நிமிடம் : 7
ரதன் கேம்மின் உள்ளே செல்ல அவன் முன் வந்து நின்றான் கோமாளி மனிதன்.. அவன் தன் கையில் வைத்திருந்த சக்கரத்தை சுழற்ற அதனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரதன். அதைப் பார்க்க , பார்க்க அவன் அந்த கோமாளி மனிதனின் பேச்சை கேட்க ஆரம்பித்தான்.
வருக ! வருக !.மானிடா! உன்னை விளையாட்டு உலகத்திற்கு வரவேற்கிறேன் !
கேம்ம ஆரம்பிக்கலாமா ! ஆனா அதுக்கு முன்னாடி இந்த கேம்முடைய விதிமுறைகளைப் பார் மானிடா ! என்று கூறிய கோமாளி மனிதன் தன் கையசைக்க ரதன் முன் தோன்றியது ஒரு திரை. அந்த திரையில் விதிமுறைகள் வரிசையாக வரத் தொடங்கியது. .
1, ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு லைஃப் டைம் விகிதம் 5 கட்டத்தை கடக்க உனக்கு 5 லைஃப் டைம் கொடுக்கப்படும். ஒரு கட்டத்தில் லைஃப் டைம் உபயோகப்படுத்தவில்லை என்றாலும் அந்த லைஃப் டைம்மை அடுத்த கட்டத்திற்கு உபயோகப்படுத்த முடியாது.
2, ஒவ்வொரு கட்டத்தையும் கடக்க உனக்காக கொடுக்கப்பட்ட டைம் லிமிட் 60 நிமிடங்கள்
3, விளையாட்டை ஆரம்பிச்சா இடையில் நிறுத்தக் கூடாது.
என்று அந்த. திரையில் தெரிய, அதை ரதன் பார்த்துக் கொண்டிருந்தான்.
என்ன மானிடா ! பார்த்துட்டியா ! விளையாட நீ ரெடியா ? இல்லையா ?
விளையாட நீ ரெடினா அந்த ஓகே பட்டன அழுத்து என்று கோமாளி மனிதன் கூற
ரதன் சற்றும் யோசிக்காமல் ஓகே பட்டனை அழுத்தினான்.அவன் அப்படி செய்ததும் அட்டகாசமாக சிரித்த அந்த கோமாளி மனிதன்
செய் அல்லது செத்துமடி ! மானிடா !
இப்போ உன் முன்னாடி தோன்றும் அனைத்தும் நிஜம். நீ பார்க்கும் அனைத்தும் நிஜம் . நீ தான் எல்லாத்தையும் தாண்டி வரப் போற ! உன்னை காப்பாத்திக்கப் போற ! என்று அவன் ரதன் கண்களைப் பார்த்துக் கூற , ரதன் அதற்குச் சம்மதமாக தலையசைத்தான்.
அடுத்த கட்டத்திற்கு வந்தால் மீண்டும் சந்திக்கலாம் என்று கூறிவிட்டு அந்த கோமாளி மனிதன் மறைந்துவிட,
அவன் மறைந்ததும் ரதனின் முன் பட்டன்கள் தோன்றியது . அதில் மேலே, கீழே, வலப்பக்கம் , இடப்பக்கம் செல்வதற்கான குறியீடுகள் மற்றும் ஓடுவது, தாவுவதற்கான பட்டன்கள் அவன் முன் இருந்தது. அதை பார்த்த ரதன் பட்டனை அழுத்திய வண்ணம் முன்னால் செல்ல, அவன் முன் ஒரு பெரிய கதவு தோன்றியது.
கதவு தானாக திறக்க அதன் உள்ளே சென்றான் ரதன்.. அந்த இடம் முழுவதும் இருட்டாக இருக்க., ரதன் நடந்து செல்ல முற்பட .
என்னைக் காப்பாற்றுங்க ! என்று ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. அதை கேட்ட ரதன் , அந்த ஓசை கேட்ட இடம் நோக்கிச் சென்றான். அப்போது வெளிச்சம் திடீரென்று வர , அந்த இடத்தை சுற்றிப் பார்த்தான் ரதன்.
அங்கு வழியெங்கும் பொருட்கள் சிதறிக் கிடந்தது. அதை பார்த்து நடந்து கொண்டிருந்த ரதன் முன் வேகமாக ஓடினான் ஒருவன். அவன் யாரென்று ரதன் திரும்பி பார்க்க அங்கு யாரும் தென்படவில்லை.
குழம்பியவாறே நடந்து சென்ற ரதன் ,ஒரு ரூமின் முன் நிற்க கதவு தானாகத் திறந்தது.
அங்கு சென்றவன் அதிர்ச்சியடைந்தான். அங்கு சுவர் எல்லாம் ரத்தக் கறைகளாக இருக்க நிமிர்ந்து பார்த்த ரதன் திடுக்கிட்டான். அங்கு ஒருவன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தான். அதை பார்த்த ரதனிற்கு பயத்தில் மூச்சு வாங்கியது. ரதன் இப்படி நிற்க ,மறுபடியும் அலறல் சத்தம் கேட்டது.
என்னை காப்பாற்றுங்க ! என்னை கொலை செய்ய வராங்க என்று ஒரு பெண் குரல் கேட்க, சத்தம் வந்த திசை நோக்கி ஓடினான் ரதன். அங்கு கையில் கத்தியோடு ஒரு பெண்ணை துரத்திக் கொண்டிருந்தான் ஒருவன் .
ரதன் அவனை பிடிக்க முன்னால் ஒரு அடி எடுத்து வைக்க அவன் நின்றிருந்த இடத்தை தவிர ,சுற்றி உள்ள அனைத்தும் கீழே சென்றது.
இவன் மட்டும் தனித்து மேலே நிற்க ,அவனை நோக்கி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் பல மண்டை ஓடுகள் வட்டமடித்தது. அது வாய் திறக்க நெருப்பாக கீழே விழுந்தது . நெருப்பு ரதனை நோக்கி வர அதில் இருந்து தப்பிக்க ,வலப்பக்கம் ஒரு அடி வைத்தவன் தடுமாற கீழே பார்த்தான் ரதன்.
அங்கு நெருப்பு குழம்பாக இருந்தது . பயத்தில் தடுமாறியவன் கால்கள் அந்தரத்தில் மிதக்க வேகமாக அருகில் தொங்கிக் கொண்டிருந்த கயரை பிடித்தான். அதை பிடித்து நின்ற ரதன் அப்போது தான் கவனித்தான்.
தான் ஒரு சதுரத்தின் மேல் நின்று கொண்டிருக்க ,அவனை சுற்றி பொருள் எதுமின்றி இருந்தது. அவன் சற்று நகர்ந்தாலும் கீழே நெருப்புக் குழம்பில் விழுவது நிச்சயம் என்று தெரிந்தது. கீழே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை பயத்தோடு ரதன் பார்த்துக் கொண்டிருக்க ஒரு ஒலி கேட்டது.
மானிடா ! நெருப்பு ! பார்த்து ! . அவர்கள் தாக்குதலில் இருந்து தப்பித்து வெளியே வா ! அந்த பெண்ணை வேறு காப்பாற்ற வேண்டும் . அங்கு நிமிடம் ஆரம்பிச்சாச்சு ! சீக்கிரம் மானிடா! என்று அந்த ஒலி கூற ரதன் மந்திரிச்சு விட்டவன் போல் தாக்குதலுக்கு தயாரானான்.
அந்த மண்டை ஓடுகள் அவனை நோக்கி நெருப்பை கக்க , ரதன் குனிந்து, நிமிர்ந்து, அமர்ந்து அதன் தாக்குதலை சமாளிக்க , ஒரு கட்டத்தில் அவனை நோக்கி வந்த நெருப்பை சமாளிக்க முடியாமல் சற்று நகர்ந்தவன் கீழே விழ , கடைசி நொடியில் சதுரத்தின் விளிம்பை பிடித்தவன் மேலே நோக்கி வர முயற்சி செய்து கொண்டிருந்தான்.
அப்போது சட்டென்று அவன் பிடித்திருந்த சதுரம் நகர்ந்து மேல் நோக்கிச் சென்று நின்றது. அது நின்றதும் ரதன் அந்த இடத்தை பார்க்க நெருப்பு எதுவுமின்றி அமைதியாக இருந்தது. ரதன் குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவன் கால்களில் ஏதோ ஊற, கீழே குனிந்து பார்த்த ரதன் அதிர்ந்தான் .
அங்கு கைகள் பல அவனை சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தது. அது அவனை பிடிக்க முயல , அதை பார்த்த ரதன் பயத்தில் வேகமாக ஓட, அருகில் சத்தம் கேட்டது . சத்தம் வந்த திசையை நிமிர்ந்து பார்த்த ரதன் பதட்டமானான்..
மேலிருந்து ஒரு இரும்பு குண்டு அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.அவன் அந்த இரும்பு குண்டில் இருந்து விலக , அது அவனை பிடிக்க வந்து கொண்டிருந்த ஒரு கையின் மேல் விழந்து, கை நசுங்கி ரத்தம் தெறித்தது.
அதை பார்த்து ரதன் வேகமாக ஓட, இரும்பு குண்டில் இருந்து தப்பித்த சில கைகள் மீண்டும் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது. மேலே பார்த்தபடியே ஓடிக் கொண்டிருந்த ரதனை நோக்கி வலப்பக்கத்தில் இருந்து இரும்பு குண்டு வர சட்டென்று குனிந்தான் ரதன். அது அடுத்து வந்த சில கைகளின் மேல் விழுந்து ரத்தம் தெறித்தது.
இப்படி இரும்பு குண்டையும், கைகளையும் பார்த்து ஓடிக் கொண்டிருந்த ரதன் அப்போது தான் கவனித்தான் நிமிடம் 10 ஆக இருந்தது. இதில் இருந்து தப்பிக்கும் வழியை சுற்றிமுற்றி பார்க்க ஒரு கதவு மேலிருந்து கீழ் நோக்கி வந்து கொண்டிருந்தது .
வேகமாக கதவினை நோக்கி ஓடியவன் எதிரே ஒரு தலையில்லாத மனிதன் கத்தியோடு அவனை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவனிடம் இருந்து தப்பிக்க வேகமாக அவனை தாக்கிய ரதன் இரும்பு குண்டு அவனை நோக்கி வருவதை பார்த்தவன் சட்டென்று அமர , இரும்பு குண்டு அந்த மனிதனின் தலையை வெட்டிச் சென்றது.
அந்த மனிதன் கீழே விழ, கதவு மூடும் தருவாயில் இருந்தது. வேகமாக ஓடிச் சென்றவன் கடைசி நொடியில் அதன் கதவின் அடியில் புகுந்து அந்த பக்கம் சென்றான் ரதன்.
அவன் அந்த பக்கம் சென்று நின்றதும் அவன் முன் கோமாளி மனிதன் தோன்றினான். அவனை ரதன் பயத்தோடு பார்த்துக் கொண்டிருக்க
முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்து விட்டாய் மானிடா ? என்று அந்த கோமாளி மனிதன் கூறிக் கொண்டே தன் கையில் இருந்த கத்திக் கொண்டு தன் கால்களை வெட்டிக் கொண்டான்.வெட்டிக் கொண்டவன் சற்று நேரத்தில் மறைந்தான்.
***************************
முதல் கட்டத்தை ரதன் கடந்ததை பார்த்த பொழிலன் வெறி பிடித்தவன் போல் எல்லா பொருட்களையும் தூக்கி எறிந்தான்.
விட மாட்டேன் ! உன்னை ஜெயிக்கவிட மாட்டேன்டா என்று கூறியவன் போனை எடுத்துக் கொண்டு ரூமை நோக்கிச் சென்றான்.
திக் திக் தொடரும்