இராவண காதலி
துடிக்கும் இதயங்கள் - 2
இயலாமையுடன் பார்த்தவர்களுக்கு தங்களின் கண் முன் அவன் வந்து செல்ல அர்ஜூனன்
"கண்ணையும் கையயும் கட்டுங்கடா!" என்றான்.
"ப்ளீஸ் வேண்டாம்! நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க! தய்வுசெய்து கேளுங்க!" என்று கூறுபவளின் வார்த்தைகளை கேட்காதவர்களாய் கருணா கண்களை கட்டிட விமலன் கைகளை கட்டினான்.
"அண்ணே கட்டியாச்சு. இப்போ போலாம்." என்று சத்ரியன் கூற அர்ஜூனன் காரை ஸ்டார்ட் செய்தான்.
"உங்ககிட்ட கெஞ்சி கேட்குறேன். என்னைய எங்கையும் கூட்டிட்டு போகாதிங்க! என்னைய விட்டிங்கன்னா உங்க கண்ணுலபடாம.." என்ற கூறிடும் போதே
"அய்யய்ய... இவளோட ஒரே தொல்லையா போச்சு. டேய் இவ வாயயையும் சேர்த்து கட்டுங்கடா! சும்மா தய்வுசெஞ்சு.. தய்வுசெஞ்சுன்னு.. கடுப்ப கிளப்புறா!" என தலையில் அடித்துக் கொண்டான் கணேஷ்.
"ரொம்ப கடுப்பாகிட்டான் போல. இந்தாம்மா, உன்னைய விட்டுட்டு போயி எங்கள உசுரவிட சொல்றீயா?" என்று சிரிப்புடன் அவளது வாயினை கட்டினான் விமலன்.
"ம்ம்ம்..." என திமிறியவள் கண்ணீருடன் காயத்தின் வலியினாலும் சோர்வினாலும் மயங்கியதை கண்டு வேறுபுறம் திரும்பிக் கொண்ட நாகசூதனின் கண்கள் கலங்கியது.
*******
"அண்ணா ப்ளீஸ்னா! நாங்க சொல்றது உண்மைண்ணா! நம்புங்க! நிஜமா அவ தெரிஞ்சே பண்ணலண்ணா!" என்று சாதனாவும் கீர்த்தனாவும் அழுதிட
"இப்போ நீங்க சும்மா வறீங்களா இல்லாயாடி?! சும்மா, அண்ணா நொண்ணான்னு! டேய்! கண்ணையும் கையயும் கட்டுனீங்களே, வாய கட்டுனீங்களாடா? பாரு தொண தொண்ன்னு வராளுங்க." என்று சந்துரு பின்னால் அமர்ந்திருந்தவர்களை திட்டிட வேகமாய் இருவரின் வாயினையும் கட்டினர்.
"ம்ம்.. ம்ம்..." என்று இருவரும் திமிற
"அடிங்க! சும்மா கிடங்க!" என ஒருவன் அறைந்த வேகத்தில் இருவரும் மயங்கினர்.
"இத முதலே பண்ணிருக்க வேண்டிதானே? எதுவா இருந்தாலும் ஒன்னு கொடுத்தா தான் வேலை செய்வீங்களாடா?!" என்றுவிட்டு அமைதியானான் சந்துரு.
"அண்ணே, அண்ணேகிட்ட சொல்லிட்டீங்களா?"
"நாமா சொல்லிதான் அண்ணனுக்கு தெரியனும்னு இல்ல. உட்காந்த இடத்துல இருந்தே எல்லாத்தையும் பார்த்துட்டுதான் இருப்பாரு."
"இல்ண்ணே எதுக்கும்..."
"சொல்லிட்டேன்டா!!! போதுமா?! வாய முடிட்டு கொஞ்ச நேரம் அமைதியா வாங்க!!" என்று சீறிட அமைதியாகினர் உடன் இருந்தவர்கள்.
*******
தன் கண்களில் கட்டியிருந்த துணியினை அவிழ்க்க முயன்றுக் கொண்டிருந்த நாகேஷிடம்
"நாகேஷ் சார், கண்ண திறக்க எந்த முயற்சியும் பண்ணாதிங்க. அப்றம் முயற்சி பண்ண மூச்சு இருக்காது." என இளங்கோ கூற அமைதியானார்.
"படிச்சவருன்னு காட்டிட்டே இருக்கீங்களே சார் நீங்க. அதான் அதுக்குதான், உங்களலாம் எப்படி கடத்தனுமோ அப்படி கடத்தனும்." என்று கூறிக் கொண்டே மயக்க மருந்து நிறைந்த கைக் குட்டையை அழுத்த திமிறலுடன் மயக்கமுற்றார் நாகேஷ்.
"என்னம்மா, உங்க புருஷன் சத்தத்த காணோமேன்னு தவிக்கிறீங்களா? என்ன பண்ணோம்னு சொல்லவா? இல்லல்ல.. செஞ்சே காட்டுறேன்." என சத்யாவிற்கும் மயக்க மருந்தை அழுத்தினான்.
அருகில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கண்களையும் வாயினையும் கட்டியிருந்த சஞ்சீவ் பயத்தில் அமர்ந்திருப்பதை கண்டவன்
"பொடியன கூட நம்ப கூடாதுடா. புடி இத அவனுக்கும் அழுத்து." என பின்னால் அமர்ந்திருந்தவனிடம் கொடுத்தான் இளங்கோ.
*******
அழகான வடிவமைப்பு கொண்ட அந்த கருநிற இரும்பு கேட்டின் முன் டாட்டா சுமோ வந்து நிற்க கதவு திறக்கபட்டது. கார் உள்ளே நுழைய ஆங்காங்கே அடியாட்கள் நின்று கவனித்துக் கொண்டிருந்த அந்த ஓரடுக்கு வெள்ளை மாளிகை இருளிலும் கம்பீரமாய் காட்சியளித்தது.
"நான் கேட்டு வறேன். நீங்க எல்லாரும் கார்லயே இருங்க." என்றபடி காரிலிருந்து இறங்கினான் அர்ஜூனன்.
இறங்கியவன் வாசற்படி ஏறிட உள்ளிருந்து ஓட்டமும் நடையுமாய் வந்தான் மாறன் என்பவன்.
"மாறா அண்ணா.."
"அந்த பொண்ண ப்பிஏம்ட்டிக்கு கூட்டிட்டு போக சொன்னாங்கண்ணே."
"சரி." என்றவன் விடைபெற
"அண்ணே இருங்க, உங்கள வர சொன்னாரு." என்றிட
"என்ன சொன்னாரு?!" என்று கேட்டான்.
"வர சொன்னாரு. போங்க." என்றதும்
"டேய், நீங்க இவள அங்க கட்டி வைங்க. அண்ணன பார்த்துட்டு வறேன்." என்றவன் சிறு தலையசைப்புடன் உள்ளே செல்ல உடன் மாறனும் சென்றான்.
அப்பெரிய மாளிகையினுள் ஆடம்பரத்திற்கு எந்த குறிப்புமில்லாமல் சராசரி எளிய மனிதனுக்கு தேவைபடும் பொருட்களன்றி வேறெதுவும் இல்லாமலிருக்க பார்ப்பவர்களுக்கு இப்படியும் மனிதன் வாழ்கிறான என எண்ணி வியக்கும் அளவிற்க்கு எளிமையாய் நீல நிற சிறு விளக்கொளியுடன் காட்சியளித்தது கீழ் தளம்.
"அண்ணே எப்படிடா இருக்காரு?"
"அமைதியாதாண்ணே இருக்காரு. அதான் பயமா இருக்கு."
"இத முன்னாடியே சொல்லிருந்தா நான் அப்படியே போயிற்ப்பேனேடா!"
"வர சொன்னப்றமும் எப்படி போவீங்க?"
"வாங்கனும்னு இருந்தா வாங்கிதான் ஆகனும். வேற வழி இல்ல."
"என்னண்ணே, ரொம்ப நொந்து போயிருக்கீங்க போல?"
"ரொம்ப...டா! அதுவும் அந்த பொண்ண பிடிக்குறத்துக்குள்ள படாதபாடு பட்டுட்டோம்." என இரு பிரிவாய் பிரிந்திருந்த படிகட்டுகளின் ஒன்றில் பேசியபடி நான்கு அறைகளை கொண்ட மேற்தளத்தை அடைந்தனர்.
"மெல்ல பேசுங்க. அண்ணே காதுல விழுந்துட போகுது."
"ஆமாடா. சரி, நான் போய் அண்ணன பார்க்குறேன்." என்று முதலறையின் கதவை தட்டிட
"வா." என்ற அமைதியான குரல் கேட்டதும்
'குரல் ரொம்ப அமைதியா இருக்கே..' என பயத்துடன் உள்ளே நுழைந்தான் அர்ஜூனன்.
அறையில் இருள் சூழ்ந்திருக்க நடுநாயகத்தில் மட்டும் ஒளிர்ந்திருந்த சிவப்பு நிற விளக்கொளின் கீழ் கண்கள் மூடி அமர்ந்திருந்தான் அவன்.
தன் முன் அமைதியாய் நின்றவனிடம்
"ஏன் இவ்ளோ நேரம்?" என்று கேட்டபடி கண்விழிக்க அர்ஜூனன் ஓரடி பின்னே எடுத்து வைத்தவன்
"அது.. இல்லண்ணே.."
"ம்ம்... பக்கத்துல வா." என்று நிமிர்ந்தமர்ந்தவனின் அருகினில் பயத்தினூடே சென்றான்.
"அது.. அண்ணே.. அந்த பொண்ண...."
"அவ எந்த பக்கம், எப்படி, எங்க போயிட்டு இருப்பான்னு நான் அவ்ளோ தெளிவா சொல்லியும், அவள கண்டு பிடிக்க இவ்ளோ நேரமாச்சா?" என அமைதியாய் கேட்டான்.
"அண்ணே.. நாங்க சரியான நேரத்துலதான்.." என நடுங்கியபடி கூறியவனை கையுயர்த்தி தடுத்தவன்
"மாறா!!" என்று கத்தவும் அர்ஜூனனுக்கோ பயத்தில் வியர்த்திட பதட்டத்துடன் உள்ளே நுழைந்தான் மாறன்.
"கணேஷ வர சொல்லு." என்றதும் அர்ஜூனனின் கண்களில் கண்ணீர் திரையிட துவங்கியது.
"சரிண்ணா." என மாறன் வெளியில் செல்ல
"இல்லண்ணா! கணேஷ் வேகமாதாண்ணா ஓட்டுனான். அவன் மேல தப்பில்லண்ணா! நானும் பக்கத்துலதானண்ணா இருந்தேன். அவன் வேகமாதாண்ணா ஓட்டுனான்." என்று கால்களை பற்றிக் கொண்டு அழுதான் அர்ஜூனன்.
*******
அர்ஜூனன் சென்றதும் காரினை மாளிகையின் பின்பக்கம் அமைந்துள்ள இரு வீடுகளில் ஓன்றின் முன் நிறுத்தினான் கணேஷ்.
"டேய் பார்த்து தூக்குங்கடா. ஏற்கனவே பல காயம் பலி ஆட்டுக்கு." என்று சிரித்தான் விமலன்.
"ஆமா.. ஆமா.. என்ன ஓரே கவலன்னா, இந்த ஆட்டுக்காக வாங்குன அடி மாதிரி வேற எதுக்காகவும் நாம வாங்குனது இல்லடா." என்றான் கருணா.
"அப்படி சொல்லு மச்சி! எனக்குலாம் இரத்தமே வந்துருச்சுடா." என தன் காயங்களை பார்த்தான் சத்ரியன்.
"இவன் ஏன்டா அமைதியாவே இருக்கான்?" என்று நாகநாதனை கேட்டான் விமலன்.
"அவனுக்கு பலி ஆட்ட பத்தி ரொம்ப கவல. அப்படிதான நாகா?" என நக்கலாய் கேட்டான் சத்ரியன்.
"நாளைக்கு சாக போறவள பத்தி எதுக்குடா கவலபடுற?" என்று கருணா கேட்க அமைதியாய் நின்றிருந்தான் நாகநாதன்.
"இவன் சொல்லமாட்டான். டேய் நாக, நீயே பலி ஆட்ட உள்ள கொண்டுபோய் நல்லா கட்டு. உள்ள இருக்கவனுங்க எங்கள மாதிரி இருக்கமாட்டானுங்க. அவன்ங்க பக்கா மொறடனுங்க. நீ இவளுக்காக கவலபடுறது தெரிஞ்சுச்சு, வெயில்ல கட்டி வச்சு சோறு தண்ணியில்லாம உட்கார வச்சுருவான்ங்க பாத்துக்க." என எச்சரித்தான் விமலன்.
பின் நாகநாதன் மயங்கி கிடந்தவளை தன் தோளின் மீது தாங்கியபடி அந்த ப்பிஎம்ட்டி என்னும் வீட்டின் கதவை தட்டிட ஆஜானபகுவாய் ஒருவன் கதவை திறக்க அமைதியாய் உள்ளே சென்றான்.
நல்ல வெளிச்சமும் காற்றோட்டத்துடனும் பெரிய ஹால், கிட்சன் மற்றும் படுக்கையறை கொண்ட வீட்டின் உட்பகுதியை கண்டதும் நாகநாதன் ஒருவாறு நிம்மதி கொள்ள. அடுத்த நொடி
"எவ்ளோ நேரம் நின்னுட்டே இருப்ப? சீக்கிரம் போ." என்ற ஆஜானபகுவானவனின் குரலில் திடுக்கிட்டான்.
"என்ன? சீக்கிரம் உள்ள போ." என்றிட புரியாமல் விழித்தான்.
"என்ன புதுசா?"
"ம்ம்."
"என்கூட வா." என்று பெட்ரூமிற்கு அழைத்துச் சென்று அறைக் கதவு மற்றும் ஜன்னல்களை மூடியவன் அவ்வறையில் போடபட்டிருந்த கட்டிலை நகர்த்தி தரையின் குறிப்பிட்ட இடத்தை காலால் அழுத்திட படிகட்டுகளுடன் சிவப்பு ஒளி நிறைந்த கீழ்தளம் திறந்தது.
"என்னடா, எத கண்டாலும் வாய பொலந்துட்டு நிக்குற? இறங்கு." என்று தள்ளிட தடுமாறியபடி உள்ளே இறங்கினான் நாகநாதன்.
*******
வெளியில் விமலன், கருணா, சத்ரியன் மற்றும் கணேஷ் நால்வரும் சிரித்து பேசிக் கொண்டிருக்க வேகமாய் ஓடி வந்தான் மாறன்.
"என்னடா, ஏன் இவ்ளோ அவசரம்?" என கருணா கேட்க
"அண்ணே கணேஷ கூட்டிட்டு வர சொன்னாரு." என்றான் மூச்சுவாங்கியபடி.
நால்வரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள
"வா போலாம்." என்றான் கணேஷ்.
இருவர் செல்வதையும் கண்டவர்களின் மனம் ஏனோ அழுத்தியது.
மாறன் அறைக் கதவை தட்டிட
"வா." என்றதும் இருவரும் உள்ளே நுழைந்தனர்.
"உன்ன உள்ள கூப்பிட்டேனா?" என மாறனை கேட்க
"இல்லண்ணா.." என்றவனிடம்
"இல்லல்ல, பின்ன எதுக்கு வந்த?" என்றதும் அமைதியாய் வெளியே செல்ல அர்ஜூனன் வலியுடன் கணேஷை ஏறிட அமைதியாக பார்த்தான் கணேஷ்.
"என்ன கணேஷ், கட்ட வண்டி ஓட்டுனியா, கார் ஓட்டுனியா?" என தன் காலை ஓர் ஜீவன் பிடித்து அழுவதையும் பொருட்படுத்தாது அமைதியாய் கேட்டவன் கணேஷை தன் அருகில் வர செய்தான்.
"வேகமாதாண்ணே ஓட்டுனேன்." என நடுக்கத்தோடு வெளிவந்தது பதில்.
"ம்ம்... உன் வேகத்த நானும் பார்த்தேன்." என்று தன் வாட்சை அமைதியாய் காட்டிட அவ்வறையில் அர்ஜூனன் மற்றும் கணேஷின் இதய சத்தங்கள் சலனமின்றி கேட்டது.
"ரொம்ப வேகமா துடிக்குதோ?" என்று அர்ஜூனனை உதறியவன் நொடிப் பொழுதில் கணேஷின் இதயத்தில் கத்தியை இறக்கிவிட்டு "இனி துடிக்காது!" என்று கத்தியை ஆழமாய் திருகினான்.
அதிர்ச்சியும் வலியுமாய் கீழே சரிந்தவனை கண்ணீருடன் ஏறிட்டான் அர்ஜூனன்.
"மாறா!" என அழைக்க உள்ளே நுழைந்த மாறனின் கண்களிலும் கண்ணீர் திரையிட்டிருந்தது.
"இவன தூக்கிட்டு போ." என்றதும் அமைதியாய் தூக்கிச் செல்ல அர்ஜூனன் எழுந்து நின்றான்.
"சந்துரு எங்க இருக்கான்?" என இரத்தம் நிறைந்த கத்தியை பார்த்தபடி அமர்ந்தவனின் மீண்டும் குரலில் அதே அமைதி.
"இன்னும் இரண்டு நிமிசத்துல வந்துருவான்..ண்ணே." என்றவனின் குரலில் அழுகை அடக்கப்பட்டிருந்தது.
*******
"எப்பா! சரியான நேரத்துக்கு வந்துட்டோமாடா?" என்று தன் வாட்சை பார்த்தவன்
"இப்போதான்டா மூச்சே வருது." என்று இறங்கினான் சந்துரு.
"அவங்கள கொண்டு போய் ப்பிஎம்ட்டில போட சொன்னாரு. உங்கள பார்க்க வர சொன்னாரு." என அமைதியாய் கூறினான் மாறன்.
"மாறா சொன்னது கேட்டுச்சுல்ல? சொன்னத செய்ங்க." என்றவன்
"ஏன்டா அமைதியா இருக்க? எவன் போனான்?" என்று மாறனின் அருகில் சென்றான்.
"கணேஷ்..." என்றான் சிறு கண்ணீருடன்.
"சரி, நான் போய் அண்ணேன பார்த்துட்டு வறேன்." என்று உள்ளே சென்றவனின் கண்களிலும் அதே கண்ணீர்.
கதவு தட்டிட அமைதியன குரலில் சந்துருவிற்க்கும் அதே பயம் பரவியது.
"அண்ணா கூப்டிங்கன்னு.."
"ம்ம்.. அவ குடும்பத்தையும் பிரண்ட்ஸூங்களையும் பார்க்குற தூரத்துல கட்டி வை. அவ மட்டும் பார்க்கனும். அவங்க யாரும் அவள பார்க்கக் கூடாது. அவ கதறல நான் பார்க்கனும்." என்று அமைதியாய் கூறினாலும் அச்சிவப்பு நிற ஒளியில் அவனது இரக்கமற்ற நெஞ்சினின் வஞ்சத்தை பிரதிபளிக்க இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
"சரிண்ணா." என இருவரும் கிளம்பியதும்
"வருவேன்." என்று கண்களை மூடினான்.
*******
பொழுது புலரும்வேளைதனில் இளங்கோவின் கார் அம்மாளிகையினுள் அமைதியாய் நுழைந்தது.
"எப்படி கரைக்ட்டா வந்துட்டேன்ல?" என்று இளோங்கோவிடம் கேட்டான் ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவன்.
"உசுருமேல அவ்ளோ ஆசைன்னு சொல்லு." என்று சிரித்தபடி கீழே இறங்கினான் இளங்கோ.
"அண்ணே.." என மாறன் வர
"தெரியும் மாறா. நான் பசங்ககிட்ட முன்னாடியே சொல்லிவிட்டேன். அவன்ங்க சரியா பண்ணிருவான்ங்க." என்றான் இளங்கோ.
"கண்ண.."
"கண்ணு கட்டிதான் இருக்கும், மூனுபேரும் மயக்கத்துலயே இருப்பாங்க, போதுமாடா ராசா?" என்று சிரிக்க சரியென தலையசைத்தான்.
"சரி, இன்னும் அரைமணி நேரத்துல அண்ணே கீழ இறங்கிருவாரு, அதுகுள்ள நான் குளிச்சுட்டு குட்டித் தூக்கம் போட்டு வறேன். டேய் எல்லாத்தையும் சரியா பண்ணிருங்கடா." என்றபடி மாளிகையின் பின்புறம் செல்லும் இளங்கோவை பார்த்தபடி நின்றான் மாறன்.
*******
காரில்
"சரிம்மா நான் மறக்கமாட்டேன். கண்டிப்பா கூட்டிட்டு வறேன்." என்று ஃபோனில் புன்னகையோடு பேசிக்கொண்டு வந்தவன் கார் நின்றதும் ட்ரைவரை திரும்பி பார்க்க
"சார் வீடு வந்துருச்சு." என்றார் ட்ரைவர்.
"நான் அப்றம் பேசுறேன்." என்று கட் செய்தவன் தன் கருநிற கூலிங் கிளாஸுடன் கம்பீரமாய் இறங்கியவனின் பூட்ஷூம் யூனிஃபார்மும் சொல்லியது அவன் போலீஸென.
ஆம், அவன் ஸ்ரீபதியன் அஸிஸ்டன்ட் கமீஷ்னர் ஆஃப் போலீஸ்.
'வீடு பூட்டிருக்கு?' என்று யோசித்தபடி தன் ஃபோனை எடுத்தவன் அதில் NV என்ற எண்ணிற்க்கு அழைப்புவிடுக்க ஸ்விட்ச் ஆஃப் என்றுவர ட்ரைவரிடம் அருகில் உள்ளோரிடம் விசாரிக்க கூறியவன் NV frd1 என்ற நம்பரிற்க்கு அழைத்தான்.
அருகில் உள்ள வீட்டில் சென்று விசாரிக்க துவங்கினார் ட்ரைவர்.
"பக்கத்து வீட்ல மூனு பொண்ணுங்க இருந்தாங்களே அவங்க எங்க?"
"தெரில சார். மூனுநாளா அவங்கள காணோம். எங்க போனாங்கன்னு தெரியல." என்றார் அவர்.
"மூனுநாளா காணோமா?"
"ஆமா சார். ஏன் எதுவும் பிரச்சனையா சார். மூனுபேரும் ரொம்ப நல்ல பிள்ளைங்க சார்."
"இல்லம்மா.. இல்லம்மா.. எங்க சார்க்கு தெரிஞ்சவங்க அதுனாலதான் பார்க்க வந்தோம்."
"ஓ.. சரிங்க சார்." என்று ஸ்ரீபதியனை எட்டிப் பார்த்தபடி கூறினார் அவர்.
ட்ரைவர் ஸ்ரீபதியனிடம் கூற
"வாட்!! மூனுநாளா காணோமா?! ஷட்!" என்று நெற்றியை தேய்த்துக் கொண்டவன்
"சரி, கார கமிஷ்னர் ஆபிஸ்க்கு விடுங்க." என்றதும்
"ஓகே சார்." என வேகமாய் காரினை ஸ்டார்ட் செய்தார்.
தன் முன் காற்றின் வேகத்தால் பக்கங்களை அலசிக் கொண்டிருந்த புத்தகத்தினை கையில் எடுத்தவன் முதல் பக்கத்தினை பார்க்க அதில்
'இராவண காதலி ஆசிரியர்: நாகவந்தனா' என்றிருந்தது.
துடிக்கும் இதயத்துடன் அப்பெயரை வருடியவன்
"ஒன்னும் ஆகிருக்க கூடாது." என்றவனின் ஃபோன் அலறியது.
"ஹலோ என்னாச்சு? வாட்!! உன்னோட ஏரியாதான அது? வீட்ட உடைச்சு ஒரு குடும்பத்த கூட்டிட்டு போயிற்க்கான்ங்க.
யாருக்கும் எதுவும் தெரிலன்னு சொல்ற?!"
"..."
"அந்த ஏரியால எங்கையாவது கேமரா இருக்கான்னு செக் பண்ணு."
"..."
"அதெப்படி அவன்ங்க கேமராவ.. ஷட்!!! சரி நீ நல்லா விசாரி. கண்டிப்பா, கண்டிப்பா எதாவது ஒரு க்ளூ கிடைக்கும்." என்று கட் செய்தவனின் இதய துடிப்பு அதிகரிக்க
"உங்களுக்கு எதுவும் ஆகவிடமாட்டேன்." என தனக்குள் கூறிக் கொண்டான்.
*******
மெதுவாய் கண்கள் திறந்தவள் தலைவலியால் முகம் சுழிக்க கைகளை தூக்க முயன்றவள் அப்பொழுதே தான் எங்கிருக்கிறோம் என்று கவனித்தாள்.
சிவப்பு ஒளி நிறைந்த அந்த பெரிய அறையில் ஆங்காங்கே ஆயுதங்களும் இரத்த கரைகளும் நிறைந்திருக்க உடன் இரண்டு அடியாட்கள் நின்றிருந்தனர்.
பேச முயன்றவள் அப்பொழுதே தன் வாய் கட்டபட்டிருப்பதை உணர்ந்தவள் இருவரையும் பார்த்திட அவ்விருவரின் பார்வையும் அவளின் எதிர்திசையை நோக்கி இருக்கவும் தன் எதிரே நோக்கியவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.
தன் எதிரே தன் தோழிகள் தன் குடும்பமும் கை, கால் மற்றும் கண்கள் கட்டபட்டு மயக்கத்தில் இருப்பவர்களை பார்த்தவளின் கண்களில் கண்ணீர் குற்றவுணர்வோடு வெளிவந்தது.
"ஓ.. உன் குடும்பமா?" என ஒருவன் கேட்க
'ஆமென' வேகமாய் தலையசைத்தாள்.
"அப்போ இன்னைக்கு நமக்கு வேட்டைதான்." என்ற மற்றோருவன் கத்தியை அருகிலிருந்த இரும்பினில் உரச கண்டவளின் இதயம் வேகமாய் துடித்தது.
*******
இராவணன் வருவான்...
ஹாய் தோழமைகளே எப்படி இருக்கு யூடி ரொம்ப பெருசா இருக்கா? இல்ல இழுக்குற மாதிரி இருக்கா? எதுவா இருந்தாலும் தயங்காமல் கூறுங்கள். மேலும்
தங்கள் கருத்துக்களை கதைப் பகுதியில் பதிவிடாமல் கீழே உள்ள linkல் பதிவிடலாமே
https://www.sahaptham.com/community/threads/இராவண-காதலி-comments.480/
-நான் உங்கள் நாகவேணி அழகர் ராஜன்.