமாதானம் ஆச்சு ...அதுக்குள்ள என்னங்க ...ஆச்சு ...உருட்டுகட்டையோடு துரத்தது…
அதானே இந்த பய வசாம சிக்கினால...வஞ்சனை இல்லாம கொடுக்கல் வாங்கல கச்சிதமா பண்ணினோமா இல்லாம ,,ஏழரைய இல்ல கூட்டி வச்சிருக்கான்.அப்படி என்னத்த பண்ணிட்டான் கேட்கீறீங்களா….என்ன கேட்ட மாதிரி உங்கிட்ட வந்து எனக்கு வேற பொண்ணு பார்க்கலாம்னு சொன்னா என்ன பண்ணுவ கேட்டுவச்சிருக்கான் பிக்காலி...அதான் ,உடம்பு உருளை உருளையா இல்லாம இருந்தா சரிதான்.
பின்ன இவன் தான் இப்படினா அந்த பார்த்தியும் யேசிக்காம எதையாவது பேசிட்டு முகத்தை தூக்கிண்டு திரியறது...இவங்க ரெண்டு பேர் நடுவுல யாருங்க மல்லுக்கட்டியே மூச்சு முட்டி போகுதுங்க அவளுக்கு….நீங்க உருட்டு கட்டையெல்லாம் பத்தாது ...வேற ஆயுதமிருந்தாலும் சிபாரிசு செய்தீகனா பரீசீலிக்கப்படும்...ஏதோ நம்மால முடிஞ்ச உதவி...
அடிதடி இரகளையென இருவர் உலகமும் பார்ப்பவர்களுக்கு ,இதுங்களுக்கு வேற வேலையே இல்லையா என்று தோன்றினாலும்,வார்த்தையில் கூட பிரிதலை விரும்பாதவர்கள்.
அடேய் பார்த்தி பார்த்து இருந்துக்கோ...மலேசியா டாக்டர் மண்டைய பிச்சுக்க வைக்க ...முதல்ல உம்மண்ட பத்திரமா இருக்கனும்ல...பார்த்து இருந்துக்கோட தம்பி…..
ஆம் அவர்கள் இருவரும் பணம் ,படிப்பு,சொந்தம் பந்தமிருந்தும் பெற்றவர்கள் இல்லாது உண்மையான பாசத்திற்காக ஏங்கும் அனாதைகள்….திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர்கள்...
அதனால் என்னவோ ...பார்த்திபனின் அவனின் குடும்பத்தினின் மீதான பாசமும்...மனைவி மீதான காதலும்...மகள் மீது அவன் காட்டும் கொள்ளை பிரியமும் ...அவர்களை வசிகரித்து வசியம் செய்து கட்டி போட்டு வைத்திருந்தது …
இதோ பார்த்திபன் மலேசியா வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது...ஒரு தடவை கூட தாய் நாடு திரும்பவில்லை..
இவர்களின் இருகிய நட்புக்கோ வயது ஒன்றை….
நாடு விட்டு நாடு வேலை செய்ய வந்த புதிதில்...கண் முன்னே நடந்த தவறுக்கு காட்சி பொருளாக இருக்காமல் சாட்சியாக இருந்ததால்….வேலையை விட்டு வெளியே வந்துவிட்டான்...புது இடத்தில் அதற்கு மேல் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை...வேலையையும் தக்க வைத்து கொள்ள இயலவில்லை…
ஆம் அவன் அயல்நாட்டில் வாசம் புரிகிறோம்...அத்தனையும் இழந்து அதனை மீட்டெடுக்கவே இந்த போராட்டம் என்பதனை மறந்து ….தன் மேலதிகாரியிடமே தன் பலத்தை பரிட்சித்து பார்த்துவிட்டான்.
அப்படி என்னதாங்க ஊர் ஊர்விட்டு வந்து இந்த பார்த்தி செய்திருப்பான்...அடுத்த அத்தியத்தில்
மக்களே இதோ அடுத்த அத்தியத்துடன் வந்துவிட்டேன்….உங்க விமர்சனங்களுக்காக ஆவலுடன்.கீழே பகிரவும்.