அத்தியாயம் - 1
சூரியன் தன் கதிர்களை வீசி இருளை அகற்றிட பறவைகள் இரைத்தேடி பயணப்படும் அந்த காலை வேளையில் தனது உடற்பயிற்சியை முடித்து விட்டு தன் முதல் நாள் வேளைக்கு தயாராகி கொண்டிருந்தான் சரண் IPS. டிரைனிங் முடித்து விட்டு கோவையில் DSP யாக பதவியேற்று கொண்டுள்ளான்.
சரண் ஆறடி உயரத்தில் போலிஸிற்க்கு உரிய கம்பீரத்தோடு இருப்பவன். பார்வையில் ஓர் தீவிரம் அளவாய் வெட்டப்பட்ட மீசை …மொத்தத்தில் ஒர் ஆணழகன்.
சரணிற்கு உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை. பெற்றோர்கள் விவாகரத்தானவர்கள். நண்பர்கள் பட்டாளம் என்று பெரிதாக எதுவும் இல்லை என்றபோதும் உயிர் தோழன் ஒருவன் உள்ளான் பெயர் ஆதி. சரணின் பள்ளி தோழன். அவன் புலம்பாத நாள்களே இல்லை ஊர்ல பத்து பதினைந்து பிரண்ட்ஸ் வச்சு இருக்கவன் எல்லாம் சந்தோசமா இருக்கான் ஆனா ஒரே ஒரு பிரண்ட் வச்சுக்கிட்டு நான் படுற பாடு அய்யுய்யோ......
ஆனாலும் அவனும் இவனை பிரிந்து இருக்க மாட்டான் இவர்கள் பிரிந்தது சரணின் பயிற்சிக்காக ஹைதராபாத் சென்ற போது தான் அதுவும் அப்போது ஆதி முதுகலை படித்து கொண்டிருந்ததினால்தான்.
சரண் கிளம்பும் நேரத்தில் சரியாக ஆதி வந்தான். "வா.. மச்சான்..! எப்படி டா மனசுல நினைச்ச உடனே வந்து நிக்குற ம்ம்..நம்மக்குள்ள அப்படி ஒரு wavelength ஏன்டா?"..சரண்.
"கருமம் எல்லாம் என் நேரம் இந்நேரத்துக்கு ஒரு பொண்ணோட wavelength செட்டாகி ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க வேண்டிய ஆளு யார் கூட செட்டாகுது பாரு"..ஆதி.
அதான் ஓன்னும் வெர்க்கவுட் ஆகலல அப்புறம் என்ன புலம்பல் என்றான் சரண்.
ங்ங.. என்று ஆதி புரியாமல் விழிக்க "மச்சி! நீ மைண்ட் வாய்ஸ் ன்னு நினைச்சு சத்தமா பேசிக்கிட்டு இருக்கடா"..சரண்.
சாரி மச்சான் அசடு வழிந்தான் ஆதி.
இருவரும் ஒரு வழியாக கிளம்ப சரணை DSP ஆபிஸில் விட்டு விட்டு அலுவலகத்திற்கு சென்றான் ஆதி.
இங்கு இவர்கள் இப்படி இருக்க நம் நாயகனின் தூக்கத்தை விரைவில் துரத்த இருக்கும் நம் நாயகியோ தூக்கத்தில் தன்னை தொலைத்து கொண்டிருந்தாள்.
சந்தியா எழுந்திருடி மணி எட்டு ஆச்சு அச்சோ ஆண்டவா இவளை எழுப்புறது உள்ள என்னோட பாதி ஆயுள் முடிஞ்சுருமே புலம்பி கொண்டிருந்தார் பார்வதி.சந்தியாவின் அம்மா. சந்தியாவிற்கு அப்பா இல்லை அம்மா மட்டும் தான்.உடன் பிறப்புகள் யாரும் இல்லை மிகவும் கஷ்டப்பட்டு தான் வளர்த்தார் பார்வதி இருப்பினும் தந்தை இல்லை என்ற குறை தெரியாமல் வளர்த்திருக்கிறார்.
சந்தியாவும் மிகவும் பொறுப்பு உள்ளவள் தூங்கும் விசயத்தில் மட்டும் கொஞ்சம் வீக் (நம்மல போல). ஆமாங்க இடியே விழுந்தாலும் அவளை 8 மணிக்கு முன்னால் எழுப்புறது கஷ்டம். கஷ்டம் மட்டும் அல்ல முடியாத காரியமும் தான்.
சந்தியா ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் M.D க்கு P.A வாக வேளை செய்யும் ஒரு 23 வயது பெண்
எத்தனை மணிக்கு எழுந்தாலும் ஆபிஸிற்க்கு சரியாக 9.00 மணிக்கெல்லாம் வந்து விடுவாள்.
எந்த வேளை செய்தாலும் ஒரு நேர்த்தியுடன் செய்து முடிப்பாள். அவளின் செயல்களே கூறும் இவற்றை முடித்தது அவள் என்று..
சந்தியா ஐந்தரை அடி உயரம், மை தீட்டிடாமல் மையல் கொள்ள செய்யும் விழிகள்,புவிதழ் உதடுகள் அதனுள் முத்து போன்ற பற்கள். ஒப்பனைகள் இல்லாமலும் காண்போரை கவர செய்யும் இயற்கையான அழகு. புத்திசாலியான அதே சமயத்தில் கொஞ்சம் அடக்கமான பெண், ஏன் இந்த கொஞ்சம்ன்னா அவளா எந்த வம்புக்கும் போக மட்டாள் ஆனா அதே சமயம் வர வம்ப விட மாட்டாள்.
இனி சரண் சந்தியா வாழ்வில் நடக்கும் விசயங்கள் அவர்களின் வாழ்வை எப்படி மாற்றி அமைக்க போகின்றன என்பதை அடுத்தடுத்த அத்யாயங்களில் தெரிந்து கொள்ளலாம்.