- Messages
- 17
- Reaction score
- 1
- Points
- 1
மலர் 1:
அழகிய காலை பொழுது..... பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இரு சக்கர வாகனங்கள், பேருந்துகள் சாலையில் ஓடிக்கொண்டிருக்க அதை தடை போடும் விதமாகச் சிவப்பு விளக்கை காட்டியது போக்குவரத்து சமிக்ஞை. அதை மதித்து மக்கள் அவசரத்திலும் பச்சை நிறத்திற்காக காத்திருக்க, எவ்வளவு சீக்கிரம் கிளம்பினாலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ள வேண்டியிருக்கிறது என சலித்துக் கொண்டே தன் நான்கு சக்கர வாகனத்தில் இருந்தவாரே அஷ்வின் தன் வலப்புற கண்ணாடி வழியாக சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான்.
வேடிக்கைபார்த்தவாறு அவன் கண்கள் அருகில் நிற்கும் பேருந்தின் மீது விழ, ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த அவளின் காந்த பார்வை அவனை ஈர்த்தது. நிலாவை தோற்கடிக்கும் அழகிய முகம், தேனீக்கள் அறியா மலர் இதழ்கள், அவளது கருநிறக் கூந்தல் காற்றுக்கு இசைந்தாட, விரல்கள் முடியை காதோரம் கோட்க, காதின் தோடு தென்றலின் இசைக்கு அசைய, அந்த தேவதையின் அழகில் முழுவதுமாக மயங்கி தன்னிலை மறந்து அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.
பின்னர் நிற்கும் வாகனங்கள் எழுப்பும் சப்தம் அவன் காதுகளில் பாய, நினைவு திரும்பி பச்சை விளக்கை கவனித்து தன் வாகனத்தை முன்னே செலுத்தினான்.
அவனது மனமோ அழகு தேவதையின் பின்னே செல்ல நினைக்க, அலுவலக பணி மறுபுறம் இழுக்க, வேறு வழி இன்றி சாலையின் நேராக தனது அலுவலக பாதையில் செல்ல, அவள் இருந்த பேருந்தோ வலப்புறம் சென்றது.
அஷ்வின்தனது அலுவலகத்தை அடைந்தான். பதினைந்து மாடிகள் கொண்ட பெரிய கட்டிடம், அதில் எட்டாம் தளத்தில் உள்ள தனது வங்கிக்கு லிஃப்ட் மூலமாக வந்து சேர்ந்தான்.
அஷ்வின் எப்பொழுதும் போல தன் அறையை நோக்கி சென்றுக் கொண்டிருக்க, அங்கே பணி புரியும் சக ஊழியர்கள் "குட் மார்னிங் சார்" கூற, அனைவருக்கும் குட் மார்னிங் என பதிலுக்கு வாழ்த்தியவாறு தன் அறையை திறந்து உள்ளே நுழைந்தான்.
அஷ்வின், "கிளை மேலாளர்" என்ற பெயர் பலகை மேசையில் இருந்தது. தன் இருக்கையில் அமர்ந்து கணிணியில் வேலையை ஆரம்பித்தான்.
அந்த வங்கியில் ஏறத்தாழ இருபது ஊழியர்கள் உள்ளனர். வங்கி வேலை நாட்கள் வாரத்தின் ஐந்து தினங்களிலும் மக்கள் லோன் வாங்க வருவதும், காசு சேமிப்பு கணக்கில் போடுவதும், காசு எடுப்பதுமாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.மதியம் மூன்று மணிக்கு மேல் கொஞ்சம் அமைதியாக இருக்கும், மக்கள் வரவு சற்று குறைவாக இருக்கும்.
அஷ்வின் வங்கி கணக்கு வழக்குகளை சரி பார்க்க முயல, ஏனோ அவனது எண்ணம் மட்டும் ஜன்னல் ஓர தேவதையை நோக்கி... இன்னும் பயணம் செய்து கொண்டு தான் இருக்கின்றது.
வழியில் முகம் காட்டி என் விழிகளுக்குள் சென்றவளே! உன் முகவரியை கண்டு அறிய எங்கே நான் தேடி அலைவேன் !!! என்று எண்ணியவாரு நாற்காலியில் அமர்ந்திருந்தான்.
நானும் ஒரு வருஷமா பொண்ணு பார்த்துட்டு இருக்கேன், எந்த பொண்ணு போட்டோ காட்டினாலும் ஆயிரம் குறை சொல்றான், நேரா அறுபதாம் கல்யாணம் தான் அவனுக்கு நடக்கும் போல என்று கவலையுடன் புலம்பிக் கொண்டு இருந்தாள் ரேகா.
கொஞ்ச நாள் போனா சரி ஆகிடுவான் விடு ரேகா, தேவை இல்லாமல் ஏன் கவலைப்படுர என்றார் குமாரசாமி.
உங்களுக்கு என்ன தெரியும்? நீங்க கொடுக்க செல்லத்துல தான் அஷ்வின் இப்படி இருக்கான் என அதட்டினால் மனைவி ரேகா.
நான் கல்யாணம் செஞ்சுட்டு உன் சிறையில இருக்கிறது போதாதா? அவனாவது கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கட்டுமே என்று கூறியவாறு மாடிக்கு வேகமாக நடையை கட்டினார்.
ஓகோ! என் கூட வாழ்றது சிறையா உங்களுக்கு? என ரேகா அன்பு கலந்த கோபத்துடன் கேட்க, அன்பு சிறையில் இருக்கேன்னு சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டியே என்று புன்னகைத்துக் கொண்டு, ஒரு வழியா தப்பிச்சுட்டேன்னு மனதில் நினைத்தபடி மாடியை அடைந்தார் குமாரசாமி.
சிரித்துக்கொண்டே ரேகா தனது வீட்டு வேலையை செய்ய ஆரம்பித்தாள்.
ரேகா சில வருடங்கள் தன் ஊரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்துவிட்டு பின்பு கணவரின் சம்பாத்தியம் மட்டுமே போதுமானது என்று எண்ணி, வீட்டில் இருந்து குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பணியை விட்டுவிட்டார்.
குமாரசாமி ஒய்வு பெற்ற காவல் அதிகாரி. காவல் நிலையத்தில் மட்டும் தான் அதிகாரியே தவிர , வீட்டின் அதிகாரி ரேகா தான்.
காலையிலே உங்க மகன் புராணத்தை ஆரம்பிச்சுட்டீங்களா அம்மா என வம்புக்கு இழுத்தாள் மகள் அனு.நேரம் ஆகுது, நான் காலேஜ் போகனும். எனக்கு சாப்பிட ஏதாவது கொடுத்துட்டு நீங்க உங்க புராணத்தை தொடர்ந்து பாடுங்க என்று கிண்டல் செய்தாள்.
எப்பவுமே சாப்பாடு சாப்பாடு தான் என்று சொல்லி அணுவின் தலையில் ஒரு கொட்டு வைத்தாள் ரேகா.
அனு , மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டப் படிப்பு பயின்று வருகிறாள்.
ஜாடிக்கு ஏற்ற மூடி போல் அண்ணனுக்கு ஏற்ற தங்கை. அண்ணனின் எல்லா செயல்களுக்கும் பக்கபலமாக இருப்பாள்.
மலரும்..
அழகிய காலை பொழுது..... பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இரு சக்கர வாகனங்கள், பேருந்துகள் சாலையில் ஓடிக்கொண்டிருக்க அதை தடை போடும் விதமாகச் சிவப்பு விளக்கை காட்டியது போக்குவரத்து சமிக்ஞை. அதை மதித்து மக்கள் அவசரத்திலும் பச்சை நிறத்திற்காக காத்திருக்க, எவ்வளவு சீக்கிரம் கிளம்பினாலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ள வேண்டியிருக்கிறது என சலித்துக் கொண்டே தன் நான்கு சக்கர வாகனத்தில் இருந்தவாரே அஷ்வின் தன் வலப்புற கண்ணாடி வழியாக சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான்.
வேடிக்கைபார்த்தவாறு அவன் கண்கள் அருகில் நிற்கும் பேருந்தின் மீது விழ, ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த அவளின் காந்த பார்வை அவனை ஈர்த்தது. நிலாவை தோற்கடிக்கும் அழகிய முகம், தேனீக்கள் அறியா மலர் இதழ்கள், அவளது கருநிறக் கூந்தல் காற்றுக்கு இசைந்தாட, விரல்கள் முடியை காதோரம் கோட்க, காதின் தோடு தென்றலின் இசைக்கு அசைய, அந்த தேவதையின் அழகில் முழுவதுமாக மயங்கி தன்னிலை மறந்து அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.
பின்னர் நிற்கும் வாகனங்கள் எழுப்பும் சப்தம் அவன் காதுகளில் பாய, நினைவு திரும்பி பச்சை விளக்கை கவனித்து தன் வாகனத்தை முன்னே செலுத்தினான்.
அவனது மனமோ அழகு தேவதையின் பின்னே செல்ல நினைக்க, அலுவலக பணி மறுபுறம் இழுக்க, வேறு வழி இன்றி சாலையின் நேராக தனது அலுவலக பாதையில் செல்ல, அவள் இருந்த பேருந்தோ வலப்புறம் சென்றது.
அஷ்வின்தனது அலுவலகத்தை அடைந்தான். பதினைந்து மாடிகள் கொண்ட பெரிய கட்டிடம், அதில் எட்டாம் தளத்தில் உள்ள தனது வங்கிக்கு லிஃப்ட் மூலமாக வந்து சேர்ந்தான்.
அஷ்வின் எப்பொழுதும் போல தன் அறையை நோக்கி சென்றுக் கொண்டிருக்க, அங்கே பணி புரியும் சக ஊழியர்கள் "குட் மார்னிங் சார்" கூற, அனைவருக்கும் குட் மார்னிங் என பதிலுக்கு வாழ்த்தியவாறு தன் அறையை திறந்து உள்ளே நுழைந்தான்.
அஷ்வின், "கிளை மேலாளர்" என்ற பெயர் பலகை மேசையில் இருந்தது. தன் இருக்கையில் அமர்ந்து கணிணியில் வேலையை ஆரம்பித்தான்.
அந்த வங்கியில் ஏறத்தாழ இருபது ஊழியர்கள் உள்ளனர். வங்கி வேலை நாட்கள் வாரத்தின் ஐந்து தினங்களிலும் மக்கள் லோன் வாங்க வருவதும், காசு சேமிப்பு கணக்கில் போடுவதும், காசு எடுப்பதுமாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.மதியம் மூன்று மணிக்கு மேல் கொஞ்சம் அமைதியாக இருக்கும், மக்கள் வரவு சற்று குறைவாக இருக்கும்.
அஷ்வின் வங்கி கணக்கு வழக்குகளை சரி பார்க்க முயல, ஏனோ அவனது எண்ணம் மட்டும் ஜன்னல் ஓர தேவதையை நோக்கி... இன்னும் பயணம் செய்து கொண்டு தான் இருக்கின்றது.
வழியில் முகம் காட்டி என் விழிகளுக்குள் சென்றவளே! உன் முகவரியை கண்டு அறிய எங்கே நான் தேடி அலைவேன் !!! என்று எண்ணியவாரு நாற்காலியில் அமர்ந்திருந்தான்.
நானும் ஒரு வருஷமா பொண்ணு பார்த்துட்டு இருக்கேன், எந்த பொண்ணு போட்டோ காட்டினாலும் ஆயிரம் குறை சொல்றான், நேரா அறுபதாம் கல்யாணம் தான் அவனுக்கு நடக்கும் போல என்று கவலையுடன் புலம்பிக் கொண்டு இருந்தாள் ரேகா.
கொஞ்ச நாள் போனா சரி ஆகிடுவான் விடு ரேகா, தேவை இல்லாமல் ஏன் கவலைப்படுர என்றார் குமாரசாமி.
உங்களுக்கு என்ன தெரியும்? நீங்க கொடுக்க செல்லத்துல தான் அஷ்வின் இப்படி இருக்கான் என அதட்டினால் மனைவி ரேகா.
நான் கல்யாணம் செஞ்சுட்டு உன் சிறையில இருக்கிறது போதாதா? அவனாவது கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கட்டுமே என்று கூறியவாறு மாடிக்கு வேகமாக நடையை கட்டினார்.
ஓகோ! என் கூட வாழ்றது சிறையா உங்களுக்கு? என ரேகா அன்பு கலந்த கோபத்துடன் கேட்க, அன்பு சிறையில் இருக்கேன்னு சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டியே என்று புன்னகைத்துக் கொண்டு, ஒரு வழியா தப்பிச்சுட்டேன்னு மனதில் நினைத்தபடி மாடியை அடைந்தார் குமாரசாமி.
சிரித்துக்கொண்டே ரேகா தனது வீட்டு வேலையை செய்ய ஆரம்பித்தாள்.
ரேகா சில வருடங்கள் தன் ஊரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்துவிட்டு பின்பு கணவரின் சம்பாத்தியம் மட்டுமே போதுமானது என்று எண்ணி, வீட்டில் இருந்து குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பணியை விட்டுவிட்டார்.
குமாரசாமி ஒய்வு பெற்ற காவல் அதிகாரி. காவல் நிலையத்தில் மட்டும் தான் அதிகாரியே தவிர , வீட்டின் அதிகாரி ரேகா தான்.
காலையிலே உங்க மகன் புராணத்தை ஆரம்பிச்சுட்டீங்களா அம்மா என வம்புக்கு இழுத்தாள் மகள் அனு.நேரம் ஆகுது, நான் காலேஜ் போகனும். எனக்கு சாப்பிட ஏதாவது கொடுத்துட்டு நீங்க உங்க புராணத்தை தொடர்ந்து பாடுங்க என்று கிண்டல் செய்தாள்.
எப்பவுமே சாப்பாடு சாப்பாடு தான் என்று சொல்லி அணுவின் தலையில் ஒரு கொட்டு வைத்தாள் ரேகா.
அனு , மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டப் படிப்பு பயின்று வருகிறாள்.
ஜாடிக்கு ஏற்ற மூடி போல் அண்ணனுக்கு ஏற்ற தங்கை. அண்ணனின் எல்லா செயல்களுக்கும் பக்கபலமாக இருப்பாள்.
மலரும்..