நான்காவது அத்தியாயம்
சதியாலோசனை
சையத் ஆஸாத் தூக்கக் கலக்கத்தில் வந்த கொட்டாவியை விழுங்கிவிட்டு, அவனது கை கடிகாரத்தைப் பார்த்தான். ஏறக்குறைய நள்ளிரவு ஆகிவிட்டது, அறைக்குள் சதியாலோசனையில் இருந்த பெரிய தலைகள் இன்னும் சிற்றுண்டி செய்து கொண்டிருந்தனர், உள்ளே ஒருவரையொருவர் பாராட்டிக்கொண்டு , வெள்ளமென ஓடிக்கொண்டிருந்த உயர் ரக ரஷ்ய வோட்காவை ரசித்துக் கொண்டிருந்தனர்.
ஆஸாத் தூக்கத்தை உணர்ந்தான். காஷ்மீரின் பிரதான சந்தையில் ஒரு ஆபத்தான வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் யோசனை மிகவும் பைத்தியக்காரத்தனமானது. இது போன்ற மோசமான யோசனைகளை எப்போதுமே அந்தக் கூட்டத்திலேயே முதியவரான அமானுல்லா கான் தான் கூற முடியும். ஆனால், உண்மை என்னவென்றால், அந்த வயதான பைத்தியக்கார முதியவரைக் கேள்வி கேட்கும் துணிவு அங்கு யாருக்கும் இல்லை, காலித் ஒருவனைத் தவிர. அவனும் அமானுல்லா கான் மீதுள்ள மரியாதையால் அவரைத் தேவையில்லாமல் சீண்ட மாட்டான்.
பரந்த மாளிகையின் உள்ளே, அமானுல்லா கானைத் தவிர வேறு எவராலும் இவ்வளவு பொருத்தமான பெயரிட முடியாத அந்த “போர் அறை” யில் ஐந்து பேர் கொண்ட குழு ஆழ்ந்த விவாதத்தில் இருந்த போது. காலித் தனது வலது கையை உயர்த்தியதால் விவாதம் சட்டென நிறுத்தப்பட்டது.
"நமக்குத் தெரிந்து நம் புதிய பிரதமர் எந்தவொரு செயலையும் செய்வதற்கு ரிஸ்க் எடுப்பதற்கு நிறைய யோசிப்பதால், இந்தியா ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டது. இந்தியப் பிரதமர் வயதானவர்தான், ஆனால் புத்திசாலி, மேலும் நம் போன்ற தீவிர இயக்கங்களின் மீது இரக்கமற்றவர். அவருடைய அமைச்சரவையில் இருக்கும் அனைவரின் சிந்தனையும் எப்படி இருக்கும் என்பது அவருக்குத் தெரியும், அதனால், எந்தவொரு அமைச்சரும் ஒரு கூட்டத்தில் கூட அவரை / அவரது கருத்தை ஆட்சேபிக்கத் தயாராக இல்லை. நான் எனது சகோதரர் கமாலை பல முறை எச்சரித்தேன். நம்முடைய புனிதப்போரான ஜிஹாத் மிகவும் முக்கியமானது, ஆனால், அதற்காக பணி முழுவதுமாக முடிவடைவதற்குள் தேவையில்லாமல் நம் வாழ்க்கையை இழப்பது முட்டாள்தனம் ”
காலித் பேசுவதை சிறிது நேரம் பேசுவதை நிறுத்திவிட்டு, தனது வழிகாட்டியான அமானுல்லா கானைப் பார்த்தான். அமானுல்லா கான் தனது கண்பார்வை மூலம் காலித் மேலும் தொடர சைகை காட்டிவிட்டு,
“காலித், கமால் இறந்ததால் ஏற்பட்ட இழப்பு நம் எல்லோருக்குமே பொதுவானது. எனவே, நடந்ததற்கு நீ மட்டுமே காரணம் என்று உன்னை நீயே குற்றம் கூறிக்கொள்ள முயற்சிக்காதே. உன் இரட்டை சகோதரனைப் பற்றி டாக்டர் மிஸ்ராவுக்குத் தெரியாது என்பது உறுதியா? ஒரு வேளை அவருக்குத் தெரிந்திருந்தால் நம்முடைய தாக்குதலில் இருக்கும் எதிர்பாராத தன்மை போய்விட்டது என்றே பொருள். புதுதில்லியில் உள்ள நம் உளவாளிகளிடமிருந்து ஏதாவது செய்தி வந்துள்ளதா ? ” என்று கேட்ட அமானுல்லா கானின் குரல் மிகவும் தெளிவாக இருந்தது.
காலித் தலையை ஆட்டினான். “மிஸ்ராவுக்குத் தெரியாது என்றே நினைக்கிறேன், புதுடில்லியில் இருந்து நமக்கு உபயோகமான தகவல் எதுவும் இதுவரை இல்லை. இப்போது, நம் காஷ்மீர் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவோம், நாளை மாலை, இந்தியாவின் பதிலின் உண்மையான வீரியத்தைக் காண்போம். ” என்றான்.
===================================
"ஸார், உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது" என்ற அவினாஷை நிமிர்ந்து பார்த்த மிஸ்ரா,
"அவினாஷ் வா, சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்" என்றார்.
அவினாஷ் "காஷ்மீர் IB (இன்டெலிஜென்ஸ் பீரோ) தகவல் அனுப்பியுள்ளது. ஸ்ரீநகரில் நாளை அல்லது நாளை மறுநாள் ஒரு சக்திவாய்ந்த குண்டு வெடிக்கும் என்று தெரிகிறது. என்ன செய்யப்போகிறோம் ஸார்? " என்றான் கவலையுடன்.
இருவரும் சாப்பிட்டுக்கொண்டே பேசினார்கள். முன்னெப்போதையும் விட இந்தியாவுக்கு எதிராக அமானுல்லா கானின் மோசமான சதிச் செயல்கள் எப்படி அதிகமாகிவிட்டது என்பதை அவர்கள் விவாதித்தனர்.
அவர்கள் இருவரும் விவாதித்த சிறிது நேரத்தில், மிஸ்ராவின் அணியின் சிறப்பு உளவுப் பிரிவில் உள்ள புத்திசாலித்தனமான இரு இளம் அதிகாரிகள் ப்ரியா சதுர்வேதி மற்றும் துஷ்யந்த் ஆகியோர் டெல்லியில் இருந்து ஒரு தனி விமானத்தில் ஸ்ரீநகரை அடைந்தனர்.
==================================
ஸ்ரீநகரில் அந்த இனிமையான காலை வேளையில், குளிருக்கு இதமாக இருந்த இளம்வெயிலில். ஒரு ஜிப்ஸி ஜீப் மெதுவாக ஊர்ந்து அஞ்சல் அலுவலகம் அருகே நின்றது. கமருதீன் வெளியே வந்து ஜீப்பில் ஏறும்போது, உள்ளே இருந்த மாலிக்கை நோக்கித் தலையை அசைத்தான்.
"கமருதீன், நாளை மாலை வாணவேடிக்கைக்கு நீங்கள் தயாரா?" என்று மாலிக் கேட்டான்.
கமருதீன் சில கணங்கள் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்துவிட்டு, "மாலிக், இங்குள்ள நிலைமை முன்பு போல் இல்லை. பாதுகாப்பு மிகவும் அதிகமாக உள்ளது. காவல்துறையும் சிறப்புப் படையினரும் சிறப்பு ஆயுதப் படைகளில் இருந்து ஏராளமானவர்களைக் கூட்டி வந்துள்ளனர்" என்றான்.
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே இருக்க, ஜீப் நிதானமாக இரண்டு தெருக்களைச் சுற்றி வந்தது. கமருதீன் இறங்கும் நேரம் வந்தவுடன், மாலிக் அவனைப் பார்த்து சிரித்தான். "நீங்கள்தான் எங்கள் உள்ளூர் ஹீரோ. நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது சரியாக, எந்தவித இடையூறும் இன்றி நடக்க, எங்கள் ஆட்கள் உதவுவார்கள். ஆனால், தாமதிக்காதீர்கள், விரைவில் அந்த நாளைக் குறிக்கவும்."
கமருதீனை இறக்கிவிட்டு, அந்த ஜிப்ஸி ஜீப் புகை மூட்டத்துடன் காணாமல் போனது.
=================================
அன்று இரவு பலூசிஸ்தானில் இருந்து சையத் அனுப்பிய ஒரு அவசர செய்தி வந்தது. ‘சந்தையில் உருளைக்கிழங்கு இருப்பு இல்லை. நிலைமை 26 தேதிக்குப் பின்னரே தெரியவரும்".
சையத் உடனடியாக அவினாஷை தனது சாட்டிலைட் ஃ போன் மூலம் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தான்.
**********************************
அவினாஷ் குளியலறையிலிருந்து வெளியே தன்னை உலர்த்திக் கொண்ட போது, சையத்தின் அச்சமூட்டும் தகவல் வந்தது. அவனுக்குத் தெரியும், காலித் கணக்கைத் தீர்க்க வருகிறான் என்பது, ஆனால், இப்படியா? .
கிரிக்கெட் ஸ்டேடிய சம்பவத்திற்குப் பிறகு இரண்டு நாட்களிலேயே, இறந்தது கமால் தான், காலித் அல்ல என்பது தெரிந்துவிட்டது.
மிஸ்ராவும், அவினாஷும் தேவையான நடவடிக்கைகளை உடனே எடுத்து, ராம் சந்தர் ராவ் உயிர் பிழைத்த செய்தியை மட்டுமே வெளியே தெரியச் செய்துவிட்டு, அதற்குக் காரணமான டெக்ஸ்ட்ரோகார்டியா சமாச்சாரத்தைத் திறமையாக மறைந்துவிட்டனர்.
அவினாஷுக்குத் தெரிந்து காலித்தின் மனதில், அவனுடைய பரம எதிரியான இந்தியாவும் அதன் உளவாளிகளை அவன் எதிர்பார்த்ததைவிட அதிக சேதத்தை ஏற்படுத்தியிருந்தனர் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
அவினாஷ் காலித்தின் இரட்டையான கமாலைக் கொன்றதன் மூலம், காலித்தின் மனதில் வெறுப்பை அதிகமாகவே தூண்டிவிட்டு விட்டோம் எனபதை அறிந்திருந்தான். எனவே, பலுசிஸ்தான் இருக்கும் உளவாளி சையத்தின் செய்தி அவினாஷை ஆச்சரியப்படுத்தவில்லை.
மிஸ்ராவைச் சந்தித்து சையத்தின் அதிர்ச்சியான செய்தியைத் தெரிவிக்க விரும்பினான்.
சையத்திடம் இருந்து வந்த ரகசிய குறியீட்டுச் செய்தியிலிருந்து "உருளைக்கிழங்கு" என்ற வார்த்தை அவினாஷைக் கதி கலங்கச் செய்துவிட்டது. .
அவர்களின் உளவுப் பரிபாஷையில் , உருளைக்கிழங்கு என்பது அழுக்குக் குண்டு (Dirty Bomb) எனப்படும் அணுசக்தி செறிவூட்டப்பட்ட ஒரு கொடிய குண்டு .
= =
சாகசம் நாளை தொடரும்