- Messages
- 130
- Reaction score
- 39
- Points
- 63
கொடிமலர் 20
சியாவுக்கு ஷ்யாம் எப்பொழுது வீட்டுக்கு வருவான் என்று மனம் தவித்து போனது. நேற்று மதியம் உஜ்ஜயின் கிளம்பி சென்றவன் அங்கு சேர்ந்ததும் போன் செய்ததுதான். இதோ காலை பத்து மணி ஆகிறது. அவள் அலுவலகம் கிளம்பியாக வேண்டும். அவன் குரல் கேட்காமல் செல்ல மனம் இல்லை. நாளை மாலை வந்துவிடுவான். அவன் அண்ணாவின் நகை கடையை விரிவுபடுத்தி தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டம். அதை எடுத்து செய்வது ஷ்யாம்தான் செய்யவேணும் என்று குடும்பம் மொத்தமும் ஷ்யாமிடம் வந்து நிற்க, இதோ ஷ்யாம் உஜ்ஜயின் சென்றுள்ளான்.
சியாவுக்கு அவனது பயணங்கள் பழக்கப் பட்டுவிட்ட பொழுதும் அவன் இல்லாமல் பெரிதும் தவித்துப் போகிறாள். தனிமை அவளை வெகுவாக தாக்கும் சமயங்கள் இவை.
அலுவலகத்தில் அவன் எவ்வளவு கடுமையாக நடந்து கொள்வானோ அவ்வளவு குளுமையான கணவன் அவன்.
அவள் பின்னாலேயே சுற்றி அவளை ஒரு மகாராணியாக உணர செய்வான். அவன் இல்லாமல் வீட்டில் இருப்பது பெரிய துயரம் அவளை பொறுத்தவரை.
இரண்டு முறை அவனுக்கு பேச முயற்சி செய்தவள் சோர்ந்து போய், கிளம்பினாள்.
நீரில்லாமல் வாடும் கொடி போல் இருந்த அவள் முகம், பதினோரு மணிக்கு கணவன் வீடியோ காலில் அழைக்கும் வரை சரியாகவில்லை.
அவள் முகம் பார்த்தவனுக்கோ, 'ஐயோ' என்று வந்தது. இது ஒவ்வொரு முறையும் நடப்பது தான். அவன் வெளியூர் பயணம் செய்யும் பொழுது அவளால் தன்னை கட்டுப் படுத்திக்கொள்ள அவளுக்கு இதுவரை இயலவில்லை என்பது அவனுக்கும் தெரியும். வெளிநாட்டு பயணம் என்றால் சொல்லவே வேண்டாம். அவன் பின்னாலேயே சுற்றுவாள். கண்களில் ஏக்கம் அப்பட்டமாய் தெரியும்.ஆனால், காதல் மட்டும் செய்து கொண்டிருந்தால் தொழிலை யார் கவனிப்பது?
அவள் உணர்வுகள் அவளது அவனுக்கு புருஷனாக புரிந்தாலும், அந்த நிறுவன அதிபராக, அன்றைய அலுவலக நடப்புகளை மட்டும் விசாரித்துவிட்டு, செய்ய வேண்டிய வேலைகள் பற்றி பேசியவன் மறந்தும் அந்தரங்க விசாரிப்புகள் வைத்துக்கொள்ளவில்லை.
'அவள் தனக்காக ஏங்குகிறாள் என்று தெரியும். ஆணாக, கணவனாக அவன் கர்வப்படும் விஷயம் இது.'
ஆனால், அவள் ஷ்யாமிடம் மட்டும் தன் கவனத்தை செலுத்துவதை அவன் விரும்பவில்லை. அவள் தன் சுயத்தை என்றும் இழக்கக்கூடாது என்பதில் அவன் தீவிரமாக இருந்தான்.
அவளை தான் காதலிப்பதை வெறும் வார்த்தைகளாலோ, நகை புடவை, பரிசுகள் போன்றவற்றாலோ புரிய வைப்பதை விட சிறந்தது அவளை அவள் வாழ்க்கையை சுயமாக வாழ வைப்பது தான் என்பதை அவன் தீவிரமாக நம்புகிறான். அதை செயல்படுத்தவும் துணிகிறான்.
முக்கியமாக தான் அவளை காதலிப்பது இப்போது அவன் உணர்வுகள் புரியவைத்து விட்டது.
சியாவுக்கு நன்றாக தெரியும்.. ஷ்யாம் தன்னிடம் நடந்து கொள்ளும் முறை, எப்படிப்பட்டது என்று. 'நான் உன்னை காதலிக்கவில்லை'என்று சொன்னவன், சியா மூச்சு திணறும் அளவிற்கு காதலில் பல்வேறு பரிணாமங்களை
நித்தமும் காட்டிக் கொண்டிருக்கிறான். தன் கணவன் மீது சியா பைத்தியம் ஆகும் அளவிற்கு, அவனது காதல் அவளை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
வன்மையான இதழ் முத்தங்களும், அதிரடியான கட்டில் யுத்தங்களும் மட்டும் கொண்டதல்ல காதல்! அது உணர்வு பூர்வமானது... மெல்ல மெல்ல ஒருவர் உயிரை ஒருவர் உறிஞ்சுவது.
இவள் மூச்சுக்காற்றில் அவனும் அவன் மூச்சுக்காற்றில்
அவளுமாக மாறச் செய்வது காதல்.. திருமணம் முடிந்த இந்த இரண்டு வருடங்களில் இதைத்தான் ஷாம்
சியாவிற்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். இன்னும் கற்கும் மாணவியாகவே அவளும் இருக்கிறாள்.
ஷ்யாம் சியா இருவருக்கும் இடையே யான நட்பு அதுவும் கூட அபரிமிதம் தான். ஆகக்கூடி இருவரும் வாழ்ந்து கொண்டிருப்பது கதைகளில் மட்டும் படித்திருக்கும் சாத்தியம் கொண்ட கனவு வாழ்க்கை.
இரவு வீடு வந்த ஷ்யாம் வெகுவாக மனைவியை தேடினான். இரண்டு நாட்களாக பகலில் வேலையில் மூழ்கிப் போபவனுக்கு இரவு, அதன் தனிமை இம்சையாய்.
தன் கை வளைவில் முகம் புதைத்து உறங்கும் பெண்மைக்காக ஏங்கியது அவன் உடல். அவள் கூடலில் லேசாக முனகும் ஒலியை கேட்க துடித்தது மனம்.
ஒவ்வொரு முறை பிராயணம் பொழுதும் இருவரையும் ஆட்டிப் படைக்கும் உணர்வுகள் இது.
இன்னும் சியா, ஷ்யாம் அருகில் புதுமண பெண்ணுக்கான நாணம் கொண்டு மெல்லிய பதட்டத்தை பூசிக்கொண்டவளாகத்தான் அவனிடம் வருகிறாள். இது அவனுக்கான பிராத்தயேக உணர்வு, தேடல். அதை அவனும் மனதார விரும்புகிறான்.
வீட்டில் அவனை முழுவதும் ஆட்சி செய்பவள் சியா.
காதலின் உச்சத்தில் இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகிவிட்டார்கள். திருமண வாழ்க்கையின் அடுத்தகட்டம், பெற்றோர் ஆவது.
சியாவின் வயிற்றில் தன் விந்து விருட்சமாய் வளர்வதை ஆவலுடன் எதிர்பார்க்கிறான் ஷ்யாம்.
உஜ்ஜயின் சென்றால் கூட அடுத்தநாள் காலை பெங்களூரு வந்துவிடுவான்.
அவளை அலுவலகத்தில் வேலை பிழிந்து எடுக்கும் ஷ்யாம், மாலையில் அவளுடன் வெளியே கிளம்பிவிடுவான். அவளை மனதளவில் நிறைய அமைதியும் சந்தோஷமுமாக உணர வைத்தான்.
இருவரும் தனித்து உறங்கியதில்லை. விடுமுறை நாட்களில் இரவு, பகல் என்று அவர்கள் உறக்கமே இல்லை.
சியாவின் தங்கை ஊர்மிளா அமெரிக்கா சென்றவிட, அங்கேயே அவளுக்கு முதல் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்துக்கொள்ளவும் அமெரிக்க வாழ்க்கையை அனுபவிக்கவுமாக சியாவின் பெற்றோர் வருஷத்தின் ஆறு மாதங்கள் அங்கேயே சென்று விடுகிறார்கள்.
தான் கருவுற்றால் தன்னையும் பெற்றோர் இப்படி பார்த்துக்கொள் வார்களா... என்ற பயம் சியாவை
ஆட்டிப்படைக்கிறது.
ஷ்யாமுக்கு சியாவின் மனம் புரிகிறது.
"டோன்ட் ஒர்ரி சியா, என்னோட அம்மா, சித்தி ன்னு வருவாங்க..அண்ட் நாம ஆள் போட்டுக்கலாம்" எனும் கணவனை ஆதூரத்துடன் இறுக்கி அணைத்துக் கொள்கிறாள் சியா.
திருமணம் ஆகி மூன்றாம் ஆண்டு விழாவை கொண்டாடும் நாளில் சியாவின் கர்பம் உறுதி செய்யப் பட, வைரத்தால் தன் மனைவிக்கு நகைகளை வாங்கி குவித்தான் ஷ்யாம். சியாவுக்கு கணவனின் குழந்தைக்கான ஏக்கம் புரிந்தது. அவளும் ஏங்கினாள் தானே!
இருவர் மட்டுமான அவர்களின் உறவு நிலை மூன்றாவதாக ஒரு நபரை வரவேற்க தயார்.
தன் குடும்ப நகைக் கடையில் இருந்தே சியாவுக்கான நகைகளை வரவழைத்தான் ஷ்யாம். அவன் சொன்ன செய்தியை கேட்டு மொத்த குடும்பமும் உற்சாகம் கொண்டது.
சியாவுக்கு முதல் மூன்று மாதங்களில் காலை வேளைகளில் உடம்பு படுத்த, அவன் தன் அம்மா, பாட்டி என்று வீட்டு பெண்களிடம் தன் பயத்தை வெளிப்படுத்தினான். தொழிலுக்காக அடம் பிடித்து வீட்டை விட்டு வெளிவந்த ஷ்யாம் இல்லை இவன். அது அவர்களுக்கும் புரிந்தது. அவனையும் சியாவையும் இந்த நிலையில் தனியே விட மனமில்லாமல் அவர்களை பார்த்துக்கொள்ள ஷ்யாமின் அப்பா வழி பாட்டி வந்திறங்கினார்.
ஷ்யாம் அவன் குடும்பத்தில் எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்து கொண்டாள் சியா.
ஷ்யாமின் குழந்தையை தாங்கும் பேரனின் மனைவியை கைகளில் தாங்கினார் அந்த மூதாட்டி. காலை வீட்டில் இருக்கும் சியாவால், ஷ்யாமை பார்க்காமல் இருக்க முடியாது. மதியம் அலுவலகம் சென்று விடுவாள். ஒரு வகையில் அவளுக்கு அது மனமாற்றம் கொள்ளவும் உதவி செய்ததுதான்.
பெற்றோரிடம் தகவல் சொன்ன சியாவிடம் 'உடம்பு பாத்துக்கோ சியா'என்பதோடு நிறுத்திக் கொண்டார்கள் அவர்கள். அதிலேயே சியா புரிந்துகொண்டாள், பிரசவத்திற்கு அவர்கள் துணை செய்யப் போவதில்லை என்பதை.
என்னதான் ஷ்யாமும் அவன் குடும்பமும் அவளை தாங்கினாலும், தனக்கு ஏன் இப்படி என்ற கழிவிரக்கம் அவளுள் உண்டு. விளைவு கர்பகால ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்.
ஷ்யாமுக்கு அவளை எப்படி அமைதி கொள்ளச் செய்வது என்று புரியவில்லை.
சியாவின் உழைப்பும் பணமும் வேண்டும். அவளுக்கு ஒன்று எனும் பொழுது உடன் நிற்க முடியாதா என்று கோவம் கொண்டவன் அவர்களுக்கு அனுப்பும் பணத்தை அனுப்பாமல் நிறுத்தினான்.
அவர்களுடன் பிரசவம் முடியும் வரை பேச வேண்டாம் என்று சியாவிடம் சொல்லிவிட்டான்.
"அவங்ககிட்ட பேசாம எப்படி ஷ்யாம் ".. என்றவளிடம்,"எனக்கு நீயும் நம்ம குழந்தையும் முக்கியம் சியா.. இனி, அவங்க பொண்ணுங்குற நிலைமைலேந்து வெளியே வந்து நம்ம குடும்பம் பத்தி யோசி "என்றுவிட்டான்.
இரண்டு நாட்கள் பாராமுகம் காட்டியவள் மறந்தும் பெற்றோருக்கு பேச முயற்சி செய்யவில்லை.
அவளுக்கும் நிதர்சனம் புரிந்தது. குழந்தை முக்கியம், இருவருக்குமே! கணவன் மீதான கோவத்தை அவளால் இழுத்து பிடிக்கமுடியவில்லை.
**********************
ராம் கேட்ட கேள்விக்கு இரண்டு வாரங்கள் ஆகியும் நந்தாவால் பதில் சொல்ல முடியவில்லை. முடிந்தவரை பிரச்சனையை தள்ளி போட முயன்றவள் வேலை விஷயமாக தமிழ்நாடு வந்திருக்கிறாள். தள்ளிப்போட நினைக்கும் விஷயம் அவளை பாடாய் படுத்தியெடுக்கிறது. நினைவுகள் முழுவதும் ராம் பேசிய வார்த்தைகள். அவன் சொன்னதில் இருக்கும் நிஜம் அவளை சுடுகிறது. ராம் மீது கோவம் வருகிறது.
இன்னும் சொல்லப் போனால், குழந்தைக்காக ராம் வேறு பெண்ணை நாடிப் போவானா... எனும் சந்தேகம்!
போதாக்குறைக்கு ராம் சியா இருவரையும் நெருக்கமாக இணைத்து பார்த்து கோவம் கொண்டது நந்தாவின் மனம்.
ராம் அப்படிப்பட்டவன் அல்ல என்று அவள் சொல்லமாட்டாள். நந்தாவுக்கு அவளது பூர்வீகம் தெரியும். அதனாலேயே அவளால் ராமை நம்ப முடியாது.
நந்தா மீது பரிதாபம் கொள்ளவேணுமோ? என்னால் முடியாது. அவள் அப்பா செய்த விஷயம் சரி இல்லை என்றால் அதற்கு ராம் எப்படி பொறுப்பாவான்?
திரும்ப பெங்களூரு வந்தவளிடம் ராம் எதுவும் பேசவில்லை.. கேட்கவும் இல்லை. அவனது நடவடிக்கைகளில் நந்தா மீதான அலட்சியம் வெகுவாக வெளிப்பட, தன் சந்தேகம் சரிதான்!என்ற முடிவுக்கு வந்தாள் நந்தா.
ஷ்யாம் சியாவுக்கு ஐந்தாம் மாதம் வளைகாப்பு வைத்திருந்தான். குடும்பத்தாருடன், இப்போது நெருங்கிய நண்பன் ஆகிவிட்ட ராமுக்கும் மனைவியுடன் வருவதற்கு அழைப்பு விடுத்திருந்தான் ஷ்யாம்.
நந்தாவை அழைத்துக்கொண்டு... என்று நினைக்கும் பொழுது ராமுக்கு அலுப்பு தட்டியது.
'எனக்கு தான் வேறு வழி இல்லை. இவள் குணத்தை சகித்தாக வேணும். மற்றவர்கள் ஏன்? 'என்று தோன்றினாலும், இது குடும்ப விழா. அவளை விட்டு செல்ல இயலாது. அது பிரச்சனைகளுக்கு வழி செய்யும் என்று உணர்ந்தவனாய் மனைவி சஹிதமாக விழாவுக்கு சென்றான்.
வழக்கம் போல், சியாவை ஆராய்ந்த நந்தா மனம் கருவியது.
அதை தீர்த்துக்கொள்ள, "உங்க பேரென்ட்ஸ் வரலையா சியா "என்றாள் தேநொழுகும் குரலில்.
சியாவுக்கு புரிந்தது. "இல்ல நந்தா.. அவங்க என் சிஸ்டர் டெலிவரிக்காக யு எஸ் போய் இருக்காங்க." என்று பதில் சொன்னவளுக்கு நிஜமாலுமே தாளவில்லை.
அத்தனை பேர் கூடியிருக்கும் இடத்தில் தன்னை அவமானப் படுத்தும் நந்தாவின் நோக்கம்?
இதற்கு பதில் கொடுக்க நினைத்த சியா, "உங்க வளைகாப்பு எப்போ நந்தா... ஏதாவது பிளானிங் ல்ல இருக்கீங்கலா...?"
"ராம் ரெடியா இருக்கார்னு எங்களுக்கு தெரியும்... என்றவள், இல்ல ராம்... "என்று ராமையும் துணைக்கு அழைத்துக் கொண்டாள்.
இருவருக்கும் நடக்கும் பனிபோர் ஆண்கள் இருவருக்கும் புரிந்தது. ராம் நந்தாவுடன் சீக்கிரம் கிளம்பிவிட்டான். பெண்கள் பிரச்சனை அதில் தன் அந்தரங்கம் அலசப் படுவதை அவன் விரும்பவில்லை.
நந்தா மீது கோவம் என்றால் சியா மீது வருத்தம். சியாவின் வார்த்தைகளை அவன் எதிர்பார்த்திருக்க வில்லை. அதில் தன்னை வேறு துணைக்கு அழைத்ததில் இன்னும் வருத்தம்.
பதில் ஏதும் சொல்லவில்லை அவன்.
ஆனால், ராம் தன்னை விட்டு கொடுத்ததாக நந்தா எண்ணம் கொண்டாள்.
சியா, ராம் மீது உரிமை கொண்டு பேசுவதாக அவளுக்கு தோன்றியது. அவர்களது பெயர் பொருத்தம் நினைத்து வேறு வெறுப்பு கொண்டாள். அவள் யோசிப்பது அடுத்தவர் மனைவி பற்றி என்ற எண்ணமே அவளுள் இல்லை.
தனியாக ராமை சந்தித்து சியா ஷ்யாம் இருவரும் மன்னிப்பு கேட்கவும், ராம் 'லீவ் இட்' என்றுவிட்டான். ஆனால் அவன் மனதில் இது ஒரு காயம்தான்!
அதற்கு மருந்து?

சியாவுக்கு ஷ்யாம் எப்பொழுது வீட்டுக்கு வருவான் என்று மனம் தவித்து போனது. நேற்று மதியம் உஜ்ஜயின் கிளம்பி சென்றவன் அங்கு சேர்ந்ததும் போன் செய்ததுதான். இதோ காலை பத்து மணி ஆகிறது. அவள் அலுவலகம் கிளம்பியாக வேண்டும். அவன் குரல் கேட்காமல் செல்ல மனம் இல்லை. நாளை மாலை வந்துவிடுவான். அவன் அண்ணாவின் நகை கடையை விரிவுபடுத்தி தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டம். அதை எடுத்து செய்வது ஷ்யாம்தான் செய்யவேணும் என்று குடும்பம் மொத்தமும் ஷ்யாமிடம் வந்து நிற்க, இதோ ஷ்யாம் உஜ்ஜயின் சென்றுள்ளான்.
சியாவுக்கு அவனது பயணங்கள் பழக்கப் பட்டுவிட்ட பொழுதும் அவன் இல்லாமல் பெரிதும் தவித்துப் போகிறாள். தனிமை அவளை வெகுவாக தாக்கும் சமயங்கள் இவை.
அலுவலகத்தில் அவன் எவ்வளவு கடுமையாக நடந்து கொள்வானோ அவ்வளவு குளுமையான கணவன் அவன்.
அவள் பின்னாலேயே சுற்றி அவளை ஒரு மகாராணியாக உணர செய்வான். அவன் இல்லாமல் வீட்டில் இருப்பது பெரிய துயரம் அவளை பொறுத்தவரை.
இரண்டு முறை அவனுக்கு பேச முயற்சி செய்தவள் சோர்ந்து போய், கிளம்பினாள்.
நீரில்லாமல் வாடும் கொடி போல் இருந்த அவள் முகம், பதினோரு மணிக்கு கணவன் வீடியோ காலில் அழைக்கும் வரை சரியாகவில்லை.
அவள் முகம் பார்த்தவனுக்கோ, 'ஐயோ' என்று வந்தது. இது ஒவ்வொரு முறையும் நடப்பது தான். அவன் வெளியூர் பயணம் செய்யும் பொழுது அவளால் தன்னை கட்டுப் படுத்திக்கொள்ள அவளுக்கு இதுவரை இயலவில்லை என்பது அவனுக்கும் தெரியும். வெளிநாட்டு பயணம் என்றால் சொல்லவே வேண்டாம். அவன் பின்னாலேயே சுற்றுவாள். கண்களில் ஏக்கம் அப்பட்டமாய் தெரியும்.ஆனால், காதல் மட்டும் செய்து கொண்டிருந்தால் தொழிலை யார் கவனிப்பது?
அவள் உணர்வுகள் அவளது அவனுக்கு புருஷனாக புரிந்தாலும், அந்த நிறுவன அதிபராக, அன்றைய அலுவலக நடப்புகளை மட்டும் விசாரித்துவிட்டு, செய்ய வேண்டிய வேலைகள் பற்றி பேசியவன் மறந்தும் அந்தரங்க விசாரிப்புகள் வைத்துக்கொள்ளவில்லை.
'அவள் தனக்காக ஏங்குகிறாள் என்று தெரியும். ஆணாக, கணவனாக அவன் கர்வப்படும் விஷயம் இது.'
ஆனால், அவள் ஷ்யாமிடம் மட்டும் தன் கவனத்தை செலுத்துவதை அவன் விரும்பவில்லை. அவள் தன் சுயத்தை என்றும் இழக்கக்கூடாது என்பதில் அவன் தீவிரமாக இருந்தான்.
அவளை தான் காதலிப்பதை வெறும் வார்த்தைகளாலோ, நகை புடவை, பரிசுகள் போன்றவற்றாலோ புரிய வைப்பதை விட சிறந்தது அவளை அவள் வாழ்க்கையை சுயமாக வாழ வைப்பது தான் என்பதை அவன் தீவிரமாக நம்புகிறான். அதை செயல்படுத்தவும் துணிகிறான்.
முக்கியமாக தான் அவளை காதலிப்பது இப்போது அவன் உணர்வுகள் புரியவைத்து விட்டது.
சியாவுக்கு நன்றாக தெரியும்.. ஷ்யாம் தன்னிடம் நடந்து கொள்ளும் முறை, எப்படிப்பட்டது என்று. 'நான் உன்னை காதலிக்கவில்லை'என்று சொன்னவன், சியா மூச்சு திணறும் அளவிற்கு காதலில் பல்வேறு பரிணாமங்களை
நித்தமும் காட்டிக் கொண்டிருக்கிறான். தன் கணவன் மீது சியா பைத்தியம் ஆகும் அளவிற்கு, அவனது காதல் அவளை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
வன்மையான இதழ் முத்தங்களும், அதிரடியான கட்டில் யுத்தங்களும் மட்டும் கொண்டதல்ல காதல்! அது உணர்வு பூர்வமானது... மெல்ல மெல்ல ஒருவர் உயிரை ஒருவர் உறிஞ்சுவது.
இவள் மூச்சுக்காற்றில் அவனும் அவன் மூச்சுக்காற்றில்
அவளுமாக மாறச் செய்வது காதல்.. திருமணம் முடிந்த இந்த இரண்டு வருடங்களில் இதைத்தான் ஷாம்
சியாவிற்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். இன்னும் கற்கும் மாணவியாகவே அவளும் இருக்கிறாள்.
ஷ்யாம் சியா இருவருக்கும் இடையே யான நட்பு அதுவும் கூட அபரிமிதம் தான். ஆகக்கூடி இருவரும் வாழ்ந்து கொண்டிருப்பது கதைகளில் மட்டும் படித்திருக்கும் சாத்தியம் கொண்ட கனவு வாழ்க்கை.
இரவு வீடு வந்த ஷ்யாம் வெகுவாக மனைவியை தேடினான். இரண்டு நாட்களாக பகலில் வேலையில் மூழ்கிப் போபவனுக்கு இரவு, அதன் தனிமை இம்சையாய்.
தன் கை வளைவில் முகம் புதைத்து உறங்கும் பெண்மைக்காக ஏங்கியது அவன் உடல். அவள் கூடலில் லேசாக முனகும் ஒலியை கேட்க துடித்தது மனம்.
ஒவ்வொரு முறை பிராயணம் பொழுதும் இருவரையும் ஆட்டிப் படைக்கும் உணர்வுகள் இது.
இன்னும் சியா, ஷ்யாம் அருகில் புதுமண பெண்ணுக்கான நாணம் கொண்டு மெல்லிய பதட்டத்தை பூசிக்கொண்டவளாகத்தான் அவனிடம் வருகிறாள். இது அவனுக்கான பிராத்தயேக உணர்வு, தேடல். அதை அவனும் மனதார விரும்புகிறான்.
வீட்டில் அவனை முழுவதும் ஆட்சி செய்பவள் சியா.
காதலின் உச்சத்தில் இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகிவிட்டார்கள். திருமண வாழ்க்கையின் அடுத்தகட்டம், பெற்றோர் ஆவது.
சியாவின் வயிற்றில் தன் விந்து விருட்சமாய் வளர்வதை ஆவலுடன் எதிர்பார்க்கிறான் ஷ்யாம்.
உஜ்ஜயின் சென்றால் கூட அடுத்தநாள் காலை பெங்களூரு வந்துவிடுவான்.
அவளை அலுவலகத்தில் வேலை பிழிந்து எடுக்கும் ஷ்யாம், மாலையில் அவளுடன் வெளியே கிளம்பிவிடுவான். அவளை மனதளவில் நிறைய அமைதியும் சந்தோஷமுமாக உணர வைத்தான்.
இருவரும் தனித்து உறங்கியதில்லை. விடுமுறை நாட்களில் இரவு, பகல் என்று அவர்கள் உறக்கமே இல்லை.
சியாவின் தங்கை ஊர்மிளா அமெரிக்கா சென்றவிட, அங்கேயே அவளுக்கு முதல் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்துக்கொள்ளவும் அமெரிக்க வாழ்க்கையை அனுபவிக்கவுமாக சியாவின் பெற்றோர் வருஷத்தின் ஆறு மாதங்கள் அங்கேயே சென்று விடுகிறார்கள்.
தான் கருவுற்றால் தன்னையும் பெற்றோர் இப்படி பார்த்துக்கொள் வார்களா... என்ற பயம் சியாவை
ஆட்டிப்படைக்கிறது.
ஷ்யாமுக்கு சியாவின் மனம் புரிகிறது.
"டோன்ட் ஒர்ரி சியா, என்னோட அம்மா, சித்தி ன்னு வருவாங்க..அண்ட் நாம ஆள் போட்டுக்கலாம்" எனும் கணவனை ஆதூரத்துடன் இறுக்கி அணைத்துக் கொள்கிறாள் சியா.
திருமணம் ஆகி மூன்றாம் ஆண்டு விழாவை கொண்டாடும் நாளில் சியாவின் கர்பம் உறுதி செய்யப் பட, வைரத்தால் தன் மனைவிக்கு நகைகளை வாங்கி குவித்தான் ஷ்யாம். சியாவுக்கு கணவனின் குழந்தைக்கான ஏக்கம் புரிந்தது. அவளும் ஏங்கினாள் தானே!
இருவர் மட்டுமான அவர்களின் உறவு நிலை மூன்றாவதாக ஒரு நபரை வரவேற்க தயார்.
தன் குடும்ப நகைக் கடையில் இருந்தே சியாவுக்கான நகைகளை வரவழைத்தான் ஷ்யாம். அவன் சொன்ன செய்தியை கேட்டு மொத்த குடும்பமும் உற்சாகம் கொண்டது.
சியாவுக்கு முதல் மூன்று மாதங்களில் காலை வேளைகளில் உடம்பு படுத்த, அவன் தன் அம்மா, பாட்டி என்று வீட்டு பெண்களிடம் தன் பயத்தை வெளிப்படுத்தினான். தொழிலுக்காக அடம் பிடித்து வீட்டை விட்டு வெளிவந்த ஷ்யாம் இல்லை இவன். அது அவர்களுக்கும் புரிந்தது. அவனையும் சியாவையும் இந்த நிலையில் தனியே விட மனமில்லாமல் அவர்களை பார்த்துக்கொள்ள ஷ்யாமின் அப்பா வழி பாட்டி வந்திறங்கினார்.
ஷ்யாம் அவன் குடும்பத்தில் எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்து கொண்டாள் சியா.
ஷ்யாமின் குழந்தையை தாங்கும் பேரனின் மனைவியை கைகளில் தாங்கினார் அந்த மூதாட்டி. காலை வீட்டில் இருக்கும் சியாவால், ஷ்யாமை பார்க்காமல் இருக்க முடியாது. மதியம் அலுவலகம் சென்று விடுவாள். ஒரு வகையில் அவளுக்கு அது மனமாற்றம் கொள்ளவும் உதவி செய்ததுதான்.
பெற்றோரிடம் தகவல் சொன்ன சியாவிடம் 'உடம்பு பாத்துக்கோ சியா'என்பதோடு நிறுத்திக் கொண்டார்கள் அவர்கள். அதிலேயே சியா புரிந்துகொண்டாள், பிரசவத்திற்கு அவர்கள் துணை செய்யப் போவதில்லை என்பதை.
என்னதான் ஷ்யாமும் அவன் குடும்பமும் அவளை தாங்கினாலும், தனக்கு ஏன் இப்படி என்ற கழிவிரக்கம் அவளுள் உண்டு. விளைவு கர்பகால ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்.
ஷ்யாமுக்கு அவளை எப்படி அமைதி கொள்ளச் செய்வது என்று புரியவில்லை.
சியாவின் உழைப்பும் பணமும் வேண்டும். அவளுக்கு ஒன்று எனும் பொழுது உடன் நிற்க முடியாதா என்று கோவம் கொண்டவன் அவர்களுக்கு அனுப்பும் பணத்தை அனுப்பாமல் நிறுத்தினான்.
அவர்களுடன் பிரசவம் முடியும் வரை பேச வேண்டாம் என்று சியாவிடம் சொல்லிவிட்டான்.
"அவங்ககிட்ட பேசாம எப்படி ஷ்யாம் ".. என்றவளிடம்,"எனக்கு நீயும் நம்ம குழந்தையும் முக்கியம் சியா.. இனி, அவங்க பொண்ணுங்குற நிலைமைலேந்து வெளியே வந்து நம்ம குடும்பம் பத்தி யோசி "என்றுவிட்டான்.
இரண்டு நாட்கள் பாராமுகம் காட்டியவள் மறந்தும் பெற்றோருக்கு பேச முயற்சி செய்யவில்லை.
அவளுக்கும் நிதர்சனம் புரிந்தது. குழந்தை முக்கியம், இருவருக்குமே! கணவன் மீதான கோவத்தை அவளால் இழுத்து பிடிக்கமுடியவில்லை.
**********************
ராம் கேட்ட கேள்விக்கு இரண்டு வாரங்கள் ஆகியும் நந்தாவால் பதில் சொல்ல முடியவில்லை. முடிந்தவரை பிரச்சனையை தள்ளி போட முயன்றவள் வேலை விஷயமாக தமிழ்நாடு வந்திருக்கிறாள். தள்ளிப்போட நினைக்கும் விஷயம் அவளை பாடாய் படுத்தியெடுக்கிறது. நினைவுகள் முழுவதும் ராம் பேசிய வார்த்தைகள். அவன் சொன்னதில் இருக்கும் நிஜம் அவளை சுடுகிறது. ராம் மீது கோவம் வருகிறது.
இன்னும் சொல்லப் போனால், குழந்தைக்காக ராம் வேறு பெண்ணை நாடிப் போவானா... எனும் சந்தேகம்!
போதாக்குறைக்கு ராம் சியா இருவரையும் நெருக்கமாக இணைத்து பார்த்து கோவம் கொண்டது நந்தாவின் மனம்.
ராம் அப்படிப்பட்டவன் அல்ல என்று அவள் சொல்லமாட்டாள். நந்தாவுக்கு அவளது பூர்வீகம் தெரியும். அதனாலேயே அவளால் ராமை நம்ப முடியாது.
நந்தா மீது பரிதாபம் கொள்ளவேணுமோ? என்னால் முடியாது. அவள் அப்பா செய்த விஷயம் சரி இல்லை என்றால் அதற்கு ராம் எப்படி பொறுப்பாவான்?
திரும்ப பெங்களூரு வந்தவளிடம் ராம் எதுவும் பேசவில்லை.. கேட்கவும் இல்லை. அவனது நடவடிக்கைகளில் நந்தா மீதான அலட்சியம் வெகுவாக வெளிப்பட, தன் சந்தேகம் சரிதான்!என்ற முடிவுக்கு வந்தாள் நந்தா.
ஷ்யாம் சியாவுக்கு ஐந்தாம் மாதம் வளைகாப்பு வைத்திருந்தான். குடும்பத்தாருடன், இப்போது நெருங்கிய நண்பன் ஆகிவிட்ட ராமுக்கும் மனைவியுடன் வருவதற்கு அழைப்பு விடுத்திருந்தான் ஷ்யாம்.
நந்தாவை அழைத்துக்கொண்டு... என்று நினைக்கும் பொழுது ராமுக்கு அலுப்பு தட்டியது.
'எனக்கு தான் வேறு வழி இல்லை. இவள் குணத்தை சகித்தாக வேணும். மற்றவர்கள் ஏன்? 'என்று தோன்றினாலும், இது குடும்ப விழா. அவளை விட்டு செல்ல இயலாது. அது பிரச்சனைகளுக்கு வழி செய்யும் என்று உணர்ந்தவனாய் மனைவி சஹிதமாக விழாவுக்கு சென்றான்.
வழக்கம் போல், சியாவை ஆராய்ந்த நந்தா மனம் கருவியது.
அதை தீர்த்துக்கொள்ள, "உங்க பேரென்ட்ஸ் வரலையா சியா "என்றாள் தேநொழுகும் குரலில்.
சியாவுக்கு புரிந்தது. "இல்ல நந்தா.. அவங்க என் சிஸ்டர் டெலிவரிக்காக யு எஸ் போய் இருக்காங்க." என்று பதில் சொன்னவளுக்கு நிஜமாலுமே தாளவில்லை.
அத்தனை பேர் கூடியிருக்கும் இடத்தில் தன்னை அவமானப் படுத்தும் நந்தாவின் நோக்கம்?
இதற்கு பதில் கொடுக்க நினைத்த சியா, "உங்க வளைகாப்பு எப்போ நந்தா... ஏதாவது பிளானிங் ல்ல இருக்கீங்கலா...?"
"ராம் ரெடியா இருக்கார்னு எங்களுக்கு தெரியும்... என்றவள், இல்ல ராம்... "என்று ராமையும் துணைக்கு அழைத்துக் கொண்டாள்.
இருவருக்கும் நடக்கும் பனிபோர் ஆண்கள் இருவருக்கும் புரிந்தது. ராம் நந்தாவுடன் சீக்கிரம் கிளம்பிவிட்டான். பெண்கள் பிரச்சனை அதில் தன் அந்தரங்கம் அலசப் படுவதை அவன் விரும்பவில்லை.
நந்தா மீது கோவம் என்றால் சியா மீது வருத்தம். சியாவின் வார்த்தைகளை அவன் எதிர்பார்த்திருக்க வில்லை. அதில் தன்னை வேறு துணைக்கு அழைத்ததில் இன்னும் வருத்தம்.
பதில் ஏதும் சொல்லவில்லை அவன்.
ஆனால், ராம் தன்னை விட்டு கொடுத்ததாக நந்தா எண்ணம் கொண்டாள்.
சியா, ராம் மீது உரிமை கொண்டு பேசுவதாக அவளுக்கு தோன்றியது. அவர்களது பெயர் பொருத்தம் நினைத்து வேறு வெறுப்பு கொண்டாள். அவள் யோசிப்பது அடுத்தவர் மனைவி பற்றி என்ற எண்ணமே அவளுள் இல்லை.
தனியாக ராமை சந்தித்து சியா ஷ்யாம் இருவரும் மன்னிப்பு கேட்கவும், ராம் 'லீவ் இட்' என்றுவிட்டான். ஆனால் அவன் மனதில் இது ஒரு காயம்தான்!
அதற்கு மருந்து?
