அத்தியாயம் 3
நிசப்தமான இரவில் ஒருவரின் பார்வை மற்றொருவரைத் தழுவி இருந்தாலும் இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர்..
அதில் முதலில் தன்னை மீட்டெடுத்தவள், "யாரு நீங்க..??"
அவளின் பேச்சில் அதிர்ந்தவன், "நிலா என்ன தெரியலையா..??" என்றதும்,
"தெரியாம தானே கேட்கறேன்" என்றாள் சற்றே அதிகாரமாக,
"ஏன் இப்படி பண்ற..??" என்றவனை அதற்கு மேல் பேச விடாமல் கதவை அடைத்தாள்..
"கதவ திறக்கற வரைக்கும் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்" எனச் சத்தமாகக் கூறினான்..
அந்த சத்தத்தைப் பொறுக்க முடியாமல் கதவைத் திறந்து, "அர்த்த ராத்திரியில தனியா இருக்க பொண்ணு வீட்டுக்கு வந்து கலாட்டா பண்றீங்களா..?? இங்கிருந்து இப்போ போகல எல்லாரையும் சத்தம் போட்டு எழுப்பி விட்டுறுவேன்" என்று தன் பங்கிற்குச் சண்டையிட,
"கத்து டி" என உள்ளே நுழைய முயன்றவனின் நெஞ்சினில் கை வைத்து வெளியே தள்ளி விட்டாள்..
"நிலானி ப்ளீஸ்..!!" என்று கெஞ்ச,
"முதல்ல கெளம்பு" என்றவளின் வார்த்தைகள் ஒருமைக்கு மாறியது..
வீட்டுக்குள் நுழைந்தவள் பின்னே சொல்வதைத் கேட்காமல் வலுக்கட்டாயமாக உள்ளே சென்றதும் அவளின் கோபம் அதிகமானது..அவள் பேச வரும் முன்பே கை நீட்டித் தடுத்தவன்,
"இந்த டைம்ல கீழ இறங்க பர்மிஷன் கிடையாது..ரெசார்ட்லையும் எனக்கு இடம் இல்ல..பைக்ல வந்தேன்..ரொம்ப குளிர் வேற,சோ ஒரு நாள் மட்டும் தங்கிக்கறேன்"
"முடியா.." சொல்ல வருபவளைச் சொல்ல விடாமல்,
"முடியாதுனு சொன்ன வெளிய தான் படுத்துப்பேன்..குளிர் ஒத்துக்காது எனக்கு ஏதாவது ஆனா நீ தான் பார்த்துக்கணும்" என்றதும்,
"ச்சே..தலையெழுத்து" எனத் திட்டிவிட்டு இடையில் நிறுத்திய வேலையைத் தொடர்ந்தாள்..
அவனின் கண்கள் அந்த வீட்டைச் சுற்றிலும் நோட்டமிட ஆரம்பித்தது..சிறிய அளவிலான வீட்டில் ஒருவர் மட்டுமே நிற்கக் கூடிய அளவில் சமையலறையும் அதன் பக்கத்தில் இரண்டு பேர் படுக்கும் அளவுக்கு அறையும்,அதே அளவில் இரண்டு அறைகளுக்கும் எதிராக ஹாலும் இருந்தது..
முதலில் சமையலறைக்குள் செல்ல அங்கே நூடுல்ஸ்,ராகி மாவு, ஓட்ஸ்,கோதுமை என ஒரு வாரத்திற்குத் தேவையான பொருட்கள் இருந்தது..பின் படுக்கை அறைக்குச் சென்றதும் அங்குக் கட்டில் இல்லாமல் மெத்தை மட்டுமே இருந்தது.. தலையணைகள் மட்டும் நான்கு இருந்தது..
"ரெஸ்ட் ரூம் போகணும்..எங்க இருக்கு..??" என்றவனுக்கு வெளியில் உள்ளது எனப் பேசாமல் சைகை செய்தாள்..
வீட்டின் பின்புறத்தில் அமைந்திருக்க, அதற்கு சில அடிகள் தொலைவில் சிறிய அளவிலான காய்கறிகள் தோட்டமும் இருந்தது..அதில் தக்காளி,மிளகாய், கத்திரிக்காய்,அவரைக்காய்,புதினா,கொத்தமல்லித் தழைகள் எனச் சொற்ப அளவில் நிறைந்திருந்தது..
எல்லாவற்றையும் பார்த்துவிட்டு
வீட்டுக்குள் வந்ததும்,
"ரொம்ப பசிக்குது டி..சாப்பாடு இருக்கா..??" என்று கேட்டதும் அவள் செய்த வேலையை முடித்துவிட்டு அவனுக்காக நூடுல்ஸ் தயார் செய்து கொடுத்தாள்..
அவள் எம்பிராய்டிங் செய்ததைப் பார்த்து, "இது எல்லாமே நீ பண்ணீயா..??சூப்பரா இருக்கு" என்றதுக்கும் அவளிடம் பதில் இல்லை..
அந்நேரம் அவளுக்கு மொபைலில் கால் வர,அதனை எடுத்தவள் மறுபக்கம் பேசியதைக் கேட்டதும் கட் பண்ணாள்..விடாமல் அந்நம்பர் மீண்டும் போன் செய்ய,
"ஒழுங்கா ஆர்டர் பண்றதுன்னா மெசேஜ் மட்டும் பண்ணு..தேவையில்லாம கால் பண்ண உன் நம்பரும் நீ பேசுனதையும் இன்ஸ்டகிராம்ல போஸ்ட் பண்ணி அசிங்கப்படுத்திடுவேன்" ஹர்ஷாவின் மீதிருந்த ஆத்திரம் அந்நபரின் மீது திரும்ப மறைமுகமாக இவனையும் சேர்த்து எச்சரிக்கை செய்தாள்..
"என்ன பண்ண..?? எப்படி இருக்க..??எப்போ இங்க வந்த..??" என்று கேட்டவனைப் பார்வையாலே எரித்தாள்..
"நான் எப்படி போன உங்களுக்கு என்ன..??காலையில முதல்ல கிளம்பற வேலையை பாருங்க" என அவள் படுக்கும் இடத்திற்குச் சென்றாள்..
அடக்கப்பட்ட கோபம்,வன்மம், எரிச்சல்,எதிர்பாராது நடந்த அவனின் வருகை என ஒட்டுமொத்தமாக அவளின் மனதைக் குழப்பமாக,ஆத்திரமாக மாற்றி வைத்ததும் நித்திரையைத் தொலைத்திருந்தாள்..
ஹர்ஷா அவன் கொண்டு வந்த பெட்சீட் தரையில் விரித்துப் படுத்ததும் மற்றொரு பெட்சீட் இல்லாமல் குளிரில் உடல் நடுக்கம் கண்டது..அவளைப் பார்க்க நிமிர்ந்தவன் அவளும் தூக்கமின்றி தவிப்பதை உணர்ந்தான்..அதற்கான காரணத்தையும் அவன் அறிந்திருந்தான்..காரணமே இவன் தான் என்பதால் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை..எதார்த்தமாக அவன் கவனிப்பதைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து திரைச்சீலையால் அவ்வறையை மறைத்தாள்..
குளிரின் வீரியத்தால் தூங்க முடியாமல் தவிர்த்தவன் தன் உடல் முழுவதும் படுத்திருந்த பெட்சீட்டால் கவர் செய்து அவளிடம், "நிலா ரொம்ப குளிர்ரா இருக்கு டா..எக்ஸ்ட்ரா பெட்சீட் இருந்தா கொடு" என்றவனுக்கு இல்லை எனப் பதில் அளித்தாள்..
"பெட்ல ஓரமாக நான் படுத்துக்கட்டுமா..??" என்றவனைத் தீயாக முறைத்தவள்,
"உள்ள விட்டதே அதிகம்..வேறு எதாவது பேசுனா வெளிய தான் படுக்கணும்" என்ற கடைசி வார்த்தைகளில் அழுத்தம் கொடுக்க அவனோ மீண்டும் ஹாலுக்கு வந்துவிட்டான்..
இவனின் நினைப்பை மறந்து மிகுதியான உடற்சோர்வினால் நெடுநேரம் கழித்து மெல்ல மெல்ல துயில் கொண்டாள்..ஏழு மணி அளவில் அலாரம் அடிக்க எழ முயன்றவளை விடாமல் வலிமையான இரு கரங்கள் அணைத்திருந்திருந்து..அதனுள் விடுபடத் துள்ளியவளின் உடல் உந்துதலில் முழித்தவனைத் தள்ளி விட்டு எழுந்தவள்,
"எதுக்கு இங்க வந்து படுத்த..??" மொத்த கோபத்தையும் திரட்டி கத்திக் கேட்க,
"ஷ்ஷ்ஷ்..அமைதியா இரு டி" என்று வாயில் கை வைத்தவனின் கரங்களைத் தட்டி விட்டாள்..
அவன், "ரொம்ப குளிர்னு சொன்னேன்..நீ தான் இரக்கமே இல்லாம படுக்கச் சொன்ன,குளிர் தாங்க முடியாம உள்ள வரும்போது நீ தூங்கிட்டு இருந்த, உன்கிட்ட கேட்ட கண்டிப்பா வேணாம்னு சொல்லுவேன்னு நானே படுத்துகிட்டேன்"
"பக்கத்தில வந்தது மட்டுமில்லாமல காரணம் வேற..!!இந்த நிமிஷமே இங்கிருந்து கெளம்புங்க" என்றவளிடம்,
தீர்க்கமான பார்வையில், "முடியாது" என்றதும் அவளின் ஆத்திரம் பன்மடங்கு உயர்ந்தது..
"இந்த டைம்ல கத்துனா உங்க மானம் தான் போகும்..ஒழுங்கா போய்டுங்க" என்று எச்சரிக்க,
"நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்க செகண்ட் சான்ஸ் கிடைச்சிருக்கு..அதை வீணாக்க விரும்பல..எங்க வேணும்னாலும் சொல்லு,கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணு..இனிமேலும் உன்ன இழக்க நான் தயாரா இல்ல"அவனின் முடிவில் அதாவது தன் குறிக்கோளில் எவ்வித மாற்றமுமின்றி தன்னம்பிக்கை நிறைந்திருந்தது..
ஒரு விதமான வலியுடன் கூடிய முறுவலுடன் அவளின் கடைக்குச் செல்ல தயாராக இருந்தாள்..தெளிவற்ற மனநிலையில் இருந்தவள் அதன் பின் அவனிடம் எவ்வித சண்டைக்கும் பேச்சுக்கும் இடம் கொடுக்காமல் போனாள்..
எப்பொழுதும் உதவி கேட்கும் அந்நபரிடம் சென்றவள், "அண்ணா போகலாமா..??" என்று கேட்டதும் சரி என்றார்..
அவனைக் கடந்து சென்றவளைக் கண்டும் ஏதும் பேசமால் அந்நபரிடம் உதவி கேட்டதை அவள் அறியாத வண்ணம் தன் ஓரப் பார்வையில் கவனித்துக் கொண்டிருந்தான்..அவர்கள் சென்ற சில நிமிடங்களில் அவளறியாத வகையில் தொடர்ந்து, மறைந்து மறைந்து போக ஒருவழியாக அவளின் கடையைக் கண்டதும் பிரமித்தான்..
அவன் உள்ளே வந்த சமயம் கடையினுள் யாரும் இன்றி அவள் மட்டுமே இருக்க அவனைக் கண்டு எரிச்சல் அடைந்தாள்..அப்பார்வை அவனை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பதற்கு அடையாளமாக அவனின் இதழோரம் மென்னகை பூத்தது.. காலையிலிருந்து குழப்பமாக, வெறுமையாக இருந்தவளுக்கு அவன் பின்தொடர்ந்து வருவான் என்று சிந்தனைகள் ஓடவில்லை..
தன்னுடைய சன் க்ளாஸை கழட்டியவன் கடையை நோட்டமிட்டு, "வாவ்.. கலெக்ஷன் சூப்பரா இருக்கு..நம்ம கம்பெனிக்கு உன்னோட பங்களிப்பு அதிகமாகவே இருக்கப் போகுது.. கஸ்டமர்களுக்கு திருப்தி தர மாதிரியும் இருக்கு" என்றான் ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு இருந்தவனின் கண்களில் தெரிந்த லைட் எல்லோ வித் பிங்க் கான்ட்ராஸ்ட் ப்ளவுஸில் அமைந்திருந்த சேலையை எடுத்துவன், "இதை பேக் பண்ணிடு" என்றவன் அடுத்த கலெக்ஷனை காணச் சென்றான்..
திடீரென்று யோசனை தோன்றியதாக, "நம்ம கடைக்கு நானே ப்ரமோஷன் பண்றேன் டி" என இன்ஸ்டாகிராமில் லைவ் ஆப்சனை ஆன் செய்யும் முன்,
"உங்க தயவுல தான் வாழணும்னு சொல்றீங்களா..??" என்றதும் அவனின் முகம் சட்டென இறுகியது..லைவ் ஆப்சனை அணைத்து விட்டு,
"ஏன் அப்படி சொல்ற..??"
"நீங்க ப்ரமோஷன் பண்ணா தான் இந்த கடைக்கு பப்ளிசிட்டி கிடைக்கும்னா அது எனக்குத் தேவையில்லை" என்றாள் இறுகிய குரலில்,
அதே நேரம் கடைக்குள் வாடிக்கையாளர்கள் வரவும் அவர்கள் கேட்பதை எடுத்துக் காட்ட,அதிலிருந்த ஒரு பெண் அவனிடம் சென்று,
"நீங்க கார் ரேஸர் ஹர்ஷா தானே..??" என்று கேட்டதும் அங்கிருந்த அனைவரின் பார்வையும் இவனின் மீது படிந்தது..
அப்பெண்ணோ மிகுதியான உற்சாகத்தில் கேட்டதும் மறுக்காமல் ஆம் என்றான்..உடனே சந்தோஷமாக அவனின் அனுமதியுடன் சில புகைப்படங்களை எடுத்து விட்டு எதுவும் வாங்கமால் சென்றனர்..
நிலானி அவனிடம், "இங்கிருந்து கெளம்புங்க..உங்கள பார்த்துட்டு நிறைய பேர் வந்தா இங்க வாங்கறவங்களையும் விட மாட்டாங்க" என்றதும் அவனும் சென்றான்..
தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டு வீட்டிற்குத் தேவையான பொருட்கள், காய்கறிகள் மற்றும் ஸ்னாக்ஸ் வகைகள் என மொத்தமாக வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றான்..ஐந்து மணியளவில் அவளின் கடைக்குச் சென்று அவளை அழைக்க,அவளோ இரவு பதினொன்று ஆகும் எனக் கூறி அவனைப் போக வைத்தாள்..
எப்பொழுதும் கிளம்பும் பேருந்தில் ஏறி அமர்ந்தவளின் அருகில் அவனும் உட்கார்ந்தான்..அவனை நகரச் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்ற ரீதியில் அமைதியாக இருந்தாள்..வீட்டுக்குள் நுழைந்ததும்,
"எதுக்கு டி இவ்ளோ கஷ்டப்பட்டு இங்க வர..??"
"அது என்னோட விருப்பம்" எனச் சாப்பாடு தயார் செய்யச் சென்றாள்..
"நான் வாங்கிட்டு வந்துட்டேன்..வா சாப்பிடலாம்" எனச் சமையல் செய்ய விடாமல் வற்புறுத்தி அமர வைத்தான்..
அவள் ஏளனப் புன்னகையுடன், "இதுல உங்க கிட்ட மயங்கற மாதிரி மருந்து ஏதும் கலந்து இருக்கீங்களா..??"
"என்ன டி லூசு மாதிரி பேசற..!! இப்படியெல்லாம் இருக்கா..??" என்று அவளிடம் வாதாட,
"நானாவது கேட்டேன்..நீங்கச் செஞ்சி இருக்கீங்களே..!! அப்போ யாரு லூசு..!!" என்றதும் அவளைப் பார்க்க,
"எல்லாருக்கும் ஒரு வீக்னஸ் இருக்கும்..என்னோட பேரன்ஸ் அந்த விஷயத்தில அதிகமாக நம்புவாங்க..அதான்" என்று பேச்சை நிறுத்த,
"ஓ..!!அதான் என்னோட வாழ்க்கையை அழிச்சிட்டீங்க..!!" என்றவளின் குரலில் வெறுமையே அதிகமாக இருந்தது..அவன் பேசாமல் இருக்க,
அவள், "சாப்பாட்டுக்கு மத்த திங்க்ஸ் வாங்க எவ்ளோ ஆச்சு..??"
"கம்மி தான் சாப்பிடு" என்றதும் அவள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவனைக் கூர்ந்து நோக்கினாள்..நீ சொன்னால் தான் சாப்பிடுவேன் என்ற பிடிவாதம் அவளின் பார்வையிலிருந்தது..
அவனும் இம்முறை மறைக்காமல், "ஐயாயிரம்"
"இங்க தங்கினது,நைட் அண்ட் மார்னிங் சாப்பாடு, எல்லாத்தையும் விடக் குளிருக்கு இதமாக நைட் ஹக் பண்ணிட்டு தூங்குனதுக்கு எல்லாம் இரண்டாயிரம் லெஸ் பண்ணிட்டு மீதி காசு தரேன்" என்றதும் அவனின் முகம் கோபத்தில் சிவந்தது..
அவள் விடாமல், "இது அதிகம்னு நினைக்காதீங்க..!!ஒரு நைட்டுக்கு ஆயிரம் தானே எடுத்துக்கறேன்..அதுவும் இல்லாம தூங்கினப் பிறகு என்கிட்ட எந்த எதிர்ப்பும் வந்து இருக்காது..என்னோட உடம்புல உங்க கையும் எங்கெல்லாமோ பட்டு இருக்கும்..அதுக்கு எல்லாம் காசு கேட்கல..ஜெஸ்ட் ஹக் பண்ணதுக்கு மட்டும் தான்" என்று சாப்பிட்டுக் கொண்டு பேச, அவனோ நிமிராமல் அவன் ஆசையாக அணைத்துக் கொண்டதை விலை பேசியதும் அவனின் கோபம் அதிகமானது..
"என்மேல எனக்குத் தன்னம்பிக்கை அதிகம்..ஆயிரம் ரூபாய்க்குக் கூட வொர்த் இல்லாமையா இருப்பேன்" என்றதும் தான் தாமதம் அவள் சாப்பிட்டுக்கொண்டிருந்த சாப்பாட்டை வேகமாகத் தட்டி விட்டான்..
அவளோ பொறுமையாக, "சாப்பாடு அருமை உங்களுக்கு தெரியல போல..!!இந்த ஒருவேளை சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்..சரி ஓகே இத விடுங்க..காசு வேணுமா இல்லை மூணு நாள் ஹக் பண்ணி தூங்குறீங்களா..??"
"நிலா இதுக்கு மேல பேசாத..!!" என்றான் அடக்க முடியாத சினத்துடன்,
"பணம் என்கிட்ட இல்லை..சோ ஹக் பண்ணிக்கோங்க..நானே உங்கள ஹக் பண்ணிட்டு தூங்கறேன்..திரும்பவும் சொல்றேன் எங்க வேணும்னாலும் கை வச்சிக்கோங்க..அதுக்கெல்லாம் காசு கேட்க மாட்டேன்" என மகிழ்ச்சியான சிரிப்போடு அவனின் கரங்களை எடுத்து அவளின் இடையில் வைத்து அணைக்க முயன்றவளைத் தள்ளி விட்டான்..
"ம்ப்ச் என்னப்பா பிரச்சினை..!! பணம் அதிகம்னு தோணுதா..சரி ஐநூறு ரூபாய்க்கு குறைச்சிக்கறேன்..இப்போ வரியா..??" என்றதும் கட்டுக்குள் இருந்த கோபம் கட்டவிழ்ந்து அவளின் குரல்வளையைப் பிடித்தவன்,
"இன்னொரு முறை இப்படிச் சொன்ன..!!" என்று மிரட்டிவிட்டு கையை எடுக்க,
"அச்சோ சாரி..உங்களுக்கு முதல் முறைனால கூச்சப்படுறீங்க..எனக்கு இது பழகிடுச்சி..மத்தவங்கள கம்பேர் பண்ணும் போது நீங்க பராவல்ல..!!அவனுங்க கிட்ட ஹக் மட்டும் பண்ணுங்கடானு சொன்னா என்னனென்மே பண்ணுவாங்க..நான் தான் அவங்கள தூங்க வைக்கறதுக்குள்ள ஒரு வழி ஆகிடுவேன்..அவங்க கிட்ட ஆயிரம் ரூபாய் கேட்டா இரண்டாயிரமா தருவாங்க..ஆனா நீங்க தான் ஆயிரம் ரூபாய்க்கே சலிச்சுக்கிறீங்க..!!இதுல நான் வேற டிஸ்கவுண்ட் கொடுத்தும் என்னை மிரட்டுறீங்க..!!நீங்க முதல்ல கெளம்புங்க..கடையிலும் சரி இங்கையும் சரி என்னோட வியாபாரத்தை கெடுக்கறீங்க..!!!" நீண்ட புன்னகை முகமாக இறுதியில் சலிப்பாகக் கூறியவளைக் கண்டதும் சினத்துடன் வெளியே சென்றான்..
அவன் அங்கே நின்றிருந்தால் அவளின் பேச்சு எல்லை கடந்து இருக்கும் என்பதை அறிந்து வெளியேறினான்..அவன் சென்றதும் நிறைவான புன்னகையுடன் அவளின் மெத்தையில் படுத்து கண் அயர்ந்தாள்..
அவனைக் கண்ட பொழுதிலிருந்து உள்ளுக்குள் இருந்த மிகுதியான ஆத்திரம் அவளை உடலளவிலும் மனதளவிலும் வலுவை இழக்கச் செய்தது..எனவே முதலில் அவளின் கோபத்தைக் கட்டுப்படுத்த எடுத்துக்கொண்ட ஆயுதமே அவள் தான்..அதற்காகவே தன்னையே இழிவுபடுத்தும் நோக்கில் தீவிரமாக இருந்தாள்..தன் வாழ்க்கையை பற்றி நினைக்க,அவளுக்கே வெறுப்பாக இருந்தது..
கோபமாக வெளியே வந்தவனின் மனதை முழுவதும் அவளின் வார்த்தைகளே ஆக்கிரமித்திருந்தது..அவளைச் சமாதானம் செய்து அழைத்துக்கொண்டு போகலாம் என நினைத்திருந்தவனுக்கு அவளின் பேச்சில் கடந்த காலத்தை மறக்கவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்ததும் சோர்வடைந்தான்..
தங்கள் வாழ்க்கையை எண்ணி யோசனையில் மூழ்க அந்நேரம் அவளின் வீட்டை நோக்கி கைக்குழந்தையுடன் வந்தவர்களைப் பார்க்க,இவனைக் கண்டு மென்னகையுடன் கடந்து கதவைத் தட்டினார்கள்..
"நிலா" என்று கதவைத் தட்ட,அவரின் குரல் கேட்டு உடனே அவள் கதவைத் திறக்க,
"உள்ள வாங்க முரளி அண்ணா,அக்கா நீங்களும் வாங்க" என்று அழைத்துக்கொண்டு போக,இவனும் உள்ளே சென்றான்..
"என்னக்கா இந்த நேரத்துல.??"
"நாளைக்குப் பையனுக்கு மொட்டை அடிக்க பழனி போறோம்..அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தோம்"
அவரின் மனைவி, "நீயும் வரலாம்ல..??"
"இல்லக்கா..நிறைய ஆர்டர் வந்து இருக்கு..பென்டிங் முடிச்சிட்டு கொரியர் பண்ணுனும்..அப்பறம் நான் ஆர்டர் பண்ணது எல்லாம் வேற மாநிலத்திலிருந்து இங்க வரணும்..சோ என்னால எங்கேயும் போக முடியாது கா..நீங்கப் பத்திரமாக போய்ட்டு வாங்க" என்று தன் நிலையை விளக்கிக் கூற அவர்களும் சரி என்றனர்..
"இவரு யார் மா..??" என்று ஹர்ஷாவை நோக்கி கை நீட்ட,
"அவரு வீட்டில தான் அண்ணா வேலை செஞ்சேன்" என்றதும் அகன்ற கோபம் மீண்டும் வந்தது..
"நாளைக்கு முடிஞ்சா தேயிலை பறிக்க போ மா" என்றார் பணிவாக.,
"ஒன்னும் பிரச்சினை இல்ல..பத்து மணிக்கு மேல தான் கடைக்கு போகணும்..நான் போறேன்" என்று சம்மதித்தாள்..
அவர்களும் சிறிது நேரம் பேசி விட்டு தங்களது வீட்டுக்குச் சென்றவர்களைப் பாதி வழியில் மடக்கி நிலாவை பற்றி விசாரிக்க அவர்களுக்குத் தெரிந்த,அவள் கூறிய தகவல்களைப் பகிர்ந்தனர்..அவர் கூறியதை நினைத்துக்கொண்டு நடந்தவனின் நினைவில்,
அவன், "நிலாவ உங்களுக்கு எவ்ளோ நாளா தெரியும்..அவ குடும்பத்தைப் பத்தி ஏதாவது தெரியுமா..??"
முரளி, "நாங்க வந்த இரண்டு நாள் கழித்து நிலா வந்துட்டாங்க..அந்த பொண்ணுக்கு யாரும் இல்லைனு சொன்னாங்க" என்று சொல்லி முடித்ததும் குழந்தை அழ,அவனிடம் விடைபெற்றுச் சென்றனர்..
நேராக அவளிடம் வந்தவன் அவளின் கரத்தை அழுத்தமாகப் பிடித்து, "உனக்கு யாரும் இல்லையா..??"
"ஆமா..இதுல என்ன சந்தேகம்..!! யாராவது இருந்தா இப்படி ஊர் ஊரா சுத்திட்டு இருப்பேன்னா சார்" என்றவள் "சார்" வார்த்தையை அழுத்தமாக உச்சரித்தாள்..
"நம்ம வீட்டுக்கு போலாம் வா..உன்னை ரொம்ப நல்லா பார்த்துக்கறேன்" என்றான் மிகத் தீவிரமான தெளிவான குரலில்,
"ஸப்பா..!!சீக்கிரமே போங்க..ஆனால் என்ன எதிர்பார்க்கிறது ரொம்பவே தப்பு..!!" தோள்களைக் குலுக்கி விட்டுச் சென்றாள்..
சரியாக ஐந்து நாட்கள் கழித்து அவள் குளித்துவிட்டு உள்ளே வர,ஹர்ஷாவும் அவளின் எதிரில் வந்தவனின் கையில் இரண்டு கப் பழச்சாறு இருக்க,
அவளிடம் ஒன்றை நீட்டியவன், "நான் கெளம்பறேன்..அதுக்கான ட்ரீட்" என்றதும் வெற்றிப் புன்னகையுடன் அவளும் அதனை வாங்கிப் பருக ஆரம்பித்தாள்..
அவள் வேறு உடை மாற்ற உள்ளே நுழைய இம்முறை அவனின் இதழோரம் இளநகை நீண்டது..சரியாக பத்து நிமிடங்களில் அவளுக்குத் தலை சுற்றல் எடுத்ததும் மெத்தையில் அப்படியே மயங்கி விட்டாள்..
அவளருகில் அமர்ந்தவன், "சாரி டி..எனக்கு வேற வழி தெரியல" என்று நெற்றியில் முத்தமிட்டு அவன் அழைத்திருந்த காருக்காக காத்திருந்தான்.. டிரைவர் வந்ததும் குறுஞ்செய்தி வர அவளைத் தூக்கிக் கொண்டு செல்லும் வழியில் எதிராக வந்தவர்கள் எல்லாம் என்னவென்று கேட்க காய்ச்சல் அதிகமானதால் மயங்கி விட்டாள் என்றதும் அவளுக்காகப் பரிதாபப்பட்டனர்..
ஐந்து நாட்களாக அவளோடு அவன் இருந்ததால் அவனின் மீதும் எவருக்கும் சந்தேகம் வரவில்லை..அது மட்டுமல்லாமல் அவள் அதிகமாக வேலை செய்து உடலை வருத்திக் கொள்பவள் எனச் சிலருக்குத் தெரியும் என்பதால் அவர்களும் மற்றவர்களுக்கு அவளின் நிலையைப் புரிய வைக்க, அவனுக்கு இன்னும் எளிதாகிப் போனது..முரளியும் குடும்பத்தோடு பழனிக்கு போனவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை..
அவளை காரில் அமர வைத்து விட்டு வீட்டுக்குச் சென்று அங்கிருந்த அனைத்தும் பேக் செய்துக் கொண்டு வந்ததும், காரை பின் தொடர்ந்து இவனும் சென்றான்..
மறுபக்கம் கடையிலிருந்த அனைத்தும் வாகனத்தில் ஏற்றப்பட்டு கோயம்புத்தூரை நோக்கிச் சென்றது.. ஏற்கனவே ஹர்ஷா கடைக்கான வாடகை மற்றும் வீட்டுக்கான வாடகை கொடுத்து விட்டான் என்பதால் யாரும் கேள்வியும் கேட்கவில்லை..அவ்வப்பொழுது முழிப்பு தட்டாமல் இருக்க பழச்சாற்றில் மயக்க மருந்தை கலந்து இருமுறை கொடுத்தான்..
அவனின் செயல்பாடுகளால் உள்ளத்தில் கலக்கம் இருந்தாலும் இதை விட்டால் வேறு வழி இல்லை என்பதால் அதனையே செய்தான்..மாலை ஆறு மணிக்கு வீட்டுக்குள் வந்ததும் அவளுக்கு ஏற்கனவே தயாராகி இருந்த அறையில் அவளைப் படுக்க வைத்துவிட்டு ஹாலில் அமர்ந்திருந்தான்.. அவளின் கடையிலிருந்த துணிகளும் ஓர் அறையில் அடுக்கி வைக்கப்பட்டது..
ஹாலில் அவள் விழிப்பதற்காகக் காத்திருந்தவன்,நெடுநேரம் ஆனதால் அவளின் அறைக்குள் சென்று அருகில் அமர்ந்து கொண்டான்..அவள் எழுந்ததும் நடக்கும் விபரீதங்களை எண்ணியவன் சற்று பயந்தும் போனான்..
...ஸ்பரிசம் தொடரும்..