ஹாய் டியர்ஸ்,
ஒருவழியாக நிழல்நிலவு முடிவுக்கு வந்துவிட்டது. இந்த கதையில் அர்ஜுன் என்னும் அபிமன்யு ஒரு உளவாளி. மிக நெருக்கமான கட்டமைப்பைக் கொண்டு செயல்பட்ட ஒரு நிழல் உலக அமைப்பை உடைக்க உளவுத்துறையிலிருந்து அனுப்பப்பட்டவன். ஏழு ஆண்டு காலம் அந்த அமைப்போடு ஒன்றி உறவாடி, ஸ்திரமான பதவியை அடைந்து, அவர்களுடைய தொழில் மற்றும் வியாபார கட்டமைப்பை காட்டிக் கொடுத்ததோடு, அந்த அமைப்பை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட அதிகாரிகளுக்கு உதவியவன்.
இது சாத்தியமா, ஏழு ஆண்டு காலம் ஒரு அமைப்பில் உயர் பதவியில் இருக்க முடியுமா என்றால், நிச்சயமாக முடியும் என்பதுதான் உண்மை.
இந்திய உளவுத்துறை "ரா" அமைப்பில் 1999 முதல் 2005 வரை ஆறு ஆண்டு காலம் உயர் பதிவில் இருந்த
"திவான்(தேவன்) சந்த் மாலிக்" என்னும் முப்பது வயது இளைஞன் டபுள் ஏஜெண்டாக செயல்பட்டு, உளவுத்துறை ரகசியங்களை வெளிநாடுகளுக்கு கடத்தினான் என்பது வரலாறு.
"ரா" போன்றா ஒரு நாட்டின் உளவுத்துறையிலேயே ஒருவனால் ஊடுருவ முடிகிறது என்றால், என்னதான் கட்டுக்கோப்பாக இருந்தாலும், கோர்த்தா சாதாரண மாஃபியா கேங் மட்டுமே. அதில் ஒருவனால் தாக்குப்பிடிக்க முடியாதா என்ன?
இந்த கதையில் ஆரம்பத்திலிருந்தே 'ப்ளூ ஸ்டார்' என்னும் ஒரு கேரக்டர் வந்து கொண்டே இருக்கும். அவருக்கு கோர்த்தாவில் மற்ற யாரோடும் தொடர்பு இருக்காது. சில நேரங்களில் அர்ஜுன் அவரிடம் என்னை இங்கிருந்து விடுவித்து விடுங்கள் என்று சண்டை போடுவதாக கூட சொல்லியிருப்பேன். அதுதான் வாசகர்களுக்கு நான் கொடுத்த க்ளூ. கடைசி அத்தியாயம் வரைக்கும் அந்த க்ளூவை அடிக்கடி ஹிட் செய்துக் கொண்டே தான் இருந்தேன். ஆனாலும் வாசகர்களிடமிருந்து ஒருமுறை கூட கேள்விகள் எழவில்லை. அது எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது.
(நானும் ரௌடிதான் மொமண்ட்)
அடுத்து, அவ்வப்போது அர்ஜுன் சிலரை, ப்ளூ ஸ்டாரிடம் அனுப்பிக் கொண்டே இருப்பதாக சொல்லியிருப்பேன். அவர்களுக்கெல்லாம் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தால், அனைவரும் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.
ஆர்த்தி அர்ஜுன் பற்றிய விளக்கம்.
ஆர்த்தியை கொண்டுதான் அர்ஜுன் கோர்த்தாவிற்கு அறிமுகமானான். அர்ஜுன் அவளை தன்னுடைய வேலைக்கு பயன்படுத்திக்கொள்ள மட்டுமே எண்ணியிருந்தான். ஆனால் ஆர்த்தி அவனை மிகவும் நேசித்தாள். அதன் காரணமாகவே அவர்களுக்குள் திருமணமும் நடந்தது. அவனைப் பொறுத்தவரை அது ஒரு போலி திருமணம் மட்டுமே.
'பாம்பு திங்கும் ஊருக்கு போனால் நடு கண்டம் நமக்கு என்று பந்தியில் அமர்ந்துவிட வேண்டும்' என்று ஒரு வழக்கு உண்டு. இல்லை என்றால் நாம் தனித்து தெரிவோம். அப்படி தனித்து தெரிந்துவிட்டால் தனக்கு சங்கு ஊத வேண்டியதுதான் என்று அர்ஜுனுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் தான் அவன் அந்த திருமணத்தை செய்துக் கொண்டான். செய்துக் கொண்ட திருமணத்திற்கு உண்மையாகவும் இருந்தான். இல்லையென்றால் சங்கு... சந்தேகமே எழ விடக் கூடாதல்லவா!
எது எப்படி இருந்தாலும் குழந்தை அவனுடைய பிளானில் இல்லவே இல்லை. கண்டிப்பாக ஆர்த்தி கர்பமாகிவிடக் கூடாது என்று கவனமாகத்தான் இருந்தான். ஆனால் நடப்பதெல்லாம் அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இருக்குமா என்ன?
ஆர்த்தி கர்பம் தரித்தது அவன் எதிர்பாராத ஒன்று. அதன்பிறகுதான் அவன் மனநிலையில் சலனம் ஏற்பட துவங்கியது. பிரச்சனைகள் முடிந்த பிறகு ஆர்த்தியிடம் கலந்து பேசி முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றுதான் எண்ணியிருந்தான். குழந்தையை கைவிடும் எண்ணம் இல்லை. ஆர்த்தியின் மீது அதீத காதலொன்றும் இல்லை என்றாலும் நடந்துவிட்ட அந்த திருமணத்தை உண்மையாக்கிக்கொள்ளும் எண்ணம் இருந்தது. அதிலும் மண் விழுந்தார் போல் ஆர்த்தி நிறைமாத கர்ப்பிணியாக போய் சேர்ந்துவிட்டாள். அதுவும் அவன் மரணத்தை தனதாக்கிக் கொண்டு.
அந்த குற்ற உணர்ச்சியும் கோபமும் அவனுக்குள் இருந்தது. கூடவே ஆர்த்தியின் மீது காதலும் உண்டானது. தான் ஒரு இன்டெலிஜென்ஸ் ஏஜென்ட் என்கிற உண்மையையும் தாண்டி அவனுக்குள் பர்சனலான வெஞ்சன்ஸ் பகவான் மீது உண்டானது. அதற்கு பிறகு நடந்தது எல்லாம் கதையில் விளக்கமாக படித்திருப்பீர்கள்.
அவன் ஆரம்பத்தில் ஆர்த்தியை வைத்து எப்படி சுக்லாவிடம் நெருங்கினானோ, அதே போல் மிருதுளாவை வைத்து பகவானிடம் நெருங்கிவிடலாம் என்பதுதான் அவனுடைய பிளான். ஆனால் மனம் இல்லாத மனிதன் இல்லை. அவனும் மனிதன் தானே? ஏழு முழு ஆண்டுகளில் அவனுடைய மனித குணமும் வெளிப்பட்டது. அது வெளிப்படவில்லை என்றால் இந்த கதையில் காதலே இல்லை... காதல் இல்லையென்றால் என்னை பொறுத்தவரை அது கதையே இல்லை. வெறும் கட்டுரைதான்... கட்டுரை படிக்க சுவாரஸ்யமாக இருக்காதல்லவா? எனவே ஆங்காங்கே ஏதேனும் லாஜிக்கல் மிஸ்டேக்ஸ் இருந்தால் அதை ஒதுக்கிவிட்டு கதையோட்டத்தை அனுபவியுங்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம், மாஃபியா உலகம் எனக்கு சற்றும் சம்மந்தம் இல்லாதது. அதை பற்றி எழுத வேண்டும் என்றல் என்னுடைய கற்பனை மட்டும் போதாது. ரிசர்ச் தேவை... ரெஃபரன்ஸ் தேவை... கதையில் சொல்லப்பட்ட சில ஆப்பரேஷன்ஸ் நிஜ மாபியாக்கள் மற்றும் உளவுத்துறை சம்மந்தப்பட்ட புத்தகங்கள், டாக்குமென்டரிஸிலிருந்து ரெபரென்ஸ் எடுத்து நம் கதைக்கு தகுந்தாற் போல் மாற்றியிருக்கிறேன். இல்லையென்றால் கதை கண்றாவியாகத்தான் இருந்திருக்கும்.
முடிவு:
கதையின் முடிவு சிலருக்கு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த கதையை இப்படித்தான் முடிக்க முடியும். மாறாக அவர்கள் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வது போல் காட்டினால் நிச்சயம் அபத்தமாகத்தான் இருக்கும். தன் பெற்றோரின் மரணத்துக்கு காரணமானவனுடன் எந்த பெண்ணும் வாழ விரும்ப மாட்டாள். அவளால் முடியாது... அது நம் அனைவருக்குமே தெரியும். அப்படி இருக்கும் போது கதைதானே என்று ஹாப்பி எண்டிங் கொடுக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக இவ்வளவு நாள் கஷ்ட்டப்பட்டு எழுதிய கதையை கடைசியில் சொதப்ப எனக்கு மனமில்லை.
ஆனால் வாழ்க்கை இப்படியே போய்விடாது. இன்னொரு காலகட்டத்தில், இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர்கள் சந்திக்கலாம். அப்படி சந்திக்கும் போது அவர்களுக்கிடையே நடக்கும் சம்பவங்கள் நிகழ்வுகள் அவர்களுக்குள் மனமாற்றத்தை கொண்டு வரலாம். அதை இந்த கதையின் அடுத்த பாகமாக எழுத எண்ணியிருக்கிறேன். அது முழுக்க முழுக்க லவ் அண்ட் லவ் ஒன்லி கதையாக அமையும். நோ மோர் வயலன்ஸ்...
சரி, வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் விளக்கம் கொடுக்கிறேன்.
கடைசியா ஒரு முக்கியமான விஷயம்.... ஸ்பெஷலான விஷயமும் கூட...
ஆரம்பத்திலிருந்தே இந்த கதையை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்
என்னுடைய அன்பு வாசகர்களுக்கு கோடி நன்றிகள். என்னுடைய ப்ளஸ் அண்ட் மைனஸை ஏற்றுக் கொண்டு என்னோடு பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. ஸ்டோரி லேட் அப்டேட் வரும் போதெல்லாம் கோபப்பட்டாலும் கூடவே இருந்தீங்க. கமெண்ட்ல கேட்டு கேட்டே என்ன எழுத வச்சீங்க... அந்த கமெண்ட்ஸ் எல்லாம் இல்லைன்னா இன்னும் லேட் பண்ணியிருப்பேன். சோ
இந்த கதை வெற்றிகரமா முடிஞ்சதுல என்னுடைய வாசகர்களான உங்களுக்கு நிறைய பங்கு இருக்கு.... சோ திரும்பவும் நன்றி...
வழக்கம் போல
இந்திரா கடைசி வரைக்கும் எபிஸோட் படிச்சு கரெக்ஷன் பார்த்துகிட்டே இருந்தாங்க. தேங்க்ஸ் எல்லாம் சொல்ல மாட்டேன்... ஆனா அவங்க இல்லைன்னா இந்த கதை முடிஞ்சிருக்காதுன்னு மட்டும் சொல்லிக்கிறேன்...
அப்புறம் என்ன ஃபிரண்ட்ஸ், கதை எப்படி இருந்தது? பிடிச்சிருந்ததா? அடுத்த பார்ட் எழுதுவோமா இல்ல இதோட நிறுத்திக்குவோமா? எதுவா இருந்தாலும் ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போங்க...
அப்புறம் அந்த லைக் பட்டன் பாவம் ரொம்ப நாளா சும்மாவே இருக்கு... அதையும் அப்படியே அழுத்திவிட்டுட்டு போங்க...
YouTubeல ஆடியோ நாவல் போட்டுக்கிட்டு இருக்கோம். பார்த்து பண்ணுங்க... சப்ஸ்க்ரிப்ஷன் கம்மியா இருக்குன்னு நாவல் ரீட் பண்ணற அம்மணி நிறுத்திட்டாங்கன்னா ஹெட் செட் மாட்டிகிட்டு கதை கேட்டுகிட்டே வேலை செய்ய முடியாது... லிங்க் கீழ கொடுக்கறேன்... Subscribe பட்டனை அழுத்திட்டு போங்க... நாவல்ஸ் நோட்டிபிகேஷன் வரும்....
https://www.youtube.com/channel/UCWGiZ6KIcVCSk9QyFOXR71A
ஹாப்பியா... சேஃபா இருங்க... மீண்டும் சந்திப்போம்...
நட்புடன்
நித்யா கார்த்திகன்