Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என் விழியின் மொழி அவள் - கதை

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
சரண்யா வெங்கட்எழுதும் "என் விழியின் மொழி அவள்"

முன்னோட்டம்
குளிரும் நிலவு அவள், காற்றின் மொழி அவள், கார் இருள் நீக்கும் ஒளி அவள் .......
அவள் வேல்விழி....
அமைதியின் உருவம் அவள், அழகின் பிரதி பிம்பம் அவள்....
சுடும் சூரியன் அவன், வெடிக்கும் எரிமலையின் சீற்றம் அவன், சூறாவளியின் வேகம் அவன்......
அவன் அகில் வேந்தன்.....
குளிரும் நிலவாக இருப்பவளின் வாழ்வில் சூறாவளியாக நுழைக்கிறான் ஒருவன்
அவள் வாழ்வின் நிலை என்ன .....
நிலவாக ஒளி வீசுவாளா.....
இல்லை
ஒளி மறைந்து கலை இழப்பாளா...
அடர்ந்த கார் இருள்....
காற்றின் சத்தத்தை விட ஒருவனின் உயிர் நீங்கும் ஒளி மட்டுமே கேட்டு கொண்டு இருக்கிறது...
அவன் நிலை என்ன...
பதில் வரும் பதிவுகளில்....

நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
மும்பை மாநகரம்...

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தலைநகரம், 12.4 பில்லியன் மக்களை தன் அகத்தே கொண்டு விளங்கும் நகரம், UNESCO வால் அங்கரிக்க பட்ட புராதன சின்னங்களை கொண்ட நகரம்.....

மும்பை - ஆகு பெயர் காக்கும் கடவுளான அம்பா தேவியின் அல்லது மும்பா எனும் பெயரால் அழைக்கபடும் நகரம், ஏழு தீவுகளின் கூட்டு அமைப்பு......

நவி மும்பை....

மணி நள்ளிரவு 12 மணி...

அடர்ந்த இருள், நிலவு அதன் ஒளியினை உலகிற்கு அளித்து வெளிச்சம் பரப்பி கொண்டு இருந்தது, மழை தான் கண் முன்பு ஓர் உயிர் மடிய போவதை எண்ணி ஓயாமல் கண்ணீர் விட்டு கொண்டு இருந்தது...

ஆள் அரவம் அற்ற சாலையில் மின் விளக்குகள் அதன் ஒளியினை உமிழ்ந்து கொண்டு இருந்தது, இருளினை கிழித்து கொண்டு அங்கு ஒரு கார் வேகமாக வந்த கிரிச்சிட்டு நின்றது.... அதில் இருத்து ஒருவனை கீழே தள்ளி நாலு பேர் அவனை அடித்து கொண்டு இருந்தனர், மற்றொருவன் அருகில் உள்ள காரின் மீது தனது கால்களை மடித்து வைத்து அவர்கள் அடிப்பதை நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்....

எதிரில் இருப்பவன் வதைக்கபடுவதை கண்களில் குரோதம் மின்ன வேடிக்கை பார்த்து சிரித்த கொண்டு இருந்தான்..

எதிரில் இருப்பவனின் உயிர் அடக்கிய பின்பும் அவன் வெறி அடக்கியதாக தெரியவில்லை...

அவனின் கை ஆசைப்பில் அனைவரும் விலகி போயினர்... நின்று கொண்டு இருந்தவன் இறந்தவனின் அருகில் சென்று " என் உயிரை என் கிட்ட இருந்து பிரிக்கணும் நினைக்குறவன் நிலைமை எல்லாம் இப்படி தான் முடியும் என்று கூக்குரல் இட்டு" அவ்விடம் விட்டு சென்றான்..

அவன் அகில் வேந்தன்....

தன் பார்வை கொண்டு எதிரில் உள்ளவர்களை எடைபோடும் கழுகு கண்களை உடையவன்,, கத்தி போன்ற முக்கினை உடையவன், பரந்த நெற்றியினையும் அதன் கீழ் கருத்த இரு புருவங்களை கொண்டவன், ஆறு ஆடி ஆணழகன், பெண்கள் மையல் கொள்ளும் அகன்ற தோள்களை உடையவன், எக்கு போன்ற கால்களை உடையான் தேக்கு போன்ற தேகத்தை உடையான்..... அகவை 26, நமது கதையின் நாயகன்

சென்னை....

தமிழ்நாட்டின் தலை நகரம், சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. உலகின் உள்ள நீளமான கடல் கரையை கொண்ட நகரம், 7.45 பில்லியன் மக்களை தன் அகத்தே கொண்டு விளங்கும் நகரம்...


நியூயார்க் டைம்ஸ் இதழின் 2014இல் செல்ல வேண்டிய உலகின் 52 இடங்களின் பட்டியலில் சென்னை 26வது இடத்தைப் பெற்றுள்ளது.

அடையார்...

காலை 6 மணி...

மான் போன்ற மருண்ட விழிகளை கொண்ட விழியால் அவள், அதன் கீழ் இரு கரு நிற வானவில் போன்ற வளைந்த புருவங்களையும், கரும் போர்வை போன்ற கூந்தலை உடைய காரிகை அவள், தலைகீழான ஏழாம் எண்ணினை போன்ற கூர்ந்த முக்கினை கொண்டவள் அவள் பால் போன்ற வண்ணம் கொண்டு, 5.5 அடியில் ரவி வர்மன் தூரிகை கொண்டு வரைந்த ஓவியம் அவள்.... நமது கதையின் நாயகி, அகவை 21

அவள் வேல் விழி....
தன்னை சூழ்ந்து இருக்கும் ஆபத்து யாது என்பதை அறியாது பேதை அவள் தனது இரு விழிகளை மூடி துயில் கொண்டு இருந்தாள்...

அகில் ஒருவனின் உயிர் பறிக்க காரணம் என்ன???...

வேல் விழியின் வாழ்வில் இவனால் ஏற்படும் நிலை என்ன ???...

காலம் இவர்களுக்கு என்ன பதில் வைத்து உள்ளது வரும் பதிவுகளில்.......

நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
விழியின் மொழி 2

சூரியன் தனது ஒளி கதிர்களை அவளின் நேசம் கொண்ட பெண் துணையான நிலவிடம் அளித்து விட்டு கடல் அன்னையின் மடியில் துயில் கொள்ள தனது கோபம் விடுத்து சென்றான்....

நிலவு மகள் தனது குளிர் கதிர்களை பரப்பி அவள் கணவன் விட்ட செயலை செவ்வனே செய்தாள்.....



நவி மும்பை...

மக்கள் கூட்டம் கொலை நடந்த இடத்தை மொய்த்து கொண்டு இருந்தனர்....

பத்திரிக்கையாளர்கள் தங்கள் தொலைகாட்சியின் TRP உயர்ந்துவற்கான தங்கள் பணியினை செய்து கொண்டு இருந்தனர்..

மக்கள் கூட்டம் கொலை எப்படி நடந்தது,, என்ன காரணம், யார் செய்தது, என ஒருவர் ஒருவர்களுக்கு தங்களுக்குள் உரையாடி கொண்டு இருந்தனர்....

போலீஸ் வாகனம் ஒன்று காவலர்களை சுமத்த படி சைரன் அடித்து கொண்டு வந்து நின்றது....

காவல் துறை வழக்கம் போல கொலை நடத்த இடத்தை ஆய்வு செய்து கொலையுண்ட நபர் தொடர்பான தகவல்களை சேகரித்து மற்ற விவரங்களை விசாரணை செய்து கொண்டு இருந்தார்....

கூட்டத்தில் சிறிது நேரத்தில் சலசலப்பு ஏற்பட்டது....

செத்தது வேற யாரும் இல்லை மத்திய மந்திரி செந்தூர் பாண்டியனின் மகன் அஸ்வின்....

கொலைக்கான காரணம் யாருக்கும் இது வரை தெரிய வில்லை..

ஒருவனை தவிர....

செந்தூரபாண்டியன் காவல் துறையினரை பார்த்து "என்ன யா எல்லாரும் பன்றிங்க என் பையனை எவனோ ஒருத்தன் எனக்கு தெரியாம கடத்தி கொன்னுபோட்டு போய் இருக்கான் நீங்க என்ன புடுகின்றிங்க" என் வார்த்தைகளால் அர்ச்சித்து கொண்டு இருந்தார்.....

இரு கண்கள் அங்கு நடப்பதை ருத்திரம் பொங்க திருப்தியுடன் கண்டு அவ்விடம் விட்டு அகன்றது....

மருத்துவர்கள் கூர் ஆய்வு செய்து பிணத்தை அவ்விடம் விட்டு மருத்துவமனை எடுத்து சென்றனர்.....
சென்னை.....

நகரத்தின் மையத்தில் இருந்த அந்த திருமண மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அங்கு இருந்த மேடை பூக்களால் அழகாக வேயப்பட்டு இருந்தது....

அருகில்...

மலரனினும் மெல்லிய சிரிப்புடன், பார்ப்பவர்கள் கண்களை கொள்ளை கொள்ளும் அழகுடன், மருண்ட மான் விழி கொண்ட அஞ்சனையாக, வானத்து தேவதைகள் பொறாமைபடும்படி அழகுடன் நின்று இருந்தாள் நமது நாயகி....

வேதநாயகம்- பூரணி தம்பதியின் ஒரே தவ புதல்வி....

அவளுக்கு இணையான அழகுடன் நின்று இருந்தான் அரணவ்...

நம்ம ஹீரோயினுக்கு இந்த திருமணத்தில் துளி விருப்பம் இல்லை, படிக்கணும் தான் விருப்பம். அல்ரெடி நம்ம மேடம் இளங்கலை library and information science முடிச்சு இருக்காங்க....

சென்ட்ரல் லைப்ரரி லா லைப்ரரியானா வேலை செய்யுறங்க.... மேடம் க்கு முதுகலை படிக்கணும் ஆசை.... ஆன பரேன்ட்ஸ் விட்டதானே

திருமணத்திற்கு வந்த உறவினர்களும் விருந்தினர்களும் தங்களின் பரிசுனை அளித்து மணமக்களை வாழ்த்திவிட்டு சென்றனர்....

மறு பகுதியில் பார்ப்பவர்களின் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில், ஆண்களின் கம்பிரத்திற்கு உதாரணமாக அழகுடன் மிடுக்குடன் உள்ளே வந்தான் நமது நாயகன் வேந்தன்....
கண்களின் கழுகு பார்வையை அனைவரையும் எடை போட்டு கொண்டு இருந்தான், தன்னை சூழ்த்து இருக்கும் ஆபத்தின் விளைவு தெரிந்தும் அங்கு காலடி வைத்தான்.....

மறுநாள் காலை....

மண்டபத்தில் அனைவரும் மணமகளை காணாது தவித்து கொண்டு இருந்தனர், ஆனால் இதை அறியாத பேதை அவள் அவனுடன் தனது எதிர் காலம் யாது என்பதை அறியாது காரில் பயணித்து கொண்டு இருந்தாள்....

அவளின் மூடிய சிற்பி போன்ற கண்களிலும், மருண்ட மான் விழியிலும், முத்து இதழ் விரிப்பிலும், தன்னை தொலைத்து தனது மதியினை அவள் வசம் இழந்து கொண்டு இருந்தான் அந்த ஆறு ஆடி ஆண்மகன்.....

முத்து சிற்பி
மூடியது போன்ற
உனது கரு விழிகளை
காணும் கணம்
காதலில் ...
திளைபேனா....

இல்லை கடமை பெருது
என்று நினைப்பேனா
யான் அறியேன்
என் கண்மணி.......

விதி இவர்களின் வாழ்வில் என்ன வைத்து உள்ளது?

இவர்கள் நிலை என்ன...

அஸ்வின் மரணத்திற்கு காரணம் என்ன? மரணத்தின் பின்னணியில் இருப்பது யார்? என்?

பதில் வரும் பதிவுகளில்......


நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
விழியின் மொழி 3

ஊட்டி.....
மலைகளின் ராணி அவள், கடல் அன்னையின் மடியில் இருந்து 7347 அடி உயர்ந்து நிற்கும் காரிகை அவள்,

கதிரவனின் கதிர்கள் மலைகளின் முகடுகளில்
எதிர் ஒளித்து அழகான விடியலை பூமிக்கு கொண்டு வந்தது....

சல சலவென ஓடும் நீரில் பட்டு எதிர் ஒளிக்கும் சூரிய கதிர்களை கண்ட பறவைகள் மின்னலின் கீற்றோ என்ன அஞ்சி தனது கூட்டினை விட்டு உணவு தேடி மேலே உயர பறந்தது....

பச்சை கம்பளம் விரித்தது போன்று இருந்த நகரின் எல்லையில் வண்ண வண்ண மலர்கள் பூத்து குளுக்கின.... கானகுயில்கள் நமது நாயகியின் வரவை உரைக்கும் விதம் தேவ கானம்இசைத்தன....

இயற்கை அழகு அவனது கண்ணிலும் கருத்திலும் படவில்லை, அவனது இலக்கினை நோக்கி அவனது கார் அதி வேகமாக கட்டேஜ் நோக்கி செலுத்தி கொண்டு இருத்தான்....
வேந்தன்...
சுற்றிலும் மரங்களின் நடுவில் அமைந்து இருந்தது அந்த கட்டிடம்..
காரில் இருந்து இறங்கிய வேந்தன் கண் மூடி துயில் கொள்ளும் தேவதையை தனது கைகளில் ஏந்தி ஒரு அறையில் நுழைந்து மெத்தையில் கிடத்தினான்....

அவளது முகத்தில் விழும் கற்றை கூந்தலை ஒதுக்கி தனது மதியினை இழக்க செய்யும் அவளது மதி முகத்தினை பார்வையால் பருக்கினான்...

அடையாத பொருள்,
போல..
கிடைத்த உன்
நேசத்தை
காப்பேனா....

இல்லை
விதியின்
வழியில்,

உன் விழியில்
பயணித்து...

உன்னை
இழப்பேனா...

பதில் சொல்லடி
என் வேல்விழி...

சிறிது நேரத்தில் தனது சித்தம் தெளிந்து தனது நிலை அறிந்து அவளின் உடைகளை சரி செய்து விட்டு அவள் கண் விழிக்கும் வரை காத்து இருத்தான்.....

வேல் விழிக்கு தான் எங்கு இருக்கிறோம் என்பதை அறிய சிறிது நேரம் பிடித்தது...

நேற்று இரவு தன்னை யாரோ கடத்தியது கனவு போல நினைவு வர கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது...

தன்னை நிதானித்து சுற்றிலும் பார்வையை ஓட விட்டாள்...

தன்னை யாரோ கூர்ந்து நோக்குவது போல தோன்ற தனது தலையினை உயர்த்தி எதிரில் இருப்பவனை பார்வையால் எடையிட்டாள்...

இம்முறை அதிர்வது வேள்விழியின் முறையானது,

6 அடி ஆண்மகன், ஈட்டி போன்ற கண்கள், எதிரில் இருப்பவரின் மனதை எளிதில் படித்துவிடும் கண்கள், தேக்கு போன்ற தேகம் என் அவனை அங்குலம் அங்குலமாக எடை போட்டு கொண்டு இருந்தாள் விழியாள்....
தனது கண் முன்பு நிற்பவன் நேற்று தன்னை கடத்தியவன் என்று நினைவு வர அவளது முகம் குழப்பத்தை தத்து எடுத்தது....

"யார் நீ, எதுக்காக என்னை கடத்தின என கேட்டாள்.

எதிரில் இருப்பவன் அவளது கேள்விக்கு பதில் கூறாது கண்ணால் அவளை ஆராய்ந்து பின்பு பதில் உரைத்தான்..

"நான் யார இருந்த உனக்கு என்ன, இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னோட புருசன் ஆக போறவன்".,

"இன்னும் ஒரு மணி நேரத்துல நமக்கு கல்யாணம் ரெடியா இரு" என்று கூறிசென்றான்...

" கல்யாணம் பண்ண மாட்டேனு வீம்பு புடிச்சினா உன்னோட அப்பா, அம்மா , நீ யாரும் உயிரோட இருக்க மாட்டீங்க யோசிச்சி முடிவு பண்ணு"

"முடியாது சொல்றதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாரு" என்று அவங்க அப்பா , அம்மா கடத்தி வச்சி இருக்க வீடியோவை ஓட விட்டான், நல்லா யோசிச்சி சொல்லு நான் வரேன் என்று கூறி சென்றான்.

தன்னை சுற்றி நடக்கும் சூழ்ச்சி யாதும் அறியாது பேதை அவள் ஆற்றுவர் தேற்றுபவர் யாரும் இன்று கண்ணீர் கரைந்தாள்.
மண மேடையில் ஆண்களின் கம்பிரத்துக்கு இலக்கணமாய் அமர்ந்து இருத்தான் வேந்தன்...

இரண்டு பெண்கள் அழைத்து வர மருண்ட விழிகளுடன் மணவரை நோக்கி சென்றாள் வேல்விழி

முகம் நிமிர்த்தி அவன் கண்களில் என்ன கண்டலோ தலை குனிந்து அவன் இட்ட மலையினை மணமகளாய் ஏற்றால்...

ஒரே நாளில் தனது வாழ்க்கை தடம் மாறி விட்டது அப்பா, அம்மா, காப்பதனும் னா இதை செஞ்சி தன் ஆகணும் என்று மனதை திட படுத்திக்கொண்டு தன்னை கவர்ந்தவனின் (கடத்தியவனின்) கழுத்தில் மாலை இட்டாள் மங்கை அவள்,
கெட்டி மேளம் ஒலிக்க...
முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியாக, கதிரவன், நிலவு, வானம், பூமி மற்றும் காற்று இவற்றின் முன்னிலையில் அவளை மங்கள நாண் பூட்டி தன்னில் சரி பாதியாக மாற்றி கொண்டான் அகில் வேந்தன்....

அங்கு நடப்பதை இரு ஜோடி விழிகள் கோவத்துடம் பார்த்து கொண்டு இருந்தது....
வேந்தனின் இந்த முடிவுக்கு காரணம் என்ன...
வேல் விழியின் வாழ்வில் வேந்தன் ஏற்படுத்த போகும் சூறாவளி என்ன...
அந்த இரு ஜோடி விழிகள் யாருக்கு சொந்தம் ஆனது...
பதில் வரும் பதிவுகளில்.....

நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
நவி மும்பை,

உயர்த்த கட்டிடங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு நின்றது.....
அரணவ் கான்ஸ்டருக்ஷன் கம்பெனி, அரணவ் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தான், கண்களில் கோவம் மின்னியது, அதே நேரத்தில் உள்ளே நுழைத்தார் மத்திய மந்திரி செந்தூர பாண்டியன்,

"எப்படி இப்படி நடந்து டாடி அவ்வளவு perfect ஆஹ் பிளான் பண்ணி அவள marriage பண்ண try பனேன், " everything is waste, என்னோட கண்ணு முன்னாடி அவளை காப்பத்தி தாலியும் கட்டிடான் அந்த அகில்", என்று பொரிந்து கொண்டு இருந்தான்.

"லுக் மை சன்அவனை இப்ப அடிக்க முடியாது , வெய்ட் பண்ணி தான் ஆடிக்கணும், நேரம் வர வரைக்கும் பொறுமையா இரு மை சன், நான் ஒரு மீட்டிங் விஷயமா டெல்லிக்கு வரைக்கும் போறேன் சோ be careful, எது பன்றதா இருந்தாலும் என்ன கேக்கமா பண்ணாதே"... என்று கூறி அவரிடம் விட்டு சென்றார்..

"டேய் , அகில் உன்னை சும்மா விடமாட்டேன், என்னயும் என்னோட தம்பி சாவுக்கு காரணமான உன்னை, அணு அணுவை சித்திரவதை பணி ஏன்டா இந்த உலகத்துல வாழுறோம்னு நீ ஒரு ஒரு நாளும் அழர மாதிரி பண்ணலை என் பேரு அரணவ் இல்லை" என்று சுளுரைத்தான்.

"உன்னை கஷ்டப்படுறதுக்கு னா ஆயுதத்தை நீயே என்னோடு கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டா, அவளை காப்பாத்த தானே இது எல்லாம் பண்ண அனா அளவும் வெஸ்ட், உன்னோட கண்ணு முன்னாடியே அவளை கொல்லறேன், அவ செத்து போறதா பார்த்து நீ கண்ணீர் வடிக்ககணும், என்னோட தம்பி செத்த அப்போ நான் எப்படி அழுதேன் அதே மாதிரி நீ அழனும், அதுக்கு அப்புறம் உன்னை கொல்லறேன் என்று கத்தினான்".

அவனுக்கு தெரியவில்லை அவள் அவனை அழிக்கும் ஆயுதம் இல்லை, அவனை காக்கும் ஆயுதம் என்று, அன்றே அறிந்து இருந்தால் அவன் உயிர் தப்பி இருக்கும், ஆனால் விதி வலியது, அவனது மரணம் அவளால் என்றோ எழுதபட்டுவிட்டது.

அவனுக்கு தெரியவில்லை, அகில் இடம் மோதுவது அவனுக்கு அவனே அடித்து கொள்ளும் சாவு மணி என்று, மரணத்திற்கு அழைப்பு விடுக்கும் செயல் என்று.

அரணவ் அடி பட்ட வேங்கை என்ன இரையை வேட்டை அட தயார் ஆனான்.

அகில் வேந்தன், யாழ்வேந்தன் - சக்தி தம்பதியின் தவ புதல்வன், அவனது பெற்றோரை ஒரு விபத்தில் 21 வயதில் பறி கொடுத்துவிட்டான், அதற்கான காரணம் யார் என்பதை அகில் நன்கு அறிவான், அவர்களை வெற்றி அடைவதற்கான பரம பத விளையாட்டு அவன் என்றோ தொடங்கிவிட்டான். பாவம் ஆட்டத்தின் காய்கள் இதனை இன்னும் அறியவில்லை.

அகில் வேந்தன், வேந்தன் க்ரூப் ஆப் கம்பெனி, M.D, அவன் கால் பத்திகாத துறையே இல்லை எனலாம். Export and important, foods products, leather business, construction company, என்ன எல்லா துறைகளும் கொடி கட்டிபறந்தான்

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவன், கண் அசைவில் கட்டி வைக்க தெரிந்தவன், தன்னை வெற்றி கொள்ள நினை பவர்களை அவர்களுக்கு முன்பு வெற்றிகொள் பவன், மொத்தத்தில் பிசினஸ் ஜாம்பவான், 26 வயதில் தனக்கு என தனி இடத்தை பிடித்தவன்.

ஆனால் அவனின் மற்றொரு முகம் யாரும் அறியாதது, அவனுக்கு மட்டுமே தெரிந்தது. அறிந்தால் உயிர் உறைய செய்ய கூடியது.

ஊட்டி...

திருமணம் முடித்த கையோடு அகில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருத்தான். கருப்பு நிற சேர்வனியில் தனது மனதினை கொள்ளை கொண்ட அவனின் விழியலுக்காக காத்து கொண்டு இருந்தான்.

மதி மயக்கும் அழகுடன், அழகு தேவதை என உள்ளே நுழைத்தாள் வேல் விழி,

வேந்தனின் மனம் பின்னோக்கி சென்றது...

அவனின் மனம் கவர்த்தவளை கண்ட நாள் கண் முன்பு நிழல் ஆடியது....

ஜூலை 7,
கரும்மேகம் திரண்டு மழையின் பூமிக்கு கொண்டு வர தயாராய் இருந்தது, மழை மண்ணுடன் இணையும் நேரம், வேந்தன் அவளின் விழியாளை கண்டான்.
மழையில் நின்று கொண்டு தனது தோழிகளுடன் பேசி கொண்டு இருந்தாள். அவளின் மோகன புன்னகையில் வேந்தன் தன்னை இழந்தான்.
நான் உன்னுள்
என்னை தொலைத்து
உனது காதலை
வரமாக பெற்றேன்....
உன்னை கண்டு
என்னை மறந்தேன்...
உன் கண்களில்
எனது பிம்பம்
கண்டு
காதல் கொண்டேன்
கண்மணி....

நம் உலகம்....
அதில்
நீயும் நானும்
நமக்காக உதிக்கும்
சூரியன் .....

நமக்காக
மட்டுமே
காயும்
நிலவு....

நிகழ் உலகம்
மறந்து காதல்
செய்வோம் வா
பெண்ணே...

முதல் நாள் காலேஜ் செல்வதற்கு நேரம் ஆகி விட்டதால் வேகமா சென்று கொண்டு இருந்தாள் வேல் விழி. அங்க தன் நம்ம ஹீரோ மேடம் பார்த்தது....

அவளின் வருகை வேந்தனை நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தது, அவளின் கை கோர்க்க துடித்த கரங்களை அடக்கி புன்னகையுடன் அவளை வரவேற்றான்.

வரவேற்பு நிகழ்ச்சி நடந்துக்கொண்டு இருக்கும் பொழுது எங்கோ இருத்து அதி வேகமாக வந்த துப்பாக்கி குண்டு வேல் விழியின் நெஞ்சை துளைத்தது.....
விழிகள் பேசும் ......

நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
விழியின் மொழி 5
திருமணம் முடித்த கையோடு வேந்தன் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தான். வேல்விழி மேடை நோக்கி வரும் பொழுது எங்கோ இருத்து அதி வேகமாக துப்பாக்கி குண்டு ஒன்று வேந்தனை நோக்கி வந்தது, வேந்தன் அதனை உணர்வதற்கு முன்பு வேல் விழியின் குண்டினை மார்பில் தாங்கி கொண்டாள்....

இதனை கண்ட இரு விழிகள் திருப்தியுடன் , இகழ்ச்சி புன்னகை மின்ன அங்கு இருந்து சென்றது.

வேர் அருந்த மரம் போல, பிடுங்கி எறிய பட்ட கொடி போல மண்ணில் விழுவதற்கு முன்பு வேந்தன் அவளை தனது நெஞ்சோடு தாங்கி கைகளில் ஏந்தினான்....

தன் கண்முன்பு நடப்பது எதுவும் அறியாத வேல்விழி மயக்கம் உற்றாள்.

வேந்தன் தனது மனம் கவர்ந்தவள்
மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அடுத்து செய்வது யாது என்பதை அறியாது விழி பிதுக்கி நின்றான். அருகில் உள்ளவர்கள் வேந்தனுடன், வேல் விழியை மருத்துவமனை நோக்கி அழைத்து சென்றனர்.



வேந்தன் நடைபிணம் போன்று அவளுடன் சென்றான், அவள் கைகளை வேந்தன் கைகளில் இருந்து பிரிப்பது சிரமமாக இருந்தது, அவன் பிடி இரும்பு பிடி போன்று இருந்தது எங்கே அவளை பிரிந்தால் தன் உயிர் நீங்கி விடும் என நினைத்தானோ என்னவோ அவன் அவளை விட்டு நீங்கவே இல்லை.

மருத்துவர்கள் அவளை வலுக்கட்டாயமாக பிரித்து ICU விற்கு எடுத்து சென்றனர். உள்ளே அவளை பிழைக்க வைக்க பெரும் போராட்டமே நடந்து கொண்டு இருந்தது. ஆப்ரேஷன் செய்து அவள் நெஞ்சில் இருந்த குண்டை வெளியில் எடுத்தனர்.

வெளியில் அவள் நிலை தெரியாது வேந்தன் கண்ணீரில் கரைத்தான். தனது 5 வருட காதல் இப்படி கை சேர்ந்த வேளையில் 5 நிமிடத்திலே பிரியும் என அவன் நினைக்கவில்லை.

உன்னை கண்ட

நொடியில்

காலம் கடந்து

கவலை மறந்து

ஏழு ஜென்மம்

உன்னுடன் வாழ

ஆவல் கொண்டேனடி .....

மாலையிட்டு

ஐந்து நொடியில்

என்னை பிரித்தது

ஏனடி

என் காதல்

கண்மணி.....

கடவுள் ...

என் இன் உயிர்

எடுத்து

உன் உயிர்

அளித்தால்

மகிழ்வேனடி.....

வேல்" உன்னை அவன்கிட்ட இருந்து காப்பதனும் தானே உன்ன மிரட்டி கல்யாணம் பண்னேன், இப்படி உனக்கு நானே எமனா மாருவேனு தெரியாது டி, இதுக்காகவா 5 வருஷம் உன்னோட பின்னாடி அலைச்சேன், நான் யாருன்னு உனக்கு தெரியரத்துக்கு முன்னாடியே இப்படி ஆகிடுச்சே டி, உன்னோட உயிருக்கு ஆபத்து, உன்ன பாதுகாத்து என் கூடவே வச்சிகனும் நிர்ப்பந்தத்துல தானே உன்ன மிரட்டி கல்யாணம் பண்னேன்,

"உங்க அப்பா அம்மா கிட்ட உண்மையை சொல்லி உன்னை பாதுகாக்க, அவங்களகளையும் நான் கடத்துற மாதிரி நடிக்க சொன்னேன், அவங்களும் உனக்காக எல்லாம் பண்ணங்க, இப்படி எல்லாம் பண்ணியும் என்னோட உயிரை காப்பதனுமனு உன்னோட உயிரை பணயம் வச்சிட்டீயே ஏண்டி இப்படி பண்ண என மறுக்கினான் வேந்தன்.

வேதநாயகம் மற்றும் பூரணிக்கு தகவல் சொல்லப்பட்டு அவர்கள் மருத்துவமனை விரைந்தனர்.

இது எதுவும் அறியாத வேல்விழி உள்ளே உயிருக்கு போராடி கொண்டு இருத்தாள், வெளியில் வேந்தன் கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது.

வேல்" உன்னை இந்த நிலைமைக்கு ஆளுகினவனை சும்மா விடமாட்டேன் டி, ஏற்கனவே உன்னை கொலை பண்ண பார்த்த அஸ்வினை கொன்றேன், அரணவ் உன்னை கல்யாணம் பண்ண பார்த்தான் அவன் கிட்ட இருந்து உன்னை சேவ் பண்ணி கல்யாணம் பண்ணனேன்" என்று நினைத்தான்.

சிறிது நேரத்தில் வெளியில் வந்த மருத்துவர்கள் அவள் பிழைத்து விட்டதாக வேந்தன் மற்றும் வேல்விழி குடும்பத்திடம் கூறினார்.

வேந்தன் புயல் என உள்ளே நுழைத்தான், கட்டிலில் பிடிங்கி எறியப்பட்ட குருக்கத்திய கொடி பெண் அவள் கிடந்தாள்,




வேந்தனின் கண்களில் நேற்று அவளை கண்ட காட்சி நினைவுக்கு வந்தது, வரவேற்பில் அன்றுஅலர்ந்த மலர் போல இருந்தவள், இன்று வாடிய மலர் போல காட்சி அளிக்கிறாள் என வேதனை உற்றான்.

தனது காவலர்களை அழைத்து இதனை செய்தது யார் என்று கண்டு அரிய சொன்னான்.அவர்களின் கூற்று படி விசாரித்ததில் இதனை அரணவ் மற்றும் செந்தூர பாண்டியன் செய்ய வில்லை. இதனை செய்தது தனது எதிரிகளில் யாராக இருக்கும், என அவனுக்கு யோசனை ஓடியது.

ஆனால் அவனின் யோசனைக்கு அப்பால் ஒருவன் அவனின் பலத்திற்கு சமமான பலத்துடன் அவனை எதிர்க்க தயராகிகொண்டு இருத்தான், என்பதை வேந்தன் அறியவில்லை.

ICU உள்ளே சென்ற வேந்தன் வேள்விழியின் அருகில் அமர்ந்து அவள் கைகளை பிடித்து கொண்டு"வேல் உன்னை இந்த நிலைமைக்கு ஆளு அகினவனை நான் சும்மா விடமாட்டேன், நான் இப்போ துடிக்கிறதா விட அவனை அதிகமா துடிக்க வைப்பேன்" என்று சுளுரைத்தான். ஆனால் அவனுக்கு தெரிய வில்லை அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்று.

அதே நேரத்தில்.....

கோயம்பத்தூர் விமான நிலையத்தில் தனது மும்பை செல்லும் விமானத்திற்காக காத்து இருத்தான் ஒருவன்......
6 ஆடியில், ஆண்களின் கம்பிரத்துடன், எதிரில் உள்ள நபர்களை எளிதில் இனம் கண்டு விடும் கண்களுடன் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டு இருத்தான்....

அவன் அபிணவ்,

இவன் வேந்தன்- வேல்விழி வாழ்வில் ஏற்படுத்த போகும் பூகம்பம் என்ன....

வேல்விழி வேந்தனின் காதலை புரிந்து கொள்வாளா இல்லை பிரிந்து செல்வாளா....

வேள்விழியின் உயிருக்கு யாரால் எதனால் ஆபத்து?

நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
விழியின் மொழி 6

நவி மும்பை....

மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த அபிணவ் நேராக சென்ற இடம்
அரணவ் கான்ஸ்டருக்ஷன் கம்பெனி.

கம்பெனியின் உள்ளே சென்றவன் அரணவ் வை கட்டிபுடித்து "ஹாய் தம்பி எப்படி இருக்க, பிசினஸ் எல்லாம் எப்படி போகுது, அப்பா எங்க போய் இருக்காரு" என விசாரித்தான் அபிணவ்.

அரணவ் அவனை திரும்ப அணைத்து அவன் நலம் குறித்து கேட்டு அறிந்தான். அபிணவ் மற்றும் அரணவ் இரட்டை பிறவிகள், அஸ்வின் பிறந்தவுடன் அவன் தாய் இறந்து விட செந்தூர பாண்டியன், மூன்று குழந்தைகளை வளர்க்க இயலாது அபிணவ்வை தனது தங்கையான கோமதி- சங்கர் தம்பதிக்கு தத்து அளித்து விட்டார்.

அபிணவ் 25 வயது வரை அமெரிக்காவில் தனது கல்வியை பயின்று இப்பொழுது தனது தந்தை தேடி வந்துடவிட்டான்.

தாயகம் திரும்பியவுடன் அபிணவ் செய்த முதல் செயல் வேந்தனை கொல்ல திட்டம் தீட்டியது தான். ஆனால் அந்த திட்டதை செயல் படுத்த போகும் வேலையில் வேல்விழி அதனை தடுத்துவிட்டால்.

அபிணவ் கோயம்புதுரில் இருந்து வேந்தனின் திருமண வரவேற்பு நடக்கும் இடத்திற்கு சென்றான். அங்கு வேந்தனின் முகத்தில் சிரிப்பை கண்டவனின் கோபம் தலைக்கு ஏறியது. ஆனால் அதே நேரத்தில் அவன் கண்களில் அழகே உருவான வேள்விழியியை கண்டான். அவளிடம் தனது சுயத்தை இழந்தான், அவள் வேறு ஒருவனுக்கு சொந்தம் என தெரிந்தும் அவள் மீது மையல் கொண்டு ராவணன் செய்த அதே தவறை புரித்தான் அபிணவ்.

ராவணனுக்கு ஏற்பட்ட அதே நிலை தனக்கு ஏற்படும் என்பதை அவன் அறிய மறந்தான் போலும், விதி வேல்விழி வடிவில் அவன் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தது.

வேல்விழி மீது மையல் கொண்டது மற்றும் இன்றி வேந்தனை கொன்று அவளை அடைய அவாகொண்டான் அபிணவ். வேந்தனை கொலை செய்யும் முயற்சியில் வேல்விழி குறுக்கே வந்து அபிணவ் வேந்தனின் மீது எய்த குண்டை தனது நெஞ்சில் தங்கினாள் பேதை அவள்.

இதனை கண்ட அபிணவ் கோபத்துடன் அங்கு இருந்து சென்றான்.

அபிணவ், அரணவ் விடம் பிசினஸ் குறித்து விசாரித்தான். பின்பு "ஆமாம் அரணவ் அஸ்வின் எங்க ஆளே காணும் இரண்டு நாள் ஆஹ் போன் பண்ணாலும் எடுக்களை, spkye வரலை, டெய்லி என்கிட்ட பேசாம அவனால் இருக்க முடியாது" என்று கேட்டான்.

அரணவ் மிக மெதுவாக அஸ்வின் இறந்த விசயத்தை கலங்கிய கண்களுடன் அபிணவ் இடம் தெரிவித்தான், அது மட்டும் அன்றி அதற்கு காரணம் வேந்தன் என்பதையும் கூறினான்.

மேலும் "நான் கல்யாணம் பண்ண இருந்த பொண்ணை கடத்தி , அவன் கல்யாணம் பண்ணிகிட்டான் அண்ணா, நம்ம பிசினஸ் எல்லாத்தையும் ஏதோ ஒரு விதத்தில் தடய ஏற்படுத்த பிசினஸ் ல லாஸ் கொண்டு வந்துட்டான் என கூறினான்.

அபிணவ் கண்கள் கலங்கின, தனது உடன் பிறத்தவனின் மரணத்திற்கு காரணம் ஆனவன் இன்னும் உயிருடன் இவ் உலகில் நடமாடி கொண்டு இருக்கிறான், அவனை தன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை, என்று தன் மீதே கோபம் கொண்டான்.

தனது ஆருயிர் தம்பி இறந்த துக்கம் ஒருபுறம், தொழில் ஏற்பட்ட நஷ்டம் ஒரு புறம், அவனை பழி வாங்க என்ன செய்யலாம், என் தனது அடுத்த வியூகத்தை குறித்து யோசிக்க தொடக்கினான்.

அபிணவ் அர்ணாவிடம் அவன் இப்படி பண்ணுவானு எனக்கு தெரியாது, அவனால பிசினஸ் ல problem தான் அப்பா சொன்னாரு, அனா அஸ்வினை அவன் தான் கொலை பண்ணன்னு எனக்கு தெரியாது",

"அவனை கொல்ல தன் நான் கோவை போனேன் அனா நான் அவனை சுட்ட குண்டு அவன் நெஞ்சை துளைகரத்துக்கு முன்னாடி ஏதோ ஒரு பொண்ணு குறுகுல வந்துட்டா, யாரு அது தெரியலை, ஆன அந்த பொண்ணு உயிரோட இருக்கறது கஷ்டம் தான்" என கூறினான்.

" அவ வேற யாரும் இல்லை அண்ணா, நான் கல்யாணம் பண்ண இருந்த பொண்ணு தான் அவ, அவளை என்கிட்ட இருத்து காப்பதறதுகு தான் அவன் அவளை கடத்தி கல்யாணம் பண்னான், இப்போ அவள் எதுக்காக அவனை
காப்பதனும் என இருவரும் யோசித்தனர்.

"விடு அரணவ் நான் வந்துட்டேன் ல இனிமேல் அவனுக்கு நான் தான் எமன், நீ கவலை படாத அவனுக்கு கூடிய சீக்கிரம் முடிவு காட்றேன், இப்போ வா வீட்டுக்கு போகலாம் என இருவரும் கிளம்பினர்.

பாவம் அவனுக்கு தெரியவில்லை அது அவ்வளவு எளிது இல்லையென்று, வேந்தனின் மற்றொரு முகம் அறிந்தால் அவனுக்கு உயிர் நடுக்கம் பிறக்கும் என்று, அவன் உயிருக்காக வேந்தனிடம் உயிர் பிச்சை கேட்க்கும் நிலை வரும் என்று அவன் அறிந்து இருக்க வில்லை போலும்.

அதே நேரத்தில்....

அங்கே பாண்டியன் தனது மக்கள் செல்வத்தின் சொத்து மதிப்பை உயர்த்த ஒன்றும் அறியாத நாடு மக்களின் உயிருக்கு உலை வைக்கும் செயலை எந்த வித குற்ற உணர்வு இன்றி செய்து கொண்டு இருந்தார்.

ஊட்டி....

ஆறு மணி நேர போராட்டத்துக்கு பிறகு வேல்விழி தனது கயல் விழிகளை திறந்தாள்.



வேதமாணிக்கம் மற்றும் பூரணி சென்று அவளை கண்டு வந்தனர்.

பிறகு வேந்தன் வேள்விழியிணை காண தயங்கி உள்ளே சென்றான்,
அங்கே பிடிங்கி எறியபட்ட தாமரை போல நெஞ்சில் கட்டுடன் அவள் காட்சி அளித்தாள்.

தனது கயல் விழிகளை மூடி படுத்து கிடந்தாள், அவளின் இந்த நிலைக்கு காரணம் நான் தான் என வேந்தனுக்கு அவன் மீதே கோவம் பிறந்தது.

மிக மெதுவாக அவளிடம் சென்று அவள் அருகில் அமர்ந்தவாறு அவள் கைகளுடன் தனது கைகளை பிணைத்து கொண்டான் வேந்தன்.

நெடு நாட்கள் கழித்து கையில் கிடைத்த வரம் போல, அன்னை கண்ட சேய் போல, கூடு சேர்ந்த பறவை போல அவன் நெஞ்சில் ஒரு அமைதி உணர்வு குடி கொண்டது.

அவள் நெற்றியில் தனது முதல் ஆதாரத்தை பதித்தான் வேந்தன்.

நினைவு இல்லை

என்பாயா

இல்லை

நிஜம்

இல்லை

என்பாயா

என் அன்பே.....

வழி போக்கன்

என்பாயா

இல்லை

வழி துணை

என்பாயா

என் அன்பே....

ஒரு விரல்

பிடித்து

உன்னை

சேரும்

நொடிக்காக

வழி மேல்

விழி வைத்து

நான்

ஏங்கி கொண்டு

இருக்கிறேன்

விழிகள் பேசும்.....


நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
விழியின் மொழி 7

வேந்தன் வேல்விழி இருந்த அரையுனுள் நுழைய அவள் கண்முடி படுத்து கிடந்தாள், உள்ளே சென்ற வேந்தன் அவளை தனது இரு விழிகளில் நிரப்பி கொண்டான்.

பின்பு, அவள் அருகில் சென்று அவள் கைகள் உடன் தனது கைகளை பிணைத்து கொண்டான், அவள் அமைதியாக உறங்கி கொண்டு இருக்க அவள் நெற்றில் தனது முதல் ஆதாரத்தை பதித்தான்.

அவள் அருகில் அமர்ந்து அவள் நெற்றியுடன் தனது நெற்றியை வைத்து கண்முடி அவள் அருகாமையை ரசித்தான். இப்படியே உலகம் உறைந்து விடாத என அவளும் அவனும் இருக்கும் கனவு உலகிற்கு சென்றான், இந்த நிலை எவ்வளவு நேரம் நீடித்தது என்று அவனுக்கும் தெரியாது அவளுக்கும் தெரியாது,

அவனின் கனவை களைப்பதை போன்று அவன் கனவு தேவதையிடம் அசைவு தெரிய, அவன் அவளை விருப்பமே இல்லாமல் விலகி நின்றான், சிறிது நேரத்தில் வேல்விழி, மயக்க மருந்தின் வீரியம் குறைந்து கண்களை திறந்தாள்.

அவளின் மூடிய கருமணிகளின் அசைவில் தன்னை விரும்பி தொலைத்தான் வேந்தன். இவன் காதலில் இப்படி உருகி கொண்டு இருக்க அவன் மனையாள் அவன் காதலை குலைக்கும் பொருட்டு அவன் தலையில் பெரும் இடியை இறக்கினாள்.

கண்களை திறந்த வேல்விழி தான் எங்கு இருக்கிறோம் என்பதை அறிய சிறிது அவகாசம் தேவைப்பட்டது.

தனக்கும் அரணவ் உடனான திருமண ஏற்பாடு
பின்பு வேந்தன் தன்னை கடத்தியது, வேந்தன் தன்னை மிரட்டியது, தனக்கு வேந்தன் உடன் திருமணம் நடந்தது, திருமண வரவேற்பில் வேந்தனை நோக்கி வந்த குண்டை தன் நெஞ்சில் தங்கியது, என அவள் நினைவு அடுக்கில் இருந்த நிகழ்வுகள் வரிசையாக தோன்றின.

சற்று தெளிந்த வேல்விழி எதிரில் நின்ற நபர் யார் என்று நிமிர்த்து பார்த்தாள், எதிரில் நிற்பது வேந்தன் என்பதை அறிந்தவள் தனது கோப விழிகளை கொண்டு அவனை வெறித்தாள்.

6 அடி ஆண்மகன், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவன், தனது பார்வையில் அனைவரையும் கட்டி வைக்க தெரிந்தவன், அவளின் கனல் பார்வையில் இரண்டு அடி பின்னோக்கி சென்றான்.

அவள் கண்களில் இருந்தது, கோவமா, இல்லை தனது மீது இருக்கும் வெறுப்பா இல்லை, என் இவ்வாறு செய்தாய் என கேள்வியா என அவளது பார்வையை பகுத்து அறிய தெரியாது அவளை வேதனையுடன் நோக்கினான் வேந்தன்.

" எதுக்காக என்ன காப்பாத்தின, உன்கூட வாழ பிடிக்காம தானே சாகலாம்னு உன் மேல விழ இருந்த குண்டை நான் தங்கினேன், அப்புறம் எதுக்காக என்னை காப்பாதினிங்க, உங்க கூட வாழ்றத்துக்கு நான் செத்து போறதே மேல் தானே இது எல்லாம் பண்னேன், என வார்த்தைகளால் அவனை காயப்படுத்தினால் வேல்விழி.

"மனதினில் நீங்க நல்லா இருக்கணும், என்னால உங்க கூட வாழ முடியாது, என்னால என்னோட முதல் காதலையும் மறக்க முடியாது, அப்பிடி நான் உங்க கூட வாழனும் ன ஒரு நடை பிணமாக தான் வாழனும், அதனால நான் உங்களை விட்டு விலகறது தான் நல்லது" என மறுக்கினான் வேல்விழி.

ஆனால் அவள் அறியவில்லை வேந்தன் தான் அவளின் முதலும் முடிவும் ஆனவன் என்று.

அவளது நினைவுகள் பின்னோக்கி சென்றது, தனது காதலை அவள் உணர்ந்த தருணம், தான் காதல் கொண்டவனிடம் கூட உரைக்காது, தனது காதலை பெற்றோரிடம் உரைத்து திருமணம் செய்ய வேண்டும் என நினைத்த வேளையில் தான் அவளுக்கு அரணவ்வுடன் திருமணம் என அவளது பெற்றோர் முடிவு செய்து இருந்தனர்.

தனது பெற்றோருக்காக தனது மனதில் முளைத்த காதலை தனது மனதிலே புதைத்து மணமேடை ஏறினாள், அதுவும் நிகழாது வேந்தன் அவள் கடத்தி மிரட்டியதும் பெற்றோரை காக்க அவனுக்கு மாலையிட்டால் மங்கை அவள்,

தனது பெற்றோரின் விருப்பமும் நிறைவேறாது, தனது காதலும் நிறைவேறாது, வேந்தன் உடனான அவளது திருமணம் அவளுக்கு கசந்தது.

அதே நேரத்தில் வேந்தன் சொல்லவென துயர் அடைந்தான், தனது மனதை காதல் கொண்ட நங்கையிடம் உரைக்க வேண்டும் என்று அவள் அருகில் சென்றவன், அவளின் சுடு சொல்களால் மனதில் வெறுமை தோன்ற அவள் நினைவுடன் வானத்தில் உள்ள நிலவிடம் மவுனமாக மறுக்கினான்.

அவளின் இந்த வெறுப்புக்கு காரணம் அறிய மறந்தது அவனின் காதல் கொண்ட மனது.

வேல்" உன் கிட்ட என்னோட காதலை சொல்லணும் எவ்வளவு ஆசையா வந்தேன் எதுக்காக இப்படி பண்ண, உன்னோட வார்த்தைகளால என்னோட காதலை இப்படி சாகடிச்சிட்டியே என் டி, உன்னை காப்பதனும் தானே அவசர பட்டு கல்யாணம் பண்ணேன் தவிர, உன்னை அடையரத்துக்கு எத்தனை வருஷம் ஆனாலும், எத்தனை யூகம் ஆனாலும் கண்டிப்பா நான் காத்து இருப்பேன் டி" என நினைத்தான்.

அதே நேரத்தில் அமைச்சர் செந்தூர பாண்டியன் சென்னையில் உள்ள அந்த கட்டிடத்தின் முன்பு தனது காரை நிறுத்தி இறங்கினர். தனது காரியதரிசிடம் வெளியில் நிற்க சொல்லி கட்டிடத்தின் மேல் பகுதிக்கு சென்றார்.

தனது எதிரில் உள்ள அறையில் நுழைந்து எதிரில் நாற்காலியில் இருந்த நபருடன் பவியாமாக நின்று, " அய்யாஅந்த பொண்ணை என்னால புடிக்க முடியலை, இப்போ அவ சாகுற நிலைமையில் இருக்கா, அது மட்டும் இல்லாம அந்த வேந்தன் அவளை நிழல் மாதிரி கூடவே இருக்கான்" என தெரிவித்தார்.
ஒரு வேலை சொன்ன உங்களா ஒழுங்கா செய்ய முடியாத அவளை கடத்த தானே சொன்னேன், இத செய்ய உங்களுக்கு இவ்வளவு நாள் ஆகுத" என கேட்டான் எதிரில் இருத்தவன்.

மேலும், எதிரில் இருந்தவன் "அவ கண்டிப்பா நமக்கு வேணும் அவ இல்லாம நம்மால அந்த ப்ரொஜெக்ட் ஹண்டில் பண்ண முடியாது, அவ தான் நம்ம ப்ரொஜெக்ட் ஓட பாஸ்வர்ட், சோ அவ எனக்கு கண்டிப்பா வேணும், at any cost i need her" என் அருகில் இருந்த பாண்டியனை பார்த்த கூச்சலிட்டான்.

"நீங்க என்ன பண்ணுவிகன்னு எனக்கு தெரியாது அவ எனக்கு இன்னும் 1 month ல வேணும், அப்போ தான் நம்மால அந்த atomic fusion ப்ரொஜெக்ட் ஆஹ் ரன் பண்ண முடியும், சோ அந்த வேந்தனை கொன்னுட்டு அவளை தூக்கிட்டு வாங்க" என்று உரைத்து அவர் செல்லாம் என்பதற்கு அறிகுறியாக கை அசைத்தான், புதியவன்.

சரிங்க அய்யா, என்று கூறிவிட்டு விட்டால் போதும் என்று பாண்டியன் வெளியில் சென்றார் என்பதை விட ஓடினர் என்பது மிக பொருத்தும்.

வேல்விழினை எவ்வாறு காப்பது என வேந்தன் யோசித்து கொண்டு இருக்க......

பாண்டியன், அபிணவ் அரணவ், எவ்வாறு வேள்விழியினை கடத்தி கொண்டு வருவது யோசித்து கொண்டு இருத்தனர்....

விதி இவர்களுக்கு இடையே தனது சதுரங்க விளையாட்டை தொடக்கியது....

இது அறியாத பெண்ணவள் தனது காதலை எண்ணி கண்ணீரில் கரைந்தாள்........

திக்கு தெரியா
காட்டில்
கிடைத்த
சிறு விண் மீன்
வெளிச்சம்
போல

என்னவனின்
நினைவுகள்
உடன் வாழ்கிறேன்
நான்......

விழிகள் பேசும்.....


நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
விழியின் மொழி 8

இரண்டு வாரங்களுக்கு பிறகு.....

இன்றோடு அவள் மருத்துவமனையில் இருத்து டிஸ்சாட்ஜ் ஆகி வந்து இரண்டு வாரங்கள் முடிந்து இருந்தது.

அன்று மருத்துவமனையில் அவனை பார்த்தது, வெள்ளை நிற சர்டில் அழகாக தான் இருத்தான், அவனை விழி எடுக்காமல் பார்த்து தனது நினைவு அடுக்கில் நிரப்பி கொண்டாள்,

மருத்துவமனையில் இருத்து வந்தவன் வேள்விழியின் பெற்றோரிடம் தன்னை பற்றி எந்த உண்மையும் சொல்லவேண்டாம் என கேட்டு கொண்டான், நேரம் வரும் பொழுது தானே உண்மையை உரைப்பதாக கூறிவிட்டான்.

அவளை மருத்துவமனையில் இருத்து அழைத்து வந்தவன், தனி விமானம் மூலம் இருவரும், மும்பையில் கடற்கரைக்கு அருகில் உள்ள அவனது அடுக்கு மாடி குடியிருப்பு சென்றனர்,

உள்ளே செல்லும் வேளையில் " அங்கேயே நில்லுங்கள் எங்க உள்ள வரிங்க புதுசா கல்யாணம் ஆனவங்க ஆர்த்தி எடுக்கமா உள்ளே போக கூடாது " என ஆர்த்தி எடுத்தார், அதை வீட்டின் வேலையாள் கார்குழலி,

வேந்தனின் சிறு வயதில் இருத்து, அவன் வீட்டில் வேலை செய்பவர், அவன் அன்னை தந்தையின் இறப்புக்கு பிறகு அவனுக்கு என்று இருக்கும் ஒரே பிடிப்பு இவர் மட்டும் தான்.

ஆர்த்தி எடுத்து உள்ளே தனது வலது காலினை வைத்து நுழைத்தாள், என்று இருந்தாலும் தான் இந்த வீட்டில் நிரந்தரமாக இருக்க போவது இல்லை, என்று மனதிற்குள் நினைத்தால் வேல்விழி.

அன்று வீட்டை விட்டு சென்றவன் இதோ இரண்டு வாரங்கள் ஓடி விட்டது, அன்றில் இருத்து அவன் அவள் கண்களில் படவும் இல்லை அவளுடன் பேச முயற்சி செய்யவும் இல்லை.

வேல்விழி அவனை காணாமல் தனது உயிரின் ஒரு பாதியை இழந்தது போல துடித்தாள், ஆனால் அவள் அவனிடம் பேசிய வார்த்தைகளின் வீரியம் அவள் அறிய வில்லை.

வேல்விழி உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக தேர ஆரம்பித்து இருந்தது, அவள் அமைதியாக இருப்பதை பார்த்த கார்குழலி" ஏன் கண்ணு என்ன ஆச்சி மூஞ்சி இப்படி வாடி போய் இருக்கு உடம்பு சரி இல்லையா" என அன்பாக விசாரித்தார்.

"இல்ல மா அவரை பார்த்து இரண்டு வாரம் ஆகுது எதையோ இழந்த மாதிரி இருக்கு மா அதான் வேற ஒன்னும் இல்லை மா" என பதில் உரைத்தாள்.

" இவ்வளவு தான கண்ணு நான் கூட உடம்பு முடியலையோனு பயத்திட்டேன் கன்னு, தம்பி அடிக்கடி இப்படி தான் வேலை வேலை னு வீட்டுக்கே வராது கன்னு நீ பயப்படாத நாளைக்கு வந்துடும்"

" அம்மா இங்க அவரோட ரூம் எங்க இருக்கு என விசாரித்தால் வேல்விழி"

"வா கண்ணு நான் கூட்டிட்டு போறேன்" என்று அவன் அறையை காண்பித்தார் கார்குழலி.

அவன் அறையினுள் ஒரு நொடி தயங்கி பின்னர் உள்ளே நுழைந்த வேல்விழி,

அங்கு, தனது கண்களை தன்னாலே நம்ப முடியாமல் , மீண்டும் மீண்டும் தனது எதிரில் உள்ள புகைப்படத்தை விழி எடுக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள்.

அதில் எதிரில் இருப்பவரை மயக்கும் மோகன புன்னகையுடன் ஆளுயர புகைப்படத்தில் நின்று கொண்டு இருந்தாள், வேல்விழி

மேலும், கடந்த 5 வருடமாக வேந்தன் அவளை பார்த்ததில் இருத்து திருமணம் ஆகும் வரை எடுத்த அனைத்து புகைப்படமும் வரிசை சிரமாக அழகாக சுவற்றில் அடிக்கப்பட்டு இருத்தது.

அதனை விழியெடுகாமல் பார்த்தவளுக்கு அவன் தன்னிடம் பேசியது நினைவு வந்தது, ஆம் அன்று வேந்தன் வேல்விழி தூங்கியதாக நினைத்து அவளிடம் தனது காதலை உறைத்தது, அவள் அனைத்தையும் கேட்ட பிறகு தான் அவள் அவனை விட்டு விலக உறுதிபுண்டாள், அவனை விட்டு விலக்கினாள் அவன் வேறு திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்வான் என கனவு கண்டாள், ஆனால் அவனின் 5 வருட காதலை மறந்து விட்டால்,

மேலும் தான் காதல் கொண்ட காலத்தையும், அதன் பின்பு நடத்த நிகழ்ச்சிகள் கண்முன்பு தோன்றியது. தான் வேந்தனுக்கு ஏற்றவள் இல்லை என்று முடிவுக்கு வந்து அவனை விட்டு நீங்கவும் முடிவு செய்தாள், ( நீ நினைக்கிறது எல்லாம் நடத்துட்டா அப்புறம் நான் எதுக்காக கதை எழுதணும்)

தான் கொண்ட காதலும் தோற்றுவிட்டது, தன்னை நினைத்தவனின் காதலும் நிறைவேறவில்லை, என தன் மீதே கோபம் கொண்டாள் பெண்ணவள்.

அவன் அறையை ஒரு முறை பார்த்தவள் கண்ணில் பட்டது அந்த அலமாரி, அதை திறந்து பார்க்க அதில் அவன் கைப்பட எழுதிய டைரி இருந்தது, அதில் என்ன இருக்கும் என தெரிந்து கொள்ளும் ஆவலில் திறந்தவளின் கண்கள் முதல் பக்கத்தில் இருந்த பெண்ணின் மீது நிலை குத்தி நின்றது.

வேந்தன் அவன் அலுவலகத்தில் நிலை கொள்ளாமல் தவித்து கொண்டு இருத்தான், இன்றோடு வேள்விழியிடம் பேசி இரண்டு வாரம் ஓடி விட்டது, அவளை பொறுத்த வரை வெறும் இரண்டு வாரம், ஆனால் வேந்தனை பொறுத்த வரை நீண்ட நெடிய 14 நாட்கள், அவளை காணாத இந்த இரண்டு வாரம், அவன் நினைவு அடுக்கில் இருந்து அகற்ற படவேண்டியவை, அவளை சந்தித்த நாளில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை அவளை தினமும் காணாமல் அவனின் பொழுது விடியாது, இரவும் முடியாது, அப்படி இருக்கையில் தான் இந்த இரண்டு வாரம் அவளின் சூடு சொல்கள் தளாது விலகி நின்றான்.

அப்பொழுதும் அவளின் நினைவிலே உழன்றான் வேந்தன், அவள் இப்பொழுது என்ன செய்து கொண்டு இருப்பாள், தன்னை பற்றி என்ன யோசித்து கொண்டு இருப்பாள், அவளை சூழ்ந்து இருக்கும் ஆபத்தில் இருத்து எவ்வாறு அவளை காப்பது, தனது எதிரிகளின் அடுத்த திட்டம் என்ன, என யோசித்து கொண்டு இருந்தான்.

எங்கே தனது உண்மையான முகம் வேள்விழிக்கு தெரிந்துவிடுமோ என்ற பயம் ஒருபுறம், அவ்வாறு தெரிந்தால் தன்னையும் தனது உயிர் காதலையும் வேல்விழி மறுத்து விட்டாள் என்ன செய்வது, என குழம்பி தான் நின்றான் அந்த 6 அடி ஆண்மகன்.


விடை தெரியாத கேள்வியாக
உன் விலகல்....

விளக்கம் அளிக்க விரும்பாத
உன் மவுனம்....

நீ தொடர விரும்பாத
என் உறவு.....

காரணம் தேடி தோற்றது
என் மனம்.....

வலியுடம் உனது
நினைவுகளையும்
நிழல்களையும்
சுமந்து
கொண்டு நான்......

சிறிது நேரத்தில் வேந்தனின் மொபைல் அலறியது, எதிரில் இருப்பவன் கூறிய செய்தி கேட்டவனின் முகம் கனல் என்ன மாறியது, " சரி நான் இப்பவே அங்க வரேன் என" பதில் அளித்து அவ்விடம் நோக்கி வண்டியை செலுத்தினான்......

அவன் கார் வந்து நின்ற இடம் மும்பை கமிஷனர் அலுவலகம், நேராக IG இருக்கும் அறையில் நுழைத்தவன், எதிரில் இருக்கும் நபரிடம் " இதுக்காக தான் நான் அப்பவே சொன்னேன் அவங்களை சும்மா விட்ட அமைதியா இருக்கமாட்டாக கேட்டிங்களா, இப்போ பாருங்க மறுபடியும் வேல் விழியை கடத்த திட்டம் போட்டு இருக்காங்க" என்று கூறினான்.

எதிரில் இருந்த கமிஷனர்"கூல் டௌன் மை பாய், அவனோட இருக்குற அந்த அஞ்சவது ஆளு யாரு நமக்கு தெரியுற வரைக்கும் நாம அமைதியா தான் இருந்து தான் ஆகணும், அவன் தான் இது எல்லாத்துக்கும் பின்னாடி இருக்கிறவன், அது மட்டும் இல்லாம இது எல்லாத்துக்கும் மாஸ்டர் மைண்ட் அவன் தான், இவங்க நாலு பேரும் அவன் ஏவி விட்ட அம்புகள் தான், இவங்களை எய்தவனை தான் நாம் கண்டு புடிக்கணும்"

அன்னிக்கி நீ அஸ்வினை கொல்லாம இருத்து இருந்தால் இந்த நேரம் அவன் யாருன்னு கண்டு புடிச்சி இருக்கலாம், நீ அமைதியா இல்லை, இப்போ பாரு அவன் யாருன்னு நமக்கு தெரியலை, சோ இதுக்கு அப்றம் பேசி ஒன்னும் ஆக போறது இல்லை, past is past, வேள்விழியை பத்திரம்மா பாத்துக்கோ, now u can leave from here" என்றார்.

வேந்தன் அவரை பார்த்து அசட்டு சிரிப்பு ஒன்றை சிரித்து அங்கு இருத்து சென்றான்.

" இப்படி வில்லங்கமா சிரிக்கிறான் என்ன செய்ய போறானு தெரியலை என்று புலம்பினார், IG ஞானவேல்.

பாண்டியன், அபிணவ், அரணவ் ஆகியோர் ஒரு அறையில் கூடி இருத்தனர், வேல்விழியின் இந்த நிலைக்கு காரணமான ஒருத்தனின் வரவுக்காக காத்து இருத்தனர். உள்ளே நுழைத்த அந்த புதியவன் " வேள்விழியை கடத்த என்ன பிளான் பண்ணி இருக்கீங்க, என்று கேட்டான்.

எதிரில் இருந்த பாண்டியன், அபி, அரணவ் முதலியோர் அமைதியாக நின்றனர்,

" உங்களை நான் நம்பினா நான் நடு தெருவுல தான் நிக்கணும்" என்று கோபத்தில் கத்தினான்.

" நாங்க என தான் சார் செய்யரது எது பண்ணாலும் அந்த அகில் எல்லாத்தையும் தடுத்துடறான், அது மட்டும் இல்லாம அவன் வேள்விழியோட நிழல் மாதிரி கூடவே இருக்கான்" என்றான் அபி.

"இன்னைல இருத்து சரியா ஒரு வாரம் கழிச்சி வேந்தன் அப்பா அம்மா ஓட நினைவு தினம் வருது, கண்டிப்பா அவன் அன்னிக்கி ஆசிரமத்திற்கு இருக்குற குழந்தைகளுக்கு சாப்பாடு குடுக்க போவான் அன்னிக்கி அவளை தூக்கிடுங்க" என்று கூறி அவர்கள் செல்லாம் என்பதற்கு அறிகுறியாக தலையை அசைத்தான்.

வேல்விழி டைரியில் யாரை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்....

வேள்விழியின் வாழ்வில் இன்னல்களை ஏற்படுத்தும் இந்த புதியவன் யார்......

வேல் விழியை கடத்த இவர்கள் போட்ட திட்டம் நிறைவேறுமா.....
பதில் வரும் பதிவுகளில்.......

விழிகள் பேசும்.....

நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
விழியின் மொழி 9

வேந்தன் அறையில் நுழைத்த வேல்விழி அறையை ஒரு முறை சுற்றி பார்த்தாள், அவள் கண்ணில் வேந்தனின் அறையில் இருந்த அலமாரி, தென்பட்டது அதை திறந்து பார்க்க அதில் அவன் கைப்பட எழுதிய டைரி இருந்தது, அதில் என்ன இருக்கும் என தெரிந்து கொள்ளும் ஆவலில் திறந்தவளின் கண்கள் முதல் பக்கத்தில் இருந்த பெண்ணின் மீது நிலை குத்தி நின்றது.


அதில் வேந்தன் முதல் முதலில் தனது காதல் தேவதையை முப்பரிமாணத்தில் வரைந்து இருத்தான். அதனை கண்டவளின் கண்கள் தன்னையே நம்ப முடியாமல் திரும்ப திரும்ப அந்த வரை படத்தையே பார்த்து கொண்டு இருந்தாள், அதில் தன்னை கண்டவளின் நெஞ்சம் ஓடும் ரயிலை விட வேகமாக துடித்தது.

வேல்விழி அந்த வரைப்படத்தை இலக்குகே இல்லாமல் வெறித்தவள், " இது இது அந்த படம் தானே, அந்த முகம் தெரியாதவன் எனக்காக வரைந்த வரைபடம், அப்போ, என்னோட அகி எனக்காக வரைஞ்ச படம்" என நினைத்தாள், எவ்வளவு நேரம் அதனை பார்த்தால் என்பதை அவள் மட்டுமே அறிவாள்.

அதற்கு அடுத்த பக்கத்திற்கு வந்தவள் அதனை படிக்க ஆரம்பித்தாள், அதில் வேள்விழியினை கண்ட நாள் முதல், திருமணம் முடியும் வரை தங்களுக்கு நடந்த நிகழ்வுகளை வேந்தன் அழகாக எழுதி இருத்தான்.

அந்த டைரியை படித்தவளின் நெஞ்சம் இறக்கை இல்லாமல் வானில் பறந்தது, தனக்கு தானே பேசி சந்தோஷம் அடைந்தாள், அதே நேரத்தில் அவளது கண்கள் கண்ணீரை சுரந்தது அந்த கண்ணீர் அதிர்ச்சியால் ஏற்பட்டதா, இல்லை மகிழ்ச்சியால் ஏற்பட்டதா, என்பதை அவள் மட்டுமே அறிவாள்.
"அப்போ என்னோட முதல் காதல் வேந்தனா, அதாவது என்னோட அகி என்கிற அகில் என தனக்குள்ளே பேசிக்கொண்டவள், தனது முதல் காதல் அகில் என்னும் வேந்தன் என்பதை கண்டு சந்தோஷ படுவதா இல்லை அவனை விட்டு விலகி இருக்க நினைத்த தன்னை நொந்து கொள்வதா, இல்லை அவனை காயப்படுத்திய புத்தியை கடிந்து கொள்வதா என பிரித்து அறிய முடியாத நிலையில் இருந்தது வேள்விழியின் மனது.


உனது

கன்னக்குழி...

சிரிப்பில்
என்னை தொலைத்தேன்
தேனடா...

உனது கற்றை
கூந்தல் காற்றில்
அசைந்தடும் பொழுது....

அதில் பாதி
கரைத்தெனடா....

உன்னை காணும்
நொடி இவ்வுலகை
மறந்து....
வேறு உலகில்
வாழ்கிறேனடா....

உனது மீதான
எனது காதலில்
நான் உன்மத்தம்
ஆகி போனேனாடா.....

உன் மீது காதல்
கொண்ட
எனது இதயத்தை
கையாளுவது என்பது
எனக்கு மிக கடினம்.....

எனது நிலை
கேட்காதே...

இவ்வுலகை....

மறந்து உழன்று
கொண்டு இருக்கிறேன்.....
நீ இல்லாமல்
என்னால்
இவ் மண்ணுலகில்
வாழவும் முடியாது....

உயிர் துறக்கவும்
இயலாது....

யார் மீதாவது
காதல் பிறந்து
விட்டால்....
மனதினை
நிலை படுத்துவது...

கடினம் என்று
யான் அறிதேனடா....

உன்னை அன்றி
எனது நிலையை
அறிவார் யாரடா.....

வேல்விழியின் நினைவுகள் பின்னோக்க சென்றது.....

ஜூலை 7,

காலை சூரியன் கடல் அலைகளில் இருத்து எழுந்து தனது கதிர்களை பூமியில் பரப்பி தனது கடமையை சரியாக செய்து கொண்டு இருந்தான்.

வேல்விழி கண் விழித்து அதிகாலை சூரியனை ரசித்தவள், தனது காலை கடன்களை முடித்து முதல் நாள் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றாள்.

காலை விழித்ததில் இருத்து ஏனோ, மனம் காற்றில் பறப்பது போல உணர்ந்தாள், காரணம் என்னவென்று அவள் அறிய முற்பட வில்லை, தன் இணையை சேரும் இன்பமாக கூட இருக்கலாம்.

அதே நேரத்தில் வேந்தன் தனது காலை கடன்களை முடித்து தனது காலேஜ் நோக்கி அவனது வண்டியை செலுத்தினான், அவன் அவ்வாறு செல்லும் பொழுது எங்கோ இருத்து வந்த பெண்ணின் துப்பட்டா அவனின் முகத்தில் வந்து விழுந்தது.

அதில் வந்த நறுமணத்தை நுகர்த்தவன் மனம் இனம் புரியாமல் தவித்தது, மேலும் அதில் வந்த சுகந்த நறுமணம் அவன் நாசி வரை தீண்டி சென்றது. அவன் மனம் அவனை கேட்காமல் அவளிடம் தஞ்சம் அடைத்தது.

அவன் கண் மூடி நறுமணத்தை ரசித்து கொண்டு இருக்க எங்கோ இருத்து வண்டியில் வந்த பெண் ஒருத்தி அவனை கேட்காமல் அவனிடம் இருத்து அந்த துப்பட்டாவை பறித்து சென்றால், அவன் மனதையும் சேர்த்து தான், இவை அனைத்தும் அவன் கண்முடி இருக்கும் சில கணங்களில் நடந்து முடிந்துவிட்டது.

அவன் மனம் அவனின் துப்பட்டா தேவதை தேடியது, ஆனால் அவள் அவனிடம் பார்வையில் சிக்கும் முன்பு காற்றில் பறந்து விட்டாள்.

தனக்கு பாக்கியம் இருத்தால் அவளை கண்டிப்பாக சந்திக்க முடியும் என அலைபாயும் தனது மனதினை கட்டுப்படுத்தி அவன் வண்டியை செலுத்தினான்.

கல்லூரி சென்றவனின் கேட்ட செய்தி அவனால் நம்ப முடியாதவை, ஆம் அவன் அன்று முதுநிலை தொலை தூர (UG)அறிவியலில் , கல்லூரியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று இருந்தான். அது மட்டும் இல்லாது, பல்கலைகழக அளவிலும் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று இருந்தான்.

காலை முதல் மாலை வரை அனைத்து ஆசிரியரிடம் வாழ்த்து பெற்றவன், மாலை தனது மாற்று சான்றிதாழ் பெற நின்று கொண்டு இருத்தான்.
மலை நேரம் சூரியன் தனது வெப்பத்தை குறைத்து மறைந்து கொண்டு இருக்க, வானம் தனது மாமன் முகம் கண்ட முறைபெண் போல சிகப்பு பூசி கொள்ள,

கரும்மேகம் திரண்டு மழையின் பூமிக்கு கொண்டு வர தயாராய் இருந்தது, மழை மண்ணுடன் இணையும் நேரம், வேந்தன் அவளின் விழியாளை கண்டான்,

ஆம் அவளின் துப்பட்டா மீண்டும் வேந்தனிடம் தஞ்சம் அடைத்தது, அதே சுகந்த நறுமணம் வேந்தனின் நாசியை தீண்டியது, அதனை பெற வந்த வேள்விழியினை கண்டவன் ஒரு கணம் மெய் மறந்து அவள் விழிகளில் தனது காதலை தேடிக்கொண்டு இருத்தான்.

கண்டதும் காதல் என்றால் கிண்டல் செய்பவன், இன்று அவளின் மீன் போன்ற கண்களிலும், மருண்ட மான் விழியிலும், முத்து இதழ் விரிப்பிலும், வில் போன்ற வளைத்த புருவத்திலும் தன்னை தொலைத்து தனது மதியினை அவள் வசம் இழந்து கொண்டு இருந்தான் அந்த ஆறு ஆடி ஆண்மகன்...


மழை நின்ற பின்பும், காதல் கொண்ட மனம் அவள் பின்னால் செல்ல, அவளை எந்த காரணம் கொண்டும் இழக்க கூடாது என உறுதி கொண்டவன், அவளை பின் தொடர்ந்து சென்றான்.

அவள் ஏதோ தனது தோழிகளுடன் பேசி கொண்டு சென்றுவிட அவளின் பின்னால் சென்றவன் அவளின் வண்டி அருகில் சென்று முன் இருக்கும் டிரேவில் ஒற்றை ரோஜா, அவளுக்காக அவன் எழுதிய கவிதை மற்றும் அவளை முதல் முதலில் பார்த்து அவன் வரைந்த ஓவியத்தை வைத்துவிட்டு சென்றான்....

உன்னை நேரில் கண்ட நொடி,
என்னில் காதல் பிறந்தது,
என் கண்மணி,
உன்னை எண்ணியே,
எனது நாட்கள்,
நகர்தது.....

விடியற்காலை சூரியன்,
உதிப்பதில் ஆரம்பித்த
எனது நாள்,
உன்னை காணாமல்
முடிவடையாது.....

நீ சுவாசத்த,
காற்றை சுவாசித்து
எனது நுரையீரல்,
நிறைத்து கொண்டு

உயிர் வாழ்ந்தேனடி.......


மழை விட்ட பின்பு, கிளம்பலாம் என அவள் வண்டி அருகில் வந்த வேள்விழி, அந்த வரைபடம், கவிதை மற்றும் ரோஜாவை யார் வைத்து இருப்பார்கள் என குழம்பி நின்றாள், சுற்றி பார்த்தவள் யாரும் தென்படாமல் போக கிளப்பி வீட்டிக்கு சென்றாள்.

வீட்டிக்கு சென்றவள் மனம் யார் இதை வைத்து சென்று இருப்பார்கள் என யோசிக்க ஆரம்பித்தது, அதை வரைந்த, முகம் தெரியதவனின் மீது மையல் கொண்ட தனது மனதினை கடிவாளம் இட்டு அடக்கினாள் வேல்விழி, பின்பு அதனை தனது அலமாரியில் பத்திரமாக ஒளித்து வைத்தாள்.

மறுநாள் காலை வேந்தன் வேல்விழியின் வீட்டை கண்டு அறிந்து அவள் வீட்டின் முன்பு தனது தேவதையின் தரிசனத்திற்கு காத்து கொண்டு இருந்தான். அவனின் தேவதையின் தரிசனம் பெற்றவனின் மனம் இறகை இல்லாமல் காற்றில் பறந்தது.

வேல்விழி கல்லூரி சென்று விட வேந்தன் எதையோ இழந்தது போல சுற்றி கொண்டு இருந்தான், இப்படியே இருந்தால் சரி வராது என நினைத்தவன் அடுத்த நாளே அவளின் எதிர் வீட்டில் குடிபுகுந்தான்.......

விழிகள் பேசும்.......


நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
Top Bottom