Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL நாரிகை - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Kiruba Jp

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
36
Points
18
நாரிகை



கதைசுருக்கம்

அன்பு கிடைக்காவிட்டாலும் துன்பம். அளவுக்கு அதிகமாக கிடைத்தாலும் துன்பம். வித்தியாசமான காதல் கதையாக அமையும் புது அனுபவம் கொடுக்கும்

பூவை 1

வந்தவர்களை வாழவைக்கும் சென்னையில் அது இப்போது தான் டெவலப் ஆகி கொண்டே இருக்கும் ஏரியா. அந்த ஏரியாவில் அமைந்திருக்கின்றன ஐம்பதுக்கும் மேற்பட்ட கம்பக்ட் ஹோம். “தனி வீடு, உங்களோட கனவு வீடு நினைவாகனுமா உடனே எங்க கிட்ட வாங்கன்னு", டிவிலயெல்லாம் விளம்பரம் பண்ணி மக்கள ஈர்ப்பாங்களே அந்த மாதிரி வரிசைகட்டி அமைந்திருக்கின்ற வீடுகள். ஹாலிவுட் விவரியம் படத்தில் வரமாதிரி எல்லாத்துக்கும் ஒரே பெயிண்ட் அடிச்ச மாதிரி ஒரே வீடாகவும் ஒரே கலராகவும் இருந்தது. தெரியாதவன் எவனும் இரவில் வந்தால் தன் வீடு எதுவென்று தெரியாமலே குழம்பி விடுவான். அந்த படத்தில் வருவது போல சுத்தி சுத்தி திரும்ப தொலைந்து போவது போல அப்படி ஒத்தார் போல அமைந்து இருந்தது.

ஐம்பது வீட்டில் ஒரு வீட்டின் வாசலில் யாரோ காலிங் பெல்லை கைவிடாமல் அழுத்திக்கொண்டே இருந்தனர்.

டோடக்.. கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ஷார்ட்சும், டீ சர்ட்டும் அணிந்திருந்த முப்பத்தி ஐந்து வயதை கடந்திருந்த ஒருவன் பல நாள் வெட்டாத தாடியுடன் நின்று கொண்டிருந்தான். ஐம்பது ஈன்ச் யெல்இடி டிவியில் காலை செய்திகள் வெளியில் நிற்பவன் காதை கிழிக்கும் வண்ணம் ஓடிக்கொண்டு இருந்தது.

“யார் வேணும்??“ என்றான் அதட்டல் மொழியில்

“51, வெஸ்ட் அவென்யூ“

டுர்..கதவை நன்றாக திறந்துக்கொண்டு வெளியில் வந்தான். அட்ரஸ் கேட்ட ஆளும் பின்னாலயே வந்தான் இப்போது சிறிதாக இருந்த வீட்டின் முன்பக்க கார்டனை கடந்து வீட்டின் கேட்டை திறந்து ஆளு உயர காம்பவுண்ட் அதை அடைந்து முகப்பு பக்கம் இருந்த அட்ரஸ் போர்டை காட்டினான்.

“இத படிங்க?“

“15, வெஸ்ட் அவெண்யூ“

“ம்.. இப்போ தெரியுதா?“

“ஸாரி சார்…“

“உங்கள பார்த்தா ரொம்ப பதற்றமா இருக்கிங்க. உதடு மட்டும் தான் சிரிக்குது, ஆனா அந்த சிரிப்பு முழுக்க ஏதோ பயமும் பதற்றமும் படிஞ்சி இருக்கு. பேச்சில தடுமாற்றம். பதற்றம், தடுமாற்றம் இதுயெல்லாமே மனிதர்களோட இயல்பு. உங்க வயசு எப்படியும் ஐம்பது இருக்கும், அதனால இந்த அளவு பதற்றம் உங்களோட இதயத்துக்கு நல்லது இல்ல“

அவன் சொல்லும் அனைத்தையும் வாயை பிளந்து “ஆ..“என்று கேட்டு கொண்டு நின்றான் அட்ரஸ் கேட்க வந்தவன்.

தன்னை எழுப்பி கொண்டு “உண்மை தான் சார், இவ்வளவு சொல்றிங்க நீங்க??“

மீண்டும் போர்டை காட்டினான். அதில் “சத்தியேந்திரன், அரசு மனநல மருத்துவர்.“ என்று இருந்தது.

“ரொம்ப சரியா சொன்னிங்க டாக்டர் நான் ராஜா ராம்.. பிரைவேட் ஆபிஸ்ல கிளர்க்கா இருக்கேன். என் தம்பி வீட தான் தேடிகிட்டு இருக்கேன். அவனுக்கும் எனக்கும் எட்டு வருஷமா பேச்சு வார்த்தை இல்ல, திடீர்னு நேத்து போன் பண்ணி பச்ச புள்ள மாதிரி அழுதான். என்னன்னு கேட்ட அவனோட ஒய்ஃப் க்கு ரொம்ப உடம்பு முடியலயாம். அவனுக்கு குழந்தைங்க இல்ல, நான் தானே பாக்கனும் பதறி போயிட்டேன். சார் விடிஞ்சதுல இருந்து அட்ரஸ் தேடிட்டு இருக்கேன் சரியா பிடிபடல வீட்டுல இருக்கவங்களுக்கு எதாவதுன்னா பொண்டாட்டி பாத்துப்பா சார் ஆனா அதே பொண்டாட்டிக்கு எதாவதுன்னா...“, அவன் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

சத்தியேந்திரன் தனக்குள் எதையோ யோசித்துக்கொண்டு “சரி தான்..“ என்று முணங்கி கொண்டான். ஏதோ யோசனையில் மீண்டும் உள்ளே வந்து கதவை சாத்தினான்.

ராஜா ராம், சத்தியேந்திரனிடம் விடைபெற்று கொண்டு தெருவின் முனைக்கு வந்தான்.

அங்கு ஒரு பெண் இவனுக்காகவே காத்து கொண்டிருப்பது போல மிக ஆவலுடன் இவனை எதிர்நோக்கினாள்.

“வாங்க... போன விஷயம் என்னாச்சி??“

“நீ சொன்னது போலவே போய் பேசினேன். நீ சொன்ன படியே அவரும் பேசுனாரு“

“ம்ம்..“

“சரிமா நான் ஒன்னு கேட்பேன் நீ தப்பா நினைக்ககூடாது. அதுவும் என் பொண்ணோட தோழிங்கிறதுனால கேட்குறேன்.“

“அந்த மனுசன இந்த அளவுக்கு புரிஞ்சி வச்சிருக்க?? அதுவும் அவரோட விழி அசைவு வரைக்கும் தெரிஞ்சி வச்சிருக்க ஆனா அவரு உன்ன பத்தி யோசிக்கிற மாதிரியே தெரியலயே?? இப்படி உன்ன பத்தி நியாபக படுத்துன அவரு மாறிடுவாருன்னு நினைக்கிறியா??“

அவளின் கருவிழிகள் சற்று விரிந்து எதையோ யோசிக்க தொடங்கியது.

நடுகூடத்தில் தனியே ஆடிக்கொண்டு இருந்த ஊஞ்சலுக்கு துணை செய்வது போல அமர்ந்துக்கொண்டான்.

டிவியில் காலை செய்திகள் இன்னும் முடியாமல் ஓடிக்கொண்டு இருந்தது.

“சைதாப்பேட்டை அருகே எலி மருந்தை கொடுத்து தன் ஒரு வயது குழந்தையை கொன்று விட்டு தாயும் தற்கொலைக்கு முயற்சி. இது கொலையா? தற்கொலையா? இதற்கு காரணம் தகாத உறவா, ஒரு அலசல் இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் குற்றமே குற்றம் காணத்தவறாதீர்கள்.“ என்ற இடைவேளை விளம்பரம் ஓடிக்கொண்டு இருந்தது.

சத்தியேந்திரன் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே அந்த செய்தியை கவனிக்காமல் அவனின் சிந்தனையை எங்கோ சிதற விட்டு கொண்டிருந்தான்.

வீட்டில் இருந்த ஒரு அறையில் இருந்து பெண்மணியின் முனகல் சத்தம் கேட்டது, அதனுடன் இருமலும் அதிகமாக இருந்தது.

சத்தியேந்திரன் மெல்லமாய் அசைந்து கொண்டு இருந்த ஊஞ்சலை கால்களை ஊன்றி நிறுத்திவிட்டு எழுந்து சத்தம் வந்த அறையை நோக்கி சென்றான். கதவு நிலையில் சாய்ந்து கொண்டு உள்ளே அறையை பார்த்தான். இரண்டு மூன்று நாட்கள் சுத்தம் செய்யபடாமல் கிடந்தது. பழச்சாறு பிழிந்துவிட்டு அப்படி அப்படியே பழதோல்கள் கிடந்தது. சாப்பிட்ட தட்டுகள் அங்கங்கு கிடந்தது. கட்டிலில் படுத்த படுக்கையில் கிடந்தார் சத்தியேந்திரனின் அம்மா பாக்யவதி.

அந்த அம்மாவை சுற்றி ஈக்கள் மொய்த்து கொண்டு இருந்தது. பாக்யவதி முகம் ரொம்பவும் வாடிபோய் வாட்டமாக இருந்தது. கட்டிலின் அடியில் தொங்கி கொண்டு இருந்த யூரின்பேக் நிரம்பி போய் இருந்தது. மெல்ல கட்டிலின் அருகே சென்று பாக்யவதி நெற்றியை வருடி கொடுத்தான். உடைந்து அழ தொடங்கினாள். யூரின் பேக்கை ரிமுவ் செய்து விட்டு வேறு பேக் மாற்றிவிட்டான். பாக்யவதி மெல்லமாய் ஆரம்பித்தார் “இதெல்லாம்..“

“அம்மா வேண்டாம் இது என்னோட கடமை, நான் குழந்தையா இருக்கும் போது என்ன நீ தானே பார்த்துகிட்ட இப்போ நீ எனக்கு குழந்தை நான் உன்னோட அம்மா..“ பாக்யவதி மீண்டும் அழுதார். அழுதுகொண்டே “உன்னோட முடிவு??“

“அத பத்தி மட்டும் பேசவே பேசாத என்னோட முடிவு எப்போதும் ஒரே முடிவு தான் அத மாத்தவே முடியாது “ சொல்லிவிட்டு வெளியில் வந்தான். தன் பிள்ளையை நினைத்த பாக்யவதி மீண்டும் கலங்கினாள்.

சத்தியேந்திரன் கிட்சனுக்கு சென்றான். பிரிட்ஜை திறந்து பால் பாக்கெட்டை தேடினான். பால் இல்லை, கிட்சனே தலைகீழாக இருந்தது. சிங் நிறைந்துகிடந்த சாமான்கள் சமையல் மேடை முழுக்க குப்பைகள் பார்க்கவே குப்பைகிடங்கை போல இருந்தது. சில மணி துளிகள் சில நினைவுகள் பற்றி கொள்ள அதை களைந்து விட்டு கிண்டிலில் சுடுநீரை சுடவைத்து கப்பில் ஊற்றி தேயிலைகளை போட்டு கலக்கி பிளாக் டீயை தயார் செய்தான்.

மீண்டும் பிரிட்ஜை திறந்து இரண்டு முட்டைகளையும் ஒரு பிரட் பாக்கெட்டையும் எடுத்து பிரட்டை ரோஸ்டருக்குள் திணித்தான். முட்டைகளை உடைத்து கல்லில் ஊற்றினான் அது ஊச்ச்..என்று பொரிந்தது. பிளாக் டீ ஆவி பறந்தது அடங்கி போய் இருந்தது அதை எடுத்து உதடுகளில் வைத்து ஒரு உறிஞ்சினான் துவர்பு தன்மை அதிகமாக இருந்தது.

“நீ போடுற டீ மட்டும் எப்படி இத்தனை ருசியா இருக்கு??“ தனக்கு தானே பேசிக்கொண்டான். அந்த பிளாக் டீயை அப்படியே கவுண்டர்டாப்பில் வைத்துவிட்டு பிளேட்டில் முட்டையையும் பிரட்டடையும் எடுத்து கொண்டு தன் அம்மாவின் அறைக்கு சென்றான். பாக்யவதி உறங்கி கொண்டு இருந்தார். அதனால் டேபிளில் மூடிவைத்தான். யாரோ கதவு தட்டு சத்தம் கேட்டது.

“மெர்ஸி..“ என்று சொல்லிக்கொண்டே வாசல் பக்கம் வந்து டர்ர்..கதவை திறந்தான்.

“மெர்ஸி..நீ??“

“என்ன சார் கொலைகாரிய பார்த்தமாதிரி இத்தனை அதிர்ச்சி கொடுக்குறிங்க.“

“நீ முழு??இன்னைக்கு??“

“என்ன சார் பாதி கேள்விய முழுங்குறிங்க??“

“யேய் கம் ஆன் நீ லீவ் தான சொன்ன அப்பறம் ஏன் வந்த?“

“ஏன் லீவ் சொல்லிட்டு வரகூடாதா??“

“டிரீட்மென்ட் பண்ணிருக்க இல்ல, கம்பிளிட் ரெஸ்ட் எடுக்க வேண்டாமா?? பேசி கொண்டே ஊஞ்சலை பார்க்க நடந்தான்.

ஊஞ்சலில் அமர்ந்து கொண்டான். அவள் ஊஞ்சலின் சங்கிலியை தடவி கொடுத்தபடியே நின்று பதில் சொன்னாள். “ஒரு நாள் லீவு போட்டா யாரு இந்த மாசம் கிரெடிட்கார்ட் ஈம்ஐ.. லோன்லாம் கட்டுறது.“

“என்ன மெர்ஸி ஒரு நாள் தானே??“

“இல்ல சார் இது சம்பளத்துக்காக மட்டும் இல்ல சிலமணி நேர மனஅமைதிக்காகவும் தான்.“

“யாரோட வந்த, எப்படி வந்த“

“பெர்னட் தான் கொண்டு வந்து விட்டான்.“

“அவன் எப்படி உன்ன அலோவ் பண்ணுனான்.“

“அவன் என்ன பண்ணுவான் பாவம், வேலையும் இல்ல, குழந்தையும் இல்ல ரொம்ப விரக்தியா பேசுறான் சார். அவன இப்போல்லாம் ரொம்ப மிஸ் பண்றன். எப்போதுமே சிரிச்சிட்டு அடுத்தவங்களை சிரிக்க வச்சிட்டு இருக்க பெர்னட்ட பார்க்க முடியுறது இல்ல“

“மெர்ஸி ஏன் இப்படி வாழ்ந்து முடிச்ச மாதிரி பேசுறிங்க?? வாழ்க்கையில பார்க்கவேண்டியது எவ்வளவோ இருக்கு?? உனக்கு டிரீட்மென்ட் கொடுத்த டாக்டர் கிட்ட பேசிருக்கேன். கவலைபட வேண்டாம்னு சொல்லிருக்காங்க இந்த மந்த் கன்பார்ம் ஆகிடுமாம்.. அதுக்கு நீ ரெஸ்ட் எடுக்கனும் மெர்ஸி“

“விடுங்க சார் நான் யாருக்காக கஷ்டபடுறனோ அவங்களே என்ன புரிஞ்சிக்கள அப்பறம் ஏன்?? போங்க சார்?? இந்த பொம்பளைங்க பொழப்பே இப்படி தான்.“

விரக்தியாக பேசிவிட்டு பாக்யவதி அறையை நோக்கி நடந்தாள்.

கதவை திறந்து பார்த்துவிட்டு தலையில் கைவைத்து நின்றாள். பின்னால் இருந்து சத்தியேந்திரன் மெல்லிய புன்னகை வீசி நின்றான்.

“சிரிக்க தெரியுது எங்க டாக்டருக்கு?? ஒரு பேசண்ட் இருக்க ரூம் இப்படி தான் இருக்குமா? வர வர நீங்க ஒரு சைக்காலஜிக்கல் டாக்டர் மாதிரி இல்ல பழைய இரும்பு கடையில வேலை பார்க்குற மாதிரி இருக்கு??“

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே டிரிங்..டிரிங்… என்று சத்தியேந்திரன் மொபைல் போன் ஒலித்தது.

மெர்ஸியிடம் ஒன்மினிட் என கைவிரலை காட்டிவிட்டு கொஞ்சம் தள்ளி வந்து மீண்டும் ஸ்கீரினை பார்த்தான் அன்நோன் நம்பராக இருந்தது யோசித்து கொண்டே மொபைலை ஆன் செய்து காதில் ஒற்றினான்.

“சத்தியேந்திரன் சார்..“

“யெஸ் சொல்லுங்க“

“நான் கிண்டி ஆர்3 ஸ்டேசனுக்கு புதுசா வந்து இருக்க சப்-இன்ஸ்பெக்டர் மைதின்.. இன்ஸ்பெக்டர் காந்தி சார் தான் உங்ககிட்ட பேச சொன்னாரு‘‘

“சொல்லுங்க சார்??“

“முக்கியமான கேஸ் நீங்க தான் கவுன்சிலிங் கொடுக்கனும்னு ஆர்டர் வந்து இருக்கு. பேசண்ட் இப்போ ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க இன்னும் இரண்டு நாள் கழிச்சி தான் டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணனும். அதுக்கு முன்னாடி நீங்க உங்க புரோசிஜர்ஸ்ச கம்பிளிட் பண்ணிட்டிங்கன்னா??“

சத்தியேந்திரன் பக்கம் பதில் ஏதும் இல்லை அமைதியாக இருந்தான்.

“சார்..சார்..“

“இருக்கேன்.“

“என்ன சார் பதில காணும்?“

“ஒன்னும் இல்ல? இன்னைக்கு நான் வரமுடியாது கொஞ்சம் ஒர்க் இருக்கு??“

“ஓ.கே. சார் நீங்க என்னைக்கு வரிங்கன்னு சொல்லுங்க“

“மைதின் சார் நாளைக்கு பார்க்கலாம்.. ஆனா நீங்க இன்ஸ்பெக்டர்கிட்ட ஏதும் சொல்லிக்க வேண்டாம் நான் இன்னைக்கு வரேன்னு சொன்னதாவே சொல்லுங்க லாஸ்ட் மினிட்ல கேன்சல் ஆனா மாதிரி காட்டிக்கலாம்.“

“சார்..“ யோசித்துவிட்டு “சரி சார் சொல்லிக்கலாம்..“

“ஓ.கே. மைதின் சார் நாளைக்கு நம்ப மீட் பண்ணலாம்..“

“சரி சார் நான் லொக்கேசன் ஷேர் பண்றன்.“ கனக்சனை கட் செய்தான். மெர்ஸியும் பாக்யவதியும் எதையோ சீரியஸ்சாக பேசிக்கொண்டு இருந்தனர். சத்தியேந்திரனின் தலை தெரிந்ததும் பேச்சை நிறுத்திவிட்டனர்.

“என்ன என்ன கண்டதும் பேச்சை நிறுத்திட்டிங்க..“

“எதபத்தி சார் பேசபோறோம் உங்க லைப் பத்தி தான், அம்மா ரொம்ப வருத்தபடுறாங்க சார்.“

“மெர்ஸி பிளீஸ் நீயும் ஆரம்பிச்சிடாத. இதபத்தி பேசி நான் ரொம்ப டயர்ட் ஆகிட்டேன்.“

“அது இல்ல“

“பிரட் ஆம்ப்லேட் செஞ்சி வச்சிருக்கேன் அம்மாவுக்கு கொடு..ஹவுஸ் கிளினிங்கு ஆள் சொல்லிருக்கேன் பத்துமணிக்கு மேல வருவாங்க..நீ ரெஸ்ட் எடு மதியத்துக்கு எதாவது ஆர்டர் பண்ணிக்கோ நான் பே பண்ணிக்கிறேன்.“

“டயப்படிஸ் பேசண்ட்டுக்கு பிரட்டா?? போங்க சார் நான் எதும் டிபன் செஞ்சி கொடுக்குறேன்.“

“மெர்ஸி நீ எதாவது செய் ஆனா ரொம்ப ஸ்டெர்ய்ன் பண்ணிக்காத..“

“எப்போதும் நமக்கு கிடைக்கிற அக்கறை வெளியில இருக்கவங்ககிட்ட இருந்து தான் அதிகமா கிடைக்குது.“ மெர்ஸி சிரித்தாள்.

சத்தியேந்திரன் தன் அறைக்கு சென்று குளிக்க டவலை எடுத்து கொண்டு பாத்ரூமிற்கு சென்றான். வாஸ்பேசன் அருகே இருந்த கண்ணாடியை பார்த்தான் அடர்ந்து கிடந்த தாடியும், சிவந்து போய் கிடந்த கண்களும் ஏதோ பல நாள் கோமாவில் இருந்தவன் போல காட்டியது. அடையாளேமே தெரியலையே சத்யா இப்படி இருக்க இப்போ தான் இந்த ஒரு வாரகாலமா தான் இப்படி ஆகிட்டேன். தனக்கு தானே பேசிக்கொண்டான். கண்ணாடி ஓரம் அதில் ஒட்டி இருந்த ஸ்டிக்கர் பொட்டை பார்த்தான். தன் இருவிரல்களால் மெல்ல வருடினான். அந்த ஒற்றை பொட்டு யாரையோ தொலைத்து அவர்களின் வருகைக்கு காத்திருப்பது போல ஒட்டி இருந்தது. சத்தியேந்திரன் தொண்டைக்குழிக்குள் சோகமும், துக்கமும், அழுகையும், அறியாமையும் உமிழாய் வலியுடன் இறங்கியது. பெரும் மூச்சொன்றை விட்டான். குளித்து முடித்துவிட்டு தலையை துவட்டி கொண்டே தன் மொபைலை எடுத்து ஏதோ நம்பரை தேடி டயல் செய்தான்.

டிரிங்..டிரிங்.. எதிர் முனையில் ரிங் போனது.

“ஹலோ சத்தியேந்திரன்..“

“மார்னிங் திருமலை சார்..“

“மார்னிங் ஸார்ப்பா பதினோரு மணிக்கு வந்துடுங்க.“

“அதகேட்க தான் போன் பண்ணினேன். சரி சார் நான் கிளம்பிட்டேன் வந்துடுறேன்.“

“நேர்ல மீட் பண்ணலாம் சத்தியேந்திரன்.“

உடை மாற்றி தன்னை தயார் படுத்திக்கொண்டு அறைக்கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தான். மெர்ஸி கிட்சனில் ஏதோ செய்து கொண்டு இருந்தாள்.

“மெர்ஸி நான் கிளம்புறேன்.“

“சார் உப்புமா சாப்பிட்டு போங்க??“

“வேண்டாம் மெர்ஸி நீங்க சாப்பிடுங்க..அப்பறம் மெர்ஸி நான் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறேன். இன்னும் கொஞ்சநாள் தான் அம்மாவ ஹோம்ல சேர்க்கபோறேன்.“

“ஏன் சார் இப்படி பேசுறிங்க உங்க பிரச்சனையெல்லாம் தீர்ரவரைக்கும் நான் அம்மாவ பார்த்துக்குறேன். நான் உங்க அசிஸ்டண்ட் சார் ஆனா என்ன அசிஸ்டண்ட் மாதிரியா பார்த்துக்குறிங்க. உங்க குடும்பத்துல ஒரு பொண்ணு மாதிரி பார்த்துக்குறிங்க“

“டேக்கேர் மெர்ஸி..“

வாசலுக்கு வந்தான் கிரில் கேட்டை திறந்தான் தன் இன்டிகா காரை எடுத்தான் சாலையில் நிறுத்திவிட்டு மீண்டும் இறங்கி கேட்டை மூடிவிட்டு காரை ஸ்டார்ட் செய்தான்.

கார் சாலையில் தன் சக்கரங்களை இயக்கி முன்னேறி கொண்டு இருந்தது. சாலை இருபுறமும் இரைச்சலும், மக்களின் ஓட்டமும் அதிகமாக இருந்தது. காரில் இருந்த எப்ம்ஐ ஆன் செய்தான்.

“ஹலோ ஹாய் மக்களே நான் உங்கள் ஆர்ஜே தேஜு. இது உங்கள் காதலுடன் நிகழ்ச்சி காலைபொழுது அழகாக்க நான் வந்துட்டேன். நீங்க அழகாகனுமா காதல் பண்ணுங்க சார்.. முதல்ல நான் தான் பேசுவேன்னு ஒத்த கால்ல நிக்கிறாரு நம்ப வாடிக்கை காலர் காஞ்சிபுரம் கார்த்தி. சொல்லுங்க கார்த்தி இந்த காதல பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க??“

“தேஜீ மேடம் காதல்னு சொன்னால ஆயிரம் வாட்ஸ் பிரைட் வந்துடும் நமக்கு. நான் கல்யாணதுக்கு அப்பறமா என்னோட மனைவிய என்னோட காதலியா நினைக்கிறேன் நான் அவள ரொம்ப நேசிக்கிறேன். கல்யாணத்துக்கு அப்பறம் வர காதல் தான் பெஸ்ட்“

“இடியட்“ சத்தியேந்திரன் முணங்கிவிட்டு எப்எம்ஐ ஆப் செய்தான்.

“என்ன சத்தியேந்திரன் சார் காதல்னா அத்தனை வெறுப்பு நீங்க காதல பத்தி என்ன நினைக்கிறிங்க சார்..“ பின் சீட்டில் இருந்து எழுந்த குரலை தன் முன் இருந்த கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து சீட்டின் பின்பக்கம் பார்த்தான் பதுமை போல ஒரு பெண் தலையை விரித்து போட்டு அமர்ந்து இருந்தது. சத்தியேந்திரனின் ஸ்டியரிங்கை வளைத்து நெழித்தான் கார் சாலையில் தரிகெட்டு ஓடியது.​
 

Kiruba Jp

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
36
Points
18
பூவை 2

“யோவ் கார்ல போறியா கப்பல்ல போறியா?? பணம் படைச்சவைங்களுக்கு தான் இந்த ரோடு சொந்தம்கிற மாதிரி ஆகிடிச்சி. சர்ருன்னு போறாயிங்க வராயிங்க எங்கள மாதிரி ஏழைங்க எங்க நடமாடுறதுன்னு தெரியல“ சத்தியேந்திரன் காரை மறைத்து கொண்டு காட்டுகத்தலாக கத்திக்கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன்.

சத்தியேந்திரன் அவனுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. காரை ரிவர்கியர் போட்டான். மீண்டும் தன் வலகை பக்கம் திருப்பி சல்லென்று பறந்தான்.

“எப்புடி போறான் பாரு பைத்தியகாரன்…“ என்று மீண்டும் கடிந்தான் அந்த இளைஞன். அங்கிருந்த கூட்டம் சமாதானம் செய்து அந்த இளைஞனை அனுப்பி வைத்தது.

கொஞ்சதூரம் வந்து திரும்பி சீட்டின் பின்னால் பார்த்தான் சத்தியேந்திரன். இப்போது அந்த பெண் அங்கு இல்லை திரும்பி திரும்பி சீட்டின் பின்பக்கம் பார்த்தான் யாரும் இல்லை நிம்மதி பெருமூச்சு விட்டான்.

சிறிது நேரங்களில் எல்லாம் சத்தியேந்திரன் கார் நீதிமன்ற வளாகத்தை அடைந்தது. சத்தியேந்திரன் காரை லாக் செய்து விட்டு நீதிமன்ற வாசலை நோக்கி நடந்தான். எதிரே திருமலை நின்று கொண்டிருந்தார்.

என்ன என்பது போல் ஜாடையாக கேட்டான் சத்தியேந்திரன்.

திருமலை இல்லை என்பது போல் உதடுகளை பிதுக்கினார். சத்தியேந்திரன் மீண்டும் காரை நோக்கி சென்றான். திருமலை வேகமாக சத்தியேந்திரனை நோக்கி ஓடி வந்து கார் டோரை திறந்து ஏறி கொண்டார்.

“சார் அவ மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கா??இப்போ என்ன ரீசன்?“

“கார எடுங்க சத்தியேந்திரன் போகிட்டே பேசலாம்.“

சத்தியேந்திரன் காரை ஸ்டார்ட் செய்தான். கார் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறி வீல்கள் சாலையில் ஓடியது.சிறிது நேர அமைதி திருமலை பேச்சை தொடர்ந்தார்.

“முப்பது வருஷம் இந்த வக்கீல் தொழில்ல இருக்கேன் இந்த கேஸ் எனக்கு ரொம்ப வித்தியாசமானது. மிஸ்டர் சத்தியேந்திரன் இன்னைக்கும் அவங்க நம்பள ஏமாத்திட்டாங்க ஜட்ஜ் கடுப்பாகிட்டாரு நல்ல வேளை அவர போய் ஒய்வு அறையில சந்திச்சி பேசினேன். எல்லாருக்கும் முன்னாடியும் ஜட்ஜ் பேசிருந்தா என்னோட மானமே போயிருக்கும்.“

“என்ன காரணம் வராததுக்கு?“

“லோ பிரஸ்சராம் ஹாஸ்பிட்டல்ல அட்மீட் ஆகியிருக்காங்களாம். அவங்க வக்கீல் தான் சொன்னாரு“

“எந்த ஹாஸ்பிட்டலாம்?“

“ஹச்.எம்.ஏ“

கார் சாலையில் தன் சக்கரங்களை இயக்கிகொண்டிருக்கும் போது அவன் நினைவுகளும் அவன் மூளையை இயக்கிகொண்டு இருந்தது.

கல்லூரி படிப்பை முடித்து, தன் பயிற்சிகளை முடித்து அரசு மனநலமருத்துவராக நியமனம் ஆகும் முன்பு தன் வீட்டில் சின்னதாக கிளினீக்கை வைத்து நடத்தினான். அப்போது தான் அவளை முதலில் சந்தித்தான். முதல் பேசண்ட்டும் அவள் தான் பேசண்ட் காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தாள் அந்த அழகான இருபத்திரண்டு வயது தக்க இளம் பூவை. மிகவும் பதற்றமாக கைகளை பிசைந்துக் கொண்டும் நகங்களை கடித்து கொண்டும் நொடிக்கு ஒரு முறை நெற்றியில் படியும் வியர்வையை கைகளால் துடைத்தபடியும். அப்போது அருகில் ஒரு குரல் “எஸ் கியூஸ் மீ“ பூக்கள் மெல்ல காம்பை வளைத்து காற்றுக்கு இசைவது போல வந்த குரலுக்கு திரும்பினாள்.

“என் பேரு சத்தியேந்திரன்..“

“ஹாய் ஐ அம் கண்மணி“

“ஏன் இவ்வளவு பதற்றம், கை நகம் முழுக்க கடிச்சி துப்பிட்டிங்க“

கடித்துக்கொண்டிருந்த விரல்களை சுடிதாரின் துப்பட்டாவிற்குள் மறைத்துக்கொண்டாள்.

“எனி திங் சீரியஸ்?“

“நத்திங்“

“அப்போ கூல்…“

“எப்படி?“

“என்ன எப்படி?“

“இல்ல இந்த டாக்டர் எப்படி? பணம் நிறையா புடுங்குவாறா, எங்க பார்த்தாலும் மெடிக்கல் மாஃபியா வேற சொல்லுறாங்க சரியா கவுன்சிலிங்கெல்லாம் கொடுப்பாரா“

“ஏன்ங்க உங்க கற்பனைக்கு ஒரு அளவு இல்லையா கவுண்சிலிங் கொடுக்குற டாக்டர் மெடிக்கல் மாஃபியாவுல இருந்து உங்கள ஹிப்னோயிட்டைசம் பண்ணி உங்க கிட்டினிய எடுக்க போறாரா..“

“இல்ல, சரி நீங்க ஏன்?“

கேள்வியை அவள் கேட்பதற்குள்ளேயே,“சார் உள்ள போங்க?“ என்றாள் அங்கு வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்.

சத்தியேந்திரன் உள்ளே சென்று சில மணி துளிகள் கடந்தது.

அந்த பெண் கண்மணியை பார்த்து “நீங்க போங்க மேடம்…“.

“இல்ல அந்த சார்..“ என்று ஏதோ சொல்லி தயங்கினாள்.

“போங்க மேடம்..“ அவள் அழுத்தி சொல்லவே எழுந்து உள்ளே சென்றாள்.

உள்ளே சென்ற கண்மணிக்கு பெரும் அதிர்ச்சி டாக்டர் சீட்டில் அமர்ந்திருந்தது சத்தியேந்திரன்.

“வாங்க கண்மணி உட்காருங்க?? நான் மாஃபிய ஹெட்டெல்லாம் கிடையாது பயப்புடாதிங்க?? கம் சிட்“
கண்மணி அசட்டு சிரிப்பை சிந்திக்கொண்டு எதிரே வந்து அமர்ந்தாள்.

“நீங்க டாக்டர்??“

“ஆமாங்க நான் தான் டாக்டர். நீங்க என்னோட முதல் பேசண்ட். இது ஒரு அனலைசிஸ் தான், பேசண்டோட ப்ரண்டா இருந்து பார்க்குறப்போ அவங்களோட பிரச்சனை இன்னும் ஈசியா புரியும்.“

“வித்தியாசமான டாக்டர் தான். என்னோட ப்ராப்ளம்..."

“உங்களோட ப்ராப்ளம் அதிகப்படியான ஸ்ட்ரஸ், நீங்க சரியா தூங்கியே வாரத்துக்கு மேல இருக்கும். சூஸைட் அட்டண்ட் பண்ணிருக்கிங்க பட் அவ்வளவு தைரியம் இல்லாத பொண்ணு“

“தைரியம் இல்லாம இல்ல.. தைரியமெல்லாம் நிறையா இருக்கு? மனசு தான் வரல“

சத்தியேந்திரன் சின்னதாக சிரித்தான்.

“சரி..சரி..எப்படி இது உங்களுக்கு??“

“உங்க முகத்துல உள்ள டயர்ட் சொல்லுது கண்கள் சிவந்து போய் இருக்கு. பிளேட், கத்தியோ இல்ல பிளேடு தான். அதுவும் ரொம்ப பழைய பிளேட் போல ஆழமா வெட்டமுடியாம மேலோட்டமா அதுவும் நரம்புகளே இல்லாத இடமா பார்த்து கிழிச்சி கிழிச்சி வச்சிருக்கிங்க.“

கண்மணி வாயை பிளந்து கேட்டு கொண்டு இருந்தாள்.

“ரெண்டு காரணம் தான் ஒன்னு லவ் பெய்லியர், இல்ல ஒர்க் டென்ஸன்..“

“எல்லாம் சரியா சொல்லிட்டு காரணத்தை தப்பா சொல்லிட்டிங்களே டாக்டர்.. கவுன்சிலிங் வந்தா இந்த ரெண்டு காரணம் தானா இருக்கும்..“

“சரி, உங்க மனசுல இருக்கத பேசுங்க ஏன்னா மனுசங்களுக்கு இப்போ மனம்விட்டு பேச தான் யாரும் கிடைக்கிறது இல்ல. மனம்விட்டு தெளிவா பேசுறவங்கள இந்த உலகம் பைத்தியம்னு சொல்லிடும்..“

“சரி தான்..என்னோட பிரச்சனை எங்க அப்பா தான்.“

“இன்ட்ரஸ்டிங்..“

“என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி டார்ச்சல் பண்றாரு“

“உகூம்..“

“எனக்கு விருப்பம் இல்ல...எங்க அப்பாவ பயமுறுத்த தான் கைய கட்பண்ணி...இல்ல கீரிவிட்டு...“

சத்தியேந்திரன் சிரித்தான்.

“எனக்கு விருப்பம் இல்ல“

“சரி, பிடிக்கலன்னு ஆணிதனமா சொல்ல வேண்டியது தானே“

“சொன்னா கேட்க மாட்டாரு அவரோட பிடிவாதம் தான் அவருக்கு பெருசு“

“கல்யாணம் வேண்டாம்னா எதும் காதல்“

“நோ..அதெல்லாம் ஒன்னும் இல்ல. பெண்கள்னா கல்யாணம் பண்ணிக்கனும், கல்யாணம் பண்ணுனதும் புள்ள பெத்துடனும், அந்த புள்ள, புருஷன்னு வாழ்க்கையை ஓட்டனும். சுத்த நான்சன்ஸ், எனக்குன்னு சில கனவுகள் இருக்கு சில காலமாவது அந்த கனவ நினைவாக்கி வாழ்ந்துடனும்..“

“சூப்பர்..உங்களோட கனவு அது ஸ்ட்ராங்க இருந்தா நீங்களும் ஸ்ட்ராங்கா இருப்பிங்க உங்க அப்பா பிடிவாதைத்தை காட்டிலும். எந்த குழந்தையுமே பிறந்ததும் நடக்குறது இல்ல, மெல்ல விழுந்து, எழுந்து தான் நடக்க ஆரம்பிக்கும். கனவுகளும் அப்படி தான் விழும், எழும். ஆனா விடக்கூடாது கால்கள ஊணி நடக்க ஆரம்பிச்சிடனும். முதல நல்லா தூங்குங்க தெளிவு கிடைக்கும். தூங்குறதுக்கு மட்டும் டேபிடல்ட. தரேன் அதுவும் ஒரு நாளைக்கு மட்டும் தான் அதுக்குள்ள உங்க பிரச்சனைய தீர்த்துக்கோங்க..“

“இப்பவே கொஞ்சம் தெளிவா தான் இருக்கேன்.“

பிரிஸ்கிரிப்சனை நீட்டினான்.

கண்மணி வாங்கி கொண்டு பீஸ்சை கேட்டுவிட்டு கொடுத்தாள்.

“தேங்யூ..“என்று சொல்லிவிட்டு எழுந்து கதவருகே வந்தாள். திறக்க முற்படும்போது “ஐ இம்ப்ரஸ்டு“ என்றான் சத்தியேந்திரன்.

கண்மணி திரும்பி பார்த்து சிரித்தாள்.

கார் சாலையில் வளைந்து நெழிந்தது. வக்கீல் திருமலை சத்தியேந்திரன் தோள்களை குலுக்கினார். திடீரென்று சத்தியேந்திரன் பூமிக்கு வந்தவன் போல தூக்கி போட்டு எழுந்தான் காரை சடன் ப்ரேக் அடித்து நிறுத்தினான்.

“என்ன சத்தியேந்திரன்..எனிதிங்..“

“நத்திங் சார்..“

“நான் டிரைவ் பண்ணவா…“

“வேண்டாம் ஐ அம் ஆல்ரைட்…“

காரை இப்போது தெளிவாக ஓட்டினான். கார் நேராக ஹச்.எம்.என் மருத்துவமனை வாசலை வந்தடைந்தது. காரைவிட்டு இருவரும் இறங்கினார்கள். சத்தியேந்திரன் முன் சென்று ரிசப்சனில் இருந்த நர்ஸிடம் விசாரித்தான்.

“நார்மல் வார்டுல இருக்காங்க சார்.. நேரா போய் லேப்டு எடுங்க“

“தேங்யூ, வாங்க சார்..“

இருவரும் நார்மல் வார்டை நோக்கி நடந்தனர்.

கதவை திறந்த போது இரண்டு மூன்று பேசண்டுகள் அங்கு இருந்தனர்.

முதல் படுக்கையில் ஒரு சிறு குழந்தைக்கு வயிற்றில் தையல் போட்டு படுத்து இருந்தது அது சத்தியேந்திரனை வைத்த கண்வாங்காமல் பார்ப்பது போல இருந்தது. அவன் அதை கவனிக்காதவன் போல நடந்தான். அடுத்து பெட்டில் இளம் வயது பெண் ஒருத்தி படுத்துகிடந்தாள். அடுத்த பெட் காலியாக கிடந்தது. கடைசி பெட்டில் முப்பது வயது பெண் ஒருத்தி கைகளை முகத்திற்கு கொடுத்தபடியே முகத்தை மறைத்து படுத்துகிடந்தாள். அவளின் ஒரு கையில் டிரிப்ஸ் ஏரி கொண்டு இருந்தது.

சத்தியேந்திரன் திருமலையிடம் ஜாடை காட்டினான்.

“மேடம்..“ திருமலை அழைத்து அழைத்து பார்த்தார் அந்த பெண் எழும்புவது போல இல்லை. சத்தியேந்திரன், திருமலையை மறைத்து விட்டு.

“கண்மணி…“ என்று அழைத்தான்.

இதழ்கள் விரித்த செந்தாமரை போல இருந்தது அவள் கைகளை விலக்கி அவள் முகத்தை காட்டிய போது.

“வாங்க..“ எதுவும் அலட்டிகாதவலாக அழைத்தாள்.

“வாட் இஸ் திஸ்“

“எது இதுவா என்ன நீங்க ஒரு டாக்டர் இல்ல....இல்ல நீங்க எவ்வளவு பெரிய டாக்டர் இது என்னன்னு கூடவா தெரியல… இது டிரிப்ஸ் மயக்கத்துக்காக போட்டுருக்காங்க. ஆனா அவங்களுக்கு தெரியவே தெரியாது, இந்த மயக்கம் தெளியவே போறது இல்லன்னு“ கண்களை சுருக்கி சத்தியேந்திரனை பார்த்தாள்.

“சிட்..நான் உன்னோட டிராமாவ என்னன்னு கேட்டேன்.“

“இது டிராமாவா போயி டாக்டர்கிட்டு பேசு மேன்..“

“கண்மணி அடுத்த ஹியரிங் ப்ரைடே அதுக்குள்ள அடுத்த டிராமாவ ஸ்டார்ட் பண்ணிடுவியா??“
கண்மணி மெல்ல சிரித்தாள்.

கண்மணியின் வக்கீல் வேகவேகமாக அங்கு வந்து சேர்ந்தார். “என்ன என்னோட கிளைண்ட மிரட்டிகிட்டு இருக்கிங்க.“

“யோவ் சதா நீ யாருன்னு எனக்கு தெரியாதா“ என்றான் திருமலை.

“வக்கீல் சார் உங்கள பத்தியும் எனக்கு தெரியும் நான் சேர்த்து வைக்கனும்னு நினைக்கிறேன் நீங்க பிரிச்சி வைக்கனும்னு நினைக்கிறிங்க.“

“விடுங்க வக்கீல் சார் அவருக்கு கல்யாணம், குடும்பம்னு ஒன்னு இருந்தாதனே பிரிவோட வலி என்னன்னு தெரியும்.“ என்றாள் கண்மணி.

திருமலை முகம் சுருங்கி போனது.
“நீங்க வாங்க சார்“என்று சத்தியேந்திரன் திருமலை கையைபிடித்து அழைத்துகொண்டு கிளம்பினான்.

“ஏய் மேன் நில்லு..“ சத்தியேந்திரன் நின்று திரும்பி கண்மணியை பார்த்தான்.

“நான் உனக்கு டிவோர்ஸ் கொடுக்கமாட்டேன்..ஏன்னா…ஐ அம் இம்ப்ரஸ்ட்..“ சொல்லிவிட்டு கண்அடித்தாள்.

சத்தியேந்திரன் பல்லை கடித்துவிட்டு இறங்கி கீழே வந்தான்.

காரின் அருகே வந்தான். கார் மீது கைகளை வைத்துகொண்டு “இப்போ என்ன சார் பண்றது..“என்று திருமலையை பார்த்து கேட்க முற்படும் போது திருமலையின் பின்னால் காரில் பின்சீட்டில் அமர்ந்திருந்த அந்த பதுமை நின்று கொண்டிருந்தாள்.
சத்தியேந்திரனுக்கு மூச்சு வேகமாக வாங்கியது. திருமலை “சத்தியேந்திரன் என்ன??என்ன??“ என்றார். சிறிது நேரத்தில் சத்தியேந்திரன் மயங்கி சரிந்தான். அங்கு நின்று கொண்டிருந்த நர்ஸ் ஓடி வந்து பார்த்தாள்.

“என்னாச்சி சார்..“

“தெரியலமா பேசிகிட்டு இருந்தவரு மயங்கிட்டாரு“

“தண்ணீயிருந்தா எடுங்க??“ திருமலை காரை திறந்து தண்ணீர் பாட்டிலை தேடினார். சீட்டின் கீழே விழுந்து கிடந்த பாட்டில் தண்ணீரை கைளில் ஊற்றி வேகமா சத்தியேந்திரன் முகத்தில் அடித்தார். அதற்குள் கூட்டம் சிறிதாக கூடியது. சத்தியேந்திரன் மெல்லமாக கண்களை திறந்தான்.

“சத்யா..“ என்று கணமாக அழைத்தார்.

மெல்ல மெல்ல நினைவு வந்து எழுந்து அமர்ந்தான்.

“என்னாச்சி..“ இப்போது கூட்டம் கலைந்து கொண்டு இருந்தது. அந்த கூட்டத்திற்குள் நின்று கொண்டிருந்த அந்த பதுமை இமைக்காமல் இவனையே பார்த்துகொண்டு நின்றாள். விரிக்க விரிக்க சத்தியேந்திரனும் பார்த்தான்.

கைகளை உயர்த்தி அவளை திருமலையிடம் காட்டினான். திருமலை உற்று அவன் காட்டும் இடத்தை பார்த்தான். கூர்மையான பார்வையால் திருமலை சத்தியேந்திரன் காட்டிய இடத்தை நோக்கினார்.​
 

Kiruba Jp

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
36
Points
18
பூவை 3

திருமலை இப்போது காரை தான் ஓட்டுவதாக கூறி சத்தியேந்திரனை ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு அவர் காரை ஓட்டிக் கொண்டு வந்தார். சத்தியேந்திரன் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். “நான் இதுக்காக தான் கண்மணிய டிவொர்ஸ் பண்ண நினைக்கிறேன்.“ திருமலை எதுவும் பேசவில்லை. கார் சாலையில் ஓடும் சத்தத்தை தவிர இருவருக்குள்ளும் எந்த சத்தமும் கேட்கவில்லை. திருமலை இறங்கும் இடம் வந்தது.

“நான் வந்து டிராப் பண்ணவா சத்யா“ சத்தியேந்திரன் யோசனையாக இருந்தான்.திருமலை சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்.“என்ன சத்யா எதுவும் பேசமாட்டைங்கிறிங்க“

“வேண்டாம் சார் நான் பார்த்துக்குறேன். எனக்கு யாரோட உதவியும் வேண்டாம்“, பட்டென்று பேசினான். இவன் பட்டும்படமால் பேசுவது திருமலைக்கு ஏதோ செய்தது. ஆனால் அது அவன் நிலமை என்பதை புரிந்துக்கொண்டார். “கேர்புல் அண்ட் டேக்கேர்..“,ஆறுதலாக சில வார்த்தைகளை சொல்லிவிட்டு தான் இறங்கும் இடத்தில் இறங்கி கொண்டார். சத்தியேந்திரன் இப்போது காரைவிட்டு வெளியில் வந்து டிரைவர் சீட் பக்கமாக உட்கார்ந்துக்கொண்டான். காரை இயக்கினான், அதன் இயக்க.வேகத்தில் அமைதியாக பயணம் தொடர்ந்தது.

டு…டு..டூ..டு.. ஆட்டோ வந்து வாசலில் நிற்கும் சத்தம் கேட்டு லதா வேகவேகமாக ஓடிவந்து வாசல்கதவை திறந்தார். தெருவிற்கு உள்ளடங்கி அமைந்திருந்த தனி ஓட்டுவீடு. பழையகாலத்து வீடாக இருந்தாலும் கம்பீரமாக நின்றது. ஆட்டோவில் இருந்து கண்மணி இறங்கினாள். ஆட்டோகாரரிடம் எந்த பேரமும் பேசும் நிலமையில் அவள் இல்லை. அவன் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு தன் வீட்டின் முன் வாசலை நோக்கி நடந்தாள்.

“பாப்பா..எங்க போன காலையில இருந்து“ பெண்பிள்ளை காலையில் சொல்லாமல் வெளியே சென்று விட்டால் ஒரு பெற்றவளின் பரிதவிப்பு எப்படி இருக்கும் அப்படி தான் துடித்து போய் கேட்டார் லதா.
“அம்மா..அது..வா முதல உள்ள போய் பேசலாம் ரொம்ப டயர்டா இருக்கு“ என்று மறித்து தன் அம்மாவை உள்ளே அழைத்து சென்றாள் கண்மணி. லதா வாசல் கதவை மூடிவிட்டு கண்மணியின் பின்னால் வேக வேகமாக நடந்து போய் கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்டார்.

“கேஸ் விசயமா அழைஞ்சிட்டு இருந்தேன்.“ லதாவின் முகம் சுருங்கியது. தன் பெண்பிள்ளை இப்படி கஷ்டபடுவது எந்த தாயிக்கு தான் நிம்மதியை தரும். லதா தன்னுடன் வாழ்ந்து தனக்கு முன்னே கடவுளிடம் சேர்ந்துவிட்ட தன் கணவனின் சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படம் வழியே நினைவுகூர்ந்தாள். அவளின் பார்வையும், பரிதவிப்பும் ‘நீங்களாவது நம்ப பொண்ணுக்கு உதவ கூடாதா‘ என்பது போல் இருந்தது. லதா, கண்மணியிடம் எந்த பதிலும் கூறவில்லை அமைதியாக கிட்சனை நோக்கி சென்றார். கண்மணி மெல்ல வந்து அங்கு இருந்த தன் அப்பாவின் புகைப்படத்தை பார்த்தாள். தெய்வதிரு.மகேந்திரன் என்ற பெயருக்கு பின்னால் பிறப்பு, இறப்பு என்ற செய்திகள் இருந்தது. எந்த கவலையும் கிடையாது யார் கவலையை பற்றிய நினைப்பும் தேவையில்லை. மனிதன் பிறக்கும் போது கவலையோ துன்பமோ இன்றி பிறக்கிறான், இறந்த பின்பு அவனுக்கு கவலைகள் என்பது ஏது. சாந்தமாக தெரிந்த தன் தந்தையின் முகத்தை கண்களை மூடி நினைத்துக்கொண்டாள்.

தன் அறைக்கு சென்றாள். சிறிது நேரத்தில் தன் உடைகளை மாற்றிக்கொண்டு தன்னை ரெப்ரஸ் செய்துக்கொண்டாள். லதாவின் குரல் அடுப்பாங்கரைவாட்டில் இருந்து ஒலித்தது. “பாப்பா தோசை எடுத்துட்டு வரவா..“ கண்மணி ஏதோ பலத்த சிந்தனையில் இருந்தாள். அவள் காதில் தன் அம்மா கத்தி கேட்பது கூட ஏறவில்லை. தன் ஹேண்ட் பேக்கில் இருந்த செல்போன் ரிங்டோனை எழுப்பியது டுடுடிங்..டுடுடிங்..டுடுடிங்.. முதல் முறை முழுவதுமாக ரிங்டோனை எழுப்பி அடங்கியது. லதா தட்டில் தோசையை எடுத்து வைத்துக்கொண்டு கண்மணி அறைக்கு வந்தார். இப்போது மீண்டும் மொபைல் சினுங்கியது. "என்ன போன் அடிக்கிறது கூட காதுல விழாம உட்காந்திருக்கா", என்ற யோசனையோடு அவள் கைபையில் இருந்து மொபைலை எடுத்தார். விடியோகாலிங் வந்தது, ஆன் செய்தார். “முகில்..“ தன் இளையபிள்ளையை பார்த்த மகிழ்ச்சி முகத்தில் கொப்பளித்தது. மிகுந்த சந்தோஷத்துடன் “என்னடா இளைச்சிட்ட“ அம்மாக்களுக்கே உரிய தன் பிள்ளையின்பால் கொண்ட அன்பின் மிகுதியால் ஏற்படும் உணர்வு தான் அது. அவன் குண்டாகவே இருந்தாலும் இளைத்து துரும்பென தான் தாயின் கண்களுக்கு தெரிவான்.

“அம்மா நான் நல்லா தான் இருக்கேன். உன் கண்ணு தான் பிரச்சனை“,பிள்ளைக்கே உரிய நக்கலுடன் பதிலை சொன்னான். “அக்காகிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்“,லதா இப்போது கண்மணியை பார்த்தார். கண்மணி தன் நினைவுக்கு வந்திருந்தாள். கண்களை சிமிட்டி போனை தன் வசம் ஆக்கினாள். “ரெண்டு புள்ள பெத்தேன் ரெண்டும் ரெண்டு பக்கம் கிடந்து சீரளியுதுங்க..கடவுளே…“ பொங்கி கொண்டு வந்த கோபத்தை வார்த்தைகளை விட்டு ஆற்றி கொள்பது தானே மனித மனம், புலம்பி கொண்டே கிட்சனை பார்க்க சென்றார்.

“சொல்லுடா நல்லாயிருக்கியா“ பாசமாக கேட்டாள்.

“ம்.. என்னாச்சி?? மாமாகிட்ட எதும் சேஞ்சஸ் இருக்கா??“

“நத்திங்..வேலைக்கு போகலாம்னு இருக்கேன்.“

“ஏன்கா ஏன் நான் தான் லண்டன்ல கைநிறைய சம்பாதிக்கிறேன்ல.. அப்பறம் எதுக்கு“

“இல்லடா இது ஒரு சேஞ்ச்க்காக அதே சமயம் அவருக்கு நான் வேலைக்கு போகனும் தான் விருப்பம்.“

“அத சொல்லு.. இருந்தாலும் உனக்கு அந்த மனுசன் மேல இவ்வளவு காதல் ஆகாது.“ தன் அக்காவை செல்லமாக கண்டித்தான். இருவரும் சில மணி நேரங்கள் தங்கள் வாழ்வில் நடந்த சின்ன சின்ன நிகழ்வுகளை பேசி சிரித்து கொண்டனர். கண்மணி காலையில் நடந்தவற்றை எல்லாம் மறந்து சிறு புன்னகை செய்தாள். “சரிக்கா லேட் ஆகிட்டு நான் நாளைக்கு கால் பண்றேன்.“ வைக்க மனம் இல்லாமல் தளர்ந்த குரலில் சொன்னான் முகில்.

“உம்..டேக்கேர்..“என்று கண்மணியும் பரஸ்பரமாக அன்பை பறிமாறி இணைப்பை துண்டித்தாள். மேசையின் மீது தோசைகள் ஆறிகொண்டு இருந்தன. அருகில் இருந்த இன்னொரு தட்டை வைத்து அதனை மூடிவைத்தாள். அம்மா அடுப்படி வேலையெல்லாம் முடித்து விட்டாள் போலும் கிட்சனில் லைட் எறியாததை வைத்து கண்டுக்கொண்டாள். அவள் அறைக்கு நேர் எதிராகவே கிட்சன் இருந்தது. நடுவில் இருந்த கூடத்தில் அம்மா பாயை உதறி விரித்துக்கொண்டு இருந்தாள்.

“எதுவும் வேணுமா பாப்பா?“

“நீ படுத்துக்கோமா..“

“முருகா..“ அவனாவது தனக்கு ஆறுதல் தந்து உறக்கத்தை தருவானா என்ற வண்ணம் ஏங்கி அழைத்துகொண்டார். கண்மணி அந்த கூடத்தையே விரிக்க பார்த்தாள். அவள் மனம் சொல்லியது இந்த கூடத்தில் தானே எல்லோரும் சந்தோஷமாக சிரித்து பேசி அன்பை பரிமாறி கொண்டு நிம்மதியாக இருந்தோம். இந்த கூடம் தானே என்னையும் சத்தியேந்திரனையும் இணைத்து வைத்தது எல்லாமே எங்கே போனது, தனக்குள்ளயே கேட்டுக்கொண்டாள். அவளின் மனம் மெல்ல தொலைந்த நினைவுகளில் தன் பயணத்தை தொடங்கியது.

சத்தியேந்திரனை, கண்மணி சந்தித்து ஆறு மாதங்கழித்து மீண்டும் சந்தித்தாள். பீனிக்ஸ்மால் வளாகத்தில் சத்தியேந்திரன் காரில் சாய்ந்த வண்ணம் நின்று பிரம்மிப்பாக இருந்த அந்த கட்டிடத்தையும், போய் கொண்டும் வந்து கொண்டும் இருந்த மக்கள் கூட்டத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தான். எத்தனை முறை சென்றாலும் சலிப்பே தராது போல ஷாப்பிங் போகும் பெண்களுக்கு, காதலுனடன் கைகோர்த்த வண்ணம் கொஞ்சி பேசி போகும் பெண்களையும், தன் பிள்ளைகளை அந்த பொம்மை வேண்டாம் அப்பறம் வாங்கி தரேன் என்று அதட்டி இழுத்துவரும் அன்னைமார்களையும் ரசித்தான். பட்டென்று அவன் கண்டு ஏற்கனவே பதிந்த உருவம் அவனை கடந்தது. சற்று நிதானித்து மீண்டும் அது நமக்கு தெரிந்த உருவம் தானா என்று மனதை பரிசீலனை செய்தான். “கண்மணி..“ என்று ஆழ்மனம் சொன்னது. அவன் எப்போது பெயரை சொல்லி அழைப்பான் என்று காத்துக்கொண்டு நடப்பவள் போல அன்னநடை போட்டு கொண்டிருந்தாள் கண்மணி. அப்படி என்றால் அவள் முன்னமே அவனை கண்டுவிட்டாள். முதலில் இருந்தே அவனை கவனித்திருந்தவள் போல அவன் ‘கண்மணி‘ என்று முதல் தடவை அழைத்ததுமே வேகமாக திரும்பினாள்.

அவன் கண்மணியை நெருங்கி நடந்தான். “ஹாய்..“ அவன் சொன்னதும் சிறு புன்னகை சிந்திக்கொண்டாள். “நீங்க இங்க?? நான் எதிர்பார்க்கல?“

“நானும் தான்.“

“ஷாப்பிங்கா..“

“ஆமாம்.. இது என் தம்பி முகில் டிவல்த் ஸ்டாண்டடு.“ இப்போது தான் சத்தியேந்திரன் அவளுக்கு பக்கத்தில் இன்னொரு உருவம் நிற்பதையே கவனித்தான்.

“ஹலோ..“என்று இருவரும் மனமாற கைகளை குலுக்கிகொண்டனர்.

“அப்பறம்..“

“அப்பறம்..“ இருவரும் மாறி மாறி குழைந்தனர்.

“என்னோட பேர் எப்படி உங்களுக்கு நியாபகம் இருந்தது. உங்களுக்கிட்ட வர பேசண்ட் எல்லாரையும் இப்படி தான் நியாபகம் வச்சிப்பிங்களா??“
குதர்க்கமான கேள்வியை கேட்டாள்.

“அப்படி இல்ல சில பேர்கள் மட்டும் மனதுல பதிஞ்சிடுது“ அவளை ஈர்க்கும் வண்ணம் மென்பதிலை சொன்னான்.

“ஓ.கே.ஓ.கே..‘'

“சரி அதவிடுங்க உங்க டீரிம் என்னாச்சி?“

“நான் இப்போ ஒரு ஐடி கம்பெனில வேலை பார்க்குறேன்.“

“சூப்பர், உங்க அப்பா உடனே சம்மதம் சொல்லிட்டாரா.“

“ஒரு வருஷத்துக்கு அக்ரிமென்ட் போட்டுருக்கேன். ஒரு வருஷம் முடிஞ்சதும் உடனே கல்யாணம்.“

“இன்ட்ரஸ்டிங்.“

“என் கனவோட சிலகாலம் வாழும் சந்தோஷம் போதும்.“

அவளின் பேச்சில் ஆழ்ந்து போய் இருந்தான். அவனை இடைஞ்சல் செய்யும் வண்ணமோ பாக்யவதி அவ்விடம் வந்தார். இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை தூரத்தில் இருந்தே கவனித்துவிட்டார். அருகே வந்து இருவரையும் மாறி மாறி பார்த்தார். சத்தியேந்திரன் பாக்யவதியை கவனித்து சிரித்தான். தன்னை இப்படி யாரோ உற்று உற்று பார்ப்பது கண்மணியை குறுக செய்தது. சத்தியேந்திரன் கவனித்துவிட்டான்.

“நெர்வர்ஸ் ஆகாதிங்க? இது என்னோட அம்மா.“

“ஓ“ இப்போது தான் அவள் கொஞ்சம் நிம்மதி அடைந்தாள். கைகளை கூப்பி வணக்கம் சொன்னாள். பதிலுக்கு பாக்யவதியும் வணக்கம் சொன்னார். “இது??“ என்று இழுத்தார்.

“என்னோட ப்ரண்ட்மா“

“அப்படியா?“ கண்மணியை மீண்டும் ஏற இறங்க பார்த்தார்.

“சரிப்பா நீ பேசிட்டுவா நான் கார்ல வெயிட் பண்றேன். வரேம்மா..ஒரு நாள் வீட்டுக்கு வா..“, அழைத்துவிட்டு இருவருக்கும் நடுவில் நாம் எதற்கு குறுக்கே என்று காரில் போய் ஏறிக்கொண்டார்.

“ஏன் என்ன உங்க பேசண்ட்டுன்னு சொல்லல“

“அம்மா கொஞ்சம் ஓல்ட் டைப் உங்கள என்னோட பேசண்ட்ன்னு சொன்னா? வேற மாதிரி நினைப்பாங்க அப்பறம் முதல் கோணல் முற்றிலும் கோணல் தான்.‘'

“அவங்க என்ன அப்படி நினைச்சா என்ன?“ அவள் அப்படி கேட்பாள் என்று தெரியும், ஆனால் அவளிடம் எதை சொல்வது, எப்படி சொல்வது. என்னவோ அவளை தனக்கு பிடித்து இருப்பதை சத்தியேந்திரன் அசைப்போட்டு கொண்டான். மழுப்பலாக ஒரு பதிலை சொன்னான்.

“சொல்ல வேண்டாம்னு தோணுச்சி?“

சத்தியேந்திரனை உன்னிப்பாக கவனித்தாள், அவன் முகம் மலர்ச்சியாக இருந்தது. ஆனால் கண்மணியை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் ஒரு வித நாணமாக நின்றான். வந்த சிறு புன்னகையை தனக்குள்ளயே மறைத்துக்கொண்டாள். அவன் தலையை தூக்கி பார்க்கும் போது அவள் சிறிது தூரம் சென்றிருந்தாள். “அய்யோ தப்பா எதும் சொல்லிட்டோமா சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டாளே“ அவன் மனம் பதைபதைத்தது. சிறிது தூரம் சென்றதும் முகில் மட்டும் சத்தியேந்திரனை நோக்கி ஓடி வந்தான். ஒரு துண்டு சீட்டை சத்தியேந்திரன் கையில் கொடுத்தான். “இது எங்க அட்ரஸ் ஒரு வருஷம் முடிஞ்சதும் அப்பாகிட்ட வந்து பேச சொன்னா“, சொல்லிவிட்டு படபடவென்று ஓடினான். கண்மணி திரும்பி பார்க்காமல் தனக்குள்ளயே சிரித்து கொண்டாள். சத்தியேந்திரனுக்கும் தாழா மகிழ்ச்சியாக இருந்தது.

சரியாக ஒருவருடம் கடந்தது. அன்று சத்தியேந்திரன் கண்மணியை பெண் கேட்க பாக்யவதியை அழைத்துக்கொண்டு கண்மணி தந்த அட்ரஸிற்கு வந்தான். இருவரும் காரை விட்டு இறங்கி தயக்கத்துடன் நின்று கொண்டு இருந்தனர். “அம்மா உள்ள போய் பார்க்கலாம்.“ சத்தியேந்திரன் சொன்னதும் “சரிப்பா“ என்று இருவரும் உள்ளே சென்றனர். உள்ளே சென்றதும் தான் தெரிந்தது எல்லாம் தலைகீழாக நடந்து கொண்டு இருந்தது. சத்தியேந்திரனும், பாக்யவதியும் அதிர்ந்து போய் நின்றனர். சத்தியேந்திரனின் முகத்தில் ஈ ஆடாமல் விழிபிதுங்கி நின்று கொண்டு இருந்தான்.​
 

Kiruba Jp

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
36
Points
18
பூவை 4

சத்தியேந்திரன் எதிரே நடப்பவை எல்லாம் தலைகீழாக நடந்து கொண்டிருந்தது. ஏற்கனவே அங்கு பெண் பார்க்கும் படலம் அரங்கேறிக்கொண்டு இருந்தது. பாக்யவதியும், சத்தியேந்திரனும் திரு திருவென்று விழித்துக்கொண்டு இருந்தனர். எதிர்பாராமல் தீடீரென்று வீட்டிற்குள் இருவர் நுழைந்ததும் அங்கிருந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஏதோ முனுமுனுத்தனர். பாக்யவதி, சத்தியேந்திரன் காதருகே மெல்லமாக, “தப்பான நேரத்துல வந்துட்டோமோ“ என்றார்.

“இல்லமா சரியா தான் வந்திருக்கோம்.“ என தைரியம் கொடுக்கும்படி அழுத்தி சொன்னான். அதற்குள் அங்கு அமர்ந்திருந்த ஒருத்தர் “தம்பி நீங்க யாரு?? உங்களுக்கு வேண்டியவங்களா“ என்றவாறு மற்றொருவரை பார்த்துக்கேட்டார். அவன் தலையை சொறிந்துக் கொண்டு ஞாபகப்படுத்தி பார்ப்பது போல யோசித்தார்.

“இல்லையே…“இழுத்து சொன்னார்.

“கோகுல் உனக்கு தெரிஞ்சவங்களா?“ அங்கு கிப்டாக்காக அமர்ந்திருந்த இளைஞனிடம் கேட்க அவன் உடனடி பதிலை சொன்னான்.

“தெரியலப்பா?..“

“இல்ல நாங்க வந்தது… கண்மணி.. கண்மணி..“, சத்தியேந்திரன் இழுத்து யோசித்து என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்து தயங்கி தயங்கி மந்திரம் போல அவள் பெயரை அழைத்து நின்று கொண்டிருந்தான். பாதி அலங்காரத்திலேயே அறையை விட்டு வேகமாக வெளியே வந்தாள். எதை பற்றியும் யோசிக்கவில்லை சுற்றி இருப்பவர்களை பற்றிய எந்த கவலையும் இல்லை அசையாமல் நின்ற சிலையென ஸ்தம்பித்து நின்றாள் அவனை கண்டு. அவனும் அலங்கரிந்து வந்து நிற்பது யார் தேவலோக அழகியோ என மெய்மறந்து ரசித்து கொண்டு நின்றான். இருவரின் பார்வைக்கும் வேறு எதுவும் தெரியவில்லை அவனுக்கு அவள் அவளுக்கு அவன் மட்டுமே தெரிந்தனர். சோபாவில் அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த மனிதர் இப்போது பொறுமை இழந்து காட்டு கத்தலாக கத்தினார். “கண்மணி..கண்மணி..“ சத்தம் போட்டு அழைத்தார். அவள் காதில் ஏறவில்லை காதல் தலைகேறினால் மற்றது எவையேனும் தெரியுமோ? காதல் பூஜையில் குறுக்கே கரடிகள் என்று தோன்றியது சத்தியேந்திரனுக்கு. மீண்டும் ஒலித்த அந்த குரல் அவளின் புத்தியை தெளிய செய்தது. “அப்பா..“ என்றாள்.

“என்னமா யாரு இது?“ மீண்டும் கேள்விகளை கேட்க தொடங்கினார்.

“நான் சொல்றேன் மகேந்திரன்.“ இத்தனை நேரமாக பக்கத்தில் அமர்ந்திருந்தவர் சொன்னார். “நீங்க எங்கள பொண்ணு பார்க்க வர சொல்லிருக்கிங்க? பொண்ணு அவங்கள வரசொல்லிருக்கு, சரி தானமா“ பக்கத்தில் இருந்து பார்த்தவர் போல சரியாக போட்டு உடைத்தார்.

“கரெக்ட்.. உங்க பையனுக்கு அவரு அப்பாயிண்ட் மெண்ட் தான் கொடுத்தாரு. ஆனா கண்மணி எனக்கு அப்பாயிண்ட் மெண்ட் ஆர்டரே கொடுத்துட்டாங்க.“ அன்று தந்த துண்டு சீட்டை அத்தனை பத்திரமாக வைத்திருந்து அதை எடுத்து கூட்டத்தில் காட்டி கண்மணியை நாண வைத்தான் சத்தியேந்திரன். கண்மணியை பார்த்து மெல்ல கண்களை மேல் ஏற்றி தலையை அசைத்தான். அவளும் தலையை அசைத்தாள். அவன் தொடர்ந்தான் “ஒரு வருஷம் கழிச்சி வந்து பேச சொன்னாங்க நான் ஒரு வருஷம் முடிஞ்சி ஒரு நாள் தள்ளி வந்தது தப்பா போச்சி? நீங்க ரொம்ப பாஸ்ட்..“ குறும்பாக பேச அங்கிருந்த பெண்கள் சிலர் மெல்ல சிரித்தனர்.

“என்னமா இது??“

“அப்பா, எனக்கு பிடிச்சி இருந்தது ஆனா உங்களுக்கு பிடிச்சா மட்டும் தான் கல்யாணம். இது காதல் இல்ல அவரு மாப்பிளையா வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் அவ்வளவு தான்.“

சத்தியேந்திரன், கண்மணியின் அந்த பதிலை கேட்டு சற்று பயந்து போனான். வந்த மாப்பிளை வீட்டு ஆட்கள் கிளம்பினார்கள்.

“மகேந்திரன் நீ என்னோட சிநேகிதன் நீயும், நானும் சம்மந்தம் செஞ்சா நல்லா இருக்கும்னு நினைச்சோம் ஆனா கடவுள் வேற ஒன்னு நினைச்சிட்டான் விடு, பையன் நல்லவனா தான் இருக்கான் பேசி பாரு. நாங்க கிளம்புறோம்.“ மகேந்திரனால் பதில் ஏதும் சொல்ல முடியவில்வலை தலையை மட்டும் அசைத்தார். எல்லோரும் வெளியேறினர். மகேந்திரன் அமைதியாக சோபாவில் அமர்ந்து எதையோ யோசித்தார். லதா ஒருபக்கம் சித்தபிரம்பை பிடித்தவர் போல நின்றார். மகேந்திரனின் பலத்த யோசனைக்கு பிறகு “வாங்க வந்து உட்காருங்க?“ என்று வரவேற்றார். “லதா காபி கொண்டு வா.“ தன் மனைவியை பார்த்து சொன்னார். பாக்யவதியும், சத்தியேந்திரனும் அமர்ந்தனர்.

“நீங்க என்ன சாதி?“ முதல் கேள்வியே சத்தியேந்திரனை தூக்கிவாறி போட செய்தது. கண்மணியும் தன் அப்பாவை வித்தியாசமாக பார்த்தாள். சாதிகள் இல்லைன்னு அடிக்கடி சொல்லும் அப்பா இப்போது சாதியை பற்றி பேசுகிறாரே. இவரும் மனிதன் தானே என்று யோசித்தாள்.

“அப்படி நான் எதுவும் கேட்க போறது இல்ல.. சாதி, மதம் பார்க்குற ஆளுங்க நான் இல்ல ஆனா கல்யாணத்தை பத்தி யோசிப்பேன். இது சினிமா இல்ல எடுத்ததுமே என் பொண்ணுக்கு பிடிச்சி போச்சி அடுத்த முகூர்த்தத்துலேயே கல்யாணத்தை வச்சிகலாம்னு என்னால சொல்லமுடியாது, கொஞ்சம் யோசிக்கனும் அது..ஆங்…தம்பி என்ன பண்ணுறிங்க“.

சத்யேந்திரன், பாக்யவதியை பார்த்துவிட்டு “அங்கிள் நான் சைக்காலஜிக்கல் டாக்டர், கவர்மண்ட் ஜாப். அப்பா கிடையாது, அம்மா தான் இப்போ தான் ஜாப் கிடைச்சிருக்கு சொந்தவீடு வாங்க டிரை பண்ணிகிட்டு இருக்கேன் திரிமந்த்ல வாங்கிடுவேன். உங்க பொண்ண நல்லா பார்த்துக்குவேன். வேற என்ன நான் சொல்லுறது..“

அவன் பேசி கொண்டிருக்கும் போதே லதா காபி கப்பை நீட்டினார்.

“தேங்ஸ்“ பவ்யமாக காபியை எடுத்துக்கொண்டான். பாக்யவதி காபியை எடுத்துக்கொண்டு அவர் பேச தொடங்கினார். “என் பையன பத்தி நான் சொன்னா அது எப்படி உங்களுக்கு தெரியும்னு தெரியல ஆனா நான் சொல்லி தான் ஆகனும். அவனோட அஞ்சுவயசுல அவனோட அப்பா இறந்துட்டாரு நம்ம என்ன தான் கண்ணும் கருத்துமா வளர்த்தாலும் சில பிள்ளைங்க வழிதவறி போயிடுவாங்க. அம்மா அரவணைப்பு தான் கொடுப்பா, ஒரு அப்பா தான் கண்டிப்பு கொடுப்பாரு. கண்டிப்பு இல்லாம வளருறானே என்ன ஆவான் நினைச்சேன்? சத்தியமா என் புள்ள மாதிரி ஒரு புள்ளைய நீங்க பார்க்கவே முடியாது. நான் இங்க வந்தது முழுக்க முழுக்க என் புள்ளையோட ஆசைக்காக மட்டும் தான். அவனுக்கு உங்க பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப நல்லா பார்த்துக்குவான். உங்க முடிவ நல்லதா சொல்லுங்க..“ பாக்யவதி சொல்லிவிட்டு எழுந்தார்.

மகேந்திரனும் எழுந்துக்கொண்டார் “உங்க பதிலுக்காக காத்துகிட்டு இருப்போம், சத்யா போகலாமா?“

“சரிமா“ சத்தியேந்திரன், மகேந்திரனிடமும், லதாவிடமும் சொல்லிக் கொண்டான். கண்மணியின் அருகே வந்தான்.

“உன்னோட அந்த பதில் என்ன பயமுறுத்திட்டு“

“எனக்கு நம்பிக்கை இருந்தது இன்னும் நம்பிக்கை இருக்கு“

அவளின் கண்களை ஐந்து நொடிக்கு மேல் பார்க்கவே முடியவில்லை. அத்தனை ஆயிரம் அம்புகள் பாய்ந்தது போல இருந்தது. பாக்கெட்டில் இருந்த கூலிங்கிளாசை கண்களுக்கு எடுத்து பொருத்திக் கொண்டான்.
“இதே நம்பிக்கையோட காத்துகிட்டு இரு நான் உன்ன வந்து அழைச்சிட்டு போயிடுவேன்.“ சொல்லிக்கொண்டே அவள் கைகளுக்குள் எதையோ திணித்தான். அவள் விருட்டென்று கைகளை இழுத்துக்கொண்டு விரித்து பார்த்தாள் அதில் இன்னொரு துண்டு சீட்டு இருந்தது அதை விரித்து பார்த்தாள் அவனின் விலாசம் எழுதி இருந்தது. அவள் பயந்ததை நினைத்து சத்தியேந்திரன் புன்னகை சிந்தினான். அவனின் அந்த புன்னகை அவளுக்குள் ஆயிரம் மயக்கங்களை தந்தது. அவன் அவளை கடந்து போனான் வாசலுக்கு சென்று காரில் ஏறி போகும் வரை பாதையையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

நாட்கள் வாரங்களாகின, வாரங்கள் மாதமும் ஆகியது மகேந்திரனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. கண்மணியும் அதை பற்றி ஒரு வார்த்தைகூட கேட்டதில்லை. சத்தியேந்திரனும் போன் செய்தோ நேரிலோ மீண்டும் மகேந்திரனை சந்திக்கவே இல்லை. ஏன் திரும்ப கண்மணியை கூட அவன் பார்க்கவில்லை. கண்மணியும் வேலை உண்டு, வீடு உண்டு என்று இருந்தாள். ஆபிஸ் போகும் போது எங்கோ நின்று சத்தியேந்திரன் அவளை பார்ப்பது போலவே பல நாட்கள் தோன்றியதுண்டு. அவளும் திரும்பி திரும்பி தேடி பார்ப்பாள், அவன் புலப்பட்டதில்லை இப்படியாக தன் நாட்களை கழித்து கொண்டு இருந்தாள்.

ஒரு நாள் ஞாயிற்றுகிழமை, பொழுது விடிந்த கையோடு மகேந்திரன் செய்திதாளை திருப்பி கொண்டு இருந்தார். லதா அருகே அமர்ந்து காபியை ஆற்றி கொண்டு இருந்தார். திடீரென்று பேப்பரை மடக்கி விட்டு, “அந்த பையன் போன் நம்பர்? அட்ரஸ் ஏதும்?“ அப்படி தான் தன் வார்த்தையை கூட முடித்து இருக்கவே மாட்டார். எங்கு நின்றாளோ தெரியவில்லை கண்மணி விடுவிடுவென்று ஓடி போய் தன் தலையணை அடியில் புதைத்து வைத்து இருந்த டைரியில் அவன் தந்த துண்டு சீட்டு உறங்கி கொண்டு இருந்தது அதை கையில் எடுத்து ஒரு முறை தடவினாள். மீண்டும் மகேந்திரனை நோக்கி திடுதிடுவென்று ஓடி வந்தாள். முகிலிடம் அந்த துண்டு சீட்டை கொடுத்து கொடுக்க சொன்னாள். அவன் துண்டு சீட்டையும் அவளையும் ஒரு முறை பார்த்தான். ‘கொடுடா‘ என்பது போல் கண்களால் கெஞ்சினாள். அவனும் வாங்கி மகேந்திரனிடம் நீட்டினான். லதாவும், மகேந்திரனும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு மூவரும் சேர்ந்தார் போல் கண்மணியை பார்த்தனர்.

அவள் முகம் வெளிரி போனது. பேய் அறைந்தது போல் அவள் இருந்ததை பார்த்ததும் மூவருக்கும் சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. நான்கு பேருமே சேர்ந்து சிரித்தனர். முதல்நாள் பெண் அழைப்பு மறுநாள் திருமணம். அன்று தான் மீண்டும் சத்தியேந்திரனை பார்க்கிறாள். இப்போது ஆள் அடையாளம் தெரியவில்லை தாடியுடன் இருந்தான். கண்மணி திருமணமண்டபத்தில் தன் அறையை விட்டு வெளியில் அமர்ந்திருந்தாள். சத்தியேந்திரன் அவள் அருகே வந்து அமர்ந்தான். சிறிது நாணத்தில் சிவந்தாள் “ஹோய்..“ அவள் தலைகுனிந்து இருந்ததை அவனும் தலையை குனிந்து பார்த்தான். அவள் பட்டென்று தன்று தலையை நிமிர்த்து அவள் தலை அவனை மோதியது. “ஆ..“ என்று கத்தினான். பதறிபோனாள் “அய்யோ ஸாரி..ஸாரி..“ என்று ஆயிரம்முறை கெஞ்சினாள்.

“சும்மா..“ என்று கண்களை அடித்தான். கண்மணி பெருமூச்சொன்று விட்டாள். “என்ன தாடி ஆளே அடையாளம் தெரியல?“

“இதுவா?“ என்று தன் தாடியை தடவினான்.

“உங்க அப்பா ஒத்துக்கலன்னா இப்படியே தாடிய வளர்த்து சாமியாரா போயிடலாம்னு நினைச்சேன். பட் என்னோட நல்ல நேரம் ஒத்துகிட்டாரு. அப்பறம் அம்மா சொன்னாங்க உன் மாமனாரு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாருடா தாடிய எடுத்துடுன்னு நான் சொன்னேன் அம்மா நான் அவள எவ்வோளோ காதிலிக்கிறேன்னு இந்த தாடி தான் அவளுக்கு புரியவைக்கும்னு.‘‘

“என்னால நம்ப முடியல?“

“எத தாடியவ“

“ம்ச்..அது இல்ல இந்த காதல? பார்த்ததும் காதல் வந்துட்டா?“

“எவன் சொன்னா பார்த்ததும் காதல் வந்துட்டுன்னு. காதலுக்கு நான் புது அர்த்தம் சொல்லவா. ஒருத்தவங்கள பார்த்ததும்லா பிடிச்சிடுமா அது எந்த அளவு உண்மைன்னு எனக்கு தெரியல உன்ன பார்த்ததுல இருந்து உன்ன நியாபகபடுத்திக்கிட்டே இருக்ககூடிய சம்பவங்கள் என்ன சுத்தி நடந்தது. திரும்ப திரும்ப எனக்குள்ள உன்ன யாரோ விதைச்சாங்க அது கடவுளா கூட இருக்கலாம். எக்ஸாம்பிலுக்கு எங்க வீட்டுல வேலை செய்யவர அக்காவுக்கு ஒரு பெண்குழந்தை இருக்கு அதோட பேரு உன்ன பார்க்குற வரைக்கும் கண்மணின்னு தெரியாது உன்ன பார்த்ததுக்கு மறுநாள் அவங்க அந்த குழந்தைய கண்மணின்னு கூப்பிடுறாங்க எதார்த்தமா நான் அதை கவனிக்கிறேன். இப்படி ஏதோ ஒன்னு உன்ன எனக்கு ஞாபகபடுத்துனிச்சி அப்போ தான் முடிவு பண்ணுனே நீ எனக்கு மனைவியா வந்தா நல்லா இருக்கும்னு.“

“எனக்கு அப்படி எதுவும் நடக்கலையே??“

“ஏன் பொய் சொல்லாத அப்படி நடக்காமலையா ரோட்டுல போகையில சுத்தி சுத்தி திரும்பி திரும்பி பார்த்துக்கிட்டே போவ நான் நின்ன மாதிரி பீளிங் வந்தது தானே?“

“ஆமாம் அது??“ கண்மணி ஆச்சரியமாக கேட்கும் போது சத்தியேந்திரன் வாயை மூடி சிரித்தான். கண்மணிக்கு புரிந்து போனது “அடப்பாவி..“என்று முணங்கி கொண்டு அவளும் சிரித்தாள்.

“உனக்கு இனி நான் எனக்கு இனி நீ. இந்த உறவு வலிமையாதாகவும், பெருமையானதாகவும் அமையும்.

எந்த நேரதிலும் உன்னை எவரிடத்திலும் விட்டு கொடுக்க மாட்டேன். இந்த அக்னியின் சாட்சியாக..“ என்பதை உணர்த்துவது போல் அவள் கைகளை பிடித்திருந்தான். ஐயர் தாலியை கொடுத்ததும் கைகளை விலக்கி அவன் கைகளில் வாங்கி கொண்டான். தலைகுனிந்து திருமாங்கல்யத்தை ஏற்று தன் நெஞ்சில் சுமந்து கொண்டாள். தன் பக்கமாக அணைத்து அவள் வகுட்டில் குங்குமம் இட்டான் கண்மணியின் கண்கள் கலங்கி போயின. லதாவும் ஆனந்த கண்ணீர் சிந்தினார். எல்லோர் மகிழ்ச்சியும் நிரம்ப திருமணம் இனிதே முடிந்தது. கண்மணி சத்தியேந்திரன் வீட்டில் தன் வலதுகாலை வைத்தாள். “இப்போ தான் வீடே நிறைஞ்சிருக்கு“ பாக்யவதி தன் மருமகளை புகழ்ந்துக்கொண்டார்.

கண்மணியும், சத்தியேந்திரனும் மாறி மாறி பார்த்துக்கொண்டனர்.
“பரவாயில்லை சார்.. பேசண்டா வந்தவங்களையே உங்க பொண்டாட்டியா ஆக்கிட்டிங்க“ நேரம் காலம் தெரியாமல் குண்டை தூக்கி போட்டாள் சத்தியேந்திரனின் ரிசப்சனிஸ்ட். பாக்யவதியின் விழிகள் மேல் எழும்பியது. சத்தியேந்திரனும், கண்மணியும் திரு திருவென்று விழித்தனர்.
“என்னது பேசண்டா??“ குழப்பத்துடனும், அதிர்ச்சியுடனும் கேட்டார் பாக்யவதி.​
 

Kiruba Jp

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
36
Points
18
பூவை 5

இரவெல்லாம் நடந்ததை நினைத்துக்கொண்டு தூங்காமல் இருந்தவள், அதிகாலை நேரத்தில் அசந்து உறங்க ஆரம்பித்தாள். கண்மணி நன்றாக உறங்கி கொண்டிருப்பதை சிறிது நேரம் நின்று பார்த்த லதா கொண்டு வந்த காபியை டேபிள் மீது வைத்து மூடிவிட்டு மீண்டும் அறையை விட்டு வெளியே வந்தார். காபி டம்ளரை வைத்து மூடும் சத்தம் கேட்டு கண்மணி மெல்ல விழித்து பார்த்தாள், டேபிள் மேல் இருந்த டம்ளரை லேசாக பார்வைவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள். தடார் என யாரோ வாசல் கதவை அடிக்கும் சத்தம் கேட்டு வெடுக்கென்று விழிகள் உறக்கத்தை பறித்து கொள்ள சட்டென்று எழுந்தாள். எதிரே அறையின் நிலையை பிடித்துக்கொண்டு லதா பயம் கலந்த கலக்கத்துடன் நின்று கொண்டு இருந்தார். என்ன? என்பது போல் கண்மணி கண்களால் கேட்டாள். லதா சற்று தள்ளி வராண்டவை காட்ட கண்மணியும் எட்டிப்பார்த்தாள். சத்தியேந்திரன் சோபாவில் அமர்ந்து தலையை குனிந்து கீழே எதையோ தேடியவன் போல் உட்கார்ந்து இருந்தான். சத்தம் இல்லாமல் கண்மணி அவன் எதிரே நின்று கொண்டு இருந்தாள். அவள் கால்கள் தெரிய சத்தியேந்திரன் தலையை நிமிர்ந்து அவளை பார்த்தான். அவள் பார்வையில் அவன் மீதான அக்கறை இருந்தது. இத்தனை காலையிலேயே ஏன் வந்தான், கண்கள் எல்லாம் சிவந்து போய் பேய் அறைந்தவன் போல இருக்கிறானே என்று தான் முதலில் அவளுக்கு தோன்றியது. இருவரும் பேசிக்கொள்ளவில்லை இருவருக்குள்ளும் அமைதி மட்டுமே. சின்ன சிறு அமைதியை களைக்கும் படியாக லதாவின் காபி டம்ளர் சத்தம் எழுப்பியது. நங்கென்று காபியை டீப்பாயில் வைத்தார் லதா. சத்தியேந்திரன் டம்ளரையும், லதாவையும் மாறி மாறி பார்த்தார். லதா தலையை குனிந்த படியே மீண்டும் அடுப்பங்கரைக்கு பயணப்பட்டார்.

“நான் நைட்டெல்லாம் தூங்கவே இல்ல..“ அவனே ஆரம்பித்தான். கண்மணி சிறிது நேரம் கழிந்து “ஏன்?“ என்றாள்.

“பிளீஸ்…நம்ம டிவோர்ஸ் பண்ணிக்கலாம்.“ அவன் சுற்றி வளைத்து இதற்கு தான் வருவான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அடுத்த கணமே “முடியாது“, என்ற பதிலை பட்டென்று அடித்தாள்.

சத்தியேந்திரன் மிகவும் அமைதியாக இருந்தவன், மெல்ல மெல்ல நிதானத்தை இழந்தவன் போல கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது. சோபாவின் கைப்பிடியை கைகளால் திருகு திருகென்று திருவினான். சட்டென்று எழுந்தான், அவளை பார்த்தான். அவனின் கண்கள் முழுவதும் கோபமே தழும்பியது. கண்மணியின் கண்களிலோ காதலும் சிறு கண்ணீரும் தழும்பி நின்றது.

“நீ டிவோர்ஸ் கொடுக்கவே வேண்டாம்.. வேண்டாம்..“ சொன்னதையே சொன்னான். லதாவிற்கு கண்ணீர் பொங்கி கொண்டு வந்தது. தன் மாப்பிளையின் நடவடிக்கைகளால் தன் பெண்ணின் வாழ்க்கை என்னாகுமோ என்ற பயத்தை அவளுக்கு விதைத்து விழிநீராய் வெளியே வந்தது அதை தன் முந்தானையில் துடைத்துக் கொண்டே நின்றார்.

“நான் செத்துடுறேன்..நான் செத்துடுறேன்.. அப்போ என்ன பண்ணுவ..உன்னாலயே நான் சாகபோறண்டி சீக்கிரம் நான் செத்துடுவேன். நீ என்ன செய்வ?“

என்ன பேசுகிறான் என்றே புரியாமல் பேசினான். கண்மணி சத்தியேந்திரனை உற்று பார்த்தாள்.
அவன் சொன்ன வார்த்தைக்கு அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. அவள் சிறிதும் தாமதிக்காமல் உடனே அவனுக்கான பதிலை கொடுத்தாள் “நானும் செத்துடுவேன்..“ அவளின் இந்த பதிலை சிறிதும் எதிர்பார்க்காதவன் கண்மணியை ஒரு முறை பார்த்தான். இப்போது அவன் கண்களில் இருந்த கோபம் எங்கோ தெரியவில்லை ஆனால் வராத கோபத்தை வரவழைத்து எதிரே இருந்த டீப்பாயை தூக்கி ஒரே அடி காபி டம்ளர் பறந்தது. லதா சத்தம் கேட்டு பதற்றமாக வெளியே வந்து பார்த்தார். சத்தியேந்திரன், லதாவையும், கண்மணியையும் மாறி மாறி பார்த்துவிட்டு வேகவேகமாக வீட்டைவிட்டு வெளியே வந்தான். கண்மணி தன் அம்மாவை பார்த்தாள் முகம் வாடிபோய் இருந்தது எதுவும் பேசவில்லை தன் அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டாள்.

************

சத்தியேந்திரன் வீட்டு வாசலில் கால் கடுக்க காத்துக்கொண்டு நின்றாள் மெர்ஸி. நீண்ட நேரமாக நின்று கொண்டு இருக்கிறாள். தன் மொபைலை எடுத்து சத்தியேந்திரன் நம்பரை டயல் செய்து டயல் செய்து பார்க்கிறாள். பலன் இல்லை, கைபேசியை வைத்துவிட்டு வீட்டு வாசலிலேயே இங்கும் அங்கும் நடந்தாள். நீண்ட நேரம் கழித்து கார் வாசலில் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. வாசலை எட்டி பார்த்தாள் சத்தியேந்திரன் காரை வாசலிலேயே நிறுத்திவிட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்தான். மெர்ஸி அவனை வித்தியாசமாக பார்த்தாள், “எங்க சார் போனிங்க நான் ரொம்ப நேரமா காத்திருக்கேன்.“ என்றாள்.
அவன் எதுவுமே பேசவில்லை பேசமால் கதவை திறந்தான். அவள் விடுவது போல இல்லை, மீண்டும் உள்ளே வந்து அதே கேள்வியை கேட்டாள். இப்போது அவனால் அந்த கேள்வியை கடந்து செல்ல முடியவில்லை. “கண்மணிய பார்க்கபோனேன்.“ எங்கயோ பார்த்து பதிலை சொன்னான்.

“மேடமையா?? இப்படியேவா?? உங்க டிரஸ்ச பாருங்க“ என்றாள். அவன் இப்போது தான் கவனித்தான் உள் பணியனும், சார்ட்சும் மட்டுமே அணிந்து இருந்தான். தலையை தடவிக்கொண்டு ஏதோ யோசனையோடு விறுவிறுவென்று தன் அறையை நோக்கி சென்றான். கதவை வேகமாக மூடிவிட்டு கட்டிலில் சரிந்தான் விழிகளை மூடிக்கொண்டான். சிறிது நேரம் தான் கழிந்தது. “சா…ர்…“ என்ற மெர்ஸியின் அலறல் வீட்டையே அதிர செய்தது. சத்தியேந்திரன் பதறிபோய் எழுந்தான். கதவை திறந்துக்கொண்டு ஹாலுக்கு வந்தான் “மெர்ஸி..“என்று கத்தினான். பக்கத்து அறையில் இருந்து “சார், சீக்கிரம் வாங்க“என்று மீண்டும் அலறினாள். சத்தியேந்திரன் சத்தம் வந்த பக்கம் போனான். பாக்யவதி அறையை பார்த்தான், தூக்கிவாரி போட்டது. பாக்யவதி கட்டிலில் இருந்து கீழே விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். சத்தியேந்திரன் திடீரென்று அறைக்குள்ளயே இங்கும் அங்கும் நடக்க ஆரம்பித்தான். இடம் வலம் என்று நடந்து கொண்டே இருந்தான். மெர்ஸிக்கு அவனின் நடவடிக்கைகள் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருந்தது. “சார்..“ என்று கத்தி கத்தி பார்த்தாள், அவன் காதில் எதுவும் ஏறவில்லை. மெர்ஸியே எழுந்து வந்து ஹாலில் வைத்து இருந்த தன் கைபையில் இருந்து மொபைலை எடுத்து அம்புலன்ஸ்சை அழைத்தாள். மீண்டும் அறைக்கு வந்து பாக்யவதி முகத்தில் தண்ணீரை அடித்தாள், எந்த பலனும் இல்லை அசைவற்று கிடந்தார். சிறிது நேரத்திலேயே ஆம்புலன்ஸ் வர பாக்யவதியை ஸ்டெச்சரில் வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். மெர்ஸி ஆம்புலன்ஸில் ஏறும் முன் திரும்பி சத்தியேந்திரனை பார்த்தாள், அவன் எங்கோ பார்த்து கொண்டு இருந்தான். அவனை அழைப்பதா, இல்லை செல்வதா சிறிது தயங்கினாள். என்ன நினைத்தாலோ அவனை அழைக்காமலே ஆம்புலன்ஸில் ஏறிக்கொண்டாள். ஆம்புலன்ஸ் காற்றை பிய்த்துக்கொண்டு பறந்தது.​

***********

மருத்துவமனை வளாகத்தில் மெர்ஸி யாருக்காகவோ காத்துக்கொண்டு நின்றாள். ஆட்டோ ஒன்று அவளை நெருங்கி வந்து நின்றது, கண்மணி ஆட்டோவில் இருந்து இறங்கினாள். பணத்தை கொடுத்துவிட்டு ஆட்டோவை அனுப்பி வைத்தாள். பதற்றமாக மெர்ஸியை நெருங்கினாள்.
“மெர்ஸி..“
“மேடம்..“ மெர்ஸி கண்கலங்கினாள். கண்மணிக்கு இன்னும் பயம் அதிகமானது. போனை அடித்து உடனே ஹாஸ்பிட்டலுக்கு வாங்க என்று அழைத்தாளே, ஆனால் காரணம் சொல்லவே இல்லையே, இங்கு அழுதுக்கொண்டு நிற்கிறாளே, சத்தியேந்திரனுக்கு எதுவுமாக இருக்குமோ, சற்று நேரத்திற்குள் கண்மணியின் மனம் எதை எதையோ நினைத்து பயந்தது. பயத்தை மறைத்து “என்ன சொல்லு“, என்றாள்.
“மேடம், அம்மா..“ சொன்னதையோ சொல்லிக்கொண்டு கண்மணி கைகளை பிடித்து அழைத்து மருத்துவமனை உள்ளே சென்றாள். பாக்யவதியை ஐசியூக்கு வெளியே ஸ்டெச்சரில் வைத்து இருந்தனர். நெடுநெடுவென ஒருவன் காவலுக்கு நிற்பது போல அருகே நின்று கொண்டு இருந்தான். கண்மணி தயங்கி தயங்கி அருகே சென்றாள். மெர்ஸி தள்ளியே நின்று கொண்டாள் கண்மணி திரும்பி மெர்ஸியை பார்த்தாள் அவள் கண்கலங்கி கொண்டு இருந்தாள். கண்மணி பாக்யவதி அருகே சென்று அவர் முகத்தை பார்த்தாள். “நீங்க தான் அவங்க டாட்டரின்லாவா“ என்ற குரல் அவளின் முதுகுக்கு பின்னால் ஒலிக்க திரும்பி பார்த்தாள். டாக்டர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். “ஆமாம் டாக்டர்..“ அவள் குரல் மிகவும் பதற்றமாக இருந்தது.
“ஸாரி மேடம் உங்க மாமியார இங்க கொண்டு வரும் போதே உயிர் இல்ல.“ டாக்டர் சொன்னதுமே கண்மணிக்கு விழிகள் இருண்டு வந்தது. மேலும் அவரே சொன்னார், "உடம்பு சரியில்லதவங்கள இவ்வளவு அலட்சியமா கவனிச்சிருக்கிங்க. மேபி அவங்க இறந்து பத்து மணிநேரத்துக்கு மேல இருக்கும் போல முகமெல்லாம் கருத்து போய் இருக்கு. என்ன மேடம் பண்ணிக்கிட்டு இருந்திங்க கவனிக்காம?“

கண்மணியால் எந்த பதிலும் சொல்லவே முடியவில்லை. “சார்..சார்.. நான்..“என்று தயங்கி தயங்கி பதிலை சொன்னாள். “எடுத்துட்டு போங்க..“என்று டாக்டர் அவ்விடம் விட்டு சென்றார். கண்மணி பாக்யவதி அருகே சென்றாள் அடக்கி வைத்து இருந்த கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. “அத்த“ என்று கட்டிபிடித்து அழுதாள்.

“மேடம் டைம் ஆகிடுச்சி“ என்றான் நெட்டையாக நின்று கொண்டு இருந்த வாலிபன். மெர்ஸி ஆறுதலாக அணைத்துக் கொண்டாள். பாக்யவதியை மீண்டும் ஆம்புலன்ஸில் கொண்டு வந்து ஏற்றினார்கள்.

“எதும் அமவுண்டு செட்டில் பண்ணனுமா மெர்ஸி..“ கண்களை துடைத்துக்கொண்டு கேட்டாள் கண்மணி.

“இல்ல மேடம் ஆம்புலன்ஸ்கு மட்டும் தான் கொடுக்கனும்.“ இருவரும் அந்த ஆம்புலன்ஸிலேயே ஏறிக்கொண்டனர். கண்மணி வழிநெடுக அவளுக்கும், பாக்யவதிக்கும் இடையே இருந்த சில நினைவுகளை நினைத்து கண்கலங்கி கொண்டு வந்தாள். அவர் உடல்நலம் இல்லாமல் படுத்ததில் இருந்து பிள்ளையை போல பார்த்துக்கொண்டவள் கண்மணி தான். இந்த சிறிது காலமாக தான் கவனிக்காமல் போனாள், அதுவும் சத்தியேந்திரனால் இப்போது உயிரே போய் விட்டது. மெர்ஸியிடம் வந்ததுமே சத்தியேந்திரனை கேட்டு இருப்பாள். அவள் அவன் நடந்துக்கொண்டதை சொன்னதும் அவனை பற்றிய பயம் வேறு அதிகமாக கண்மணியை பற்றிக்கொண்டது. அந்த யோசனையும் ஒரு புறம் அவளுக்கு மண்டை குடைச்சலை கொடுத்துக்கொண்டு இருந்தது. ஆம்புலன்ஸ் சத்தியேந்திரன் காம்பவுண்டுக்குள் நுழைந்து இருந்தது. ஏற்கனவே கண்மணி மருத்துவமனையில் இருந்தபடியே லதாவிற்கு போன் செய்து ஏற்பாடுகளை யாரையேனும் வைத்து செய்ய சொல்லி இருந்தாள். லதாவும் சில உறவுகாரர்களை வைத்து எல்லாம் செய்து கொண்டு இருந்தார். பந்தல் போடப்பட்டு கொண்டு இருந்தது. ஆம்புலன்ஸ் வந்ததும் சிலர் வந்து கூடிக்கொண்டு அழதொடங்கினார்கள்.

பாக்யவதியின் உடல் நடுகூடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. லதா அருகே அமர்ந்து இருந்தார். கண்மணி தலைமாட்டிலேயே உட்கார்ந்து இருந்தாள். சத்தியேந்திரன் தலை வெளியே தெரியவே இல்லை. ஆண்களும், பெண்களும் வந்த வண்ணமாகவும் மாலைகள் விழுந்த வண்ணமாகவும் இருந்தது. வந்த ஆண்கள் சத்தியேந்திரனை கேட்டுகொண்டு இருந்தனர். கண்மணி உடம்பு சரியில்லை என்று சொல்லி சமாளித்தாள். சிறிது நேரம் கழித்து எழுந்து சத்தியேந்திரன் அறைக்கு சென்றாள். சத்தியேந்திரன் பித்துபிடித்தவன் போல உட்கார்ந்து கொண்டு இருந்தான். அவன் அருகே சென்று நின்றாள், அவன் சட்டையை பிடித்து மேலே எழுப்பினாள்.

“என்னதான் உங்க பிரச்சனை சொல்லி தொலைங்களேன்..சொல்லி தொலைங்க உங்கள பெத்தவ செத்து கிடக்குறாங்க, காலம்பூர உங்களுக்காக கஷ்டபட்டவங்க செத்துகிடக்குறாங்க வந்து பாருங்க“ அவனை போட்டு குலுக்கினாள். அத்தனை நேரம் அமைதியாக இருந்தவன் “ஆ..ஆ..“ என்று சத்தம் போட்டு கதறினான்.

“அய்யோஅம்..மா..அய்யோ…கடவுளே“ என்று அழுதான், கண்மணியை கட்டிக்கொண்டான். “எங்க அம்மா..என்ன அநாதையா ஆக்கிட்டாங்களே“ கதறினான். கண்மணி அவனை இறுக்கமாக கட்டி ஆறுதல் சொன்னாள்.

“என்னால இன்னும் எத்தனை பேர் சாகபோறாங்களோ.“ அவன் சொன்னது கண்மணிக்கு தூக்கிவாரி போட்டது.​
 

Kiruba Jp

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
36
Points
18
பூவை 6

பாக்யவதியின் இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்தது. சத்தியேந்திரன் சிந்தனையற்று அமர்ந்திருந்தான். கண்மணி சத்தியேந்திரனை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். தோளிலும், மார்பிலும் போட்டு வளர்த்த தாயை தீக்கு கொடுத்து வந்து பேச்சு, மூச்சு அற்று அமர்ந்திருந்தான்.

சத்தியேந்திரனை இப்படி பார்க்க மெர்ஸிக்கு கலக்கமாக இருந்தது, மொட்டை அடித்து ஆள் பார்க்கவே வித்தியாசமாக இருந்தது. மெர்ஸி மெல்ல எழுந்து வந்து கண்மணி தோள்களில் கைகளை வைத்து ஆறுதல் உரைத்து எழுந்தாள். அவளுக்கு சத்தியேந்திரன் அருகே செல்ல சற்று தயக்கமாக இருந்தது. பெர்னட் சத்தியேந்திரன் தோளை தட்டிக்கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் மெர்ஸி பின்னாலயே சென்றாள்.
மெர்ஸியும், பெர்னட்டும் ஆட்டோவில் வந்துக்கொண்டு இருந்தனர். மெர்ஸி ரொம்பவும் டயர்டாகவும், சோகமாகவும் இருந்தாள். பெர்னட் மெல்ல ஆரம்பித்தான், “மெர்ஸி விடு அவங்களோட ஆயுள் முடிஞ்சிடுச்சி அவங்க கடவுள் கிட்ட போயிட்டாங்க. நல்லா வாழ்ந்துட்டு தானே இறந்துருக்காங்க“.

மெர்ஸி பெர்னட்டை பார்த்து, “நல்ல வாழ்ந்தாங்க சாகும் போதும் நிம்மதியா சாகலையே“ என்றாள்.
ஆட்டோ ஓட்டுபவன் இவர்களுக்கு தெரிந்தவன் போல அவனும் நடுநடுவே, “அம்மாடி மனுசனுக்கு சாவு எப்போ வரும் எதுல வரும்னு யாராலையும் சொல்லவே முடியாது காலம் அப்படி“ என்றான்.

“அண்ணா ஏதாவது கடையில நிறுத்துங்க தண்ணி தாகமா இருக்கு“

“சரிமா..சரிமா..“

“இன்னும் கொஞ்ச தூரம் தானே மெர்ஸி, வீட்டுல போயே சாப்பிடலாமே“ என்றான் பெர்னட்.

“அப்பறம் எனக்கு சாவு தண்ணீயால வந்துட்டுட்டுன்னா“ அவள் சொன்னதும் சின்னதாக கண்டித்தான் பெர்னட். சின்ன பெட்டிகடையில் ஆட்டோவை நிறுத்தினார் டிரைவர். மெர்ஸி இறங்க முற்பட்டாள், அவளை அமர சொல்லிவிட்டு பெர்னட் இறங்கினான். அவன் இறங்கிய பக்கத்தை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் மெர்ஸி, ஆனால் அவன் மெர்ஸியின் முதுகு பக்கமாக நின்று கொண்டு இருந்தான். “ஹோய்..“ அவள் திரும்பி பார்த்தாள்.

ஒரு கையில் கூல்டீரிங்ஸ் பாட்டிலும் இன்னோரு கையில் வாட்டர் பாட்டிலையும் வைத்து நின்று கொண்டு இருந்தான். மெர்ஸி அவன் கைகளையும் பார்த்தாள் அவனையும் பார்த்தாள் அகவாய் மெல்ல மலர்ந்தாள். இரண்டு பாட்டில்களையும் மாத்தி மாத்தி நீட்டி அவளை சீண்டல் செய்தான். அதற்குள் ஆட்டோகாரர் தம்மை போட்டுவிட்டு திரும்பினார். அந்த கம்பிகள் வழியவே உள்ளே நுழைந்தான் கூல்டிரிங்சை அவளுக்கு கொடுத்தான். ஆட்டோவும் நகர தொடங்கியது. பெரிய அப்பார்ட்மென்ட் வாசலில் வந்து நின்றது ஆட்டோ இருவரும் இறங்கினார்கள். ஆட்டோவை கட்செய்துவிட்டு லிப்ட் அருகே வந்தனர்.

லிப்ட்டுக்காக காத்திருந்தனர் ஒரு பக்கம் அவன் மறுபக்கம் இவள் நாக்கை கிண்டலாக சுலட்டினான். லிப்ட் வந்ததும் அதில் யாரோ வயதான பெண்மணி இறங்கியதும் மெர்ஸியின் கன்னங்களை செல்லமாக தட்டி சென்றார்.

லிப்டுக்குள் ஏறியதும் இருவரும் ஒரே நேரத்தில் லிப்ட் பட்டனை அழுத்த செல்ல இருவருக்கும் சிரிப்பு வந்தது. அவனுக்கு சாதகமாக ஒரு பக்கமாக சாய்ந்து நின்று அவளை ரசித்தான். அவனின் போன் ரிங்டோன் பாடல் ஒலித்தது.

“என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே“ ரிசிவ் பட்டனை அழுத்தாமல் வேணும் என்றே ஒலிக்க செய்தான்.

“போதும்..போதும்..“ கையை உயர்த்தி நக்கலாக சொன்னாள். அவன் எங்கோ பார்ப்பது போல் மீண்டும் அவளை பார்த்தான்.

லிப்ட் புலோரை வந்தடைந்தது. இருவரும் லிப்டை விட்டு இறங்கினார்கள் அந்த புலோரில் மொத்தம் மூன்று வீடுகள் அதில் மூன்றாவது வீட்டின் காலிங் பெல்லை பெர்னட் அழுத்தினான். மேரி ஹோம்ஸ் என்ற போர்ட் சின்னதாக இருந்தது. பக்கவாட்டில் நின்றபடியே மெர்ஸி பெர்னட்டை பார்த்துக்கொண்டு இருந்தாள். டர்..கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

“என்னடா இவ்வளவு நேரமா“ கதவை திறக்கும் போதே கேள்விகளோடு வெளியே வந்தார் அந்த பெண்மணி. மெர்ஸி பெர்னட்டை பார்த்தாள். “அம்மா நாங்க என்ன ஊரு சுத்தவா போயிட்டு வரோம். சாவு வீட்டுக்கு போயிட்டு வரோம், போனோம் வந்தோம்னு இருக்க யாரோவா அவரு. மெர்ஸி வேலை பார்க்குற டாக்டர்.“ கடுகடுவென்று பேசினான் பெர்னட்.

“நான் ஒன்னும் சொல்லலடா போ..“ என்று மறைத்தார் அந்த பெண்மணி. இருவரும் உள்ளே சென்றனர். இருவரும் குளித்து முடித்து ரெப்பிரஸ் செய்து கொண்டனர். மெர்ஸி கட்டிலில் அமர்ந்த படியே கால்களை பிடித்து கொண்டு இருந்தாள். பெர்னட் போனை ஆராய்ந்து கொண்டு இருந்தான். “மெர்ஸி என்ன டிபன் செய்ய போற“ ஹாலில் இருந்து குரல் கொடுத்தார் பெர்னட் அம்மா.

“த்தோ வரன்..இட்லி தான் ஊத்தனும்.“ அதற்குள் மறைத்து “தோசை“ என்றான் பெர்னட். கால்களை பார்த்தாள், அவனை பார்த்தாள். அவன் முழு மூச்சாக போனில் டப்ஸ்மாஸ் பார்த்துக்கொண்டு இருந்தான்.

மெல்ல எழுந்து கிட்சனுக்கு வந்தாள். காலையில் சமைத்து போட்டு போன பாத்திரங்கள் எல்லாம் அப்படி அப்படியே கிடந்தது.

“ஏன் இந்த பாத்திரத்த கொஞ்சம் தேய்ச்சி வைக்ககூடாதா..“உரக்க குரல் கொடுத்தாள் மெர்ஸி.

“கால் வலி அதான் நிக்க முடியல“ பதில் வந்தது ஹாலில் இருந்து. டும்..டக்..டுமில் என்று சில சத்தங்களை கொடுத்து பாத்திரங்களை துலக்கி முடித்தாள். ஒற்றை காலில் நின்று தோசையை ஊத்தி சுடசுட டேபிளுக்கு போனது அம்மாவும் பிள்ளையும் நன்றாக சாப்பிட்டு முடித்து தட்டில் கைகளை கழுவினர். தனக்கு தோசை வார்க்க வந்தவள் என்ன நினைத்தாளே அடுப்பை அணைத்துவிட்டு படுக்கைக்கு சென்றாள்.

********

வந்த உறவுகள் எல்லாம் விடைபெற்று கொண்டனர், நண்பர்கள் எல்லாம் களைந்து சென்றனர். லதாவும், கண்மணியும் வீடை துடைத்து சுத்தம் பண்ணிக்கொண்டு இருந்தனர். கண்மணி வீடெல்லாம் துடைத்துவிட்டு ஹாலிற்கு வந்தாள் இத்தனை நேரம் ஹாலில் சோபாவில் அமர்ந்து கொண்டிருந்த சத்தியேந்திரனை காணவில்லை. கண்மணிக்கு தூக்கி வாரிப்போட்டது. சுற்றி முற்றியும் பார்த்தாள், பாக்யவதி புகைப்படத்தின் கீழே நின்று எதையோ யோசித்த வண்ணம் இருந்தான். கண்மணி தோளில் ஆறுதலாக கையை வைத்தாள்.

“சாப்பிட வாங்க?“, கண்மணி அழைத்தாள். அவளுக்கு ஏதும் பதில் சொல்லாமல் விடுக்கென்று தன் அறைக்கு சென்றான். லதா சோர்வாக அமர்ந்திருந்தாள், கண்மணி சாப்பாடு எடுத்து வந்து கொடுத்தாள். அதே நேரம் சத்தியேந்திரனின் அறைகதவு படுவேகமாக அதீத சத்தத்துடன் பட்டென்று திறந்தது. லதா ஒரு வாய் சாப்பாட்டை எடுத்து வைக்க நினைத்த போது அவன் தந்த சத்தத்தில் சாப்பாடு சிதறியது.

“கண்மணி கொஞ்சம் வா..“ என்று அழைத்தான் சத்தியேந்திரன்.

அவனை பார்க்கவே லதாவிற்கு ஏனோ கொஞ்சம் பயமாக இருந்தது. தன் உறவுகளை யாரையாவது துணைக்கு வைத்திருக்களாமே, காஞ்சிபுரம் சித்தப்பா கூட இருக்கேன்னு சொன்னாரே இவ தான் வேண்டாம்னு சொன்ன? லதாவின் மனம் எதை எதையோ கணக்கு போட்டது. கண்மணி எழுந்தாள், லதா கைகளை பிடித்து தடுத்தார். கைகளை தட்டி கொடுத்து சத்தியேந்திரன் அறையை நோக்கி சென்றாள். அறை வாசலில் நின்றவள் சற்று திரும்பி “அம்மா சாப்பிட்டு படுங்க“ என்றாள்.

சத்தியேந்திரன் கட்டிலில் அமர்ந்திருந்தான். கண்மணி எதிரே நின்றாள். தலையை குனிந்து அமர்ந்திருந்தவன் அவளை கண்டதும் தலையை நிமிர்ந்தான்.

“நீ வீட்டுக்கு போகலயா?“ என்றான் சத்தியேந்திரன். கண்மணி சற்று அமைதியாக இருந்துவிட்டு அவள் கேட்டாள் “ஊஹீம்..நான் போகவா“.

சத்தியேந்திரன் கண்கள் ஆழமாக அவளை நோக்கியவாறே “வேண்டாமே“ சிறுபிள்ளை கெஞ்சிவது போல கைகளை கூப்பி இருந்தான். கைகளை இறக்கிவிட்டு அருகே சென்று அமர்ந்தாள். அவன் தலையோடு இவள் தலையை மோதினாள். “உன்ன விட்டு போகனும்னா என் உயிர் போனா தான் உண்டு சத்யா. உங்க பிரச்சனை என்னன்னு என்கிட்ட சொல்லுங்க நான் சரி பண்ணுறேன்.“ என்றாள். பட்டென்று தலையை விலக்கி கொண்டான். திரு திருவென்று விழித்தான்.

“எனக்கு தூக்கம் வருது“ நகர்ந்து சென்று படுத்துக்கொண்டான் அவளும் நகர்ந்து சென்று அவன் தலை அருகே அமர்ந்து தலையை தடவிக்கொடுத்தாள். சத்தியேந்திரன், கண்மணியின் கைகளை இறுக்கி பிடித்துக்கொண்டான்.

சத்தியேந்திரன் சிறிது நேரத்தில் அசந்து உறங்கி போனான். கண்மணி அந்த அறையை விரித்து பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் ஏதோ யோசனை அவளுக்குள். முதல் முறை இந்த அறை தானே உன்னையும், என்னையும் வாழ்க்கை பகுதிக்கு பயணம் செய்ய வைத்தது. சில நினைவுகள் அவளுக்கு புன்னகை வரவைத்தது சத்தியேந்திரனை பார்த்தாள். திருமணம் முடிந்த அன்று இரவு சத்தியேந்திரன் கட்டிலில் அமர்ந்திருந்தான்.
கண்மணி அருகே அமர்ந்திருந்தாள்.

“என்ன உங்க அம்மா ஒன்னுமே சொல்லவே இல்ல..“ என்றாள்.

“எத பத்தி?“

“நான் உங்க பேசண்டுக்குற பத்தி“

“ஏய், நீ என்ன பல வருஷமா பைத்தியமா இருந்தியா என் பேசண்ட் என் பேசண்ட்டுன்னு சொல்லிட்டு இருக்க.“ என்று சிரித்தான். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது லாப்டாப்பில் சூம் காலிங் அழைப்பு வந்தது. இந்த நேரத்தில் கால் வந்ததும் யாராக இருக்கும் என்ற யோசனை கண்மணிக்கு எழும்ப. அந்த சத்தம் கண்மணியை திடுக்கிட செய்தது.​
 

Kiruba Jp

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
36
Points
18
பூவை 7

யார் என்பது போல் ஆவலாய் லாப்டாப்பை எட்டிப்பார்த்தபடியே “யாரு இந்த டைம்ல?“ என சத்தியேந்திரனிடம் கேட்டாள். சத்தியேந்திரன் கால் அட்டண்ட் செய்யவில்லை, “ஸாரி உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் மறந்துட்டேன். நான் எம்.எஸ் இன் பாஸிட்டிவ் சைக்காலஜி, லைப் யூனிவர்சிட்டி அட்லாண்டால பண்ண அப்லே பண்ணிருக்கேன். கிளாசஸ் ஆன்லைன்லையே பாத்துக்கலாம்னு சொல்லிருக்காங்க. வீக்லி டுவைஸ் அப்பறம் இந்த இயர் என்டுல ஒன்மந்த் நான் அட்லாண்டா போற மாதிரியும் இருக்கும்.“கண்மணிக்கு அவன் சொல்வது எதுவுமே புரியவே இல்லை எந்த நேரத்தில் என்னத்த உளறுகிறான் என்று எண்ணியபடியே “ஓ..ஏன் இங்கயெல்லாம் காலேஜ் இல்லையா?“

“இருக்கு? நான் எதிர்பார்க்குறது வேற.“

“ஊஹீம்..“

“டு ஹவர்ஸ் கிளாஸ் இருக்கும். நீ தூங்கு அப்படி இல்லனா அதோ செல்ப்ல நிறையா சைக்காலஜிகள் புக்ஸ் இருக்கு எடுத்துபடி“

“நானுமா..சரி..“ இழுத்து கேட்டால். அவன் கட்டிலை விட்டு எழுந்து லேப்டாப்பை தூக்கி கொண்டு தனிஇடம் புகுந்தான். வாழ்க்கை தொடங்க வேண்டிய காதல் இரவில் கணினியோடு போராடிக்கொண்டு இருக்கிறானே என்று எண்ணியவள் கட்டிலில் கிடந்த மலர்களை கைகளால் குவித்து சலித்து விளையாடிக்கொண்டு இருந்தாள். அப்படி திரும்பி அமர்ந்தாள், இப்படி திரும்பி அமர்ந்தாள், படுத்து பார்த்தாள், நடந்து பார்த்தாள் உறக்கமும் வரவில்லை எழுந்து அவன் அருகே சென்றாள். சத்தியேந்திரன் காதுகளுக்கு ஹெட்போனை பொருத்திக்கொண்டு ஆழ்சிந்தனையோடு கவனித்துக் கொண்டு இருந்தான். இவள் நிற்பதை பார்த்து கைகளை உயர்த்தி “என்ன?“ என்று ஜாடை காட்டினான்.

“நோட்ஸ் எடுக்க நோட்டு கிடைக்குமான்னு பார்த்தேன்.“
சொல்லிவிட்டு மீண்டும் கட்டிலுக்கு சென்று அமர்ந்துக்கொண்டாள். தட்டில் இருந்த பழங்களை பார்த்தாள். திராட்சையை எடுத்து சுவைக்க அவை புளித்ததும் உதடுகளை சுருக்கி உச்சிகொட்டினாள். அவள் செய்யும் செய்கைகளை அவன் கவனிக்காமல் இல்லை.

நேரம் மலரென உதிர்ந்துக்கொண்டு இருந்தது. ஒருவழியாக அவன் லேப்டாப்பை மூடிவைத்தான். கண்மணி உறங்கிவிட்டாள் என்று அமர்ந்த இடத்தில் இருந்தே எட்டி பார்க்க உறங்கிகொண்டு இருந்தாள். அயர்ந்து உறங்குகிறாள் எந்த தொந்தரவும் செய்துவிடகூடாது என்பவன் போல கவனமாக எழுந்தான் மணியை பார்த்தான் இரண்டாகி போனது. அவள் அருகே சென்று சத்தம் இல்லாமல் படுத்துக்கொண்டான்.

“என்ன உங்க பள்ளிக்கூடத்துல பெல் அடிச்சிட்டாங்களா?“ என்றாள் திரும்பி பார்க்காமலே.

“நீ தூங்கலயா?“

“புது இடம்ல அதான் தூக்கமே வரல“

“அப்படியா சரி ஒரு கேம் விளையாடலாமா?“

“கேமா? இந்த நேரத்துலயா பேபெல்லாம் வாக்கிங் போற நேரம் இது?“ அவள் திரும்ப முனைந்தாள்.

“ஏய், நீ அப்படியே படு கேம்மே உன் முதுகுல தான்.“ வெண்பளிங்கு சிலையோ என்று சில நொடி தோன்றியது அவன் மனதில். எழுதுகோலாய் அவன் விரலை கையேடாய் அவள் முதுகை எண்ணிவிட்டானோ என்னவோ. அவன் விரல் பட்ட நொடி அவள் உயிர் தொண்டைக்குழிக்குள் இருந்து அடிவயிற்றில் சென்று பிரள ஆரம்பித்தது. நாணங்கள் அவளை பிடிங்கி திண்றது. ஏ.சி அறையிலும் அவள் உடல் ‘குப்‘ என்று வியர்த்தது. நா வரண்டு பிரண்டது “எ..என்ன கேம்.“ என்று திணறினாள்.

“நான் சில வேர்ட்ஸ் எழுதுறேன் நீ என்னன்னு சரியா சொல்லனும். நீ ஒரு வேளை தப்பா சொன்னா நான் என்ன சொல்றனோ அத நீ செய்யனும்.“ சரி என்பது போல் அசைந்து கொடுத்தாள் வார்த்தைகள் மௌனமாகிவிட்டது. அவன் எழுத தொடங்கினான். அவள் ஒவ்வொரு வார்த்தையாக சொல்லி வாக்கியம் அமைத்தாள்.

“ல.ஒ.வி.இ…லவ்“

“குட், இத சொல்லு?“

“கே.ஐ.எஸ்.எஸ்..கிஸ்“

“வாவ்..சூப்பர். பைனல் இத சொல்லு“

“எஸ்.இ.“ அவள் கடைசி வார்த்தையை சொல்லு முன் நாக்கை கடித்து சொல்லாமலே நிறுத்தினாள். “ஊம்..சொல்லு?“ அவள் சொல்லவே இல்லை கைகளால் கண்களை மூடிக்கொண்டாள். “நீ இப்போ அவுட்டாக போற“

“கேர்ல்.“

“ஏய் அத மீண் பண்ணி நான் கேட்கவே இல்லையே நீ அவுட்“ அவள் தோளை பிடித்து தன் பக்கமாக திருப்பி படுக்க வைத்தான். கண்கொண்டு அவனை பார்க்கவே இல்லை எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தாள். “ஒரு பாட்டு நியாபகம் வருது பாடவா“

“பாடுவிங்களா?“

“பாத் ரூம் சிங்கர்..ஹா..ஹா..சரி நான் பாடுறேன்.“

“வரவா வந்து தொடவா உன் ஆடைக்கு விடுதலை தரவா
அவசரம் கூடாது அனுமதி பெறும் வரையில்
பொதுவா நா பெண்ணா நீ சொன்ன படி கேட்கும் மாது
இது போன்ற விசயத்தில் உன் பேச்சி உதவாது“

அவன் அடுத்த வரி பாடுவதற்குள் விரல்களால் வாயை மூடினாள். விரலை மெல்ல பிரித்துவிட்டான். “ஏன் பாட்டு நல்லாயில்லையா இல்ல நான் பாடுறது நல்லா இல்லையா?“

“ரெண்டும் நல்லாயிருக்கு ஆனா??“ இப்போது அவன் கண்களை இவளின் கண்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. விளக்கினை காற்று அணைப்பதை எரியும் தீபம் அறியுமோ காற்றின் வேகம் அறியாமலே காற்று தீண்ட அல்லாடும் தீபம் போல அவளும் ஆனாள்.

அவன் விரல்கள் அவளின் தேகம் எங்கும் தீண்டல் செய்து கொண்டே இருந்தது. அவளின் நாணமோ அவனுக்கு தடைப்போட்டு கொண்டே இருந்தது. இடைவெளியில்லா முத்தங்களால் அவளின் மூச்சே திணறிப்போனது. மூச்சு திணறி வேகமாக எழுந்தாள், உடலெங்கும் வியர்த்துக்கொட்டியது. சுகம் சேர்க்கவா இந்த நினைவுகள் அரும்பியது, சுமையை அல்லவா சேர்த்து போகிறது. கனவை களைந்து நிஜஉலகில் நினைவு கொண்டாள். அருகே சத்தியேந்திரனை பார்த்தாள் நன்றாக உறங்கி கொண்டு இருந்தான். டேபிள் மேல் இருந்த தண்ணீரை எடுத்து கடகடவென குடித்தாள். மணியை பார்த்தாள் மூன்றாகியது. அவளுக்கு உடல் ஏதோ செய்தது, உணர்வுகளும் தான். பிரண்டு பார்த்தாள் அறைக்குள் இங்கும் அங்கும் நடந்தாள். உறக்கம் வரவே இல்லை, தலையணையை எடுத்து தரையில் போட்டு படுத்துக்கொண்டாள். உறக்கம் இல்லாமலே இரவை கழித்தாள் பொழுதும் புணர்ந்தது.
இரவின் சாயல் சற்று பூசிய வண்ணம் பகலின் சாயலை சிறிது சிறிதாய் தெளித்துக்கொண்டும் பொழுது புணர்ந்து இருந்தது. காபி கப்புடன் அதிகாலை பொழுதை அடுப்பங்கரை ஜன்னல் வழியே ரசித்துக்கொண்டு இருந்தாள் மெர்ஸி. ஏதோ சின்ன சத்தம் கேட்டது பெர்னட் உறங்கி கொண்டு இருக்கும் அறையை சென்று எட்டி பார்த்தாள் உய்ங்..உய்ங்..என்ற பேனின் சத்தத்தை தாலாட்டு போல கேட்டு ரசித்து காலுக்கு ஒன்று தலைக்கு இரண்டு என்று தலையணையை அடுக்கி உறங்கிகொண்டு இருந்தான். மீண்டும் அடுப்பங்கரை வந்தவள் மலமலவென்று டிபன், மதியம் லஞ்ச் என்று எல்லாம் ரெடி பண்ண ஆரம்பித்தாள். கிழக்கில் சூரியன் நன்றாகவே உதித்து மேலே எழும்ப ஆரம்பித்துவிட்டான். எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு குளிக்க பாத்ரூம் போக வெளியே வந்தாள். மாமியர் ஒய்யாரமாக நாற்காளியில் அமர்ந்து காலை செய்திகளை கேட்டு கொண்டு இருந்தார். மீண்டும் அடுப்பங்கரை சென்று காபியை கலக்கி கொண்டு வந்து கையில் திணித்துவிட்டு குளிக்க சென்றாள் பரபரப்போடு குளித்துவிட்டு கண்ணாடி முன் வந்து நின்றாள். இப்போதெல்லாம் சற்று நேரம் நின்று கூட கண்ணாடியை பார்ப்பதில்லையே, கல்யாணத்திற்கு முன் கண்ணாடியே கதியேன்று நிற்பவளிடம் அம்மா சொல்வாள், "உன் அழகு எங்கயும் ஓடி போகாது அந்த கண்ணாடிய பாக்குறத நிறுத்து", என்று இப்போது அதை நினைத்து கொண்டாள். தலையை வாரினாள். பெர்னட் எழுந்து சோம்பல் முறித்தான். “குட்மார்னிங்“ என்றான்.

“உம்..“ என்ற பதில் மட்டுமே வந்தது அவள் பக்கத்தில் இருந்து. “ஏன் காலையிலயே டல்லா இருக்க?“

“ஒன்னும் இல்லையே?“

“ஏய், எழும் போதே இப்படி மூஞ்ச தூக்கி வச்சிக்காதடி எரிச்சலா வருது உனக்கு என்ன தான் பிரச்சனை நான் வேலைக்கு இன்னும் போகாதது தானே.“

மெர்ஸி திரும்பி அவனை பார்த்தாள். அவனிடம் சரிக்கு சமமாக நின்று சண்டை பிடிக்க இப்போது நேரம் இல்லை, சத்தியேந்திரன் வீட்டிற்கு சென்று விட்டு பின் ஹாஸ்பிட்டல் வேறு செல்ல வேண்டும். “காபியா, டீயா..“ என்ற கேள்வியை மட்டும் கேட்டாள். அவன் எதுவும் பதில் சொல்லாமல் எழுந்து ஹாலில் சென்று இன்னொரு நாற்காளியில் அமர்ந்துக்கொண்டான்.

அடுப்பங்கரை சென்று அவனுக்கு டீயை கலந்தாள். “பெர்னட் அத்தை குடிச்ச காபி டம்ளர எடுத்துட்டு வாயேன் பிளீஸ்.“ என்று குரல் கொடுத்தாள். இவன் காபி டம்ளரை எடுக்க போன வண்ணம் அவன் மொபைல் சினுங்கியது. டம்ளரை அப்படியே மறந்து மொபைலை பார்க்க சென்றான். டீயை கலந்து கவுண்டர் டாப்பில் வைத்தாள். கொதித்துக்கொண்டு இருந்த இட்டிலியை இரண்டு, மூன்று துண்டுகளை வயிற்றுக்கு போட்டு கொண்டாள். மதிய லஞ்சை கையில் எடுத்து கொண்டு தன் ரூமிற்கு சென்று ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற போனவளிடம் .“டீ எங்க?“ என்றான். மாமியார் காலடியில் இருந்த காபி டம்ளரை ஒரு பார்வை பார்த்தாள், அவனை ஒரு பார்வை பார்த்தாள். விடுவிடுவென்று லிப்டை நோக்கி நடந்தாள். அந்த காபி டம்ளர் அதே இடத்திலேயே அப்படியே இருந்தது. எப்போதும் போகும் ஆட்டோவை தான் அழைத்தாள் “காலை வணக்கம்மா“ என்றார் ஆட்டோகாரர் சிரித்த முகத்துடன்.

“வணக்கம் அண்ணா“

“எங்க அம்மா எப்போதும் போற வீடு தானே.“

“ஆமாம், ஆனா கொஞ்ச நேரம் தான் நான் போய் பார்த்துட்டு வந்துடுவேன் நீங்க என்ன ஹாஸ்பிட்டல்ல டிராப் பண்ணிடுங்க.“

“சரிம்மா..சரி..“ என்று தன் கவனத்தை ஆட்டோ பக்கம் செலுத்திவிட்டார் டிரைவர். ஊதுபத்தி வாசமும், மல்லிகை வாசமும் ஆட்டோவில் காலையிலேயே மங்களகரமாக இருந்தது. அவளுக்கும் சற்று மன அமைதியை தந்தது. பெர்னட் நடந்துக்கொண்டதை நினைத்துக் கொண்டே வந்தாள். இந்த அரென்ஞ் மேரேஜே இப்படி தான் இருக்குமோ ஒரு வேளை காதலித்து திருமணம் செய்து இருந்தாள் நன்றாக இருந்திருக்குமோ ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, என்னென்னவோ சிந்தனைகள் மனம் எங்கிலும் ஓடிக்கொண்டே இருந்தது மெர்ஸிக்கு. சாலைகளில் நெழிந்துக்கொண்டும் ஊர்ந்துக்கொண்டும், ஓடிக்கொண்டும் இருக்கும் வாகனங்களை பார்த்தாள். அவள் கண்களால் அதை நம்பவே முடியவில்லை மீண்டும் கண்களை நன்றாக துடைத்துவிட்டு பார்த்தாள்.

“சார்..சார்“ என்று கத்தினாள்.

“என்னாச்சிமா..“ஆட்டோ டிரைவர் பதறினார். திருப்புங்க திருப்புங்கன்னா ஆட்டோவ அதோ ஒருத்தர் ஓடுறார் பாருங்க அவர பாலோ பண்ணுங்க என்றாள். என்ன காரணம் என்று அவளுக்கு விளங்கவே இல்லை எதிரே சத்தியேந்திரன் தலை தெறிக்க ஓடிக்கொண்டு இருந்தான்.​
 

Kiruba Jp

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
36
Points
18
பூவை 8

ஆட்டோவை ஓடிக்கொண்டிருக்கும் சத்தியேந்திரனுக்கு அணைப்போட்டு நிறுத்துவது போல எதிரே கொண்டு நிறுத்தினார் ஆட்டோ ஓட்டுநர். சத்தியேந்திரன் சற்று நிற்க மெர்ஸி ஆட்டோவை விட்டு இறங்கினாள். அவளுக்கு எதுவுமே புரியவில்லை மெல்ல மெல்ல அவன் அருகே சென்று “சார்..நீங்க இங்க எப்படி?“, என்று சிறு படப்படப்புடன் கேட்டாள். சத்தியேந்திரன் முகம் எல்லாம் வியர்வை பெரும் பதற்றத்துடன் காணப்பட்டான்.

“வீட்டுக்கு போகனும்..“ ஒற்றை பதிலை மட்டுமே உதிர்த்தான். இங்கு நின்று பேசுவதற்கு ஒன்றுமில்லை வீட்டிற்கு சென்றால் தான் எதுவும் புரியும் என்று யோசித்துக்கொண்டே சத்தியேந்திரனை ஆட்டோவில் அமர சொன்னாள் மெர்ஸி. இருவரும் அமர ஆட்டோ டூ..டூ.. என்று தன் வேகத்தை கூட்டி சாலையில் பறந்துக்கொண்டு இருந்தது. வழி நெடுகிலும் இருவரிடையே அமைதி நிலவியது. சத்தியேத்திரன் ஒரே இடத்தை விரிக்க பார்த்துக்கொண்டு இருந்தான். மெர்ஸிக்கு அவனின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மிகவும் விசித்திரம் அடைந்துக்கொண்டே போவது கலக்கத்தை தந்தது. டாக்டர் என்றா பழகினான், ஒரு அண்ணன் போலே அல்லவா பழகினான். என் கஷ்டங்கள் எதனையும் முன்கூட்டியே அறிந்தவன் போல அத்தனை உதவிகள் செய்தானே எத்தனை நல்ல குணம் கொண்டவன் அவனுக்கு ஏன் இப்படி நடந்துக்கொண்டு இருக்கிறது. கிட்ட தட்ட ஐந்து வருடமாக இவருடன் தான் வேலை செய்கிறேன், என் கல்யாணம் கூட இவரால் தானே நடந்தது. எந்த கஷ்டம் வந்தாலும் அது தீரும் வரை நான் உங்களுக்கு துணையாக தான் இருப்பேன். அவள் மனம் எதை எதையோ புலம்பிக்கொண்டே இருந்தது. இறுதியாக சத்தியேந்திரன் காம்பவுண்ட் வாசலில் ஆட்டோ நின்றது. ஆட்டோவை கட் செய்துவிட்டு மெர்ஸியும், சத்தியேந்திரனும் காம்பவுண்ட் கேட்டை திறந்து உள்ளே சென்றனர். எதிரே காய்ந்து சருகாகி கொண்ட இருந்த அந்த புற்களை உயிர் பெரும் பொருட்டு தண்ணீரை பிடித்துக்கொண்டு இருந்தார் லதா. இவர்கள் இருவரையும் சேர்த்து பார்த்ததும் பெரும் அதிர்ச்சி “இவரு என்ன போலிஸ்சோட போயிட்டு இந்த பொண்ணோட வராரு.“ மனம் ஏதோ புதிர் போட்டு கொண்டு இருந்தது. லதாவையும் கண்டுகொள்ளவில்லை, மெர்ஸியையும் கண்டுக்கொள்ளவில்லை சத்தியேந்திரன் நேராக வீட்டிற்குள் சென்றான்.

“அம்மா கண்மணி மேடம்..“ இழுத்து பேசி இருக்கிறாளா என்று முதலில் தெரிந்து கொள்ளும் பொருட்டு கேட்டாள். லதாவும் தயக்கத்துடன் உள்ளே இருக்கிறாள் என்றார். கண்மணி கிட்சனின் பொருட்களை எல்லாம் ஒதுங்க வைத்துக்கொண்டு இருந்தாள். அவள் இடப்பக்கம் திரும்பிவிட்டு மீண்டும் வலப்பக்கம் திரும்பும் போது சட்டென்று அருகில் சத்தியேந்திரன் நிற்க தூக்கிவாரி போடவும் கையில் இருந்த பாத்திரங்களை கீழே விட்டாள். அவன் அதைபற்றி பெரிதாக நினைக்கவில்லை, குடத்தில் இருந்த நீரை மொண்டு கடகடவென்று குடித்தான். கண்மணிக்கு ஆச்சரியம் இவன் இங்கு என்ன செய்கிறான் என்ற யோசனை. சத்தியேந்திரன் தன் அறைக்கு சென்றான் கண்மணி பின்னாலயே சென்றாள். கட்டிலில் போய் சரிந்தான். அருகே சென்றவள் அவன் பக்கமாக சற்று முன்னேறி “என்ன செய்யுது உடம்புக்கு“ என நெற்றியில் கைகளை வைத்து பார்த்தாள். அதற்குள் பெட்ரூம் வாசற்படியை பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் மெர்ஸி. “மேடம்“ என்று தழுதழுத்த குரலில் அழைத்தாள். யார் அழைப்பது என்று சத்தியேந்திரனை கவனிப்பதை விடுத்து திரும்பி பார்த்தாள் அங்கு மெர்ஸி இருப்பது வேறு வேறு எண்ண ஓட்டங்களை அவளுக்குள் பாய்ச்சியது. பயம் ஒரு பக்கம் பற்றியதும் அந்த பயத்துடனே “மெர்ஸி..“ என்றாள்.

இருவரும் அறைகதவை மூடிவிட்டு ஹாலில் வந்து அமர்ந்தனர். லதா கிட்சனில் நின்று வேலை செய்வதாலும் தன் சிந்தனையெல்லாவற்றையும் ஹாலில் பொருத்தி இருவரும் பேசுவது என்னவென்று காதுகளை கூர்தீட்டி கேட்டுக்கொண்டு இருந்தார். “நீ எப்படி இவர் கூட..“ முதலில் தோன்றிய கேள்வியை முன் வைத்தாள் கண்மணி.

“சார் ரோட்டுல ஓடிவந்துக்கிட்டு இருந்தாரு, நான் எதிர்ல ஆட்டோல வந்துகிட்டு இருந்தேன். எனக்கு அவர எதிரே பார்த்ததும் பக்குன்னு ஆகிடுச்சி. எங்க சார் இங்கன்னு கேட்டேன் ஆனா அவரு எந்த பதிலுமே சொல்லல வீட்டுக்கு போகனும்னு மட்டும் தான் சொன்னாரு. என்ன நடந்தது சார் எங்க போனாரு.“ மெர்ஸி நடந்ததை சொல்லி முன் என்ன நடந்தது என்பதிற்கான வினாவையும் கேட்டடாள். கண்மணி இரண்டு மணி நேரத்திற்கு முன் நடந்ததை நினைவு கூர்ந்து பார்த்தாள்.

நெடுநேரம் இரவில் உறக்கம் இல்லாமல் இருந்தவள் நன்றாக அசந்து உறங்கி கொண்டு இருந்தாள். சூரியன் முகத்தில் பட்டு கண்களை மெல்ல கூச செய்ய அய்யோ நீண்ட நேரம் உறங்கிவிட்டோமோ சத்தியேந்திரன் எங்கே என்ற பயத்துடன் வேகவேகமாக எழுந்தாள். ரூம் கதவை திறந்து வெளியே வந்தாள், சத்தியேந்திரன் சோபாவில் அமர்ந்திருந்தான் டி.வி ஓடிக்கொண்டு இருந்தது. கையில் பேப்பரை வேறு திருப்பிக்கொண்டு இருந்தான். லதா காபி டம்ளரை அவனுக்கு எதிரே இருந்த டீப்பாய் மீது வைத்தார். கண்மணி பார்த்துக்கொண்டே நின்றாள். சத்தியேந்திரன் பேப்பர் படிப்பதன் ஊடே டம்ளரில் இருந்த காபியை சுவைத்தான். காபியை வைத்துவிட்டு திரும்பி சென்று லதாவிடம் “அத்தே காபி நல்லாயிருக்கு நீண்ட நாளைக்கு அப்பறம் இந்த மாதிரி காபி சாப்பிடுறேன்.“ என்று இருவரும் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தனர். கண்மணிக்கு அவனை நினைக்கும் போது மனம் மிகவும் குழப்பம் கொண்டது. இவன் என்ன நேரத்திற்கு ஒருத்தனாக நிமிஷத்திற்கு ஒருத்தனாக இருக்கிறானே என்று எண்ணியது. சத்தியேந்திரனே முதலில் கண்மணியை கவனித்தவன் போல “எழுந்தரிச்சிட்டியா நல்லா தூங்கிட்டு இருந்த?“ அவன் இப்படி சொன்னதும் அவள் மனத்தில் ஒரு சிந்தனை “அய்யோ இவன் என்ன நினைத்து இருப்பான். நன்றாக படுத்து தூங்கி கொண்டு இருக்கிறேன் என்று தானே, தன் அம்மாவை பறிகொடுத்த இடத்தில் இவள் எப்படி கவலையே இல்லாமல் உறங்குகிறாள் என்று தானே.“அவள் சிந்தித்துக்கொண்டு இருக்கையிலயே “நைட் ரொம்ப நேரமா நீ தூங்கவே இல்லையா?“ அவனே அடுத்த வினாவும் கேட்டான். “அப்போ இவரும் முழிச்சிட்டு தான் இருந்துருப்பாரோ சரியா சொல்றாருன்னா?“ மனதோடு பேசிக்கொண்டு இருந்தாள்.
“நைட் ஒன் டைம் எழுந்தேன் அப்போ நீ உட்கார்ந்து இருந்த. என்னன்னு கேட்போன்னு தான் நினைச்சேன். அப்பறம் உன்ன ஏன் டிஸ்டப் பண்ணனும்னு நினைச்சி நான் படுத்துட்டேன்.“ இப்போது கண்மணிக்கு தெளிவாக புரிந்தது. “ஆமாம்.. எதோ நினைச்சிட்டு இருந்தேன் தூக்கமே வரல சத்யா“ பேசிக்கொண்டே அவன் அருகே வந்து அமர்ந்தாள். “நல்லா தூங்கனும் அப்போ தான் மனசு ஆரோக்யமா இருக்கும்.“ அவன் டாக்டர் புராணத்தை ஆரம்பித்தான்.
“சரி..“ அவள் இன்முகத்தோடு சொன்னாள்.

“கண்மணி எனக்கு பூரி செய்யுறியா? சாப்பிடனும் போல இருக்கு“ சின்ன குழந்தை போல கேட்டான். அவளுக்கு அவன் அப்படி கேட்டதும் பெரும் ஆச்சரியம் மிகுந்த உற்சாகத்துடன் எழுந்தாள். “அறைமணி நேரம் சத்யா“ குதுகலமாக எழுந்து கிட்சனுக்கு சென்றாள். லதாவிடம் மாவு பிசைய சொன்னாள். தான் குளித்துவிட்டு அத்தைக்கு மாலை மாற்றி விளக்கு ஏற்றிவிட்டு வருவதாக சொல்லிவிட்டு குளிக்க சென்றாள். குளித்து முடித்துவிட்டு பாத்ரூமைவிட்டு வெளியே வர சத்தியேந்திரன் கட்டிலில் அமர்ந்திருந்தான். திடீரென்று பதற்றம், சிறிது நாணத்துடன் “நீங்க இங்க என்ன பண்றிங்க?“

“சும்மா..“ குளித்து முடித்த ஈர தலையுடனும், அவசரத்திற்கு சுற்றிய புடவை கட்டுடனும் கண்ணாடியை பார்த்து நெற்றியில் பொட்டை சரி செய்து கொண்டு இருந்தாள். அவன் பின்னால் இருந்து வந்து கட்டிக்கொண்டான். அந்த கண்ணாடியை பார்த்துக் கொண்டே “நீ இல்லாதப்போ இந்த கண்ணாடி என்ன கேட்டுச்சி?“ அவள் தோள்பட்டையில் தன் தாடையை அழுத்தி இருந்தான்.

“என்ன கேட்டுச்சி?“ என்றாள். “ நீ எங்கன்னு தான்?“ என்றான் அவன்.

“நீங்க சொல்ல வேண்டியது தானே நான் தான் வெளியில அனுப்பிட்டேன்னு. அவகிட்டு எந்த காரணமும் சொல்லவே இல்லன்னு“ அவன் முகத்தை பார்த்து கண்மணி சொன்னதும் சத்தியேந்திரன் முகம் மாறியது. அவள் அணைப்பை சற்று விலக்கினான். தலையை குனிந்தபடி ஏதோ யோசனையோடு நின்றான். அவன் கன்னங்களை பிடித்து அவள் பக்கமாக திருப்பினாள். “அதே கண்ணாடிகிட்ட சொல்லுங்க அவள நான் வெளிய போன்னு சொன்னாலும் இல்ல உலகத்தவிட்டே போன்னு சொன்னாலும் திரும்ப உனக்கு முன்னாடி என்கூட வந்து நிட்பான்னு.“ அவன் நெற்றியில் அன்பும், ஆசையும் பொங்க முத்தத்தை பதித்தாள். அவன் கண்கலங்கியது.
மலமலவென்று வேலை நடந்துக்கொண்டு இருந்தது. கண்மணியும் சென்று லதாவுடன் சேர்ந்துக்கொண்டாள். பூரி ஒருபக்கம், பூரிக்கு கிழங்கு ஒரு பக்கம் என்று விரைவாக தயார் ஆகிக்கொண்டு இருந்தது.
அப்போது வாசலில் “சார்..“ என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டது. சத்தியேந்திரன் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு எழுந்து போய் யார் என்று பார்த்தான். காக்கி உடையில் காவலர் நின்று கொண்டு இருந்தார். யார் என்பது போல் விழித்தான் அவரே அறிமுகப்படுத்தி கொண்டார். “சார் நான் மைதின், சப் இன்ஸ்பெக்டர். நேத்து கால் பண்ணியிருந்தேனே.“ நியாபகப் படுத்தினான் அந்த இளைஞன்.
“ஓ..யேஸ்.. வாங்க..வாங்க“ என்று வரவேற்று அமர சொன்னான். கண்மணி வந்து ஹாலை எட்டி பார்த்தாள். கண்மணியை பார்த்து அவன் மரியாதை நிமிர்த்தமாக தலையை அசைத்தான். பதிலுக்கு அவளும் தலையை ஆட்டினாள். “கண்மணி காபி கொண்டு வாயேன்“ சத்தியேந்திரன் கேட்டான். தலை அசைத்துவிட்டு உள்ளே சென்றாள். லதா அறிந்தது போல காபியை கலந்துக்கொண்டு இருந்தார். அதை வாங்கி கொண்டு ஹாலுக்கு வந்து மைதினிடம் கொடுத்தாள்.

“ரொம்ப கஷ்டமா போயிடுச்சி சார்.“ மைதினே பேச்சை ஆரம்பித்தான் அவனே தொடர்ந்து பேசினான். “நான் நேத்து தான் உங்ககிட்ட பேசுனேன் இன்னைக்கு உங்கள நேர்ல பார்த்து என்ன விவரம்னு தெரிஞ்சிட்டு போகலாம்னு வந்தேன் வந்து பார்த்தா இப்படி? உங்க அம்மா இறந்துட்டாங்கன்னு கேள்விபட்டதும் உங்ககிட்ட வந்து பேசவே என்னவோ மாதிரி? யோசிச்சி யோசிச்சி தான் வந்தேன் சார்.“ அவன் முடித்தான்.

“என்ன பண்றது மரணங்கிறது யார் கையிலயும் இல்லயே அது எப்போ வரும்னு சொல்ல முடியாது. நீங்க தொழில் விஷயமா தானே வந்திங்க தொழில் வேற, குடும்பம் வேற நான் இரண்டையும் சேர்த்து பார்க்குறதே இல்ல.“ அவன் இத்தனை தெளிவாக பேசுவதை கண்மணி நின்று ரசித்துக்கொண்டு இருந்தாள்.

“சார் பிரஷர் மேல பிரஷர் நான் இந்த ஊருக்கு வந்து இரண்டு நாள் தான் ஆகுது. அதுக்குள்ள நிறைய பிரஷர் கொடுக்குறாங்க. நான் இந்த கேஸ்ச கிளியர் பண்ணிவிட்டா தான் அடுத்தத மூவ் பண்ண முடியும். இஃப் யூ டோண்ட் மைண்ட் ஜெஸ்ட் உதவியா தான் கேட்குறேன் முடியாதுன்னா வேண்டாம்.“ சத்தியேந்திரன் யோசித்து கண்மணியை பார்த்தான். மைதின் கேட்பதற்கு முன்னமே அவனே சொன்னான் “நான் உங்ககூட வரேன் மைதின்.“ மைதின் முகம் இப்போது தான் மலர்ந்தது ஆனால் கண்மணியின் முகம் அரண்டது. இவனை தனியாக அனுப்புவதா என்ற பயம் அவளை பற்றிக்கொண்டது. சத்தியேந்திரன் எழுந்து உடைமாற்ற தன் அறைக்கு சென்றான் மைதின் காபியை சுவைத்தான். கண்மணி பின்னாலேயே சென்றாள்.

“நீங்க போகனுமா??“ என்றாள்.

“பத்து நிமிஷம் தான் ஆகும் நான் அந்த கேஸ்ச பார்த்துட்டு ஒரு கையெழுத்து போட்டு கொடுத்துட்டு வந்துட்டேன்னா அவங்க ஜி.ஹேச்கு மாத்திடுவாங்க.“ உடையை மாற்றிக்கொண்டே சொன்னான்.

“இருந்தாலும் எனக்கு ஏதோ சரியாபடல வேறயாரையாவது பார்க்க சொல்லுங்களேன்.“ தயக்கத்துடன் சொன்னாள்.
“என் நிலை என்னன்னு உனக்கு தெரியும் இப்போ நான் போகலன்னா என்னோட வேலைக்கே ஆபத்து வந்துடும்.“ சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

“கிளம்பலாமா மைதின்.“ என்றான். காபி குடித்த டம்ளரை கீழே வைத்துவிட்டு எழுந்தான் மைதின். இருவரும் வாசலுக்கு வந்தனர். கண்மணி, “சார் கொஞ்சம் பார்த்துக்கோங்க..“ அக்கறையாக மைதினிடம் சொன்னாள். பேசாதவள் பேசியதும் “சரி சரி மேடம்..“ என்று தலையை அசைத்துவிட்டு அங்கிருந்து இருவரும் கிளம்பினர். உள்ளே அவன் ஆசையாக கேட்ட பூரியை லதா சுட்டு அடுக்கி ஆறவைத்து இருந்தாள் கண்மணிக்கு கஷ்டமாக இருந்தது.

நடந்ததை கண்மணி யோசனையோடு மெர்ஸியிடம் சொல்லி முடித்தாள்.

“அப்போ சார் ஏன் தனியா ஓடி வந்துகிட்டு இருந்தாரு?“ என்று கேட்டாள் மெர்ஸி. அதற்குள் பின்னால் இருந்து வந்த குரல் “அத நான் சொல்றேன்“ என்றது.​
 

Kiruba Jp

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
36
Points
18
பூவை 9

வாசல் பக்கம் வந்த குரலை கேட்டு இருவரும் சற்று நெஞ்சு தளதளத்து எழுந்து நின்றனர். சப் இன்ஸ்பெக்டர் மைதின் நின்று கொண்டு இருந்தார். கண்மணிக்கு பேச்சு திணறியது “வா..வாங்க..சார்..“ என்று அழைத்தாள். அவர் இன்ஸ்பெக்டர் என்பது மெர்ஸிக்கு புரிந்தது, ஆனால் மீதியை இவர் எப்படி சொல்வான் என்பது அவளுக்கு புரியவில்லை. சிலை போல நின்று கொண்டு நடப்பதை கவனித்தாள். மைதின் தன் தலையில் இருந்த தொப்பியை கழட்டிவிட்டு அமர்ந்தார். கண்மணிக்கு இப்போது என்ன பேசுவது என்றே புரியவில்லை ஆனால் ஏதாவது பேசி தானே ஆரம்பிக்கவேண்டும்.

“டீ..காபி..எதும் சாப்பிடுறிங்களா“ என்றாள்.

“நோ தேங்ஸ்..“ அவன் சட்டென்று முடித்துவிட்டான். சற்று அமைதி நிலவியது, இப்போது மைதினே ஆரம்பித்தார். “சாருக்கு என்ன பிரச்சனை? “ என்றான்.
கண்மணிக்கு புரியவில்லை, ஆனால் அவளுக்குள் நடந்த சில சம்பவங்கள் நினைவு கூறப்பட்டது. அவளுக்கே எதுவும் புரியாமல் குழம்பிக்கொண்டு இருக்கிறாள், அப்படி இருக்க இவன் கேட்கும் கேள்விக்கு எவ்வித பதிலை அவள் சொல்ல முடியும்.

“சாருக்கு என்ன? ஒன்னும் இல்லையே அவரு நல்லா தான் இருக்காரு?“ என்றாள் கண்மணி. அந்த பதில் மெர்ஸிக்கு குழப்பம் தந்தது ஏன் இவள் இப்படி சொல்கிறாள். அந்த மனிதன் அப்நார்மலா இருக்காரே என்று தனக்குள்ளயே எண்ணிக் கொண்டாள்.

“நீங்க பொய் சொல்றிங்க?“ என்றான் மைதின்.

“நீங்க என்ன சொல்லவறிங்க சார், அத தெளிவா கொஞ்சம் சொல்லுங்க. அப்பறம் நான் பொய் சொல்றேனா மெய் சொல்றேனான்னு பார்ப்போம்.“ கண்மணி சிறிதும் தயங்காமல் பட்டென்று சொன்னாள்.

“சொல்றேன்..“ மைதின் இரண்டு மணி நேரத்திற்கு முன்னால் நடந்ததை நினைவுகூர்ந்து சொல்ல ஆரம்பித்தான்.

வீட்டை விட்டு இருவரும் வெளியே வந்தனர். சத்தியேந்திரன் தன் காரை எடுக்க முற்பட்டபோது மைதின் தடுத்தான். “ஏன் சார் இன்னொரு வண்டி என் ஜீப்லையே போயிடலாம், திரும்பி கொண்டு வந்து நானே விடுறேன். எனக்காக தான் இவ்வளவு சிரமபட்டு வறிங்க உங்கள இன்னும் கஷ்டபடுத்த கூடாதுன்னு தான் நான் சொல்றேன்“ என்றான்.
சத்தியேந்திரன் சிரித்தான். “சரி வாங்க..“ என்று இருவரும் ஜீப்பில் பின் சீட்டில் அமர்ந்து கொண்டனர். சாலையில் ஓட ஆரம்பித்த ஜீப்பின் உள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை. சாலையில் வாகன இரைச்சல்கள் மட்டுமே கேட்டுக்கொண்டு வந்தது. பெரிய மீசை வைத்த டிரைவர் ஜீப்பை ஓட்டிக்கொண்டே கண்ணாடி வழியே இருவரையும் கவனித்தான். அமைதியை உடைக்கும் பொருட்டு சத்தியேந்திரன் ஆரம்பித்தான் “அப்பறம் மைதின் சார் முதல எங்க வேலை பார்த்திங்க.“ என்றான்.

“திருச்சி சார்.. அது தான் எங்க சொந்த ஊரும். இது அப்பாவோட வேலை சார் அப்பா டியூட்டில இருக்கும் போதே இறந்துட்டாரு. அவரு புண்ணியத்தால எனக்கு இந்த வேலை கிடைச்சது. அப்பா தான் சப் இன்ஸ்பெக்டரா இருந்தே இறந்துட்டாரே, நம்பளாவது இன்ஸ்பெக்டார் ஆகிடனும்னு நினைச்சி தான் இப்போ உங்கள புடிச்சி படுத்திகிட்டு இருக்கேன்.“

“அப்பறம் ஏன் திருச்சிய விட்டு மாத்திப்போட்டாங்க?“

“ஒரு உதவி செஞ்சென் சார். ஒரு நல்ல மனுசர் மேல தேவையில்லாம கேஸ் போட்டு இருந்தாங்க. அதுல இருந்து அவரு தப்பிக்க உதவி செஞ்சேன் என்ன தூக்கிட்டாங்க.“

ஒரிரு வரியில் அவன் கதையை சொன்னான். அதனை மேற்கொண்டு ஆராய சத்தியேந்திரனுக்கு விருப்பம் இல்லை. “உதவி செய்யுறது கூட இந்த காலத்துல தப்பு தானோ..“என்றான் சத்தியேந்திரன்.
“தப்பு கிடையாது சார்..நம்ம செய்யுற உதவி நம்பள காப்பத்தும்“ என்றான் மைதின். இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே ஹாஸ்பிட்டல் வளாகத்தில் ஜீப் வந்து நின்றது. வந்ததை நியாபக படுத்தும் விதமாக டிரைவர் சீட்டில் இருந்த அந்த நபர் “சார்..“ என்று இழுத்து அழைத்தான்.

“என்ன ராஜன் வந்தாச்சா?“ என்றான் மைதின்.

“ஆமாம் சார்..“ என்று பதில் சொல்லிவிட்டு ஜீப்பை விட்டு இறங்கி கொண்டார் டிரைவர். மைதினும், சத்தியேந்திரனும் இறங்கினார்கள்.

“இந்த ஹாஸ்பிட்டல் தான் சார்..“

“இவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டல்ல எப்படி அரஸ்ட் ஆன பேசண்ட வச்சி டிரிட்மெண்ட் கொடுக்குறிங்க.“ என்று வினாவினான் சத்தியேந்திரன்.

“அந்த பொண்ணோட அப்பா கொஞ்சம் பெரிய கைக்கு எடுபுடி போல. இப்பவே பிரசர் வர ஆரம்பிச்சிடுச்சி அநேகமா உங்களுக்கும் பிரசர் கொடுத்து இந்த கேஸ்ச ஒன்னும் இல்லாம முடிக்க நினைப்பாங்க.“

“என்ன மாதிரி கேஸ் மைதின்.“

“வாங்க சார் பேசிகிட்டே போகலாம்“ என்று அழைத்தான் மைதின். இருவரும் ரிசப்சனை கடந்து லிப்டுக்காக காத்திருந்தனர். நர்ஸ் ஒருத்தி “சார் லிப்ட் அவுட்டாப் ஆர்டர் ஸ்டெப்ஸ்ல போங்க.“ என்றாள்.

தலையை ஆட்டிவிட்டு இருவரும் படிக்கட்டுக்களில் ஏறினார்கள். “கள்ளகாதல் கேஸ் சார்..“ என்றான் மைதின். சத்தியேந்திரன் தயங்கி படிகளிலேயே நின்றான். மைதின் ஒரு படி முன்னே நின்று திரும்பி “வாங்க சார்“ என்று அழைத்தான்.

“அப்படின்னு சொல்றாங்க? அந்த பொண்ண பார்த்தா அப்படி தெரியல..சூசைட் அட்டண்ட் பண்ணிருக்கு புள்ளையோட. புள்ளை ஸ்பாட் அவுட் இதுவும் சீரியஸ் கண்டிசன் தான் ஆனா காப்பாத்திட்டாங்க. மெண்டல் மாதிரி பிகேவ் பண்ணுது, அது உண்மையாவே மெண்டலா இல்ல மெண்டல் மாதிரி நடிக்குதான்னு நீங்க தான் செக் பண்ணி சொல்லனும்.“ என்றான் மைதின். பேச்சு சுவாரஸ்யத்தில் வந்ததே தெரியாமல் அறையின் முன்னே வந்து நின்றனர். சத்தியேந்திரனுக்கு தலை சுற்றிக்கொண்டு வந்தது பேசுவது எல்லாம் எக்கோ அடிப்பது போல இருந்தது. உருவங்கள் இரண்டாக மூன்றாக தெரிந்தது. “சா…ர்..சா..ர்..“ என்று தோளை வெகு நேரமாக குலுக்கி கொண்டு இருந்தான் மைதின். “ஆங்..“என்றான் சத்தியேந்திரன்.

“உள்ள வாங்க“ அழைத்து சென்றான். பெட்டில் படுத்துக்கொண்டிருந்த அந்த பெண் சிறு வயதாக தான் இருந்தாள். இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

“இவரு தான்மா டாக்டர் உன்ன சில கேள்வி கேட்பாரு நீ பதில் சொல்லு“ , என அந்த பெண்ணை பார்த்து மைதின் சொன்னான். அந்த பெண் சத்தியேந்திரனையே உற்று பார்த்தது. சத்தியேந்திரனுக்கு தான் நின்ற இடமே சுழன்றது, கைகள் நடுங்கியது. இதையெல்லாம் மைதின் நோட் செய்து கொண்டு தான் இருந்தான். என்ன நினைத்தான் என்று புரியவில்லை திடீரென்று அந்த அறையை விட்டு ஓட தொடங்கினான், படிகளில் இறங்கி ஹாஸ்பிட்டால் வளாகத்தை கடந்து ஓடினான். “சார்..சார்..“ கத்தி கொண்டு பின்னாலயே ஓடி சென்று பிடிக்க நினைத்தான் மைதின் முடியவில்லை. மூச்சு வாங்க நின்று கொண்டு இருந்தான் அப்போது பின்னால் இருந்து ஒரு கை அவன் தோள்களை தொட்டது.

“எஸ்கியூஇஸ் மீ..“ என்றாவரே. மைதின் திரும்பி பார்த்தான் வேறு ஒரு டாக்டர் நின்று கொண்டு இருந்தான். “ஒடுறது சத்தியேந்திரன் தானே“ என்றான் அந்த டாக்டர்.

“ஆமாம்“ என்றான் மைதின்.

“ஓ.. ஏன் இப்படி ஓடுறாரு“

இவனிடம் தெரியாது என்று சொல்ல கூடாது என்ன நினைத்தானோ என்னவோ மைதின் டக்கென்று ஒரு பொய்யை சொன்னான். “அவரோட ஓய்ப்க்கு ஏதோ எமர்ஜென்ஸி அதான்.“

“ஊஹிம்.. நல்ல டாக்டர் மூனு மாசமா சஸ்பென்சன்ல இருந்தாரே டியூட்டில ஜாயின் பண்ணிட்டாரா“ என்றான் அந்த டாக்டர்.

“என்ன சஸ்பென்சன்?“ மைதினுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“அவரோட கவனிப்புல இருந்த அவரோட பேசண்ட் சூசைட் பண்ணி இறந்துட்டாங்க.“

அந்த டாக்டர் சொன்னது மைதின் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ஜீப் முழுக்க அதே நியாபகத்துடன் சத்தியேந்திரன் காம்பவுண்டில் வந்து இறங்கினான்.
மூவரும் மூன்று திசையில் அமர்ந்துக்கொண்டு இருந்தனர். கண்மணி மெர்ஸியை பார்த்தாள்

“மேம் அந்த சூசைட் கேஸ்க்கும் சாருக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது அந்த பொண்ணு தான்.“ என்றாள்.

“ஆமாம் சார் எனக்கு அந்த கேஸ் பத்தி அவ்வளவா தெரியல?“ என்றாள் கண்மணி.

“எனக்கென்னவோ சார் மெண்டலி கொஞ்சம் டிஸ்டப்பன்சா இருக்காரோன்னு தோனுது. நீங்க வேணும்னா மெடிக்கல் கவுன்சில்ல பேசி அவருக்கு மெடிக்கல் லீவ் மதிரி எதுவும் கேட்கலாம் இல்ல“ என்றான் மைதின்.

கண்மணி திடுக்கிட்டு எழுந்தாள். “சார்..இப்போ தான் அவரு வேலைக்கு போயிருக்காரு, இந்த வேலை அவரு தொழிலா நினைச்சி செய்யல சேவையா நினைக்கிறாரு. மெடிக்கல் கவுன்சில்ல ஏற்கனவே அவருக்கு வார்னிங் கொடுத்துருக்காங்க அவரு செய்யாத தப்புக்கு. இப்போ திரும்ப எதும் பிரச்சனைன்னா அவர டிஸ்மிஸ் பண்ணிடுவாங்க அது அவரு உயிருக்கே ஆபத்தா முடியலாம்.“ என்றாள் கண்மணி.

“மேடம் எப்படி இருந்தாலும் இந்த கேஸ்ச அவரு ஹேண்ட்ல் பண்ணலன்னா அவங்களே கூப்பிட்டு விட தான் போறாங்க. எனி வே நாளை மறுநாள் இவரு இந்த கேஸ்ச எடுத்துக்கனும் இல்லன்னா நான் சொன்னது நிச்சயம் நடக்கும்.“ என்று எழுந்தான் மைதின்.

“கண்டிப்பா அவரு இந்த கேஸ்ச எடுப்பாரு. நான் உங்களுக்கு கால் பண்றேன் சார்.“

“ஓ.கே. மேடம் என் நம்பர் சார்கிட்ட இருக்கு. முதல வந்து அந்த கையெழுத்த மட்டுமாவது போட சொல்லுங்க.“ என்று வாசலை பார்க்க நடந்தான் மைதின்.

மெர்ஸியும் வாசலோடு வந்து நின்றாள். “நானும் கிளம்புறேன் மேடம்? பர்மிஷன் கூட போடாம வந்துட்டேன்.“ என்றாள்.

“மெர்ஸி இந்த விஷயத்துல நீயும் எனக்கு உதவி செய்யனும்? பிளீஸ்“ என்றாள் கண்மணி.

“என்ன மாதிரி உதவின்னு சொல்லுங்க மேடம். அவரு எனக்கு சார் மட்டும் இல்ல அண்ணன் மாதிரி. நான் என்ன வேணும்னாலும் செய்யுறேன். தயங்காம சொல்லுங்க“

“நான் யோசிச்சிட்டு உனக்கு கால் பண்றேன்.“

மெர்ஸியும் விடைபெற்று கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.
கண்மணி மீண்டும் வீட்டின் உள் வந்து சத்தியேந்திரன் படுத்து கிடந்த அறைக் கதவை திறந்தாள். வேர்க்க விறுவிறுக்க படுத்துகிடந்தான். ஏதோ ஒரு மூலையை பார்த்துக்கொண்டு பயந்து நடுங்கியது போல கிடந்தான். கண்மணி அருகே சென்று அவன் மேல் கைவைத்த நொடி “ஆ..“ என்று அலறி அடித்து எழுந்து திருதிருவென்று விழித்தான் லதா பயந்து போய் அறைவாசற்படியில் வந்து நின்றாள். கண்மணி உறைந்து போய் நின்றிருந்தாள்.​
 
Status
Not open for further replies.
Top Bottom