அனுஷா டேவிட்
Active member
- Messages
- 190
- Reaction score
- 175
- Points
- 43
கதை முடிந்ததாக நம்பவே முடியவில்லை இன்னும் கூட இருந்தால் நன்றாக இருக்கும் போல இருக்கு. கே கே மைத்ரேயி சூப்பர் கேரக்டர்
நன்றிகள் சிஸ்Semma story sissy.. Ivlo naalum sena sandhana kk mythi kooda travel pannitu irundhom.. Ippo andha travel mudinjittudhu so sad.. Unga story eppavum pola massu dha sissy
நன்றிகள் சிஸ்செவ்வந்திதுரையின் கார்காலக்களவு.
இன்றும் புதையல் தேடி அலையும் கூட்டம் உலகில் இருக்கத்தான் செய்கிறது.அப்படி ஒரு புதையல் தேடும் கதைதான் இது .
சேனா தேடி சென்றபுதையல் ஒரு தங்கச்சிலை!அவன் கை பட்டதும் பெண் ஆகிறது!அவனின் ஸ்பரிசம் இல்லாத வேளையில் மீண்டும் தங்கச்சிலையாக மாறுகிறது!இந்த கருவை வைத்து ரொம்ப அழகான சஸ்பென்ஸ் திரில்லர் கதையை எழுதியிருக்காங்க.ஒரு புறம் சிலையை தேடும் கும்பல்,இன்னொரு புறம் சிலையை அழித்தால்தான் ஊர் நன்றாக இருக்கும் என தேடும் இந்திரன்,சிலையை காப்பாற்ற நினைக்கும் இரு பெண்கள்!சிலையின் மூலம் தன் பிறப்பை அறிந்து கொண்டு அவளை காதலிக்கும் சேனா!
பத்தாததற்கு காட்டேரி,வனதேவதை என இரண்டு சக்திகள்.காடும் அங்கு வாழும் பழங்குடிகளும்,ஆசை கொண்ட மனிதர்களால் அவர்கள் படும் துன்பங்களும்,பலியிடப்பட காத்திருக்கும் ஹீமாவும் என கதையில் பல சுவாரஸ்யங்கள்.
நெடுங்காலனும் ஹீமாவும் ஜென்ம ஜென்மமாய் காத்திருக்கும் காதலர்கள்!இப்பிறவியில் சேர்ந்தார்களா என்னும் ஆர்வத்தை தூண்டும் கதை.
நன்றிகள் சிஸ்கதை முடிந்ததாக நம்பவே முடியவில்லை இன்னும் கூட இருந்தால் நன்றாக இருக்கும் போல இருக்கு. கே கே மைத்ரேயி சூப்பர் கேரக்டர்
எங்களையும் காலம் தாண்டி கூட்டி போயிருக்கலாம்லா ஐ மிஸ் யூ காட்டேரிக்கா ஐ மிஸ் யூ சேனா ஹீமா
நன்றிகள் சிஸ்இவங்க கதைல இது முதல் கதை எனக்கு. வித்தியாசமான கதைகளம். சகாப்தம் தளத்தின் போட்டி கதை. புதையல் தேடி போகும் கார்கால களவாணி பற்றிய சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையரா கதை. ஒவ்வொரு எபி முடியும் போதும் அடுத்த எபிக்கு அவ்வளவு ஆவல் பிறக்கும்.
சிலை கடத்தும் கும்பல் ஒன்று சேனாவிடம் ஒரு தங்கசிலையை கடத்துர வேலையை கொடுக்கிறாங்க. அவனும் கடத்துரான் அதை தானே விக்கலாம் என்று நினைக்கிறான். ஆனா அவனோட கை பட்டு அந்த சிலைக்கு உயிர் வருது அவன் பயபடுரான் பேயோ பூதமோ என்னவோனு. பின்னர் தான் அவங்க முன் ஜென்ம கதை நினைவு வருகிறது.
சிலையை பாதுகாக்கும் இந்திரன் சிலை திருடு போகவே மக்களின் நன்மைகாக அதை கைப்பற்றி அழிக்கும் பொருட்டு ஒரு ரவுடியை துணைக்கு அழைக்க, சிலையை திருட சொன்ன சசிதரன் சிலையை கைப்பற்ற அவனும் ஒரு ரவுடியை அழைக்க, இடையில் கே கே மைத்ரேயி சிலையை பற்றி தெரிந்த உண்மையால் அதை காப்பாற்ற நினைத்து ஆக சேனாவை மூவரும் துரத்துகின்றனர். பின்னர் உண்மை அறிந்து கே கே மைத்ரேயி சேனா ஹீமாக்கு உதவி பண்றாங்க.
நெடுங்காலன் சந்தனா காதல் கதை ரொம்ப பிடிச்சிருந்தது. வனதேவதையும் காட்டேரியும் ஆக இரு சக்திகள் , ஒன்று அருகில் இருந்தால் ஒன்று இருக்காது. அவர்களுக்கு இழைக்கபடுவது முன்பே அறிந்தாலும் எதுவும் செய்ய முடியா நிலையில் வனதேவதையும் அதிர்ச்சியில் மீளாத சந்தனாவை உயிர்ப்புற செய்ய முடியாத நிலையில் காட்டேரியுமாக விதி இணைந்த கைகளோடு பிரித்தது.
ரொம்ப பிடித்த கேரக்டர் கே கே தான். சந்தனா பட்ட கஷ்டத்தை கேக்கும் போது நமக்கு வர கோவம் அவளுக்கு அப்படியே வரும். கதையோட உயிர்ப்புல கே கே மைத்ரேயியோட பங்கு அதிகம். செம கேரக்டர்ஸ். லாஸ்டா வந்தாலும் வெண்பரியானும் ஈர்க்க தான் செய்கிறான். இந்திரனின் முடிவு மற்றும் சேவை அருமை. காட்டேரியக்கா கூட இம்ப்ரஸிங் தான்.
முன் ஜென்மத்தில் விதியின் சதியால் பிரிந்த இருவரும் இன்றைய விதியில் இணைந்தார்களா இல்லையா என்பதே கதை. வாழ்க்கைகான ஒவ்வொரு நொடியும் முக்கியம், ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு காரணமாக நிகழ்கிறது னு சொன்னது சூப்பர். அது போல வனதேவதையும் சொன்ன விஷயம் சூப்பர், "உன்னை உருவாக்கிவிட்டேன் உனக்கு சிந்திக்க மூளை பார்க்க பார்வை சுவாசிக்க நாசி உழைக்க கை கால் இருக்கும் பட்சத்தில் நானே வந்து உனக்கு உதவி செய்து கொண்டே இருந்தால் உன் வாழ்க்கையை நீ எப்போது வாழ்வாய் உன்னால உன் விதியை எதிர்த்து போராட முடிலனா அந்த விதியே உன் வாழ்க்கையாகும் " அருமையான விஷயம் உண்மை தான்.
நல்ல விறுவிறுப்பான கதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்.
நன்றிகள் சிஸ்.. கே.கே மைத்தியை வச்சி வருசம் நாலு நாவல் தரதா சொல்லி இருக்கேன் சிஸ். நாலு முடியல. இந்த வருசத்துல இது ஒன்னுதான் முடிஞ்சிருக்கு.Arumayaana story..lastla vana devadhai pandra advice really superb......yes nam life naamadhaan poraadi anubavithu vaalanum..
Simply superb.....different story ..KK ,MYTHIY character super...already they are appeared in another story...ini varum story layum varuvaangalaa?????
MYTHIY Character so jolly girl ellarayum site adikiraaa....