Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சோலை மலரே! காலை கதிரே!

Messages
40
Reaction score
14
Points
8
சோலை மலரே! காலை கதிரே!
ஆனந்தன் - சுரபி
சதானந்தன் - சௌமினி

வரலட்சுமி - ஆனந்தனின் தாய்
குணசீலன் சுரப்பியின் தம்பி

ஆனந்தன் வரலட்சுமியின் மூத்த மகன். வெளிநாட்டில் படித்தவன். தொழிலில் கொஞ்சம் சறுக்கிவிட்டான் என்றதும் தாய்க்கு வான் மீது நம்பிக்கை இல்லை. இளையவன் சதானந்தன் மீது தான் முழு நம்பிக்கை. அவன் எடுத்த அனைத்திலும் வெற்றியை ஈட்டி தாயின் நம்பிக்கையையும் பெற்றிருந்தான்.

ஒருமுறை ஆனந்தன் தொழில் தொடர்பாக சென்னைக்கு சென்ற பொது அங்கே நண்பனின் வீட்டில் தனியாக தங்கி இருக்கிறான். அதே குடியிருப்பில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சௌமினி குணசீலன் ஆகிய இரட்டையர்கள் இருவரும், ஆள் இல்லாத வீட்டில் திருடன் வந்துவிட்டதாக எண்ணி அவனை பிடிக்க வருகிறார்கள் அப்போது அங்கே ஒரு புதியவன் சுரம் அடித்து கிடப்பதை கண்டுவிட்டு உதவிக்கு வருகிறார்கள். அவர்களுடைய தமக்கை சுரபி அந்த புதியவன் ஆனந்தனை அதிக அக்கறையோடு பார்த்துக்கொள்கிறாள்.

மூன்றே நாட்களில் இருவரும் மனதிற்கு வெகு நெருக்கமாகிவிட உடனே திருமணமும் செய்துகொள்கிறார்கள்.

ஊரில் ஆனந்தனின் தாய் அவர்களை வீட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை என்பதால் அவர்கள் தனியே ஒரு வீட்டில் தங்கி குடும்பம் நடத்த துவங்குகிறார்கள்.

சுரப்பியின் தம்பியும் தங்கை சௌமினியின் அக்காவோடும் அத்தானோடும் ஒரே வீட்டில் இருப்பார்கள். அங்கே வரும் ஆனந்தன் குத்தலாக பேசி பேசியே அவர்களை அங்கிருந்து விரட்டிவிடுவான். அவர்கள் மீண்டும் தங்கள் வீட்டுக்கே சென்று நன்கு படித்து முன்னேறுவார்கள். அப்போதும் அவர்கள் பணத்துக்காக தன் அண்ணனை ஏமாற்றி குடும்பத்திற்குள் நுழைந்துவிட்டார்கள் என்கிற அவனுடைய சந்தேகம் குறையாது. பிறகு மெல்ல மெல்ல அவர்களை புரிந்துகொண்டு தாயையும் சமாதானம் செய்து சௌமினியையும் கைபிடிப்பான்.
 

Latest posts

New Threads

Top Bottom