நந்துசுந்தரம்
New member
- Messages
- 15
- Reaction score
- 6
- Points
- 3
1
...
"ஓன் நெனப்பு நெஞ்சுக் குழி வர இருக்கு உலகம் முழுசும் உன்ன சுத்தி சுத்திக் கெடக்கு..." சினிமாப் பாடல் பூக்குடி வீதியில் இருக்கும் மக்களைத் தூங்க விடாமல் அக்கல்யாண மண்டபத்தில் ஒலித்துக் கொண்டு இருந்தது. "ஏம்ப்பா சுந்தரம் மணிதான் ஒன்பதுத் தாண்டிருச்சுல்ல புள்ளங்க நாளைக்கு வெரசா எந்திக்கனும் பாட்ட அமத்த சொல்லேன் யா..." என்று வயதான பெருசு சொல்ல...
"சரிங்க தாத்தா நான் சொல்றேன்" என ஐந்தரை அடி, ஆஜானுபாகுவான உடல், டிராக் பேன்ட் டீஷர்ட்டு, முறுக்கிய மீசை உடன் நின்று கொண்டிருந்தான் சுந்தரத்தின் மூத்த மகன் நேத்ரன்.
காலையில் நிச்சயத்திற்கு தேவயானவை வந்துவிட்டதா என சரிப்பார்த்துக் கொண்டிருந்த சுந்தரத்தின் வேஷ்டியைப் பிடித்து இழுத்து
"தாத்தா தாத்தா பொதிஉண்ட நாக்கு நம்ப வீத்துக்கு வத மாத்தாலா
( பொரி உருண்ட நாளைக்கு நம்ம வீட்டுக்கு வர மாட்டாளா???)" என சிணுங்கினான் நேத்ரனின் 3 வயது மகன் ரவிவர்மன்.
"டேய் வர்மா... அத்தய பொரி உருண்டனு சொல்லக்கூடாதுனு எத்தன தடவ சொல்லிருக்கேன்
" என்றாள் நேத்ரனின் பத்தினி வைஷ்ணவி.
"விடுமா வைஷி அவ மட்டும் இவன மாங்கா மண்டனு கூப்ட்டு சிரிக்குறால அதான் நானும் அந்த சாப்பாட்டு ராணிக்கு பொரி உருண்டனு
பேரு வச்சு வர்மன கூப்ட சொன்னேன்..என் ராசா ஆச்சிப் பேச்சத் தட்ட மாட்டான் "
என்று தன் பேரனை தூக்கித் தலைக்கு மேல் ஒரு சுற்று சுற்றி தன் இடுப்பில் வைத்துக் கொண்டாள் வைஷுயின் மாமியார் முத்தரசி.
"என்னங்க அத்த இது!!!....நேத்து வர அவ நம்ம வீட்டு பொண்ணு ஆனா நாளைக்கு இன்னொரு வீட்டு மருமக..நாமளே அவள இப்டி கேலி பேசலாமா???.."என்றாள் வைஷி.
சட்டென்று சுந்தரம் தன் கண்ணீரைத் துடைக்க வைஷி பதறி விட்டாள்.
"சாரி மாமா நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா.." -- வைஷி.
"இல்லமா நேத்து தான் அவள சின்னப் புள்ளயாத் தூக்கிட்டு வந்த மாதிரி இருக்கு நாளைக்கு இன்னொரு வீட்டு மருமக.. நாளன்னில இருந்து அவ சத்தம் இல்லாம வீடே நல்லா இருக்காதேம்மா...அதான் கஷ்டமா இருக்கு"-- சுந்தரம்.
"ஆமாப்பா அந்த சண்டிராணி இல்லாம வீடே ரொம்ப அமைதியா இருக்கும்" -- நேத்ரன்.
"லேய் நேத்ரா அவ உங்க அப்பாக்கு சின்ன ராணி டா நீ அவள சண்டிராணினு சொல்லி வசவு வாங்காத..." -- முத்தரசி.
என்ன அரசி எல்லாரும் இங்க இருக்கோம் அப்ப பாப்பாக் கூட யாரு தான் இருக்கா புள்ள தனியா பயப்படப்போகுது என்றார் சுந்தரம்.
"அம்மா வைஷி உன் மாமா ரொம்ப ஓவராப் போறாரு சொல்லிவை... அந்த வாயாடிப் பயப்படப் போறாளாவாம். இன்னேரம் அங்க யார்க் கூடவாச்சு ரகளயக் கூட்டாம இருந்தா தான் ஆச்சரியம் "
என்று சுந்தரத்தைப் பார்த்து நொடித்துக் கொண்டு மணமகள் அறையை நோக்கி சென்றார் முத்தரசி.
மனதுக்குள் எதயாச்சு இந்தப் பொண்ணு யோசிச்சுட்டு இருப்பாளே..நான் வைஷி இருப்பானு இவள தனியா விட்டுட்டு வந்துருக்கக் கூடாதோ... என்று நினைத்துக் கொண்டே நடையைய் எட்டிப் போட்டார் அப்பெண்ணரசி .
இவ்வளவு நேரம் சுந்தரத்தால் "சின்னராணி "யாகவும் , முத்தரசியால் "சாப்பாட்டுராணி" யாகவும், நேத்ரனால் "சண்டிராணி"யாகவும் அழைக்கப்படும் சுந்தரம் முத்தாரசியின் இளைய மகள் சவிதாவிற்கே விடிந்ததும் திருமணம்.
மணமகள் அறை உள் தாழ்ப்பாழ் போடப்பட்டு இருந்தது.
முத்தரசி வேகமாய் கதவைத் தட்ட...
இளம் பச்சை நிற சல்வாரில், உயர்த்திப் போட்ட கொண்டையுடன்,சரியே கழுவப்படாமல் அரைகுறையாய் இருக்கும் கண்மையுடன்,அணிகலன் அற்று மாநிறமாய்,உயரமாய்,
குழந்தைத் தனமான முகத்துடன் நின்றுகொண்டு இருந்தாள் சவிதா ...
"ஏண்டி கதவ மூடி தாழ் போட்டுருக்க?"
"டிரஸ் மாத்திட்டு இருந்தேன் மா..." என்று கூறிவிட்டு கட்டிலில் படுத்துக் கண்ணை மூடிக்கொண்டாள் அவள்.
வீட்டில் நண்டு சிண்டு முதல் பெரியவர்கள் வரை ஆனந்தமாய் இருக்க கல்யாணப் பெண்ணான சவிதாவின் முகமோ சிறு புன்னகை இன்றி நிர்மலமாய் இருந்தது.
என்ன இவ முகத்துல ஏதோ யோசனத் தெரியுதே இல்லன நான் கேட்டக் கேள்விக்கு ஒரு வரில பதில் சொல்லிட்டுப் படுத்துருக்க மாட்டாளே என முத்தரசி மனதில் புலம்பிக்கொண்டிருந்தார்.
"ஏம்மா சவி என்னாச்சிமா ஏதும் பயமா இருக்கா...இல்ல அம்மா,அப்பா,அண்ணா,அண்ணி, பொறந்த எடத்தலாம் விட்டுட்டுப் போனும்னு வருத்தப்படுறியா"
"அதெல்லாம் ஒன்னு இல்லமா மொத லைட் ஆப் பண்ணு காலேல வேமா எந்திக்கணும்" எனக் கூறிக்கொண்டேத் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
"இல்லடாமா..." என்று முத்தரசி ஆரம்பிக்க... வேகமாய் எழுந்து தன் Cellphone னை எடுத்து Headphones சைக் காதில் மாட்டிப் பாட்டுக் கேட்க ஆரம்பித்து விட்டாள்.
கொழுப்பு
கொழுப்பு
நல்லாச் செல்லம் குடுத்துக் கெடுத்து வச்சுருக்காங்க....நான் பேசிட்டே இருக்கேன் காதுல Headphone னை மாட்றத பாரேன் என மனதுக்குள் பொருமினாலும் முத்தரசியின் கண்களோ தன் மகளை வாஞ்சையாய் வருடியது....
என்னனாலு எங்களப் பிரியக் கஷ்டமா இருக்கும்ல என எண்ணிக்கொண்டேத் தன் மகளின் அருகில் படுத்து சிறிது நேரத்தில் உறங்கி விட்டாள்.
உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த சவிதா படக்கென எழுந்து அமர்ந்தாள்.
அவள் தன் அம்மா ஏதேனும் பேசிக்கொண்டிருப்பாள் என Headphone னை மட்டும் காதில் மாட்டினாள் எந்தப் பாடலயும் கேட்கவில்லை.....தற்போது அவள் ரிங்டோன் ஒலிக்க பதறிவிட்டாள்.
அமைதியாய் போனுடன் குளியல் அறைக்கு சென்றுக் கதவைத் தாழிட்டாள்.
காலை ஏற்றுப் பேசியவள் முகம் மாற வெளியே வந்து டிரஸ்ஸிங் டேபிள் மேல் இருக்கும் கார் சாவியை எடுத்துக்கொண்டாள்.
தன் அண்ணியும், மாங்கா மண்டயும்(ரவி வர்மன்)தரையில் படுத்திருக்க அவர்களை மிதிக்காமல் நடந்து ரூம் கதவைத் திறந்து வெளியேப் போனாள்.
அந்த ஹால் முழுதும் கும் இருட்டு மெது மெதுவே போனில் வெளிச்சம் பரப்பி நடந்து சென்று வெளி வாசலை அடைந்தாள்.
நுழைவாயிலில் இருந்த பெரிய கட் அவுட்டில் அவளது உருவத்தைப் பார்த்தாள்.
ஒரு நிமிடம் தான் செய்யப்போவதை எண்ணி மனத்திற்குள் தன் செல்ல அப்பாவிற்கு ஒரு Sorry யை சொல்லிக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்தாள்.
அவள் பயணமோ "ஆனந்தா மேன்சன்" னை நோக்கி இருக்க அவளது மனமோ தான் செய்யப்போகும் செயல் சரிதானா என தனக்குள் வாக்குவாதம் நடத்திக்கொண்டிருந்தது.
- தொடரும்

"ஓன் நெனப்பு நெஞ்சுக் குழி வர இருக்கு உலகம் முழுசும் உன்ன சுத்தி சுத்திக் கெடக்கு..." சினிமாப் பாடல் பூக்குடி வீதியில் இருக்கும் மக்களைத் தூங்க விடாமல் அக்கல்யாண மண்டபத்தில் ஒலித்துக் கொண்டு இருந்தது. "ஏம்ப்பா சுந்தரம் மணிதான் ஒன்பதுத் தாண்டிருச்சுல்ல புள்ளங்க நாளைக்கு வெரசா எந்திக்கனும் பாட்ட அமத்த சொல்லேன் யா..." என்று வயதான பெருசு சொல்ல...
"சரிங்க தாத்தா நான் சொல்றேன்" என ஐந்தரை அடி, ஆஜானுபாகுவான உடல், டிராக் பேன்ட் டீஷர்ட்டு, முறுக்கிய மீசை உடன் நின்று கொண்டிருந்தான் சுந்தரத்தின் மூத்த மகன் நேத்ரன்.
காலையில் நிச்சயத்திற்கு தேவயானவை வந்துவிட்டதா என சரிப்பார்த்துக் கொண்டிருந்த சுந்தரத்தின் வேஷ்டியைப் பிடித்து இழுத்து
"தாத்தா தாத்தா பொதிஉண்ட நாக்கு நம்ப வீத்துக்கு வத மாத்தாலா


"டேய் வர்மா... அத்தய பொரி உருண்டனு சொல்லக்கூடாதுனு எத்தன தடவ சொல்லிருக்கேன்


"விடுமா வைஷி அவ மட்டும் இவன மாங்கா மண்டனு கூப்ட்டு சிரிக்குறால அதான் நானும் அந்த சாப்பாட்டு ராணிக்கு பொரி உருண்டனு


என்று தன் பேரனை தூக்கித் தலைக்கு மேல் ஒரு சுற்று சுற்றி தன் இடுப்பில் வைத்துக் கொண்டாள் வைஷுயின் மாமியார் முத்தரசி.
"என்னங்க அத்த இது!!!....நேத்து வர அவ நம்ம வீட்டு பொண்ணு ஆனா நாளைக்கு இன்னொரு வீட்டு மருமக..நாமளே அவள இப்டி கேலி பேசலாமா???.."என்றாள் வைஷி.
சட்டென்று சுந்தரம் தன் கண்ணீரைத் துடைக்க வைஷி பதறி விட்டாள்.
"சாரி மாமா நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா.." -- வைஷி.
"இல்லமா நேத்து தான் அவள சின்னப் புள்ளயாத் தூக்கிட்டு வந்த மாதிரி இருக்கு நாளைக்கு இன்னொரு வீட்டு மருமக.. நாளன்னில இருந்து அவ சத்தம் இல்லாம வீடே நல்லா இருக்காதேம்மா...அதான் கஷ்டமா இருக்கு"-- சுந்தரம்.
"ஆமாப்பா அந்த சண்டிராணி இல்லாம வீடே ரொம்ப அமைதியா இருக்கும்" -- நேத்ரன்.
"லேய் நேத்ரா அவ உங்க அப்பாக்கு சின்ன ராணி டா நீ அவள சண்டிராணினு சொல்லி வசவு வாங்காத..." -- முத்தரசி.
என்ன அரசி எல்லாரும் இங்க இருக்கோம் அப்ப பாப்பாக் கூட யாரு தான் இருக்கா புள்ள தனியா பயப்படப்போகுது என்றார் சுந்தரம்.
"அம்மா வைஷி உன் மாமா ரொம்ப ஓவராப் போறாரு சொல்லிவை... அந்த வாயாடிப் பயப்படப் போறாளாவாம். இன்னேரம் அங்க யார்க் கூடவாச்சு ரகளயக் கூட்டாம இருந்தா தான் ஆச்சரியம் "
என்று சுந்தரத்தைப் பார்த்து நொடித்துக் கொண்டு மணமகள் அறையை நோக்கி சென்றார் முத்தரசி.
மனதுக்குள் எதயாச்சு இந்தப் பொண்ணு யோசிச்சுட்டு இருப்பாளே..நான் வைஷி இருப்பானு இவள தனியா விட்டுட்டு வந்துருக்கக் கூடாதோ... என்று நினைத்துக் கொண்டே நடையைய் எட்டிப் போட்டார் அப்பெண்ணரசி .
இவ்வளவு நேரம் சுந்தரத்தால் "சின்னராணி "யாகவும் , முத்தரசியால் "சாப்பாட்டுராணி" யாகவும், நேத்ரனால் "சண்டிராணி"யாகவும் அழைக்கப்படும் சுந்தரம் முத்தாரசியின் இளைய மகள் சவிதாவிற்கே விடிந்ததும் திருமணம்.
மணமகள் அறை உள் தாழ்ப்பாழ் போடப்பட்டு இருந்தது.
முத்தரசி வேகமாய் கதவைத் தட்ட...
இளம் பச்சை நிற சல்வாரில், உயர்த்திப் போட்ட கொண்டையுடன்,சரியே கழுவப்படாமல் அரைகுறையாய் இருக்கும் கண்மையுடன்,அணிகலன் அற்று மாநிறமாய்,உயரமாய்,
குழந்தைத் தனமான முகத்துடன் நின்றுகொண்டு இருந்தாள் சவிதா ...

"ஏண்டி கதவ மூடி தாழ் போட்டுருக்க?"
"டிரஸ் மாத்திட்டு இருந்தேன் மா..." என்று கூறிவிட்டு கட்டிலில் படுத்துக் கண்ணை மூடிக்கொண்டாள் அவள்.
வீட்டில் நண்டு சிண்டு முதல் பெரியவர்கள் வரை ஆனந்தமாய் இருக்க கல்யாணப் பெண்ணான சவிதாவின் முகமோ சிறு புன்னகை இன்றி நிர்மலமாய் இருந்தது.
என்ன இவ முகத்துல ஏதோ யோசனத் தெரியுதே இல்லன நான் கேட்டக் கேள்விக்கு ஒரு வரில பதில் சொல்லிட்டுப் படுத்துருக்க மாட்டாளே என முத்தரசி மனதில் புலம்பிக்கொண்டிருந்தார்.
"ஏம்மா சவி என்னாச்சிமா ஏதும் பயமா இருக்கா...இல்ல அம்மா,அப்பா,அண்ணா,அண்ணி, பொறந்த எடத்தலாம் விட்டுட்டுப் போனும்னு வருத்தப்படுறியா"
"அதெல்லாம் ஒன்னு இல்லமா மொத லைட் ஆப் பண்ணு காலேல வேமா எந்திக்கணும்" எனக் கூறிக்கொண்டேத் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
"இல்லடாமா..." என்று முத்தரசி ஆரம்பிக்க... வேகமாய் எழுந்து தன் Cellphone னை எடுத்து Headphones சைக் காதில் மாட்டிப் பாட்டுக் கேட்க ஆரம்பித்து விட்டாள்.
கொழுப்பு


என்னனாலு எங்களப் பிரியக் கஷ்டமா இருக்கும்ல என எண்ணிக்கொண்டேத் தன் மகளின் அருகில் படுத்து சிறிது நேரத்தில் உறங்கி விட்டாள்.
உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த சவிதா படக்கென எழுந்து அமர்ந்தாள்.
அவள் தன் அம்மா ஏதேனும் பேசிக்கொண்டிருப்பாள் என Headphone னை மட்டும் காதில் மாட்டினாள் எந்தப் பாடலயும் கேட்கவில்லை.....தற்போது அவள் ரிங்டோன் ஒலிக்க பதறிவிட்டாள்.
அமைதியாய் போனுடன் குளியல் அறைக்கு சென்றுக் கதவைத் தாழிட்டாள்.
காலை ஏற்றுப் பேசியவள் முகம் மாற வெளியே வந்து டிரஸ்ஸிங் டேபிள் மேல் இருக்கும் கார் சாவியை எடுத்துக்கொண்டாள்.
தன் அண்ணியும், மாங்கா மண்டயும்(ரவி வர்மன்)தரையில் படுத்திருக்க அவர்களை மிதிக்காமல் நடந்து ரூம் கதவைத் திறந்து வெளியேப் போனாள்.
அந்த ஹால் முழுதும் கும் இருட்டு மெது மெதுவே போனில் வெளிச்சம் பரப்பி நடந்து சென்று வெளி வாசலை அடைந்தாள்.
நுழைவாயிலில் இருந்த பெரிய கட் அவுட்டில் அவளது உருவத்தைப் பார்த்தாள்.
ஒரு நிமிடம் தான் செய்யப்போவதை எண்ணி மனத்திற்குள் தன் செல்ல அப்பாவிற்கு ஒரு Sorry யை சொல்லிக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்தாள்.
அவள் பயணமோ "ஆனந்தா மேன்சன்" னை நோக்கி இருக்க அவளது மனமோ தான் செய்யப்போகும் செயல் சரிதானா என தனக்குள் வாக்குவாதம் நடத்திக்கொண்டிருந்தது.
- தொடரும்