Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


இருளில் கண்ணீரும் எதற்கு?

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." கதையில் வந்த பிரணவ்வின் கதை. படித்து மகிழுங்கள். மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். 🥰

 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கண்ணீர் - அத்தியாயம் 1

ஆடவனின் பார்வை வீச்சை தாங்காது வெண்மதியவள் மேகக் கூட்டங்களின் பின்னே ஒளிந்து கொள்ள, அதனை வெறித்துப் பார்த்துக் கொண்டே புகையை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தான் பிரணவ்‌.


"ஆர்யான்… நீ என்ன பண்ணினாலும் தாரா எனக்கு தான்… அவளை நான் அடையாம விட மாட்டேன்… இந்த என்கேஜ்மென்ட் எப்படி நடக்கும்னு நானும் பார்க்குறேன்…" எனக் கோபமாகக் கூறியவன் கையிலிருந்த சிகரெட்டை கீழே போட்டு மிதித்து நசுக்கினான்.


************************************


மூர்த்தி மற்றும் லக்ஷ்மி தம்பதியினரின் ஒரே மகன் தான் பிரணவ். வசதி வாய்ப்பில் குறைவற்றவன். பணத்திலே வளர்ந்தவன். மூர்த்தி மற்றும் லக்ஷ்மி இருவருக்கும் எப்போதும் பணம் சம்பாதிப்பதே ஒரே குறிக்கோள். அதனால் அடிக்கடி இருவரும் வேலை விஷயமாக எங்காவது கிளம்புவர். அப்போதெல்லாம் பிரணவ்வைப் பார்த்துக் கொள்வது வேலைக்காரர்கள் தான். அவனை சுற்றி எல்லாவற்றுக்கும் வேலைக்காரர்கள் காணப்படுவர். பிரணவ்வின் பெற்றோர் தகுதி பார்த்தே மற்றவர்களிடம் பழகுவர். தம்மை விட வசதியில் குறைந்தவர்களை கீழ்த்தரமாக நினைப்பவர்கள். அதனையே தம் மகனுக்கும் கற்றுக் கொடுக்க, பிரணவ்வும் தகுதி பார்த்தே பழகினான். அவனின் நண்பர்கள் கூட நன்கு வசதியானவர்களாகவே இருந்தனர். பெற்றோரைப் பின்பற்றி வளர்ந்தவன் என்பதாலோ என்னவோ அனைத்திலுமே சிறந்ததை மட்டுமே விரும்பினான். ஆனால் அவனின் வாழ்வில் விதிவிலக்காக வந்து சேர்ந்தவன் தான் அபினவ்.


பிரணவ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது. அன்று அவனின் பிறந்தநாள். பெற்றோரிடமிருந்து வாழ்த்து வராது என்பதை அறிந்திருந்திருந்தும் எப்போதும் போல் அவர்களின் வாழ்த்துக்காக காத்திருக்க, அன்று முழு நாளுமே அவர்கள் அவனுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் போகவும் ஆத்திரம் அடைந்து பாதையைக் கடந்து மறுபக்கம் நிற்கும் தன் வண்டியில் ஏறச் சென்றவன் தூரமாக வந்த லாரியைக் கவனிக்கவில்லை. ஆனால் சரியான சமயம் எங்கிருந்தோ ஓடி வந்த அபினவ் பிரணவ்வை இழுத்ததால் நூலிழையில் தப்பித்தான் பிரணவ். அபினவ்விற்கு தான் கை கால்களில் லேசாக சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. அப்போது தான் அவன் எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டு உள்ளோம் என்பதை புரிந்து கொண்டவன் தன் அருகில் விழுந்து கிடந்த அபினவ்விடம் சென்று, "ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ... எவ்வளவு பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்தி இருக்கீங்க... நீங்க வரலன்னா என்ன நடந்து இருக்கும்னே நெனச்சி பார்க்க முடியல..." என்க,


"இட்ஸ் ஓக்கே... தேங்க்ஸ் எல்லாம் வேணாம்... நான் கிளம்புறேன்..." என்று விட்டு செல்ல முனைந்தான் அபினவ்.


பிரணவ், "முதல்ல வாங்க ஹாஸ்பிடல் போகலாம்... உங்களுக்கு காயம் ஆகியிருக்கு..." என்கவும் மறுத்த அபினவ், "அதெல்லாம் ஒன்னும் இல்லை... சின்ன காயம் தான் ப்ரோ... கொஞ்சம் நேரத்துல தானா ஆறிடும்..." என்றவனை வலுக்கட்டாயமாக மருத்துவமனை அழைத்துச் சென்று காயத்திற்கு மருந்திட்டான்.


பின் இருவரும் மருத்துவமனையை விட்டு வெளியே வரவும், அபினவ் கிளம்பப் பார்க்க, "ஒரு நிமிஷம் இருங்க ப்ரோ... எனக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கீங்க... உங்க நேம் என்ன? என்ன பண்றீங்க? எங்க தங்கி இருக்கீங்க?" எனப் பிரணவ் கேட்க,


"ஐம் அபினவ்... எம்.எஸ்.வி. காலேஜ்ல செகன்ட் இயர் டெக்னாலஜி படிக்கிறேன்... ஹாஸ்டல்ல தான் தங்கி இருக்கேன்..." என்கவும் அதிர்ந்த பிரணவ், "ஹேய் அப்போ நீங்க எங்க க்ளாஸா? சாரி அபினவ்... எனக்கு தெரியல..." என்றான்.


அபினவ், "இட்ஸ் ஓக்கே பிரணவ்... பட் எனக்கு உங்கள தெரியும்... சரி எனக்கு ரொம்ப லேட் ஆகிடுச்சு... நான் கிளம்புறேன்..." என்றவனை தடுத்த பிரணவ், "எங்க கிளம்புறீங்க... இனிமே நாம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்... நீங்க ஹாஸ்டல்ல எல்லாம் தங்க வேணாம்... எங்க வீட்டுல தங்கிக்கோங்க..." என்க, "உங்க ஃப்ரெண்ட்ஷிப்ப நான் ஏத்துக்குறேன்... பட் நான் ஹாஸ்டல்லயே இருந்துக்குறேன்... எனக்கு அதான் கம்ஃபடபிளா இருக்கும்..." என்றான் அபினவ்.


பிரணவ், "அதெல்லாம் முடியாது... எங்க வீட்டுல நான் தனியா தான் இருக்கேன்... உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது... நிச்சயம் உங்களுக்கு கம்ஃபடபிளா இருக்கும்... ப்ளீஸ் மறுக்காதீங்க..." என்கவும் வேறு வழியின்றி சம்மதித்தான் அபினவ்.


அன்றிலிருந்து இருவரும் நல்ல நண்பர்களாயினர். அப்போது தான் பிரணவ்விற்கு உண்மையான நட்பின் அர்த்தமே புரிந்தது. அவனின் பழைய நண்பர்கள் எல்லாம் எப்போதும் கூத்தும் கும்மாளமுமாகவும் இருக்கவும் வேறு எதாவது தேவைக்காகவும் தான் பிரணவ்வுடன் பழகினர். ஆனால் அபினவ்வோ பிரணவ்வின் தவறுகளை சுட்டிக் காட்டி தேவையான சமயம் கடிந்து கொண்டு அவனைத் திருத்தினான். பிரணவ் கொஞ்சம் கொஞ்சமாக தன் மற்ற நண்பர்களிடமிருந்து விலக ஆரம்பிக்கவும் அதில் ஆத்திரமடைந்தவர்கள் பிரணவ்வையும் அபினவ்வையும் பிரிக்க சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர். அபினவ்வின் சகோதரனான ஆதர்ஷ் அபினவ்வைக் காண வரும் போது பிரணவ்வுடன் பழகி இருவருக்கும் இடையில் நல்ல நட்பொன்று உருவாகியது.


நாட்கள் இவ்வாறு வேகமாகக் கடக்க, பிரணவ்வும் அபினவ்வும் தம் கல்லூரிப் படிப்பை முடித்தனர். அபினவ் ஒரு கம்பனியில் வேலைக்கு சேர, பிரணவ்வோ அவனின் தந்தை மூர்த்தி வற்புறுத்தியதால் அவர்களின் கம்பனிப் பொறுப்பை ஏற்றான். பிரணவ் அபினவ்வையும் தன் கம்பனியில் வேலைக்கு சேர கூற, அவனோ முடியாது என உறுதியாக மறுத்து விடவும் இதற்கு மேல் அவனை கட்டாயப்படுத்த முடியாது என பிரணவ்வும் அமைதியாகினான்.


அபினவ்வின் ஊரான பூஞ்சோலைக் கிராமத்தில் ஊர்த் திருவிழா நடைபெறுவதால் பிரணவ்வையும் அழைத்துக் கொண்டு தன் ஊருக்குக் கிளம்பினான். அங்கு தான் முதன் முதலாக சிதாராவைப் பார்த்தான் பிரணவ். அபினவ்வின் காதலியான அக்ஷராவின் தோழி தான் சிதாரா. சிதாராவைப் பார்த்த நொடியே பிரணவ்வின் மனதில் ஏதோ ஒரு உணர்வு. சிதாராவையே அவன் கண்கள் பின் தொடர்ந்தன‌.


சிதாராவின் நினைவில் இருந்தவனுக்கு ஏதோ அழைப்பு வரவும் அதே மகிழ்ச்சியில் அழைப்பை ஏற்க, மறுபக்கம் அவனின் பழைய நண்பனான ராகுல் தான் அழைத்திருந்தான்.


பிரணவ் எடுத்ததும், "சொல்லு மச்சான்..." என உற்சாகமாகப் பேச, "என்ன பிரணவ்... புதிய ஃப்ரெண்ட் கிடைச்சதும் எங்கள எல்லாம் மறந்துட்டேல்ல நீ... கண்டுக்கவும் மாட்டேங்குற... ஃபோன் பண்ணா கூட எடுக்க மாட்டேங்குற..." என ஒரு மாதிரி குரலில் கூறவும் அதனை உணராத பிரணவ்வோ, "அப்படி எல்லாம் இல்லடா... இங்க அபி கூட அவங்க ஊர்த்திருவிழா பார்க்க வந்திருக்கேன்..." என்க,


ராகுல், "ஓஹ்... அதான் நீ அவ்வளவு குஷியா இருக்கியோ..." என வார்த்தையில் வன்மத்தை தேக்கி வைத்து கேட்க, அதை புரிந்து கொள்ளாத பிரணவ்வோ, "அதுவும் தான் மச்சான்..." என்றவன் சிதாராவைப் பற்றி ராகுலிடம் கூறினான்.


பிரணவ் கூறியதைக் கேட்ட ராகுல், 'ஓஹோ... சார் லவ்வுல விழுந்திட்டீங்களோ... இதை வெச்சே உன்னையும் அந்த அபினவ்வையும் பிரிச்சு காட்டுறேன்டா... உன்ன பத்தி எனக்கு ரொம்ப நல்லா தெரியும்டா... என்ன சொன்னா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னும் தெரியும்டா...' என மனதில் நினைத்தவன், "டேய்... பார்க்குறதோட நிறுத்திக்கோடா... லவ்வு கிவ்வுன்னு பண்ணி வெச்சிடாதேடா..." என்கவும் புரியாமல் முழித்த பிரணவ்,"என்னடா சொல்ற?" எனக் கேட்க,


"நீ சிட்டியிலேயே வளர்ந்தவன்டா... உனக்கு இந்த கிராமத்து பொண்ணுங்களை பத்தி சரியா தெரியாது மச்சான்... அதுங்க எங்கடா பணக்கார பையன் மாட்டுவான்னு பார்த்துட்டு இருப்பாளுங்க... நீ மட்டும் லவ்வுன்னு போய் நின்னா உடனே ஏத்துக்கிட்டு நல்லா உன் கிட்ட இருந்து பணத்தை கரந்துடுவாளுங்க... ஆனா அதுக்கு மேல ஒன்னும் நடக்காதுடா... அதுங்க யூஸ் பண்ணிட்டு தூக்கி போட மட்டும் தான் சரிப்பட்டு வரும்டா... பார்த்து இருந்துக்கோடா..." என ராகுல் கூறவும் அதனை உண்மை என நம்பியது தான் அவன் வாழ்வே திசை மாற காரணமாகியது.


அன்று இரவு மேடை நாடகம் நடந்து முடிந்ததும் ஆதர்ஷின் அத்தை மகளான லாவண்யா அவனுடன் ஏதோ சண்டை பிடித்துக் கொண்டிருக்க, அவளின் அருகில் நின்ற சிதாராவையே பிரணவ்வின் கண்கள் மொய்த்தன. பிரணவ்வின் பார்வை கண்டு முகம் சிவந்தவள் தலை குனிந்துகொள்ள பிரணவ்வின் மனதில் ராகுல் கூறியவைகளே ஓடின.


அடுத்து வந்த நாட்களும் திருவிழா களை கட்ட, பிரணவ்வோ சிதாராவையே எப்போதும் பின் தொடர்ந்தான்.


இதனை அபினவ் அவதானித்து பிரணவ்விடம் கேட்க அவனோ,


"எனக்கு அவள பிடிச்சிருக்குடா மச்சி..." என்கவும் பிரணவ் சிதாராவை காதலிக்கிறான் என நினைத்துக் கொண்டான் அபினவ்.


அபினவ் பிரணவ் கூறியதை ஆதர்ஷிடம் கூற, "இங்க பாருடா... அவன் எனக்கு ஃப்ரென்ட் ஆக முன்னாடியே சித்து என்னோட தங்கச்சி... இவனோட காதலால அவளுக்கு எந்த பிரச்சினையும் வராம பார்த்துக்கோ..." என்றான்.


லாவண்யாவும் அக்ஷராவும் ஒரு ஐஸ் க்ரீமிற்காக சண்டை பிடித்துக் கொண்டிருக்க, சிதாரா அவர்களை விட்டு சற்று தள்ளி வரவும் அவளிடம் வந்த பிரணவ்,


"தாரா.. நான் உன் கூட கொஞ்சம் தனியா பேசணும்..." என்று கூற,


அவனது தனிப்பட்ட தாரா என்ற அழைப்பில் அவனையே விழி விரித்து நோக்கினாள் சிதாரா.


பிரணவ், "எனக்கு உன்ன பிடிச்சிருக்கு தாரா... நீ ரொம்ப அழகா இருக்காய்... ப்ளீஸ் உன் நம்பர் கிடைக்குமா..." என்க,


அவனின் பார்வை ஏற்கனவே சிதாராவை ஏதோ செய்ய,


தன் அண்ணனின நண்பன் தன்னிடம் இவ்வாறு கூறவும் எப்படி எதிர்வினையாற்ற என தெரியாமல் முழிக்க,


அவள் யோசிக்கும் இடைவேளையில் அவள் கரத்திலிருந்த மொபைலைக் கண்டு கொண்ட பிரணவ் அவள் கையிலிருந்து அதனைப் பறித்து அவசரமாக தன் எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்து விட்டு அவளிடமே ஒப்படைத்தான்.


பிரணவ்வின் இந்த திடீர் செயலில் அதிர்ந்த சிதாரா அவன் விரல் தன் கரத்தை தீண்டவும் அவளுள் நடந்த இரசாயன மாற்றத்தில் அவஸ்தைப்பட்டாள்.


அதற்குள் லாவண்யாவும் அக்ஷராவும் அவர்களை நோக்கி வருவதைக் கண்ட பிரணவ் சிதாராவிடம் ஹஸ்கி வாய்சில்,


"பாய் தாரா... அப்புறம் கால் பண்றேன்..." என்று விட்டு அங்கிருந்து சென்றான்.


பிரணவ்விற்கு தான் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறோம் என்றே புரியவில்லை. சிதாராவிடமிருந்து அவளின் எண்ணை வாங்கியும் அவளுக்கு அழைக்காமல் இருந்தவன் ஒருவேளை ராகுல் ஏதோ தவறாக கூறி இருப்பான் என எண்ணி மறுநாள் காலையிலேயே அவளுக்கு அழைத்தவன் சிதாரா அழைப்பை ஏற்றதும், "தாரா…" என்க, சிதாரா அவசரமாக, "ஏங்க நைட்டு கால் பண்ணல?" என்கவும் பிரணவ்வோ ராகுல் கூறியவை அனைத்தும் உண்மை என எண்ணிக் கொண்டான்.


பிரணவ், "என் காலுக்கு வெய்ட் பண்ணியா தாரா..." என்க, "ஹ்ம்ம்.." என்ற சத்தம் மட்டும் தான் அவளிடம் வந்தது.


'இந்த பிரணவ் கிட்டயே உங்க சீப்பான புத்திய காட்ட பார்க்குறியா? இருடி உனக்கு நல்ல வேலை பண்றேன்… லோ க்ளாஸ் புத்தியே இப்படி தான்… ச்சே…' என மனதிற்குள் எண்ணிய பிரணவ், "உன்ன பாத்ததும் எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சு போச்சி தாரா... இதை முதல்ல உங்க ஆதர்ஷ் அண்ணா கிட்ட தான் சொன்னேன்... அவருக்கும் சம்மதம்னு சொன்னாரு..." என்றான்.


சிதாரா ஆதர்ஷ் மீதிருக்கும் பாசத்தில் ஆதர்ஷ் என்ன கூறினாலும் செய்வாள் என அறிந்து வைத்திருந்த பிரணவ் அதற்காகத்தான் முதலிலே இதனை சிதாராவிடம் கூறினாள்.


அதே போல் சிதாராவும் அவன் கூறியதை நம்பி ஆதர்ஷ் எப்போதும் தனது விடயத்தில் தவறான முடிவு எடுக்க மாட்டான் என அதன் பின் பிரணவ்வுடன் எந்த தயக்கமுமின்றி பேச ஆரம்பித்தாள்.


திருவிழா முடியும் வரையிலுமே இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.


லாவண்யா, அக்ஷரா கூட இதனை அறிந்து சிதாராவை கேலி செய்தனர்.


அபினவ்வோ சிதாராவும் பிரணவ்வை விரும்புவது அறிந்து தன் நண்பனுடன் அவள் இணைந்தால் நண்பர்களுக்குள் பிரிவு வராது என எண்ணி அக்ஷராவை சைட்டடிக்கும் வேலையில் மூழ்கினான்.


ஆதர்ஷ் தான் பிரணவ்விடம் அடிக்கடி, "அவ என் தங்கச்சிடா... அவளுக்கு குழந்தை மனசு... எந்த காரணம் கொண்டும் அவள கஷ்டப்படுத்திராதே.." என்பான்.


பிரணவ்வும் ஒரு தலையசைப்புடன் கடந்து விடுவான்.


பிரணவ்வின் தீண்டல் சிதாராவில் மாற்றத்தை ஏற்படுத்துவதை அறிந்து கொண்டவன் ஒவ்வொரு முறையும் அவளை சந்திக்கும் போதும் அவள் கரத்தை பிடித்து தடவியபடி பேசுவான்.


சிதாராவோ அவன் தீண்டலில் மயங்கி கிடக்கவும் பல தடவை அவளை மேலும் நெருங்க முயற்சித்தான்.


ஆனால் ஏதாவது ஒரு தடங்கல் வந்து அவனால் முடியாமல் போய்விடும்.


திருவிழா முடிய அபினவ், பிரணவ் இருவரும் மீண்டும் சென்னை கிளம்பினர்.


ஆனால் பிரணவ் சிதாராவுடன் எப்போதும் தொடர்பில் இருந்தான்.


இவ்வாறிருக்க ஒருநாள் பிரணவ் தன் ஆஃபீஸில் வேலையாக இருக்கும் போது திடீரென சிதாரா அழைத்து என்ன ஏது என்று காரணம் கூறாது அவனை ஊருக்கு வருமாறு அழைக்கவும் சலித்துக் கொண்டவன் அனைத்துக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என நினைத்து அபினவ்விடம் கூட கூறாது சிதாராவை சந்திக்க பூஞ்சோலைக் கிராமத்துக்கு சென்றான்.


ஒரு கோயிலில் பிரணவ்விற்கு முன்பே சிதாரா வந்து அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.


பிரணவ்வோ சிதாரா வந்ததும் அவள் கைப்பிடித்து, "எப்படி இருக்காய் தாரா... ஐ மிஸ்ட் யூ சோ மச்.." எனக் கூறி அவளை அணைக்க வரவும் அவனைத் தடுத்த சிதாரா,


"பிரணவ்... எனக்கு பயமா இருக்கு... தயவு செஞ்சி எங்க வீட்டுல வந்து உடனே பேசுங்க..." என்க,


அவள் கூறுவது புரியாது முழித்த பிரணவ், "என்னாச்சு தாரா... உங்க வீட்டுல வந்து நான் என்ன பேசனும்?" என்றான்.


சிதாரா, "எங்க வீட்டுல எனக்கு கல்யாணம் பேசுறாங்க பிரணவ்... எங்க அத்த அவங்க பையனுக்கு என்ன கல்யாணம் பண்ணி வைக்க ட்ரை பண்ணுறாங்க.." என்க,


பிரணவ்வோ அவள் கையைத் தடவியபடியே, "இனி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே..." என்க சிதாரா அதிர்ந்தாள்.


பிரணவ் தன்னைக் கேலி செய்கிறான் என நினைத்த சிதாரா,


"என்ன விளையாடுறீங்களா பிரணவ்? நான் சீரியசா பேசிட்டு இருக்கேன்..." என்கவும்,


"நானும் சீரியசா தான் சொல்றேன் தாராமா..." என்றான்.


"என்ன பிரணவ் சொல்றீங்க? உங்கள காதலிச்சிட்டு நான் எப்படி இன்னொருத்தனுக்கு கழுத்த நீட்டுவேன்... நீங்களும் என்னை காதலிக்கிறீங்கல்ல... அப்போ எங்க வீட்டுல வந்து பேசுங்க.." என அழுதபடி சிதாரா கேட்க,


அவள் கரத்தை விட்ட பிரணவ், "நான் எப்போ உன்ன காதலிக்கிறதா சொன்னேன்?" என்றான்.


பிரணவ் தன் கையை விட்டதும் அவனைப் புரியாது பார்த்த சிதாரா அதன் பின் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தாள்.


சிதாரா, "திருவிழா நேரம் நீங்க தானே என்ன பிடிச்சிருக்கிறதா சொன்னீங்க... அதுக்கப்புறம் பேசும் போது கூட ரொம்ப உரிமையா காதலிக்கிறது போல தானே பேசினீங்க..." என்க,


சத்தமாக சிரித்த பிரணவ், "நீ என்ன லூசா தாரா... பிடிச்சிருக்குதுன்னு சொன்னா காதலிக்கிறேன்னு அர்த்தமா... இப்போ கூட எனக்கு உன்ன பிடிச்சிருக்கு தான்... அதுக்காக உன்ன காதலிக்க எல்லாம் இல்ல... பார்க்க ஏதோ அழகா இருந்தாய்... பிடிச்சிருக்குன்னு சொன்னேன்... அவ்வளவு தான்..." என்றான்.


சிதாரா, "இல்ல... எனக்கு தெரியும்... நீங்க பொய் சொல்லுறீங்க... வாங்க இப்பவே போய் வீட்டுல பேசலாம்..." என அழுதுகொண்டே அவன் கைப்பிடித்து இழுக்க,


அவள் கையை உதறியவன், "ஏய்... ஒரு தடவ சொன்னா புரியாதா உனக்கு... அறிவில்லயா... அதான் சொல்றேனே நான் உன்ன காதலிக்கலன்னு... நீ ரொம்ப அழகா இருந்தாய்... உன் அழக நானும் கொஞ்சம் அனுபவிக்கனும்னு தோணுச்சி... அதான் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்... பல தடவ உன்ன நெருங்க ட்ரை பண்ணேன்... முடியல... அதுக்காக உன்னயெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா...


அழகான பையன் ஒன்னு.. அதுவும் சிட்டில இருந்து வந்தவன்.. பிடிச்சிருக்குன்னு சொன்னதும் உடனே பிடிச்சிக்குவீங்களே... இவ்வளவு மாடர்ன் வேர்ல்ட்ல இன்னுமே பாவாடை தாவணி கட்டி, முடிய கூட எண்ணைய பூசி இழுத்து கட்டிக்கிட்டு இன்னும் அந்தக் காலத்துலயே இருக்குற உனக்கெல்லாம் என்ன கல்யாணம் பண்ணிக்குற தகுதி இருக்கா... நான் எங்கயாவது போறன்னா கூட உன்ன கூட்டிட்டு போய் என் பக்கத்துல நிற்க வெச்சா எனக்கு தான் அசிங்கம்... உனக்கும் எனக்கும் ஏணி வெச்சா கூட எட்டாது...


சாதாரண கிராமத்துக்காரி நீ... உனக்கு சிட்டி வாழ்க்கை கேக்குதோ... உன்னயெல்லாம் அனுபவிச்சிட்டு தூக்கி போட மட்டும் தான் நல்லா இருக்கும்... கல்யாணம் பண்ணி வாழ்க்கை பூரா குப்பை கொட்ட முடியாது... உனக்கேத்த கிராமத்துப் பையனா பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டு பத்து பதினஞ்சி குழந்தை பெத்து போட்டு அத வளத்துட்டு வீட்டோட இரு... அத விட்டுட்டு சிட்டி வாழ்க்கை எல்லாம் ஆசைப்படாதே..." என்றான்.


பிரணவ்வின் வார்த்தைகள் சிதாராவின் மனதை சுக்குநூறாக உடைத்தது.


பின், "வரட்டா பேபி..." என அவள் கன்னத்தை கிள்ளியவன் செல்லப் பார்க்க, பிரணவ்வின் காலில் விழுந்த சிதாரா அவன் காலைக் கட்டிக் கொண்டு,


"தயவு செஞ்சி என்ன விட்டு போய்டாதீங்க... என்னால நீங்க இல்லாம வாழ முடியாது... உங்கள தவிர என்னால வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது... ப்ளீஸ்... உங்களுக்கு பிடிச்ச மாதிரி கூட என்னை நான் மாத்திக்குறேன்... என்ன விட்டு மட்டும் போக வேணாம்..." என அழுது கெஞ்ச,


"ச்சீ... போடி அந்தப்பக்கம்.." என அவளை உதறி விட்டுச் சென்றான் பிரணவ்.


************************************



தவறான நட்பினால் ஒரு அப்பாவிப் பெண்ணின் மனதை உடைத்து விட்டுச் சென்றவனுக்கு பரிசாக விதி என்ன வைத்துக் காத்திருக்கிறதோ?

************************************

 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கண்ணீர் - அத்தியாயம் 2

அடுத்து வந்த நாட்களில் பிரணவ் சிதாரா என்ற ஒருத்தியையே மறந்து விட்டான். இருவருக்கும் இடையில் நடந்தது எதுவுமே அபினவ்விற்கும் ஆதர்ஷிற்கும் தெரியாது. சிதாரா எதுவும் சொல்லவில்லை. பிரணவ்விடம் கேட்கவும் விடவில்லை. அது பிரணவ்விற்கு இன்னும் சாதகமாக அமைந்தது. அப்படி இருந்த ஒரு சமயம் தான் விதி மீண்டும் சிதாராவை பிரணவ்வின் கண் முன் காட்டி அவனின் வாழ்வையே தலைகீழாக புரட்டிப்போட்டது.

பிரணவ் தன் தொழிலில் சுயமாக முன்னேறி நல்ல நிலையில் இருந்தான். ஒருநாள் அவனின் நண்பனான அபினவ் பிரணவ்விற்கு அழைத்து மறுநாள் ஊட்டிக்கு ஏதோ சுற்றுலா செல்ல அழைத்திருந்தான். உற்ற தோழனின் பேச்சை மறுக்க முடியாது சம்மதித்தான் பிரணவ்.

மறுநாள் பிரணவ் அபினவ்வின் ஊருக்குக் கிளம்பத் தயாராக இருக்கும் போது அவனிடமிருந்து மீண்டும் ஒரு அழைப்பு வந்தது. அபினவ், "மச்சான் ஏர்போட்ல ஒருத்தங்க வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க.. நீ வரும் போது அவங்கள பிக்கப் பண்ணி இங்க கூட்டிட்டு வரியா" என்க, "சரி நீ நேம் என்ட் எப்படி இருப்பாங்கன்னு சொல்லு" எனக்‌ கேட்டவனுக்கு அபினவ் பதில் சொல்லப்போக, அதற்குள் அவனை யாரோ அழைக்கவும், "மச்சான் நீ போய் கால் ஒன்னு தா.. அவங்களே வருவாங்க.. சரிடா இங்க சின்ன வேலையொன்னு.. பாய்..." என அழைப்பைத் துண்டித்து விட்டான்.

பிரணவ்வின் கத்தல் எதுவும் அபினவ்வின்‌ செவியை அடையவில்லை. "ப்ச்.. இவன் வேற யாருன்னு டீட்டைல்ஸ் சொல்லாம கட் பண்ணிட்டான்.. எல்லாம் முடிஞ்சி கடைசில என்ன ட்ரைவர் வேலையையும் பார்க்க வெச்சிட்டான்.. எல்லாம் என்‌ தலையெழுத்து.." எனக் கூறிவிட்டு காரை‌ உயிர்ப்பித்தான்‌ பிரணவ்.

ஏர்போட்டை அடைந்தவன் அபினவ்வுக்கு அழைத்து, "நான் வந்துட்டேன்..எங்க இருக்காங்கடா" என்க, "உன்னோட கார் நம்பர் குடுத்து இருக்கேன்டா.. வெய்ட் பண்ணு வருவாங்க.." என்றான் அபினவ். பின் காரிலிருந்து இறங்கி மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் தன் முன் நிழலாட மொபைலிலிருந்து பார்வையை அகற்றியவன் தன் முன்னே யாரென்றே அடையாளம் தெரியாதவாறு லக்கேஜ்ஜுடன் விரித்து விட்ட கூந்தல், கண்ணில் சன் கிளாஸ் அணிந்து மாஸ்க் போட்டு கறுப்பு ஷேர்ட், ஜீன்ஸ் அணிந்து கையில் ஓவர்கோட், ஹேன்ட்பேக் சகிதம் நின்றிருந்தவளை கேள்வியாய் நோக்கினான். பின் நினைவு வந்தவனாக "நீங்க தான் அபினவ் சொன்னவங்களா... வாங்க கிளம்பலாம்.. உங்க லக்கேஜ குடுங்க.. நான் எடுத்து வெக்கிறேன்.." என்றவன் அந்தப் பெண்ணிடமிருந்து லக்கேஜை வாங்கி காரில் ஏற்ற, அவள் ஏறியதும் கார் புறப்பட்டது.

சிறிது நேரத்தில் அப் பெண்ணுக்கு ஒரு அழைப்பு வர, அவள் அதனை ஏற்றுப் பேசவும் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஓட்டிக்கொண்டிருந்தவனின் நெற்றியில் யோசனை முடிச்சுகள்.

பிரணவ் மனதில், 'இந்த வாய்ஸ் நம்ம ரொம்ப கேட்டு பழக்கப்பட்ட வாய்ஸா இருக்கே...யாரா‌ இருக்கும்...' என யோசித்த வண்ணம் ஃப்ரொன்ட் மிரர் வழியாக அப் பெண்ணைப் பார்த்தான். மாஸ்க் போட்டு இருந்ததால் அவனால் அடையாளம் காண இயலவில்லை.

"ப்ச், யாரா இருந்தா நமக்கென்ன" என மீண்டும் பாதையில் கவனம் செலுத்தினான். அப் பெண்ணோ அழைப்பில் மூழ்கி இருந்தாள்.

அந் நேரம் அபினவ் மீண்டும் பிரணவ்வை தொடர்பு கொண்டான். எடுத்ததும், "மச்சான் ஆல் ஓக்கே தானே... எதுவும் பிரச்சினை இல்லல்ல... எங்க இருக்கீங்க..." என அபினவ் பதற்றமாக கேக்க, பிரணவ் "எதுக்கு மச்சான் இவ்ளோ டென்ஷனா இருக்காய்.. பக்கத்துல வந்துட்டோம்... ஆல் ஓக்கே.. என்ன பிரச்சினை வர போகுது... நீ கூட்டிட்டு வர சொன்னவங்க முகத்த கூட நான் பார்க்கல இன்னும்..." என்க, அந்தப்பக்கம் அபிணவ் பெருமூச்சு விடுவது நன்றாகவே கேட்டது.

பின் அபினவ், "சரி மச்சான். நீ சீக்கிரமா வந்து சேரு... நாம அப்புறமா பேசலாம்..." என பிரணவ் மேலும் கேள்விகளை அடுக்கு முன் அவசரமாக அழைப்பை துண்டித்தான்.

பிரணவோ, "என்னாச்சு இவனுக்கு..‌எதயுமே முழுசா சொல்லுறான்‌ இல்ல.." என சலிப்பாக கூறிக் கொண்டான்.

சிறிது நேரத்தில் கார் கிராமத்தை‌ அடைந்தது. உடனே வண்டியிலிருந்து இறங்கியவள் லக்கேஜ்ஜை கூட எடுக்காமல் அவனிடம் எதுவும் சொல்லாமல் நேராக வீட்டை நோக்கி நடந்தாள்.

அவள் செல்வதைக் கண்ட‌ பிரணவ், "அவ்வளவு தூரம் ஓசில இந்தப் பொண்ணுக்கு ட்ரைவர் வேலை பாத்திருக்கேன்... ஒரு தேங்ஸ் கூட சொல்லாம போறத்த பாரு... இதுக்கெல்லாம் அந்த அபினவ்வ சொல்லனும்..." என எப்போதும் போல் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

அக்ஷராவும் லாவண்யாவும் வண்டியிலிருந்த பெண்ணின் லக்கேஜ்ஜை எடுத்துக் கொண்டிருக்க, மொபைலில் அழைப்பொன்றில் இருந்த பிரணவ் பேசி முடித்து விட்டு அவர்களிடம் வந்தான்.

பிரணவ், "யாரு வனிம்மா அந்த பொண்ணு... உங்க ப்ரெண்டா... சரியான திமிரு பிடிச்சவளா இருப்பா போல...‌ ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம அவ பாட்டுக்கு போறா..." என்கவும் அக்ஷராவும் லாவண்யாவும் அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

எங்கே அவனுக்கு அடையாளம் தெரிய. அவள் தான் முழுவதுமாக தன்னை மறைத்துக் கொண்டு இருந்தாளே.

"என்னண்ணா இப்படி‌ கேக்குறீங்க... நெஜமாலுமே அவள உங்களுக்கு அடையாளம் தெரியலயா..." என‌ அக்ஷரா கேட்க, அவளுக்கு இல்லை என்பதாய் இட வலமாக தலையசைத்தான்.

லாவண்யா, "என்ன எங்க கூட விளையாடுறீங்களாண்ணா... உங்களுக்கு அவள பிடிக்காதுங்குறதுக்காக நீங்க சித்துவ பத்தி இப்படியெல்லாம் பேச‌ வேணாம் அண்ணா..." என்று‌ விட்டு வேகமாக அங்கிருந்து அகன்றனர்.

அவர்கள்‌ கோவமாக சென்றது எதுவும் பிரணவ்வின்‌ கருத்தில் பதியவில்லை.

அவன் தான் 'சித்து' என்ற பெயரிலே விழி விரித்து சிலையாகி நின்றானே. அதிர்ச்சியில் விழி விரித்து நின்றவனை கலைத்தது ஆதர்ஷின் அழைப்பு.

"இங்க என்னடா பண்ற தனியா... வா உள்ள போலாம்..." என ஆதர்ஷ் கூறவும்,

"மச்சான்... நான் தாரா கூட பேசனும்டா... ப்ளீஸ்டா..." என்ற பிரணவ்வின் பதிலில் அவனை ஆழ நோக்கினான் ஆதர்ஷ்.

அதற்குள் அபினவ்வும் அங்கு வந்து சேர்ந்தான்.

பின் நிதானமாக குரலில் கடுமையை தேக்கி வைத்து, "இங்க பாரு பிரணவ்... நான் உனக்கு இது முதலும் கடைசியுமா சொல்றேன்... உனக்கும் சித்துவுக்குமான உறவு எப்பவோ முடிஞ்சி போச்சி... இல்ல இல்ல... நீ தான் முடிச்சி வெச்சாய்.... உன்னால அவ ரொம்ப கஷ்டப்பட்டுடா... அகைன் உன்னால அவ கஷ்டப்படுறத நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்... நீ எனக்கு ஃப்ரெண்டா இருக்கலாம்... இதுக்கு முன்னாடி நீ பண்ண தப்புக்கு எதுவும் சொல்லலன்னு நீ பண்ற எல்லா விஷயத்துக்கும் நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்னு எதிர்ப்பாக்காதே... இப்ப இருக்கிறது உன்னோட தாரா இல்ல... ஜஸ்ட் சிதாரா... எங்க எல்லாருக்கும் சித்து... அவ்ளோ தான்... உன்னால அவளுக்கு மட்டும் ஏதாச்சும் பிரச்சினை வந்தால் நீ இந்த ஆதர்ஷ ஃப்ரெண்டா மட்டும் தானே பாத்திருக்காய்... அதுக்கப்புறம் சித்துக்கு அண்ணனா பார்ப்பாய்..." என்று விட்டு உள்ளே சென்று விட்டான் ஆதர்ஷ்.

அபினவ்வோ, "ஆதர்ஷ் சொல்லிட்டு போறதெல்லாம் நீ மைன்ட் பண்ணிக்காத மச்சான்... அவன் சித்து மேல உள்ள பாசத்துல பேசிட்டு போறான்.. கோவம் கொறஞ்சதும் அவனாவே வந்து பேசுவான்.. வா நாம உள்ள போலாம்..." என பிரணவ்வை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

மறுநாள் அதிகாலையிலே செல்ல இருப்பதால் அன்று இரவு யாருமே உறங்கவில்லை.

எனவே அனைவரும் வெளியே தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

ஒரு பக்கம் பெண்களும் மறுபக்கம் ஆண்களும் என இருக்க பிரணவ்வின் பார்வை முழுவதும் சிதாராவிடமே இருந்தது.

இதனைக் கவனித்த அபினவ் பிரணவ்வை நெருங்கி அவன் காதில் மெதுவாக, "டேய்... எனக்கென்னவோ நீ இன்னிக்கி ஆதர்ஷ் கிட்ட அடி வாங்காம இருக்க மாட்டாய் போல..." என்றான்.

அவன் கூறியது பிரணவ்வின் செவிகளை எட்டினால் தானே. அபினவ்வால் தலையில் அடித்துக்கொள்ள மட்டும் தான் முடிந்தது.

சற்று நேரத்தில் அங்கு இருக்க முடியாமல் சிதாரா எழுந்து வீட்டிற்குள் செல்ல நினைக்க, வீட்டினுள் நுழையச் செல்லும் நேரம் சரியாக அவளை மோதுவது போல் வீட்டு வாசலில் வந்து நின்றது ஒரு கார்.

கார் அவளை நோக்கி மோதுவது போல் வரவும் தோட்டத்திலிருந்த அனைவரும் பயந்து அவளின் திசை பார்க்க பிரணவ்வோ, "தாரா... கார்..." எனக் கத்தினான்.

கார் தன்னை நோக்கி வந்ததும் சிதாராவின் இதயமே ஒரு நிமிடம் நின்றது. அதனால் பிரணவ் அவளை அழைத்ததை அவள் கவனிக்கவில்லை. அது நிறுத்தப்பட்டதும் தான் போன உயிர் திரும்ப வந்தது.

பிரணவ்வும் அங்கிருந்து சிதாராவை அவதானித்துக் கொண்டிருந்தான். முதலில் கோபமாக அக் காரை நோக்கி சென்றவள் அக் காரிலிருந்து இறங்கியவனைக் கண்டதும் அதிர்ந்து பின் அவனை அணைத்துக் கொள்ளவும் பிரணவ்விற்கு உள்ளே பற்றி எரிந்தது.

பின் அக்ஷராவும் லாவண்யாவும் அவ்விடம் சென்று அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு நண்பர்களை நோக்கி வந்தனர்.

சிதாரா அனைவருக்கு வந்த அந்த ஆடவனை அறிமுகப்படுத்தி வைத்தாள். அவன் ஆர்யான். நியுயார்க்கில் சிதாராவின் சீனிய் மற்றும் அவளின் உயிர்த்தோழன் கூட.

பின் அபினவ் மற்றும் ஆதர்ஷை அறிமுகப்படுத்தச் செல்லவும் அவளைத் தடுத்தவன், "வெய்ட் வெய்ட் மினி... நானே சொல்றேன்..." என்க, அவனுக்கு சம்மதமாய் தலையாட்டினாள்.

ஆர்யான் ஆதர்ஷ் மற்றும் அபினவ்வை நோக்கி, "இவங்க ஆதர்ஷ் அப்புறம் அபினவ்... மினியோட சீனியர்ஸ்... எல்லாத்துக்கும் மேல அவளோட ஸ்வீட் ப்ரதர்ஸ்... மினிக்கு என்ன பிரச்சினைனாலும் முன்னாடி வந்து சப்போர்ட் பண்ணுவாங்க..." என்க இருவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

"ஐம் ஆர்யான்... நைஸ் டு மீட் யூ காய்ஸ்..." என அவர்களை அணைத்து விடுவித்தான்.

பின்‌ பிரணவ்விடம் திரும்பியவன், "இவரு..." என‌ சற்று நேரம் யோசிக்க, "இது பிரணவ் அண்ணா... அபி என்ட் தர்ஷ் அண்ணாவோட ஃப்ரெண்ட்..." என அக்ஷரா அவசரமாக பதிலளித்தாள்.

"ஓஹ்... சாரி டியுட்... மினி இவங்கள பத்தி தன்னோட லைஃப்ல ரொம்ப முக்கியமான பர்சன்ஸ்னு சொல்லிருக்கா... அதனால தான் அவங்கள முன்னாடியே தெரியும்.." என ஆர்யான் பிரணவ்விடம் மன்னிப்பு வேண்டும் விதமாக கூற, சிதாராவின் உதடுகள் தானாகவே, "அடப்பாவி... என்னமா நடிக்கிறான்..." என முனுமுனுத்தன.

ஆதர்ஷ் மற்றும் அபினவ் இருவருக்குமே தர்மசங்கடமான ஒரு நிலை உருவாகியது.

பிரணவ்வுக்கோ உள்ளே புகைந்தது. மனதிற்குள்ளேயே, "நான்‌ அவளுக்கு வேண்டாதவனா... என்ன பத்தி எதுவுமே இவன் கிட்ட சொல்லலயா இவ..." என அவர்களை வறுத்தெடுத்தான்.

சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு ஆதர்ஷ் அபினவ் உட்பட அனைவருமே தத்தம் வேலையை கவனிக்க உள்ளே சென்று விட பிரணவ் மட்டும் அங்கு தனித்து விடப்பட்டான்.

அவனோ, "யார் இந்த புதுசா வந்து சேர்ந்து இருக்கிறவன்... வார்த்தைக்கு வார்த்தை என்னோட மினி என்னோட‌ மினினு வேற சொல்றான்... இத இப்படியே விடக்கூடாது... ஏதாச்சும் பண்ணனும்..." என யோசனையிலிருந்தான்.

மறுநாள் சுற்றுலா ஆரம்பிக்க, ஆர்யான் எப்போதும் சிதாராவுடனே சுற்றிக் கொண்டிருக்கவும் பிரணவ்விற்கு ஆத்திரமாக வந்தது.

எப்படியாவது சிதாராவுடன் தனியாக பேச வேண்டும் என பிரணவ் காத்திருக்க, ஆர்யானோ அதற்கு வாய்ப்பளிக்காது அவளுடனே சுற்றவும் எரிச்சலடைந்த பிரணவ் சிதாரா தனியாக மாட்டியதும் அவள் கரத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஆள் அரவமற்ற ஒரு இடத்துக்கு வந்தான்.

அவன் விட்டதும் அவன் அழுத்திப் பிடித்த இடம் சிவந்திருக்க வலியில் கையைப் பிடித்துக் கொண்டு சிதாரா, "ஹவ் டேர் யூ... யாரு உங்களுக்கு என் கைய பிடிச்சு இழுத்துட்டு வர இவ்வளோ ரைட்ஸ குடுத்தது..." என ஆவேசமாகக் கேட்டு விட்டு அங்கிருந்து செல்லப் பார்க்க,

மீண்டும் அவள் கையைப் பிடித்து நிறுத்தியவன் விடாமலே, "ஏன் நான் பிடிச்சா மட்டும் உனக்கு வெறுப்பா இருக்கா தாரா... நான் பிடிக்காம உன் கூட வந்தானே ஒருத்தன் எப்பப்பாரு உன்னையே ஒட்டிக்கிட்டு... அவன் பிடிச்சா மட்டும் சுகமா இருக்...." என அவன் முடிக்கும் முன்னே அவன் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது சிதாராவின் கைகள்.

சிதாரா, "அவன பத்தி என்ன தெரியும்னு இவ்வளோ அசிங்கமா பேசுறாய்... அது சரி.. உன் புத்தியே இதானே.. அது எப்படி மாறும்..." என்க,

"ச...சாரி தாரா... அது உன் மேல உள்ள லவ்வுல பேசிட்டேன்... அவன் யாரு என் தாராவ தொட்டு பேசன்னு ஒரு பொசசிவ்னஸ்ல பேசிட்டேன்... ஐம் சாரி தாரா..." என பிரணவ் அவளிடம் கெஞ்ச,

அவன் கூறியதைக் கேட்டு கத்தி சிரித்தாள் சிதாரா.

பின், "உனக்கு என் மேல லவ்வு... இதுல பொசசிவ்னஸ் வேறயாம்... ச்சீ... இப்படி சொல்லவே உனக்கு அசிங்கமா இல்ல... உன்ன பாத்தாவே வெறுப்பா இருக்கு..." என்றாள்.

அவள் தோள்களைப் பற்றிக் கொண்ட பிரணவ், "நீ பொய் சொல்லுற தாரா... எனக்கு தெரியும் நீ எனக்காக தான் இவ்வளவு மாறி‌ இருக்கன்னு... உனக்கு என் மேல இன்னும் லவ் இருக்கு.." என்க,

அவன் கரங்களைத் தட்டி விட்டவள் ஆவேசமாக, "இல்ல... இல்ல... இல்ல... நான் உன்ன வெறுக்குறேன்... அடியோட வெறுக்குறேன்... உன்ன எந்தளவு காதலிச்சேனோ அத விட பல மடங்கு உன்ன நான் வெறுக்குறேன்... உன் பார்வை என் மேல படுறதயே நான் அசிங்கமா நெனக்கிறேன்..." என கத்தினாள்.

அவ்வளவு நாளும் கட்டுப்படுத்தி வைத்த கண்ணீர் அவளையும் மீறி வெளிப்பட்டது.

அவள் சத்தம் கேட்டு அனைவரும் அவ்விடம் வரப்பார்க்க அவர்களை தாம் பார்த்துக் கொள்வதாகக் கூறி அனுப்பிய அபினவ்வும் ஆதர்ஷும் அங்கு வந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து லாவண்யா, அக்ஷரா மற்றும் ஆர்யான் வந்தனர்.

ஆர்யான் அங்கு வந்ததுமே அவசரமாக சிதாராவிடம் சென்று, "மினி கூல்.. அமைதியா இரு... எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம்..." என அவளை சமாதானப்படுத்தப் பார்க்கவும் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளிய பிரணவ்,

"நீ யார்டா எங்களுக்குள்ள வர... அவ என் தாரா... அவ என்ன பத்தி என்ன வேணாலும் பேசுவா... உனக்கென்னடா வந்தது..." என்றான்.

அக்ஷராவும் லாவண்யாவும் சிதாராவின் அழுகையை நிறுத்தப் போராட மேலும் மேலும் அவள் அழுகை அதிகமானது.

அவன் தன்னை தள்ளி விட்டதைக் கூட பொருட்படுத்தாத ஆர்யான், "ப்ளீஸ் பிரணவ்.. நீங்க என் கூட எப்ப வேணாலும் சண்ட போடுங்க... ப்ளீஸ்... இப்போ மினிய எதுவும் கேக்க வேணாம்..." எனக் கெஞ்ச,

"இவ்வளவு சொல்றேன் திரும்ப திரும்ப மினி மினின்னுட்டு வராய்... அவ என் தாரா... எனக்கும் அவளுக்கும் இடைல ஆயிரம் இருக்கும்... நீ யார்டா அதை பத்தி பேச..." என பிரணவ் மீண்டும் ஆர்யானை அடிக்கப் பாய,

ஆதர்ஷும் அபினவ்வும் அவனைத் தடுக்க முன் வர அதற்குள் சிதாரா, "நிறுத்துங்க..." எனக் கத்தியதும் பிரணவ் அப்படியே நின்றான்.

பின் பிரணவ்வை நோக்கி சிதாரா வர, ஆர்யான், "மினி... வேணாம் ப்ளீஸ்டா..." என்க, அவன் முன் கை நீட்டி தடுத்தவள் தன் கண்களைத் துடைத்து கொண்டு பிரணவ்விடம் திரும்பி,

"சொல்லு... நீ யாரு எனக்கு... வார்த்தைக்கு வார்த்தை என் தாரா என் தாரானு சொல்லுறாய்... எனக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்..." என்க,

பிரணவ், "தாரா நீ ஏன் இப்படி எல்லாம் பேசுறாய்... நான் உன்னோட பிரணவ்... நானும் நீயும் ரெண்டு வருஷமா காதலிச்சோம்... " என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு கை தட்டி சிரித்த சிதாரா, "ஓஹ்... காதலிச்சது உண்மை தான்... பட் நான் மட்டும் தான் காதலிச்சேன்... நீ... ச்சீ.. சொல்லவே அசிங்கமா இருக்கு..." என்க,

"ஓக்கே தாரா... எல்லாம் விடு... இந்த நிமிஷம் நான் உன்ன லவ் பண்றேன்... எனக்கு தெரியும் நீயும் என்ன இன்னும் லவ் பண்ணிட்டு தான் இருக்காய்..." என பிரணவ் கூற,

சிதாரா, "நான் எப்படி பிரணவ் நீ சொல்றத நம்புவேன்... எவ்வளவு சீப்பான ரீசன் சொல்லிட்டு விட்டுப் போனாய்..." என அவள் சொல்லி முடிக்கும் முன்னே கண்ணீர் அவள் கன்னத்தைத் தாண்டி ஓடியது.

ஆர்யான், "போதும் மினி... இதுக்கு மேல எதுவும் சொல்லாதே... ப்ளீஸ்..." என்றவனைத் தடுத்தவள்,

"இல்லடா... நான் இன்னெக்கி பேசியே ஆகணும்... எவ்வளவு நாளைக்கு தான் என் மனசுலயே எல்லாம் வெச்சிட்டு இருப்பேன்... இதுக்கு ஒரு முடிவு வேணாம்..." என்ற சிதாரா அழுதவாறே பேசினாள்.

"உன் கிட்ட அன்னெக்கி எவ்வளவு கெஞ்சினேன்... என்ன விட்டுப் போகாதேன்னு... உன் கால்ல கூட விழுந்தேன்..." என உடைந்த குரலில் கூறியவள் திடீரென பிரணவ்வின் சட்டையைப் பிடித்து,

"ஆனா நீ... என்ன வார்த்தையெல்லாம் சொன்னாய்.. இப்ப கூட அதப் பத்தி நெனச்சா..." என சொல்லும் போதே அவளுக்கு மூச்சு வாங்க அனைவரும் அவர்களின் பின்னே நின்றதால் அவர்களுக்கு அவள் முகம் தெரியவில்லை.

பிரணவ் மாத்திரம் அவள் வேகமாக மூச்சு வாங்குவதைக் கண்டவன், "தாரா..." என ஏதோ சொல்ல வர அவன் சட்டையிலிருந்து கையை எடுத்தவள், "ச்சீ... இனி என்ன அப்படி கூப்பிடாதே... உனக்கு அந்த தகுதி கூட இல்ல... உன் வாய்ல இருந்து என் பேரு வரதே அசிங்கமா நெனக்கிறேன்.. " என்றவள்,

பின் அவன் முன் விரல் நீட்டி, "திரும்ப என் லைஃப்ல என்டர் ஆகனும்னு நெனச்ச... அசிங்கமாகிரும்... திஸ் இஸ் மை லாஸ்ட் வார்னிங்..." என்றாள்.

சிதாராவின் பேச்சிலே பிரணவ் தன் தவறு உணர்ந்திருந்தான்.

எதுவுமே கூறாது அவளைத் தடுக்க வழியற்று கண்களில் சோகத்தைத் தேக்கி கல்லாக சமைந்திருந்தான்.

சிதாரா நேராக ஆர்யானிடம் சென்றவள் அவனை அணைத்துக் கொண்டாள்.

அங்கிருந்த யாரும் எதுவுமே பேசவில்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

************************************

 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கண்ணீர் - அத்தியாயம் 3

திடீரென ஆர்யான், "மினி..." எனக் கத்தவும் அவன் கத்தலில் திரும்பியவர்கள் சிதாராவின் நிலையைக் கண்டு அதிர்ந்து அவசரமாக அவளிடம் ஓடினர்.

பிரணவ், "தாரா..." என அவளிடம் செல்லப் பார்க்க, அவன் கையை யாரோ பிடித்து வைத்திருப்பதை உணர்ந்தவன் யாரெனப் பார்க்க, ஆதர்ஷ் தான் அவனை செல்ல விடாமல் பிடித்திருந்தான்.

ஆதர்ஷ், "நீ பண்ணது எல்லாம் போதும்... தயவு செஞ்சி இங்கயே இரு..." என கோபமாகக் கூறியவன் சிதாராவிடம் விரைந்தான்.

பிரணவ் எதுவும் செய்ய முடியாமல் அங்கு நின்றே கவலையில் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிதாரா வலிப்பு வந்து துடிக்க ஆர்யான் அவசரமாக அருகிலிருந்த இரும்புக் கம்பியொன்றை எடுத்து அவள் உள்ளங்கையில் வைத்து மடித்து அழுத்தினான்.

மெதுவாக அவளது வலிப்பு நிற்க சிதாராவை கரங்களில் ஏந்திய ஆர்யான் யாரிடம் எதுவும் கூறாது ஓடிச் சென்று டாக்சி பிடிக்க அக்ஷராவும் லாவண்யாவும் அவனுடன் சென்றனர்.

ஏனையோரிடம் தகவலைக் கூறி அவர்களை ரெட் ஹவுஸ் செல்லக் கூறிய அபினவ் இன்னொரு டாக்சி பிடித்து ஆதர்ஷ், பிரணவ்வுடன் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.

ஹாஸ்பிடலில் அனைவரும் டாக்டர் சிதாராவைப் பரிசோதித்து விட்டு வரும் வரை தவிப்புடன் இருக்க,

பிரணவ் அங்கு ஒரு ஓரமாக கை கட்டி நிற்பதைப் பார்த்த ஆர்யான் பிரணவ்விடம் சென்று அவன் சட்டையைப் பிடித்து,

"எதுக்குடா இன்னும் இங்க நின்னுட்டு இருக்காய்... இன்னும் என்ன வேணும் உனக்கு... அவ்வளவு படிச்சி படிச்சி சொன்னேன் தானே இப்போ எதையும் பேச வேணாம் நிறுத்து நிறுத்துன்னு... கேட்டியாடா... இப்ப பாரு மினி எந்த நிலைல இருக்கான்னு... இதுக்கெல்லாம் நீ மட்டும் தான்டா காரணம்... உன்ன..." என கோபத்தில் கத்தி விட்டு பிரணவ்வை அடிக்கக் கை ஓங்க,

அபினவ் அவனைத் தடுக்க முயற்சிக்க, சிதாராவைப் பரிசோதித்து விட்டு வெளியே வந்த டாக்டர் அவர்களைக் கண்டு,

"நிறுத்துங்க... இங்க என்ன நடக்குது... இது என்ன ரௌடிசம் பண்ணுற இடம்னு நெனச்சீங்களா... பேஷன்ட்ஸ் இருக்குற இடம்... திரும்ப இப்படி எல்லாம் பண்ணிட்டு இருந்திங்கனா நான் போலிஸ கூப்பிட்டுருவேன்... மைன்ட் இட்..." என அவர்களைத் திட்ட,

பிரணவ்வை விட்டு டாக்டரிடம் ஓடி வந்த ஆர்யான், "சாரி.. சாரி டாக்டர்... மினி இப்போ எப்படி இருக்கா... நல்லா இருக்கால்ல... " என பதட்டமாய்க் கேட்டான்.

டாக்டர், "ப்ளீஸ் பீ காம் சார்... அவங்க இப்போ நல்லா தான் இருக்காங்க... டோன்ட் வொரி... அவங்களுக்கு இதுக்கு முன்னாடி ஃபிட்ஸ் வந்து இருக்கா..." என்க,

லாவண்யா இல்லை என சொல்ல வர,

"ஆமா டாக்டர்... இது தேர்ட் டைம்..." என ஆர்யானிடமிருந்து பதில் வர அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

டாக்டர், "ஆஹ் ஓக்கே... ஏதோ ஒரு விஷயம் அவங்க மனச ரொம்ப பாதிச்சிருக்கு... அத ஞாபகப்படுத்துற விதமா ஏதாச்சும் நடந்தா தான் இப்படி ஃபிட்ஸ் வருது இவங்களுக்கு... ஐ திங்க் இன்னெக்கி ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்து இருக்காங்க... அதனால தான் இன்னும் கான்ஷியஸ் வரல... நாங்க ட்ரீட்மன்ட் பண்ணி இருக்கோம்... சோ ஒரு டூ த்ரீ ஹவர்ஸ்ல கண்ணு முழிச்சிருவாங்க... அவங்கள வார்டுக்கு சேன்ஜ் பண்ணுறோம்... அதுக்கப்புறம் நீங்க போய் பார்க்கலாம்..." என்க,

ஆர்யான், "தேங்க் யூ டாக்டர்.." என்றதும் அவர் சென்றார்.

பின் ஆர்யான் இதற்கு முன்பு சிதாராவிற்கு வலிப்பு வந்தது பற்றியும் தாம் எவ்வாறு நண்பர்கள் ஆனோம் என்பது பற்றியும் கூறவும் அனைவரும் அதிர்ந்தனர். நர்ஸ் வந்து டாக்டர் அழைப்பதாகக் கூறவும் ஆர்யானும் ஆதர்ஷும் அவரை சந்திக்கச் செல்ல, அவரோ மீண்டும் சிதாராவிற்கு இவ்வாறு வலிப்பு ஏற்பட்டால் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் எனக் கூறவும் இருவருமே அதிர்ந்தனர்.

அவரிடம் நன்றி கூறி விட்டு இருவரும் சிதாரா இருந்த வார்டுக்கு வந்தனர்.

அக்ஷரா, "டாக்டர் என்ன சொன்னாங்க அண்ணா..." என ஆர்யானிடம் கேட்க, அவன் ஏதோ யோசனையில் இருக்க,

ஆதர்ஷ் டாக்டர் கூறிய அனைத்தையும் அவர்களிடம் கூறியவன் வந்த ஆத்திரத்தில் பிரணவ்விடம் சென்று அவன் கன்னங்களில் மாறி மாறி அடித்தான்.

பிரணவ்வோ குற்றவுணர்ச்சியில் இருந்ததால் ஆதர்ஷ் அடித்தது எதுவும் உறைக்கவில்லை.

ஆதர்ஷ், "மனுஷனாடா நீ... ச்சீ... உன்ன எல்லாம் ஃப்ரண்ட்டுன்னு சொல்லவே அசிங்கமா இருக்குடா..." என்றவன் மீண்டும் அவனை அடிக்க லாவண்யா வந்து தடுத்தாள்.

பின் பிரணவ்வை பார்த்து லாவண்யா, "உங்களுக்கும் சித்துக்கும் இடைல ஏதோ மிஸ் அன்டர்ஸ்டேன்டிங்... அதனால தான் பிரிஞ்சிட்டீங்கன்னு நெனச்சேன் அண்ணா... பட் எங்க சித்துவ நீங்க இப்படியெல்லாம் பேசி இருப்பீங்கன்னு சத்தியமா எதிர்ப்பார்க்கல அண்ணா... அந்த பைத்தியக்காரி உங்கள எவ்வளவு காதலிச்சிருக்கான்னா எங்க கிட்ட ஒரு வார்த்தை உங்கள பத்தி தப்பா சொல்லல அவ... " என்கவும் பிரணவ்விற்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.

நர்ஸ் வந்து, "இவ்வளவு பேர் இருந்தா பேஷன்ட்டுக்கு டிஸ்டர்ப்பா இருக்கும்... யாராவது ஒருத்தர் மட்டும் கூட இருங்க..." என்க,

ஆர்யான் சிதாராவுடன் இருக்க மற்ற அனைவரும் வெளியேறினர்.

சற்று நேரத்தில் சிதாரா கண் விழித்து ஆர்யானுடன் பேசிக்கொண்டு இருக்க, அபினவ், பிரணவ் தவிர அனைவருமே சிதாராவைக் காண உள்ளே வந்தனர்.

ஆதர்ஷ் தான் அவனை உள்ளே வர வேண்டாம் எனக் கூறியிருந்தான்.

பிரணவ் ஏற்கனவே குற்றவுணர்வில் தவித்துக் கொண்டிருப்பதால் அவனுடன் அபினவ்வும் நின்றான்.

அபினவ் பிரணவ்விடம், "நீ பண்ணது தப்பு தான் மச்சான்... இல்லன்னு சொல்லல... அதுக்காக நான் இங்க நின்னுட்டு இருக்குறதுக்கு அர்த்தம் நீ பண்ண தப்புக்கு சப்போர்ட்டா இருக்குறேன்னு இல்ல... என்னோட ஃப்ரெண்ட் தான் பண்ண தப்ப உணர்ந்திருப்பான்னு ஒரு நம்பிக்கை... இந்த நேரத்துல உன்ன தனியா விட எனக்கு மனசு வரலடா..." என்க,

"தேங்க்ஸ் டா..." என அவனை அணைத்துக் கொண்ட பிரணவ்,

"நீயும் உள்ள போடா... உனக்கும் அவ மேல நிறைய அக்கறை இருக்குன்னு எனக்கு தெரியும்... எப்படியும் உள்ள இருக்குற யாரும் தாராவ பத்தி என் கிட்ட சொல்ல மாட்டாங்க... நீ போய் பாத்துட்டு வந்து அவள் எப்படி இருக்கான்னு சொல்லு..." என்றான்.

அபினவ், "நீயும் உள்ள வா மச்சான்... " என்க,

"வேணாம்டா... தாரா என்ன பாத்தா இப்ப ரொம்ப டென்ஷன் ஆகுவா... என்னாலயும் அவ முகத்த நேரா பார்க்க சக்தி இல்ல..." என பிரணவ் கூற,

வேறு எதுவும் கூறாமல் சிதாரா இருந்த அறைக்குள் நுழைந்தான் அபினவ்.

பின் சிதாராவை டிஸ்சார்ஜ் செய்து அவர்கள் தங்கியிருந்த ரெட் ஹவுஸ் அழைத்துச் சென்றனர்.

அடுத்த இரண்டு நாளில் டூர் முடிய அனைவரும் ஊருக்கு கிளம்பினர்.

அந்த இரண்டு நாளுமே ஆர்யான், லாவண்யா, அக்ஷரா மூவரும் சிதாராவை விட்டு எங்கும் அசையவில்லை.

எப்போதும் அவளுடன் ஏதாவது பேசிக்கொண்டு அவள் யோசனை வேறு எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டனர்.

பூஞ்சோலை கிராமத்தை அடையும் போது இரவாகி இருந்தது.

எனவே அனைவரும் அன்று அங்கே தங்கி விட்டு அடுத்த நாள் வீடுகளுக்கு செல்ல முடிவெடுத்தனர்.

மறுநாள் காலையில் அனைவரும் கிளம்பிய பின் ஆதர்ஷ், பிரணவ், அபினவ் மூவரும் கிளம்பத் தயாராகினர்.

ஆர்யான் தோழிகள் மூவருடன் ஹாலில் இருக்க மற்ற மூன்று‌ ஆண்களும் மேலே அறையில் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

பிரணவ், "டேய் ஆதர்ஷ்... ப்ளீஸ்டா... ஒரே ஒரு தடவ நான் தாரா கூட பேசனும்டா... திரும்ப அவள ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் பேச மாட்டேன்... ப்ராமிஸ்டா... " என்க,

ஆதர்ஷோ அபினவ்வைப் பார்த்து, "இவனுக்கு பேசாம இருக்க சொல்லு அபிணவ்... இது வரைக்கும் இவன் செஞ்சி வெச்சிருக்குறதையே சரி பண்ண முடியாம இருக்கோம்... ஒழுங்கா ஊருக்கு கிளம்புற வேலைய பார்க்க சொல்லு..." என்க,

பிரணவ், "மச்சான் ப்ளீஸ்டா... ஊருக்கு போக முன்னாடி கடைசியா ஒரே ஒரு தடவ தாரா கூட பேசிட்டு வரேன்டா..." என்றான்.

அதற்கும் ஆதர்ஷ் அபினவ்வைப் பார்த்து ஏதோ சொல்ல வர,

இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு முழித்த அபினவ்,

"அட ச்சீ நிறுத்துங்க... ஆதர்ஷ்... உனக்கு தான் அவன் மேல இருந்த கோவம் கொறஞ்சிடுச்சுல்ல... பின்ன நேரா பார்த்து பேசிக்கிட்டா என்னவாம்... நடுவுல என்ன வெச்சி காமெடி பண்றீங்களா... டேய்.. அதான் பிரணவ் அவன் பண்ண தப்ப உணர்ந்துட்டானே... கடைசியா ஒரு தடவ சித்து கூட பேசுறேன்னு சொல்றான்.. சரின்னு சொல்லேன்டா..." என ஆதர்ஷைப் பார்த்து கூறியவன்,

பின் பிரணவ்விடம், "இங்க பாருடா... திரும்ப ஏதாவது ஏடாகூடமா பேசினன்னு வையேன்... அப்புறம் நானே உன்ன சும்மா விட மாட்டேன்..." என்றான்.

சற்று சமாதானமான ஆதர்ஷ், "சரி... பட் அவன் எங்க எல்லாரு முன்னாடியும் தான் சித்து கூட பேசணும்..." என்கவும் பிரணவ் சற்று யோசித்து விட்டு சரி என்றான்.

தமது பையுடன் மூவரும் கிளம்பி ஹாலுக்கு வர ஆர்யான் ஏதோ சீரியசாக கூறிக் கொண்டிருக்க, மூவரும் அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

பிரணவ் மெதுவாக அவர்களிடம் சென்று தொண்டையை செறும நால்வரும் அவனை ஏறிட்டனர்.

பிரணவ் தயங்கியபடி சிதாராவைப் பார்த்து 'தாரா' எனக்கூற வர சிதாராவின் பார்வையில் அவசரமாக,

"சிதாரா.. நான் உன் கூட கொஞ்சம் பேசணும்.." என்க,

ஆர்யான் கோவமாக எழுந்து ஏதோ கூற வர அவனைத் தடுத்த சிதாரா,

"சொல்லுங்க பிரணவ்..." என சிறிதும் மாற்றமின்றி தெளிவான குரலில் கூறினாள்.

அவளின் தெளிவான பேச்சில் அங்கிருந்த அனைவருமே வியக்க ஆர்யான் மட்டும் மகிழ்ந்தான்.

பிரணவ், "உன் கிட்ட மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி இருக்கான்னு தெரியல... எதுவும் தெரியாம பண்ணேன்னு பொய் சொல்ல மாட்டேன்... தெரிஞ்சி தான் எல்லாம் பண்ணேன்... பட் ப்ளீஸ் முடிஞ்சா என்ன மன்னிச்சிடு..." என்க,

சிதாரா ஒரு நொடி கூட யோசிக்காது, "சரி மன்னிச்சிட்டேன்... வேற ஏதாவது சொல்லனுமா..." என்றாள்.

சிதாராவின் தெளிவான பேச்சை பிரணவ் கூட எதிர்ப்பார்க்கவில்லை.

அதை அவன் முகமே காட்டிக் கொடுத்தது.

ஆர்யானுக்கு அப்போது பிரணவ்வைக் காணும் போது ஏனோ சிரிப்பு வந்தது.

வாயை மூடி சிரித்தான்.

"எனக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் தர மாட்டியா தாரா..." என சட்டென பிரணவ் ஏக்கமாக வினவ,

ஆதர்ஷ் கோவத்தில் பிரணவ்வை ஏதோ சொல்ல முன்னேற அவன் கைப் பிடித்து தடுத்தான் அபினவ்.

அனைவரும் சிதாராவின் பதிலை எதிர்ப்பார்க்க சிதாராவோ திரும்பி ஆர்யானைப் பார்த்து புன்னகைத்தாள்.

ஆர்யான் கூட சிதாராவின் முகத்தை தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிதாரா, "சாரி பிரணவ்... என்னால நீங்க கேட்டத தர முடியாது... நான் உங்கள மன்னிச்சிட்டேன் தான்... ஆனா நீங்க பண்ண எதையுமே மறக்கல... அத என்னால மறக்க முடியுமான்னு கூட தெரியல... அதை மனசுல வெச்சிக்கிட்டு திரும்ப உங்க கூட என்னால இருக்க முடியாது... சோ நீங்க ஆசைப்படுற மாதிரி உங்களுக்கு ஏத்த ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க... சாரி..." என்க,

பிரணவ், "நான் நிஜமாவே திருந்திட்டேன் தாரா... என் தப்ப உணர்ந்துட்டேன்... என்னால இனி உன்ன தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது... நம்ம பிரேக்கப் அப்போ நீ கூட சொன்னாய் தானே என்ன தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு... நாமளே கல்யாணம் பண்ணிக்கலாமே..." என்கவும் சிரித்தாள் சிதாரா.

பின், "அந்த டைம்ல காதல் கண்ண மறச்சிடுச்சி பிரணவ்... ஏதோ உங்க மேல அப்போ இருந்த அளவுக்கதிகமான காதல்ல அப்படி சொன்னேன்... இப்போ தான் வெளியுலகத்த பாத்து கொஞ்சம் மெச்சூர்ட் ஆகி இருக்கேன்... அதனால தான் நான் எவ்வளவு பைத்தியக்காரியா இருந்திருக்கேன்னு புரிஞ்சிக்கிட்டேன்..." என சிரித்தபடி கூறிய சிதாரா பின் பிரணவ்வின் கண்களைப் பார்த்து அழுத்தமாக தெளிவாக,

"ஆனா இப்போ தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க... நான் நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பேன்... ஆனா அது என்ன பத்தி முழுசா தெரிஞ்சி என்ன புரிஞ்சிக்கிட்டு என்ன நானாவே ஏத்துக்குற ஒருத்தனா இருப்பான்... நிச்சயம் அது நீங்க இல்ல.." எனக் கூறினாள்.

அவள் இன்னொருவனைத் திருமணம் செய்வேன் எனக் கூறியதைக் கேட்ட பிரணவ்விற்கு கோபமாக வந்தது.

பிரணவ், "உன்னால நிச்சயமா என்ன தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது தாரா... எப்போ இருந்தாலும் நீ என்ன தான் கல்யாணம் பண்ணிப்பாய்..." என சிதாராவைப் பார்த்து கூறியவன் தனது பையுடன் அவசரமாக அங்கிருந்து கிளம்பினான்.

அவன் செல்வதை புன்னகையுடன் பார்த்தக் கொண்டிருந்தாள் சிதாரா.

ஆதர்ஷ், "சாரிம்மா.. அவன் சொன்னது எதையும் நீ கண்டுக்காதே... அவன் சும்மா பைத்தியம் போல உளறிட்டு போறான்... நாங்களும் கிளம்புறோம்மா.." என சிதாராவிடம் கூறினான்.

பின் அபினவ், ஆதர்ஷ் இருவரும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப அனைவரும் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் ஆதர்ஷிடமிருந்து அபினவ்விற்கு அழைப்பு வந்தது. ஆதர்ஷ் அபினவ்விடம் சிதாராவிற்கும் ஆர்யானிற்கும் திருமணம் நிச்சயித்து உள்ளதாகக் கூறவும் அபினவ் மகிழ, அபினவ்வின் அருகில் இருந்த பிரணவ்வும் அதனைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

பிரணவ் மனதில், "உன்னால அவ்வளவு சீக்கிரம் தாராவ என் கிட்ட இருந்து பிரிக்க முடியாது ஆர்யான்... குறுக்கு வழிலயாவது நான் அவள அடஞ்சே தீருவேன்..." என நினைத்துக் கொண்டான்.

************************************

 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கண்ணீர் - அத்தியாயம் 4

சரியாக ஆர்யான் மற்றும் சிதாராவின் நிச்சயதார்த்தத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் பிரணவ்விற்கு ஆஃபீஸில் ஏதோ வேலை விஷயமாக பெங்களூர் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது.


எவ்வாறாவது ஆர்யான் மற்றும் சிதாராவின் திருமணத்தை நிறுத்தியே ஆக வேண்டும் என பிரணவ் திட்டமிட்டுக் கொண்டிருக்க, திடீரென வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படவும் அவனின் தந்தை மூர்த்தியின் வற்புறுத்தலாலும் கிளம்பினான் பிரணவ்.


பெங்களூர் சென்றவன் முதல் நாள் மீட்டிங் முடித்து விட்டு அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பி வந்து கொண்டிருக்க, 'என்ன நடந்தாலும் உன்னால என் மினிக்கு எந்த பிரச்சினையும் நான் வர விட மாட்டேன்...' என ஊட்டி சென்று வந்த அன்று இரவு பிரணவ்வை சந்தித்த ஆர்யான் அவனிடம் கூறியதே காதில் ஒலிக்க, "என் மினி... என் மினி... என் மினி... எப்பப்பாரு மினி மணின்னு அவ பின்னாடியே வால் பிடிச்சி சுத்திட்டு இருக்கான்... இல்ல... நான் அந்தக் கல்யாணத்தை நடக்க விட மாட்டேன்... அவ என் தாரா... அவளை நான் அடையாம விட மாட்டேன் ஆர்யான்..." எனக் கோபமாகக் கூறிய பிரணவ் தன் கோபத்தை எல்லாம் காரின் வேகத்தில் காட்ட, அக் கார் வீதியில் சீறிப் பாய்ந்தது.


திடீரென தூரத்தில் ஒரு லாரி வேகமாக வருவதை அவதானித்த பிரணவ் அவசரமாக தன் காரை திசை திருப்ப முயல, அதுவோ தன் கட்டுப்பாட்டை இழந்திருந்தது. சில நிமிடங்களிலே அந்த லாரி வேகமாக வந்து பிரணவ்வின் காருடன் மோத, காரில் இருந்து தூக்கி எறியப்பட்டான் பிரணவ்.


பிரணவ் பலத்த காயங்களுடன் மயக்க நிலைக்கு சென்று கொண்டிருக்க, அவனைச் சுற்றி மக்கள் கூட்டம் கூடினர். ஆனால் ஒருவர் கூட அடிபட்டு இருந்தவனை நெருங்கி அவனுக்கு என்ன ஏது என்று பார்க்க முயற்சிக்கவில்லை.


அப்போது தான் தன் தோழியுடன் அவ் இடத்தை அடைந்தாள் அனுபல்லவி.


************************************


"இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க அனு? ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சு... இன்னைக்கு ஏதோ இம்பார்டன்ட் மீட்டிங் வேற இருக்குன்னு சொன்னாங்க... நீ என்னடான்னா ஆடி அசைஞ்சி ரெடி ஆகிட்டு இருக்க..." எனக் கடு கடுத்தாள் சாரு என்கிற சாருமதி.


ஆனால் அவளின் கோபத்தை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாது கூலாக கண்ணாடி முன் நின்று தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் அனுபல்லவி.


சாருமதி, "என்னவோ மேடம பொண்ணு பார்க்க வர போறது போல இப்படி ரெடி ஆகிட்டு இருக்க... சீக்கிரம் வா டி..." எனக் கத்தவும் ஒருவாறு தயாராகி முடித்த அனு, "கூல் பேபி... எதுக்கு இவ்வளவு கோவப்படுற? கூல்... கூல்... ஆஹ் அப்புறம் இன்னொரு விஷயம்... ஒரு விதத்துல நீ சொன்னது கூட கரெக்ட் தான் சாரு... காலைல இருந்து நான் இன்னைக்கு உன் அண்ணன மீட் பண்ண போறேன்னு உள்ள இருக்குற பட்சி சொல்லிட்டே இருக்கு..." என சாருமதியின் தோளில் கை ஊன்றி கூறினாள்.


"அண்ணனா?" என சாருமதி புரியாமல் கேட்கவும், "என் ஆளு டி... என் ஆளு உனக்கு அண்ணன் முறை தானே..." என அனு புன்னகையுடன் கூறவும் அவளை ஏகத்துக்கும் முறைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினாள் சாருமதி.


சாருமதி தன் ஸ்கூட்டியை இயக்கவும் எங்கு தன் தோழி தன்னை விட்டு விட்டு சென்று விடுவாளோ எனப் பதறிய அனு ஓடி வந்து சாருமதியின் பின்னே ஏறிக்கொள்ள, ஸ்கூட்டி அவர்களின் ஆஃபீஸை நோக்கிப் பறந்தது.


"சாரு ஸ்டாப்... ஸ்டாப்..." என வேகமாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டியின் பின்னே அமர்ந்திருந்த அனு பதட்டமாகக் கூறவும், பதறி வண்டியை ஓரமாக நிறுத்திய சாருமதி, "என்னாச்சு அனு? எதுக்கு வண்டிய அவசரமா நிறுத்த சொன்ன? ஏதாவது கீழ விழுந்திடுச்சா?" என்க,


"அங்க பாரு சாரு... ஒரே கூட்டமா இருக்கு... ஏதோ ஆக்சிடன்ட் போல... வா போய் பார்க்கலாம்..." என அனு பதிலளிக்கவும், "உனக்கு என்ன பைத்தியமா அனு? எதுக்கு உனக்கு இந்த தேவையில்லாத வேலை? ஆல்ரெடி ஆஃபீஸுக்கு லேட் ஆகிடுச்சு... எம்.டி நம்மள திட்ட போறாரு..." எனக் கோபமாகக் கூறினாள் சாருமதி.


அந்தோ பரிதாபம். இவ்வளவு நேரம் சாரு கத்தியதைச் செவிமடுக்கத் தான் அங்கு யாரும் இருக்கவில்லை. அனு எப்போதோ அக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு விபந்து நடந்த இடத்தை நோக்கிச் சென்றிருந்தாள்.


அதனைக் கண்டு தலையில் அடித்துக்கொண்ட சாருமதி தன் நண்பியைப் பின் தொடர்ந்து சென்றாள்.


அங்கு அனு, "தள்ளுங்க ப்ளீஸ்..." என்றவாறு கூட்டத்தை விலக்கிக்கொண்டு செல்ல, இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த பிரணவ்வைக் கண்டு அதிர்ந்தவள் அவசரமாக கீழே இருந்தவனை மடியில் ஏந்தி தன் துப்பட்டாவை எடுத்து இரத்தம் வரும் இடத்தை இறுக்கிக் கட்டி விட்டு, "யாராவது சீக்கிரமா இவர ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போக ஹெல்ப் பண்ணுங்க... ப்ளீஸ் சீக்கிரம்..." என்க,


சுற்றியிருந்த சனமோ தமக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருக்க, அவர்களில் ஒருவர், "பார்க்க சின்ன பொண்ணா இருக்க... உனக்கு எதுக்குமா தேவையில்லாத வேலை... ஆக்சிடன்ட் வேற... போலீஸ் ஸ்டேஷன் அது இதுன்னு அலைய வேண்டி வரும்..." என்றார்.


அதனைக் கேட்டு ஆத்திரப்பட்ட அனு, "என்ன மனுஷங்க நீங்க? கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா உங்களுக்கு? ரோட்டுல அடி பட்டு விழுந்து கிடக்குறார்... நீங்க எல்லாருமே வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க..." என்கவும் மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்த பிரணவ் கஷ்டப்பட்டு விழி திறந்து பார்க்க, அனுவின் முகம் மங்கலாக அவன் மனதில் பதிந்திட, அடுத்த நொடியே மயங்கியிருந்தான் பிரணவ்.


அதற்குள் சாருமதியே அவசர ஊர்த்திக்கு அழைத்திருக்க, அது வந்ததும் பிரணவ்வை அதில் ஏற்றி விட்டு அனுவும் அவனுடன் ஏறப் பார்க்க, அதற்குள் அவளின் கைப் பிடித்து தடுத்த சாருமதி, "போதும் அனு... அதான் ஆம்பியூலன்ஸ் வந்திடுச்சே... அவங்க ஹாஸ்பிடல் கூட்டிட்டு போவாங்க... இப்பவாச்சும் கிளம்பலாம் டி..." என்க, தோழியின் வார்த்தைக்கு இணங்கி மனமேயின்றி அவ் இடத்திலிருந்து சென்றாள் அனு. அவசர ஊர்த்தியும் மருத்துவமனையை நோக்கிக் கிளம்ப, அனுவின் மனதிலோ ஏதோ சொல்ல முடியா வலி.


************************************


வைத்தியசாலையில் பிரணவ்விற்கு சிகிச்சை நடைபெற, அவனின் கைப்பேசியில் இறுதியாக அழைத்த எண்களில் அவனின் பி.ஏ இன் எண் இருக்கவும் அவனுக்கு அழைத்து தகவல் தெரிவிக்கவும் உடனே பெங்களூர் கிளம்பி வந்தான் பிரணவ்வின் பி.ஏ ஆகாஷ்.


தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரணவ் மூன்று நாட்கள் கழித்தே கண் விழித்தான்.


என்ன நடந்தது என்பது புரியவே அவனுக்கு சற்று நேரம் எடுத்தது.


இதர பரிசோதனைகள் முடிந்து பிரணவ்வை வார்டுக்கு மாற்றியதும் ஆகாஷ் அவனைக் காண வர, "என்னாச்சு?" எனத் தலையைப் பிடித்தபடி மெல்லிய குரலில் கேட்க, "ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க பாஸ்... அன்னைக்கு மீட்டிங் முடிஞ்சு வரும் போது உங்களுக்கு ஆக்சிடன்ட் நடந்து மூணு நாள் கழிச்சி இன்னைக்கு தான் நீங்க கண் முழிச்சி இருக்கீங்க... அன்னைக்கு நீங்க அட்டன்ட் பண்ணின மீட்டிங்ல கான்ட்ராக்ட் நம்ம கம்பனிக்கே கிடைச்சிடுச்சு பாஸ்... அப்புறம்..." என ஆகாஷ் இழுக்க, பிரணவ் புருவம் சுருக்கி அவனைக் கேள்வியாய் நோக்கவும், "சாருக்கும் மேடமுக்கும் இன்ஃபார்ம் பண்ணேன்... பட் அவங்க ஏதோ பிஸ்னஸ் மீட்டிங் இருக்குறதா சொல்லி என்னையே பார்த்துக்க சொல்லிட்டாங்க..." என்றான் தயங்கியபடி.


ஒரு கசந்த புன்னகையை உதிர்த்த பிரணவ், 'பெத்த பையன் ஆக்சிடன்ட் ஆகி சாக கிடந்தேன்... ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் பிஸ்னஸ் தான் முக்கியமா போச்சு...' என்றான் மனதில்.


அப்போது அறைக்குள் நுழைந்த மருத்துவர், "ஹெலோ மிஸ்டர் பிரணவ்... ஹவ் டூ யூ ஃபீல் நவ்?" என்க, "பெட்டர் டாக்டர்... நான் எப்போ டிஸ்சார்ஜ் ஆகலாம்?" எனக் கேட்டான் பிரணவ்.


மருத்துவர், "உங்களுக்கு நிறைய இன்டர்னல் இன்ஜுரீஸ் இருக்குறதனால வன் வீக் கழிச்சி தான் உங்களை டிஸ்சார்ஜ் பண்ண முடியும்... அப்புறம்..." என இழுத்தவாறு ஆகாஷைப் பார்க்க, "எனக்கு நம்பிக்கையான ஆள் தான் டாக்டர்... நீங்க சொல்லுங்க..." எனப் பிரணவ் கூறவும், "சாரி டு சே மிஸ்டர் பிரணவ்... அந்த ஆக்சிடன்ட்னால உங்களால ஒரு குழந்தைக்கு அப்பா ஆகுற வாய்ப்பை இழந்துட்டீங்க..." என மருத்துவர் ஒரு இடியை இறக்கவும் அதிர்ந்தான் பிரணவ்.


ஆகாஷ், "இதுக்கு ட்ரீட்மெண்ட் இருக்கு தானே டாக்டர்..." எனப் பதறிக் கேட்கவும் பெருமூச்சு விட்ட மருத்துவர், "ட்ரீட்மெண்ட் பண்ணலாம்... ஆனா அது எந்த அளவுக்கு சக்சஸ்னு உறுதியா சொல்ல முடியாது... பட் நீங்க கண்டிப்பா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கோங்க... எல்லாம் அந்த கடவுள் கைல இருக்கு..." என்று விட்டு வெளியேறினார்.


பிரணவ்வோ மருத்துவர் கூறிய செய்தியில் கல்லாக சமைந்திருக்க, "பாஸ்..." என ஆகாஷ் அவன் தோள் தொடவும் தன்னிலை அடைந்த பிரணவ், "அபினவ் ஏன் வரல? எனக்கு ஆக்சிடன்ட் ஆகின விஷயம் அவனுக்கு தெரியுமா?" எனக் கேட்டான்.


"தெரியாது பாஸ்... அபினவ் சார் இன்னும் ஊர்ல இருந்து வரல... அதனால என்னால அவர் கிட்ட சொல்ல முடியல..." என ஆகாஷ் கூறவும், "அவனுக்கு ஃபோன் போட்டு கொடுங்க..." என்றான் பிரணவ்.


அபினவ் அழைப்பை ஏற்றதும், "என்னடா பண்ற இன்னும்... என்கேஜ்மன்டுக்கு போய்ட்டு வரேன் சொல்லிட்டு போன... இன்னுமே திரும்ப வரல..." எனப் பிரணவ் கேட்க,


"நீ ஏன்டா ரெண்டு நாளா கால் ஆன்சர் பண்ணல... என்கேஜ்மன்டுக்கு தான் வந்தேன்... பட் சடன்னா மேரேஜ் எடுக்க வேண்டிய நிலமை... அதான் வர முடியல.." என்றான் அபினவ்.


"ஓஹ்...." என்று விட்டு சற்று நேரம் அமைதியாக இருந்த பிரணவ், "சரி மச்சான்... சின்ன வேலை ஒன்னு... நான் அப்புறம் பேசுறேன்..." என்று விட்டு அபினவ்வின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காது அழைப்பைத் துண்டித்து விட்டான்.


சற்று நேரம் கண்களை மூடி அமர்ந்து இருந்த பிரணவ்விற்கு மருத்துவர் கூறியவையும் அவன் சிதாராவுக்கு செய்த அநியாயமுமே மாறி மாறி நினைவு வர, சிதாராவிற்கு அவன் செய்த அநியாயத்துக்கு கிடைத்த தண்டனையாகவே இதனை எண்ணினான் பிரணவ்.


எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவனையும் மீறி மூடி இருந்த இமைகளைத் தாண்டி கண்ணீர் வடிய, "பாஸ்..." என்ற ஆகாஷின் குரலில், "நீங்க கிளம்புங்க ஆகாஷ்... நான் கொஞ்சம் நேரம் தனியா இருக்கணும்..." எனப் பிரணவ் கூறவும் தன் முதலாளியின் பேச்சைத் தட்ட முடியாது அங்கிருந்து வெளியேறினான் ஆகாஷ்.


************************************


சென்னைக்கு வந்ததிலிருந்து பிரணவ்விற்கு தன்னை யாரோ பின் தொடர்வது போல் இருக்க, ஆகாஷின் மூலம் அது யார் எனக் கண்டறிந்தவன் நேரே அவனைக் காணச் சென்றான்.


பிரணவ், "வேலை நேரத்துல உங்கள டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி சார்... பட் நீங்க கொஞ்ச நாளா என்னை ஃபாலோ பண்ணிட்டு இருக்குறத நான் அவதானிச்சேன்... எதனாலன்னு தெரிஞ்சிக்கலாமா?" எனக் கேட்க,


முதலில் பிரணவ்வைக் கண்டு அதிர்ந்த ஆர்யானின் காவல்துறை நண்பனான ரவி அவனின் கேள்வியில் கேலியாகப் புன்னகைத்தவன்,


"ஹ்ம்ம்.. ரொம்ப தைரியம் தான்... போலீஸ் கிட்டயே வந்து எதுக்கு என்ன ஃபாலோ பண்றன்னு கேக்குற அளவுக்கு நல்லவனா நீ?" என்றான் கோபமாக.


பிரணவ் அவனைப் புரியாமல் பார்க்கவும், "எதுக்காக சிதாராவ கடத்த முயற்சி பண்ண..." என ரவி கேட்கவும் அதிர்ந்தான் பிரணவ்.


பிரணவ், "என்ன சொல்றீங்க சார்... நான் எதுக்கு தாராவ கடத்தனும்? " என்க,


ரவி, "சும்மா நடிக்காதேடா... நீ தான் கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஆர்யான் கிட்ட எப்படியாவது சிதாராவ உன் கிட்ட வர‌ வைக்கிறதா சேலேன்ஜ் பண்ணி இருக்க..." என்க,


"நான் ஆர்யான் கிட்ட அன்னைக்கு அப்படி சொன்னது உண்மை தான்... அது நான் தாராவுக்கு பண்ண தப்ப உணர்ந்தேன்... தாரா என்ன ரொம்ப லவ் பண்ணா... ஆர்யானுக்கு என்னை பிடிக்கல... அதனால தான் நான் அப்படி சொன்னேன்... ஆனா என் மனசுல இப்போ அப்படி எந்த எண்ணமும் இல்ல சார்.." என பிரணவ் கூற அவனை சந்தேகமாய் நோக்கினான் ரவி.


சற்று அமைதி காத்த பிரணவ் பின், "தாராவுக்கு ஆர்யான் கூட கல்யாணம்னு தெரிஞ்சப்ப எப்படியாவது இந்த கல்யாணத்த நிறுத்தனும்னு நான் நெனச்சது உண்மை தான்...‌ ஆனா அவங்க என்கேஜ்மன்டுக்கு ரெண்டு நாள் முன்னாடி நான் வேலை விஷயமா வெளியூர் போனேன்... போன இடத்துல எனக்கு ஒரு ஆக்சிடன்ட்... அதனால என்னால இனிமே எப்பவும் ஒரு குழந்தைக்கு அப்பாவா ஆக முடியாதுன்னு சொல்லிட்டாங்க... தாராவுக்கு நான் பண்ணின அநியாயத்துக்கு தான் எனக்கு இப்படி ஒரு தண்டனை கிடைச்சிருக்குறதா நான் நெனச்சேன்... அப்போவே முடிவு பண்ணேன் தாரா இனிமே சந்தோஷமா இருக்கணும்னு... நிச்சயம் ஆர்யானால தான் அவள சந்தோஷமா வெச்சிக்க முடியும்... அதனால அதுக்கப்புறம் நான் தாராவ டிஸ்டர்ப் பண்ணல..." என்க,


"நீங்களும் சிதாராவ கடத்தலன்னா வேற யாரா இருக்கும்... ஆர்யானுக்கு கூட கால் பண்ணி மிரட்டி இருக்கான்... பட் சேட்டலைட் ஃபோன் யூஸ் பண்றதால எங்களால அவன ட்ரேஸ் பண்ண முடியல..." என்றான் ரவி.


பிரணவ், "உங்களுக்கு ஓக்கேன்னா என்னால தாராவ யாரு கடத்த ட்ரை பண்ணாங்கன்னு கண்டுபிடிக்க உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்..." என்கவும் அவனைக் கேள்வியாய் நோக்கினான் ரவி.


"காலேஜ் டேய்ஸ்ல நான் ஹேக்கிங் படிச்சிருக்கேன்... அத வெச்சி என்னால கண்டு பிடிக்க முடியும்னு நினைக்கிறேன்... தாராவ கடத்த முயற்சி பண்ணவங்க எவ்வளவு உஷாரா இருந்தாலும் எங்கயாவது ஏதாவது சின்ன தப்பாவது பண்ணி இருப்பாங்க... அதை வெச்சி அவங்கள பிடிக்க முடியும்..." என பிரணவ் கூறவும் ரவி சம்மதித்தான்.


பிரணவ் சென்ற பின் ஆர்யானிடம் கூற அவனுக்கு முதலில் நம்ப முடியவில்லை என்றாலும் தன்னவளின் நலனுக்காக அதற்கு சம்மதித்தான்.


ஆர்யான் பிரணவ்வுக்கு அழைக்க அவனும் சிதாராவுக்கு செய்த தப்புக்கு பிராயச்சித்தமாக செய்வதாகக் கூறினான்.


ஜீவாவிடமிருந்து பெற்ற எண்ணையும் பிரணவ்விடம் வழங்கி யாரெனக் கண்டு பிடிக்கக் கூற அவன் அது நியுயார்க்கிலிருந்து வந்த அழைப்பு எனக் கூறியதும் சிதாராவைக் கடத்த முயன்றவனுக்கும் ஜீவாவிடமிருந்து தகவல் பெறுபவனுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக ரவிக்குப் புரிந்தது.


அதனைக் கண்டு பிடிப்பதற்காக ரவி முதலில் நியுயார்க் செல்ல, அவனுக்கு உதவியாக பிரணவ்வையும் வரவழைத்தான்‌.


ஆர்யான் திடீரென அழைத்து சிதாராவைக் கடத்தி விட்டதாகக் கூறி நடந்ததைக் கூறவும் பிரணவ் சிதாராவின் எண் கடைசியாக சிக்னல் கட் ஆன இடத்தைக் கண்டு பிடித்தான்.


ஆர்யான், ரவி, பிரணவ் மூவரும் அங்கு செல்ல அங்கு ஒரு வேன் மட்டும் யாருமின்றி தனியே கிடந்தது.


ரவி அதன் எண்ணை வைத்து யாருடைய பெயரில் அந்த வேன் பதியப்பட்டிருப்பதைத் தேட, அதுவோ மிஸ்ஸிங் கேசில் பதியப்பட்டிருந்தது.


என்ன செய்ய என யோசிக்கும் போது தான் ஆர்யானுக்கு தன் வீட்டின் அருகே கிடைத்த பிரேஸ்லெட் ஞாபகம் வந்தது.


ஆர்யான் ரவியிடம், "டேய்.. எனக்கொரு டவுட் இருக்கு... பிரணவ்.. நீங்க நான் சொல்ற நம்பர் இருக்குற இடத்த ட்ரேஸ் பண்ணுங்க... நான் நினைக்கிறது சரின்னா மினி அங்க தான் இருக்கனும்..." என்க,


பிரணவ் உடனே ஆர்யான் தந்த ஆதித்யாவின் எண்ணை ட்ரேஸ் செய்து அது இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தான்.


ரவி நியுயார்க் போலீஸ் உதவியுடன் அங்கு சென்று ஆதித்யாவைப் பிடித்தான்.


ஆர்யான் ஆதித்யாவை ஜெயிலில் அடைத்து விட்டு சிதாராவை அனுமதித்திருந்த ஹாஸ்பிடல் வர, சிதாரா இருந்த அறைக்கு வெளியே அமர்ந்திருந்தவனை நெருங்கிய ஆர்யான் அவன் தோள் தொட்டு, "ரொம்ப தேங்க்ஸ் நீங்க பண்ண உதவிக்கு..." என்க,


"தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு ஆர்யான்? தாராக்கு நான் பண்ண பாவத்துக்கு ஒரு பிராயச்சித்தமா தான் நான் இதை பண்ணேன்.." என்றான் பிரணவ்.


பிரணவ், "சரி ஆர்யான்.. அப்போ நான் கிளம்புறேன்... நான் இதை உங்க கிட்ட சொல்லணும்னு அவசியமில்ல... தாராவ நல்லா பார்த்துக்கோங்க... ஆல்ரெடி அப்படி தான் பாத்துக்குறீங்க... " என்க,


ஆர்யான், "மினிய பார்த்துட்டு போகலையா?" எனக் கேட்டான்.


அவனைப் பார்த்து புன்னகைத்த பிரணவ், "இல்ல ஆர்யான்... அவ இப்போ சுயநினைவு இல்லாம இருக்கலாம்... ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு... நீங்க அவ கூட இருந்தா நிச்சயம் அவ சரி ஆகிடுவா... தாராக்கு என்னை பத்தி எதுவும் தெரிய வேணாம்... அவ லைஃப்ல நான் முடிஞ்சு போன சேப்டர்... அது அப்படியே இருக்கட்டும்... எனக்கு தெரியும் தாராவுக்கு நான் பண்ணின காரியத்துக்கு உங்களுக்கு என் மேல கோவம் இருக்கும்... முடிஞ்சா நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க... நான் போறேன்..." என்றவன் ஆர்யானின் தோளில் தட்டி விட்டு சென்றான்.


அன்றே மீண்டும் கிளம்பி இந்தியா வந்தடைந்தான் பிரணவ். பிரணவ் வந்ததும் கையில் ஏதோ பையுடன் அவனைக் காண வந்த ஆகாஷ், "பாஸ்... இது அன்னைக்கு ஹாஸ்பிடல்ல கொடுத்து விட்டாங்க... உங்க திங்க்ஸ்..." என்க, அதனை வாங்கிக்கொண்ட பிரணவ், "ஆகாஷ்... இன்னைக்கு இருக்குற மீட்டிங்ஸ் டீட்டைல்ஸ் எல்லாம் எனக்கு மெயில் பண்ணி விட்டுடுங்க..." என்கவும் சரி எனத் தலையசைத்து விட்டு கிளம்பினான் ஆகாஷ்‌.


ஆகாஷ் சென்றதும் அவன் தந்த பையைப் பிரித்து பார்த்த பிரணவ் அதில் இருந்த இளமஞ்சள் நிற ஷாலைக் கண்டு புருவம் சுருக்கினான். அதற்குள் அவனுக்கு ஏதோ அழைப்பு வரவும் அதனை தன் கப்போர்ட்டில் வைத்துப் பூட்டி விட்டு அழைப்பை ஏற்கச் சென்றான்.

************************************
மக்களே!!! புதுசா இந்த கதையை படிக்கிறவங்களுக்கு இந்த அத்தியாயம் கொஞ்சம் குழப்பமா இருக்கலாம். இந்த கதை என்னோட "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." கதையில் வரும் பிரணவ்வோட தனிப்பட்ட கதை. இந்த அத்தியாயத்துக்கான விளக்கம் அந்த கதைல தான் இருக்கு. பட் இனிமே வர அத்தியாயங்களுக்கும் அந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. சோ புதுசா படிக்கிறவங்க கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல. அந்த கதையை படிக்காவிட்டாலும் இந்த கதை புரியும். Keep supporting 🤗


************************************

 
Last edited:

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கண்ணீர் - அத்தியாயம் 5

அன்று பிரணவ்வின் ஒரே நண்பனான அபினவ்வினதும் அவனது சகோதரன் ஆதர்ஷினதும் திருமணம்.

ஆனால் பிரணவ்வோ திருமணத்திற்கு செல்லாது ஆஃபீஸில் வேலையாக இருக்க, அனுமதி கேட்டு விட்டு அவன் அறைக்குள் நுழைந்த ஆகாஷ், "பாஸ்... அபினவ் சார் கல்யாணத்துக்கு நீங்க போகலயா?" எனக் கேட்கவும் தலை நிமிராமலே இல்லை எனத் தலையசைத்தான் பிரணவ்.

ஒரு நிமிடம் தயங்கி விட்டு, "அபினவ் சார் காலைல இருந்து நிறைய தடவை எனக்கு கால் பண்ணிட்டார் நீங்க அவர் கால் அட்டன்ட் பண்ணலன்னு... நான் நீங்க மீட்டிங்ல இருக்குறதா சொல்லி சமாளிச்சேன்..." என ஆகாஷ் கூறவும் பிரணவ் அதே போல தலையை நிமிர்த்தாமலே, "ஓஹ்... நான் கவனிக்கல..." எனக் கூறும் போதே அவனின் கைப்பேசி ஒலி எழுப்பியது.

அபினவ் தான் அழைத்திருந்தான். அழைப்பை ஏற்காமல் கைப்பேசித் திரையையே வெறித்த பிரணவ் ஆகாஷ் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து பெருமூச்சு விட்டவன் வேறு வழியின்றி அழைப்பை ஏற்றான்.

"டேய்... எங்கடா இருக்க... நீ எங்க கல்யாணத்துக்கு வருவியா மாட்டியா?" என அழைப்பின் மறுபக்கத்தில் இருந்த அபினவ் எடுத்ததுமே கோபமாகக் கேட்க,

"சாரிடா அபி... நான் வரலடா... ஆதர்ஷ் கிட்டயும் சாரி கேட்டதா சொல்லு..." என பிரணவ் பதிலளிக்கவும்,

அபினவ், "அப்படி என்ன பிரச்சினைடா உனக்கு? ஃப்ரெண்டு ஃப்ரெண்ட்னு பேச்சுக்கு தான் சொன்னியா? எங்க கல்யாணத்துக்கு கூட உன்னால வர முடியாதா?" என்கவும் சில நொடி அமைதி காத்த பிரணவ்,

"நான் அங்க வந்தா தாரா கஷ்டப்படுவா அபி... அவ ஃப்ரெண்ட்ஸோட மேரேஜ்... என்னைப் பார்த்தா அவ மூடே ஸ்பாய்ல் ஆகிடும்டா..." என்றான்.

மறுபக்கம் கைப்பேசி கை மாறும் சத்தம் கேட்க, "பிரணவ்... இன்னைக்கு மினியோட ஃப்ரெண்ட்ஸுக்கு மட்டுமில்ல மேரேஜ்... உங்க ஃப்ரெண்ட்ஸுக்கும் தான்... நீங்க வாங்க... என் மினிக்காக நீங்க எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கீங்க..." என்க,

"இல்ல ஆர்யான்... நான் வந்தா எல்லாருக்கும் சங்கடமா இருக்கும்... ப்ளீஸ்... என்னைக் கம்பில் பண்ணாதீங்க..." என மறுத்த பிரணவ்விற்கு ஆர்யானின் என் மினியில் இருந்த அழுத்தம் புரியாமல் இல்லை.

அபினவ், ஆதர்ஷ், ஆர்யான் என மூவருமே மாறி மாறி பிரணவ்விடம் எவ்வளவு கெஞ்சியும் முடியாது என உறுதியாகவே மறுத்து விட்டான் பிரணவ்.

வேறு வழியின்றி அபினவ்வும் கோபமாக அழைப்பைத் துண்டித்து விட, இன்னும் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷைப் பார்த்து புருவம் உயர்த்தி கண்களாலே என்ன எனக் கேட்டான்.

ஆகாஷ், "பாஸ்... சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... அபினவ் சார் கல்யாணத்துக்கு போனா உங்களுக்கும் கொஞ்சம் மனசுக்கு சேன்ஜா இருக்கும்..." என்க, ஒரு கசந்த புன்னகையை உதிர்த்த பிரணவ், "ஆல்ரெடி குற்றவுணர்ச்சில இருக்கேன் ஆகாஷ்... அந்த கல்யாணத்துக்கு போனா என் கடந்த காலத்தை திரும்ப பார்க்க வேண்டி வரும்... அது என்னை இன்னும் குற்றவுணர்ச்சில தான் ஆழ்த்தும்... எவ்வளவு தூரம் என் பாஸ்ட்ட விட்டு விலகி ஓட முடியுமோ அவ்வளவு தூரம் போக விரும்புறேன்..." என ஒரு நிமிடம் இடைவெளி விட்டவன், "அதனால தான் அப்பா கிட்ட எங்க பெங்களூர் பிரான்ச்ச பொறுப்பெடுக்க பர்மிஷன் வாங்கி இருக்கேன்... பட் யாருக்கும் நான் தான் அங்க எம்.டினு தெரிய போறது இல்ல... ஜஸ்ட் ப்ராஜெக்ட் மேனேஜரா தான் போக போறேன்...இன்னும் வன் மந்த்ல அங்க போக வேண்டி வரும்..." என்கவும், "பாஸ்..." என நெஞ்சில் கை வைத்து அலறி விட்டான் ஆகாஷ்.

ஆகாஷின் அதிர்ந்த முகத்திலே அவனின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட பிரணவ், "பயப்படாதீங்க ஆகாஷ்... உங்களுக்கு வேலை போகாது... நீங்களும் என்னோட பெங்களூர் வரீங்க..." எனப் புன்னகையுடன் கூறவும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஆகாஷ், "ஒரு நிமிஷம் பயந்துட்டேன் பாஸ்..." என்க, "இன்னும் ஏதாவது இருக்கா?" எனக் கேட்டான் பிரணவ்.

ஆகாஷ் இல்லை என இட வலமாகத் தலையசைக்க, "அப்போ..." என கண்களாலே கதவைக் காட்டினான் வெளியேறுமாறு.

"ஆஹ்... ஆஹ்... யேஸ் பாஸ்..." என உடனே பிரணவ்வைப் பார்த்து ஆகாஷ் சல்யூட் அடிக்கவும் பிரணவ் அவனை வேற்றுக்கிரக ஜந்து போல் நோக்க, தன் செயல் புரிந்து அவசரமாகக் கையைக் கீழே போட்ட ஆகாஷ் பிரணவ்வைப் பார்த்து இளித்து விட்டு வெளியே ஓடி விட்டான்.

பிரணவ் தான், 'பைத்தியமா இவன்?' என்ற ரீதியில் பார்த்து விட்டு தோளைக் குலுக்கினான்.

************************************
"ஹேய் காய்ஸ்... ஒரு குட் நியூஸ்... நம்ம டீமுக்கு புது ப்ராஜெக்ட் மேனேஜர் வரப் போறாங்க... சென்னை பிரான்ச்ல இருந்து ட்ரான்ஸர் ஆகி வரார்... இனிமே அந்த சிடுமூஞ்சி சிங்காரம் கிட்ட வீணா திட்டு வாங்க வேண்டிய அவசியமில்ல..." என மாலதி உற்சாகமாகக் கூறவும்,

"ப்ச்... அடப்போம்மா நீ வேற... இப்போ வரப் போறவன் கூட இந்த சிடுமூஞ்சி சிங்காரத்த போலவே ஓல்ட் பீஸ் ஒன்னா இருக்கும்... எப்படியும் நம்மள திட்ட தான் போறார்... ஏனா நம்ம முக ராசி அப்படி..." என்றாள் சாருமதி சலிப்பாக.

அதனைக் கேட்டு அனு உதட்டை மடித்து சிரிக்க, "அதான் டி இல்ல சாரு... இப்போ வரப் போறவர் யூத்... செம்ம ஹேன்ட்சம்மா இருப்பார்... நான் ஒரு தடவை அவரை மீட்டிங் ஒன்னுல பார்த்து இருக்கேன்..." என மாலதி கூறவும் சாருவின் கண்கள் பளிச்சிட, "ஹேய்... ஹேய் மாலு... சொல்லுடி அவரைப் பத்தி... ஆள் பார்க்க எப்படி இருப்பார்? எனக்கு மேட்ச்சா இருப்பாரா?" என ஆர்வமாகக் கேட்க, மாலதி புது பிராஜெக்ட் மேனேஜரைப் பற்றி தனக்கு தெரிந்தை வைத்து ஆஹா ஓஹோ என வர்ணிக்க, ஏனோ அனுவின் நினைவு அந்தப் பெயர் தெரியாதவனிடமே சென்றது.

அன்று பிரணவ் விபத்துக்குள்ளாகி அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு சாருமதியுடன் ஆஃபீஸ் வந்த அனுபல்லவியால் அந்த இரத்தம் படிந்திருந்த முகத்தை மறக்க முடியவில்லை.

'அவன் இப்போது எப்படி இருப்பான்? குணமாகி விட்டானா? இல்லை அன்று விபத்துக்குள்ளானதில்‌ ஏதாவது ஆகி விட்டதா? உயிருடன் தான் இருக்கின்றானா?' என அனுவின் மனதில் பல கேள்விகள்.

திடீரென சாருமதியின் சிரிப்புச் சத்தம் கேட்கவும் தன்னிலை அடைந்த அனுபல்லவி முயன்று தன் மனதை வேறு வேலையில் பதித்தாள்.

************************************

சரியாக ஒரு மாதத்தில் பெங்களூர் கிளம்ப தயார் ஆகினான் பிரணவ். ஊருக்கு கிளம்புவதற்காக உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அவன் பார்வையில் பட்டது அன்று ஆகாஷ் தந்த பையில் இருந்த அந்த இளமஞ்சள் நிற துப்பட்டா.

அதனைக் கரத்தில் எடுத்தவனின் நினைவில் ஒரு பெண்ணின் முகம் மங்கலாகத் தெரிய, பல தடவை முயன்றும் அம் முகத்திற்கு சொந்தக்காரியை அவனால் நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை.

பிரணவ், "ச்சே..." எனத் தலையைப் பிடித்துக் கொண்டு கோபமாக கட்டிலில் அமர்ந்தவன் அந்த துப்பட்டாவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

'யார் அவ? ஏன் எனக்கு அவ முகம் ஞாபகத்துக்கு வருதில்ல? இந்த ஷால் எப்படி என் கிட்ட...?' என சிந்தித்தவனுக்கு மயக்க நிலையில் ஒரு பெண்ணின் குரல் மெதுவாகக் கேட்டது நினைவு வரவும், "ஓஹ்... ஆக்சிடன்ட் அன்னைக்கு என்னை ஹாஸ்பிடல் அனுப்பி வெச்ச யாரோடயாவது இருக்கும் போல..." என பிரணவ் தனக்கே கூறிக்கொண்டான்.

அப்போது கீழிருந்து அவனின் தாயின் குரல் கேட்கவும் பிரணவ் அந்த துப்பட்டாவைக் கட்டிலில் வீசி விட்டுச் செல்ல, அந்த துப்பட்டாவோ பிரணவ்வின் பைக்குள் தஞ்சம் அடைந்தது.

ஹால் சோஃபாவில் லக்ஷ்மி கோபமாக அமர்ந்திருக்க, அவருக்கு அருகில் ஏதோ கோப்பை கையில் வைத்து படித்தவாறு அமர்ந்து இருந்தார் மூர்த்தி.

தன் தாயைக் கேள்வியாக நோக்கியபடியே பிரணவ் அவர்களுக்கு எதிரே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து என்ன விஷயம் என்பது போல லக்ஷ்மியைப் பார்க்க, அவரோ பிரணவ்வை முறைத்து விட்டு, "உன் மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்க பிரணவ்? யாரைக் கேட்டு நீ இப்படி பண்ற? எம்.எல் க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸோட வருங்கால எம்.டி நீ... ஆனா நீ என்னன்னா அங்க போய் வெறும் ப்ராஜெக்ட் மேனேஜரா இருக்க போறதா சொல்ற..." என்றார் கோபமாக.

பிரணவ், "ஏன் அதுவும் நம்ம கம்பனி தானே... நான் வேற யாரோட கம்பனியில சரி எம்ப்ளாயியா வர்க் பண்ணா தான் நீங்க அசிங்கப்படணும்... இதுல என்ன இருக்கு?" எனக் கேட்கவும் லக்ஷ்மி ஏதோ கூற வர, அவர் முன் கை நீட்டி தடுத்த பிரணவ், "உங்க புருஷன் கிட்ட நான் என் முடிவை சொல்லி அவர் சம்மதத்தோட தான் நான் கிளம்புறேன்... இதுக்கு மேலயும் என்னை தடுக்க நினைச்சீங்கன்னா எதுவும் வேணாம்னு தூக்கி போட்டு கிளம்பி போய்ட்டே இருப்பேன்..." என்று விட்டு தன் அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்டான்.

************************************

அன்று ஆஃபீஸ் முழுவதுமே ஒரே பரபரப்பாகக் காணப்பட்டது.

அனு, "ஏன் டி சாரு... நம்ம டீமுக்கு தானே புதிய ப்ராஜெக்ட் மேனேஜர் வரார்... ஜஸ்ட் ஒரு ப்ராஜெக்ட் மேனேஜரை வெல்கம் பண்ண எதுக்கு இவ்வளவு அலப்பறை?" எனப் புரியாமல் கேட்க, "அதான் அனு எனக்கும் புரியல... சரி வெய்ட் பண்ணி பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு..." எனச் சாருமதி கூறவும் தோளைக் குலுக்கினாள் அனுபல்லவி.

அப்போது திடீரென ஏதோ சலசலப்புச் சத்தம் கேட்கவும் தோழிகள் இருவரும் கூட்டத்தின் பக்கம் திரும்ப, அங்கு வந்துகொண்டு இருந்ததோ ஆகாஷ்‌.

சாருமதி, "இந்த பாடிக்கு தான் இவ்வளவு அலப்பறை பண்ணினாங்களா?" எனக் கேலியாகக் கேட்கவும் வாயை மூடிச் சிரித்தாள் அனுபல்லவி.

ஜெனரல் மேனேஜரை தனியே சந்தித்த ஆகாஷ் அவரிடம் ஏதோ ரகசியமாகக் கூற, புரிந்தது போல் தலை ஆட்டியவர் கூடி இருந்த கூட்டத்தின் அருகே வந்து, "எல்லாரும் எதுக்கு இப்போ கும்பலா இருக்கீங்க? போய் வேலையை பாருங்க..." என்று சத்தமிடவும் அனைவரும் கலைந்து சென்று விட, ஆகாஷும் அங்கிருந்து சென்றான்.

"இவன் இல்லையா அப்போ அந்த ப்ராஜெக்ட் மேனேஜர்? இவன் யாரு அனு அப்போ? இவன் பேச்சை கேட்டு நம்ம ஜி‌.எம்மே பூம் பூம் மாடு மாதிரி மண்டையை ஆட்டுறார்..." எனச் சாருமதி நக்கலாகக் கூறவும் அவளின் தோளில் அடித்து அமைதிப்படுத்திய அனுபல்லவி, "ஷ்ஷ்ஷ் சாரு... பேசாம இரு டி... கேட்டுட போகுது... யார் வந்தா நமக்கு என்ன?" என்றாள்.

சிறிது நேரம் கழித்து அனுபல்லவின் டீம் உறுப்பினர்களை ஜீ.எம் மீட்டிங் ஹாலுக்கு அழைப்பு விடுக்கவும் அனைவரும் அங்கு செல்ல, அங்கு ஜி.எம். இற்கு அருகில் அமர்ந்து இருந்தவனைக் கண்டு அதிர்ச்சியில் கண்களை அகல விரித்தாள் அனுபல்லவி.

ஜீ.எம், "சா..." சார் எனக் கூற வந்தவர் பிரணவ்வின் அழுத்தமான பார்வையில் அவசரமாகத் திருத்தி, "மிஸ்டர் பிரணவ்... இவங்க தான் உங்க டீம் மெம்பர்ஸ்..." என்கவும் பிரணவ் திரும்பி ஒவ்வொருவராய் அவதானிக்க,

தான் காப்பாற்றியவன் நலமுடன் இருக்கின்றான் என அனுபல்லவியின் முகம் மலர, பிரணவ்வோ அவளைப் பார்த்து விட்டு மற்ற ஆள் மீது கவனம் பதிக்கவும் அனுபல்லவியின் முகம் வாடிப் போனது.

அனுபல்லவி, 'என்ன இது? இவருக்கு என்னைக் கொஞ்சம் கூட ஞாபகம் இல்லையா? ப்ச்... அவருக்கு எப்படி என்னை ஞாபகம் இருக்கும்? அவர் தான் மயக்கத்துல இருந்தாரே...' என மனதுக்குள்ளே பட்டிமன்றம் நடத்தினாள்.

பிரணவ்வின் குரலில் தன்னிலை மீண்டவள் அவனின் மீது பார்வையை செலுத்த, "ஹாய் காய்ஸ்... ஐம் பிரணவ்... நைஸ் டு மீட் யூ ஆல்... இன்னைல இருந்து நான் தான் உங்க ப்ராஜெக்ட் மேனேஜர்... என்னைப் பத்தி சொல்லி தெரிஞ்சிக்கணும்னு இல்ல... போக போக புரியும் உங்களுக்கே... நாம ஒரு டீமா இருக்கும் போது உங்க ஒப்பீனியன்ஸ தயங்காம நீங்க முன் வைக்கலாம்... ஏதாவது டவுட் இருந்தாலும் எப்பன்னாலும் யூ ஆர் ஃபீல் ஃப்ரீ டு ஆஸ்க்..." என பிரணவ் அழுத்தமான குரலில் கூறவும் அனைவரின் தலையும் தானாகவே சம்மதம் என மேலும் கீழும் ஆடியது.

பிரணவ் ஜீ.எம். இற்கு கண் காட்டவும், "யூ மே கோ நவ்..." என ஜீ.எம். கட்டளையிட, அனைவரும் வெளியேறினர்.

பிரணவ்வின் மீதே பார்வை பதித்திருந்த அனுபல்லவிக்கு தான் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அவனின் பார்வை தன் மீது படிந்தது போல் ஒரு மாயை.

தன் தலையில் தட்டிக்கொண்ட அனுபல்லவி, 'ப்ச் அனு... உனக்கு என்னாச்சு? அவருக்கு உன்ன யாருன்னு கூட தெரியல... அவர் எதுக்கு உன்ன பார்க்க போறார்? அது மட்டும் இல்லாம அந்த ஆக்சிடன்ட் அப்போ அங்க யாரு இருந்தாலும் நீ அப்படி தான் காப்பாத்தி இருக்க போற... அதுக்காக அவங்களுக்கு நம்மள ஞாபகம் இருக்கணும்னு அவசியமா என்ன? அவர் உன்னோட பாஸ்... நீ ஒரு எம்ப்ளாயி... அவ்வளவு தான்...' எனத் தன்னையே சமாதானப்படுத்திக்கொள்ள, எவ்வளவு நேரமாக அழைத்தும் பதிலளிக்காது வித விதமான முக பாவனைகளைக் காட்டிக் கொண்டிருந்த தோழியை புருவம் சுருக்கிப் பார்த்தாள் சாருமதி.

அப்போது தான் தோழியின் பார்வை தன் மீது இருப்பதை உணர்ந்து அனுபல்லவி அவளைப் பார்த்து இளித்து வைக்க, பெருமூச்சு விட்ட சாருமதி, "நான் கூட புதுசா வர ப்ராஜெக்ட் மேனேஜர் ரொம்ப ஜாலி டைப்பா இருப்பார்னு எதிர்ப்பார்த்தேன்... இவர் என்னன்னா சிரிப்பு என்ன விலைனு கேட்பார் போல... பரவால்ல... ஆளு பார்க்க செம்ம ஹேன்ட்ஸமா இருக்கார்... அதனால அவர் திட்டினா கூட சந்தோஷமா கேட்டுக்கலாம்..." என்றாள் கண்கள் மின்ன.

அதில் ஏனோ அனுபல்லவிக்கு லேசாக பொறாமை எட்டிப் பார்க்க, "மிஸ் சாருமதி... அவர் நம்ம பாஸ்... சோ நீங்க கொஞ்சம் அடக்கி வாசிக்கிறீங்களா?" எனப் பல்லைக் கடித்துக்கொண்டு கேட்கவும் உதட்டை சுழித்த சாருமதி, "அடப் போம்மா அங்குட்டு... சரியான ரசனை கெட்டவ..." எனக் கூறி விட்டு தன் வேலையைக் கவனிக்கச் சென்றாள்.

ஒரு நிமிடம் நின்று பிரணவ் இருந்த அறையைத் திரும்பிப் பார்த்த அனுபல்லவி, 'வர வர ரொம்ப ஓவரா போற அனு நீ... இது நல்லதுக்கு இல்ல...' என்ற மனசாட்சியின் எச்சரிக்கையில் தான் செய்து கொண்டிருக்கும் காரியம் உணர்ந்து தலையில் அடித்துக் கொண்டாள்.

டீம் உறுப்பினர்கள் அனைவரும் சென்றதும் ஜீ.எம்மின் பக்கம் திரும்பிய பிரணவ், "மிஸ்டர் மோகன்... எனக்கு கொஞ்சம் சேன்ஜ் வேணும்... அதனால தான் நான் இந்த பிரான்ச்ச பொறுப்பேற்று இருக்கேன்... பட் இங்க இருக்குற எம்ப்ளாயீஸ் யாருக்கும் நான் தான் இந்த கம்பனி எம்.டி னு தெரியக் கூடாது... கோட் இட்?" என்கவும் புரிந்ததாய் தலை ஆட்டினார் மோகன்.

அவர் சென்றதும் கண்களை மூடி தலையில் கை வைத்து அமர்ந்தவனின் மனக்கண் முன் அனுபல்லவி வந்து சென்றாள்.

வந்ததிலிருந்தே தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளை அவனும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான். ஆனால் அதனை முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. கடைசியாக செல்லும் போது அவளின் கண்களில் தெரிந்த ஏக்கத்தின் காரணம் தான் அவனுக்கு புரியவில்லை.

அதனை‌ முயன்று ஒதுக்கித் தள்ளிய பிரணவ் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவும், "யேஸ் கம் இன்..." என்கவும் அறைக்குள் நுழைந்த ஆகாஷ், "பாஸ்... நீங்க கேட்ட டீட்டைய்ல்ஸ்... உங்க டீம் மெம்பர்ஸோட டீட்டைல்ஸ் அப்புறம் கம்பனி பத்தி ஃபுல் ரிப்போர்ட் இதுல இருக்கு..." என்கவும் அதனை வாங்கிப் படித்த பிரணவ்வின் கண்கள் அனுபல்லவி பற்றி இருந்த தாளில் சற்று நேரம் நிலைத்து நின்றது.

'பல்லவி...' என மனதில் கூறிப் பார்த்தவனின் கவனத்தைக் கலைத்தது ஆகாஷின் செறுமல். அவசரமாக மற்ற தகவல்களில் பார்வையை பதித்த பிரணவ், "ஆகாஷ்... நாளைக்கு காலையில என் டீம் மெம்பர்ஸ் எல்லாருக்கும் மீட்டிங் அரேன்ஜ் பண்ணிடுங்க... இப்போவே அதை பத்தி அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க..." எனக் கட்டளை இட்டான்.

************************************

 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கண்ணீர் - அத்தியாயம் 6

"அனு.............." என்ற சாருமதியின் கத்தலில் தூக்கத்தில் இருந்து பதறி எழுந்தாள் அனுபல்லவி.

அனுபல்லவி, "என்னாச்சு? என்னாச்சு? யாரு செத்துட்டாங்க?" என அரைத் தூக்கத்தில் பதட்டமாகக் கேட்க, அவள் முகத்தில் உடையை விட்டெறிந்த சாருமதி, "நான் குளிக்க போக முன்னாடி உன்ன எழுப்பாட்டிட்டு தானே போனேன்... நீ என்னன்னா திரும்ப தூங்கிட்டு இருக்க..." என்றாள் கோபமாக.

"ப்ச்..." என மீண்டும் போர்வையால் முகத்தை மூடியபடி அனுபல்லவி தூங்கவும் சாருமதி குளியலறையில் இருந்து ஒரு பாக்கெட் தண்ணீரை எடுத்து வந்து வஞ்சகமே இன்றி அனுபல்லவியின் மீது ஊற்றவும், "ஐயோ... அம்மா..." எனப் பதறித் துடித்துக்கொண்டு எழுந்தாள் அனுபல்லலி.

சாருமதியின் கரத்தில் இருந்த பாக்கெட்டைக் கண்டு அனுபல்லவி அவளை ஏகத்துக்கும் முறைக்க, அவளுக்கு சமமாய் பதிலுக்கு முறைத்த சாருமதி, "புது ப்ராஜெக்ட் மேனேஜர் வந்து இன்னைக்கு ஃப்ர்ஸ்ட் டே... போர்ட் மீட்டிங் வேற இருக்கு மறந்துட்டியா?" என்கவும் அதிர்ந்து தலையில் கை வைத்த அனுபல்லவி இன்னும் தன் தோழி தன்னை முறைத்துக்கொண்டு இருப்பதைக் கண்டு அவசரமாக குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

எவ்வளவு வேகமாகக் குளித்தும் அரை மணி நேரத்திற்கு மேல் கடந்திருக்க, வேகமாகக் குளியலறைக் கதவைத் தட்டிய சாருமதி, "அனு... இம்பார்டன்ட் ஃபைல் ஒன்ன சப்மிட் பண்ண வேண்டி இருக்கு டி..‌. நேத்து கொடுக்க மறந்துட்டேன்... சோ நான் முன்னாடி போறேன்... லேட் ஆகிடுச்சு... நான் ஸ்கூட்டியை எடுத்துட்டு போறேன்... நீ பஸ் பிடிச்சி வா..." என்றவள் அனுபல்லவி, "ஹேய் சாரு... இரு டி‌... எனக்கு தனியா பஸ்ல போய் பழக்கம் இல்ல டி... சாரு..." எனக் கத்தக் கத்தக் கேட்காது அங்கிருந்து சென்றாள்.

சாருமதி சென்றதும் உதட்டைப் பிதுக்கிய அனுபல்லவி, "உனக்கு இன்னைக்கு நேரம் சரி இல்ல டி அனு... எல்லாம் அவரால தான்... நீ எதுக்கு நைட் ஃபுல்லா அவரைப் பத்தியே யோசிச்சிட்டு இருந்த?" எனத் தன்னையே கேட்டுக்கொள்ள, 'இன்னும் நீ கிளம்பாம லூசு மாதிரி தனியா பேசிட்டு இருக்கியா?' என்ற மனசாட்சியின் கேள்வியில் தன்னிலை அடைந்து அவசரமாக குளித்து உடை மாற்றி விட்டு பேரூந்தைப் பிடிக்க ஓடினாள்.

அனுபல்லவியும் சாருமதியும் ஒரே நாளில் தான் வேலையில் சேர்ந்தனர். அதனால் தான் என்னவோ இருவருக்கும் இடையிலும் அனைத்தும் பொருந்திப் போகும். சில நாட்களிலே இருவரும் உயிர்த்தோழிகள் ஆக மாறினர். ஒன்றாகவே தங்கியும் இருந்தனர். எப்போதும் வேலைக்குச் செல்லும் போது இருவரும் ஒன்றாகத் தான் ஸ்கூட்டியில் செல்வர். அதனால் அனுபல்லவிக்கு இதுவரை பேரூந்தில் சென்று பழக்கம் இல்லை.

பேரூந்துத் தரிப்பிடத்தில் பேரூந்து வரும் வரை காத்திருந்த அனுபல்லவிக்கு லேசாக பயமாக இருந்தது. இருந்தும் முகத்தில் அதைக் காட்டிக் கொள்ளாது பேரூந்துக்காக காத்திருந்தாள். முதல் இரண்டு பேரூந்திலும் சன நெரிசல் என்று ஏறாமல் இருந்த அனுபல்லவி நேரம் வேறு செல்லுவதால் வேறு வழியின்றி அடுத்து வந்த பேரூந்தில் ஏறினாள்.

அதிலும் கூட்டமாக இருக்கவும் நின்று கொண்டே பயணித்தாள். அனுபல்லவியின் அருகில் நின்ற ஒரு ஆடவன் வேண்டும் என்றே அவள் உடலில் உரச, முதலில் அதை கண்டு கொள்ளாமல் தள்ளி நின்றவள் மேலும் மேலும் அவன் அதையே செய்யவும் ஏற்கனவே ஆஃபீஸுக்கு தாமதமாகி உள்ள கடுப்பில் திரும்பி அவனை முறைத்தவள் ஓங்கி அவன் காலை மிதிக்கவும் அவனின் கண்கள் அதிர்ச்சியிலும் வலியிலும் வெளியே தெறித்து விடும் அளவு விரிந்தன.

பேரூந்தில் குழப்பத்தை ஏற்படுத்தாது இருக்க அவனின் முகத்தின் முன் விரல் நீட்டிய அனுபல்லவி, "என்ன? நீ வேணும்னே தெரியாத மாதிரி வந்து வந்து உரசுவாய்... மத்த பொண்ணுங்களை போல நானும் வேற வழி இல்லாம அமைதியா போவேன்னு நினைச்சியா? ஆல்ரெடி செம்ம காண்டுல இருக்கேன் மகனே... மரியாதையா நீயே பஸ்ஸ விட்டு இறங்கி ஓடிடு... இல்ல தர்ம அடி வாங்கி தருவேன்..." எனப் பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியான குரலில் மிரட்டவும் அடிக்குப் பயந்து நடத்துனரிடம் பேரூந்தை நிறுத்தக் கூறி இறங்கி ஓடினான்.

ஒரு வழியாக ஒரு மணி நேரம் பிந்தி ஆஃபீஸை அடைந்த அனுபல்லவி நேரத்தைப் பார்த்து அதிர்ந்தவள் மீட்டிங் நடக்கும் ஹாலை நோக்கி ஓடி மூச்சிறைக்க நிற்கவும் அவளை கேள்வியாகப் பார்த்தான் பிரணவ்.

அனுபல்லவிக்கு முன்னதாகவே ஆஃபீஸ் வந்த சாருமதி அவள் முடிக்காமல் இடையில் விட்டிருந்த வேலையை செய்து முடிக்க, சற்று நேரத்திலேயே மீட்டிங் ஆரம்பமானது.

ஏதோ புதிய ப்ராஜெக்ட் பற்றி பிரணவ் விளக்கிக் கொண்டிருக்க, சாருமதியோ அடிக்கடி கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள் தோழியின் வருகையை எதிர்ப்பார்த்து.

திடீரென, "மிஸ் சாருமதி..." என்ற பிரணவ்வின் கோபக் குரலில் சாருமதி பதறி எழுந்து நிற்க, "நான் இப்போ சொன்னதை இவங்களுக்கு புரியிற மாதிரி எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க..." என அழுத்தமான குரலில் கூறவும், "சா...சார்...‌ அ...அது..." என சாருமதியின் நா தந்தி அடித்தது.

பிரணவ், "இது தான் நீங்க மீட்டிங்கை கவனிக்கிற லட்சணமா? வேலை பார்க்க வந்தீங்களா? இல்ல வேடிக்கை பார்க்க வந்தீங்களா? ப்ராஜெக்ட் பண்ண இஷ்டம் இல்லன்னா இப்பவே கிளம்புங்க..." எனக் கோபமாகக் கூறவும் தலை குனிந்த சாருமதி, "சாரி சார்...‌" என்க, "சிட் டவுன்..."‌என்ற பிரணவ்வின்‌ அழுத்தமான குரலில் அவசரமாக அமர்ந்து கொண்டாள் சாருமதி.

பிரணவ் மீண்டும் பேச ஆரம்பிக்கவும் தான் மூச்சிறைக்க ஓடி வந்தாள் அனுபல்லவி.

தன் கைக் கடிகாரத்தை ஒரு முறை பார்த்து விட்டு பிரணவ் அனுபல்லவியைக் கேள்வியாக நோக்க, "சாரி சார்... அது... பஸ் மிஸ் ஆகிடுச்சு..." என அனுபல்லவி தயங்கிக் கொண்டே கூற, பெருமூச்சு விட்டான் பிரணவ்.

'பாவம் அனு... ஆல்ரெடி பாஸ் செம்ம கோவத்துல இருக்கார்... இவ வேற நேரம் காலம் தெரியாம வந்து மாட்டிட்டா...' என தோழிக்காக மனதில் வருத்தப்பட்டாள் சாருமதி.

பிரணவ், "இது என்ன ஸ்கூலா காலேஜா?" என அமைதியாக வினவவும் புரியாமல் முழித்த அனுபல்லவி, "சார்..." என இழுக்கவும் பிரணவ், "ஸ்கூல் பசங்க போல பஸ் மிஸ் பண்ணிட்டேன்னு ரீசன் சொல்றீங்க... நேத்தே ஆகாஷ் மீட்டிங் பத்தி இன்ஃபார்ம் பண்ணிட்டார் தானே... கொஞ்சம் கூட பன்க்சுவாலிட்டி இல்லயா? இப்படி தான் டெய்லி ஆஃபீஸுக்கு ஆடி அசைஞ்சி வருவீங்களா?" எனக் கேட்டான் கடுமையாக.

பிரணவ்வின் கோபமான பேச்சில் அனுபல்லவியின் கண்கள் கலங்கி விட, பிரணவ்வோ அதனைக் கொஞ்சம் கூட கருத்திற் கொள்ளாது, "கெட் அவுட்..." என வெளியே கை காட்டவும் அதிர்ந்த அனுபல்லவி, "சாரி சார்... நான்..." என ஏதோ கூற வரவும், "ஐ செய்ட் கெட் அவுட்..." எனக் கத்தினான் பிரணவ்.

அதில் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் அனுபல்லவியின் கன்னம் தாண்டி வடிய, அழுதுகொண்டே தன் இடத்திற்கு சென்றாள் அனுபல்லவி.

சாருமதி தோழியை எண்ணி கலங்க, பிரணவ்வோ, "இது தான் ஃபர்ஸ்ட் என்ட் லாஸ்ட்டா இருக்கணும்... இனிமே மீட்டிங் இருந்தா கரெக்ட் டைமுக்கு எல்லாரும் அட்டன்ட் பண்ணணும்..." என்று விட்டு தன் பாட்டில் மீண்டும் மீட்டிங்கைத் தொடங்கினான்.

இங்கு தன் இடத்திற்கு வந்த அனுபல்லவியோ பிரணவ்வின் கோபத்தில் கண் கலங்க அமர்ந்து இருந்தாள்.

அனுபல்லவி, "எதுக்கு அவ்வளவு கோவப்படுறார்? அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன் நான்? ஒரே ஒரு நாள் தானே லேட் ஆகினேன்..." என மூக்கு உறிஞ்சி உறிஞ்சி தன்னையே கேட்டுக்கொள்ள, 'நீ இன்னைக்கு மட்டுமா லேட்?' என அனுபல்லவியின் மனசாட்சியே அவளுக்கு எதிராக சதி செய்தது.

"அதுக்காக எல்லார் முன்னாடியும் வெச்சி அப்படி திட்டலாமா?" என அனுபல்லவி மூக்கை உறிஞ்ச, 'இப்போ உனக்கு அவர் உன்னை திட்டினது பிரச்சினையா? இல்ல எல்லார் முன்னாடியும் வெச்சி திட்டினது பிரச்சினையா?' எனக் கேட்டது மனசாட்சி.

அனுபல்லவி, "ம்ம்ம்ம்... தெரியல... அவரை அன்னைக்கு ஆக்சிடன்ட் அப்போ காப்பாத்தினதுக்காகவாவது கொஞ்சம் பாசமா பேசலாம் இல்லையா? பாசமா எதுக்கு? இப்படி திட்டாம இருக்கலாமே..." என மீண்டும் கண் கலங்க, 'அட அறிவுக் கொழுந்தே... நீ காப்பாத்தினது அவருக்கு எப்படி தெரியும்? நீ சொன்னியா? அது மட்டும் இல்லாம இதுக்கு முன்னாடி இருந்த ப்ராஜெக்ட் மேனேஜர் கூட உன்னை திட்டி இருக்கார்ல... அப்போ எல்லாம் நீ இப்படி அழுதுட்டு இருக்கலயே...' என மனசாட்சி சரியான பாய்ன்ட்டைப் பிடிக்கவும், "அ...அது... அது..." என என்ன கூறுவது எனத் தெரியாது விளித்தாள்.

அப்போது அனுபல்லவிக்கு அருகில் அழுத்தமான காலடி ஓசை கேட்கவும் அதிர்ந்து திரும்ப, அவளுக்கு பின்னே கைகளை மார்புக்கு குறுக்காக கட்டி நின்றிருந்தான் பிரணவ்.

அனுபல்லவி, "சார்..." என எழுந்து நிற்க, "கம் இன் டு மை கேபின்..." என்று விட்டு சென்றான்.

பிரணவ் சென்றதும் அனுபல்லவி நிம்மதிப் பெருமூச்சு விட்டவள், 'நான் தனியா உளறினதை கேட்டு இருப்பாரோ... ச்சே ச்சே இருக்காது...' என சிந்தித்துக் கொண்டிருக்க, மீட்டிங் முடிந்து வந்த சாருமதி அனுபல்லவியின் தோள் தொடவும் தன்னிலை அடைந்தாள்.

அனுபல்லவியை அணைத்துக்கொண்ட சாருமதி, "சாரி டி அனு... என்னால தான் நீ வீணா சார் கிட்ட திட்டு வாங்கின... நான் மட்டும் உன்ன விட்டுட்டு வரலன்னா நீ எல்லார் முன்னாடியும் திட்டு வாங்கி இருக்க வேணாம்..." என்று வருத்தப்படவும் புன்னகைத்த அனுபல்லவி, "ப்ச்... சாரு... என்ன இது? நீ என்ன வேணும்னா என்ன விட்டுட்டு வந்த? அடுத்தது இதுல உன் தப்பு எதுவும் இல்ல டி... நான் தானே லேட்டா எழுந்திரிச்சேன்... சரி அதை விடு... லேட் ஆகிடுச்சுன்னு ஓடி வந்தது டயர்டா இருக்கு டி... எனக்கு ஒரு காஃபி எடுத்துட்டு வந்து வைக்கிறியா? நான் போய் ப்ராஜெக்ட் மேனேஜரை பார்த்துட்டு வரேன்..." என்று விட்டு சென்றாள்.

லேப்டாப்பில் மூழ்கி இருந்த பிரணவ் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவும், "யேஸ் கம் இன்..." என்கவும் தயக்கமாக உள் நுழைந்த அனுபல்லவி பிரணவ் இன்னுமே லேப்டாப்பில் இருந்து பார்வையை அகற்றாமல் இருக்கவும் தொண்டையைச் செறுமி தன் இருப்பை உணர்த்தினாள்.

அதில் அனுபல்லவியை நிமிர்ந்து பார்த்த பிரணவ் தனக்கு முன் இருந்த இருக்கையைப் பார்வையால் காட்டி அமருமாறு சைகை செய்ய, 'வாய்ல என்ன கொழுக்கட்டையா வெச்சி இருக்கார்? வாய திறந்து பேசினா அப்படியே முத்து உதிர்ந்திடும்...' என அனுபல்லவி மனதில் பிரணவ்வை வருத்து எடுத்துக்கொண்டே அவன் காட்டிய இருக்கையில் அமர, "என்ன? திட்டி முடிச்சிட்டீங்களா என்னை?" என்ற பிரணவ்வின் குரலில் அதிர்ந்து இருக்கையை விட்டு எழுந்து நின்றாள்.

அனுபல்லவி, "சா...ர்..." எனத் தடுமாற, அவளைக் கேள்வியாக நோக்கிய பிரணவ், "உட்காருங்க மிஸ் பல்லவி..." என்கவும் அனுபல்லவியின் மனதில் ஏதோ சொல்ல முடியாத உணர்வு.

'பல்லவி...' என அனுபல்லவி தன் பெயரையே மனதில் மீட்டிப் பார்த்துக் கொண்டிருக்க, மேசையில் தட்டி அவளின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பிய பிரணவ், "என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க பல்லவி? சொன்னது புரியலயா?" என்கவும் தான் அவசரமாக பிரணவ் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்.

பிரணவ் லேப்டாப்பில் ஏதோ டைப் செய்து ப்ரின்ட் எடுத்து அனுபல்லவியிடம் வழங்க, 'லேட்டா வந்ததுக்கு எம்.டி கிட்ட சொல்லி என்னை வேலையை விட்டு தூக்க போறாரோ?' என யோசித்த வண்ணம் அதனை வாங்கிப் படித்த அனுபல்லவியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

அனுபல்லவி, "சார்..." என இழுக்க, "புரிஞ்சிதா மிஸ் பல்லவி? என்ன போட்டு இருக்கு?" எனக் கேட்டான் பிரணவ்.

"ப்ராஜெக்ட் பத்தி சார்..." என்ற அனுபல்லவியிடம், "ஹ்ம்ம்... உங்களோட ஓல்ட் ப்ராஜெக்ட் வர்க்ஸ் பத்தி பார்த்தேன் நான்... இந்த நியூ ப்ராஜெக்ட்ல நம்ம டீம்ம லீட் பண்ண போறது நீங்க தான்... டுமோரோ இன்னொரு மீட்டிங் அரேன்ஜ் பண்ணி மத்த டீம் மேட்ஸுக்கு இன்ஃபார்ம் பண்றேன்... அதுவரை இதை பத்தி யார் கிட்டயும் சொல்ல வேணாம்... உங்களுக்கு ஏதாவது டவுட் இருந்தா ஆகாஷ் கிட்ட கேட்டுக்கோங்க..." என பிரணவ் கூறவும் அனுபல்லவி சம்மதமாகத் தலையசைக்க, "அப்புறம் இன்னொரு விஷயம்... இனிமே ஆஃபீஸுக்கு லேட் பண்ணாம வரப் பாருங்க... லீடர்ஷிப் அப்படிங்கிறது சாதாரண விஷயம் இல்ல... நிறைய பொறுப்பு இருக்கு அதுல... உங்கள பார்த்து தான் உங்களுக்கு கீழ இருக்குறவங்க இயங்குவாங்க..." என்றான் பிரணவ்.

அனுபல்லவி, "சாரி சார்... இனிமே ஒழுங்கா நடந்துக்குறேன்..." என்று விடை பெற்றாள்.

அனுபல்லவி சென்ற திசையையே வெறித்துக் கொண்டிருந்த பிரணவ்வின் கண் முன் மீண்டும் அந்த மங்கலான முகம் தெரிய, தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டான்.

ஏதோ யோசனையுடனே வந்த அனுபல்லவியைப் பார்த்து புருவம் சுருக்கிய சாருமதி, "என்னாச்சு அனு? சார் திரும்ப திட்டிட்டாரா?" என வருத்தத்துடன் கேட்கவும் புன்னகைத்த அனுபல்லவி, "இல்ல சாரு..." என்று பிரணவ் தந்த ஃபைலைக் காட்டினாள்.

அதனை வாங்கிப் படித்த சாருமதி மகிழ்ச்சியில் அனுபல்லவியைக் அணைத்துக்கொண்டு, "ஹே சூப்பர் டி அனு..." என்க, "என்னால முடியுமா சாரு? எனக்கு பயமா இருக்கு..." என்றாள் அனுபல்லவி கவலையாக.

அவளின் தோளில் தட்டிக் கொடுத்த சாருமதி, "அனு... இது உன் திறமைக்கு கிடைச்ச அங்கீகாரம்... உன்னோட ஃபர்ஸ்ட் ப்ராஜெக்ட் வேற... உன்ன நம்பி சார் இந்த ப்ராஜெக்ட்டை ஒப்படைச்சி இருக்கார்... நீ இதை சக்சஸ்ஃபுல்லா முடிச்சு காட்டு..." என அனுபல்லவியை ஊக்குவிக்கவும் முகம் மலர்ந்தாள் அனுபல்லவி.

மறுநாள் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, மீண்டும் எதற்காக ஒரு மீட்டிங் என அனைவரும் புரியாமல் விளிக்க, சாருமதியும் அனுபல்லவியும் எதையும் காட்டிக்கொள்ளாது அமைதியாக இருந்தனர்.

பிரணவ் வந்ததும் அனைவரும் அமைதியாக, "குட் மார்னிங் எவ்ரியோன்... திரும்ப எதுக்கு இந்த மீட்டிங்னு நீங்க யோசிக்கிறது புரியுது... நேத்து நான் நியூ ப்ராஜெக்ட் பத்தி எல்லாமே சொன்னேன்... எங்களுக்கு வன் மந்த் தான் டைம் இருக்கு.‌‌.. டெட்லைனுக்கு முன்னாடி கரெக்ட்டா ப்ராஜெக்ட்டை முடிக்கணும்... இந்த ப்ராஜெக்ட்டை மட்டும் நாங்க சக்சஸ்ஃபுல்லா முடிச்சோம்னா இதுக்கு அப்புறம் பெரிய பெரிய ப்ராஜெக்ட் நமக்கு கிடைக்க சான்ஸ் இருக்கு... சோ இந்த ப்ராஜெக்ட் ஃபுல்லா உங்களை கைட் பண்ண ஒரு டீம் லீடர் அவசியம்..." என்கவும் வழமையாக டீம் லீடராக இருக்கும் அர்ச்சனா ஆவலுடன் எழுந்துகொள்ள, "மிஸ் பல்லவி தான் உங்களை லீட் பண்ண போறாங்க..." எனப் பிரணவ் கூறவும் சாருமதி கை தட்ட, புன்னகையுடன் எழுந்து நின்றாள் அனுபல்லவி.

பிரணவ் அனுபல்லவியின் பெயரைக் கூறவும் அர்ச்சனாவின் நண்பர்கள் அவளைக் கேலியாகப் பார்க்க, அதனைக் கண்டு உள்ளம் கொதித்தவள் அனுபல்லவியின் மீது வன்மம் கொண்டாள்.

பிரணவ் வந்த அன்றிலிருந்தே அர்ச்சனாவிற்கு அவன் மீது ஒரு கண். இப்போது டீம் லீடர் தெரிவு செய்யும் போது முதல் ஆளாக எழுந்ததே அவனுடன் அதிக நேரம் செலவழித்து நெருக்கமாக வேண்டும் என்று தான்.

ஆனால் பிரணவ் அனுபல்லவியை டீம் லீடராகத் தெரிவு செய்யவும் ஆத்திரம் அடைந்தவள் இருக்கையில் பட்டென்று அமர, பிரணவ்வோ ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் பேசத் தொடங்கினான்.

"மிஸ் பல்லவி இனிமே உங்களை லீட் பண்ணுவாங்க... ஆல்ரெடி நான் உங்களுக்கு ப்ராஜெக்ட் பத்தி சொல்லி இருக்கேன்... அதனால எந்த பிரச்சினையும் இருக்காதுன்னு நம்புறேன்... ப்ராஜெக்ட் சம்பந்தமா உங்களுக்கு ஏதாவது டவுட்ஸ் இருந்தா நீங்க மிஸ் பல்லவி கிட்ட கேட்கலாம்..." என அனைவருக்கும் பொதுவாகக் கூறிய பிரணவ் அனுபல்லவியின் புறம் திரும்பி, "மிஸ் பல்லவி... நீங்க இந்த வன் மந்த்தும் எக்ஸ்ட்ரா டைம் வர்க் பண்ண வேண்டி வரும்... டீம் மெம்பர்ஸுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தா அதை என்னன்னு கேட்டு நீங்க க்ளியர் பண்ணுங்க... முடியாத பட்சத்துல என்னை வந்து பாருங்க..." எனக் கட்டளை பிறப்பித்தான்.

அவனின் ஆளுமையில் ஒரு நிமிடம் கண் இமைக்க மறந்தாள் அனுபல்லவி.

பிரணவ், "ஓக்கே காய்ஸ்... சியர் அப்... எல்லாரும் ஃபுல் கோர்டினேஷன்ல இந்த ப்ராஜெக்ட்டை சக்சஸா முடிக்கலாம்... இன்னைக்கே வேலையை ஆரம்பிங்க... ஆல் தி பெஸ்ட் காய்ஸ்..." எனப் புன்னகையுடன் கூறவும் அனைவரின் பார்வையும் ஒரே விதமாக இருந்தது, 'இவனுக்கு சிரிக்கவும் தெரியுமா?' என்று.

அர்ச்சனா கோபத்தில் மீட்டிங் ஹாலில் இருந்து முதல் ஆளாக வெளியேற, மற்றவர்களும் சென்றதும் தலையைப் பிடித்துக்கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான் பிரணவ்.

இன்று காலையில் இருந்தே அவனுக்கு அடிக்கடி அந்த விபத்து நடந்த விதமும் அந்த மங்கலான முகமும் நினைவுக்கு வந்து அவனுக்கு தலைவலியை ஏற்படுத்தியது.

கண்களை அழுத்த மூடி தலையை இரு புறமும் ஆட்டி பிரணவ் தன் வலியைக் கட்டுப்படுத்த முயல, அது குறைந்த பாடில்லை.

பல முறை தட்டியும் உள்ளிருந்து பதில் வராததால் வேறு வழியின்றி கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்த அனுபல்லவி பிரணவ்வின் நிலையைக் கண்டு அதிர்ந்தவள், "சா...சார்... என்னாச்சு? சார்..." என அவனை உலுக்க, பிரணவ்வோ பதில் கூறாது வலியில் துடித்தான்.

அனுபல்லவி, "என்னாச்சு சார்? வாங்க ஹாஸ்பிடல் போகலாம்..." என்கவும் மறுப்பாகத் தலை அசைத்த பிரணவ் அனுபல்லவியின் கரத்தை அழுத்தமாகப் பற்றி தன் வலியைக் குறைக்க முயல, பிரணவ்வின் இறுக்கமான பிடியில் அனுபல்லவி வலியில் முகம் சுருக்கினாலும் அவனின் வலியையும் அதன் மூலம் உணர்ந்து கொண்டாள்.

"வாங்க சார் ஹாஸ்பிடல் போகலாம்..." என அனுபல்லவி மீண்டும் அழைத்தும் மறுத்தவன் தன் பிடியை விடாது, "ஆ...ஆகாஷை... கூப்பிடுங்க..." என்றான் பிரணவ்.

பிரணவ்வின் நிலையைக் கண்டு கண் கலங்கிய அனுபல்லவி மறு கரத்தால் தன் கைப்பேசியை எடுத்து ஆகாஷிற்கு தகவல் தெரிவித்தாள்.

அவன் வந்ததும், "தேங்க்ஸ்ங்க... சாரை நான் பார்த்துக்குறேன்... நீங்க கிளம்புங்க... ஆஹ் அப்புறம்... இது வெளியே யாருக்கும் தெரிய வேணாம்..." என ஆகாஷ் பிரணவ்வின் உடல்நிலை பற்றி யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காகக் கூற, அனுபல்லவி புரிந்து கொண்டதாய் தலை அசைக்கவும் பிரணவ்வை அழைத்துக்கொண்டு வேறு வழியாக வெளியேறினான் ஆகாஷ்.

பிரணவ்வின் தலை மறையும் வரை அவன் சென்ற திசையையே கண்ணீருடன் நோக்கிக் கொண்டிருந்தாள் அனுபல்லவி.

************************************

"ஹஹஹா... எவ்வளவு பெரிய விஷயம் சொல்லி இருக்க... அன்னைக்கு அந்த பிரணவ்வை லாரி வெச்சி தூக்க பிளான் போட்டும் அவன் தப்பிச்சிட்டான்... ஆனா அதை விட பெரிய நியூஸ் இப்போ கிடைச்சிருக்கு... இது மூலமா அந்த பிரணவ் அவமானத்துல வெந்து சாகணும்..." என்றான் அவன் ஆத்திரத்துடன்.

 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கண்ணீர் - அத்தியாயம் 7

வலியில் துடித்துக்கொண்டிருந்த பிரணவ்வை அழைத்துக்கொண்டு ஆகாஷ் மருத்துவமனை செல்லப் பார்க்க, பிரணவ்வோ, " வீட்டுக்கு போகலாம் ஆகாஷ்..." என்றான் இருக்கையில் கண்களை மூடி சாய்ந்து கொண்டு.

ஆகாஷ், "பட் பாஸ் நீங்க..." என ஏதோ கூற வர, "சொன்னத செய்ங்க ஆகாஷ்..." என்ற பிரணவ்வின் அழுத்தமான குரலில் வேறு வழியின்றி பிரணவ் தங்கியிருந்த வீட்டிற்கு காரை செலுத்தினான் ஆகாஷ்.

விழி மூடிக் கிடந்தவனின் மனமோ அந்த முகம் அறியாப் பெண்ணைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.

வீட்டை அடைந்ததைக் கூட அறியாது சிந்தனைகளுக்கு மத்தியில் உழன்று கொண்டிருந்த பிரணவ்வைக் கலைத்தது ஆகாஷின் குரல்.

"பாஸ்... வந்திடுச்சி..." என்கவும் இமை திறந்து சுற்று முற்றும் பார்த்த பிரணவ் காரிலிருந்து இறங்கிக்கொள்ள, அவனைப் பின் தொடர்ந்து வரப் பார்த்த ஆகாஷைத் தடுத்தவன், "நீங்க ஆஃபீஸ் கிளம்புங்க ஆகாஷ்... ஐம் ஓக்கே... ப்ராஜெக்ட் சம்பந்தமா டீம் மெம்பர்ஸுக்கு ஹெல்ப் பண்ணுங்க..." எனக் கட்டளை இடவும் சரி எனத் தலை அசைத்து விட்டு ஆகாஷ் கிளம்பினான்.

சோர்வாக வீட்டினுள் நுழைந்த பிரணவ் தலைவலி தாங்காது மாத்திரை சாப்பிட்டவன் கொஞ்சம் நேரம் உறங்கலாம் என தன் அறைக்குச் சென்றான்.

உடை மாற்ற தன் உடைகள் அடங்கி இருந்த பையைத் திறந்தவனின் பார்வையில் பட்டது அந்த இளமஞ்சள் நிற துப்பட்டா.

கண்கள் சுருக்கி அதனை யோசனையுடன் பார்த்தவாறே வந்து கட்டிலில் அமர, அனுபல்லவியின் முகம் தானாகவே அவனின் மனக்கண் முன் வந்து சென்றது.

"யார் அவள்? இந்த துப்பட்ட்வோட சொந்தக்காரி யார்? அவ முகம் ஏன் எனக்கு ஞாபகம் வரது இல்ல? ஏன் பல்லவியைப் பார்க்கும் போது மட்டும் எனக்கு ஏதோ ஒரு உணர்வு தோணுது?" எனப் பிரணவ் தன்னையே கேட்டுக்கொள்ள, அவனுக்கு தலைவலி அதிகரித்தது தான் மிச்சம்.

அப்படியே கட்டிலில் சாய்ந்தவன் அந்த துப்பட்டாவினால் முகத்தை மூடிக்கொண்டு உறக்கத்தைத் தழுவினான்.

************************************
"எல்லா நியூஸ் சேனல்ஸ், சோசியல் மீடியாஸ்லயும் அந்த பிரணவ் பத்தின நியூஸை கொடுக்கட்டுமா சார்?" என அவனின் பீ.ஏ. கேட்கவும் விஷமமாகப் புன்னகைத்தபடி மறுப்பாகத் தலையசைத்தவன், "இப்பவே வேணாம்... எதுக்கும் சரியான நேரம்னு ஒன்னு இருக்கு... சரியான சமயத்துல அவன பழி வாங்குவேன் நான்... அது சாவை விட கொடுமையானதா இருக்கும்..." என்றான் அவன் குரூரமாக.

************************************
மறுநாள் காலையில் வழமையை விட விரைவாக எழுந்த அனுபல்லவி அவசரமாகத் தயாராகிக் கொண்டிருக்க, அப்போது தான் கண் விழித்த சாருமதி தன் தோழியைப் புரியாமல் பார்த்தாள்.

சாருமதி, "இவ்வளவு சீக்கிரமா எங்க கிளம்பிட்டிருக்க அனு?" எனக் கேட்கவும், அவள் பக்கம் திரும்பாமலே, "ஆஃபீஸ் டி... நான் கிளம்புறேன்..." என்ற அனுபல்லவி பேக்கை மாட்டிக்கொண்டு வெளியே ஓடினாள்.

நேராக பேரூந்து நிலையத்தை நோக்கி ஓடியவளின் போதாத நேரம் அவ்வளவு காலையில் எந்த பேரூந்துமே வரவில்லை.

"ப்ச்..." என சலித்துக்கொண்டே பாதையில் வரும் வாகனங்களை நோக்கி லிஃப்ட் கேட்டு கரத்தை நீட்ட, அவளுக்கு முன் கருப்பு நிற ஆடி கார் ஒன்று வந்து நின்றது.

அனுபல்லவி, "தேங்க்ஸ் சார்... என்னை எம்.எல்‌. கான்ஸ்ட்ரக்ஷன் கிட்ட ட்ராப் பண்ணிடுங்க..." என காரில் ஏறிக்கொண்டே கூற, இன்னும் காரை இயக்காமல் இருக்கவும் ட்ரைவர் சீட்டின் பக்கம் திரும்பியவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

காலையில் சீக்கிரமே எழுந்து தயாராகி வந்ததே பிரணவ்வின் உடல்நிலையைப் பற்றி அறிந்து கொள்ளத் தான். இப்போது கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல பிரணவ்வே அவள் முன் வந்து நிற்கவும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தவள், "சா..." என ஏதோ கூற வர, பிரணவ் காரை வேகமாக இயக்கவும் தான் தன்னிலை அடைந்தாள் அனுபல்லவி.

அனுபல்லவி, 'ப்ச் அனு... என்ன டி லூசு மாதிரி பண்ணிட்டு இருக்க? அவர் உன்ன பத்தி என்ன நினைப்பார்?' என தலையில் அடித்தபடி மனதில் தன்னையே கடிந்துகொள்ள, அவளின் செய்கைகளை கடைக் கண்ணால் பார்த்து விட்டு மீண்டும் சாலையிலேயே பார்வையைப் பதித்தான் பிரணவ்.

"சாரி சார்... அது... நீங்கன்னு தெரியல... நான் வேற யாரோன்னு நினைச்சிட்டேன்..." என அனுபல்லவி தயங்கியபடி கூறவும் பிரணவ்விடமிருந்து, "ம்ம்ம்..." என்ற பதில் மட்டுமே வந்தது.

அனுபல்லவி, "சரியான உம்மனா மூஞ்சி... கொஞ்சம் வாய திறந்து பேசினா தான் என்னவாம்?" என நேரே பார்த்தவாறு முணுமுணுக்க, அது பிரணவ்வின் செவிகளை எட்டினாலும் அவன் பதில் உரைக்கவில்லை.

பிரணவ்வின் கார் எம்.எல். கான்ஸ்ட்ரக்ஷனை அடையவும் காரைப் பார்க் செய்தவன் அனுபல்லவி இறங்கும் வரை காத்திருக்க, அவளோ வாய் வரை வந்த கேள்வியைக் கேட்காமல் கார்க் கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள்.

அப்போது தான் பிரணவ் அவளின் சிவந்திருந்த மணிக்கட்டை அவதானித்தான்.

நேற்று அவன் வலியில் துடித்த போது அனுபல்லவியின் கரத்தை அழுத்திப் பிடித்ததால் ஏற்பட்ட அடையாளம் எனப் புரிந்து கொண்டவன் அவசரமாக இறங்கி உள்ளே சென்றான்.

"ச்சே... இவ்வளவு நல்ல சான்ஸ் கிடைச்சும் அவர் கூட பேசி அவருக்கு இப்போ எப்படி இருக்குன்னு கேட்ட முடியாம போச்சே..." என அனுபல்லவி சலித்துக்கொள்ள, 'ஆமா... வாயை திறந்து பேச தைரியம் இல்ல... இப்போ இங்க வந்து ஒவ்வொன்னு சொல்ற...' என வழமை போல் அவளின் மனசாட்சி காரி உமிழ்ந்தது.

அனுபல்லவி தன் இடத்தில் வந்து அமர்ந்து ப்ராஜெக்ட் வேலையைக் கவனித்துக் கொண்டிருக்க, "பே..." என சாருமதி அவள் காதின் அருகில் வந்து கத்தவும் பயத்தில் துள்ளி விழுந்தவள் தோழியின் கேலிச் சிரிப்பில் தன் நெஞ்சை நீவி தன்னை சமன்படுத்த முயன்றாள்.

சாருமதி, "என்ன பயந்துட்டியா? அது சரி... எதுக்கு அவ்வளவு அவசரமா ஆஃபீஸ் வந்த?" எனக் கேட்கவும் அவ்வளவு நேரம் சாருமதியை முறைத்துக் கொண்டிருந்த அனுபல்லவி தோழியிடம் என்ன கூறி சமாளிக்கவென்று புரியாது திருட்டு முழி முழித்தவள், "அது... நான்... ஆஹ்... ப்ராஜெக்ட் விஷயமா சாரு... ப்ராஜெக்ட் விஷயமா..." என்றாள் சமாளிப்பாக.

"ஹ்ம்ம்... சரி ஓக்கே டி... நான் என் ப்ளேஸுக்கு போறேன்..." என்று விட்டு சாருமதி கிளம்பவும் அவ் வழியாக வந்த அர்ச்சனா தன் கையில் வைத்திருந்த காஃபியை வேண்டும் என்றே அனுபல்லவி தன் மேசை மீது வைத்திருந்த ஃபைலில் கொட்டி விட்டாள்.

அனுபல்லவி, "ஐயோ என் ஃபைல்..." என பதற, "ஓஹ் மை காட்... சாரி அனு... சாரி... சீரியஸ்லி நான் கவனிக்கல..." என்ற அர்ச்சனா ஃபைலைத் துடைப்பது போல் காஃபியை எல்லா இடத்திலும் தேய்த்து விட்டாள்.

"என்ன பண்றீங்க அர்ச்சனா? அது இன்னும் ஸ்பொய்ல் ஆகிடுச்சு..." எனக் கத்தவும், "அச்சோ... சாரி அனு..." என அர்ச்சனா மீண்டும் அதே கதையைக் கூறவும் அவளை முறைத்த அனுபல்லவி, "ப்ளீஸ் இதை நானே பார்த்துக்குறேன்... நீங்க கிளம்புங்க..." என்றாள் கடுப்பாக.

தோளைக் குலுக்கிய அர்ச்சனா, "ம்ம்ம் ஓக்கே..." என அங்கிருந்து சென்றவள், 'இது வெறும் ஆரம்பம் மட்டும் தான் அனு... பிரணவ் வாயாலயே உனக்கு இந்த ப்ராஜெக்டை தந்ததுக்கு ஃபீல் பண்ண வைக்கல நான் அர்ச்சனா இல்ல...' என்றாள் மனதில்.

அர்ச்சனா சென்றதுமே அனுபல்லவியின் மேசை மீதிருந்த தொலைபேசி அலற, அனுபல்லவி எடுத்து காதில் வைத்ததும், "அன்னைக்கு நான் தந்த ஃபைல எடுத்துட்டு என் கேபின் வாங்க..." என்று விட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

பிரணவ் தான் அழைத்திருந்தான். என்ன கூறப் போகிறானோ என்ற பயத்துடனே காஃபி கொட்டப்பட்ட ஃபைலையும் எடுத்துக்கொண்டு அவனின் அறைக்குச் சென்றாள் அனுபல்லவி.

அனுபல்லவி உள்ளே வந்ததுமே தன் மேசை ட்ராயரைத் திறந்து அதிலிருந்து ஏதோ களிம்பொன்றை எடுத்து அவளிடம் நீட்டினான் பிரணவ்.

அனுபல்லவி அவனைக் கேள்வியாக நோக்க, "சாரி மிஸ் பல்லவி... நேத்து உங்களை தெரியாம ஹர்ட் பண்ணிட்டேன்..." என்ற பிரணவ் தயக்கமாக அவளின் சிவந்திருந்த மணிக்கட்டைக் ஏறிடவும் அனுபல்லவியின் முகத்தில் மெல்லியதாய் ஒரு முறுவல்.

"தேங்க்ஸ்..." என அனுபல்லவி நன்றி உரைத்து விட்டு அதனை வாங்கிக்கொள்ளவும் பிரணவ் ஃபைலைக் கேட்டு கரத்தை நீட்ட, அவளோ புரியாமல் விளித்தாள்.

பிரணவ், "ஃபைல்..." என்கவும் தான் அது பற்றிய நினைவு வந்து தலை குனிந்து நின்றாள் அனுபல்லவி.

"என்னாச்சு?" என்ற பிரணவ்வின் கேள்விக்கு, தன் பின்னே மறைத்து வைத்திருந்த கிழிந்த ப்ராஜெக்ட் ஃபைலை அனுபல்லவி எடுத்து நீட்டவும், "என்ன இது?" எனக் கேட்டான் பிரணவ் கோபமாக.

"சார் அது..." என ஏதோ கூற வர, "உங்க எந்த எக்ஸ்ப்ளனேஷனும் எனக்கு அவசியம் இல்ல... உங்களை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைச்சா இப்படி தான் நீங்க அதை பண்ணுவீங்களா?" எனப் பிரணவ் பல்லிடுக்கில் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப, அனுபல்லவியின் விழிகள் கண்ணீரைச் சுரந்தன.

அனுபல்லவி, 'இப்போ தானே நல்லா பேசினார்... அதுக்குள்ள கோவப்படுறார்... இவரைப் புரிஞ்சிக்கவே முடியல என்னால...' என மனதில் எண்ணியவாறு, "சார் என்ன நடந்திச்சுனா..." என தன்னிலை விளக்கம் கொடுக்க முற்பட்டாள்.

ஆனால் பிரணவ்வோ அதனைக் காதிலே வாங்காது அனுபல்லவியின் பேச்சை நிறுத்த அவளின் முகம் முன் கரம் நீட்டியவன், "எதுவும் சொல்ல வேணாம்... அதை டேபிள்ல வெச்சிட்டு போங்க நீங்க..." எனக் கோபமாகக் கூறவும் கலங்கிய விழிகளுடனே அங்கிருந்து புறப்பட்டாள் அனுபல்லவி.

அனுபல்லவி பிரணவ்வின் அறையினுள் நுழைவதும் சற்று நேரத்தில் அழுதுகொண்டே வெளி வருவதையும் அவதானித்துக் கொண்டிருந்த அர்ச்சனாவின் மனம் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட, அதற்கு வேட்டு வைக்கும் விதமாக அவளின் மேசை மீதிருந்த தொலைபேசி ஒலி எழுப்பியது.

பிரணவ் அர்ச்சனாவைத் தன் கேபினுக்கு வருமாறு கட்டளை இடவும் புதிய ப்ராஜெக்ட்டை தன்னிடம் ஒப்படைக்க போவதாக நம்பிக்கொண்டு அர்ச்சனா பிரணவ்வின் அறைக்குச் சென்றாள்.

செல்லும் வழியில் இடைப்பட்ட அனுபல்லவியை கேலிப் பார்வை பார்த்து விட்டு செல்ல, அனுபல்லவியும் பிரணவ் அந்த ப்ராஜெக்ட்டை அர்ச்சனாவிடம் ஒப்படைக்கத் தான் அழைக்கிறான் என நினைத்தாள்.

அர்ச்சனா உள்ளே செல்லும் போது பிரணவ் கணினித் திரையில் ஏதோ தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருக்க, அர்ச்சனா வந்ததை அறிந்தவன், "உட்காருங்க அர்ச்சனா..." என்கவும் வாயெல்லாம் பல்லாக அவன் முன் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள் அர்ச்சனா.

தன் இருக்கையில் ஒரு பக்கம் சாய்ந்து அமர்ந்து கொண்ட பிரணவ் ஒரு விரலால் தாடையைத் தடவியபடியே அர்ச்சனாவின் முகத்தை தீவிரமாக நோக்கினான்.

அர்ச்சனா பிரணவ்வின் தீர்க்கமான பார்வையை காதல் பார்வை என எண்ணினாள் போலும். அவனைப் பார்த்து வெட்கப்பட, தன் முன் இருந்த கணினியை பிரணவ் அர்ச்சனாவின் பக்கம் திருப்பவும் அதிர்ந்த அர்ச்சனாவின் மனதில் பயப் பந்து உருள ஆரம்பித்தது.

இருக்கையில் நேராக அமர்ந்து கொண்ட பிரணவ், "எதுக்காக இப்படி பண்ணினீங்க?" எனக் கேட்டான் கோபமாக.

அர்ச்சனா, "சார் நான் இல்ல... அது அனு..." என ஏதோ கூற வர, "ஜஸ்ட் ஸ்டாப் இட்..." என பிரணவ் கோபத்தில் மேசையில் ஓங்கித் தட்டவும் பயத்தில் எழுந்து நின்று விட்டாள் அர்ச்சனா.

பிரணவ், "நீங்க எதுக்காக இப்படி பண்ணினீங்கன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா?" என்கவும் அனுபல்லவி தான் ஏதோ தன்னைப் பற்றி தவறாகப் போட்டுக் கொடுத்து உள்ளாள் என அர்ச்சனா மனதில் மேலும் அனுபல்லவி மேல் வன்மம் வளர்த்துக் கொள்ள, "இது தான் நான் உங்களுக்கு தர ஃப்ர்ஸ்ட் என்ட் லாஸ்ட் வார்னிங்... திரும்ப இப்படி ஏதாவது சின்ன பிள்ளைத்தனமா பண்ணினீங்கன்னா மூட்டை முடிச்சை எல்லாம் கட்டிக்கிட்டு வீட்டுக்கு போக வேண்டி வரும்..." என்றான் பிரணவ் மிரட்டலாய்.

அதில் லேசாக பயம் வந்தாலும் வெறும் ப்ராஜெக்ட் மேனேஜர் இவன் என்ன செய்து விடப் போகிறான் என்ற தைரியத்தில், "இதுக்கு முன்னாடி எல்லாம் நான் தான் எங்க டீமை லீட் பண்ணேன்... இப்போ நீங்க புதுசா வந்து ஒன்னுமே தெரியாத அந்த அனு கிட்ட இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட்டை தூக்கி கொடுத்து இருக்கீங்க..." என அர்ச்சனா சற்று குரலை உயர்த்தவும் கேலியாக சிரித்த பிரணவ், "இதுக்கு முன்னாடி இருந்த ப்ராஜெக்ட் மேனேஜர் உங்க அப்பாவோட ஃப்ரெண்ட் அப்படிங்கிறதால தான் உங்களை லீடரா போட்டார்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா மிஸ் அர்ச்சனா? டோன்ட் ஜட்ஜ் அ புக் பை இட்ஸ் கவர்..‌. அன்டர்ஸ்டேன்ட்..." என்றான் அழுத்தமாய்.

பிரணவ்வை முறைத்த அர்ச்சனா கோபமாக எழுந்து அங்கிருந்து வெளியே செல்ல, கதவைத் திறக்கப் போனவளை சொடக்கிட்டு அழைத்த பிரணவ், "அப்புறம் இன்னொரு விஷயம்... இந்த பிரணவ் முன்னாடி வாய்ஸ் ரெய்ஸ் பண்ணுறது இதுவே கடைசியா இருக்கட்டும்... இல்ல நடக்குறதே வேற..." என்கவும் காலைத் தரையில் உதைத்தபடி அர்ச்சனா அங்கிருந்து வெளியேறவும் ஆகாஷ் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

கோபமாக செல்லுபவளையே புரியாமல் பார்த்தபடி வந்த ஆகாஷ், "என்னாச்சு பாஸ்? எதுக்காக அந்த பொண்ணு இந்த முறை முறைச்சிட்டு போகுது? ஒருவேளை நீங்க ஏதாவது....." என இழுக்க, பிரணவ் பார்த்த பார்வையில் கப்சிப் என வாயை மூடிக் கொண்டான்.


பிரணவ், "இன்னைக்கு ஷெடியூல் என்ன ஆகாஷ்?" என்க, "வன் அ க்ளாக் போர்ட் மீட்டிங் இருக்கு பாஸ்... அது முடிஞ்சதும் மிஸ்டர் மெஹெரா கூட ஜூம் மீட்டிங் இருக்கு பாஸ்... ப்ராஜெக்ட் சம்பந்தமா உங்க கூட ஏதோ இம்பார்ட்டன்ட்டா டிஸ்கஸ் பண்ண இருக்குறதா சொன்னார்..." என்றான்.

"ஹ்ம்ம் ஓக்கே... மிஸ்டர் மெஹெரா கூட இருக்குற மீட்டிங்ல மிஸ் பல்லவியையும் ஜாய்ன் பண்ணிக்க சொல்லுங்க... அதுக்கு முன்னாடி மிஸ் பல்லவியை என்னை வந்து பார்க்க சொல்லுங்க..." என பிரணவ் அடுத்தடுத்து கட்டளைகளைப் பிறப்பிக்க, பட் பாஸ்... மிஸ் பல்லவி எதுக்கு அந்த மீட்டிங்ல?" எனக் கேட்டான் ஆகாஷ் புரியாமல்.

பிரணவ், "அவங்க தானே இந்த ப்ராஜெக்ட்ல டீம் மெம்பர்ஸ லீட் பண்ண போறாங்க... சோ இந்த ப்ராஜெக்ட் நம்ம கம்பனிக்கு எவ்வளவு இம்பார்டன்ட்னு அவங்களுக்கு புரியணும்..." என்கவும் ஆகாஷ் சரி எனத் தலையசைத்தான்.

ஆகாஷ், "அப்புறம் பாஸ்..." என ஏதோ கூற வருவதும் தயங்குவதுமாக இருக்க, "என்னாச்சு ஆகாஷ்?" எனக் கேட்டான் பிரணவ் தொலைபேசியில் யாருக்கோ அழைத்தபடி.

"லக்ஷ்மி மேடம் உங்க மேல ரொம்ப கோவமா இருக்காங்க பாஸ்... நீங்க இந்த கம்பனிய எம்.டியா எடுத்து நடத்தணும்னு அவங்க விரும்புறாங்க... நீங்களா சொல்லலன்னா மேடமே எல்லாருக்கும் அதைப் பத்தி தெரியப்படுத்துறேன்னு சொல்றாங்க..." என ஆகாஷ் கூறவும் பிரணவ் மேசையில் இருந்த தொலைபேசியை கோபத்தில் தள்ளி விட்டான்.

"என் லைஃப் இப்படி இருக்குறதுக்கு முக்கிய காரணமே அவங்க தான்... இன்னும் என்ன தான் அவங்களுக்கு வேணுமாம்? இப்போ கூட நான் இங்க நிம்மதியா இருக்குறது அவங்களுக்கு பிடிக்கலயா?" என பிரணவ் ஆத்திரமாகக் கேட்கும் போதே அவ் அறைக்குள் நுழைந்தாள் அனுபல்லவி.

பிரணவ் அனுபல்லவிக்கு அழைக்கும் போது தான் ஆகாஷ் பிரணவ்வின் தாயைப் பற்றிக் கூறும் போது கோபத்தில் தொலைபேசியைத் தள்ளி விட்டது.

பிரணவ்வின் இந்த கோப அவதாரத்தைக் கண்டு அனுபல்லவி வாசலிலே அதிர்ந்து நிற்க, கண்களை மூடி தன்னை சமன் படுத்திக்கொண்டு ஆகாஷை வெளியேறுமாறு கண் காட்டினான்.

ஆகாஷ் வெளியேறியதுமே தன் இருக்கையில் அமர்ந்து பெருமூச்சு விட்டான் பிரணவ்.

அனுபல்லவி இன்னும் அதே இடத்தில் நின்று பிரணவ்வையே அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்க, "இன்னைக்கு ஃபுல்லா அப்படியே நின்னுட்டு இருக்க ப்ளேனா?" என ஏற்கனவே இருந்த கடுப்பில் பிரணவ் கேட்கவும் தன்னிலை அடைந்த அனுபல்லவி அவசரமாக உள்ளே வந்து அவன் முன்னே நின்றாள்.

தலையை ஒரு கையால் தாங்கியபடி மேசையில் ஒரு ஃபைலைத் தூக்கிப் போட்ட பிரணவ், "இந்த ஃபைல்ல இருக்குறதை எல்லாம் ரிஃபர் பண்ணிக்கோங்க... ஈவ்னிங் மிஸ்டர் மெஹெரா கூட ஒரு மீட்டிங் இருக்கு... நீங்களும் ஜாய்ன் பண்ணிக்கணும்..." என்கவும் அனுபல்லவி ஏன் எதற்கு என்று கேட்காமலே, "ஓக்கே சார்..." என வாங்கிக் கொண்டாள்.

பிரணவ் தலையை அழுத்திப் பிடித்தபடி நெற்றி சுருக்கி அமர்ந்து இருப்பதைக் கண்டு மனம் கேளாத அனுபல்லவி, "ஆர் யூ ஓக்கே சார்?" என ஒருவாறு கேட்டு முடிக்க, தலையை நிமிர்த்தி அனுபல்லவியின் முகம் நோக்கியவன், "ஏன்? என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? பைத்தியம் போல இருக்கேனா?" எனப் பிரணவ் கோபமாகக் கேட்கவும் அவசரமாக மறுப்பாகத் தலையசைத்தாள் அனுபல்லவி.

"அப்போ என்ன? கிளம்ப வேண்டியது தானே... இன்னும் நிற்குறீங்க..." எனப் பிரணவ் பல்லிடுக்கில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பவும், "சாரி சார்... சாரி..." என்ற அனுபல்லவி அவசரமாக எழுந்து வெளியே ஓடினாள்.

அவள் சென்றதும், "ப்ச்..." என சலித்துக்கொண்ட பிரணவ், "அம்மா மேல இருக்குற கோவத்தை அந்த பொண்ணு கிட்ட காட்டினா சரியா? ச்சே..." என்றவனுக்கு தன் மீதே ஆத்திரம் வந்தது.

 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கண்ணீர் - அத்தியாயம் 8

"ஹெலோ மிஸ்டர் பிரணவ்... கே சே ஹோ? (எப்படி இருக்கீங்க?)" என திரையில் தெரிந்த மிஸ்டர் மெஹெரா புன்னகையுடன் கேட்கவும், "மே அச்சா ஹு மிஸ்டர் மெஹெரா... (நான் நல்லா இருக்கேன்)" எனப் புன்னகையுடன் பதிலளித்தான் பிரணவ்.

மிஸ்டர் மெஹெரா, "அச்சா... அச்சா... யே கோன் ஹே? (நல்லது... நல்லது... இவர் யார்?)" எனக் கேட்டார் அனுபல்லவியைக் காட்டி.

இவ்வளவு நேரமும் ஏதோ ஊமைப் படம் பார்ப்பது போல் அவர்கள் பேசுவதை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த அனுபல்லவி திரையில் தெரிந்தவர் தன்னைக் காட்டி பிரணவ்விடம் ஏதோ கூறவும் பிரணவ்வைப் பார்த்து கண்களை விரித்தாள்.

அவளின் முக பாவனைகள் சிரிப்பை வரவழைத்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாத பிரணவ், "யே மிஸ் அனுபல்லவி ஹே... வோ வஹீ ஹே ஜோ இஸ் ப்ராஜெக்ட் மே சபீ கா மார்க்தர்ஷன் கர்னே வாலே ஹே... (இவர் மிஸ் அனுபல்லவி... இந்த ப்ராஜெக்ட்டில் அனைவரையும் வழி நடத்தப் போவது இவர் தான்)" என அனுபல்லவியை அறிமுகப்படுத்தவும், "ஹெலோ மிஸ் அனுபல்லவி..." என அனுபல்லவியைப் பார்த்து சினேகமாகப் புன்னகைத்தார் மிஸ்டர் மெஹெரா.

அனுபல்லவி, "ஹெலோ சார்..." எனப் பதிலளிக்கவும் லேசாகத் தொண்டையை செறுமிய பிரணவ், "தென் லெட்ஸ் டிஸ்கஸ் அபௌட் தி ப்ராஜெக்ட் மிஸ்டர் மெஹெரா..." என்கவும் மிஸ்டர் மெஹெரா ப்ராஜெக்ட் பற்றிய தன் விருப்பங்களையும் வேண்டுகோள்களையும் முன் வைத்தார்.

அனுபல்லவிக்கு புரியும் நோக்கில் ஆங்கிலத்திலேயே கலந்துரையாடல் இடம்பெற்றது.

பிரணவ் அனுபல்லவிக்கு கண் காட்டவும் அனுபல்லவி தன்னால் முடியுமா என்ற விதமாக அவனைத் தயக்கமாக ஏறிட, பிரணவ் கண்களை மூடித் திறந்து அவளுக்கு தைரியம் ஊட்டவும் ஆழப் பெருமூச்சு விட்டுக் கொண்ட அனுபல்லவி மிஸ்டர் மெஹெரா கூறியவைகளுக்கு தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்தாள்.

ஏற்கனவே பிரணவ் அந்த பிராஜெக்ட் விஷயமாக அவளுக்கு தேவையான தெளிவுகளை வழங்கி இருக்க, அதன் மூலம் முதன் முறையாக இருந்தாலும் சிறப்பாவே தன் கருத்துக்களை எடுத்துரைத்தாள் அனுபல்லவி.

மெஹெராவிற்கும் அவள் கூறிய யோசனைகள் பிடித்து விட, "க்ரேட் மிஸ் அனுபல்லவி... க்ரேட்... ஐம் ரியலி இம்ப்ரஸ்ட் வித் யுவர் ஐடியாஸ்... மிஸ்டர் பிரணவ்... லெட்ஸ் கன்ட்னியூ திஸ் ப்ராஜெக்ட் வித் ஹர் ஐடியாஸ்..." என்கவும் பிரணவ்விற்கும் அனுபல்லவிக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதுவும் அனுபல்லவியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பிரணவ் தன்னை நம்பி ஒப்படைத்த முதல் வேலையின் ஆரம்ப கட்டத்திலேயே அவன் மனதைக் கவர்ந்ததை எண்ணி அவ்வளவு ஆனந்தம்.

இன்னும் சிலவற்றை பேசி முடித்து விட்டு ஜூம் மீட்டிங் நிறைவு பெற, புன்னகை முகத்துடன் நின்ற அனுபல்லவியின் பக்கம் திரும்பிய பிரணவ், "கங்ரேட்ஸ் மிஸ் பல்லவி..." என அவளை நோக்கி கரம் நீட்டினான்.

"தேங்க்ஸ் சார்..." என நீட்டி இருந்த அவனின் கரத்தைப் பற்றிக் கூறினாள் அனுபல்லவி.

அனுபல்லவியின் மலர்ந்த முகத்தையே ஒரு நிமிடம் தன்னை மறந்து ரசித்த பிரணவ் இன்னும் பற்றிய அவளின் கரத்தை விடாமல் இருக்கவும், "சார்..." என அனுபல்லவி தன் கரத்தை அவனின் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றபடி அழைக்கவும் தன்னிலை அடைந்த பிரணவ் அவசரமாக அவளின் கரத்தை விட்டான்.

பிரணவ், "சா...சாரி சாரி பல்லவி... நான் வேற ஏதோ..." என ஏதோ கூற வரவும், "இட்ஸ் ஓக்கே சார்..." என்றாள் அனுபல்லவி புன்னகையுடன்.

"அப்புறம்... மிஸ்டர் மெஹெரா அவ்வளவு ஈசியா எந்த டீலிங்குக்கும் ஒத்துக்க மாட்டார்... ஆனா உங்க ஃபர்ஸ்ட் ட்ரைலயே அவரை இம்ப்ரஸ் பண்ணிட்டீங்க... ரியலி சூப்பர்... சீக்கிரம் இந்த ப்ராஜெக்ட்டையும் அதே போல நல்லா செஞ்சி முடிப்பீங்கன்னு நம்புறேன்..." என பிரணவ் கூற, "ஷியுர் சார்... நான் கிளம்பட்டுமா?" என அனுபல்லவி அனுமதி கேட்கவும் சரி எனத் தலையசைத்தான் பிரணவ்.

************************************

மறுநாளில் இருந்து ப்ராஜெக்ட் வேலைகள் துரிதமாக நடைபெற்றன.

அனுபல்லவியின் தலைமைத்துவம் குழுவில் இருந்த அனைவரையும் கவர்ந்து விட, பிரணவ்விற்கே அவளை நினைத்து பிரமிப்பாக இருந்தது.

அர்ச்சனா மாத்திரம் அனுபல்லவியைப் பழி வாங்க எப்போது வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தாள்.

அதற்கு ஏற்றதாக சரியான வாய்ப்பும் வெகு விரைவில் அவளுக்கு கிட்டியது.

குழுவிலுள்ள ஒவ்வொருவருமே ப்ராஜெக்ட் வேலைகளை பிரித்து செய்ய, இறுதியில் அனுபல்லவி அதனை சரி பார்த்து பிரணவ்விடம் ஒப்படைப்பாள்.

அன்றும் அது போலவே ப்ராஜெக்ட் சம்பந்தமான ஃபைல்களை மறுபரிசீலனை செய்து விட்டு பிரணவ்விடம் ஒப்படைக்கச் சென்றாள்.

அப்போது பிரணவ் அறையில் இருக்காமையால் ஃபைல்களை அவனின் மேசை மீது வைத்து விட்டு வெளியேற, அர்ச்சனா அவ் அறைக்குள் நுழைந்தாள்.

அனுபல்லவி வைத்த ஃபைல்களுக்கு பதிலாக தான் கொண்டு வந்த ஃபைல்களை மாற்றி வைத்தவளின் முகத்தில் ஒரு குரூரச் சிரிப்பு.

சற்று நேரத்திலே ஆகாஷுடன் அவ் அறைக்கு வந்தான் பிரணவ்.

"நாளைக்கு மார்னிங் போர்ட் மீட்டிங்கை அரேன்ஜ் பண்ணிடுங்க... அப்புறம் அப்பா மெய்ன் ப்ரான்ச்ல ஏதோ ப்ராப்ளம்னு சொன்னார்... அது என்னன்னு பாருங்க... ப்ராஜெக்ட் வர்க் எந்த அளவுல போய்ட்டு இருக்கு?" எனப் பிரணவ் தன் இருக்கையில் அமர்ந்தவாறு கேட்க, "டன் பாஸ்... நான் மூர்த்தி சார் கூட பேசுறேன்... டீம்ல எல்லாருமே ரொம்ப ஃபாஸ்ட் அன்ட் ஸ்மார்ட்டா வர்க் பண்றாங்க பாஸ்..." என்றான் ஆகாஷ்.

பிரணவ், "குட்... இந்த ப்ராஜெக்ட் சக்சஸா முடிஞ்சா அப்புறம் ஓவர்சீஸ்ல கூட எங்க கம்பனிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்..." என்றான் மகிழ்வுடன்.

"ஆமா பாஸ்... நீங்க கரெக்டான ஆள் கிட்ட தான் இந்த ப்ராஜெக்டை மேனேஜ் பண்ண கொடுத்து இருக்கீங்க... உங்க அளவுக்கே மிஸ் அனுபல்லவியும் இந்த ப்ராஜெக்டுக்காக அவ்வளவு சின்சியரா வர்க் பண்றாங்க..." என்கவும் பிரணவ்வின் முகத்தில் மெல்லியதாக புன்னகை அரும்பியது.

பின் ஆகாஷ் யாருக்கோ கைப்பேசியில் அழைத்தவாறு வெளியேறியவன் யாருடனோ மோதி நின்றான்.

"ஸ்ஸ்ஸ்..." எனத் தலையைத் தேய்த்தபடி நிமிர்ந்த சாருமதி தனக்கு முன்னே கைப்பேசியில் தீவிரமாக பேசிக் கொண்டிருந்த ஆகாஷைப் பார்வையாலே எரித்தவள் அவன் காதில் வைத்திருந்த கைப்பேசியைப் பறித்து அழைப்பைத் துண்டித்தாள்.

திடீரென நடந்த இச் செயலில், "ஹேய்..." எனக் கோபமாகத் திரும்பிய ஆகாஷ் தன்னையே முறைத்துக் கொண்டிருந்த சாருமதியைக் கேள்வியாய் நோக்கினான்.

"யோவ்... எங்கயா பார்த்துட்டு வர? கண்ணு என்ன பிடரிலயா இருக்கு? பனை மரத்துக்கு பாதி வளர்ந்து இருக்க... முன்னாடி வரவங்க எல்லாம் எங்க கண்ணுக்கு தெரிய போகுது? நெட்ட கொக்கு..." என சாருமதி எகிற, "ஏய்... யாரைப் பார்த்து டி நெட்ட கொக்குன்னு சொன்ன? நாங்க எல்லாம் கரெக்ட் ஹைட்ல தான் இருக்கோம்... நீ தான் டென்த் ஸ்டேன்டுக்கு மேல வளராம விட்டுட்ட போல... குட்டச்சி... குட்டச்சி..." என்றான் ஆகாஷ் கேலியாக.

சாருமதி, "உன்ன... உன்ன... நான் குட்டச்சியா? நான் குட்டச்சியா?" எனக் கோபமாகக் கேட்டவள் ஆகாஷின் கரத்தை இழுத்து பற்தடம் தெரிய கடித்து வைத்தாள்.

ஆகாஷ், "ஆஹ்... இரத்தக் காட்டேரி... வலிக்கிது விடு டி..." என வலியில் கத்தவும் அந்தத் தளத்தில் இருந்த அனைவரின் பார்வையும் அவர்கள் பக்கம் திரும்ப, சத்தம் கேட்டு அங்கு வந்த அனுபல்லவி, "ஹேய் சாரு... சாரு... என்ன டி பண்ற? விடு டி அவரை..." என சாருமதியை தன் பக்கம் இழுக்கவும் ஆகாஷின் கரத்தை விட்டாள் சாருமதி.

சாருமதி கோபத்தில் மூச்சு வாங்க, "என்ன பண்ற சாரு? அவர் பிரணவ் சாரோட பீ.ஏ." என அனுபல்லவி கடிந்து கொள்ள, "அதுக்காக? என்ன வேணாலும் சொல்லுவாரா?" எனச் சாருமதி கோபமாகக் கேட்க, "நீ தான் டி முதல்ல என் கூட சண்டைக்கு வந்த..." என்றான் ஆகாஷ் சாருமதியின் முகம் முன் விரல் நீட்டி.

"யூ... யூ... ஹவ் டேர் யூ? எப்படி நீ என்னை டி போட்டு பேசலாம்?" என சாருமதி மீண்டும் ஆகாஷிடம் சண்டைக்குச் செல்ல, "இங்க என்ன நடந்துட்டு இருக்கு? இது என்ன ஆஃபீஸா? இல்ல ஃபிஷ் மார்க்கட்டா?" என்ற பிரணவ்வின் கோபமான குரலில் அவ் இடமே அமைதி ஆனது.

பிரணவ், "ஆகாஷ்... நீங்க இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? நான் சொன்ன வேலையை செஞ்சீங்களா? இல்லையா?" எனக் கடுமையாகக் கேட்க, "சாரி பாஸ்... இதோ இப்போ போய் பார்க்குறேன்..." என்ற ஆகாஷ் போகும் போது சாருமதியைப் பார்த்து முறைத்து விட்டு போனான்.

ஆஃபீஸில் இருந்த மற்றவர்கள் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, "இங்க என்ன ஃபேஷன் ஷோவா நடக்குது?" எனப் பிரணவ் கோபமாகக் கேட்கவும் அவசரமாக அனைவரும் தம் வேலையைப் பார்க்க செல்ல, அவர்களைத் தொடர்ந்து செல்லப் பார்த்த அனுபல்லவியைத் தடுத்த பிரணவ், "மிஸ் பல்லவி‌... நீங்க எங்க போறீங்க? இம்மீடியட்டா என் கேபினுக்கு வாங்க..." என்று விட்டு சென்றான்.

அவனின் குரலில் இருந்த கடுமையே அனுபல்லவிக்கு உள்ளுக்குள் உதறலைக் கொடுத்தது.

அனுபல்லவி தயக்கமாக உள்ளே நுழைய, அவளின் மேல் சில ஃபைல்களை தூக்கி வீசினான் பிரணவ்.

பயமும் அதிர்ச்சியுமாக பிரணவ் வீசிய ஃபைல்களை அனுபல்லவி கையில் எடுக்க, "என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல? கொஞ்சம் பாராட்டினா போதுமே‌... உடனே தலைல ஏறி உட்கார்ந்துடுவீங்க..." என ஆத்திரத்தில் கத்தினான் பிரணவ்.

"சார்... எ...என்னாச்சு?" எனக் கேட்டாள் அனுபல்லவி தயக்கமாக.

"பாருங்க என்ன பண்ணி வெச்சி இருக்கீங்கன்னு... எல்லா கோடிங்குமே தப்பு தப்பா இருக்கு... ரீசெக் பண்ணிட்டு சப்மிட் பண்ண மாட்டீங்களா?" என பிரணவ் கடிந்துகொள்ள, அவசரமாக தன் முன் பிரணவ் தூக்கிப் போட்ட ஃபைல்களை புரட்டிப் பார்த்தாள் அனுபல்லவி.

அதில் இருந்தவற்றைக் கண்டு அதிர்ந்த அனுபல்லவி, "சார்... இது... நான் எல்லாம் கரெக்ட்டா செக் பண்ணிட்டு தான் உங்க டேபிள்ல கொண்டு வந்து வெச்சேன்... இது நான் வெச்ச ஃபைல் இல்ல சார்..." என்க, "அப்போ... நான் தான் எல்லாம் மாத்தி வெச்சேனா? இல்ல நான் பொய் சொல்றேனா?" எனக் கேட்டான் பிரணவ் கோபமாக.

அனுபல்லவி, "ஐயோ இல்ல சார்... இதுல என் தப்பு எதுவும் இல்லன்னு சொல்றேன்... நான் கோடிங் எல்லாம் கரெக்ட்டா இருக்கான்னு செக் பண்ணேன்..." என தன் பக்கம் உள்ள நியாயத்தை விளக்கப் பேச, அது பிரணவ்வின் கோபத்தை இன்னும் தூண்டி விட்டது.

பிரணவ், "ஷட் அப்... ஜஸ்ட் ஸ்டாப் யுவர் நான்சன்ஸ்... எதுவும் பேச வேணாம்... இன்னைக்கே இதெல்லாம் கரெக்ட் பண்ணி என் கிட்ட சப்மிட் பண்ணணும்... யாரோட ஹெல்ப்பும் இல்லாம நீங்க மட்டும் தனியா..." எனக் காட்டுக் கத்தலாய் கத்த, "பட் சார் ஆல்ரெடி லேட் ஆகிடுச்சு... இன்னைக்கே எப்படி?" எனக் கேட்டாள் அனுபல்லவி.

"ஐ டோன்ட் வான்ட் டு ஹியர் யுவர் ப்ளடி டாக்... ஜஸ்ட் டூ வட் ஐ சே... இன்னைக்கே இதெல்லாம் முடிச்சு கொடுத்துட்டு தான் நீங்க கிளம்பணும்... எத்தனை மணி ஆகினாலும் சரி..." எனப் பிரணவ் கட்டளை இடவும் தலை குனிந்த அனுபல்லவி வேறு வழியின்றி அவன் கூறியதை செய்து முடிக்க அங்கிருந்து சென்றாள்.

ஏற்கனவே ஆஃபீஸில் இருக்கும் அனைவரும் வேலை முடிந்து வீடுகளுக்கு கிளம்பி இருக்க, ஓரிரண்டு பேர் மட்டுமே காணப்பட்டனர்.

சாருமதி அனுபல்லவிக்காக காத்திருக்க, கவலை தோய்ந்த முகத்துடன் தன்னை நோக்கி வந்த தோழியைப் புரியாமல் நோக்கியவள், "என்னாச்சு அனு? ஏன் டல்லா இருக்க? கிளம்பலாமா?" எனக் கேட்டாள்.

"இல்ல சாரு... நீ கிளம்பு... எனக்கு கொஞ்சம் வர்க் இருக்கு..." என அனுபல்லவி சோகமாகக் கூறவும், "இன்னுமா? ஓக்கே அப்போ நானும் இருந்து உனக்கு ஹெல்ப் பண்றேன்..." என சாருமதி கூறவும் பிரணவ் கூறியதை எண்ணி பல்லைக் கடித்த அனுபல்லவி தன்னை சமன் படுத்திக்கொண்டு, "ம்ஹ்ம்... நீ போ சாரு... இது நான் பண்ண வேண்டிய வேலை... முடிச்சிட்டு வரேன்..." என்றாள்.

சாருமதி, "நீ மட்டும் எப்படி தனியா வர போற? ஆஃபீஸ்ல கூட யாருமே இல்ல..." என்க, "எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல டி... நான் சீக்கிரம் எல்லா வர்க்கையும் முடிச்சிட்டு பஸ்ல வரேன்... இல்லன்னா டாக்சி புக் பண்ணி வரேன்... நீ என்னை நினைச்சி ஃபீல் பண்ணாதே... போய்ட்டு வா..." என அனுபல்லவி மறுக்கவும், "நிஜமா தான் சொல்றியா? உன்னால முடியுமா?" என தோழியை எண்ணி வருத்தமாகக் கேட்டாள்.

அவளுக்கு கண்களை மூடித் திறந்து அனுபல்லவி ஆறுதல் அளிக்கவும் மனமேயின்றி அங்கிருந்து கிளம்பிய சாருமதி தனக்கு நேராக வந்து கொண்டிருந்தவனைக் கவனிக்காது அவன் மீது மோதவும் அவனின் கரத்தில் இருந்த ஃபைல்கள் அனைத்தும் கீழே விழுந்தன.

"ப்ச்... சாரி சார்... சாரி சார்..." என சாருமதி அவன் யார் என்று கூட கவனிக்காது அவசரமாக குனிந்து கீழே விழுந்து கிடந்த ஃபைல்களை எடுத்து அடுக்க, அவளுக்கு உதவியாக குனிந்து ஃபைல்களை எடுத்தவன், "கண்ணு எங்க பிடரிலயா இருக்கு குட்டச்சி?" என்றான் கேலிக் குரலில்.

அதிர்ச்சியுடன் தலை நிமிர்ந்து பார்த்த சாருமதி தனக்கு முன் தன்னை நக்கலான பார்வையுடன் நோக்கிக் கொண்டிருந்த ஆகாஷைக் கண்டு கோபத்தில் பல்லைக் கடித்தாள்.

 

Nuha Maryam

Member
Messages
63
Reaction score
13
Points
18
கண்ணீர் - அத்தியாயம் 9
"கண்ணு எங்க பிடரிலயா இருக்கு குட்டச்சி?" என்ற கேலிக் குரலில் அதிர்ச்சியுடன் தலை நிமிர்ந்து பார்த்த சாருமதி தனக்கு முன் தன்னை நக்கலான பார்வையுடன் நோக்கிக் கொண்டிருந்த ஆகாஷைக் கண்டு கோபத்தில் பல்லைக் கடித்தாள்.

ஆகாஷ், "என்ன குட்டச்சி? அப்படி பார்க்குற? எவன் கூட கடலை போட்டுக்கிட்டு இப்படி ரோட்ட நேரா பார்க்காம நடக்குற?" எனக் கேலி செய்யவும், "யூ ப்ளடி இடியட்... நான் எவன் கூடயாவது கடலை போடுறதை நீ பார்த்தியா மேன்? அப்படியே போட்டாலும் உனக்கு என்னடா வந்தது?" எனக் கேட்டாள் சாருமதி கோபமாக.

"எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல குட்டச்சி... ஆனா அந்தப் பையனை நினைச்சா தான் ரொம்ப பாவமா இருக்கு..." என ஆகாஷ் உச்சுக் கொட்டவும் சாருமதி அவனைப் புரியாமல் நோக்க, அவளின் தோளில் தன் முழங்கையை ஊன்றிய ஆகாஷ், "அது ஒன்னுமில்ல குட்டச்சி... இந்த மூஞ்சிய எல்லாம் எப்படி தான் காலம் பூரா பார்த்துட்டு இருக்க போறானோ? அநேகமா கூடிய சீக்கிரம் சந்நியாசி ஆகிடுவான்னு நினைக்கிறேன்... இல்லன்னா இப்படி குட்டி அண்டா சைஸ்ல இருக்குற உனக்கு எப்படி லைஃப் லாங் சாப்பாடு போடுவான்?" என்றான் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு.

ஒரு நிமிடம் அவன் என்ன கூறுகிறான் என அமைதியாகக் கேட்ட சாருமதி ஆகாஷ் என்ன கூற வருகிறான் எனப் புரிந்துகொண்டவள் கோபத்தில் அவனின் கரத்தைத் தட்டி விட்டு, "உன்னைக் கொல்லாம விட மாட்டேன்டா நான்..." எனத் தன் கைப்பையால் ஆகாஷைப் போட்டு அடித்தாள்.

"உண்மைகள் சில நேரம் கசக்கும் டி குட்டச்சி..." எனக் கேலியாகக் கூறிய ஆகாஷ் அவளிடமிருந்து தப்பித்து ஓடினான்.

ஆகாஷ் மேல் இருந்த கோபத்தில் தரையைக் காலால் உதைத்து விட்டு அங்கிருந்து சென்றாள் சாருமதி.

சாருமதி சென்றதும் தன் இருக்கையில் வந்தமர்ந்த அனுபல்லவி, "சரியான சிடுமூஞ்சி... எப்பப்பாரு உர்ருன்னே இருக்குறது... ஒரு மனுஷி பேசுறதை காது கொடுத்து கேட்டா தான் என்னவாம்? சிடுமூஞ்சி சிடுமூஞ்சி..." என பிரணவ்வை வறுத்தெடுத்துக்கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தாள்.

இங்கு தன் அறை கண்ணாடி வழியாக தெளிவற்றுத் தெரியும் அனுபல்லவியின் விம்பத்தைப் பார்த்தவாறு தண்ணீர் குடித்த பிரணவ்விற்கு திடீரென புறை ஏறியது.

தன் தலையில் தட்டி அடக்கிய பிரணவ்வின் பார்வை தானாகவே அனுபல்லவி இருந்த இடத்தை அடைந்தது. அவன் முகத்தில் கூட ஒரு இளநகை.

பிரணவ், 'ஓஹ்... திட்டுறீங்களா மேடம்?' என மனதில் எண்ணி விட்டு கணினித் திரையில் பார்வையைப் பதித்தான்.

நன்றாக இருட்டி விட்ட நிலையில் சாருமதி அடிக்கடி அனுபல்லவிக்கு அழைத்து அவள் எந்த நேரத்தில் வருவாள் எனக் கேட்டு விசாரித்தாள்.

ஆனால் அனுபல்லவிக்குத் தான் வேலைகள் முடிந்த பாடில்லை.

பத்து பேர் இணைந்து செய்யும் வேலையை அவள் ஒருத்தியே செய்தால் எப்படி முடியும்? போதாக்குறைக்கு தூக்கக்கலக்கம் வேறு.

அடிக்கடி கொட்டாவி விட்டபடி தூங்கி விழுந்தவளை நெருங்கியது அழுத்தமான காலடி ஓசை.

வேலைகளின் இடையே தன் கைக் கடிகாரத்தை தூக்கி மணியைப் பார்த்த பிரணவ் நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்கவும் அனுபல்லவி இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாள் எனப் பார்க்க வந்தான்.

அனுபல்லவி இருக்கையில் சாய்ந்து தலை ஒரு பக்கம் வளைய ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவளைத் தட்டி எழுப்புவதற்காக தன் கரத்தை நீட்டிய பிரணவ் என்ன நினைத்தானோ கரத்தைப் பின்னே இழுத்துக்கொண்டான்.

பெருமூச்சு விட்டபடி சுற்றும் முற்றும் பார்த்தவன் அனுபல்லவியின் மேசை மீதிருந்த தண்ணீர்க் குவளையை எடுத்து பட்டென்று கீழே போட, அமைதியாக இருந்த ஆஃபீஸில் தண்ணீர்க் குவளை விழுந்து உடையும் சத்தம் பலமாக எதிரொலித்தது.

திடீரென கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டு விழித்த அனுபல்லவி தன் அருகில் பிரணவ்வை எதிர்ப்பார்க்காது பயத்தில், "ஆ...." எனக் கத்தவும் அவசரமாக தன் கரம் கொண்டு அவளின் வாயை அடைத்தான் பிரணவ்.

"ஷ்ஷ்ஷ்... ஷ்ஷ்ஷ்... எதுக்கு கத்துற? நான் தான்..." என பிரணவ் கடுப்பாகக் கூறவும், "ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்..." என அனுபல்லவி ஏதோ கூற முயன்றாள்.

பிரணவ், "முதல்ல வாய திறந்து பேசு..." எனக் கோபமாகக் கூறவும் கண்களால் தன் வாயை மூடியிருந்த பிரணவ்வின் கரத்தை சுட்டிக் காட்டினாள் அனுபல்லவி.

அவசரமாக தன் கரத்தை எடுத்த பிரணவ், "ஓஹ் சாரி... சாரி..." என்க, நெஞ்சை நீவி பெருமூச்சு விட்ட அனுபல்லவி, "ஏன் சார் இப்படி பயமுறுத்துறீங்க? இன்னும் கொஞ்சம் இருந்து இருந்தா எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து அல்பாயுசுல போய் சேர்ந்து இருப்பேன்... எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல... அட்லீஸ்ட் லவ் கூட பண்ணல..." எனச் சோகமாகக் கூறவும் அவளை ஏகத்துக்கும் முறைத்தான் பிரணவ்.

அப்போது தான் அவன் கூறிய வேலை ஞாபகம் வந்து அதிர்ச்சியில் கண்களை விரித்த அனுபல்லவி, "சாரி சார்... சாரி சார்... திரும்ப திட்டிடாதீங்க... தெரியாம தூங்கிட்டேன்... இப்போவே முடிச்சிடுறேன்..." என அவசரமாகத் திரும்பி வேலை செய்யவும் அனுபல்லவிக்கு முன் இருந்த கணினியை அணைத்தான் பிரணவ்.

அனுபல்லவி, "சார்..." என இழுக்க, "நாளைக்கு ஏர்லியா வந்து வர்க்க முடிங்க... இப்போ கிளம்புங்க... ரொம்ப லேட் ஆகிடுச்சு..." என பிரணவ் கூறவும், "பரவால்ல சார்... நான் இதை முடிச்சிட்டே கிளம்புறேன்..." என்றாள் அனுபல்லவி.

"அதான் கிளம்புங்கன்னு சொல்றேன்ல..." எனப் பிரணவ் சற்று குரலை உயர்த்திப் பேசவும், "ஓக்கே சார்... ஓக்கே சார்..." என அவசரமாக இருக்கையை விட்டு எழுந்த அனுபல்லவி நேரத்தைப் பார்க்க, மணி நள்ளிரவு பன்னிரண்டைக் கடந்திருப்பதைக் கண்டு அதிர்ந்தவள், "என்ன? டுவல்வ் பாஸா? சாரு வேற திட்டுவாளே..." என்று அவசரமாக பிரணவ்விடம் கூட கூறாது தன் கைப்பையைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடினாள்.

அவளின் செய்கையைக் கண்டு தோளைக் குலுக்கிய பிரணவ் சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பினான்.

ஆஃபீஸில் இருந்து வெளியே வந்த அனுபல்லவி தன் கைப்பேசியை எடுத்து டாக்சிக்கு அழைக்கப் பார்க்க, அதுவோ எப்போதோ தன் உயிரை விட்டிருந்தது.

"ப்ச்... போயும் போயும் இப்பவா இந்த மொபைலும் சதி பண்ணணும்? ச்சே... இப்போ எப்படி வீட்டுக்கு போறது? சாரு வேற நிறைய தடவை கால் பண்ணி இருந்தாளே... ம்ம்ம்... வேற வழி இல்ல... பஸ்ல போக வேண்டியது தான்..." என்ற அனுபல்லவி நடந்தே பேரூந்து தரிப்பிடம் நோக்கிச் சென்றாள்.

நேரம் நள்ளிரவைக் கடந்து விட்டதால் பேரூந்து தரிப்பிடத்தில் யாருமே இருக்கவில்லை. இரண்டு பேர் குடித்து விட்டு வாய்த் தாக்கம் செய்து கொண்டிருக்க, அவர்களை விட்டு சற்று ஓரமாக சென்று நின்ற அனுபல்லவி, 'இந்த டைம் பஸ் வருமா இல்லயான்னு கூட தெரியலயே...' என மனதில் பேசினாள்.

வாய்த் தாக்கம் செய்து கொண்டிருந்த இருவரின் பார்வையும் மெதுவாக அனுபல்லவியின் பக்கம் திரும்ப, இருவரின் முகத்திலும் ஒரு குரூரப் புன்னகை.

பேரூந்து வரும் வரை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த அனுபல்லவிக்கு யாரோ தன்னை உற்றுப் பார்ப்பது போல் உணர்வு வர, லேசாகத் திரும்பிப் பார்த்தவள் இருவரின் பார்வையையும் கண்டு அதிர்ந்தாள்.

தன் கைப்பைக்குள் கையை விட்டு ஏதோ தேடிய அனுபல்லவி, அவர்கள் அவளை நெருங்கவும் தன் கைப்பையில் இருந்த பெப்பர் ஸ்ப்ரேயை எடுத்து அவர்களின் முகத்தில் அடிக்கப் பார்க்க, சரியாக பிரணவ்வின் கார் வந்து அனுபல்லவியின் அருகில் நின்றது.

திடீரென யாரோ வரவும் அந்த குடிகாரர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல, அனுபல்லவி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

ஆஃபீஸில் இருந்து கிளம்பிய பிரணவ் அவன் தங்கியிருந்த வீட்டை நோக்கிச் செல்ல, வழியில் பேரூந்து தரிப்பிடத்தில் அனுபல்லவி காத்திருப்பதைக் கண்டு முதலில் அவளைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றான்.

சற்று தூரம் செல்லவும் கார் சைட் மிரரில் அந்த குடிகாரர்கள் இருவரும் கண்களில் வெறியுடன் அனுபல்லவியை நெருங்குவதைக் கண்டு கொண்டவன் அவசரமாக ரிவர்ஸ் எடுத்து அனுபல்லவியின் அருகே காரை நிறுத்தினான்.

அவர்கள் சென்றதும் பிரணவ் கார் ஹார்னை வேகமாக அழுத்த, வேகமாக வந்து காரில் ஏறிக் கொண்டாள் அனுபல்லவி.

அனுபல்லவி ஏறியதும் பிரணவ் காரை இயக்க, அனுபல்லவி தன் கைப்பேசியை இயக்க முயன்று கொண்டிருந்தாள்.

மெதுவாக தொண்டையைச் செறுமிய பிரணவ், "இந்த தேங்க்ஸ் எல்லாம் சொல்ற பழக்கம் இல்லயா?" என்க, அவனைப் புரியாமல் பார்த்த அனுபல்லவி, "எதுக்கு தேங்க்ஸ்?" எனக் கேட்டாள்.

"அந்த குடிகாரங்க கிட்ட இருந்து உங்களைக் காப்பாத்தினதுக்கு தான்..." என பிரணவ் பாதையில் பார்வையைப் பதித்தவாறு கூற, ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள் அனுபல்லவி.

பிரணவ் திரும்பி அவளை முறைக்க, கஷ்டப்பட்டு தன் சிரிப்பை அடக்கிய அனுபல்லவி, "சாரி சார்.‌‌.." என்று விட்டு தன் கைப்பையில் இருந்த பெப்பர் ஸ்ப்ரேயை எடுத்துக் காட்டினாள்.

பிரணவ் ஒற்றைப் புருவம் உயர்த்தி கண்களாலே என்ன என வினவ, "பெப்பர் ஸ்ப்ரே... நீங்க வரலன்னா கூட நான் அவங்களை சமாளிச்சிருப்பேன்‌... சரியாப் பார்த்தா நீங்க தான் என் கிட்ட சாரி சொல்லணும்... பத்து பேர் சேர்ந்து செய்ய வேண்டிய வேலையை ஒத்த ஆளா என் கிட்ட கொடுத்து இவ்வளவு நேரம் தனியா வர்க் பண்ண விட்டீங்க... அதனால் தான் இவ்வளவு லேட் ஆகி, என் மொபைல் ஆஃப் ஆகி, டாக்ஸிக்கு கூட வர சொல்ல முடியல..." என்றாள் அனுபல்லவி சற்று கடுப்பாக.

பிரணவ்வோ அவள் கூறியதை காதிலே வாங்காதவன் போல, "வழி?" என்க, "அதானே... இவர் வாயை திறந்தா தான் அப்படியே முத்து உதிர்ந்திடுமே..." என முணுமுணுத்த அனுபல்லவி வீட்டுக்குச் செல்லும் வழியைக் கூறினாள்.

சற்று நேரத்திலே அனுபல்லவியும் சாருமதியும் தங்கியிருந்த வீடு வர, பிரணவ் அங்கு காரை நிறுத்தவும் இறங்கிக் கொண்டாள் அனுபல்லவி.

சாருமதி அவளுக்காக வாசலிலேயே காத்திருக்க, காரை விட்டு இறங்கிய அனுபல்லவி கார் விண்டோவைத் தட்டவும் பிரணவ் விண்டோவைத் தாழ்த்தினான்.

அனுபல்லவி, "தேங்க்ஸ் சார்... இந்த தேங்க்ஸ் அன்டைம்ல அந்த பஸ் ஸ்டாப்ல யாரோன்னு என்னைக் கண்டுக்காம தனியா விட்டுட்டு போகாம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டதுக்கு..." எனப் புன்னகையுடன் கூற, "யாரோன்னு உங்களைக் கண்டுக்காம உங்களைக் கடந்து தான் போனேன் மிஸ் பல்லவி... அப்புறம் அந்த குடிகாரங்களால உங்களுக்கு பிரச்சினையோன்னு தான் திரும்ப வந்து பிக்கப் பண்ணேன்..." என கண்களில் ஒரு வித திமிருடன் ஏளனமாகக் கூறிய பிரணவ் அனுபல்லவியின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காது காரை இயக்கிக்கொண்டு அங்கிருந்து செல்லவும் கோபத்தில் பல்லைக் கடித்தாள் அனுபல்லவி.

அனுபல்லவியை வந்து அணைத்துக்கொண்ட சாருமதி, "அனு... ரொம்ப பயந்துட்டேன் டி... லேட் ஆனா கால் பண்ண மாட்டியா டி?" என்று கடிந்து கொண்டாள்.

"சாரி சாரு... மொபைல் டெட்... அதான் உன்ன கான்டேக்ட் பண்ண முடியல... டைம் போனதே தெரியல... சார் வந்து கிளம்ப சொன்னதுக்கு அப்புறம் தான் டைம் பார்த்தேன்..." என அனுபல்லவி விளக்கம் அளிக்க, "பொல்லாத சார்... ப்ராஜெக்ட் மேனேஜரா இருந்தே நம்மள இப்படி வாட்டுறார்... இதுவே எம்.டியா இருந்தா நாம காலி..." என்றாள் சாரு கோபமாக.

அதில் புன்னகைத்த அனுபல்லவி, "விடு டி... என் மிஸ்டேக்னால தானே அவருக்கு கோவம் வந்துச்சு..." என்றவளுக்கு ஏனோ தோழியிடம் கூட பிரணவ்வை விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை.

அனுபல்லவி, "சாரு... ரொம்ப டயர்டா இருக்கு... காஃபி ஒன்னு போட்டு கொடு டி... ப்ளீஸ்..." எனக் கண்கள் சுருக்கிக் கெஞ்ச, அவள் தோளில் அடித்த சாருமதி, "லூசு... போட்டுத் தான்னு கேட்டா போட்டு தரப் போறேன்... அதுக்கு எதுக்கு டி ப்ளீஸ்லாம் சொல்லிக்கிட்டு?" என்கவும் இளித்து வைத்தாள் அனுபல்லவி.

சாருமதி உள்ளே செல்ல, அவளைத் தொடர்ந்து கைகளில் நெட்டி முறித்தபடி அனுபல்லவி சென்றாள்.

காரில் சென்று கொண்டிருந்த பிரணவ்விற்கு அனுபல்லவி கூறியதே காதில் ஓடியது. சிதாராவின் பயந்த சுபாவத்துடன் அனுபல்லவியை ஒப்பிட்டுப் பார்த்தவனுக்கு அவனையும் அறியாமல் அவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை.

ஆனால் உடனே சிதாராவுக்கு தான் செய்த அநியாயத்தை எண்ணி பிரணவ்வின் உடல் இறுக்கத்தைத் தத்தெடுத்தது.

************************************

மறுநாள் காலை சற்று விரைவாகவே ஆஃபீஸ் வந்த பிரணவ்விற்கு தன் மேசை மீது கிடந்த கோப்புகளைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. தன் அறையில் இருந்து வெளியே வந்து பார்க்க, ஆஃபீஸிற்கு அந் நேரத்தில் ஓரிரண்டு பேரே வந்திருக்க, அனுபல்லவியோ தன் மேசை மீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

மீண்டும் தன் கேபினுக்குள் நுழைந்து அனுபல்லவி வைத்திருந்த கோப்புகளைச் சரி பார்த்தவன் அனுபல்லவிக்கு அழைத்து தன் கேபினுக்கு வரக் கூறினாள்.

தூக்கக் கலக்கத்திலேயே சரி எனப் பதிலளித்தவள் சற்று நேரத்தில் அனுமதி வாங்கிக்கொண்டு பிரணவ்வின் அறைக்குள் நுழைந்தாள்.

அனுபல்லவியின் முகத்தில் ஆங்காங்கே இருந்த நீர்த் துளிகள் அவள் அப்போது தான் தூக்கத்தைப் போக்க முகம் கழுவி விட்டு வந்துள்ளாள் என எடுத்துரைத்தது.

அனுபல்லவி, "சார்... வர சொன்னீங்க..." என்க, "ம்ம்ம்... குட் ஜாப் மிஸ் பல்லவி... ஃபைல்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கு... இனிமே இந்த மிஸ்டேக்ஸ் விடாம பார்த்துக்கோங்க..." என பிரணவ் கூறவும், "ஓக்கே சார்..." என்றாள் அனுபல்லவி.

பிரணவ், "அப்புறம் நான் சில சேன்ஜஸ் சொல்றேன்... நோட் பண்ணிக்கோங்க..." என்கவும் அனுபல்லவி மேசையில் இருந்த பேப்பர் பென்னை எடுத்து பிரணவ் கூறக் கூற குறித்துக் கொண்டாள்.

ஒவ்வொரு முறையும் பேனையைப் பிடித்து எழுதும் போது அனுபல்லவி வலியில் முகம் சுருக்குவதை பிரணவ் முதலில் கவனிக்கவில்லை.

திடீரென அனுபல்லவி வலியில், "ஸ்ஸ்ஸ்..." என முனங்கவும் தலையை நிமிர்த்திப் பார்த்த பிரணவ் அனுபல்லவியின் வலியில் சுருங்கிய முகத்தைக் கண்டு, "என்னாச்சு?" எனக் கேட்க, "நத்திங் சார்... நீங்க சொல்லுங்க..." என சமாளித்தாள் அனுபல்லவி.

தன் இருக்கையை விட்டு எழுந்த பிரணவ் அனுபல்லவியின் முகத்தை அழுத்தமாகப் பார்த்தபடி அவளை நெருங்க, அனுபல்லவியின் இதயம் வேகமாகத் துடித்து.

அனுபல்லவி, "சா...ர்..." எனத் தடுமாற, அவளை நெருங்கிய பிரணவ் அனுபல்லவியின் கரங்களை அவளின் அனுமதி இன்றியே பிடித்துப் பார்த்தான்.

பிரணவ்வின் திடீர் செயலில் அனுபல்லவியின் கரத்திலிருந்த பேப்பர் பென் கீழே விழ, அவளின் கரங்களோ அனிச்சையாக நடுங்கியன.

முன் தினம் பல மணி நேரம் ஓய்வின்றி டைப் செய்ததால் அனுபல்லவியின் உள்ளங்கையில் ஆங்காங்கு சிவந்து கன்றிப் போய் இருக்க, பிரணவ்விற்கு குற்றவுணர்வாக இருந்தது.

அவளின் கரத்தை வெறித்தவாறே, "ஐம் சாரி..." எனப் பிரணவ் மன்னிப்பு கேட்க, பிரணவ்வின் நெருக்கம் தந்த நடுக்கத்தில், "ப...பரவால்ல சார்..." என்ற அனுபல்லவி அவசரமாக தன் கரத்தைப் பின்னே இழுத்துக் கொண்டாள்.

அனுபல்லவி, "அவ்வளவு தான்னா நான் போகட்டுமா சார்?" எனத் தயக்கமாகக் கேட்கவும் பிரணவ் சரி எனத் தலையசைக்க, விட்டால் போதும் என அங்கிருந்து ஓடப் பார்த்த அனுபல்லவியை பிரணவ்வின், "பல்லவி..." என்ற குரல் தடுத்து நிறுத்தியது.

அனுபல்லவி திரும்பி பிரணவ்வைக் கேள்வியாக நோக்க, "நீங்க இன்னைக்கு லீவ் போட்டு வீட்டுல ரெஸ்ட் எடுங்க... கைக்கு ஏதாவது ஒய்ன்மன்ட் பூசுங்க..." எனப் பிரணவ் கூறவும் மறுக்க வாய் எடுத்தவள் அதற்கும் பிரணவ் ஏதாவது திட்டுவான் என நினைத்து அமைதியாக சரி எனத் தலையசைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

அனுபல்லவி சென்றதும் பெருமூச்சு விட்ட பிரணவ் தன் பணியினைத் தொடர்ந்தான்.

 
Top Bottom