- Messages
- 52
- Reaction score
- 63
- Points
- 18
தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே...
அத்தியாயம் - 23
கனத்த இடியொன்று தாக்கியது போல் உணர்ந்தான் செழியன். விண்ணென்று பின் மண்டையில் வலி தெறிக்க "அம்மா.." என்று அலறியவாறே தலையை பிடித்துக் கொண்டு மண்டியிட்டு விழுந்தவனுக்கு ரத்தம் தரையில் பரவ கண்களில் உயிரைக் தேக்கி "செழியா..." என்றவாறே கைகளை நீட்டிய ஸ்ருதியின் தோற்றம் அவனது இதயத்தில் இடியும், மின்னலும் ஒரு சேர தாக்கியதாய் உணர்ந்தான்.
செல்லமாய் வளர்த்தவள், தங்கள் வீட்டு இளவரசி, தன் சிநேகிதி, செல்லத்தங்கை வேரருந்தமரமாய் தரையில் ரத்தம் சொட்ட கிடப்பதைக் கண்டவனுக்கு தன் வலி மறந்தது. அவளருகே மண்டியிட்டவாறே விரைந்தவன் அவளை அள்ளி மடியில் கிடத்திக் கொண்டான்.
"அய்யோ ஸ்ருதி... ரத்தம் வருதே நான் என்ன செய்வேன். எப்படி உன்னைக் காப்பாத்துவேன்.." என அலறிக் துடிக்க அவனது மடியில் கிடந்தவள் தலையை மேலும் பதம் பார்க்கவென அந்த கயவன் இரும்புக்கழியை இறக்க முயல, நொடியில் சுதாரித்த செழியன், மின்னல் வேகத்தில் இறங்கிய இரும்புக்கழியை ஒரு கரத்தில் தடுத்து சுழற்றி வீச அதோடு சேர்ந்து தூர சென்று விழுந்தான் அதை பயன்படுத்தியவன்.
அதற்குள் அவர்களை நெருங்கி சுற்றி வளைத்திருந்நது அந்த கும்பல் நான்கு பேர் சேர்ந்து செழியனை ஸ்ருதியிடமிருந்து வலுகட்டாயமாய் பிரித்தெடுத்து தூர இழுத்துச் செல்ல
முன்னிலும் வேகமாய் தரையில் கிடந்தவளின் தலையை குறி பார்த்து இரும்புகழியால் தாக்கப்பட்டாள் அவள்.
"ஆ.. ஹக்..." என்ற சத்தத்தோடு கண்கள் நிலைகுத்த உடல் விழுக்கென தூக்கிப் போட சில நொடிகளில் அடங்கிப் போனாள் ஸ்ருதி.
தன் கண்முன்னே நடந்துக் கொண்டிருக்கும் கொடூரத்தை தடுக்க இயலாமல் அவளுயிர் பிரிவதைக் கண்டு துடி துடித்தவன் தன்னை பிடித்திருந்தவர்கள் மேல் தன் முழு பலத்தையும் உபயோகித்து திமிறி விடுபட முயல அவனை நோக்கி அவனைவிட முழு பலத்தோடு இறங்கியது இரும்புக்கழி. முன்தாடை கிழிந்து தொங்கி அவனின் செந்நிற ரத்தம் தரையைத் தொட்டது.
ரத்தம் வழிய தொய்ந்து விழுந்தவனின் நடுமுதுகில் அடுத்த அடியை இறக்கினான் அந்த இரக்கமற்றவன். "ஆ......." என்ற அலறல் பிரதேசம் முழுதும் எதிரொலிக்கத்தான் செய்தது. ஆனால் அதைக் கேட்கத்தான் அங்கே ஆட்கள் இல்லை.
உயிரை பிழியும் வலி செழியனின் ஒவ்வொரு பகுதியிலும் ஊடுருவ அதைவிட பெரிய வலியாய் அவன் உணர்ந்தது ஸ்ருதியை மட்டுமே. அந்நிலையிலும் அவளைக் காப்பாற்றி விட மாட்டோமா என துடித்தது அவன் இதயம். அவனது விழிகளில் மசப்பாய் உருவங்கள், ஏதேதோ குரல்கள். எதுவும் அவன் கருத்தில் பதியவில்லை. மெல்ல அவளை நோக்கி நகர முற்பட்டான். உடலை அசைக்க கூட முடியவில்லை.
'ஐய்யோ அம்மூ.. இப்படி கெடக்குறியே உனக்கென்னடி ஆச்சு, அம்மா இந்த கோலத்துல நம்மள பார்த்தா உசிரையே விட்ருவாங்களே நான் என்னடி செய்வேன்..' என அவன் உள்ளம் கதறியது.
எட்டிவிடும் தூரத்தில் கிடந்தவள், ஓராயிரம் மைலுக்கு அப்பால் உள்ளது போன்றதொரு உணர்வு அவனுள். மூளையெங்கும் தெறிக்கும் வலி ஒரு புறம், இதயத்தை பிழியும் ஸ்ருதியின் தோற்றம் ஒரு புறமுமாய் அவனின் உணர்வுகளை சிறிது சிறிதாய் மங்கச் செய்துக் கொண்டிருந்தது. தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி அவன் நகர முற்பட்டதில் இரண்டடி இடைவெளியில் கிடந்தவர்களின் தூரம் ஓரடியாய் குறைந்தது.
ஏதேதோ குரல்கள் வெகு சமீபத்தில் கேட்டது. கண்களை வெகு சிரமப்பட்டு பிரித்தவன் அருகே ஸ்ருதியின் கைவிரல்கள் தென்பட அவளது கைகளை இறுகமாய் பற்றி "ஸ்ருதி.." என்றழைத்தவறே மீண்டும் முயற்சித்து அவளருகே வந்தவன் கண்டது அவளது நிலைத்திருந்த விழிகளைத் தான்.
'அவளில்லை... இவ்வுலகில் அவளில்லை... இவ்வுடலில் அவள் உயிர் இல்லை.. என் அம்மூ இல்லை..' சத்தமிடவும் திராணியற்று அவனது தலை சரிய
"இரண்டு பேரையும் தூக்கி வண்டில போடுங்கடா.. சுத்திலும் யாரும் இல்லேல்ல ஒரு எவிடென்ஸ் கெடைக்க கூடாது. அவங்க கொண்டு வந்த மொத்த பொருளையும் பொறுக்கிக்கோங்க.." என்று ஒரு குரல் உறுமியது மட்டும் லேசாய் அவன் காதுகளில் வாங்கியவாறே மயங்கிப்போனான் செழியன்.
இரண்டு பேரின் உடல்களையும் ஆளுக்கொரு புறமாய் தூக்க செழியனின் கரம் ஸ்ருதியை இறுகப் பற்றியிருந்தததைக் கண்ட ஒருவன் அவனது கைகளை வேகமாய் விலக்கிவிட பற்றியிருந்த கரத்தினில் இருந்து ப்ரேஸ்லெட் செழியனின் கரத்தோடு வந்தது. அவர்களது உடல்களை வாகனத்தில் ஏற்றியவர்கள், செழியனும் ஸ்ருதியும் வந்த வாகனத்தையும் கிளப்பிக்கொண்டு பறந்தனர் அவ்விடத்தை விட்டு.
மயங்கிய நிலையில் இருந்த செழியனின் மூளைக்குள் ஸ்ருதியின் நிலையே மீண்டும் மீண்டும் வர மெல்ல நினைவு திரும்பலானான். கண்களை மெல்ல பிரித்தவனுக்கு இருளைத் தவிர வேறொன்றும் புலப்படவில்லை. சற்று ஆசுவாசப்படுத்தி கண்களைத் திறந்து இருளை கண்களுக்கு பழக்கபடுத்த முனைந்தவனுக்கு எங்கோ ஓர் இடத்தில் வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததை உணரமுடிந்தது. ,ஸ்ருதி.. ஸ்ருதி எங்கே..?' என அவன் கண்கள் தேடியது. எழுவதற்காய் முனைந்த போது துளி கூட அசைய முடியாமல் தன்னுடல் கனத்து கிடந்தது கண்டு மனம் நொந்து போனான். தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி எழுந்தவனுக்கு தன் கையில் ஏதோ ஒன்று நலுவும் நிலையில் இருப்பதை உணர்ந்து கைகளை இறுக்கிப் பிடித்து பார்க்க அந்த இருட்டிலும் அந்த கருப்பு வைரங்கள் கண்களைச் சிமிட்டியது.
ஆத்திரம், கோபம் ரௌத்திரம் என எல்லாம் கலந்த கலவையாக அவனின் விழிகள் தீயாய் தகித்தது. 'இதுக்காகவாடா என் செல்லத்த..' அதற்கு மேல் அவனால் நினைக்ககூட முடியவில்லை. அம்மூ.. என்றுஅரற்றியது அவனிதயம். கைகளில் இறுகப் பற்றிக் கொண்டான் அப்பொருளை. என்ன நடந்தது, ஏன் நடந்தது, ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. வெளியே என்ன நடக்கிறது என்று இருளில் தன் கண்களை செலுத்தினான். ஏதோ ஒரு பயன்படுத்தப்படாத பாழடைந்த கட்டிடத்தின் முன் இவனிருந்த வாகனம் நின்றிருந்தது. வாகனத்தினுள் ஒருவருமில்லை. சிரமப்பட்டு மறுபுறம் பார்வையை செலுத்தியவன் திடுக்கிட்டு போனான். ஸ்ருதியின் உடலை இவர்கள் இருவரும் வந்த வண்டியிலேயே ஏற்றிக் கொண்டிருந்தனர்.
'அய்யோ அம்மூ..' அவனது உடல் பரபரத்தது, எங்கே கொண்டு செல்கிறார்கள். 'முடியாது விடமாட்டேன் என் அம்மூவை நான் விடமாட்டேன்..' என்றவறே அந்த
வாகனத்தில் இருந்து வெளியேற முயற்சித்து தோற்றான். அவன் மனம் இருக்கிற கடவுள்களையெல்லாம் சபித்தது. அவன் மீதே அவனுக்கு அளவில்லா கோபம். தன் வீட்டு பெண்ணையே பாதுகாக்க தவறிய குற்றாவாளியாய் அவனிதயம் அவனை கூறாய் கிழித்தது.
அளவில்லா கோபம் ஆக்ரோசத்தைத் தர அந்த ஆக்ரோசம் அவனுடலுக்கு வலுவைக் தந்தது. வாகனத்தை விட்டு அவன் இறங்குவதற்குள் ஸ்ருதியின் உடலை இவர்களின் வாகனத்தில் ஏற்றிவிட்டு இருவர் அதில் ஏறிக் கொள்ள அந்த வாகனம் கிளம்பியது.
தன் வழு மொத்தத்தையும் கூட்டி வாகனத்தின் பின்னே ஓட ஆரம்பித்தான் செழியன். வாகனத்தை துரத்திக்கொண்டு பலகீனமாய் ஒடும் அவன் அந்த கயவர்களுக்கு ஒரு பொருட்டாய் தெரியவில்லை.
"என்னடா அடிச்ச அடில போய்டான்னு நினைச்சா எந்திருச்சு ஓடுற அளவுக்கு விட்ருக்கீங்க.." என்ற குரல் அவனுக்கு மிகப் பரிட்சயமானதாய் பட்டது. ஆனால் அதையெல்லாம் நின்று கவனிக்கும் நிலையில் அவன் இல்லையே, என்ன செய்வான் பாவம்.
அவர்களுடைய வாகனம் கிளைச்சாலையை விட்டு நெடுஞ்சாலையை அடைந்து சீறிப்பாய்ந்து வேகமெடுத்து பறந்து வெளிச்சப் புள்ளியாய் மறைந்து போனது. பின் தொடர்ந்த செழியனின் "அம்மு.." என்ற கதறல் காற்றோடு கரைந்து போனது.
தட்டுத்தடுமாறி நெடுஞ்சாலையை அடைந்து அவன் பார்த்தபோது அவன் பார்த்ததெல்லாம் சுற்றிலும் வெறும் நிசத்தை இருட்டை மட்டுமே.
மாண்டு விட்டதாய் நினைத்தவன் மீண்டும் எழுந்து நடந்து வந்ததை சகிக்க முடியாதவர்கள் உயிர் இழந்து வெறும் கூடாய் சதைப் பிண்டமாய் நடந்துகொண்டிருந்த செழியனை மேலும் குற்றுயிரும் குலையுயிருமாய் ஆகும்வரை தனது தாக்குதலை நிகழ்த்தினர்.
தன்னை தற்காத்துக் கொள்ளவோ இல்லை எதிர்த்து போராடவும் எந்த ஒரு முயற்சியையும் செழியன் செய்யவில்லை அவன் உயிர் ஸ்ருதியோடே போய்விட்டிருந்தது. நினைவு தெரிந்த நாள் முதலாய் விரல் பற்றி நடந்து ஒன்றாய் அமர்ந்து, ஒன்றாய் உண்டு, ஒன்றாய் படித்து, ஒன்றாய் உலகமெல்லாம் சுற்றியர்கள், இன்று அவளை மட்டும் தனியே அனுப்ப அவனது மனம் விரும்பவில்லை.
தூரத்தில் வாகனம் வரும் வெளிச்சப் புள்ளிகள் தெரியவே கூட்டத்தில் இருந்த ஒருவன் "அவனை அப்படியே நடுரோட்டில் போடுங்கடா இந்நேரத்துக்கு இந்த மலைப் பாதையில் வேகமாக வர வண்டி மோதி இருக்கிற கொஞ்ச உசுரும் போகட்டும். அப்போதான் இது விபத்தா இருக்கும்.." என்ற குரலின் ஆணைக்கேற்ப அவனை அப்படியே நடுரோட்டில் விட்டு விட்டு கிளம்பினார்கள் அவர்கள்.
வந்த ஒன்றிரண்டு வாகனங்கள் அவனை கடந்து சென்று இருக்க அதன் பிறகு நீண்ட நேரம் கழித்தே ஆதினயின் கண்ணில் பட்டான் செழியன்.
தேடல் தொடரும்....
அத்தியாயம் - 23
கனத்த இடியொன்று தாக்கியது போல் உணர்ந்தான் செழியன். விண்ணென்று பின் மண்டையில் வலி தெறிக்க "அம்மா.." என்று அலறியவாறே தலையை பிடித்துக் கொண்டு மண்டியிட்டு விழுந்தவனுக்கு ரத்தம் தரையில் பரவ கண்களில் உயிரைக் தேக்கி "செழியா..." என்றவாறே கைகளை நீட்டிய ஸ்ருதியின் தோற்றம் அவனது இதயத்தில் இடியும், மின்னலும் ஒரு சேர தாக்கியதாய் உணர்ந்தான்.
செல்லமாய் வளர்த்தவள், தங்கள் வீட்டு இளவரசி, தன் சிநேகிதி, செல்லத்தங்கை வேரருந்தமரமாய் தரையில் ரத்தம் சொட்ட கிடப்பதைக் கண்டவனுக்கு தன் வலி மறந்தது. அவளருகே மண்டியிட்டவாறே விரைந்தவன் அவளை அள்ளி மடியில் கிடத்திக் கொண்டான்.
"அய்யோ ஸ்ருதி... ரத்தம் வருதே நான் என்ன செய்வேன். எப்படி உன்னைக் காப்பாத்துவேன்.." என அலறிக் துடிக்க அவனது மடியில் கிடந்தவள் தலையை மேலும் பதம் பார்க்கவென அந்த கயவன் இரும்புக்கழியை இறக்க முயல, நொடியில் சுதாரித்த செழியன், மின்னல் வேகத்தில் இறங்கிய இரும்புக்கழியை ஒரு கரத்தில் தடுத்து சுழற்றி வீச அதோடு சேர்ந்து தூர சென்று விழுந்தான் அதை பயன்படுத்தியவன்.
அதற்குள் அவர்களை நெருங்கி சுற்றி வளைத்திருந்நது அந்த கும்பல் நான்கு பேர் சேர்ந்து செழியனை ஸ்ருதியிடமிருந்து வலுகட்டாயமாய் பிரித்தெடுத்து தூர இழுத்துச் செல்ல
முன்னிலும் வேகமாய் தரையில் கிடந்தவளின் தலையை குறி பார்த்து இரும்புகழியால் தாக்கப்பட்டாள் அவள்.
"ஆ.. ஹக்..." என்ற சத்தத்தோடு கண்கள் நிலைகுத்த உடல் விழுக்கென தூக்கிப் போட சில நொடிகளில் அடங்கிப் போனாள் ஸ்ருதி.
தன் கண்முன்னே நடந்துக் கொண்டிருக்கும் கொடூரத்தை தடுக்க இயலாமல் அவளுயிர் பிரிவதைக் கண்டு துடி துடித்தவன் தன்னை பிடித்திருந்தவர்கள் மேல் தன் முழு பலத்தையும் உபயோகித்து திமிறி விடுபட முயல அவனை நோக்கி அவனைவிட முழு பலத்தோடு இறங்கியது இரும்புக்கழி. முன்தாடை கிழிந்து தொங்கி அவனின் செந்நிற ரத்தம் தரையைத் தொட்டது.
ரத்தம் வழிய தொய்ந்து விழுந்தவனின் நடுமுதுகில் அடுத்த அடியை இறக்கினான் அந்த இரக்கமற்றவன். "ஆ......." என்ற அலறல் பிரதேசம் முழுதும் எதிரொலிக்கத்தான் செய்தது. ஆனால் அதைக் கேட்கத்தான் அங்கே ஆட்கள் இல்லை.
உயிரை பிழியும் வலி செழியனின் ஒவ்வொரு பகுதியிலும் ஊடுருவ அதைவிட பெரிய வலியாய் அவன் உணர்ந்தது ஸ்ருதியை மட்டுமே. அந்நிலையிலும் அவளைக் காப்பாற்றி விட மாட்டோமா என துடித்தது அவன் இதயம். அவனது விழிகளில் மசப்பாய் உருவங்கள், ஏதேதோ குரல்கள். எதுவும் அவன் கருத்தில் பதியவில்லை. மெல்ல அவளை நோக்கி நகர முற்பட்டான். உடலை அசைக்க கூட முடியவில்லை.
'ஐய்யோ அம்மூ.. இப்படி கெடக்குறியே உனக்கென்னடி ஆச்சு, அம்மா இந்த கோலத்துல நம்மள பார்த்தா உசிரையே விட்ருவாங்களே நான் என்னடி செய்வேன்..' என அவன் உள்ளம் கதறியது.
எட்டிவிடும் தூரத்தில் கிடந்தவள், ஓராயிரம் மைலுக்கு அப்பால் உள்ளது போன்றதொரு உணர்வு அவனுள். மூளையெங்கும் தெறிக்கும் வலி ஒரு புறம், இதயத்தை பிழியும் ஸ்ருதியின் தோற்றம் ஒரு புறமுமாய் அவனின் உணர்வுகளை சிறிது சிறிதாய் மங்கச் செய்துக் கொண்டிருந்தது. தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி அவன் நகர முற்பட்டதில் இரண்டடி இடைவெளியில் கிடந்தவர்களின் தூரம் ஓரடியாய் குறைந்தது.
ஏதேதோ குரல்கள் வெகு சமீபத்தில் கேட்டது. கண்களை வெகு சிரமப்பட்டு பிரித்தவன் அருகே ஸ்ருதியின் கைவிரல்கள் தென்பட அவளது கைகளை இறுகமாய் பற்றி "ஸ்ருதி.." என்றழைத்தவறே மீண்டும் முயற்சித்து அவளருகே வந்தவன் கண்டது அவளது நிலைத்திருந்த விழிகளைத் தான்.
'அவளில்லை... இவ்வுலகில் அவளில்லை... இவ்வுடலில் அவள் உயிர் இல்லை.. என் அம்மூ இல்லை..' சத்தமிடவும் திராணியற்று அவனது தலை சரிய
"இரண்டு பேரையும் தூக்கி வண்டில போடுங்கடா.. சுத்திலும் யாரும் இல்லேல்ல ஒரு எவிடென்ஸ் கெடைக்க கூடாது. அவங்க கொண்டு வந்த மொத்த பொருளையும் பொறுக்கிக்கோங்க.." என்று ஒரு குரல் உறுமியது மட்டும் லேசாய் அவன் காதுகளில் வாங்கியவாறே மயங்கிப்போனான் செழியன்.
இரண்டு பேரின் உடல்களையும் ஆளுக்கொரு புறமாய் தூக்க செழியனின் கரம் ஸ்ருதியை இறுகப் பற்றியிருந்தததைக் கண்ட ஒருவன் அவனது கைகளை வேகமாய் விலக்கிவிட பற்றியிருந்த கரத்தினில் இருந்து ப்ரேஸ்லெட் செழியனின் கரத்தோடு வந்தது. அவர்களது உடல்களை வாகனத்தில் ஏற்றியவர்கள், செழியனும் ஸ்ருதியும் வந்த வாகனத்தையும் கிளப்பிக்கொண்டு பறந்தனர் அவ்விடத்தை விட்டு.
மயங்கிய நிலையில் இருந்த செழியனின் மூளைக்குள் ஸ்ருதியின் நிலையே மீண்டும் மீண்டும் வர மெல்ல நினைவு திரும்பலானான். கண்களை மெல்ல பிரித்தவனுக்கு இருளைத் தவிர வேறொன்றும் புலப்படவில்லை. சற்று ஆசுவாசப்படுத்தி கண்களைத் திறந்து இருளை கண்களுக்கு பழக்கபடுத்த முனைந்தவனுக்கு எங்கோ ஓர் இடத்தில் வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததை உணரமுடிந்தது. ,ஸ்ருதி.. ஸ்ருதி எங்கே..?' என அவன் கண்கள் தேடியது. எழுவதற்காய் முனைந்த போது துளி கூட அசைய முடியாமல் தன்னுடல் கனத்து கிடந்தது கண்டு மனம் நொந்து போனான். தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி எழுந்தவனுக்கு தன் கையில் ஏதோ ஒன்று நலுவும் நிலையில் இருப்பதை உணர்ந்து கைகளை இறுக்கிப் பிடித்து பார்க்க அந்த இருட்டிலும் அந்த கருப்பு வைரங்கள் கண்களைச் சிமிட்டியது.
ஆத்திரம், கோபம் ரௌத்திரம் என எல்லாம் கலந்த கலவையாக அவனின் விழிகள் தீயாய் தகித்தது. 'இதுக்காகவாடா என் செல்லத்த..' அதற்கு மேல் அவனால் நினைக்ககூட முடியவில்லை. அம்மூ.. என்றுஅரற்றியது அவனிதயம். கைகளில் இறுகப் பற்றிக் கொண்டான் அப்பொருளை. என்ன நடந்தது, ஏன் நடந்தது, ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. வெளியே என்ன நடக்கிறது என்று இருளில் தன் கண்களை செலுத்தினான். ஏதோ ஒரு பயன்படுத்தப்படாத பாழடைந்த கட்டிடத்தின் முன் இவனிருந்த வாகனம் நின்றிருந்தது. வாகனத்தினுள் ஒருவருமில்லை. சிரமப்பட்டு மறுபுறம் பார்வையை செலுத்தியவன் திடுக்கிட்டு போனான். ஸ்ருதியின் உடலை இவர்கள் இருவரும் வந்த வண்டியிலேயே ஏற்றிக் கொண்டிருந்தனர்.
'அய்யோ அம்மூ..' அவனது உடல் பரபரத்தது, எங்கே கொண்டு செல்கிறார்கள். 'முடியாது விடமாட்டேன் என் அம்மூவை நான் விடமாட்டேன்..' என்றவறே அந்த
வாகனத்தில் இருந்து வெளியேற முயற்சித்து தோற்றான். அவன் மனம் இருக்கிற கடவுள்களையெல்லாம் சபித்தது. அவன் மீதே அவனுக்கு அளவில்லா கோபம். தன் வீட்டு பெண்ணையே பாதுகாக்க தவறிய குற்றாவாளியாய் அவனிதயம் அவனை கூறாய் கிழித்தது.
அளவில்லா கோபம் ஆக்ரோசத்தைத் தர அந்த ஆக்ரோசம் அவனுடலுக்கு வலுவைக் தந்தது. வாகனத்தை விட்டு அவன் இறங்குவதற்குள் ஸ்ருதியின் உடலை இவர்களின் வாகனத்தில் ஏற்றிவிட்டு இருவர் அதில் ஏறிக் கொள்ள அந்த வாகனம் கிளம்பியது.
தன் வழு மொத்தத்தையும் கூட்டி வாகனத்தின் பின்னே ஓட ஆரம்பித்தான் செழியன். வாகனத்தை துரத்திக்கொண்டு பலகீனமாய் ஒடும் அவன் அந்த கயவர்களுக்கு ஒரு பொருட்டாய் தெரியவில்லை.
"என்னடா அடிச்ச அடில போய்டான்னு நினைச்சா எந்திருச்சு ஓடுற அளவுக்கு விட்ருக்கீங்க.." என்ற குரல் அவனுக்கு மிகப் பரிட்சயமானதாய் பட்டது. ஆனால் அதையெல்லாம் நின்று கவனிக்கும் நிலையில் அவன் இல்லையே, என்ன செய்வான் பாவம்.
அவர்களுடைய வாகனம் கிளைச்சாலையை விட்டு நெடுஞ்சாலையை அடைந்து சீறிப்பாய்ந்து வேகமெடுத்து பறந்து வெளிச்சப் புள்ளியாய் மறைந்து போனது. பின் தொடர்ந்த செழியனின் "அம்மு.." என்ற கதறல் காற்றோடு கரைந்து போனது.
தட்டுத்தடுமாறி நெடுஞ்சாலையை அடைந்து அவன் பார்த்தபோது அவன் பார்த்ததெல்லாம் சுற்றிலும் வெறும் நிசத்தை இருட்டை மட்டுமே.
மாண்டு விட்டதாய் நினைத்தவன் மீண்டும் எழுந்து நடந்து வந்ததை சகிக்க முடியாதவர்கள் உயிர் இழந்து வெறும் கூடாய் சதைப் பிண்டமாய் நடந்துகொண்டிருந்த செழியனை மேலும் குற்றுயிரும் குலையுயிருமாய் ஆகும்வரை தனது தாக்குதலை நிகழ்த்தினர்.
தன்னை தற்காத்துக் கொள்ளவோ இல்லை எதிர்த்து போராடவும் எந்த ஒரு முயற்சியையும் செழியன் செய்யவில்லை அவன் உயிர் ஸ்ருதியோடே போய்விட்டிருந்தது. நினைவு தெரிந்த நாள் முதலாய் விரல் பற்றி நடந்து ஒன்றாய் அமர்ந்து, ஒன்றாய் உண்டு, ஒன்றாய் படித்து, ஒன்றாய் உலகமெல்லாம் சுற்றியர்கள், இன்று அவளை மட்டும் தனியே அனுப்ப அவனது மனம் விரும்பவில்லை.
தூரத்தில் வாகனம் வரும் வெளிச்சப் புள்ளிகள் தெரியவே கூட்டத்தில் இருந்த ஒருவன் "அவனை அப்படியே நடுரோட்டில் போடுங்கடா இந்நேரத்துக்கு இந்த மலைப் பாதையில் வேகமாக வர வண்டி மோதி இருக்கிற கொஞ்ச உசுரும் போகட்டும். அப்போதான் இது விபத்தா இருக்கும்.." என்ற குரலின் ஆணைக்கேற்ப அவனை அப்படியே நடுரோட்டில் விட்டு விட்டு கிளம்பினார்கள் அவர்கள்.
வந்த ஒன்றிரண்டு வாகனங்கள் அவனை கடந்து சென்று இருக்க அதன் பிறகு நீண்ட நேரம் கழித்தே ஆதினயின் கண்ணில் பட்டான் செழியன்.
தேடல் தொடரும்....