தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே.....
அத்தியாயம் -7
அவளின் கைகளைப் பற்றியதும் அவனுக்குள் சொல்லமுடியாததொரு உணர்வுகள். இத்தனை நாட்களில் யாரிடமும் தோன்றியிராததொரு புது அனுபவம். 'எத்தனை மென்மையானக் கரங்கள். இவ்வளவு மென்மையாய் இருக்குமா கரமா இல்லை மலர்ச்சரமா..... என்னமோ செய்றாளே என்னை ........ 'அவனுள் ஒரு இன்ப அவஸ்த்தையை அவன் அனுபவிக்க
'டேய்..... உன்னை பட்டிமன்றமா நடத்தச் சொன்னாங்க நீ விசாரிக்க வந்த அதை மறந்துட்டு என்னப் பண்ணிட்டு இருக்க உன்னை எல்லோரும் எவ்வளவு கெத்தா ஃபீல் பண்ணிருக்காங்க..... நீ என்னடான்னா பொம்பளபுள்ள கையைப் புடிச்சு விசாரிச்சிட்டு இருக்க.....'என்று அவன் மனசாட்சி அவனை காறித்துப்ப
டேய் ..... அடங்கு ஏதோ இப்போ தான் என் வாழ்க்கைல இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்குது. அது உனக்கு பொறுக்கலயா.....என்று மனசாட்சியை அடக்கிவிட்டு அவள் கைகளை தன் ஒரு கரத்தால் தாங்கி மற்றொரு கரத்தால் அந்த ப்ரெஸ்லெட்டை ஆராய்ந்தவன்,
"மிஸ். ஆதினி இதை நான் ஒரு ஸ்நாப் எடுத்துக்கறேன்..... "என்றவாறே அவள் கைகளை பற்றிய வாக்கிலேயே தன் மொபைலில் படம் எடுத்துக் கொண்டிருக்க
"ஆது..... அவனை கையை எடுக்கச் சொல்லு மொதல்ல ..... இவன் ப்ரேஸ்லெட்டை பார்க்கிற மாதிரி தெரில..... நீ அந்த ப்ரெஸ்லெட்டை கழட்டி அவன்கிட்ட குடுன்னு சொல்றேன் கேட்க மாட்டேங்குற.... "என்று செழியன் கோபத்துடன் கூற
செழியனை நிமிர்ந்து பார்த்த ஆதினி கண்களாலேயே அவனிடம் கெஞ்ச உதயனோ அவள் கைகளில் உள்ள ப்ரேஸ்லெட்டை முன்னும் பின்னுமாய் பல படங்களை எடுத்துக் கொண்டவன் .... "ஒகே மிஸ். ஆதினி நீங்க ஆஸ்பிடல்ல சேர்த்தப்போது அவனுக்கு நினைவு இருந்ததா..... ஆஸ்பிடல்ல இருக்கும் போது எப்பவாவது வேற ஏதாவது சொல்லிருக்கானா.... வேற யார்கிட்டயாவது பேசினானா .... "என்று கேட்க
"நான் பார்க்கும் போது நினைவு இருந்தது. அவனைப் பற்றி அவனிடம் கேட்டபோது தன் பேர் செழியனென்றும் இந்த பிரேஸ்லெட்டை என் கையில் போட்டு விட்டு, நான் வந்து கேட்கிறவரைக்கும் இதை யார் கிட்டையும் கொடுக்கக் கூடாதுன்னும் சொன்னான். அதுதான் அவன் பேசிய கடைசி வார்த்தை அதுக்கப்புறம் அவன் பேசல. நான் எடுத்துட்டு போகும் போது அவனுக்கு நினைவு போயிடுச்சு, அதனாலதான் இம்மீடியட்டா ஹாஸ்பிடல்ல சேர்க்கணும்னு நினைச்சு சேர்த்தேன்".
"அதற்கு பிறகு அவனுக்கு ஆபரேஷன் நடந்ததுல அவன் கோமால தான் இருந்தான். இடையில ரெண்டு மூணு தடவை நினைவு வந்த போதும் அவன் பேசவில்லை ஆனால் அவன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா நினைவு திரும்பியது. உடல் நிலையும் தேறியது. ஒரு சில நாட்களில் பழைய நிலைக்கு நிலைமைக்கு வந்து விடுவான் என்று தான் நான் நினைத்தேன். நான் போகும்போது அவனை செக் பண்ணிட்டு தான் எப்பவும் போவேன் , ஏன்னா நான் கொண்டுவந்து சேர்த்த பேஷண்ட் அவன் என் பொறுப்புன்னு நான் நினைச்சேன்....."
ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவள்
"அப்போ அவனோட உடல் நிலைமை ஸ்டேபிலா தான் இருந்தது ஆனால் மறுநாள் காலையில் நான் வந்து பார்க்கும்போது அவன் அங்க இல்ல.... மார்ச்சுவரியில் தான் இருந்தான் ....." என்று கண்கள் கலங்க கூறி முடித்தாள்.
அவள் கண்கள் கலங்குவதை கண்ட செழியன் எழுந்து வந்து அவளருகில் அமர்ந்து அவள் கைகளைப் பற்றிக் கொள்ள .......
அவள் விழிகளில் நீரைக் கண்ட உதயனின் மனதில் அவளை அணைத்து ஆறுதல் படுத்த துடித்த மனதை அடக்கிக் கொண்டு "மிஸ். ஆதினி ஆப்ட்ரால் எ பேசன்ட் ..... நீங்க ஒரு டாக்டர் எத்தனையோ கேஸ் இனிமே இதுபோல் பார்ப்பீங்க.... இதுக்கு போய் கண் கலங்குறீங்க ....." என்று சற்றே நிமிர்ந்து அமர
"உங்களை பொறுத்தவரை அவன் பேசன்ட் ஆனா எனக்கு அப்படி இல்லை சார்.... இனிமேல் இப்படி பேசாதீங்க...." என்று அவள் சிறு கசப்பான குரலில் கூற
"பார்த்து ஒரு பதினைந்து இருபது நாள் நீங்க கேர் எடுத்த பேசன்ட் தான, அதுக்கு ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுறீங்க..... காம்டவுன் மிஸ். ஆதினி...". என்று கூறிய உதயனை
"உங்களுக்கு சொன்னா புரியாது சார்.... வேற இன்னும் ஏதாவது கேள்வி இருக்கா .... எனக்கு நேரமாகுது.... " என்றவளிடம் மேலும் சில கேள்விகளைக் கேட்டவன்
"ஒகே மிஸ். ஆதினி பர்தரா ... ஏதாவது தகவல் தேவைப்பட்டா உங்களைக் காண்டாக்ட் பண்றேன். உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டாலும் காலைல நான் கூப்பிட்ட நம்பர்க்கு கூப்பிடுங்க....." என்றவன் அவளை நோக்கி கைகளை நீட்ட அவளும் அவன் கைப் பற்றி குலுக்கியவள்
"ஒகே சார் தேங்க்யூ ..... சீக்கிரம் நல்லத் தகவலா சொல்லுங்க....." என்றபடியே கிளம்பியவள் முன்னே செல்ல அவளைப் பின் தொடர்ந்தான் உதயன், வாயில் படியைத் தாண்டி வெளியே சென்றவள் சட்டென்று ஏதோ நினைத்தவளாய் நின்று திரும்ப
அதை எதிர்பாராது அவளின் யோசனையில் அவளைத் தொடர்ந்து வந்தவன் மீது அவள் மோதி தடுமாற சட்டென அவளை இடைப் பற்றி கீழே விழாமல் பஞ்சுப் பொதியென இருந்தவளை தன் எஃகு கைகளால் தாங்கிப் பிடித்தான். அவள் கரங்கள் அவன் தோளினை இறுகப் பற்றியிருக்க , ஒரு சில வினாடி ஸ்தம்பித்து போய் இருவிழிகளும் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டது.
புடவை அணிந்திருந்தவளின் வெற்றிடையில் அவன் கரம் பதிந்திருக்க ..... அவள் உடலெங்கும் சிலிர்த்து முகம் செம்மையை தடவிக்கொள்ள, தன்னை நிதானித்துக் கொண்டவள் அவன் கரங்களைத் தன் கைகளால் பற்றி அந்த கைகளை விலக்கிவிட, ஒரு சில வினாடிகளேயானாலும் அந்த ஸ்பரிசத்தை விட்டுவிட முடியாமல் தவித்து பின் அவனும் தன் கைகளை எடுத்து அவளை விடுவித்தான்.
"என் போன் ......" என்று அவள் வார்த்தை வராமல் தடுமாற "இருங்க வர்றேன்...." என்றவாறே அவன் உள்ளே சென்று அவள் அமர்ந்திருந்த இடத்தில் அவள் மறந்துவிட்டுருந்த அவளின் கைபேசியை எடுத்தவன் ஒரு நிமிடம் தாமதித்து அதை ஆன் செய்ய அவன் எதிர் பார்த்தது போலவே அது லாக் செய்யப் படாமல் இருக்க சட்டென அதனுள் இருந்த அவளின் புகைப்படங்கள் சிலவற்றை அவன் கைபேசியில் சேமித்துக் கொண்டு அதை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான்.
அவர்களை பார்த்துக்கொண்டு நின்ற செழியனுக்கோ கோபம் தலைக்கேற
"ஆது.... நீ வா ..... போலாம் ..... இவன் விசாரணைக்கு கூப்பிட்டானா இல்ல சைட் அடிக்க கூப்பிட்டானான்னு தெரியல..... "என்று கூற அவனின் குரலுக்கு கட்டுபட்டு
"ஓகே தேங்க்யூ ..... " என்றவாறே அவள் கிளம்ப அவளின் பின்னேயே சென்ற தன் மனதை கடிவாளமிட்டு நிறுத்தியவன்
"மிஸ். ஆதினி ஒன் மினிட்...." என்று நிறுத்த
"மொதல்ல அவனை மிஸ் . ஆதினி மிஸ். ஆதினிங்கறதை நிறுத்தச் சொல்லு எரிச்சலா இருக்கு..." என்று செழியன் கடுப்பாகினான்.
"ஆதினின்னு கூப்பிட்டாலே போதும் .... சொல்லுங்க சார் .... "என்று கேட்டவளிடம்
"உங்களுக்கு யார் மேலயாவது ஒரு சின்ன டவுட்டோ இல்லை ஏதாவது தகவலோ கிடைச்சா உடனே எனக்கு போன் பண்ணுங்க .... ஓகே...." என்றவனிடம் விடைப்பெற்று கிளம்பியவளை விழியெடுக்காமல் பாரத்தவன் அவளின் நினைவுகளை தன்மனதில் சேமித்தான்.
செழியனின் இறப்புக்கான மர்மத்தின் முடிச்சை அவிழ்ப்பானா.....?
இல்லை ஆதினியுடன் காதல் முடிச்சிடுவானா.....?
தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே......
அத்தியாயம் - 8 , 9 ,10 ,11.
"அவன் ரோபோ போலீஸா இல்ல ரோமியோ போலீஸா..... அவன் தான் கேட்குறான்னா நீயும் கைய குடுத்துட்டு நிக்குற.... அதை கழட்டி குடுக்க வேண்டியதுதான ..." என்று கோபமாய் செழியன் கேட்க ....
"நீ போட்டுவிட்டது டா எனக்கு கழட்ட மனசில்ல நீ போடும் போது என்கிட்ட சொன்னது இன்னும் என்காதுல கேட்டுட்டே இருக்கு செழியா ..... அவன் சாதாரணமா தான் பிடிச்சான் நீதான் ஓவரா கோபப் படுற...." என்று கூறி ஆதினியிடம்
"ஓ.... அவன் சாதாரணமா தான் பிடிச்சானா... நீயெல்லாம் என்ன டாக்டர் .... ஒருத்தன் தொடுறதுல இருக்குற வித்தியாசம் கூடவா தெரியல...." என்று கடுக்கடுத்தவனை
"இப்போ நீ ஏன் இவ்வளவு கோபப்படுற ..... அவன் இதைப் பார்த்தா க்ளு கிடைக்குன்னு தான பார்த்தான், நீ ஏன் இப்படி பேசுற போடா .... அவனை பார்த்ததுலேர்ந்தே நீ இப்படிதான் பேசிட்டு இருக்க ...." என்று இவள் முகத்தை திருப்பிக் கொள்ள
"அப்படியா அப்ப சரி இனிமே நான் எதுவும் பேசல .... நீ எப்படி வேணும்னாலும் இரு நான் ஏன் உன்னைக் கேட்கப் போறேன்......" என்றவன் அடுத்த வந்த மூன்று நாட்களாய் ஆதினியிடம் பேசவே இல்லை. முதல் நாள் முழுவதும் அவள் கண்ணில் படாமல் மறைந்திருந்தவன், அவள் அவனைக்காணாது ஏங்கித் தவிக்க அவள் கண்முன் தோன்றினான். அவளும் போடாவென விட்டுப் பிடிக்க செழியன் முறைத்துக் கொண்டே திரிய ஆதினி பொறுமையை இழந்தாள்.
"டேய்... ப்ளீஸ்டா .... என் செல்லமில்ல.... என் புஜ்ஜுல்ல இங்க பாருடா ..... நான் தான் சாரி கேட்டேன்ல்ல மூணுநாளா இப்படி என்கிட்ட பேசாம இருக்க.... எத்தனை தடவை சாரி கேட்டேன்..... ஜிங்லி நீயாச்சும் சொல்லு அவன்கிட்ட ....." என்று செண்பாம்மாவை துணைக்களைக்க
"அவன் கெடக்குறான் லூசுப்பய.... நீ வா பப்ளூ நான் உனக்கு சூடா நவரத்னகுருமாவும் சப்பாத்தியும் போட்டிருக்கேன் வந்து சாப்பிடு வா ..... " என்று அவர் ஆதினியை அழைக்க
"எனக்கு ஒண்ணும் வேண்டாம் .... நீங்களே சாப்பிடுங்க நான் கெளம்புறேன். ஜனனி வெய்ட் பண்ணுவா..... நீ பேசமாட்டதான .... நானும் உங்கூட பேசமாட்டேன் போ..... என் பின்னாடி வந்த .... பேயோட்டுற சாமியாரைக் கூட்டிட்டு வந்து உன்னை ஓட்டிடுவேன்...... " என்று கண்களில் நீர் துளிர்க்க செழினிடம் கூறிவிட்டு கிளம்பிச்செல்ல
செண்பாம்மாவிற்க்கு செழியன் மேல் அளவுகடந்த கோபம் வர "அடேய்... எடுபட்டப் பயலே..... ஏன்டா பப்ளூக்கிட்ட பேசமாட்டேங்குற.... இன்னைக்கு புல்லா உனக்கு டீவி போடமாட்டேன் போ.... போய் பக்கத்து வீட்டுல ஒரு கெழவன் எப்பப்பாரு ஒரு ஓட்ட ரேடியோவ வெச்சிட்டு உக்கார்ந்திருப்பான் அதை கேளு ......" என்று தானாய் பேசிக்கொண்டிருக்க ,
செழியன் ஒன்றுமே கூறாமல் அமைதியாய் அமர்ந்திருந்தவன் ஆதினியின் கார் புறப்படும் சத்தம் கேட்டதும் சட்டென்று அவ்விடம் விட்டு அகல.... அவன் இல்லா வெறுமையை உணர்ந்த செண்பாம்மா
"போய்ட்டானா...... அவ இல்லாம ஒரு நிமிசம் நிக்கறதில்ல இதுல தொரைக்கு கோபம் வேற...." என்று தனக்கு தானே பேசிக் கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தார்.
ஆதினிக்கு மருத்துவமனை சென்று ஜனனியைப் பார்க்கும் வரை கவலையோடு செல்ல "ஹாய் டா என்னாச்சு .... முகம் டல்லா இருக்கு ...... ஏன் ரோபோ கால் பண்லேன்னு வருத்தமா ..... ? என்று சூழ்நிலை புரியாமல் கேட்டு வைக்க
"அடியேய்.... உன் வாய் இருக்கே உன் வாய் எப்போ எதைப் பேசனும்ன்னு தெரியாதா பக்கி..." என்றபடியே அவளை உள்ளே அழைத்துச்செல்ல
"ஹேய் என்னடீ நாம தான இருக்கோம் இப்போ என்ன உன் பிரச்சினை.... வர வர உன் போக்கே சரியில்ல மொதல்ல உன்னை ஒரு சைக்யாட்ரிஸ்கிட்ட காட்டனும் டூ மச்சா பண்ற ..... " என்ற ஜனனிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை ஆதினிக்கு ஏனெனில் ஆதினி செழியனின் தற்போதைய நிலையைப் பற்றி எதுவும் தன் தோழியிடம் கூறியிருக்கவில்லை.
எதையும் மறைக்காமல் பகிர்ந்து கொள்ளும் உயிர்த் தோழியுடன் இதை மறைத்துதான் வைத்திருந்தாள். செழியன் இறந்த வரை மட்டுமே ஜனனிக்கு தெரியும். அதற்கு பின் செழியன் தன் கண்ணுக்கு தெரிந்ததை ஜனனிக்கு சொல்லவில்லை ஆதினி. முதலில் தானே நம்பாத ஒரு விசயத்தை எப்படி சொல்வது என்ற தயக்கம். அதன் பின் இதைச் சொன்னால் தன்னை நம்புவார்களா என்ற தயக்கமே ஆதினி இதை மறைக்க காரணம்.
மதியம் வரை நிமிரக்கூட முடியாமல் வேலை அவளை ஆக்கரமிக்க செழியனை மறந்துப் போனாள். அந்த சமயங்களில் செழியன் அவளைத் தொந்தரவு செய்வதில்லை. உணவு நேரம் தாண்டி வெகு நேரம் கழித்தே ஆதினி கேஸை முடிக்க, ஜனனிக்கோ பசிப் பொறுக்க முடியவில்லை. ஆதினி எழுந்து வரவும்
"வாடி பிசாசே..... பசி உயிர் போகுது ......" என்று கடுப்பாய் கூற அப்பொழுதான் தான் உணவையும் எடுக்காது வந்தது நினைவு வந்தது ஆதினிக்கு
"சாரி டா நான் லஞ்ச் எடுத்துட்டு வரல .... இன்னைக்கு வெளியே போய் சாப்பிடவும் முடியாது நான் கேட்டீன் போய் ஏதாவது வாங்கிட்டு வர்றேன் நீ சாப்பிட்டு இரு ..." என்றுவிட்டு ஆதினி கிளம்ப
இவளுக்கு என்னாச்சு என நினைத்தவாறு "இருடீ நானும் வர்றேன்......"
என அவளை வேக எட்டுக்கள் வைத்து அவளை எட்டி பிடித்தவள் "ஹேய் என்னாச்சு நீ காலைலேர்ந்தே சரியில்ல எப்பவும் ஒன்னாதான போவோம்..... இன்னைக்கு நீ மட்டும் போறேன்ங்குற லேட்டானா பரவால்ல... வா வெளியே ஹோட்டல்ல சாப்பிட்டு வரலாம்..... " என்றவாறே ஆதினியை இழுத்துக்கொண்டு ஹோட்டலுக்குள் நுழைந்து இருவருக்குமாய் உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்க ..... அப்போது தான் கவனித்தாள் ஜனனி ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவள்,
"ஆதினி.... உன்கிட்ட உதயநந்தன் சாரோட நம்பர் இருக்கா ..... " என்று கேட்க
"ஏன் டா இருக்கு என்னாச்சு..." எனும் போதே அவள் கைபேசியை வாங்கியவள் அதில் அவனது எண்களை தேட ரோபோ நண்டு என்று அவனது புகைப்படத்துடன் பதிவு செய்திருந்ததை பார்த்தவள் அந்த சிரிப்பு வந்தது ஜனனிக்கு, மெலிதாய் புன்னைக்த்தவாறே அந்த எண்ணை அழைக்க சில நொடிகளுக்கு பின் அழைப்பு எடுக்கப்பட்டு கம்பீரக் குரலால் "சொல்லுங்க ஆதினி..... " என்றவனிடம்
" சார் நான் ஆதினி ஃப்ரெண்ட் ஜனனி பேசுறேன் சார் ..... ரெண்டு நாளா ஆதினியை ஒரு ஆள் ஃபாலோ பண்றானோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு சார். நேத்துலேர்ந்து அவ பின்னாடி அவளைக் கண்காணிக்கிற மாதிரி தோணுது..... காலைலயும் அவளை கண்காணிச்சான்.... இப்பவும் நாங்க சாப்பிட ஹோட்டல் வந்திருக்கோம்.... இங்கேயும் வந்திருக்கான்.... ஆனா இப்போ கூட இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க சார்.... எனக்கென்னவோ பயமா இருக்கு......" என்றவளிடம்
"டோன்ட் வொரி மிஸ் . ஜனினி ஏற்கனவே ஆதினியை எங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்க ஃபாலோ பண்றாங்க...... அவங்க பார்த்துப்பாங்க .... நான் ஏற்கனவே இன்ஸ்ட்ரெக்சன் குடுத்துட்டேன்.... நீங்க இன்னும் ஒரு ஆப்நவர் வெளியே வரவேண்டாம் ..... ஆதினியைப் பார்த்துக்கோங்க ...." என்றவன் "ஜனனி ஆதினிக்கிட்ட மொபைல கொடுங்க ...." என்று கட்டளையிட
ஜனனி கைபேசியை ஆதினியிடம் கொடுக்க ஜனனியின் பேச்சை கேட்டு பதட்டத்தில் இருந்த ஆதினி கைபேசியை வாங்கி "ஹலோ... " என்று கூறியதும்
"ஆதினி ..... நீங்க பயப்பட வேண்டாம்..... என் ஆளுங்க உனக்கு பாதுகாப்பா இருக்காங்க நான் பக்கத்துல தான் இருக்கேன். அவங்களை என் டீம் ஆல்ரெடி ரவுண்ட் அப் பண்ணிட்டாங்க ... சோ நீங்க பயப்படாம இருங்க .... பத்து நிமிசத்துல நான் அங்க இருப்பேன் பீ கேர் ஃபுல்...."என்று உதயனின் மொழிக்கு " ம் " என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் பதிலாய் கொடுத்துவிட்டு கைபேசியை வைத்தவளுக்கு வியர்த்து வடிந்தது. மனம் செழியனைத் தேடியது. அவனைக் காணவில்லை.
உணவை உணவகப் பணியாளர் வைத்துவிட்டுப் போக அந்த உணவு உள்ளே இறங்கவில்லை இருவருக்குமே.... பெயருக்காய் இருவரும் அதைக் உண்டுக கொண்டிருக்க சட்டென்று ஆதினியின் கை இழுக்கப்பட்டு சிறிது அடுத்த டேபிளில் மோதி நிற்க அவள் அமர்ந்திருந்த நாற்காலியில் பட்டு நாற்காலிக்கு பின் இருந்த கண்ணாடித் தடுப்பு துப்பாக்கி குண்டால் சிலீரென்ற சத்ததுடன் உடைந்து நொறுங்கியது.
அதே வினாடி ஆக்ரோசத்துடன் செழியன் ஆதினியின் கைகொண்டே அவர்கள் அமர்ந்திருந்த மேசைக்கு பின் மேசையில் ஆதினிக்கு எதிர்புறமாய் துப்பாக்கியுடன் இருந்தவனை பதம் பார்த்தான். ஆதினியின் இருகைகளையும் பிடித்து அவனை மாற்றி மாற்றி தாக்க..... ஆதினியின் பூங்கரம், செழியனின் இரும்புகரத்தின் பலத்தோடு அவனை அடித்து, நிலைகுலைய வைத்து நொடியில் துப்பாக்கியை ஆதினியின் கைக்கு கொண்டு வந்திருந்தான்.
தூபபாக்கி இருப்பதென்னவோ ஆதினியின் கையில் தான் ஆனால் அதை பற்றியிருந்து செழியன். துப்பாக்கிச் சத்தத்திலும், அதன் பின் நடந்த ஆதினியின் அதிரடி நடவடிக்கையிலும் ஜனனி ஸ்தம்பித்து போய் எழுந்த நிற்க... சுற்றியிருந்த மக்கள் செய்வதிறியாமல் திகைத்து நிற்க அதற்கு முன்னரே வெளியே இருந்த மூவரை சுற்றி வளைத்திருந்தது போலிஸ், மேலும் நாலைந்து போலீஸ் துப்பாக்கியுடன் தேவாவின் தலைமையில் ஆதினியைத் தாண்டி ஆதினியை கொல்ல முற்பட்டவனின் தலையை டேபிளில் வைத்து அழுத்தி அவன் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் தேவா.
அதற்குள் மற்ற காவலர்கள் அவன் கைகளில் விலங்கை மாட்டியிருக்க...... மிக வேகமான எட்டுக்களுடன் உள்ளே நுழைந்த உதயன் "கார்ட்ஸ் க்ரொவ்ட க்ளியர் பண்ணுங்க ரவுண்ட் அப் திஸ் ப்ளேஸ் இமீடியட்லி ..... " என கர்ஜித்தவாறே பரபரப்பாய் ஆதினையை நெறுங்கியவன் வந்த வேகத்தில் அவள் தோள் மீது கையை வைத்து "ஆர் யூ ஆல் ரைட் ....." தன் பேண்டிலிருந்து கைகுட்டையை எடுத்து அவள் கைகளில் இருந்த கைத்துப்பாக்கியை வாங்க...... இதை எதையும் கவனிக்கும் மனநிலையில் ஆதினி இல்லை.
சில நிமிடங்களில் நடந்து முடிந்த செயல் அத்தனையும் செழியனால் செய்யப்பட்டிருக்க...
பார்பவர்களுக்கு அது ஆதினி செய்ததாய் தோன்றியது. ஜனனியும் நடந்த நிகழ்வுகளை நம்ப முடியாமல் உறைந்து போய் நின்றிருக்க..... செழியன் ஆத்திரத்தோடு அனைத்தையும் பார்த்துக் கொண்டு ஆதினியின் கரம் பற்றி நின்றிருந்தான்.
அதிர்ந்து போய் உடல் நடுங்க நின்றிருந்தவளை ஆது உட்கார் என்று செழியன் உசுப்ப கர கரவென ஆதினியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய செழியனை ஏறிட அதே நேரம் ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ஃப் ஆதினி .... என்றபடியே அங்கிருந்த தண்ணிரை எடுத்து ஆதினிக்கு கொடுத்த உதயன் "தேவா டேக் ஹிம் அவே.... " என்று உறும தேவா அவன் சட்டையை கொத்தோடு பற்றி காவல் வாகனத்திற்க்கு இழுத்துச் சென்றான்.
"ஆதினி ப்ளீஸ் உக்காருங்க.... ஜனனி நீங்களும் உக்காருங்க கொஞ்சம் ரிலாக்ஸ்ட் ஆகுங்க ப்ளீஸ் ..... " என்றவாறே அவன் சுற்றிலும் நோட்டம் விட அந்த இடத்தில் இருந்தவர்கள் வெளியே குழுமியிருக்க வெளியே வந்து அவர்களை பார்த்த உதயன் அதில் ஒரு சிலரை மட்டும் இரண்டொரு வார்த்தை விசாரித்து விட்டு அவர்களின் தகவல்களை பெற்றுக் கொண்டு அனுப்புமாறு மற்றொரு காவலருக்கு உத்தரவிட்ட உதயன், உணவக உரிமையாளரிடம் வந்தவன் "சீசி டீவி கேமரா புட்டேஜ் நான் பார்க்கனும்..... ஒரு அரைமணி நேரத்தில் இங்க வருவேன்...... ஹோட்டலுக்கு இன்ஸ்யூர் பண்ணிருக்கீங்களா..." என்ற கேட்டவனிடம்
அவர் தயக்கத்துடன் இல்லையென தலையாட்ட ... ஓகே நான் திரும்ப வந்து சொல்ற வரைக்கும் இங்கேருந்து யாரும் வெளியே போகக் கூடாது ஓகே ... " என்றவன் மேலும் காவலர்களை அழைத்து அங்கே பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஆதினியை நெருங்கிய உதயன் "ஆதினி கம் லெட்ஸ் கோ....." என்று கூறியது காதில் விழமால் அவள் அப்படியே அமர்ந்திருக்க செழியனால் அவளின் கோலத்தை தாங்க முடியாமல்
"ஆது .... ஒண்ணுமில்லடா ... நான் கூடவே இருக்கேன்டா .... உனக்கும் ஓன்னும் ஆக விடமாட்டேன்டா..... என்று அவளின் பற்றியிருந்த கரங்களை அழுத்தம் கொடுக்க உதயனை ஒட்டியே செழியனும் நின்றிருக்க நிமர்ந்தவள் செழியனின் முகத்தில் தெரிந்த ஆத்திரமும் கோபமும் தனக்காய் தெரிந்த அக்கறையும் , பாசமும் தெரிய,
அருகில் இருந்த உதயனின் முகத்திலும் இம்மியும் குறையாமல் ஆக்ரோசமும், அவளை அள்ளி அணைத்து ஆறுதல் சொல்லமுடியாமல் உள்ள தன் பொறுப்பையும் வெறுத்து அவளை கண்களால் இறைஞ்சியபடி நிற்பவனைக் கண்டு குழம்பிப் போனாள் ஆதினி. அவனின் பரிதவிப்பிற்க்கான அர்த்தம் என்ன புரியாமல் குழம்பிவளை "ஆதினி .." என்று அவள் தோள்பற்றி "எழுந்துருங்க ..."என்று அவள் கைப்பற்றி எழுப்ப குழம்பிப் போனான் செழியன்.
செழியன் ஆதினியின் பற்றிய கையை விடவே இல்லை. ஜனனியையும், ஆதினியையும் தன்னுடைய வாகனத்தில் ஏறச்சொல்ல , தயங்கி நின்ற ஜனனியை பயப்படாம "ஏறுமா கண்டிப்பா ஸ்டேசன்க்கு போகல .... "என்றதும் இருப் பெண்களும் ஏறி அமர, முன்னிருக்கையில் உதயன் ஏறி அமர்ந்து குவாட்டர்ஸ்க்கு விடுங்க.... அப்படியே வழியில ஏதாவது பேக்ரி இருந்தா நிறுத்தி நீங்களே மூணு காபி வாங்கிட்டு வந்துடுங்க... என்று டிரைவரிடம் கூற
அவர் ஓகே சார் என்றவாரே அவர் வாகனத்தை இயக்க அது வேகமெடுத்து. ஆதினியின் கையை பற்றி ஜனனி சமாதானப்படுத்திக் கொண்டிருக்க, செழியன் உதயனையே பார்த்துக் கொண்டிருந்தான், உதயனோ முன்னிருந்த கண்ணாடிவழியே ஆதினியையே பார்த்துக் கொண்டிருக்க அதை பார்த்த செழியனுக்கு இவன் என்ன நினைச்சிட்டு இருக்கான் என்று ஆத்திரமாய் வந்தது.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் வாகனம் ஒரு ஓரமாய் நிறுத்தப்பட்டு டிரைவர் இறங்கிச் செல்ல இறுக்கையின் மிது கைகளை வைத்து பின்னே திரும்பி உதயன் ஆதினியை நோக்க, அவளோ கண்ணை மூடி சீட்டில் சாய்ந்து தளர்வாய் அமர்ந்திருந்தாள். சில நிமிடங்களில் காபி கப்புகளுடன் வர அதை வாங்கி ஜனனியிடம் ஒன்றைக் கொடுத்துவிட்டு மற்றோன்றை ஆதினியிடம் நீட்டியவாறே "ஆதினி......" என்ற குரல் கொடுக்க, அவன் குரலில் விழித்தவளிடம் சூடா இதை குடி .... கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவ .... என்று அவளிடம் கொடுக்க
ஒன்றும் பேசாமல் காஃபி கப்பை பெற்றுக் கொண்டவள் அவனை நிமிரந்து பார்க்க குடி என்று கண்களாலேயே அவன் சொன்ன சேதி ஆதினிக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. தலையைக் குனிந்து கொண்டு அவள் காபியை அருந்த அவனும் ஒன்றை வாங்கி அருந்திவிட்டு அவர்களிடமும் காலி கப்புகளை வாங்கி அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு சற்றே ஆசுவாசமடைந்தவனைப் பார்த்து வியந்து நின்றான் செழியன்.
டிரைவர் வந்து மீண்டும் அடுத்த ஐந்து நிமடங்களில் போலீஸ் குவாட்டஸ்க்குள் நுழைந்து வாகனைத்தை நிறுத்த எல்லோரும் கிழே இறங்க "அண்ணே நீங்க சாப்பிடறதுன்னா சாப்பிட்டு வாங்க ஒரு இருபது நிமிசத்துல கிளம்பலாம்....." என்று அவரை அனுப்பியவன் ,
வாங்க ..... என்றவாறே அவர்களோடு நடக்க அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது தளத்திற்க்கு அழைத்து சென்றான் ஒரு மாடியில் எட்டு வீடுகள் இருந்தது. அதே போல் ஒவ்வொரு தளமும் இருக்க மூன்றாவது தளத்தில் இருந்த முதல் பிளாட்டை தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு திறந்தவனின் பின்னே செழியனோடு சேர்த்து மூவரும் நுழைந்தனர்.
இரண்டு படுக்கையறையுடன் கூடிய வீட்டில் யாரும் இருப்பதாய் தெரியவில்லை. அமைதியாய் இருந்தது. மூன்று பேர் அமரக்கூடிய பிரம்பினால் ஆன இருக்கையை காட்டி உட்க்காருங்க என்றபடியே உள்ளே சென்றவன் கையில் நீருடன் வந்தான். அவர்களிடம் அதைக் கொடுத்து விட்டு மற்றொரு தனி இருக்கையில் அமர்ந்தவன்.
ஆதினி உனக்கு ப்ரொடக்சனை அதிகப்படுத்தனும் நான் சொல்ற வரைக்கும் நீ ஹாஸ்பிடல் லீவ் போட்டுட்டு என் பாதுகாப்பில இருக்கனும். இதை நான் வேற எங்கயும் வெச்சு சொல்லமுடியாது. அதனாலதான் இங்கே கூட்டிட்டு வநந்தேன். உன் பேரண்ட்ஸ்க்கு வேணும்னா நான் இன்பார்ம் பண்றேன் பட் உன்னை ப்ரொக்டக் பண்ண வேண்டியது என் கடமை. நீ புரிஞ்சுக்குவைன்னு நினைக்கிறேன் என்றவன் ஆதினியின் முகத்தையே பார்த்திருக்க அவளோ ஜனனியை ஏறெடுத்துப் பார்த்தாள்.
"அவங்களுக்கு ஆபத்து இல்ல...... அவங்களை நான் ட்ராப் பண்ணிடுறேன். ஆனா ஜனனி நீங்களும் ஆதினி எங்கேன்னு கேட்டா அவங்க தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை அதனால் திடீர்ன்னு கிளம்பி போனா அப்படீன்னு சொல்லிடுங்க....." என்று கூற , ஆதினிக்கு குழப்பமாய் இருந்தது. ஆனால் செழியனுக்கு அது சரியென்றே பட்டது.
"ஆது..... ஓகே சொல்லுடா..... நான் உன் கூட இருக்கிற வரை உன்னை யாரும் தொடமுடியாது. ஆனால் அது யாருன்னு தெரியனும். அதுக்கு இவர் சொல்றதைக் கேட்டா தான் நடக்கும் ....." சரின்னு சொல்லு என்று அவளிடம் கூற
ஜனனியும் அதையே கூறினாள் "நீ சார் சொல்ற மாதிரி அவர் பாதுகாப்ல இரு கொஞ்ச நாளைக்கு .... " என்றவளிடம்
"அப்பா அம்மாவைக் கூட சமாளிச்சிடலாம். ஆனா செண்பாம்மாவை எப்படி சமாளிக்கிறது..... அவங்க என்னை விட்டுட்டு இருக்க மாட்டாங்கன்னு உனக்கு தெரியாதா ஜனனி ..... "என்று ஆதினி கேள்வி எழுப்ப
"அவங்ககிட்ட ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் வேற வழி இல்ல என்று ஆதினியின் கையை ஆறுதலாய்ப் பற்றினாள்.
"ஆதினி .... ஒரு நிமிஷம் நான் உங்ககிட்ட தனியா பேசனும் ப்ளீஸ்..... "என்று கேட்டுவிட்டு உதயன் எழுந்து கொள்ள
ஜனனி 'போ ' என்று ஆதினிக்கு கண்களால் சைகை செய்தாள். செழியனோ திருதிருத்தபடி நின்றிருந்தான். அவனை வரக்கூடாதென ஆதினி கண்களாலேயே மொழிய அவன் வருவேனென்று அடம் பிடித்தான். அவனை உறுத்து விழித்து பேசாமல் இங்கேயே இரு என்று மீண்டும் விழியாலே மொழிந்துவிட்டு ஆதினி உதயனின் பின்னே சென்றாள்.
இது செழியனுக்கும், ஆதினிக்கும் அடிக்கடி நடப்பது தான் அவள் வரக்கூடாதென்றுவிட்டால் அங்கே செல்லமாட்டான் செழியன். ஏற்கெனவே உதயனால் மூன்று நாட்கள் செழயன் பேசாமல் இருந்து ஆதினிக்கு வருத்தத்தைத் தந்தது. அதனாலேயே இப்போது தனித்து பேசவேண்டும் என்று உதயன் கேட்டவுடன் செழியனை வரவேண்டாமென கூறினாள்.
இரண்டு அறைகளில் ஒன்றை திறக்க ஆதினி உள்ளே சென்றாள். உதயனும் பின்னே செல்ல கதவை அடைத்தவன் ஒரே எட்டில் அவளை அணுகியவன் அவள் கைகள் இரண்டையும் பற்றிக் கொண்டு ஆதினி ப்ளீஸ் என்னை தப்பா நினைச்சுக்காதே.... என்றவன் அதற்க்கு மேல் தாங்க மாட்டாதவனாய் அவளை இழுத்து அணைத்தவன் அவள் எலும்பே நொறுங்கிவிடும் போலிருந்தது அவனின் அணைப்பு, அதிர்ந்து போய் செய்வதறியாது ஆதினி நிற்க உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன் கண்ணம்மா .... என்றவன்,
அவள் முகத்தினை இரு கைகளாலும் பற்றியவன் "உன்னை முதல்ல பார்த்த அன்றே நான் என்னை பறிக்கொடுத்துட்டேன். நம் இரண்டாவது சந்திப்பின் போது அது உறுதியாச்சு.... ஆனா உன் உயிருக்கு ஒரு ஆபத்துன்னுதும் என் மனம் பட்ட வேதனை .... இனி நீ இல்லாம என் வாழ்க்கையே இல்லேன்னு புரிஞ்சிக்கிட்டேன் கண்ணம்மா ..... நீ என்ன நினைச்சாலும் சரி உன்னை யாருக்கும் என்னால விட்டுக்கொடுக்க முடியாது டீ....." என்று அவன் கூற திகைத்து நின்றாள் ஆதினி.
அதிலும் அவனின் கடைசி வரிகள் அவளின் காதில் மறுபடி மறுபடி ஒலித்தது. "கண்ணம்மா ப்ளீஸ் டீ..... என் தவிப்பை புரிஞ்சுக்கோ ...." என்று அவன் மீண்டும் அணைக்க அவனின் இறுக்கமான அணைப்பில் மூச்சு திணறியது ஆதினிக்கு.
தடுக்க மாட்டாதவளாய் கல்லாய் சமைந்து நின்றவளை சில நிமிட நேரத்தில் விடுவித்தவன் "சாரி ஐம் வெரி சாரி.... உனக்கு பிடிச்சிருக்கா , பிடிக்கலையா என்று கேட்க கூட எனக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போச்சு..... சத்தியமா உனக்கு பிடிக்கலைன்னா நீ தாராளமா சொல்லலாம், நான் உன்னை தொந்தரவு பண்ணமாட்டேன் ஆனால் இப்போ உனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது என்னோட கடமை புரிஞ்சுக்கோ நான் இப்போ ஸ்டேஷனுக்கு போயே ஆகணும் நான் போகும்போது ஜனனியை ட்ராப் பண்ணிடுறேன். நீ இங்க தனியாதான் இருக்கனும். எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் வந்துறேன். டோரை நான் வெளிய பூட்டிட்டு போறேன் இங்க உனக்கு சேப்ஃபா இருக்கும் எந்த பயமும் இல்ல......இவ்னிங் வந்து நான் உன்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.... " என்று அவள் பதிலை எதிர்பாராமல் மளமளவென கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் உதயன்.
சில நிமிடங்கள் பிடித்தது ஆதினி சமாளித்துக் கொள்ள அதன் பின் சில நிமிடங்களில் ஜனனியுடன் கிளம்பியவன் அவளை வேறொரு காரிலீ ஆஸ்பிடலுக்கு அனுப்பிவிட்டு அவன் தன் அலுவலகம் வந்து சேர்ந்தான்.
உதயனின் கண்கள் ஆத்திரத்தில் கனன்றுக் கொண்டிருக்க அவனின் கைகளில் அகப்பட்டவன் கண்களிலோ மரணபீதி தெரிந்தது.
"சொல்லு எதுக்காக அந்த பொண்ண கொல்ல முயற்சி பண்ண ..... இன்னும் ரெண்டு நிமிசம் தான் டைம் .... அதுக்குள்ள நீயா சொல்லனும் ..... இல்ல நானா வரவழைப்பேன்.. "என்றவாறே அவனின் வளைத்துப் பிடித்திருந்த கைகளை மேலும் முறுக்க வலி பொறுக்க முடியாமல் அவன் அலறியவாறே
"சார் நான் எந்த தப்பும் பண்ணல சார் நீங்க சொல்ற பொண்ணு யாருன்னே எனக்குத் தெரியாது சார் என்னை விட்டுங்க ..... நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க சார்... " என்று அவன் கதறியவாறே பதிலலிக்க
"எனக்கு பொய் பேசுறவங்களை கண்டாலேப் பிடிக்காது..... என்கிட்டயே நீ பொய் பேசுற ...." என்றவனை அவன் லத்தி பலமாய் பதம் பார்க்க
உதயனின் ருத்தரத்தில் தேவா ஆடிப்போனான்.
உதயனின் கோபம் ஆதினியைக் காக்குமா....?
ஆதினியின் காதல் உதயனுக்கு கிடைக்குமா....?