- Messages
- 140
- Reaction score
- 533
- Points
- 93
வானத்தில் முழு நிலவு ஒளிர்ந்து கொண்டிருக்க மொட்டை மாடி சுவற்றில் சாய்ந்து கொண்டு, நிலவோடு சேர்ந்து அவர்கள் திருமணத்தை பார்க்கக் கூடியிருந்த முகிலினங்களையே பார்த்திருந்தான் கெளதம் சித்தார்த்.
அப்போது கையிலருந்த தாலியை அவனது கண் முன்னே ஆட்டியபடியே அவன் முன்னே வந்து அழகாய் சிரித்தது அவனது காதல்.
“நான் ரெடி கெளதம்”
அவள் சொன்ன விதத்திலேயே அவனது இதழ்களில் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. அவளது விழிகளில்தான் எத்தனை காதலும்? எத்தனை சந்தோஷமும்?
“சல்வார்லே இருக்கேன். உங்களுக்கு ஓகே தானே கெளதம்? இல்லை ஸாரி மாத்தணுமா?” கேட்டவளை அள்ளிக் கொண்டு முத்தமிட விழைந்த மனதை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது அவனுக்கு.
“இதிலேயே சும்மா தேவதை மாதிரி இருக்கே” என்றபடியே தாலியை கையில் வாங்கிக் கொண்டான் கெளதம் சித்தார்த்.
"இப்போ நீ இதை வாங்கிக்கலைன்னா, நீ போற இடத்துக்கு எல்லாம் ஒரு பொக்கே வரும். ஆயிரம்ன்னாலும் சரி ரெண்டாயிரம்னாலும் சரி நீ வாங்கிக்குற வரைக்கும் உன்னை என் பூங்கொத்துகள் துரத்தும்” அவளை தன்னிடமிருந்து ஒற்றை பூங்கொத்தை வாங்கிக் கொள்ள வைக்க இவன் மிரட்டி நான்கு நாட்கள் இருக்குமா? ஒரு வாரம் இருக்குமா?
இன்று அவளே வந்து அவன் முன்னால் வந்து அவனது கையால் தாலி வாங்கிக்கொள்ள மன்றாடுவாள் என்றெல்லாம் ஒரு மணி நேரம் முன்னால் கூட நினைக்கவில்லை.
அவன் ஒரு மிகப் பெரிய குற்றத்தை செய்திருக்கிறான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரிகிறது. அதே நேரத்தில் அவன் தன் மீது வைத்திருக்கும் காதலில் எந்த குற்றமும் இல்லை என்று புரிகிறது. அவன் அன்றொரு நாள் சொன்னதைப் போல அவன் இருக்கும் வரை அவனது இதயம் அவளுக்காகவே துடித்துக் கொண்டிருக்கும் என்பதும் தெரிகிறது.
அடுத்த நிமிடத்தில் வாழ்க்கை அவர்களுக்கென எதை சேமித்து வைத்திருக்கிறது என்ற கேள்விக்கான எந்த பதிலும் இல்லை. அவளுடனான இந்த வாழ்கை எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மணி நேரங்கள் தொடரப் போகிறது என்பதற்கான எந்த உறுதியும் இல்லை.
இருந்தாலும் அவன் முன்னால் திருமணம் வேண்டி நிற்பது அவனது சஞ்சனா எனும் ஒற்றை எண்ணம் அவனை சந்தோஷ கடலில் திளைக்க வைத்துக் கொண்டிருந்தது. தாலி கட்டப் போவது கெளதம் எனும் எண்ணம் அவளை மேகத்தில் நடை பயில செய்து கொண்டிருந்தது.
ஒரு முறை வானத்தை பார்த்து விட்டு அவள் முகம் பார்த்தான் கெளதம். அதை விழிகளால் ரசித்து ரசித்து பருகிக் கொண்டான்.
வானத்தை பார்த்து கரம் கூப்பி விட்டு அவன் முகம் பார்த்தாள் சஞ்சனா. சொல்லி வைத்தார் போல் சிறு தூரலை சிதற வைத்தனர் அவனது முகிலினத் தோழிகள்.
முகம் நிறைய சிரிப்புடனும், மனம் நிறைய காதலுடனும் அவள் கழுத்தில் அந்த திருமாங்கல்யத்தை அணிவித்தான் கெளதம் சித்தார்த்.
அடுத்த நொடி அவளை இழுத்து தன்னோடு சேர்த்துக் கொண்டான் “லவ் யூ சஞ்சனா”. அழுகு புன்னகையுடன் அவனோடு ஒட்டிக் கொண்டு அவனது மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் சஞ்சனா.
“எனது காதல் எனது கை சேர்ந்தே விட்டதா? எனது சஞ்சனா எனது மனைவியாகி விட்டாளா?” உண்மை இப்போதுதான் மெல்ல மெல்ல அவனுக்குள்ளே இறங்கியது.
“ஸோ?. சஞ்சனா தி கிரேட் கைனகாலிஜிஸ்ட் என் பொண்டாட்டி” கலகலவென சிரித்தாள் அவள். அவன் முகத்தில் ரசிப்பின் ரேகைகள்.
அவள் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டான் அவள் எத்தனை நாட்கள் அவளது புகைப்படத்தை மட்டுமே பார்த்து ரசித்து ரசித்து ஏங்கி இருப்பான். இப்போது நிஜம் அவனது கைகளில் தவழ, சின்ன வெட்க புன்னகையுடன் அவனை விலக்கி விட்டு விலகினாள் அவள்.
“ஹேய்” என்றான் ஏக்கமும் தவிப்புமாக “பக்கத்திலே வா சஞ்சனா”
“அதெல்லாம் முடியாது” என்றபடியே அவள் பின்நோக்கி நடக்க அவன் அவளை நோக்கி வர சுவற்றோடு அவளை தடுத்து கைகளால் அணைக் கட்டிக் கொண்டான்.
“இனிமே என்கிட்டேர்ந்து தப்பிக்கவெல்லாம் முடியாது. கைனகாலிஜிஸ்ட் மேடம். டைரெக்டா இனிமே ஃபர்ஸ்ட் நைட்தான்” என அவளது நெற்றியில் துவங்கியவன் அவளது இரண்டு கண்களிலும் தனது இதழ்களை ஒத்தி எடுத்தான்.
“கௌதம்” என சிணுங்கியவவளின் இடைவளைத்து தன்னோடு சேர்த்துக் கொண்டான். அதன் பின் அவளது கன்னங்கள் அந்த அதிர்ஷ்டத்தை பெற்றன. அங்கிருந்து வழுக்கி அவன் அவள் இதழ்களை அடைந்த நேரத்தில் அவனை விலக்கி நிறுத்தினாள் அவள்.
“எவனாவது வீடியோ எடுக்கப் போறான் பாருங்க. அப்புறம் கெளதம் சித்தார்த் வீடியோ நெட்லே வைரல் ஆகிடும்”
“ஸோ?” என்று அவளைப் பார்த்து கண் சிமிட்டினான் “இங்கே வேண்டாம் பெட்ரூம் போய்டலாம்னு சொல்றே” என்று மலர்ந்து சிரித்தவனின் பார்வை அவளது கழுத்தில் இருந்த தாலியின் மீது படற இப்போது அவனது முகத்தில் நிறையவே யோசனைகள்.
தாலிக் கயிறு பெண்களிடம் மட்டும்தான் மாயம் செய்யுமா என்ன?
இதுவரை அவளை காதலித்து மட்டுமே வந்து வரையில், நீ எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று சூளுரைத்துக் கொண்டிருந்த வரையில் இல்லாத ஏதோ ஒரு பயமும் பொறுப்பும் அவனுக்குள் வந்துவிட்ட உணர்வு.
“சஞ்சனா” இதமாய் அழைத்தான் அவளை.
“ம்?” என்றாள் அவன் மார்பில் மறுபடியும் முகம் புதைத்த படியே.
“நாளைக்கு மறுநாள் என்னோட பிறந்த நாள்டா”
“ஹேய்.. கிரேட்.....எனக்கு உங்க பர்த்டே சரியா ஞாபகம் இல்லை கெளதம். இந்த தடவை அசத்திடுவோம் விடுங்க”
“அதை விட முக்கியமா நம்ம கல்யாணத்தை அன்னைக்கு ரிஜிஸ்டர் பண்ணிடலாம் சஞ்சனா. நான் அதுக்கான ஏற்பாடு எல்லாம் பண்றேன்” என்றான் யோசனையுடன்.
“அவ்வளவு அவசரமா கெளதம்?” கேட்டாள் அவன் கண்களுக்குள் பார்த்து.
“எனக்கு கண்டிப்பா அவசரம். நாளைக்கு எனக்கு ஏதாவது ஒண்ணு ஆகிட்டா என்னோட சொத்து முழுக்க லீகலா உனக்கு வரணும் இல்லையா?”
“கெளதம் எந்த நேரத்திலே என்ன பேசறீங்க?” அவள் கொஞ்சம் அதிர்ந்து போய் கேட்க
“இல்லடா கண்ணா. நான் சீரியஸாதான் சொல்றேன். கோடிக் கணக்கிலே கொட்டி கிடக்கு. உனக்கு அதைப் பத்தின எல்லா விவரமும் உடனே தெரியறது நல்லது. சீக்கிரம் எல்லாமே சொல்றேன் உனக்கு” அவள் நெற்றி முட்டினான் அவள் கணவன் “இப்போ இருக்கும் நிலையிலே என்னையே என்னாலே நம்ப முடியலை சஞ்சனா. நானே என்னை எப்போ வேணும்னாலும் அழிச்சிக்க வாய்ப்பு இருக்கு”
“கெளதம்!!!” அவள் திகைக்க அழகாய் சிரித்தவன்
“கொஞ்சம் வேலை இருக்கு. வா கீழே போகலாம்” என விறுவிறுவென கீழே இறங்கினான். இரண்டு நிமிடங்கள் முன்னால் இருந்த அவனது மனநிலையில் இப்போது தலைகீழ் மாற்றம் வந்திருந்தது.
கீழே வந்தவன், அறை சுத்தமாக இருப்பதை கவனித்து விட்டு தனது மடிக்கணினியை பிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“சாப்பிட்டீங்களா கௌதம்?” அவன் பின்னாலிருந்து அவனது கழுத்தை கட்டிக் கொண்டாள் மனைவி
“இல்லையே. மறந்துட்டேன்” என்றான் திரையில் தெரிந்த ஏதேதோ எழுத்துக்களில் மூழ்கியவனாக.
நிமிடங்கள் கடக்க கையில் அவனுக்கான உணவுடன் அறைக்குள் நுழைந்தாள் சஞ்சனா. இன்னமும் மடிக்கணினியையே காதலித்துக் கொண்டிருந்தான் அவன்.
“சாப்பிட்டு வேலை எல்லாம் பார்ப்பீங்களாம்” என அவனை எழுப்பி மேஜையில் அமர வைத்தாள். அங்கே இருந்த இனிப்பை ஒரு ஸ்பூன் எடுத்து அவனது வாயருகே கொண்டு வந்து நீட்டினாள்.
“இன்னைக்கு நமக்கு கல்யாணம் பாஸ். அதுக்காக” அதை வாங்கிக் கொண்டவன் இருக்கையின் பின்னால் சாய்ந்து கொண்டு அவள் முகம் பார்த்து ரசித்தான் இன்னொரு ஸ்பூனில் இனிப்பை எடுத்து அவளுக்கு ஊட்டினான் அவன்.
“அச்சோ போச்சு போச்சு உங்களுக்கு கையிலே அடி பட்டிருக்கு. சாப்பிட முடியாது. அதனாலே நானே எல்லாம் ஊட்டி விடுவேனாம்”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஸ்பூனாலே நல்லா சாப்பிடலாம்”
“இல்லை இல்லை ரொம்ப ரொம்ப கஷ்டம்” என அவசரமாக மறுத்து உணவை எடுத்து அவனுக்கு ஊட்டி விடும் மனைவியை ரசிக்காமல் இருக்கவே முடியவில்லை அந்த ராக்ஷசனால்.
வாழ்கை முழுவதும் இப்படி ஒரு வரம் கிடைத்தால் அது எத்தனை பெரிய ஆனந்தம்? என்று தோன்றியதுதான் அவனுக்கு. அதே நேரத்தில் அதெல்லாம் சாத்தியம் இல்லை எனும் இன்னொரு எண்ணமும் அதனோடே ஒட்டிக் கொண்டு வந்தது.
“நீயும் சாப்பிடு சஞ்சனா” அவன் சொல்ல
“இதோ எனக்கும் சேர்த்துதான் எடுத்திட்டு வந்தேன். உங்களுக்கு ஊட்டி விட்டு சாப்பிடுவேன்” என்றாள் அவன் தலை கோதி
“வேண்டாம் சஞ்சனா.. இதெல்லாம் பழக வேண்டாம்..அப்புறம் உனக்குத்தான்.... ” அவன் சொல்லி முடிப்பதற்குள்
“இப்போ என்ன ரெண்டு நாளிலே நான் போயிடுவேன் அதானே சொல்லப் போறே. சரி போ..ய்..யா.. ஆனா போற வரைக்கும் சந்தோஷமா இருந்திட்டு போயேன். அதிலே என்ன பிரச்சனை உனக்கு?” அவள் சட்டென ஒருமைக்கு தாவ மலர்ந்து சிரித்தே விட்டான் நமது சதுரங்க நாயகன்.
இருவரும் மாற்றி மாற்றி ஊட்டிக் கொண்டு ஒரு வழியாக சாப்பிட்டு முடிக்க
“நேத்து மாதிரி இன்னைக்கும் வீ வில் ஹேவ் எ டான்ஸ் கெளதம்” என்றாள் அவன் கழுத்தை கட்டிக் கொண்டு.
“தூங்கு சஞ்சனா. நான் இப்போ வேறே மூட்லே இருக்கேன்” தவிர்க்கத் தான் பார்த்தான்.
“என்ன மூடா இருந்தாலும் நாளைக்கு பார்த்துக்கலாம். இந்த ஒரு நாளை எனக்குக் குடுங்க கெளதம். ப்ளீஸ்..” கெஞ்சினாள் சஞ்சனா. தளர்ந்தான் அவன்.
விளக்கை அணைத்து விட்டு இரவு விளக்கை ஒளிர விட்டு அவர்கள் பாடலை ஒலிக்க விட்டாள்.
இசையோடு இணைந்து குழைந்து அவன் கரத்தோடு தனது கரம் கோர்த்துக் கொண்டாள். அவனை தன்னோடு சேர்த்துக் கொண்டாள். அவள் பயணிக்க ஆரம்பிக்கும் பாதை எங்கே சென்று நிற்கும் என்பது அவனுக்கு கண்டிப்பாகத் தெரியும். அந்தப் பாதையின் பயணத்தை தவிர்க்கத் தான் பார்த்தான்.
ஆனாலும் அவனைத் தவிர்க்க விடாமல் தவிக்க விட்டது அவனது காதல். இத்தனை நாட்கள் அவனை ஏங்க மட்டுமே வைத்த அவனது காதல், இன்று அவனை ஆராதித்தது. அவன் எல்லாவற்றுக்கும் அணைக்கட்டப் பார்த்தும் அவனை அணைத்தே நின்றது அது.
அவனுக்கு சில நாட்களுக்கு முன்னால் ஏற்பட்ட அந்த தீக்காயங்களுக்கு கூட அவளது இதழ் ஒத்தடங்கள் இன்று மருந்தானது.
ஒரு முறை, இரண்டு முறை, மூன்று முறை என அவர்களின் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்க, முதல் முறையாக இத்தனை நெருக்கத்தில் இருந்த பெண்மை எனும் பெருமழை அவனை ஆட்கொண்டது.
முத்தம் கொடுத்தாள். கொடுத்ததை அவனை ஏமாற்றியே திரும்ப எடுத்தாள்.
எத்தனை முயன்றும் ஒரு கட்டத்துக்கு மேலாக, தன்னை ரசித்து ரசித்து ஆராதித்த காதலை துதிக்காமல் இருக்கவே முடியவில்லை அவனால்.
அணைத்தான் சிரித்தாள். கொஞ்சினான் கெஞ்சினாள். ரசித்தான் உருகினாள். சுவாசித்தான் சிலிர்த்தாள். சிரித்தான் சிலாகித்தாள். கடைசியில் இருவரும் ஒருவருக்குள் ஒருவராக கரைந்து மகிழ்ந்து போனார்கள்.
சில மணி நேரங்களுக்கு பிறகு அசந்து களைத்து உறங்கி விட்டிருந்தாள் பெருமையும் மகிழ்ச்சியுமாய் அந்த அரக்கனை தனதாக்கிக் கொண்ட தேவதை.
அவனுக்குத்தான் உறங்கும் வரம் வாய்க்கவில்லை. மனம் எங்கெங்கோ சுற்றித் திரிய ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு ஞாபகத்தில் அவனது இதழோரம் வந்து நின்றது ஒரு வெற்றிப் புன்னகை.
அடுத்த நிமிடம் தனது மடிக்கணினியை எடுத்துக் பால்கனிக்கு வந்தவன், படுக்கை அறையின் கண்ணாடிக் கதவை வெளிப்பக்கமாக பூட்டினான்.
அவள் நன்றாக உறங்குகிறாள் என்பதை கவனித்துக் கொண்டு, தனது குரல் அவளுக்கு கேட்காது என்பதையும் உறுதி செய்து கொண்டு மடிக்கணினியை உயிர்பித்தான்.
சில நிமிடங்களில் அவனது திரையில் வந்தான் நந்தா! அந்த அறையின் மங்கலான வெளிச்சத்தில் தரையில் உறங்கிக் கிடக்கும் நந்தா.
“கெளதம் சித்தார்த்” சீறிய இவனது குரல் அந்த அறையின் சுவற்றில் பட்டு எதிரொலித்தது. இவனது குரலில் அரண்டு போய் எழுந்தான் நந்தா.
“என்னடா தூக்கமா? அதெல்லாம் வேறே வருதா உனக்கு? வரக் கூடாதே தப்பாச்சே?” என்றான் கேலி கலந்த குரலில்.
அரை குறை உறக்கத்தில் அவன் ஏதும் புரியாமல் சுற்றிச் சுற்றிப் பார்க்க
“என்னடா முழிக்குறே? ஓ... தூக்கக் கலக்கமா சாருக்கு? இப்போ நான் சொல்றே விஷயத்தை கேட்டா உனக்கு ஜென்மத்துக்கு தூக்கம் வராது ” என்றவன் “எனக்கும் சஞ்சனாவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சுடா பைத்தியக்காரா” என்றான் குரலில் சூடு பறக்க.
தலையில் இடி ஒன்று விழுந்து விட்டதைப் போல் அதிர்ந்து போய் எழுந்து அமர்ந்தான் நந்தா.
எத்தனை நாட்கள் உண்ணா விரதம் இருக்க முடியும்?. இன்று கொஞ்சம் சாப்பிட்டு இருந்தான் அவன். அதனாலேயே பேசும் சக்தி கிடைத்திருந்தது அவனுக்கு.
“என்னடா நம்ப முடியலையா?” வாய்விட்டுச் சிரித்த கௌதமின் சிரிப்பொலி அந்த அறை முழுவதும் எதிரொலிக்க தவிப்புடன் கத்தினான் நந்தா.
“டேய்.. பொய் சொல்லாதே. அப்படி ஒண்ணு நடக்க வாய்ப்பே இல்லை”
“நடந்திடுச்சேடா. நடந்திடுச்சே. என்னாலேயே நம்ப முடியலை. நான் உயிருக்குள்ளே வெச்சு பூஜை பண்ண என் தேவதை தன்னாலே என்னைத் தேடி வந்து கல்யாணம் பண்ணிட்டாளே” என்று சொன்னவன் சத்தமாக சிரித்தான்.
“இதிலே ஒரு பெரிய விஷயம் என்னன்னா இந்தக் கல்யாணத்துக்கு ஆசீர்வாதம் பண்ணி தாலி எடுத்துக் கொடுத்தது உங்க தாத்தா. அது உங்க பாட்டியோட தாலின்னு கேள்விப் பட்டேன். இது எப்படி இருக்கு?”
“டேய்... பொய்தான் சொல்றே. நீ கண்டிப்பா பொய்தான் சொல்றே” அவன் பைத்தியம் பிடித்தவன் போல் கத்த..
“நம்ப மாட்டியா நீ? நம்பித்தான் ஆகணும். இது சத்தியம். எ..ன் அ..ம்..மா மே...லே ச..த்,, தி..ய..ம்” கடைசி வரியில் அவன் கொடுத்த அழுத்தத்தில் ஆடிப் போனான் நந்தா.
தனது அன்னை மீது பொய் சத்தியம் செய்ய மாட்டான் கெளதம் என நன்றாக அறிந்தவன் நந்தா.
“அப்படி என்றால் நிஜமாகவே திருமணம் முடிந்து விட்டதா?” உயிர் அறுந்தது நந்தாவுக்கு. அவனுக்கு இது எத்தனை பெரிய அடி என்பதை நன்றாக புரிந்தவன் கெளதம் சித்தார்த்.
உண்மை உள்ளுக்குள் இறங்க, நந்தா உடைந்து போவது புரிந்தது கௌதமுக்கு. அவன் தரையில் ஓங்கி ஓங்கி குத்துவது தெரிந்தது. ஆற்ற மாட்டாமல் சுவற்றில் சென்று முட்டிக் கொள்வது தெரிந்தது. கடைசியில் செயலற்றுப் போய் அவன் தேம்பித் தேம்பி அழுவதும் புரிந்தது நமது சதுரங்க வீரனுக்கு.
“அழறியாடா நந்தா? அழு. தேம்பித் தேம்பி அழு. அன்னைக்கு என்னைப் பார்த்து இடுப்பிலே கையை வெச்சிட்டு சிரிச்சியே இப்போ தேம்பித் தேம்பி அழு. காலம் பூரா நீ இழந்ததை நினைச்சு தேம்பித் தேம்பி அழு” சீறினான் கெளதம்.
அதன் பிறகு அவன் தவிப்பதை, அவன் அழுவதை சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தவன் காட்சியை அணைத்து விட்டு இருக்கையின் பின்னால் சாய்ந்து கொண்டான்.
சில நொடிகளில் பால்கனியின் கண்ணாடிக் கதவு படபடவென தட்டப் படுவது தெரிந்து கண்திறந்தான். கதவுக்கு அந்தப் பக்கம் நின்றிருந்தாள் சஞ்சனா.
இதழோரம் கூடிய புன்னகையுடன் கதவை திறந்தான் அவன். வெளிறிப் போய்க் கிடந்தது அவள் முகம்.
“நான் கொஞ்சம் கண் அசந்து தூங்கிட்டேன்” என்றாள் பயமும் கலக்கமும் கலந்த குரலில்.
“ஸோ?” அழகாய் மலர்ந்து சிரித்தான் கெளதம் “டாக்டர் மேடம் எனக்கு காவலா நிக்கணும்ன்னு நினைச்சீங்களா?”
அவனது சிரிப்பில் கொஞ்சம் நிம்மதியான சுவாசம் எழுந்தது அவளிடம்
“என்ன சஞ்சனா நீ ? அதுக்குள்ளே நான் கொலை பண்ணி முடிச்சிட்டேன்னு பயந்துட்டியா என்ன ? ச்சே ச்சே அப்படி எல்லாம் அவசரமா எல்லாம் கொலை பண்ணிட முடியாது. அதை ரசிச்சு ரசிச்சு பண்ணனும்”
அவன் படு இயல்பாக சொல்ல பக்கென்றது அவளுக்கு.
“அப்படி எல்லாம் சொல்லாம கொள்ளாம எதுவும் செய்திட மாட்டேன் கவலைப் படாதே. அப்படி நான் சொல்லிட்டு போகும் போதும் உன்னாலே என்னை எதுவும் செய்ய முடியாது. ஏன்னா நான் கெளதம் சித்தார்த்”
அவளைப் பார்த்து அவன் கண் சிமிட்டி அழுத்தம் திருத்தமாக சொன்ன விதத்தில் அவளுக்குள் பய அமிலங்கள்
“அதுக்கு முன்னாடி எனக்கு நம்ம சொத்து சம்மந்தமா சில வேலைகள் இருக்கு. அதை எல்லாம் முடிச்சிட்டுத்தான் இது. கண்டிப்பா உன்கிட்டே சொல்லிட்டுத் தான் போவேன். அந்தக் கடமையும் எனக்கு இருக்கு. ஸோ அது வரை நிம்மதியா தூங்கு” என்று அவள் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு நகர்ந்தான் கெளதம்.
“டீ குடிக்கப் போனால் உன்னிடம் சொல்லி விட்டு போகிறேன்” எனும் ரீதியில் பேசி விட்டு செல்பவனை விக்கித்துப் பார்த்திருந்தாள் அவன் மனைவி.
அப்போது கையிலருந்த தாலியை அவனது கண் முன்னே ஆட்டியபடியே அவன் முன்னே வந்து அழகாய் சிரித்தது அவனது காதல்.
“நான் ரெடி கெளதம்”
அவள் சொன்ன விதத்திலேயே அவனது இதழ்களில் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. அவளது விழிகளில்தான் எத்தனை காதலும்? எத்தனை சந்தோஷமும்?
“சல்வார்லே இருக்கேன். உங்களுக்கு ஓகே தானே கெளதம்? இல்லை ஸாரி மாத்தணுமா?” கேட்டவளை அள்ளிக் கொண்டு முத்தமிட விழைந்த மனதை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது அவனுக்கு.
“இதிலேயே சும்மா தேவதை மாதிரி இருக்கே” என்றபடியே தாலியை கையில் வாங்கிக் கொண்டான் கெளதம் சித்தார்த்.
"இப்போ நீ இதை வாங்கிக்கலைன்னா, நீ போற இடத்துக்கு எல்லாம் ஒரு பொக்கே வரும். ஆயிரம்ன்னாலும் சரி ரெண்டாயிரம்னாலும் சரி நீ வாங்கிக்குற வரைக்கும் உன்னை என் பூங்கொத்துகள் துரத்தும்” அவளை தன்னிடமிருந்து ஒற்றை பூங்கொத்தை வாங்கிக் கொள்ள வைக்க இவன் மிரட்டி நான்கு நாட்கள் இருக்குமா? ஒரு வாரம் இருக்குமா?
இன்று அவளே வந்து அவன் முன்னால் வந்து அவனது கையால் தாலி வாங்கிக்கொள்ள மன்றாடுவாள் என்றெல்லாம் ஒரு மணி நேரம் முன்னால் கூட நினைக்கவில்லை.
அவன் ஒரு மிகப் பெரிய குற்றத்தை செய்திருக்கிறான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரிகிறது. அதே நேரத்தில் அவன் தன் மீது வைத்திருக்கும் காதலில் எந்த குற்றமும் இல்லை என்று புரிகிறது. அவன் அன்றொரு நாள் சொன்னதைப் போல அவன் இருக்கும் வரை அவனது இதயம் அவளுக்காகவே துடித்துக் கொண்டிருக்கும் என்பதும் தெரிகிறது.
அடுத்த நிமிடத்தில் வாழ்க்கை அவர்களுக்கென எதை சேமித்து வைத்திருக்கிறது என்ற கேள்விக்கான எந்த பதிலும் இல்லை. அவளுடனான இந்த வாழ்கை எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மணி நேரங்கள் தொடரப் போகிறது என்பதற்கான எந்த உறுதியும் இல்லை.
இருந்தாலும் அவன் முன்னால் திருமணம் வேண்டி நிற்பது அவனது சஞ்சனா எனும் ஒற்றை எண்ணம் அவனை சந்தோஷ கடலில் திளைக்க வைத்துக் கொண்டிருந்தது. தாலி கட்டப் போவது கெளதம் எனும் எண்ணம் அவளை மேகத்தில் நடை பயில செய்து கொண்டிருந்தது.
ஒரு முறை வானத்தை பார்த்து விட்டு அவள் முகம் பார்த்தான் கெளதம். அதை விழிகளால் ரசித்து ரசித்து பருகிக் கொண்டான்.
வானத்தை பார்த்து கரம் கூப்பி விட்டு அவன் முகம் பார்த்தாள் சஞ்சனா. சொல்லி வைத்தார் போல் சிறு தூரலை சிதற வைத்தனர் அவனது முகிலினத் தோழிகள்.
முகம் நிறைய சிரிப்புடனும், மனம் நிறைய காதலுடனும் அவள் கழுத்தில் அந்த திருமாங்கல்யத்தை அணிவித்தான் கெளதம் சித்தார்த்.
அடுத்த நொடி அவளை இழுத்து தன்னோடு சேர்த்துக் கொண்டான் “லவ் யூ சஞ்சனா”. அழுகு புன்னகையுடன் அவனோடு ஒட்டிக் கொண்டு அவனது மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் சஞ்சனா.
“எனது காதல் எனது கை சேர்ந்தே விட்டதா? எனது சஞ்சனா எனது மனைவியாகி விட்டாளா?” உண்மை இப்போதுதான் மெல்ல மெல்ல அவனுக்குள்ளே இறங்கியது.
“ஸோ?. சஞ்சனா தி கிரேட் கைனகாலிஜிஸ்ட் என் பொண்டாட்டி” கலகலவென சிரித்தாள் அவள். அவன் முகத்தில் ரசிப்பின் ரேகைகள்.
அவள் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டான் அவள் எத்தனை நாட்கள் அவளது புகைப்படத்தை மட்டுமே பார்த்து ரசித்து ரசித்து ஏங்கி இருப்பான். இப்போது நிஜம் அவனது கைகளில் தவழ, சின்ன வெட்க புன்னகையுடன் அவனை விலக்கி விட்டு விலகினாள் அவள்.
“ஹேய்” என்றான் ஏக்கமும் தவிப்புமாக “பக்கத்திலே வா சஞ்சனா”
“அதெல்லாம் முடியாது” என்றபடியே அவள் பின்நோக்கி நடக்க அவன் அவளை நோக்கி வர சுவற்றோடு அவளை தடுத்து கைகளால் அணைக் கட்டிக் கொண்டான்.
“இனிமே என்கிட்டேர்ந்து தப்பிக்கவெல்லாம் முடியாது. கைனகாலிஜிஸ்ட் மேடம். டைரெக்டா இனிமே ஃபர்ஸ்ட் நைட்தான்” என அவளது நெற்றியில் துவங்கியவன் அவளது இரண்டு கண்களிலும் தனது இதழ்களை ஒத்தி எடுத்தான்.
“கௌதம்” என சிணுங்கியவவளின் இடைவளைத்து தன்னோடு சேர்த்துக் கொண்டான். அதன் பின் அவளது கன்னங்கள் அந்த அதிர்ஷ்டத்தை பெற்றன. அங்கிருந்து வழுக்கி அவன் அவள் இதழ்களை அடைந்த நேரத்தில் அவனை விலக்கி நிறுத்தினாள் அவள்.
“எவனாவது வீடியோ எடுக்கப் போறான் பாருங்க. அப்புறம் கெளதம் சித்தார்த் வீடியோ நெட்லே வைரல் ஆகிடும்”
“ஸோ?” என்று அவளைப் பார்த்து கண் சிமிட்டினான் “இங்கே வேண்டாம் பெட்ரூம் போய்டலாம்னு சொல்றே” என்று மலர்ந்து சிரித்தவனின் பார்வை அவளது கழுத்தில் இருந்த தாலியின் மீது படற இப்போது அவனது முகத்தில் நிறையவே யோசனைகள்.
தாலிக் கயிறு பெண்களிடம் மட்டும்தான் மாயம் செய்யுமா என்ன?
இதுவரை அவளை காதலித்து மட்டுமே வந்து வரையில், நீ எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று சூளுரைத்துக் கொண்டிருந்த வரையில் இல்லாத ஏதோ ஒரு பயமும் பொறுப்பும் அவனுக்குள் வந்துவிட்ட உணர்வு.
“சஞ்சனா” இதமாய் அழைத்தான் அவளை.
“ம்?” என்றாள் அவன் மார்பில் மறுபடியும் முகம் புதைத்த படியே.
“நாளைக்கு மறுநாள் என்னோட பிறந்த நாள்டா”
“ஹேய்.. கிரேட்.....எனக்கு உங்க பர்த்டே சரியா ஞாபகம் இல்லை கெளதம். இந்த தடவை அசத்திடுவோம் விடுங்க”
“அதை விட முக்கியமா நம்ம கல்யாணத்தை அன்னைக்கு ரிஜிஸ்டர் பண்ணிடலாம் சஞ்சனா. நான் அதுக்கான ஏற்பாடு எல்லாம் பண்றேன்” என்றான் யோசனையுடன்.
“அவ்வளவு அவசரமா கெளதம்?” கேட்டாள் அவன் கண்களுக்குள் பார்த்து.
“எனக்கு கண்டிப்பா அவசரம். நாளைக்கு எனக்கு ஏதாவது ஒண்ணு ஆகிட்டா என்னோட சொத்து முழுக்க லீகலா உனக்கு வரணும் இல்லையா?”
“கெளதம் எந்த நேரத்திலே என்ன பேசறீங்க?” அவள் கொஞ்சம் அதிர்ந்து போய் கேட்க
“இல்லடா கண்ணா. நான் சீரியஸாதான் சொல்றேன். கோடிக் கணக்கிலே கொட்டி கிடக்கு. உனக்கு அதைப் பத்தின எல்லா விவரமும் உடனே தெரியறது நல்லது. சீக்கிரம் எல்லாமே சொல்றேன் உனக்கு” அவள் நெற்றி முட்டினான் அவள் கணவன் “இப்போ இருக்கும் நிலையிலே என்னையே என்னாலே நம்ப முடியலை சஞ்சனா. நானே என்னை எப்போ வேணும்னாலும் அழிச்சிக்க வாய்ப்பு இருக்கு”
“கெளதம்!!!” அவள் திகைக்க அழகாய் சிரித்தவன்
“கொஞ்சம் வேலை இருக்கு. வா கீழே போகலாம்” என விறுவிறுவென கீழே இறங்கினான். இரண்டு நிமிடங்கள் முன்னால் இருந்த அவனது மனநிலையில் இப்போது தலைகீழ் மாற்றம் வந்திருந்தது.
கீழே வந்தவன், அறை சுத்தமாக இருப்பதை கவனித்து விட்டு தனது மடிக்கணினியை பிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“சாப்பிட்டீங்களா கௌதம்?” அவன் பின்னாலிருந்து அவனது கழுத்தை கட்டிக் கொண்டாள் மனைவி
“இல்லையே. மறந்துட்டேன்” என்றான் திரையில் தெரிந்த ஏதேதோ எழுத்துக்களில் மூழ்கியவனாக.
நிமிடங்கள் கடக்க கையில் அவனுக்கான உணவுடன் அறைக்குள் நுழைந்தாள் சஞ்சனா. இன்னமும் மடிக்கணினியையே காதலித்துக் கொண்டிருந்தான் அவன்.
“சாப்பிட்டு வேலை எல்லாம் பார்ப்பீங்களாம்” என அவனை எழுப்பி மேஜையில் அமர வைத்தாள். அங்கே இருந்த இனிப்பை ஒரு ஸ்பூன் எடுத்து அவனது வாயருகே கொண்டு வந்து நீட்டினாள்.
“இன்னைக்கு நமக்கு கல்யாணம் பாஸ். அதுக்காக” அதை வாங்கிக் கொண்டவன் இருக்கையின் பின்னால் சாய்ந்து கொண்டு அவள் முகம் பார்த்து ரசித்தான் இன்னொரு ஸ்பூனில் இனிப்பை எடுத்து அவளுக்கு ஊட்டினான் அவன்.
“அச்சோ போச்சு போச்சு உங்களுக்கு கையிலே அடி பட்டிருக்கு. சாப்பிட முடியாது. அதனாலே நானே எல்லாம் ஊட்டி விடுவேனாம்”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஸ்பூனாலே நல்லா சாப்பிடலாம்”
“இல்லை இல்லை ரொம்ப ரொம்ப கஷ்டம்” என அவசரமாக மறுத்து உணவை எடுத்து அவனுக்கு ஊட்டி விடும் மனைவியை ரசிக்காமல் இருக்கவே முடியவில்லை அந்த ராக்ஷசனால்.
வாழ்கை முழுவதும் இப்படி ஒரு வரம் கிடைத்தால் அது எத்தனை பெரிய ஆனந்தம்? என்று தோன்றியதுதான் அவனுக்கு. அதே நேரத்தில் அதெல்லாம் சாத்தியம் இல்லை எனும் இன்னொரு எண்ணமும் அதனோடே ஒட்டிக் கொண்டு வந்தது.
“நீயும் சாப்பிடு சஞ்சனா” அவன் சொல்ல
“இதோ எனக்கும் சேர்த்துதான் எடுத்திட்டு வந்தேன். உங்களுக்கு ஊட்டி விட்டு சாப்பிடுவேன்” என்றாள் அவன் தலை கோதி
“வேண்டாம் சஞ்சனா.. இதெல்லாம் பழக வேண்டாம்..அப்புறம் உனக்குத்தான்.... ” அவன் சொல்லி முடிப்பதற்குள்
“இப்போ என்ன ரெண்டு நாளிலே நான் போயிடுவேன் அதானே சொல்லப் போறே. சரி போ..ய்..யா.. ஆனா போற வரைக்கும் சந்தோஷமா இருந்திட்டு போயேன். அதிலே என்ன பிரச்சனை உனக்கு?” அவள் சட்டென ஒருமைக்கு தாவ மலர்ந்து சிரித்தே விட்டான் நமது சதுரங்க நாயகன்.
இருவரும் மாற்றி மாற்றி ஊட்டிக் கொண்டு ஒரு வழியாக சாப்பிட்டு முடிக்க
“நேத்து மாதிரி இன்னைக்கும் வீ வில் ஹேவ் எ டான்ஸ் கெளதம்” என்றாள் அவன் கழுத்தை கட்டிக் கொண்டு.
“தூங்கு சஞ்சனா. நான் இப்போ வேறே மூட்லே இருக்கேன்” தவிர்க்கத் தான் பார்த்தான்.
“என்ன மூடா இருந்தாலும் நாளைக்கு பார்த்துக்கலாம். இந்த ஒரு நாளை எனக்குக் குடுங்க கெளதம். ப்ளீஸ்..” கெஞ்சினாள் சஞ்சனா. தளர்ந்தான் அவன்.
விளக்கை அணைத்து விட்டு இரவு விளக்கை ஒளிர விட்டு அவர்கள் பாடலை ஒலிக்க விட்டாள்.
இசையோடு இணைந்து குழைந்து அவன் கரத்தோடு தனது கரம் கோர்த்துக் கொண்டாள். அவனை தன்னோடு சேர்த்துக் கொண்டாள். அவள் பயணிக்க ஆரம்பிக்கும் பாதை எங்கே சென்று நிற்கும் என்பது அவனுக்கு கண்டிப்பாகத் தெரியும். அந்தப் பாதையின் பயணத்தை தவிர்க்கத் தான் பார்த்தான்.
ஆனாலும் அவனைத் தவிர்க்க விடாமல் தவிக்க விட்டது அவனது காதல். இத்தனை நாட்கள் அவனை ஏங்க மட்டுமே வைத்த அவனது காதல், இன்று அவனை ஆராதித்தது. அவன் எல்லாவற்றுக்கும் அணைக்கட்டப் பார்த்தும் அவனை அணைத்தே நின்றது அது.
அவனுக்கு சில நாட்களுக்கு முன்னால் ஏற்பட்ட அந்த தீக்காயங்களுக்கு கூட அவளது இதழ் ஒத்தடங்கள் இன்று மருந்தானது.
ஒரு முறை, இரண்டு முறை, மூன்று முறை என அவர்களின் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்க, முதல் முறையாக இத்தனை நெருக்கத்தில் இருந்த பெண்மை எனும் பெருமழை அவனை ஆட்கொண்டது.
முத்தம் கொடுத்தாள். கொடுத்ததை அவனை ஏமாற்றியே திரும்ப எடுத்தாள்.
எத்தனை முயன்றும் ஒரு கட்டத்துக்கு மேலாக, தன்னை ரசித்து ரசித்து ஆராதித்த காதலை துதிக்காமல் இருக்கவே முடியவில்லை அவனால்.
அணைத்தான் சிரித்தாள். கொஞ்சினான் கெஞ்சினாள். ரசித்தான் உருகினாள். சுவாசித்தான் சிலிர்த்தாள். சிரித்தான் சிலாகித்தாள். கடைசியில் இருவரும் ஒருவருக்குள் ஒருவராக கரைந்து மகிழ்ந்து போனார்கள்.
சில மணி நேரங்களுக்கு பிறகு அசந்து களைத்து உறங்கி விட்டிருந்தாள் பெருமையும் மகிழ்ச்சியுமாய் அந்த அரக்கனை தனதாக்கிக் கொண்ட தேவதை.
அவனுக்குத்தான் உறங்கும் வரம் வாய்க்கவில்லை. மனம் எங்கெங்கோ சுற்றித் திரிய ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு ஞாபகத்தில் அவனது இதழோரம் வந்து நின்றது ஒரு வெற்றிப் புன்னகை.
அடுத்த நிமிடம் தனது மடிக்கணினியை எடுத்துக் பால்கனிக்கு வந்தவன், படுக்கை அறையின் கண்ணாடிக் கதவை வெளிப்பக்கமாக பூட்டினான்.
அவள் நன்றாக உறங்குகிறாள் என்பதை கவனித்துக் கொண்டு, தனது குரல் அவளுக்கு கேட்காது என்பதையும் உறுதி செய்து கொண்டு மடிக்கணினியை உயிர்பித்தான்.
சில நிமிடங்களில் அவனது திரையில் வந்தான் நந்தா! அந்த அறையின் மங்கலான வெளிச்சத்தில் தரையில் உறங்கிக் கிடக்கும் நந்தா.
“கெளதம் சித்தார்த்” சீறிய இவனது குரல் அந்த அறையின் சுவற்றில் பட்டு எதிரொலித்தது. இவனது குரலில் அரண்டு போய் எழுந்தான் நந்தா.
“என்னடா தூக்கமா? அதெல்லாம் வேறே வருதா உனக்கு? வரக் கூடாதே தப்பாச்சே?” என்றான் கேலி கலந்த குரலில்.
அரை குறை உறக்கத்தில் அவன் ஏதும் புரியாமல் சுற்றிச் சுற்றிப் பார்க்க
“என்னடா முழிக்குறே? ஓ... தூக்கக் கலக்கமா சாருக்கு? இப்போ நான் சொல்றே விஷயத்தை கேட்டா உனக்கு ஜென்மத்துக்கு தூக்கம் வராது ” என்றவன் “எனக்கும் சஞ்சனாவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சுடா பைத்தியக்காரா” என்றான் குரலில் சூடு பறக்க.
தலையில் இடி ஒன்று விழுந்து விட்டதைப் போல் அதிர்ந்து போய் எழுந்து அமர்ந்தான் நந்தா.
எத்தனை நாட்கள் உண்ணா விரதம் இருக்க முடியும்?. இன்று கொஞ்சம் சாப்பிட்டு இருந்தான் அவன். அதனாலேயே பேசும் சக்தி கிடைத்திருந்தது அவனுக்கு.
“என்னடா நம்ப முடியலையா?” வாய்விட்டுச் சிரித்த கௌதமின் சிரிப்பொலி அந்த அறை முழுவதும் எதிரொலிக்க தவிப்புடன் கத்தினான் நந்தா.
“டேய்.. பொய் சொல்லாதே. அப்படி ஒண்ணு நடக்க வாய்ப்பே இல்லை”
“நடந்திடுச்சேடா. நடந்திடுச்சே. என்னாலேயே நம்ப முடியலை. நான் உயிருக்குள்ளே வெச்சு பூஜை பண்ண என் தேவதை தன்னாலே என்னைத் தேடி வந்து கல்யாணம் பண்ணிட்டாளே” என்று சொன்னவன் சத்தமாக சிரித்தான்.
“இதிலே ஒரு பெரிய விஷயம் என்னன்னா இந்தக் கல்யாணத்துக்கு ஆசீர்வாதம் பண்ணி தாலி எடுத்துக் கொடுத்தது உங்க தாத்தா. அது உங்க பாட்டியோட தாலின்னு கேள்விப் பட்டேன். இது எப்படி இருக்கு?”
“டேய்... பொய்தான் சொல்றே. நீ கண்டிப்பா பொய்தான் சொல்றே” அவன் பைத்தியம் பிடித்தவன் போல் கத்த..
“நம்ப மாட்டியா நீ? நம்பித்தான் ஆகணும். இது சத்தியம். எ..ன் அ..ம்..மா மே...லே ச..த்,, தி..ய..ம்” கடைசி வரியில் அவன் கொடுத்த அழுத்தத்தில் ஆடிப் போனான் நந்தா.
தனது அன்னை மீது பொய் சத்தியம் செய்ய மாட்டான் கெளதம் என நன்றாக அறிந்தவன் நந்தா.
“அப்படி என்றால் நிஜமாகவே திருமணம் முடிந்து விட்டதா?” உயிர் அறுந்தது நந்தாவுக்கு. அவனுக்கு இது எத்தனை பெரிய அடி என்பதை நன்றாக புரிந்தவன் கெளதம் சித்தார்த்.
உண்மை உள்ளுக்குள் இறங்க, நந்தா உடைந்து போவது புரிந்தது கௌதமுக்கு. அவன் தரையில் ஓங்கி ஓங்கி குத்துவது தெரிந்தது. ஆற்ற மாட்டாமல் சுவற்றில் சென்று முட்டிக் கொள்வது தெரிந்தது. கடைசியில் செயலற்றுப் போய் அவன் தேம்பித் தேம்பி அழுவதும் புரிந்தது நமது சதுரங்க வீரனுக்கு.
“அழறியாடா நந்தா? அழு. தேம்பித் தேம்பி அழு. அன்னைக்கு என்னைப் பார்த்து இடுப்பிலே கையை வெச்சிட்டு சிரிச்சியே இப்போ தேம்பித் தேம்பி அழு. காலம் பூரா நீ இழந்ததை நினைச்சு தேம்பித் தேம்பி அழு” சீறினான் கெளதம்.
அதன் பிறகு அவன் தவிப்பதை, அவன் அழுவதை சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தவன் காட்சியை அணைத்து விட்டு இருக்கையின் பின்னால் சாய்ந்து கொண்டான்.
சில நொடிகளில் பால்கனியின் கண்ணாடிக் கதவு படபடவென தட்டப் படுவது தெரிந்து கண்திறந்தான். கதவுக்கு அந்தப் பக்கம் நின்றிருந்தாள் சஞ்சனா.
இதழோரம் கூடிய புன்னகையுடன் கதவை திறந்தான் அவன். வெளிறிப் போய்க் கிடந்தது அவள் முகம்.
“நான் கொஞ்சம் கண் அசந்து தூங்கிட்டேன்” என்றாள் பயமும் கலக்கமும் கலந்த குரலில்.
“ஸோ?” அழகாய் மலர்ந்து சிரித்தான் கெளதம் “டாக்டர் மேடம் எனக்கு காவலா நிக்கணும்ன்னு நினைச்சீங்களா?”
அவனது சிரிப்பில் கொஞ்சம் நிம்மதியான சுவாசம் எழுந்தது அவளிடம்
“என்ன சஞ்சனா நீ ? அதுக்குள்ளே நான் கொலை பண்ணி முடிச்சிட்டேன்னு பயந்துட்டியா என்ன ? ச்சே ச்சே அப்படி எல்லாம் அவசரமா எல்லாம் கொலை பண்ணிட முடியாது. அதை ரசிச்சு ரசிச்சு பண்ணனும்”
அவன் படு இயல்பாக சொல்ல பக்கென்றது அவளுக்கு.
“அப்படி எல்லாம் சொல்லாம கொள்ளாம எதுவும் செய்திட மாட்டேன் கவலைப் படாதே. அப்படி நான் சொல்லிட்டு போகும் போதும் உன்னாலே என்னை எதுவும் செய்ய முடியாது. ஏன்னா நான் கெளதம் சித்தார்த்”
அவளைப் பார்த்து அவன் கண் சிமிட்டி அழுத்தம் திருத்தமாக சொன்ன விதத்தில் அவளுக்குள் பய அமிலங்கள்
“அதுக்கு முன்னாடி எனக்கு நம்ம சொத்து சம்மந்தமா சில வேலைகள் இருக்கு. அதை எல்லாம் முடிச்சிட்டுத்தான் இது. கண்டிப்பா உன்கிட்டே சொல்லிட்டுத் தான் போவேன். அந்தக் கடமையும் எனக்கு இருக்கு. ஸோ அது வரை நிம்மதியா தூங்கு” என்று அவள் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு நகர்ந்தான் கெளதம்.
“டீ குடிக்கப் போனால் உன்னிடம் சொல்லி விட்டு போகிறேன்” எனும் ரீதியில் பேசி விட்டு செல்பவனை விக்கித்துப் பார்த்திருந்தாள் அவன் மனைவி.
தொடரும்
அடுத்த அத்தியாயம் 12/08/2021
உங்கள் கருத்துகளை இந்தத் திரியில் தெரிவியுங்கள் தோழமைகளே!
நீ அறியாயோ முகிலனமே கருத்துக்கள்
அடுத்த அத்தியாயம் 12/08/2021
உங்கள் கருத்துகளை இந்தத் திரியில் தெரிவியுங்கள் தோழமைகளே!
நீ அறியாயோ முகிலனமே கருத்துக்கள்