Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்னுயிரே உனக்காக - New Tamil Novel

அனு நாகதனா

Saha Writer
Team
Messages
4
Reaction score
0
Points
1
நான் கேட்டவுடன் தளம் அமைத்து கொடுத்த எழுத வாய்ப்பளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல... என் கதையின் முதல் அத்தியாயத்தை பதிவிடுகிறேன்... படித்துவிட்டு கருத்துக்களை கூறவும்....
 

அனு நாகதனா

Saha Writer
Team
Messages
4
Reaction score
0
Points
1
அத்தியாயம் -1



யாரு டாடி அவ?வீடு தேடி போன நம்ம ஆளு இரண்டு பேரை இப்படி அவமானப்படுத்தி அனுப்பி இருக்கா?"-எரிச்சலோடு தன் தந்தை ராகவனிடம் வினவினாள் தாரிகா.

"மாயா!"

"மாயா???"

இந்தியன் எக்கனாமியே பார்த்து நடுநடுங்குற ஒரு இன்டஸ்ட்டியலிஸ்ட்!"

"அவ எவளா வேணும்னாலும் இருக்கட்டும்!அதுக்காக நம்ம ஆளுங்கலயே அவமான படுத்துவாளா?நீங்க எதுக்கு அவன்கள அங்க அனுப்புனீங்க?



இன்னும் பத்து நாள் ஒரு டென்டர் இருக்கு ஞாபகமிருக்கா!"

ஆமா.

"அதே தான்!ஆனா,மாயா பில்டர்ஸ் அதுக்கு கொட்டேஷன் அனுப்பி இருக்காங்க!"



ஸோ வாட்?

மாயா கொட்டேசன் அனுப்பி இருந்தா அந்த டென்டர் கண்டிப்பா நமக்கு கிடைக்காது...

"என்ன உளர்றீங்க?"



"தமிழ்நாட்டுல மாயாவை எதிர்க்கிற தைரியம் எவனுக்கும் இல்லை!எதிர்த்தவன் வாழ்ந்ததும் இல்லை!தான் ஜெயிக்க எத்தனை பேரை வேணும்னாலும் அழிக்க தயங்க மாட்டா அந்த மாயா!அதுக்காக தான்..."

"விட்டுக்கொடுக்க சொல்லி கெஞ்ச அனுப்புனீங்ளா?"



"நமக்கு வேற வழி இல்ல!"

"டாடி என்ன நீங்க?சரியான பயந்தாங்குளியா இருக்கீங்க?அவ ஒரு பொண்ணு!"

"யாருக்கும் அடங்காத பொண்ணு தாரிகா!அவ முன்னாடி எதிர்த்து பேசுற தைரியம் கூட யாருக்கும் வந்தது இல்லை..!"

"டாட்..!"பற்களை கடித்தாள்...

"தாரிகா!பிசினஸ் விஷயமா அவளை யாராலும் எதுவும் பண்ண முடியாது!தயவுசெய்து கோபப்பட்டு காரியத்தை கெடுத்துடாதே !உன்னை நான் கெஞ்சி கேட்டுக்கிறேன்!"இந்த டென்டர் நமக்கு ரொம்ப முக்கியம்

தாரிகாவின் முகம் முழுதும் அவ்வளவு எரிச்சல்!!

"நாம நேரா அவ ஆபிஸ் தான் போகணும்!"

"வாட்?பைத்தியமா நீங்க?அந்த திமிர் பிடித்தவளை தேடி நாம போகணுமா??"

"வேற வழியில்லை தாரிகா!என்னால முடிந்த அளவுக்கு இந்த டென்டர் நமக்கு கிடைக்க நான் பாக்குறேன்.மாயா மட்டும் இதுலேருந்து விலகிட்டா அந்த டென்டர் கண்டிப்பா நமக்கு கிடைக்கும்...

"மாயா...மாயா...மாயா..ச்சே!"

தாரிகா புரிஞ்சிக்கோ?எவ்வளவோ சமாளித்து ஒண்ணும் செய்ய முடியல.. அதனால தான் இந்த முடிவு எடுத்தேன்.இந்த நிலையில நமக்கு உதவ மாயாவால மட்டும் தான் முடியும்!!"

அவ போடுற பிச்சைல கிடைக்கிற டென்டர் நமக்கு வேண்டாம்..?

தாரிகா?உனக்கு வேனுனா இந்த டென்டர் முக்கியம் இல்லாம இருக்கலாம்..ஆனா எனக்கு ரொம்ப முக்கியம்..இந்த டென்டர் கிடைக்கலனா எத்தன குடும்பம் நடு ரோட்டுக்கு வரும் தெரியுமா?உன்னோட பிடிவாதத்துக்கு நான் அவங்கல பலியாக விட மாட்டேன்.உனக்கு விருப்பம் இருந்தா என் கூட வா..இல்லனா நான் மாப்பிள்ளைய கூட்டிடட்டு போறேன்..

வெடுக்கென நிமிர்ந்தவள்... அவனையா?

தாரிகா..அதட்டினார்..
ஆயிரம் தான் இருந்தாலும் அவரு உன்னோட புருஷன்..அவருக்கு குடுக்க வேண்டிய மரியாதையை நீ குடுத்து தான் ஆகனும்..இந்த சொத்துல அவருக்கும் பாதி பங்கு இருக்கு..அவருக்கும் முடிவு எடுக்குற எல்லா உரிமையும் இருக்கு...அத மொதல்ல புரிஞ்சிக்கோ..?

ஒகே டாட்..ஆனா அந்த படிக்காத பட்டிகாட்டான கூட்டிட்டு போய் என்ன பண்ண போறீங்க..?நக்கலாய் வினவினாள்

அந்த கவல உனக்கு வேண்டாம்..நீ புருஷனா அவருக்கு குடுக்காத மரியாதைய நான் ஒரு மாமனாரா அவருக்கு குடுக்குறேன்..இதுல உனக்கு என்ன பிரட்சணை..!!

"என்னமோ பண்ணி தொலைங்க..!ஆனா அந்த மாயா மட்டும் கிடைச்சா!எனக்கு இருக்கிற கோபத்துக்கு அங்கேயே அவளை சுட்டு கொன்னுடுவேன்!!"-கோபமாக உரைத்தாள் தாரிகா...

சுடு என்று தமக்கு எதிரில் மண்டியிட்டு அமர்ந்திருந்தவனிடம் தனது துப்பாக்கியை தூக்கி போட்டாள்..



ஏய் நான் யாரு தெரியுமா!எங்க அப்பா யாரு தெரியுமா?

உங்க அப்பா யாருனு உனக்கு தெரியாதா!இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியும் எனும்போதே அறையை திறந்து கொண்டு உள்ளே வந்தார் அமைச்சர் பாண்டியன்...அவரது முகம் வேர்வையில் நனைந்திருந்தது..

இதோ இவர்தான் உங்க அப்பா?இப்போ எடுத்து சுட்டுக்கோ.என்றாள் அதிகாரமாய்...

அதுவரை தைரியத்துடன் இருந்த அவன் அவனது தந்தையே பயந்து கைகட்டி நிற்பதை பார்த்து அரண்டு போனான்.

மேடம் மன்னிச்சிடுங்க நான் எந்த தப்பும் பண்ணல....

இன்ட்ரஸ்டிங்!"-என்று அவள் சொடுக்கிட,அந்த அறையில் இருந்த தொலைக்காட்சி உயிர் பெற்றது.

அதில்,

"மாயான்னா என்ன பெரிய இவளா?ஏதோ பாக்க கொஞ்சம் அழகாக இருக்காலேனு அவளை இடித்தேன்!அதுக்காக அத்தனை பேர் முன்னாடி ஒரு ஆம்பளைன்னு கூட பார்க்காம இடிச்சதுக்கு அடிச்சிட்டா!"அவளுக்கு நான்தான்டா எமன்!என் கையால அவளை துடிக்க துடிக்க சாகடிக்கணும்!கேவலம் ஒரு பொண்ணு அவ!

"அவளால என்ன ஒன்னும் பண்ண முடியாது ? ஆனா நான் நினைத்தால் அவளை என்ன வேணும்னாலும் செய்ய முடியும்!என்ன வேணும்னாலும்!ஒரு பொண்ணுக்கே இவ்வளவு திமிர் இருக்கும் போது எனக்கென்னடா?"-குடி போதையில் உளறினான் அவன்.

"மேடம்! என் பையன் எதோ தெரியாம ஒலறிட்டான். அவன..மன்னிச்சிடுங்க மேடம்!"

மாயா அவனையே பார்த்து கொண்டிருக்க..சட்டென்று
"மாயாம்மா என் புள்ளைய மன்னிச்சிடும்மா "என்று அவளது காலில் விழுந்தார் பாண்டியன்....

அவள் எதையும் கவனிக்காது

"கன்னை எடுத்து சுடு!" என்றாள்.

அவனுக்கு வியர்த்து கொட்டியது..
"மேடம் ஸாரி மேடம்!"

"கன்னை எடு!"-அவள் பொறுமை இழந்துப் போனாள்.

"மேடம்?"-சட்டென அவன் சுதாரிப்பதற்குள் துப்பாக்கியை எடுத்தவள்,அவனது தோள்பட்டையில் இருமுறை சுட்டாள்.

"ஆ...!"என்று அலறியப்படி விழுந்தான் அவ்வாலிபன்.

அங்கு நின்று கொண்டிருந்த அஜானு பாகுவான ஒருவனிடம் துப்பாக்கியை அவள் நீட்ட,அதனை வாங்கிக் கொண்டான்.

"டிஸ்போஸ்!"-அவள் உத்தரவிட,அவ்வாலிபனை வந்து தூக்கினர் இருவர்.

"மாயான்னா பயம் இருக்கணும்!மறுபடியும் அந்த பயம் குறைந்தா,அடுத்ததா அந்த புல்லட் உன் இதயத்துக்கு பாயும்!"-என்றவள்,அவனை காலால் தள்ளிவிட்டு எழுந்து நடந்தாள்.எவருக்கும் ஆட்படாத அதிகாரமாய்!!

"பெத்த புள்ளைக்கு உடம்பு சரியில்ல..வீட்லயே இருந்து குழந்தைய கவனிக்காம அப்படி என்னதான் பெரிய வேலையோ? என்று புலம்பி கொண்டே ஜுர உடம்புடன் ,சோர்ந்து போய் சோபாவில் சுருண்டு கிடந்த தன் மகன் ஆதியை தொட்டு பார்த்தான் சகிதீபன்.

ஜுரம் குறைந்திருந்தது...

ஆனாலும் பள்ளிக்கு போக முடியுமா உடனே?

யோசிக்கும் போதே அம்மா எப்போ வருவாங்க டாடி என்றது அந்த பிஞ்சு?

என்ன கூறுவான்.. பிள்ளைக்கு உடம்புக்கு முடியல ஆஸ்பிடல் கூட்டிட்டு போகனும் நீயும் கொஞ்சம் வாயேன் என்றதற்கு ,அது இருந்தா என்ன செத்தா என்ன காலையில் கூறிவிட்டு சென்ற தன் மனைவியை நினைத்தவன்,அதை மறைத்து அம்மாக்கு ஆபீஸ்ல நிறைய வேலை இருக்காம்.. நைட் வந்து உன்ன பாக்குறுங்களாம்..உன்ன சமத்தா தூங்க சொன்னாங்க...

அம்மா என்ன பாக்க வந்தாங்களா?

இல்லடா அம்மா போன் பண்ணி கேட்டாங்க..

அம்மா எங்கூட பேசவே இல்லையே?

அவனை தூக்கி மடியில் வைத்து கொண்டவன் அம்மா பேசும் போது நீங்க தூங்குனீங்க..அதான் அம்மா உங்க கிட்ட பேசல..நீங்க இப்போ சமத்தா தூங்குனா டாடி நாளைக்கு உங்களுக்கு சாக்லேட் வாங்கி தருவேன்..

சாக்லேட் வேண்டாம் டாடி..அம்மா கிட்ட இருந்து எனக்கு ஒரு முத்தம் வாங்கி தரீங்களா.?ஏக்கமாய் கேட்டது...

அவன் சற்றும் தன் மகன் இப்படி கேட்பான் என எதிர் பார்க்கவில்லை..என்ன கூறுவான் சகிதீபன்..அவனை நெஞ்சோடு அணைத்து அவனது கண்ணத்தில் ஒரு முத்தம் வைத்து சரிடா நீங்க தூங்குங்க ,நாளைக்கு அம்மா கிட்ட ஒரு முத்தம் வாங்கிகலாம் என்று கூற தகப்பனின் நெஞ்சு சூட்டின் கதகதப்பில் உறங்கி போனான்..

குழந்தையை அவனது அறையில் படுக்க வைத்து விட்டு வரும்போது அவனது மொபைல் சிணுங்கியது.எடுத்து பார்த்தவன் அம்மா நல்லா இருக்கீங்களா..

அவன் அம்மா எதிர் முனையில் ஏதோ கூற...

இல்லம்மா அவுங்க யாரும் வர மாட்டாங்க.நான் மட்டும் வரேன்..தங்கச்சி எல்லாம் கேட்டதா சொல்லுங்க என்று கூறிவிட்டு வைத்தவன் வீட்டில் பணிபுரியும் பெண்ணை அழைத்து "அக்கா குழந்தைய கொஞ்சம் பாத்துகங்க...நான் போய் ஐயாவ கூட்டிட்டு வந்துடுறேன்"....

சரி தம்பி நீங்க போய்டு வாங்க....

சரிக்கா என்றவன் கார் சாவியை எடுத்து கொண்டு விடு விடுவென வெளியேறினான்...

"இப்படிபட்ட தங்கமான புள்ளைக்கு போய் இப்படி ஒரு பொண்ண கட்டி வச்சிட்டாங்களே" என்று நொந்தபடி தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள் அப்பெண்மனி..



சகிதீபன்
இவன்தான் இந்த கதையின் கதாநாயகன்.வாழ்க்கையில் தோற்று போன வித்தியாசமான கதாநாயகன்.மனைவி ,பிள்ளைகளுக்காக தோல்வியையே வெற்றியாக நினைப்பவன்.எதிரிகளை அடித்து நொறுக்கவில்லை.வில்லன்களை ஒற்றை ஆளாக பந்தாடவில்லை.சூழ்நிலைக் கைதியாக தோற்று போகும் ஒருவனை ரத்தமும் சதையுமாக கண்ணீர் வடித்து துடிக்கும் ஒருவனை கதாநாயகனாக்கியது விதியின் செயலோ?

எப்படியாவது எல்லா பிரட்சனைகளையும் முடித்து மகிழ்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தாலும்,எதையும் வெளிகாட்டி கொள்ளாமல் கிடைத்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ நினைக்கும் சாதாரண மனிதன்.

அந்த பிரமாண்டமான அறையை சுற்றி இருபதுக்கு மேற்பட்டவர்கள் அமர்ந்திருக்க நடுவில் நின்று உரையாடி கொண்டிருந்தாள் மாயா..

அவள் கூறுவதை அமைதியுடன் கேட்டு கொண்டிருந்தனர்.அங்கு அமர்ந்திருந்த அனைவரும் மிகப் பெருந் தொழிலதிபர்கள்..

அப்போது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் அவளுடைய பி ஏ தீபா..

சட்டென மாயா திரும்ப அவள் பார்த்த பார்வையில் தீபாவின் உடல் சில்லிட்டு போனது..

மே.மே...ம் உங்கள பாக்க தாரிகா பில்டர்ஸ் சேர்மன் ராக.வன் சார் வந்திருக்கார் என்று திக்கி திணறி கூற...

உள்ளே அனுப்பு என்றவள் அடுத்த இரண்டு நிமிடத்தில் உள்ளே வந்த ராகவனை அமர சொன்னவள் விட்ட பணியை தொடர ஆரம்பித்தாள்..

நடுங்க வைக்கும் சிம்மமாய் பேசி கொண்டிருந்தாள் மாயா.ராகவனின் விழிகள் அவள் மேல் ஆழமாக பதிந்தன.ஆணவத்தின் மறுபிறப்பு என்று அனைவரும் கூறுவதில் தவறு இருப்பதாய் தோன்றவில்லை அவருக்கு!!

அப்போது வெளியே காரில் அமர்ந்திருந்த சகீதீபன் காரின் சீட்டில் இருந்த கண்ணாடியை பார்த்து ஐயா கண்ணாடிய மறந்துட்டு போய்டாங்க போலயே,அவருக்கு கண்ணாடி போடலனா தலய வலிக்குமே என நினைத்தவன் அதனை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தான்..

செக்யூரிட்டி அவனை உள்ளே விட மறுக்க அவனிடம் சண்டை போட்டு உள்ளே வந்தவன் ராகவ் இருந்த அறையின் கதவை திறந்து உள்ளே போய் ஐயா நீங்க கண்ணாடிய மறந்துட்டீங்க என்று அவரிடம் கொடுத்தான்.ராகவ் உட்பட அங்கு அமர்ந்திருந்த அனைவரும் அவனயே பார்த்தனர்...அந்த அறையில் ஊசி விழுந்தால் கூட சப்தம் கேக்காது போல் அவ்வளவு அமைதியாக இருந்தது.

அப்போது செக்யூரிட்டி வந்து சாரி மேடம் சொல்ல சொல்ல கேக்காம வந்துட்டார் என்றவன் யோவ் வாய்யா வெளில என்று அவனது சட்டையை பிடித்து இழுக்க..

டேய் கருங்குரங்கு.....

குரல் வந்த திசையில் திரும்பிய சகிதீபன் அங்கு நின்றவளை பார்த்து ஏ.....ய் மைதாமாவு என்று கத்த....

அங்கு கூடி இருந்த அனைவரும் அவனை திகைப்புடன் பார்த்தனர்..



 

அனு நாகதனா

Saha Writer
Team
Messages
4
Reaction score
0
Points
1
அத்தியாயம்:2



ராகவன் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார்.அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது..

டேய் ராமு?

ஐயா?

தீபன் வெளிய நிக்கிறான்.வர சொல்லு.!

சரிங்க..

ஐயா கூப்டீங்களா?

அவன் வந்தவுடன் அனைவரும் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்..

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை..ஐயா என்னது இதெல்லாம்....

டேய் தீபா எவ்வளவு பெரிய காரியம் செஞ்சிட்டு இப்படி மூனாவது மனுஷன் மாதிரி வெளில நிக்கிற..இந்தா இனிப்பு எடுத்துக்கோ என்றவர் அவனது வாயில் ஒரு ஸ்வீட்டை திணித்தார்.

என்னய்யா விஷேஷம் என்றான் ஒன்றும் அறியாதவனாய்!

நீ முதல்ல சாப்டு ..அப்பறம் சொல்றேன்...

என்னனு சொல்லுங்க ஐயா முதல்ல....

முதல்ல ஐயானு கூப்டுறத நிப்பாட்டு..மாமானு கூப்டு...

இல்லைங்க நான் ஐயானே கூப்டுறேன்..

இல்ல இல்ல இனிமே நீ மாமானு தான் கூப்டனும்...நானும் எத்தனையோ முறை சொல்லிட்டேன்...இனிமே நீ மாமானு தான் கூப்பிடனும்...இல்லனா உன்கூட நான் பேச மாட்டேன்...என்று முகத்தை தூக்கி வைத்து கொள்ள..

அப்படி எல்லாம் சொல்லாதீங்க ஐயா...நான் இனிமே உங்கள மாமானே கூப்டுறேன் மாமா என்றான் சிரித்து கொண்டே..!

ராகவன்அவனை கட்டிபிடித்து கொண்டு நீ மாமானு கூப்ட மாட்டியானு எத்தன நாள் ஏங்கியிருப்பேன்.எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்குடா...

மாமா கண்ரோல் பண்ணுங்க.இது ஆபீஸ்..
என்றான் சிரித்து கொண்டே...

அப்போது அங்கு வந்த தாரிகா இருவரும் கட்டிபிடித்து நிற்பதை பார்த்து கோபத்துடன்... டாட் எதுக்கு இப்போ இந்த டிரைவர கட்டி புடிச்சிட்டு நிக்கிறீங்க என்றாள் நக்கலாய்...

தாரிகா மரியாதையா பேசு..அவரு உன் புருஷன்.

டாட் நீங்க வேனுனா அவன மருமகனா ஏத்துக்கலாம்..ஆனா என்னால இவன ஒரு மனுஷனா கூட ஏத்துக்க முடியாது.இதுல இவன நான் புருஷனா ஏத்துக்கனுமா!!நெவர் அது இந்ந ஜென்மத்துல நடக்காது....

தாரிகா..என்று அவர் பல்லை கடிக்க...

மாமா விடுங்க..அவுங்ள பத்தி தான் உங்களுக்கு தெரியுமே!!

என்னது மாமா வா?இது எப்பத்துலேருந்து...

தாரிகா.....

ஒகே டாட்...நீங்க அவனுக்கு இவ்வளவு இடம் குடுக்காதீங்க..அது உங்களுக்கு நல்லது இல்லை...என்றவள் தேவை இல்லாத விஷயத்தை பத்தி நான் ஏன் பேசனும்...எதுக்கு எல்லாருக்கும் இனிப்பு குடுக்குறீங்க..அத சொல்லுங்க...

அந்த டென்டர் நமக்கே கிடச்சிடுச்சு...

டாட் உண்மையாவா?என்னால நம்பவே முடியல..எப்படி விட்டு குடுத்தா அந்த மாயா!!

எல்லாம் என் மாப்பிள்ளையால தான்?

வாட்?இவனாலயா..

ஆமா என்றவர் நடந்ததை கூற தொடங்கினார்...



டேய் பிளாக்கி...

அனைவரும் குரல் வந்த திசையை பார்த்து அதிர்ந்து போயினர்...காரணம் அது சாட்சாத் மாயாவே தான்..



மாயாவை பார்த்து ஏய்.. மைதாமாவு என்று சகிதீபன் ஒடி அவளை தூக்கி சுற்ற ஆரம்பித்து விட்டான்....அங்கு கூடியிருந்த அனைவரும் இதனை நம்ப முடியாமல் பார்த்து கொண்டிருந்தனர்...

டேய் பிளாக்கி எப்படி இருக்க..

நான் நல்லா இருக்கேன் குட்டிம்மா....

போதும்டா எறக்கி விடு..என்றவள் அப்போது தான் சுற்றி இருந்த அனைவரையும் கவனித்தாள்..

அவர்கள் அவளையே தான் பார்த்து கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை...மாயாவிற்கு சிரிக்க கூட தெரியுமா!!இப்படி ஒரு மாயாவை இவர்கள் இதற்கு முன் பார்த்ததே இல்லை....

ஹேய் பிளாக்கி அந்த ரூம்ல கொஞ்சம் வெயிட் பண்றியா என்றவள் வேணாம் வேணாம் நீ இங்கயே இரு என்றவள் அடுத்த பத்து நிமிடத்தில் மீட்டிங்கை முடித்து விட்டாள்...

சகிதீபன் அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான்....

மீட்டிங் முடிந்து அனைவரும் கிளம்ப ஹே மாயா ஹு இஸ் ஹி? என்றார் அங்கிருந்த ஒருவர்..

ஹீ இஸ் மை பிளாக்கி என்றாள் சிரித்து கொண்டே!!

அங்கு இருந்த அனைவரும் சகிதீபனிடம் வந்து வாழ்த்து கூறிவிட்டு சென்றனர்...

அவன் ஒன்றும் புரியாமல் விழித்து கொண்டிருந்தான்..

அதில் ஒருவன் கிரேட் சார் நீங்க..இந்த மாதிரி ஒரு மாயாவ இதுக்கு முன்ன நாங்க பாத்ததே இல்ல...உங்களால தான் அந்த பாக்கியம் எங்களுக்கு கிடச்சிருக்கு என்று கூறிவிட்டு சென்றான்...

ராகவனுக்கு ஒன்றுமே புரியவில்லை...அவரும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தார்..தாரிகாவிற்கும் இவனுக்கும் திருமணம் ஆனதிலிருந்து இப்படி ஒரு நாள் கூட அவன் சந்தோஷமாக சிரித்து பார்த்ததில்லை....அவர் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்...

டேய் பிளாக்கி உன் மனைவி குழந்தை எல்லாம் எப்படி இருக்காங்க....

எல்லாரும் நலமா இருகாங்க.. என்றவன் அப்போது தான் ராகவனை கவனித்தான்...

குட்டிம்மா இது தான் ஐயா.என்னோட மாமனார்...

ஒ..என்றவள் வணக்கம் வைத்தாள்...

அவர்கள் என்ன பேசினார்கள் என்று கேட்டால் இருவருக்குமே தெரியாது..அவ்வளவு பேசினார்கள்.

பிறகு அவர்கள் வந்த காரணத்தை கேட்டு அந்த டென்டரை இவள் வாபஸ் வாங்கி விட்டாள்....
ராகவன் தாரிகாவிடம் சொல்லி முடிக்க அவள் கெக்க பெக்க என சிரிக்க ஆரம்பித்து விட்டாள்..

தாரிகா எதுக்கு சிரிக்கிற...

டாட் நீங்க அவள பத்தி சொல்லும் போது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமா இருந்து..எப்ப அவ இவனோட பிரண்டுனு தெரிஞ்சதோ அப்பவே அவ ஸ்டேட்டஸ் தெரிஞ்சிட்டு... என எக்காந்தமாய் கூறினாள்...

தாரிகா மைண்ட் யுவர் வேர்ட்ஸ்...கத்தினார் ராகவன்...

டாட் அந்த மாயாவுக்கு போயா நீங்க அவ்வளவு பில்டப் குடுத்தீங்க என்றவள் மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தாள்.

சிரிக்கிறத முதல்ல நிப்பாட்டு....கர்ஜித்தான்

ராகவன் வெடுக்கென நிமிர்ந்து பார்க்க சகிதீபன் தான் கத்தியிருந்தான்..

தாரிகா அவனை ஆச்சரியமாக பார்த்தாள்...தாரிகாவும் அவன் கத்துவான் என்று எதிர் பார்க்கவில்லை...

சகிதீபன் கண்கள் சிவக்க இதோ பார் உன் கழுத்துல தாலி கட்டுன பாவத்துக்கு நீ என்னய என்ன வேனாலும் பேசலாம்..ஆனா என் குட்டிம்மாவ பத்தி பேச உனக்கு எந்த தகுதியும் இல்ல.இன்னொரு வார்த்த அவள பத்தி பேசுன உனக்கு மரியாதை இல்ல என்று எச்சரித்தவன் அவ்விடத்தை விட்டு அகன்றான்...

தாரிகா சிலையென நின்றுவிட்டாள்.கல்யாணம் ஆன இத்தனை வருடங்களில் இன்று தான் இவன் இவ்வளவு வார்த்தை பேசியுள்ளான் .அதுவும் கோபமாக...

ராகவனும் அதே தான் நினைத்தார்...ஆனால் அவன் கூறும் போது என் குட்டிம்மா என்று கூறியதையும் கவனித்தார்...மாயா எவ்வளவு பெரிய கோடீஸ்வரி என்று அவருக்கு தெரியுமே! இந்தியா மட்டுமில்லாது அவள் கால் பதிக்காத நாடுகளும் இல்லை அவள் கால் பதிக்காத தொழில்களும் இல்லையே! அப்படிபட்ட மாயாவிற்கும் பத்தாம் வகுப்பையே தாண்டாத சகிதீபனுக்கும் எப்படி பழக்கம் என்று புரியாமல் குழம்பி நின்றார் ராகவன்.....
 

அனு நாகதனா

Saha Writer
Team
Messages
4
Reaction score
0
Points
1
மணி பத்து ஆகியிருந்தது.தாரிகா இன்னும் வீட்டிற்கு வரவில்லை....அவள் எப்போதுமே இப்படி தான்.ஆபீஸ் விட்டு வீட்டிற்கு வர மாட்டாள்.வீட்டில் குழந்தை கணவன் இருக்கிறார்கள் என்ற எண்ணமே இல்லாமல் நண்பர்களோடு சேர்ந்து குடித்து விட்டு ஊர் சுற்றிவிட்டு வீட்டிற்கு வரவே பத்து மணிக்கு மேல் ஆகிவிடும்...

சகிதீபன் குழந்தையை மார்போடு அணைத்து தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்...

அவன் தூங்காமல் இன்னைக்கு அம்மாவ நான் பார்த்தே ஆகனும் டாடி...அம்மாவ பாத்து டூ டேஸ் ஆகுது டாடி...

இப்போ நீங்க தூங்குங்க..அம்மாவ காலையில பாக்கலாம்...

நோ டாடி எனக்கு இப்பவே அம்மாவ பாக்கனும் என்று அடம் பிடித்தான்...

அப்பா இப்போ கதை சொல்வேனாம்..ஆதிகுட்டி சமத்தா தூங்குவானாம் ..சரியா?

சரி!

ஒரு ஊருல ஒரு அழகான கிராமம் இருந்துச்சாம்...அந்த கிராமத்துல ஒரு பெரிய வீடு இருந்துச்சாம்...

நம்ம வீட்டோட பெரிசா டாடி?

ஆமா?

அந்த வீட்ல நிறைய ஆடு ,மாடு,கோழி எல்லாம் இருந்துச்சாம்..

நம்ம வீடும் பெரிய வீடு தான! அப்பறம் நம்ம வீட்ல ஏன் டாடி இல்ல!

இப்படி இடையில கேள்வி கேட்டா நான் கதை சொல்ல மாட்டேன் போ!என்று பொய்யாய் கோபம் கொள்ள

நோ டாடி ?நான் பேசமாட்டேன் என்றவன் வாயை மூடிகொண்டு சமத்து பிள்ளையாய் கேட்க ஆரம்பித்தான்..

அந்த வீட்ல ஒரு காரு இருந்துச்சாம்.அந்த கார ஒரு அங்கிள் ஒட்டிட்டு இருந்தாராம்...

நீங்க நம்ம வீட்ல தாத்தாவுக்கு கார் ஓட்டுறீங்களே அது மாதிரியா டாடி..!

ஆமா ஆமா அது மாதிரி தான்...ஆனா இந்த டிரைவருக்கு ஆதி மட்டும் தான் குழந்தை!ஆனா அந்த டிரைவருக்கு மூனு பொண்ணு ஒரு பையன்....

அப்போ அந்த பையன் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தானாம்..லீவுல அப்பாவோட போய் கார் ஒட்ட கத்துகிட்டானாம்...

ஒரு நாள் அந்த பண்ணையார் வீட்டுக்கு ஒரு குட்டி தேவதை வந்தது...

டாடி நீங்க ஏஞ்சல் பாத்துருக்கீங்களா?எப்படி இருந்தது டாடி என்றான் ஆச்சரியமாய்..!

சின்ன பொண்ணு.ஆறு வயசு இருக்கும்.அதோட கண்ணு இரண்டும் படபடக்கும் மீன் போல..கள்ளம் ,கபடம் இல்லாத நேர் பார்வை ,துள்ளல் நடை.அதோட கண்ணம் இரண்டும் ஆப்பிள் போல இருந்துச்சு.காற்றில் பம் மென்று விரியும் பாவாடை,சின்னதாய் மேல் சட்டை போட்டு இருந்தா.பாக்க அப்படியே குட்டி தேவதை மாதிரி... அப்போ அந்த பையன பாத்து அந்த ஏஞ்சல் சிரிச்சதாம்..

அதுக்கு அப்பறம் அந்த ஏஞ்சலும் அந்த பையனும் நல்ல ப்ரண்ட்ஸ் ஆயிட்டாங்க...அந்த ஏஞ்சலுக்கு ஒன்னுனா அந்த பையன் துடிச்சு போயிடுவான்..அதே போல தான் அந்த ஏஞ்சலும்...

ஏஞ்சல் ஊரவிட்டு போற நாளும் வந்துச்சு..அந்த பையன் ரொம்ப அழுதான்.ஏஞ்சலும் ரொம்ப அழுதுகிட்டே ஊருக்கு போச்சு... என்றவன் ஆதியை பார்க்க அவன் நன்கு உறங்கி கொண்டிருந்தான்...அவனை மெதுவாய் படுக்க வைத்து அவனக்கு ஒரு போர்வையை போத்திவிட்டு திரும்பியவன் கதவருகே நின்றிருந்த ராகவனை கண்டு அதிர்ந்து போனான்...

மாமா நீங்க இன்னும் தூங்கலயா?

உன்கிட் ஒரு விசயம் கேக்கலானு வந்தேன்..அதற்கு இப்போ அவசியம் இல்ல..

மாமா நீங்க என்ன சொல்றீங்க..?

ஒன்னுமில்லை நீ தூங்கு நான் என் அறைக்கு போறேன் என்றவர் நின்று தீபா நீ இப்போ ஆதிக்கு சொன்ன கதையில வந்த ஏஞ்சல் தான் அந்த மாயாவா?

சகிதீபன் அமைதியாய் நின்றான்...

சரிப்பா நீ தூங்கு..காலையில நீ உங்க அம்மாவ பாக்க கிராமத்துக்கு போகனுனு சொன்னியே என்று கூறிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டார்..

சகிதீபனுக்கு தான் உறக்கமே வரவில்லை...அவன் நினைத்து கூட பார்க்கவில்லை ..மாயாவை இன்று பார்பான் என்று.இப்பயும் அதே துறு துறுனு தான் இருக்கா..இந்நேரம் என்ன பண்ணிட்டு இருப்பா..சாப்பிட்டு இருப்பாளா..என்று அவளை பற்றியே நினைத்து கொண்டிருக்க ....

அஸ்வந்த் ப்ரியா குட்டி ஸ்கூல் போய்டாலா?

போய்டா?

அம்மா போன் பன்னலயானு கேட்டாளா?அவ எங்க கேக்க போறா ?அவளுக்கு அப்பா நீ இருந்துட்டா போதுமே!!

மாயா ஏன் அப்படி சொல்ற ?ப்ரியாக்கு உன் மேல எப்பவுமே தனி பாசம் தான்..நாங்க இன்னும் ஒன் மந்த்ல இந்தியா வரோம் ??

ஒகே..அச்சு அப்பறம் வந்து... என்று இழுக்க...

என் மாயாக்கு பேச்சு தடுமாறுதா?நம்ப முடியலயே! அப்போ கண்டிப்பா நீ உன் பிளாக்கிய பாத்துருப்ப கரெக்டா?

எப்படி அச்சு என்றாள் ஆச்சர்யமாய்..!

உன்ன பத்தி எனக்கு தெரியாதா!என்றவன் நான் இந்தியா வந்து அவரை பாத்துகிறேன்.இப்போ எனக்கு ஆபீஸ்கு லேட் ஆச்சு நான் கிளம்புறேன்..நீ தூங்கு

சரி பை!!கட் செய்தாள்..

மறுபடியும் மொபைல் ஒலிக்க என்னா அச்சு இப்ப தான கட் பண்ணுன?

ஏய் குட்டிம்மா உன் வீட்டுகாரருகிட்ட பேசிட்டு இருந்தியா!!!!

ஆமா பிளாக்கி....ப்ரியா கிட்ட பேசலானு பாத்தேன் ..அவ ஸ்கூல் போயிட்டாலாம்...

ஓ..என்றவன் உனக்கு எத்தனை குழந்தைங்க....

ஒரே பொண்ணு தான்...அவளுக்கு அவ அப்பா இருந்துட்டா போதும்...நான் எல்லாம் தேவையே இல்லை...

சரிடா..நீ தூங்கு..நான் அப்பறம் பேசுறேன்...

இல்ல பிளாக்கி ..!!நானே உனக்கு கால் பன்ன நெனச்சேன்..நாளைக்கு ஒரு பார்ட்டி அரேன்ஞ் பண்ணிருக்கேன்.கண்டிப்பா நீ வரனும்..

இல்ல குட்டிம்மா நாளைக்கு ஊருக்கு போறேன்...ஊருல திருவிழா அம்மா வர சொல்லிருக்காங்க...அம்மாவ பாத்து ரொம்ப நாளாச்சு.. அதான் போலானு....என்று இழுக்க...

அப்படியா!ஒகே நீ போய்டு வா...நாம இன்னொரு நாள் மீட் பண்ணலாம்...

குட்டிம்மா என் மேல கோவம் இல்லையே?

கோபமா!உன் மேலயா ?இல்லவே இல்ல.நீ போய் தூங்கு....என்று கூறிவிட்டு கட் செய்தாள்...

அன்றைய இரவு இருவருக்குமே ஒரு இனிய இரவாக அமைந்தது....
 
Top Bottom