Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலா! காதலா!- கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
இந்த நாவல் உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணவும், கமெண்ட் பண்ணவும் மறக்காதீங்க பாதாம்ஹீர்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 20



அனைத்தையும் நினைவு கூர்ந்த விஜய்குமார், தற்போது மனதில் உண்டான உவகையுடன் உறக்கத்தை தழுவினான்.


காலையில் விழிப்பு தட்டியவுடன் கண்களை மூடிக்கொண்டே, அருகில் கைகளால் அலசி அனுஷாவைத் தேடினான்.


அவள் சிக்கவில்லை எனவும், பதறிப்போய் கண்களைத் திறந்தான்.


அந்நேரம் பார்த்து குளியலறையிலிருந்து நீர் விழும் சத்தம் கேட்க, பெருமூச்செறிந்தவன், "ச்சே! கொஞ்ச நேரத்துல பதற விட்டுட்டாளே இந்த குஸ்கா" என்று போர்வையை விலக்கி எழுந்தான்.


"ஹே குஸ்கா! கதவைத் திறடி" என குளியலறை கதவை ஓங்கி தட்டினான்.


உள்ளேயிருந்து, இம் என்ற முனகல் சத்தம் மட்டுமே கேட்டது.


"ஹேய், கதவை திறக்கறியா இல்லையாடி?" எனக் கத்த,


இரண்டு நிமிடத்தில் கதவைத் திறந்தவள், "எதுக்கு இப்படி கதவைப் போட்டு பட் பட்னு அடிக்கறீங்க? இது என்ன உங்க வீடுனு நெனச்சீங்களா? ஹோட்டல். உடைஞ்சா எவ்ளோ டாலர் தண்டம் கட்டணும் தெரியுமா?" என்றவள் பிரித்விஹாசன் எனும் பணத்திமிங்கலம் அவனுக்கு செலவளிப்பதை அறியாமல் ஒற்றை விரல் நீட்டிக் கேட்க, அவனின் கண் முழுவதும் அவளின் ஆடை மேலேயே நிலைத்திருந்தது.


தனக்கு தொடையளவு மட்டுமே உள்ள அவனின் வெண்ணிற சட்டையை அணிந்துக்கொண்டு, அவசரத்தில் முதலிரண்டு பட்டன்களைப் போடாமல், முடிக்கற்றைகளிலிருந்து நீர்சொட்ட நின்றிருந்தவளைக் கண்டு, சித்தம் தடுமாறியவன், அவளை அலேக்காக அள்ளிக்கொண்டு கட்டிலுக்குச் சென்றான்.


அவனின் கதிர்வீச்சு பார்வையில் சிக்குண்டு கன்னம் சிவந்துபோனவள், "நான் வீட்டுக்கு கிளம்பனும் விஜய். நைட் போகாததுக்கே சிம்ரனும், சோனாவும் என்னை என்ன நெனப்பாங்களோன்னு சங்கடமா இருக்கு. இதுல நீங்க வேற நிலைமை புரியாம.." என்று இழுக்க,


"ஹே! நைட்டே உனக்கு ஃபீவர்னால வீட்டுக்கு வரமுடியலைனு சொல்லிட்டேன். அதனால அவங்க தப்பா எதுவும் நெனச்சிருக்க மாட்டாங்க. சும்மா சும்மா டென்ஷன் ஆகாத" என்று இரவில் அவளுடலில் எழுதிய கவிதையை, பகலிலும் தப்புத் தவறின்றி நிதானமாய் எழுதத் தொடங்க, உன்மத்த நிலையை அடைந்தாள் அந்த ஆரணங்கு.


அவன் மனமோ காமன் நடத்தும் விழாவில் அவசரக் கவிதையொன்றை இயற்றியது.


‘காதல் உச்சம் தொட்ட போது
நான் நம்மையறிந்தேன்!
மனித உயிர்கள் இவ்வையம் வாழும் காரணமறிந்தேன்!
இது அன்பின் வெளிப்பாடா?
நம்மை கட்டிப்போடும் சக்தியா?
இல்லை மனித முக்தியா?’


யோசித்துப் பார்த்தபோது அவனுக்கே அது பெரும் பேத்தலாக தெரிந்தது.


இருவரும் ஏதோவொரு சுக ராகம் மனதில் வீணையால் மீட்டப்பட, இன்ப மயக்கத்தில் கிடந்தனர்.


அந்நிலையில் தன் வாயை வைத்துக்கொண்டு சும்மாயிராமல், "ஏன் அனுஷா நான் உன்னை காதலிக்கவே இல்லை; சும்மா காதலிக்கற மாதிரி நடிக்கத் தான் செஞ்சேன்னு சொன்னா, நீ என்ன பண்ணுவ?" என்று கேட்டான் விஜய்குமார்.


அவள், "இது என்ன?" என்று கேட்டாள்.


"சங்கு.." என்றான் மூச்சை இழுத்துப் பிடித்து.


"அப்படியே கடிச்சி துப்பிருவேன். சொல்லுங்க அப்படி ஒரு யோசனை வேற உங்களுக்கு இருக்கா?"


"இல்லடி, சும்மா சொன்னேன்டி. அடிக்காதடி. ஹேய்! ஹேய்! கையக் கடிக்காத. வலிக்குதுடி குஸ்கா. உன்னை விட்டுட்டு என்னால மட்டும் சந்தோஷமா வாழ முடியுமாடி? ஒருப் பேச்சுக்கு தான்டி கேட்டேன். சாரிடி. விடுடி என்னை" என்று அலறினான்.


"இனிமே இப்படி பேசிப் பாருங்க. அப்பத் தெரியும் இந்த அனுஷா யாருன்னு. நான் என் வீட்டுக்குப் போறேன். மார்னிங் மூடையே ஸ்பாயில் பண்ணிட்டீங்க. இனி உங்களுக்கு எதுவும் கிடையாது. பை" என்று எழ முயன்றவளை, தன் போர்வைக்குள் இழுத்து வைத்து சிலிர்க்க வைக்க, மறுபடியும் அவன் கைகளுக்குள் அடங்கிப் போனாள் அனுஷா.


தனக்கு வாழ்வளித்த ப்ரித்விஹாசனுக்காகவே விஜய்குமார் அங்கு வந்திருந்தாலும், அனுஷாவின் பேச்சும், ப்ரித்விஹாசன் சொன்னது போல் தனக்கென நிச்சயிக்கப்பட்ட ஒருத்தியை எப்படி விட்டு கொடுப்பது என்கிற எண்ணமும் சேர்ந்து, உண்மையாகவே அவளை காதலிக்கத் துவங்கியிருந்தான் அவன்.


வெறுமனே அவளுடன் இணைந்து நெருக்கமான நிலையில் புகைப்படம் எடுத்துவிட்டு, கல்யாணம் செய்கிறேன் என்று வாக்கு கொடுத்து கிளம்பி விட்டால், அவளால் கண்டிப்பாக தன்னை மறக்க இயலாது என்றே நினைத்தான்.


அவள் இதை கண்டிப்பாக அவளின் அண்ணன்களிடம் கூறுவாள் என்றும், அவர்களிருவரும் தன்னிடம் திருமணம் பேச வரும் போது, ப்ரித்விஹாசனிடம் மன்னிப்பு கேட்க வைத்துவிட்டு, தான் அனுஷாவை எவ்வித எதிர்ப்புமின்றி திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், கற்பனை‌ செய்து கொண்டிருந்தான்.


அதன் காரணமாகவே நேற்றிரவு அனுஷாவுடனான சங்கமம் முடிந்ததும், அக்னிமித்ரன் பிரித்வியின் காலில் விழுவது போன்ற காட்சி தோன்றி வெற்றியில் அவனது கண்கள் மின்னின.


ஆனால், விஜய்குமாரின் கற்பனை நிஜமாகுமா? நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என்பதை அந்த வீ.கே உணர்வானா?


அடுத்து வந்த இரண்டு நாட்களும் இது போல் இன்பமாய் நகர, அவன் இந்தியா திரும்பும் நாளும் வந்தது. அனுஷாவால் அந்தப் பிரிவை ஏற்க முடியவில்லை. சிறுகுழந்தை போல் விமான நிலையத்தில் வைத்தே அவனின் சட்டையை தன் கண்ணீரால் நனைத்தாள்.


அவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே விமானத்தில் ஏறினான் விஜய்குமார். இறுதியில் இந்தியா சென்றடைந்தான்.


இனி நடக்கும் நிகழ்வுகள் யார் யார் வாழ்க்கையை எப்படி புரட்டி போடப்போகிறதோ?


அவன் இந்தியா வந்த இரண்டு நாட்களில், அக்னிமித்ரனுக்கு லண்டனிலிருந்து முக்கியமான அலைபேசி அழைப்பொன்று வந்தது.


அதில் தான் கேட்ட செய்தியால் உறைந்து போய் நின்றவன், அதன்பின் அதில் வந்த புகைப்படங்களைப் பார்த்து மேலும் அதிர்ந்தான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
பேசியது வேறு யாருமில்லை அனுஷாவின் தோழி சோனா தான். விஜய்குமார் தன்னை விரும்பாததில் மனமுடைந்து போய் இருந்தவளுக்கு, அவனும் அனுஷாவும் காதல் உலா வந்தது கண்டு பொசுபொசுவென்று இருந்தது.


அவர்களின் அன்யோன்யத்தை காண பொறுக்காமல் விஜய்குமார் இந்தியா சென்றவுடன், அவன் பிறந்த நாளன்று பிலிம் ரோல்களாக மாற்றச்சொல்லி, அனுஷா தனக்கும், சிம்ரனுக்கும் அனுப்பிய புகைப்படங்களையெல்லாம் அக்னிமித்ரனின், அலைபேசி எண்ணைத் தெரிந்துகொண்டு, வன்மத்துடன் அனுப்பி பற்றவைத்தாள்.


அக்னியால் அவள் கூறுவதை நம்பாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில், அவனின் திருமணத்தின் போது அவர்களுடன் தானே தன்னையும் வீடியோகாலில் அளவளாவச் சொன்னாள் அனுஷா.


அத்தகைய தோழி‌‌ எப்படி அவளுக்கு கேடு நினைப்பாள் என்று அவன் சோனாவை சந்தேகிக்கவில்லை.


அவன் தனக்கு வந்த புகைப்படங்களை உடனே அசோகமித்ரனுக்கு அனுப்பினான்.


அசோகாவோ அதைப் பார்த்துவிட்டு, "இது ஏதாவது ஏஐ வேலையா இருக்கும். எந்த முடிவையும் நாம அனுஷாகிட்ட பேசிட்டு எடுக்கறதே நல்லது" என்றவன் சொல்ல, அக்னியும் அனுஷாவை கான்ஃபரன்ஸ் காலில் இணைத்தான்.


அந்தப் புகைப்படம் குறித்து விசாரித்தபோதோ, "சாரிண்ணா. இவ்வளவு நாள் உங்கக்கிட்ட இதை சொல்லாம மறைச்சதுக்கு. அவர் தான் நேரம் பார்த்து உங்கக்கிட்ட சொல்றேன் சொன்னாரு. அவரை நான் ட்ரூவா லவ் பண்றேண்ணா. அவர் இல்லாம என்னால முடியாதுணா. சாரி. அவருக்கும் என்னை மாதிரி தாண்ணா. நீங்க அவர்கிட்ட பேசிப் பார்த்தப்பவே தெரிஞ்சிருக்குமே? அவர் ரொம்ப நல்லவர்ணா. ப்ளீஸ்ணா, எங்க கல்யாணத்தை நீங்க தான் வீட்டுல பேசி நடத்தி வைக்கணும்" என்று கெஞ்சினாள்.


அந்த அப்பாவிப்பெண் தவறுதலாக விஜய்குமார் தான்‌‌ அவர்களிடம் தங்கள் காதலை கடைபரப்பியுள்ளான் என்று நம்பினாள்.


அவளின் கெஞ்சல் மொழியில் பணிந்த இரட்டையர், வேறு வழியின்றி விஜய்குமாரை சந்திக்கச் சென்றனர்.


அப்போது அவன் படப்பிடிப்பிலிருந்தான்.


அவனின் உதவியாளர் வந்து இவர்கள் வந்திருப்பதாகச் சொல்ல, ஒரு மணி நேரம் கழித்தே அவர்களை பார்க்க வந்தான்‌. அதிலொரு ஆத்ம திருப்தி அவனுக்கு. மூவரும் கேரவனுக்குள் சென்றனர்.


"ஹாய் அக்னி, வாட் எ ப்ளசண்ட் சர்ப்ரைஸ்? அட! அசோகா நீயும் கூட வந்திருக்கியா? ம்! சொல்லுங்க? இந்தப் பிச்சைக்காரனை நீங்க எதுக்கு பார்க்க வந்துருக்கீங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?" என குத்தலாகக் கேட்கவும்,


தன் அலைபேசியில் இருந்த புகைப்படங்களைக் காண்பித்து, இதற்கு என்ன பதில் சொல்கிறாய்? எனும் விதமாய் அவனையே பார்த்திருந்தான் அக்னிமித்ரன்.


விஜய்குமார் வாயைத் திறப்பது போல் தெரியவில்லை.


"நாங்க அனுஷா பத்தி பேச வந்திருக்கோம்?" என்று அசோகமித்ரன் கோபமாகச் சொல்ல,


"சரி, பேசுங்க. அவளுக்கென்ன?" என சோம்பல் முறித்து சோஃபாவில் மேலும் சாய்ந்தான் விஜய்குமார்.


"அனுஷாகிட்ட நீ கல்யாணம் பண்ணிக்கறேனு வாக்குக் கொடுத்திருக்க?"


"ஆமா அதுக்கென்ன? இது நான் பழகற எல்லாப் பொண்ணுங்கக்கிட்டயும் சொல்றது தான். வாட் ஸ்பெஷல் எபவுட் ஹர்? இதை நம்பி எல்லாப் பொண்ணுங்களோட அண்ணன்களும் இப்படி வந்தா, என் கதி அதோ கதி தான்.” என்று நக்கலாக சிரிக்கவும்,


"அப்படியா? சரி நாங்க கிளம்பறோம்" என அசோகமித்ரன் எழுந்து நின்றான்.


அவனை தடுத்த அக்னிமித்ரன், "நீ பொய் சொல்ற விஜி. நீ எப்படிப்பட்டவன்னு விசாரிச்சி தான் நாங்க உன்கிட்ட சம்பந்தம் பேசவே வந்தோம். ஸோ, ப்ளீஸ் விளையாடாத." என்று பம்மியவனை, அருவருப்பாகப் பார்த்தான் அசோகா.


"ஓகே, நான் ஸ்ட்ரைட்டாவே சொல்லிடுறேன். நான் கஷ்டப்படும் போது எனக்கு வாய்ப்பு கொடுத்தது வாழ்க்கைப்பிச்சை போட்டது எல்லாமே ப்ரித்விஹாசன் சார் தான். இப்ப அவர் உன்னால வெளியக் கூட வர முடியாம மன உளைச்சல்ல இருக்காரு. நீ அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு. நான் உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கறேன். அதே மாதிரி இந்த அசோகமித்ரனும், அன்னைக்கு என் சட்டைக்காலரை பிடிச்சதுக்கு என்கிட்ட மன்னிப்பு கேட்கனும். இல்லனா, உங்க தங்கச்சிக்கு‌ நீங்க வேற மாப்பிள்ளை பார்த்துக்கலாம்.” என்று அலட்சியமாக சொல்ல,


அசோகமித்ரன் அவனுக்கு தக்க பதிலடி கொடுக்க‌ வாயை திறக்கும் முன், தான் முந்திய அக்னிமித்ரன், "ஓகே, இப்ப என் ப்ரதர் ப்ரித்விஹாசன் கால்ல விழனுமா? வேண்டாமான்னு அனுஷாவே முடிவெடுப்பா" என்றான் தோரணையாக.


"அனுஷாவா எங்க?" என பதற்றத்துடன் அவன் கேரவனின் வாசலைப் பார்க்க,


"அங்க இல்ல விஜி. இங்க" என்று தனது அலைபேசியை தூக்கிக் காட்டினான் அக்னி.


அதில் வீடியோ காலில் அனுஷா அழுது‌ கொண்டிருந்தாள்.


அவன் அதிர்ந்து பார்த்திருக்கும்போது, "ச்சீ! நீயெல்லாம் ஒரு மனுஷனா? உன்னைப்போய் நம்பினேன் பாரு. இவ்வளவு நாள் லூசு மாதிரி உன்னையே நினைச்சேனேடா. நீ அங்க போனதுக்கப்பறம் போன் பண்ணாம இருந்தியே அப்பவே நான் சுதாரிச்சிருக்கணும். என் மேல உனக்கு காதலே இல்லனு இப்ப எனக்கு புரிஞ்சிருச்சிடா.‌ நீ என்னடா சொல்றது. நான் சொல்றேன்டா. நீ எனக்கு வேண்டாம்டா.” என்று ஆத்திரமாகக் கத்தினாள்.


அனுஷா‌ அவனை விரும்பியிருக்கிறாள் என்பதால், அக்னிமித்ரன் அவளை பொறுமை காக்கச் சொன்னான்.


"அனும்மா அவசரத்துல முடிவெடுக்காத" என்று அவளைத் தடுத்தான்.


"இல்லண்ணா, நீங்க யாரும் அவன்கிட்ட மன்னிப்பு கேட்க கூடாது. அவன் எனக்கு வேண்டாம்ணா. நான் உறுதியா தான் சொல்றேன். நீங்க மட்டும் அவன்கிட்ட மன்னிப்பு கேட்டீங்க? அப்பறம் என் பொணத்தை தான் பார்ப்பீங்க" என்று கத்திவிட்டு அலைபேசியை அணைத்தாள்.


அசோகமித்ரனோ‌ அரண்டுபோய் நின்ற விஜய்குமாரை தன்‌ கூலர்ஸை மாட்டி வெறுப்பேற்றினான்.


"சரி போயிட்டு வர்றோம் வீ.கே. நெக்ஸ்ட் எங்க தங்கச்சி கல்யாணப் பத்திரிக்கையோட உன்னை வந்து சந்திக்கறோம். அம்பானி வீட்டு கல்யாணத்துல சினி செலப்ரிட்டீஸ் டான்ஸ் ஆடி கும்மாளம் போட்ட மாதிரி, நீயும் அனுஷா கல்யாணத்துல கும்மாளம் போடனும். வரவா?" என மிதப்பாக சென்ற அக்னியுடனே வெளியேறினான்.


ஆனால், கார்க்கதவை‌ திறந்து உள்ளே ஏறப்போன அக்னியைத் தடுத்து, "டேய்! அனுஷாவுக்கு எப்படா போன் போட்ட?" என்றான் உற்சாகமாக.


"அவன் நம்மளை வெயிட் பண்ண வச்சானே? அப்பவே அவன் ஏதோ பிளான் போட்டிருக்கான்னு புரிஞ்சிக்கிட்டேன். அப்ப தான் போட்டேன்."


"ச்சே! க்ரிமினல் மூளைடா உனக்கு பிளாக்கி. சாரி, அக்னி. ஆனா, அனுஷாவை நினைச்சா தான் ரொம்ப கஷ்டமா இருக்கு" என்றான் உண்மையான வருத்தத்தில்.


"ம், கொஞ்ச நாளைக்கு அப்படி இருப்பா. அப்புறம் அவளே நார்மல் ஆகிடுவா. பிரேக்கப் எல்லாம் அவ இருக்கற நாட்டுல சகஜம் தானே? ரெக்கவர் ஆகிருவா. சின்னப் பொண்ணுனால அவனை நம்பியிருப்பா. நீ மனசைப் போட்டு குழப்பிக்காம, உன் டியூட்டியைப் பாரு" என்று சொல்லவும், அரைமனதாக ஒப்புக்கொண்டான்‌ அசோகமித்ரன்.


அவன் காதலின் வலியை அறிந்தவன் அல்லவா?


அக்னிமித்ரன் ஞாபகம் வந்தவனாய், "களக்காட்டு கோயில் கொடைக்கு நான் அடுத்த வாரம் ரதியோட போகலாம்னு இருக்கேன். நீயும் வர்றியா?" என்று கேட்க,


"ஹையர் அஃபிஷியல்ஸ் கிட்ட அனுமதி வாங்கணும். கேட்டுட்டு சொல்றேன்" என்றான் அசோகமித்ரன்.


“ஓ! அப்பறம் அனுஷா விஷயம் வீட்டுல யாருக்கும் தெரிய வேணாம்" என்றான் அழுத்தமாக.


"ம், நானும் அதான் சொல்லனும் நெனச்சேன். பை பார்க்கலாம்" என்றதோடு கிளம்பி விட்டான் அசோகமித்ரன்.


மரகதமும், திருநீலகண்டனும் நீதிதாசனின் மொத்த குடும்பத்தையும் கோவில் திருவிழாவிற்கு அழைத்திருந்தனர்.


ஆனால், அசோகாவுக்கு டிஐஜியிடமிருந்து பெங்களூரில் நடைபெறும் மாநில அளவிலான காவலர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ளுமாறு உத்தரவு வந்ததால், அவன் அங்கு சென்று விட்டான்.


நீதிதாசனும் வேறொரு தொழிலதிபர் மகளின் திருமணத்தில் கலந்துக்கொள்ள வேண்டி வந்ததால், கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது.


அக்னிமித்ரன் மட்டும் தன் காரில் ரதியை அழைத்துக்கொண்டு களக்காடு சென்றான். ஏற்கனவே அவன் மேல் பித்தாகி கிடப்பவளுக்கு அவனுடனான வெளியூர் பயணம் என்றால் கசக்கவா செய்யும்?


தண்ணீர் தாகத்திற்கு குடிக்க தேனே கிடைத்தது போல் துள்ளி குதித்தாள்.


காரில் பயணித்த ஒவ்வொரு நிமிடமும் அவளை ஒரு இளவரசியை போல் உணரச் செய்தான் அக்னிமித்ரன்.


இரவு பத்து மணிக்கு களக்காட்டிற்குள் நுழைந்தனர் இருவரும்.


தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
வீ.கேவுக்கு நான் டெடிகேட் பண்ற சிட்டுவேஷன் சாங்*

போகாதே போகாதே நீ பிரிந்தால்
நான் இறப்பேனே!
போகாதே போகாதே நீ பிரிந்தால்
நான் இறப்பேனே!

******

அனுஷாவுக்கு டெடிகேட் பண்ற சாங்*

என் நண்பனே என்னை ஏய்த்தாய்!
என்‌ சாபமாய் வந்து வாய்த்தாய்!
உன் போலவே நல்ல நடிகன்
ஊரெங்கிலும் இல்லை ஒருவன்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
நாவல் பிடிச்சிருந்தா லைக் பண்ணவும் கமெண்ட் பண்ணவும் மறக்காதீங்க ஜிகர்தண்டாஸ்🙂
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom