Parvathi Pazhani
Member
- Messages
- 40
- Reaction score
- 14
- Points
- 8
நாவல்: காற்று வெளியிடை கண்ணம்மா
ஆசிரியர்: ரமணி சந்திரன்
ஹீரோ: நிகிலன்
ஹீரோயின்: சுசிதா
நிகிலனின் பிறந்த நாளில், அவரது சகோதரி ரஞ்சனி அவனுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் கதை தொடங்குகிறது. பிறந்த நாளை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியே விருந்துக்கு போக விரும்புகிறான் நிகிலன். ரஞ்சனி தன் கணவர் குணசீலன் ஈசிஆர் சாலையில் ஒரு அலுவலகத்தில் மீட்டிங்கில் இருப்பதாக கூருகிறாள்.
நிகிலனுக்கு குணசீலன் மீது மிகுந்த மதிப்பு உண்டு. குணசீலன் மற்றும் ரஞ்சனி இருவரும் காதல் திருமணம் செய்துக்கொண்டனர். ரஞ்சனி குணசீலனைவிட 12 வயது இளையவளாக இருந்தாலும், குணசீலன் அவளை அன்புடன் கவனித்துக் கொண்டு வந்தார்.
நிகிலனின் யோசனையின்படி, குணசீலன் மீட்டிங்கில் உள்ள இடத்துக்கு சென்று அவரை விருந்துக்கு அழைத்து செல்ல புறப்படுகிறார்கள். ஆனால் குணசீலனுக்கு இதைப்பற்றி முன்னதாக தெரியப்படுத்தவில்லை.
அங்கு குணசீலனின் உதவியாளராக இருந்த சவிதா, ஒரு பெண்ணிடம் குணசீலன் பெண்களுக்கு எதிராக தவறான நடத்தை கொண்டவன் என்பதை குறிப்பிட்டு அவளை மிரட்டுகிறாள். இதைக் கேட்ட நிகிலன் மற்றும் ரஞ்சனி அதிர்ச்சி அடைந்து திரும்புகிறார்கள்.
அதன் பின் ரஞ்சனி தன்னுடைய வாழ்க்கைக்கு இனி அர்த்தம் இல்லை என உணர்ந்து துக்கத்துடன் வாழ ஆரம்பிக்கிறாள். தனது சகோதரியும் அவளுடைய குழந்தைகளும் துன்பத்தில் வாழ்வதை பார்த்த நிகிலன், “இந்த நிலைமை தான் செய்த பாவத்தின் விளைவு”என நினைக்கிறான்.
அந்தக் கணத்தில் தான் சுசிதாவிடம் செய்த மிகப்பெரிய தவறை நினைவுகூர்கிறான்.
அதை சுசிதாவிடம் ஒப்புக்கொடுக்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதனால் ரஞ்சனியின் வாழ்க்கையில் மாற்றம் வரும் என்றும் நினைத்த நிகிலன், சுசிதா வாழும் மதுரைக்கு பயணிக்கிறான்.
அங்கு சுசிதாவின் வீடு தற்போது ஒரு அனாதை இல்லமாக மாறி இருப்பதை அறிகிறான். அதை தில்லையானாயகம் என்ற ஒருவர் நடத்துகிறார், சுசிதா தான் அந்த இல்லத்தை அவரிடம் ஒப்படைத்துள்ளார். அவர் தற்போது திருச்சிக்கு வேலைக்காக சென்றிருப்பதால், நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு பிறகே திரும்புவார். சுசிதாவின் தற்போதைய முகவரியை தில்லையானாயகம் மட்டுமே அறிந்திருக்கிறார், எனவே அவர் திரும்பும்போது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என காத்திருக்கிறான்.
தில்லையானாயகத்திடம் இருந்து முகவரியை பெற்று நிகிலன் திருச்சிக்கு சென்று, ஒரு தனியார் நிறுவனத்தில் சுசிதா வேலை செய்கிறதை கண்டுபிடிக்கிறான்.
அங்கு சுசிதா, நிகிலனை தெரியாதது போல நடந்து கொள்கிறாள். நிகிலன் மாலை வரை காத்திருந்து ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கிறான்.
சுசிதா தனது மகனைப் பற்றி உண்மையை மறைக்கிறாள் என்பதையும் அதனால்தான் அவ்வாறு நடக்கிறாள் என்பதையும் உணர்கிறார். சுசிதா வேலை செய்யும் நிறுவனத்தில், நிறுவனர் மகன் தங்கராசு, ஒரு திருமணமான நபராக இருந்தும் சுசிதாவை தன் ‘சின்ன வீடு’ ஆக வேண்டுமென வற்புறுத்துகிறான்.
இந்நிலையில் நிகிலன் தங்கராசுவிடமிருந்து சுசிதாவை காப்பாற்றி, தன்னை திருமணம் செய்ய விரும்புவதாக கூறுகிறான். சுசிதா வைத்த நிபந்தனையை ஏற்று, தில்லையானாயகம் மாமாவின் முன்னிலையில் அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின்னர் நிகிலன் சுசிதாவை சென்னைக்கு அழைத்துச் செல்கிறான்.
ஒரு நாள், நிகிலன் ரஞ்சனி மற்றும் குணசீலன் பிரிந்ததற்கான காரணத்தை கூற, சுசிதா அந்த சவிதா கூறிய விஷயம் பொய் இருக்கக்கூடும் என சந்தேகிக்கிறாள். அதன் அடிப்படையில், நிகிலன் மற்றும் சுசிதா இருவரும் சேர்ந்து உண்மையை கண்டறிந்து, சவிதா பொய் கூறினாள் என்பதை நிரூபித்து, ரஞ்சனி மற்றும் குணசீலன் இடையிலான பிரச்சனையை தீர்க்கிறார்கள்.
கதை முடிவில், சுசிதாவும் நிகிலன் தன்னிடம் செய்த தவறுக்கு உண்மையிலேயே மனம் வருந்துகிறான் என்பதை உணர்கிறாள். இறுதியில் தங்கராசு மீண்டும் கதை முடிவில் தோன்றினாலும், அவர்களிடையே இருந்த அனைத்து தவறான புரிதல்கள் தீர்க்கப்பட்டு, நிகிலனும் சுசிதாவும் சந்தோஷமாக வாழ ஆரம்பிக்கிறார்கள். சுபமான முடிவு.
ஆசிரியர்: ரமணி சந்திரன்
ஹீரோ: நிகிலன்
ஹீரோயின்: சுசிதா
நிகிலனின் பிறந்த நாளில், அவரது சகோதரி ரஞ்சனி அவனுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் கதை தொடங்குகிறது. பிறந்த நாளை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியே விருந்துக்கு போக விரும்புகிறான் நிகிலன். ரஞ்சனி தன் கணவர் குணசீலன் ஈசிஆர் சாலையில் ஒரு அலுவலகத்தில் மீட்டிங்கில் இருப்பதாக கூருகிறாள்.
நிகிலனுக்கு குணசீலன் மீது மிகுந்த மதிப்பு உண்டு. குணசீலன் மற்றும் ரஞ்சனி இருவரும் காதல் திருமணம் செய்துக்கொண்டனர். ரஞ்சனி குணசீலனைவிட 12 வயது இளையவளாக இருந்தாலும், குணசீலன் அவளை அன்புடன் கவனித்துக் கொண்டு வந்தார்.
நிகிலனின் யோசனையின்படி, குணசீலன் மீட்டிங்கில் உள்ள இடத்துக்கு சென்று அவரை விருந்துக்கு அழைத்து செல்ல புறப்படுகிறார்கள். ஆனால் குணசீலனுக்கு இதைப்பற்றி முன்னதாக தெரியப்படுத்தவில்லை.
அங்கு குணசீலனின் உதவியாளராக இருந்த சவிதா, ஒரு பெண்ணிடம் குணசீலன் பெண்களுக்கு எதிராக தவறான நடத்தை கொண்டவன் என்பதை குறிப்பிட்டு அவளை மிரட்டுகிறாள். இதைக் கேட்ட நிகிலன் மற்றும் ரஞ்சனி அதிர்ச்சி அடைந்து திரும்புகிறார்கள்.
அதன் பின் ரஞ்சனி தன்னுடைய வாழ்க்கைக்கு இனி அர்த்தம் இல்லை என உணர்ந்து துக்கத்துடன் வாழ ஆரம்பிக்கிறாள். தனது சகோதரியும் அவளுடைய குழந்தைகளும் துன்பத்தில் வாழ்வதை பார்த்த நிகிலன், “இந்த நிலைமை தான் செய்த பாவத்தின் விளைவு”என நினைக்கிறான்.
அந்தக் கணத்தில் தான் சுசிதாவிடம் செய்த மிகப்பெரிய தவறை நினைவுகூர்கிறான்.
அதை சுசிதாவிடம் ஒப்புக்கொடுக்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதனால் ரஞ்சனியின் வாழ்க்கையில் மாற்றம் வரும் என்றும் நினைத்த நிகிலன், சுசிதா வாழும் மதுரைக்கு பயணிக்கிறான்.
அங்கு சுசிதாவின் வீடு தற்போது ஒரு அனாதை இல்லமாக மாறி இருப்பதை அறிகிறான். அதை தில்லையானாயகம் என்ற ஒருவர் நடத்துகிறார், சுசிதா தான் அந்த இல்லத்தை அவரிடம் ஒப்படைத்துள்ளார். அவர் தற்போது திருச்சிக்கு வேலைக்காக சென்றிருப்பதால், நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு பிறகே திரும்புவார். சுசிதாவின் தற்போதைய முகவரியை தில்லையானாயகம் மட்டுமே அறிந்திருக்கிறார், எனவே அவர் திரும்பும்போது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என காத்திருக்கிறான்.
தில்லையானாயகத்திடம் இருந்து முகவரியை பெற்று நிகிலன் திருச்சிக்கு சென்று, ஒரு தனியார் நிறுவனத்தில் சுசிதா வேலை செய்கிறதை கண்டுபிடிக்கிறான்.
அங்கு சுசிதா, நிகிலனை தெரியாதது போல நடந்து கொள்கிறாள். நிகிலன் மாலை வரை காத்திருந்து ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கிறான்.
சுசிதா தனது மகனைப் பற்றி உண்மையை மறைக்கிறாள் என்பதையும் அதனால்தான் அவ்வாறு நடக்கிறாள் என்பதையும் உணர்கிறார். சுசிதா வேலை செய்யும் நிறுவனத்தில், நிறுவனர் மகன் தங்கராசு, ஒரு திருமணமான நபராக இருந்தும் சுசிதாவை தன் ‘சின்ன வீடு’ ஆக வேண்டுமென வற்புறுத்துகிறான்.
இந்நிலையில் நிகிலன் தங்கராசுவிடமிருந்து சுசிதாவை காப்பாற்றி, தன்னை திருமணம் செய்ய விரும்புவதாக கூறுகிறான். சுசிதா வைத்த நிபந்தனையை ஏற்று, தில்லையானாயகம் மாமாவின் முன்னிலையில் அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின்னர் நிகிலன் சுசிதாவை சென்னைக்கு அழைத்துச் செல்கிறான்.
ஒரு நாள், நிகிலன் ரஞ்சனி மற்றும் குணசீலன் பிரிந்ததற்கான காரணத்தை கூற, சுசிதா அந்த சவிதா கூறிய விஷயம் பொய் இருக்கக்கூடும் என சந்தேகிக்கிறாள். அதன் அடிப்படையில், நிகிலன் மற்றும் சுசிதா இருவரும் சேர்ந்து உண்மையை கண்டறிந்து, சவிதா பொய் கூறினாள் என்பதை நிரூபித்து, ரஞ்சனி மற்றும் குணசீலன் இடையிலான பிரச்சனையை தீர்க்கிறார்கள்.
கதை முடிவில், சுசிதாவும் நிகிலன் தன்னிடம் செய்த தவறுக்கு உண்மையிலேயே மனம் வருந்துகிறான் என்பதை உணர்கிறாள். இறுதியில் தங்கராசு மீண்டும் கதை முடிவில் தோன்றினாலும், அவர்களிடையே இருந்த அனைத்து தவறான புரிதல்கள் தீர்க்கப்பட்டு, நிகிலனும் சுசிதாவும் சந்தோஷமாக வாழ ஆரம்பிக்கிறார்கள். சுபமான முடிவு.