கோபம் 07
நாட்களும் அப்படியே நகர்ந்தது, ஆறு மாத காலமும் முடிந்தது. ஆனாலும் சுரையாவின் கோபமும் பிடிவாதமும் குறையவில்லை. அவள் அம்மாவும் அப்பாவும் சற்று நொந்து தான் இருந்தனர். இன்னும் நான்கு மாதங்களில் ரஸியாவின் படிப்பும் நிறைவடையும் நிலையில் உள்ளது. சுரையா அன்று வழக்கம் போல் வேலைக்கு சென்றாள். ரஸியா காலேஜிற்கு செல்லவில்லை. சுரையா சென்ற பிறகு அவள் தாய் மரியம், நீங்க அவள் சுரையா ஆசைபடி டீச்சர் வேலைக்கு போக விட்டு இருந்தா அவ மாச சம்பளத்தை கொண்டாது என் கிட்ட கொடுத்திருப்பா ஆனால் நீங்கள் லஞ்சம் கொடுத்து அவளுக்கு வேலை வாங்கி கொடுத்திங்க ஆனா அவ நம்மள மதிக்காம காச கண்டவாரி செலவு செஞ்சிட்டு இருக்கா என்று தன் கணவர் ரஹீமிடம் குறை பட்டு கொண்டு இருந்தார் பணத்தாசையால் ரஸியா இருப்பதை மறந்து. இதை கேட்ட ரஸியா மிகவும் கடுப்புடன் ஏம்மா உனக்குலா கொஞ்ச கூட பாசமே இல்லையா. எப்பாரு பணம் காசு ச்சி. நான் கூட அக்கா ஏன் இப்படி பண்றா தப்பா நினைச்ச ஆனா அவள் பண்றதுல தப்பே இல்லை. அவள் வயசிலே இருக்க பாதி பேருக்கு கல்யாணம் முடிஞ்சிடிச்சி ஆனால் இங்க பணத்தாசையால அவளை கல்யாணம் பண்ணாம வச்சி இருக்கிங்க. உங்களை எல்லாம் ச்சே என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் ரஸியா.
அவன் , வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக கிளம்பினான். அவன் அப்பா அம்மா இருவரும் சேர்ந்து சுரையா வீட்டிற்கு சென்றனர். அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்தார் அம்மா. இருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். சுரையாவின் அப்பா தான் பேச ஆரம்பித்தார் என்ன விஷயம்? அதாவது நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு உங்கள் மகள் சுரையாவை அலுவலகத்தில் பாத்தோம் எங்கள் மகனுக்கு உங்கள் பொண்ணை எங்க வீட்டு மருமகள் ஆக வரனும் ஆசைபடுறோம் அப்புறம் இறைவன் விட்ட வழி என்றார் அவன் அப்பா . சுரையாவின் பெற்றோர் இருவரும் அமைதியாக இருந்தனர். பிறகு அவன் அம்மா பேச தொடங்கினார் .
எங்கள் வீட்டில் வசதிக்கு எந்த கொறச்சலும் இல்லை. எம்மகன் மாசம் ஏழுபதாயிரம் சம்பாதிக்கிறான். உங்கள் மகளை நாங்கள் நன்றாக பாத்து கொள்வோம் என்றவுடன் இருவரும் சரியென்று தலையசைத்தனர். பிறகு ரஸியா சுரையாவிற்கு போன் செய்து விவரத்தை கூறி வீட்டிற்கு வர சொன்னாள். சற்று நேரத்தில் அங்கு சுரையா வந்தாள். ரஸியா இன்று அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சுரையா சிறிது நேரத்தில் ரெடியாகி அவர்கள் முன் வந்தமர்ந்தாள்.
சுரையா அவர்களிடம் ஒரு விஷயம் நான் கொஞ்சம் கோவக்க... என்று சொல்வதற்குள் அதெல்லாம் தெரியும் மா எனக்கு என்றார் அவன் அம்மா . எங்களுக்கு சம்மதம் தான் என்றார் அவன் அப்பா. அம்மா அப்பா சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் தான் என்றாள் சுரையா. அப்புறம் என்ன மக்னா(நிச்சயதார்த்தம்) எப்ப வச்சிகலாம் என்றார் அவன் அப்பா. ம்ம்ம் நாளைக்கே வச்சிகலாம் என்றார் ரஹீம். அவர்கள் மகிழ்ச்சியுடன் விடைபெற்று சென்றனர்.
சுரையாவின் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் நாளை நடக்க போக இருக்கும் நிச்சயத்திற்கு வேலைகளை செய்து கொண்டு இருந்தனர். சுரையாவிற்கு தன்னை மணந்து கொள்ள இருப்பவனை பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஜரினாவும் ரஸியாவும் அவளை கலாய்த்தவாறு இருந்தனர். நாளைக்கு தேவையானவற்றை எடுத்து கொண்டு இருந்தனர். அவரவர் வேலைகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். ஜரினா ஏய் கல்யாண பொண்ணே என்ன யோசனை என்று கேட்டவளை பார்த்து வெட்கப்பட்டு கொண்டு நா..ன் அவரை பாக்கனும் என்றாள். ஓஹோ
மேடம்க்கு அவங்க ஆள பாக்கனுமாமே ரஸி என்று கலாய்த்தாள் ஜரினா. ஏய் அதான் நாளைக்கு பாக்க போறல்ல அப்பறம் என்ன சுரையா என ரஸியா கூற அவள் ஏதோ சரியென்று தலையாட்டினாள். பிறகு மூவரும் வுளு செய்து விட்டு இஷா தொழுது கொண்டு சாப்பிட்டு தூங்க சென்றனர். அனைவரும் உறங்கினர். ஆனால் சுரையாவிற்கு தூக்கம் வரவில்லை. நாளை தன்னவனை பார்க்க போகும் சந்தோஷத்தில் மனம் குதுகலித்து கொண்டு இருந்தது. ஆனால் கொஞ்சம் வருத்தமும் அவளை தொற்றி கொண்டது .
இந்த வீட்டை அவள் தங்கையை பிரிய போகிறாள் என்று நினைத்து கவலை பட்டாலும் மனம் தன்னவனை பார்க்கும் ஆவலில் சிறிது புன்னகை விட்டாள். அப்படியே உறங்கியும் போனாள்.
சுரையா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை அறிந்த அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை . இரவு சாப்பிட்டு விட்டு தன் அறையில் வந்து அமர்ந்தான் அவன். நாளைக்கு எந்த டிரஸ் போடலாம் என்று பீரோ திறந்து பார்த்தான். கண்ணாடி முன் நின்று எந்த டிரஸ் நல்லா இருக்கும் என்று ஒவ்வொன்றாக வைத்து பாத்து கொண்டு பிறகு ஒரு டிரஸை செலக்ட் செய்து கொண்டு தூங்க சென்றான்...
சுரையாவிற்கு அழகான விடியலாய் விடிந்தது இன்று. நான்கு மணிக்கே எல்லாரும் எழுந்துவிட்டனர். பிறகு சுரையா குளித்து விட்டு வந்தாள் . அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக குளித்து விட்டு வந்து வேலைகளை செய்து கொண்டு இருந்தனர். இவள் வேலை செய்ய சென்றாலும் அவளை வேலை செய்ய விடாமல் தடுத்து அவளை உள்ளே அனுப்பினார் அவள் தாய். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் வெளியே வந்தது. ரஸியாவும் ஜரினாவும் சேர்ந்து சுரையாவை தேவதையாக மாற்றினர். அந்த மெருன் கலர் புடவை சுரையாவின் அழகை மேலும் கூட்டியது. அக்கா இந்த சேரில மட்டும் மாமா பாத்தாரு அவ்வளவு தான் ப்ளாட் ஆய்டுவார் என்று கிண்டல் செய்து கொண்டு இருந்தாள் ரஸியா. அவள் ச்சி பே லூசு என்று வெட்கப்பட்டு தலைகுனிந்து கொண்டாள்.
அய்யோ டா வெட்கத்தை பாரு மேடத்திக்கு என்று கூறி சிரித்தார்கள் இருவரும். சாப்பிட சென்றார்கள்.
அவனுக்கும் இதே நிலைமை தான். அவனை வருத்து எடுத்து விட்டனர் அவன் நண்பர்கள் மற்றும் தங்கை. அவன் அழகாக ரெடியாகி வந்தான். அவன் வந்தவுடன் சாப்பிட்டு விட்டு கிளம்பினர். அதற்குள் சுரையாவின் அப்பா போன் செய்து எங்க இருக்கிறார்கள் என்று கேட்டு கொண்டார். அவர்களும் வந்து விட்டனர்.
வந்தவர்களை வரவேற்றார் ரஹீம். அவர்கள் வந்தவுடன் ரஸியா சென்று அங்கேயே நில்லுங்க என்றாள் ரஸியா. அவர்கள் அதிர்ந்தனர். எதுக்கு மா நிக்க சொல்ற என அவன் அம்மா கேட்க . யாரு மாப்பிள்ளை? இவன் தான் என்று காட்டினார் அவன் தந்தை. ம்ம்ம் என்று அவனை ஒரு பார்வை பார்த்து சிரித்துவிட்டு மாமா கன்பார்ம் என் அக்கா பிளாட் என்றாள் . பெரியவர்களுக்கு புரியவில்லை. ஆனால் சிறியவர்கள் புரிந்து கொண்டு சிரித்தனர். அவர்களும் காரணம் தெரியாமல் சிரித்தனர். ஒரு நிமிஷம் ஒரு போட்டோ என்று போட்டோ எடுத்து கொண்டாள். மாமா அக்காவ பிடிக்கலனா சொல்லுங்க நான் உங்களை மேரேஜ் பண்ணிக்கிற என்றவுடன் அவள் தலையில் பலமாக இரண்டு கொட்டு விழுந்தது. கொட்டியது வேறு யாருமில்லை அவள் அம்மா தான் . வந்தவங்க கிட்ட பேசுற பேச்ச பாரு எருமை போடி. அவளை ஏன் அடிக்கிறிங்க சின்ன பொண்ணு என்றார் அவன் அம்மா. ரஸியா அவன் பாட்டியை பார்த்து என்ன தாதி தங்கச்சியே இந்த வாய்னா அக்கா எப்படி இருப்பானு தானே கவலையே வேண்டாம் அவளுக்கும் இதே அளவுக்கு தான் வாய் என்றாள். அதை கேட்டு அனைவரும் சிரித்தனர். மேலும் மாமா நேத்து கேட்க மறந்துட்டேன் உங்க பேரு என்ன என்றவுடன் சாகித் என்றான். இவள் சற்று அதிர்ந்தாள். பிறகு மாமா நீங்கள் மட்டும் தனியாக நில்லுங்க ஒரு போட்டோ எடுத்துக்கிற என்றவுடன் அவனும் நின்றான். இவள் போட்டோ எடுத்து கொண்டு ரொம்ப தேங்க்ஸ் என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.
ரஸியா அந்த போட்டோவை சுரையாவிடம் காட்டினாள். அவள் அதை வாங்கி பார்த்ததும் சற்று அதிர்ந்தாள். பிறகு ரஸியா, சுரையா இவர் பேர் கூட சாகித் தானா என்றாள். ஏய் என் கனவுல வந்த அந்த சாகித் தான்டி இவரு என்றாள் . ஜரினாவிற்கோ எதுவும் புரியவில்லை என்ன டி சொல்ற ஆமாம் என்று தன் கனவை கூறினாள்....
ஆம் அவன் வேறு யாருமில்லை சுரையாவின் கனவில் வந்த அந்த சாகித் தான் அவன்....
தொடரும்