- Messages
- 45
- Reaction score
- 43
- Points
- 18
சங்கமம் 1
இரவில் அந்த கடற்கரையில் கூட்டமின்றி ஆங்காங்கே மட்டும் சிலர் சிறுசிறு கூட்டமாகவும் ஒரு சில காதல் ஜோடிகள் மட்டும் அமர்ந்திருக்க ஆர்பரிக்கும் அக்கடலின் அலைகளை வெறுமையாய் வெறித்தபடியும் பற்களை கடித்தபடியும் எல்லையில்லா கோபத்துடன் நின்றிருந்தான் நிஷாத்.
"டேய் நிஷாத் சும்மா இருடா ப்ளீஸ்டா அந்த பொண்ணு தெரியாம சொல்லிருச்சுடா ப்ளீஸ்டா வாடா" என பயந்தபடி கூறினான் சரத்.
"என்ன சமாளிக்கிறீயா சரத்? அவள நான் சும்மா விடுறதா இல்ல. எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்ட வந்து சொல்லிருப்பா?" என தன் பற்களை கடித்தபடி கூறினான் நிஷாத்.
"சரத் கொடுமைய பாத்தீயா? நாமலும் தான் இந்த எரும கூட சுத்துறோம் நமக்கு எதாவது நல்ல சேதி வந்து வாழ்க்கையில முன்னேற முடியுதா?" என்று சலித்தபடி தன் மன கவலையை கூறினான் சங்கர்.
"சங்கர்...!!!" என கோபத்தோடு பார்த்தான் நிஷாத்.
"கோவபடாதடா நிஷாத்! எல்லாம் என் மன குமுறல் டா. நீயே சொல்லு, நான் சொன்னது உண்மையா? இல்லையா?" என்று கவலையுடன் பாவமாய் கூறினான் சங்கர்.
"அப்டியே போட்டு குத்துனேன்னு வை" என தன் கைகளை மடக்கி சங்கரை குத்த வந்தான் நிஷாத்.
"முதல்ல இரண்டுபேரும் நிறுத்துங்கடா. உங்களோட ஓரே ரோதனையா போச்சு" என கூறி தன் தலையில் அடித்துக் கொண்டான் சரத்.
"இதோ வந்துடாருடா அஞ்சு பைசா மண்ட. இவரு அப்டியே சண்டையே போடாமதான் இருப்பாரு" என்று நக்கலாய் வம்பிலுத்தபடி கூறினான் சங்கர்.
"டேய் பத்து பைசா நீ அமைதியா இரு இல்ல வண்டி ஏத்தி கொன்றுவேன்" என கூறி முறைத்தான் சரத்.
"கூல் அஞ்சு பைசா கோவபடாதீங்க ஹெல்த்துக்கு நல்லது இல்ல" என சமாதனபடுத்தியபடி வம்பிலுத்தான் சங்கர்.
"ச்சீ.. பே" என சரத் பொய் கோத்தோடு கூறினான்.
"நீ ச்சீ.. பே" என சங்கருப் பொய் கோபத்தோடு கூறினான்.
"அடச்சை!! சும்மா இருங்கடா இப்போ முதல்ல என் கூட வரப்போறீங்களா இல்லையாடா? இல்ல நானே போய் அவள இரண்டுல ஒன்னு பாத்துட்டு வரவா?" என அடக்கபட்ட கோபத்தோடு கேட்டான் நிஷாத்.
"இவன் ஒருத்தன் வர லவ் லக்ஷ்மிய விரட்டிவிடுவான். நீயெல்லாம் கடைசி வரைக்கும் ஒன்டி கட்டையாதான் டா இருப்ப" என சாபம் விட்டான் சங்கர்.
"சங்கர் தம்பி நீங்க சாபம் விட்டதுலாம் போதும்.. நீ இப்போ கிளம்பி வறீயா? இல்ல சரத் சொன்ன மாதிரி வண்டி ஏத்தி கொல பண்ணவா?" என நக்கலாய் துவங்கியவன் கோபத்தோடு முடித்தான் நிஷாத்.
சரத் சங்கரைக் கண்டு சிரிக்க துவங்கினான்.
"மனுசனாடா நீங்கலாம்?" என அதிர்ந்தவன் "வாங்க வந்து சேருங்க. இதுல இந்த அஞ்சு பைசா மண்டைக்கு சிரிப்பு வேற" என சரத்தை திட்டியபடி தன் பைக்கை ஸ்டார்ட் செய்தான் சங்கர்.
பின் நிஷாத்தும் சரத்தும் தங்களின் பைக்கை ஸ்டார்ட் செய்து மூவரும் கிளம்பினர்.
"டேய் இந்த வீடுதான் டா" என தன் பைக்கை நிறுத்தி ஒரு வீட்டை காட்டினான் நிஷாத்.
"எப்படி டா சொல்ற?" என சற்று அதிர்ந்தபடி கேட்டான் சரத்.
"அங்க ஸ்கூட்டி நிக்குது பாரு" என தன் கண்களால் அவ்வீட்டின் முன் நின்றிருந்த ஸ்கூட்டியை காட்டினான் நிஷாத்.
"அதுசரி, டேய் அஞ்சு பைசா அவன்கிட்ட சொல்லு டா பாவம் டா அந்த பொண்ணு கேக்குறதுதான் கேக்குறான் அதுக்குன்னு வீட்டுக்கே போய் கேக்கனுமாடா?" என அவ்வீட்டிடம் இறங்கி செல்லும் நிஷாத்தை பார்த்தபடி சரத்திடம் கூறினான் சங்கர்.
"நானா டா அவன்கிட்ட போக சொன்னேன்? இல்ல நாம சொன்னாதான் அவன் கேட்ருவானா?" என இயலாமையுடன் சோர்வாய் கூறினான் சரத்.
"அங்க என்னடா இரண்டு பேருக்குள்ள பேச்சு? வாங்கடா கூட" என திரும்பி இருவரையும் அழைத்தான் நிஷாத்.
"இவன் வேற ஆனா உன்னா பொங்குறான் வறோம்டா பொங்க சோறு" என சலித்தபடி கூறினான் சரத்.
"சரத் பையா கொஞ்சம் பொறுமையா பேசுங்க இல்ல உன்னைய பொங்க வச்சுறுவான்" என பொறுமையாய் சரத்திடம் கூறியபடி நிஷாத்திடம் சென்றான் சங்கர்.
"டேய் gate ahha தொற டா சங்கர்" என்றான் நிஷாத்.
"நீங்கதான தம்பி கேக்க போறீங்க நீங்க தான் தொறக்கனும்" என நக்கலாய் கூறி இருவரிற்க்கும் முதுகு காட்டியபடி நின்றான் சங்கர்.
"டேய் சங்கர் போடா" என்றான் சரத்.
"அடேய் அஞ்சு பைசா நாய் எதாவது இருந்தா என்னடா பண்றது?" என அவர்களின் புறம் திரும்பி பாவமாய் கேட்டான் சங்கர்.
இருவரும் அதிச்சியுடன் கூடிய பயத்துடன் சங்கரின் பின்னால் பார்த்தபடி நின்றனர்.
"என்னங்கடா இரண்டுபேரும் முழிக்கிறீங்க?" என புரியாமல் கேட்டான் சங்கர்.
"டேய் நிஷாத் அப்படியே சைலன்டா பின்னாடி வாடா போய்டலாம்" என பின்னால் அடியெடுத்து வைத்தபடி பொறுமையாய் கூறினான் சரத்.
"சரத் என்னடா நாய் இவ்ளோ பெருசா இருக்கு??" அதிர்ச்சியுடன் பின்னால் அடி எடுத்து வைத்தபடி கேட்டான் நிஷாத்.
"என்னங்கடா நான் உங்ககிட்ட கேட்டா நீங்க என் பின்னாடி பாத்து பேசிட்டு இருக்கீங்க?" என யோசித்தபடி பின்னால் திரும்பி பார்த்தான் சங்கர்.
அங்கு தன் கால் முட்டியின் உயரத்திற்க்கு நாய் ஒன்று இவர்களை பார்த்தபடி நின்றிருப்பதை கண்டதும் சங்கருக்கு பக்கென ஆனது. மெதுவாய் இருவரையும் பயத்துடன் திரும்பி பார்த்தான் சங்கர்.
மூவரும் ஒருவரையொருவர் பார்த்து பயத்தில் முழித்துக் கொண்டனர்.
"எட்றா ஓட்டத்த!" என நிஷாத் கூறி ஓட துவங்க மற்ற இருவரும் ஓட துவங்கினர். அவர்களை பின் தொடர்ந்து அந்த நாயும் அவர்களை துரத்தியபடி ஓடியது.
"அடேய்!! அடேய்!! நில்லுங்கடா நானும் வரேன்" என கத்தியபடி பின்னால் ஓடி வந்தான் சங்கர்.
"வந்து தொலடா சீக்கீரம்" என்றபடி முன்னால் ஓடி கொண்டிருந்தான் சரத்.
"டேய் அஞ்சு பைசா பொங்க சோறு உங்கள நம்பி கூட வந்ததுக்கு இப்டி நாக்குத் தள்ள ஓட விட்டீங்களே டா" என தலைதெறிக்க ஓடி வந்தபடி பாவமாய் கூறினான் சங்கர்.
"பத்து பைசா வேகமா ஓடிவா டா நீதான் கடைசியா ஓடி வர கவ்வுச்சுன்னு வை அவ்ளோதான் நீ" என சங்கரின் பின்னால் பார்த்தபடி கூறினான் நிஷாத்.
'லொள்!! லொள்!!' என நாய் குரைத்தபடி அவர்களின் பின்னால் துரத்திக் கொண்டு ஓடி வந்தது.
"ஆத்தி!! என்னங்கடா விடாம தொறத்துது.." என பயத்துடன் ஓடியபடி கேட்டான் சரத்.
'லொள்!! லொள்!!' என மீண்டும் குரைத்தது நாய்.
"ஓட்றா.. ஓட்றா" என கத்தியபடி ஓடினான் நிஷாத்.
"அய்யோ!! பைக்க விட்டுட்டு வந்துட்டோம் டா" என்றான் சங்கர்.
"உசுரு முக்கியமா? பைக்கு முக்கியமா?" என ஓடியபடி நிஷாத் கேட்டான்.
"அய்யோ உசுருதான்டா முக்கியம் என் பொங்க சோறு!!" என ஓடியபடி கூறினான் சங்கர்.
"அப்போ எடு வேகத்த" என்றான் சரத்.
மூவரும் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்க அவர்களை பின்னால் துரத்தியபடி ஓடி வந்தது நாய்...
"டேய் நிஷாத் சும்மா இருடா ப்ளீஸ்டா அந்த பொண்ணு தெரியாம சொல்லிருச்சுடா ப்ளீஸ்டா வாடா" என பயந்தபடி கூறினான் சரத்.
"என்ன சமாளிக்கிறீயா சரத்? அவள நான் சும்மா விடுறதா இல்ல. எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்ட வந்து சொல்லிருப்பா?" என தன் பற்களை கடித்தபடி கூறினான் நிஷாத்.
"சரத் கொடுமைய பாத்தீயா? நாமலும் தான் இந்த எரும கூட சுத்துறோம் நமக்கு எதாவது நல்ல சேதி வந்து வாழ்க்கையில முன்னேற முடியுதா?" என்று சலித்தபடி தன் மன கவலையை கூறினான் சங்கர்.
"சங்கர்...!!!" என கோபத்தோடு பார்த்தான் நிஷாத்.
"கோவபடாதடா நிஷாத்! எல்லாம் என் மன குமுறல் டா. நீயே சொல்லு, நான் சொன்னது உண்மையா? இல்லையா?" என்று கவலையுடன் பாவமாய் கூறினான் சங்கர்.
"அப்டியே போட்டு குத்துனேன்னு வை" என தன் கைகளை மடக்கி சங்கரை குத்த வந்தான் நிஷாத்.
"முதல்ல இரண்டுபேரும் நிறுத்துங்கடா. உங்களோட ஓரே ரோதனையா போச்சு" என கூறி தன் தலையில் அடித்துக் கொண்டான் சரத்.
"இதோ வந்துடாருடா அஞ்சு பைசா மண்ட. இவரு அப்டியே சண்டையே போடாமதான் இருப்பாரு" என்று நக்கலாய் வம்பிலுத்தபடி கூறினான் சங்கர்.
"டேய் பத்து பைசா நீ அமைதியா இரு இல்ல வண்டி ஏத்தி கொன்றுவேன்" என கூறி முறைத்தான் சரத்.
"கூல் அஞ்சு பைசா கோவபடாதீங்க ஹெல்த்துக்கு நல்லது இல்ல" என சமாதனபடுத்தியபடி வம்பிலுத்தான் சங்கர்.
"ச்சீ.. பே" என சரத் பொய் கோத்தோடு கூறினான்.
"நீ ச்சீ.. பே" என சங்கருப் பொய் கோபத்தோடு கூறினான்.
"அடச்சை!! சும்மா இருங்கடா இப்போ முதல்ல என் கூட வரப்போறீங்களா இல்லையாடா? இல்ல நானே போய் அவள இரண்டுல ஒன்னு பாத்துட்டு வரவா?" என அடக்கபட்ட கோபத்தோடு கேட்டான் நிஷாத்.
"இவன் ஒருத்தன் வர லவ் லக்ஷ்மிய விரட்டிவிடுவான். நீயெல்லாம் கடைசி வரைக்கும் ஒன்டி கட்டையாதான் டா இருப்ப" என சாபம் விட்டான் சங்கர்.
"சங்கர் தம்பி நீங்க சாபம் விட்டதுலாம் போதும்.. நீ இப்போ கிளம்பி வறீயா? இல்ல சரத் சொன்ன மாதிரி வண்டி ஏத்தி கொல பண்ணவா?" என நக்கலாய் துவங்கியவன் கோபத்தோடு முடித்தான் நிஷாத்.
சரத் சங்கரைக் கண்டு சிரிக்க துவங்கினான்.
"மனுசனாடா நீங்கலாம்?" என அதிர்ந்தவன் "வாங்க வந்து சேருங்க. இதுல இந்த அஞ்சு பைசா மண்டைக்கு சிரிப்பு வேற" என சரத்தை திட்டியபடி தன் பைக்கை ஸ்டார்ட் செய்தான் சங்கர்.
பின் நிஷாத்தும் சரத்தும் தங்களின் பைக்கை ஸ்டார்ட் செய்து மூவரும் கிளம்பினர்.
"டேய் இந்த வீடுதான் டா" என தன் பைக்கை நிறுத்தி ஒரு வீட்டை காட்டினான் நிஷாத்.
"எப்படி டா சொல்ற?" என சற்று அதிர்ந்தபடி கேட்டான் சரத்.
"அங்க ஸ்கூட்டி நிக்குது பாரு" என தன் கண்களால் அவ்வீட்டின் முன் நின்றிருந்த ஸ்கூட்டியை காட்டினான் நிஷாத்.
"அதுசரி, டேய் அஞ்சு பைசா அவன்கிட்ட சொல்லு டா பாவம் டா அந்த பொண்ணு கேக்குறதுதான் கேக்குறான் அதுக்குன்னு வீட்டுக்கே போய் கேக்கனுமாடா?" என அவ்வீட்டிடம் இறங்கி செல்லும் நிஷாத்தை பார்த்தபடி சரத்திடம் கூறினான் சங்கர்.
"நானா டா அவன்கிட்ட போக சொன்னேன்? இல்ல நாம சொன்னாதான் அவன் கேட்ருவானா?" என இயலாமையுடன் சோர்வாய் கூறினான் சரத்.
"அங்க என்னடா இரண்டு பேருக்குள்ள பேச்சு? வாங்கடா கூட" என திரும்பி இருவரையும் அழைத்தான் நிஷாத்.
"இவன் வேற ஆனா உன்னா பொங்குறான் வறோம்டா பொங்க சோறு" என சலித்தபடி கூறினான் சரத்.
"சரத் பையா கொஞ்சம் பொறுமையா பேசுங்க இல்ல உன்னைய பொங்க வச்சுறுவான்" என பொறுமையாய் சரத்திடம் கூறியபடி நிஷாத்திடம் சென்றான் சங்கர்.
"டேய் gate ahha தொற டா சங்கர்" என்றான் நிஷாத்.
"நீங்கதான தம்பி கேக்க போறீங்க நீங்க தான் தொறக்கனும்" என நக்கலாய் கூறி இருவரிற்க்கும் முதுகு காட்டியபடி நின்றான் சங்கர்.
"டேய் சங்கர் போடா" என்றான் சரத்.
"அடேய் அஞ்சு பைசா நாய் எதாவது இருந்தா என்னடா பண்றது?" என அவர்களின் புறம் திரும்பி பாவமாய் கேட்டான் சங்கர்.
இருவரும் அதிச்சியுடன் கூடிய பயத்துடன் சங்கரின் பின்னால் பார்த்தபடி நின்றனர்.
"என்னங்கடா இரண்டுபேரும் முழிக்கிறீங்க?" என புரியாமல் கேட்டான் சங்கர்.
"டேய் நிஷாத் அப்படியே சைலன்டா பின்னாடி வாடா போய்டலாம்" என பின்னால் அடியெடுத்து வைத்தபடி பொறுமையாய் கூறினான் சரத்.
"சரத் என்னடா நாய் இவ்ளோ பெருசா இருக்கு??" அதிர்ச்சியுடன் பின்னால் அடி எடுத்து வைத்தபடி கேட்டான் நிஷாத்.
"என்னங்கடா நான் உங்ககிட்ட கேட்டா நீங்க என் பின்னாடி பாத்து பேசிட்டு இருக்கீங்க?" என யோசித்தபடி பின்னால் திரும்பி பார்த்தான் சங்கர்.
அங்கு தன் கால் முட்டியின் உயரத்திற்க்கு நாய் ஒன்று இவர்களை பார்த்தபடி நின்றிருப்பதை கண்டதும் சங்கருக்கு பக்கென ஆனது. மெதுவாய் இருவரையும் பயத்துடன் திரும்பி பார்த்தான் சங்கர்.
மூவரும் ஒருவரையொருவர் பார்த்து பயத்தில் முழித்துக் கொண்டனர்.
"எட்றா ஓட்டத்த!" என நிஷாத் கூறி ஓட துவங்க மற்ற இருவரும் ஓட துவங்கினர். அவர்களை பின் தொடர்ந்து அந்த நாயும் அவர்களை துரத்தியபடி ஓடியது.
"அடேய்!! அடேய்!! நில்லுங்கடா நானும் வரேன்" என கத்தியபடி பின்னால் ஓடி வந்தான் சங்கர்.
"வந்து தொலடா சீக்கீரம்" என்றபடி முன்னால் ஓடி கொண்டிருந்தான் சரத்.
"டேய் அஞ்சு பைசா பொங்க சோறு உங்கள நம்பி கூட வந்ததுக்கு இப்டி நாக்குத் தள்ள ஓட விட்டீங்களே டா" என தலைதெறிக்க ஓடி வந்தபடி பாவமாய் கூறினான் சங்கர்.
"பத்து பைசா வேகமா ஓடிவா டா நீதான் கடைசியா ஓடி வர கவ்வுச்சுன்னு வை அவ்ளோதான் நீ" என சங்கரின் பின்னால் பார்த்தபடி கூறினான் நிஷாத்.
'லொள்!! லொள்!!' என நாய் குரைத்தபடி அவர்களின் பின்னால் துரத்திக் கொண்டு ஓடி வந்தது.
"ஆத்தி!! என்னங்கடா விடாம தொறத்துது.." என பயத்துடன் ஓடியபடி கேட்டான் சரத்.
'லொள்!! லொள்!!' என மீண்டும் குரைத்தது நாய்.
"ஓட்றா.. ஓட்றா" என கத்தியபடி ஓடினான் நிஷாத்.
"அய்யோ!! பைக்க விட்டுட்டு வந்துட்டோம் டா" என்றான் சங்கர்.
"உசுரு முக்கியமா? பைக்கு முக்கியமா?" என ஓடியபடி நிஷாத் கேட்டான்.
"அய்யோ உசுருதான்டா முக்கியம் என் பொங்க சோறு!!" என ஓடியபடி கூறினான் சங்கர்.
"அப்போ எடு வேகத்த" என்றான் சரத்.
மூவரும் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்க அவர்களை பின்னால் துரத்தியபடி ஓடி வந்தது நாய்...
*******
சங்கமிக்கும்...
- நான் உங்கள் நாகவேணி அழகர் ராஜன்.
- நான் உங்கள் நாகவேணி அழகர் ராஜன்.
Last edited: