பெண்ணே- 2
அவர்கள் என்னவோ தோழோடுதான் அனைத்து கொண்டனர். மேலைநாட்டு பழக்கம் இப்படி அனைத்து கொள்வதுதான் இன்றைய நாகரிகமாம். அதை பார்த்த ஆராதனாக்குதான் அவர்கள் கொஞ்சிக் கொள்வதுபோல் தெரிந்தது.
"என்ன ஜென்மங்களோ பப்ளிக்காகட்டி புடிச்சிட்டு நிக்குதுங்க" திட்டிக்கொண்டே சென்றாள்.
"கோவமா இருக்கியா ஆதி?" அவன் கழுத்தை கட்டிக்கொண்டு தோளில் தொங்கினாள் பவித்ரா. அவள் பூசியிருந்த பர்ஃப்யூம் வாசனை அவன் நாசிவழி சென்று அடிவயிற்றில் காலிங்பெல் அழுத்த அவளை அணைப்பிலிருந்து விடுவித்தவன் இரண்டடி பின்னே நகர்ந்து நின்று கொண்டான்.
"ஆமா பட் இப்போ இல்ல" என்றவனது கண்கள் ஆராதனா செல்வதை தான் பார்த்தது.
"தேங்க்யூ ஆதி. ஆமா என்ன உன் ஆபீஸ்ல ஒரே ரோசா இருக்கு? யாருக்காக?"
"உனக்கு தான் பிடிச்சிருக்கா?"
"பிடிக்கல" கொஞ்சம் கூட யோசிக்காமல் சொன்னாள். அதியனின் முகம் சுருங்கி விட்டது… "ஏன்?"
"எனக்கு பிளவர்ஸ் சே பிடிக்காது. அதுவும் ரோஸ் smell கேவலமா இருக்கும்"
"உன் பர்ஃபியூம் விடவா மோசம்?" முனுமுனுத்தான் அவன்.
"என்ன ஆதி கேட்ட?"
"அது உன் பர்ஃபியூம் நல்ல வாசம்னு சொன்னேன்"
"நல்லாருக்குல? பார்க் அவன்யூ"
"ஆமா ஆமா ரொம்ப... நல்லாருக்கு" பல்லை கடித்துக்கொண்டு சிரித்தான்.
அவனுக்கு இதுபோல் பேசுவது புதிது. மனதில் இருப்பதை பேச நினைப்பவன். பெண்ணோ ஆண்ணோ பிடிக்கவில்லை என்றால் ஒரு பார்வையில் எட்டநிறுத்தி விடுவான்.
பவித்ரா அதியனுக்காக வசந்தகுமார் பார்த்து வைத்திருக்கும் பெண். அவளை அவர் தேர்தேடுத்தற்கான காரணம் நவநாகரீக மங்கை, அழகானவள். மிகவும் முக்கியமான தகுதி பணம் அது அவளிடம் நிறைய இருந்தது. அதைதான் இன்று அவர் அவனிடம் சொல்ல கோபத்தில் போனை தூக்கி வீசினான்.
அவனால் அவளுடன் ஒத்து போக முடியவில்லை. அவளை அவமான படுத்தவும் அவனால் முடியாது. மனைவிக்கும் சமமாக மரியாதை குடுக்க நினைப்பவன். பெண்களை மதிக்கவேண்டும் என்பது அவன் தாத்தா சிறு வயதிலே போதித்தது. மனைவியை சரிக்குசமமாய் மரியாதையாய் நடத்தவேண்டும் என்பது அவரது வாழ்க்கையை பார்த்து அதியன் தானாய் கற்றது. அதையும்மீறி சிலசமயம் கடுமையாக அவளிடம் பேசிவிடுவான். அவளுடனான அவன் வாழ்க்கை காதலாக இருக்காது என்பதை உணர்ந்தே இருந்தான். கடமையாக வாழ்வது வாழ்க்கையே இல்லை என்பதை வாழ்ந்து பார்த்தவர்கள் தான் அறிவர். அந்த வாழ்க்கை ருசிப்பதில்லை.
"பேசாம இவள பிடிக்கலனு அப்பாகிட்ட சொல்லிடலாமா? ஒரு நிமிஷம் கூட இவளோட இருக்க பிடிக்கல இதுல எப்படி வாழ்க்க முழுக்க?"
"ச்ச இவள்னு இல்ல எனக்கு யாரையும் பிடிக்காது மேரேஜ் அப்பறம் சரியாகிடும் பொறுமையா இருடா அதியா" அவனுக்கே அவன் சமாதானம் படுத்திக்கொண்டான்.
அதியனுக்கு எப்போதும் பெண்களிடத்தில் ஈர்ப்பு இருந்தில்லை. அவன் தந்தையை போல அவனுக்கும் பிஸ்னஸ்சே பிரதானம். இத்தனை காலம் தோன்றாத விருப்பம் இனியும் தோன்றாது என்றுதான் பவித்ராவுக்கு தலையை ஆட்டினான். அன்றிலிருந்து இன்று வரை அவளை ஏற்க பலபல முயற்சிகள் செய்து பார்த்துவிட்டான் பலன் என்வோ பூஜ்ஜியம்தான். தன் வருங்கால மனைவி என்று எத்தனை உருப்போட்டாலும் மனம் அதை ஏற்க சண்டித்தனம் செய்தது.
பெருமூச்சு விட்டவாறே நினைவுக்கு வந்தவன் பார்த்தது ஆராதனாவைதான் .
"வா ஆதி போகலாம்" பவித்ரா அவன் கையை பிடித்து இழுக்க அவன் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். அவளும் இவர்களை தான் பார்த்துக் கொண்டு வந்தாள்.
அருவருப்பில் சுருங்கி இருந்த அவள் முகத்தைப் பார்த்தவன் தன் கையை பவித்ராவிடம் இருந்து விலக்கிக் கொண்டான். அவனுக்கே அவனை நினைத்து ஆச்சரியமே.
"இப்போலாம் பொண்ணுங்க ஆம்பளைங்க கைய பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சிட்டாங்க போல?" அவள் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக முனுமுனுத்துக் கொண்டு சென்றது அவன் காதில் நன்றாக விழுந்தது. அவளே அறியாமல் பொறாமை கொண்டாள்.
அதியனுக்கு சிரிப்பு பீரிட்டது.
"அப்போ சீக்கிரம் சட்டத்தை மாத்தி எழுத சொல்லனும். இப்போலாம் பசங்களுக்கு பாதுகாப்பே இல்லை." அவளுக்கு கேட்க வேண்டும் என்றே சத்தமாக சொன்னான். அவனே அறியாமல் அவளை சீன்டினான்.
"என்ன சொல்றான் இவன்?" என்று பவித்ரா புரியாமல் பார்க்க படக்கென்று திரும்பி பார்த்தாள் ஆராதனா.
அவனும் அவளை ஆழ்ந்து பார்க்க அவள் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள் ஓடியதை கண்டான்.
"அய்யய்யோ நம்ம சொன்னதை கேட்டான் போலேயே" என்று அதிர்ந்தவள் "என்ன பண்ணிடுவான்?" என்ற அலச்சிய்த்தோடு திரும்பி நடந்தாள்.
ஆராதனாவின் முகத்தில் தெரிந்த பாவனைகளை ரசித்து கொண்டு இருந்தான் அதியன். அவனை வித்தியாசமாக பார்த்த பவித்ரா அவனை இழுத்துக்கொண்டு போனாள்.
கடைசி படியில் அவன் இறங்கும் முன் அந்த ஹாலை திரும்பி பார்த்தான் சரியாக ஆராதனாவும் திரும்பி பார்த்தாள்.
இருவருக்கும் ஏதோ உணர முடியாத மெல்லிய உணர்வு.ஒருவர் பார்வையில் மற்றொருவர் தடுமாறினர்.
உணர்வுகளை ஒற்றை வார்த்தையில் அடக்கிட முடியுமா? அதன் தவிப்பை வார்தைகள் விலக்கிடுமா? இதற்கு பதில் தான் காதல் என்றான் கிருக்கன்.
"என்ன எஸ் பி சார் நீங்க கேட்காத transfer கிடச்சிட்டுபோல?" கேட்டவாறே கதவை திறந்து கொண்டு வந்தவர் பாலா.
"பர்மிசன் கேட்டுட்டு உள்ள வரமாட்டிங்களா? இது என்ன உங்க வீடுனு நினைச்சிங்களா? எஸ் பி ஆபிஸ் நியாபகத்துல வச்சுக்கோங்க" சுள்ளென்று காய்ந்தான் விமலன்.
"நானும் என் வீடுனு நினைக்கலையே. ஏன் நீங்க நினைச்சிங்களா?"
"ஏய்ய் என்னோட ஆபிஸ்குள்ள வந்து என்னையே நக்கல் பண்றியா? முரளி… உடனே உள்ளே வாங்க" ஒற்றை விரல் நீட்டி மிரட்டியவன் வாயிலை நோக்கி கத்தினான்.
அவன் கத்தியதில் அடித்து பிடித்து கொண்டு வந்தார் எடி.எஸ்.பி முரளி.
"எதுக்கு விமலன் இவ்வளவு சூடா இருக்கீங்க? நாளைலேர்ந்து இது உங்க ஆபிஸ் இல்ல. என்கிட்ட பகச்சிக்கிட்டா என்ன நடக்கும்னு தெரிஞ்சிகோங்க. உங்க ஐ.பி.எஸ் அ மதிச்சி டிரான்ஸ்பரோடு விடுரேன். என்றார் ஒரு மிரட்டும் பார்வையோடு. அதை கண்டு தலையில் அடித்துக்கொண்டார் முரளி.
"இன்னைக்கு இந்த ஆபீஸ் ல நான்தான் எஸ்.பி மறக்க வேண்டாம். என்ன சொன்ன நீ? என்னை transfer பண்ணவச்சியா? குட் காமெடி பாலா ஹா ஹா" நக்கலாக சிரித்தான் விமலன்.
புரியாமல் பார்தார் அவர்.
"எனக்கு கிடைச்சதுக்கு பேரு புரமோஷன். இனிமே நான் sp இல்ல AIG லா அண்ட் ஆர்டர். அட் த சேம் டைம் ஒருத்தி தானா கேட்டு இங்க transfer வாங்கிட்டு வரா. டூ யூ நோ பாலா? அவள யாராலையும் எதுவும் பண்ண முடியாது. அவ லிஸ்டுல வந்துராத." பிரமிப்புடன் சொன்னான் அவன்.
"பணம் பத்தும் செய்யும் எஸ்.பி"
"அய்யோ பாலா... நீ சொல்லாத
பதினொன்னையூம் அவ சேர்த்து செய்வா"
"என்ன எனக்கு பயம் காட்டுறிங்களா? படத்துலவர டயலாக்கை சொன்னா நான் பயந்துருவேனா? ஒரு பொம்பள என்ன பண்ணிடுவா?"
"ஹே வெளிய போடா ராஸ்கல். பொம்பளனு கேவலமா பேசுற. அவகிட்ட இந்த டயலாக்லாம் விட்ராத. அப்பறம் நான் சொன்னது படத்துல வருதா இல்ல நேர்ல வரதானு நீயே தெரிஞ்சிப்ப. முரளி இந்த ஆள வெளியே தள்ளுங்க" எழுந்து நின்று கர்ஜித்தான் விமலன்.
"யார் வந்தாலும் பாத்துக்கிறேன்டா" சவால் விட்டு கொண்டே திரும்பி நடந்தார் பாலா.
அவரை சொடகிட்டு கூப்பிட்டவன் "ஈசியா நினைக்காத. அவ பொண்ணே இல்ல. She is a devil. பீ கேர் புல்" எச்சரித்தான். அவனை முறைத்தவர் கதவை திறந்து கொண்டு சென்றார்.
"சாரி sir நான் சொல்ல சொல்ல கேட்காம வந்துட்டாரு" சங்கடமாக சொன்னார் முரளி
"பாலா சில விச்சியத்துல நல்லவர்தான் முரளி கொஞ்சம் பணதிமிர் அதிகம்"
"கொஞ்சமா ?அதிகமா?" புரியாமல் விழித்தார் அவர்.
"இருக்க கூடாத அளவு. பட் இனிமே கம்மியாகும் "
"எப்படி சார்?"
"அத புது எஸ்.பி வந்து சொல்லுவாங்க" மெலிதாக சிரித்தான் அவன்.
"sir யார் அந்த மேடம்? இவ்வளவு சஸ்பென்ஸா வச்சிரிக்கிங்க."
"முரளி இன்னைக்கு பார்டிக்கு மறக்காம வாங்க நீங்களே தெரிஞ்சிப்பிங்க"
"வந்துரேன் சார். அவங்க உங்க friend ஆ சார்?"
"என்னது friend ஆஆ என்னோட தங்கச்சி முரளி. ரோம்ப கோபம் வரும். அப்புறம் ஒரு request முரளி"
"சொல்லுங்க சார்"
"அவளுக்கு எதாச்சும் problem வந்த என்கிட்ட இன்பார்ம் பண்ணிடுங்க. முக்கியமா அவளுக்கு தெரிய வேண்டாம்."
"கண்டிப்பா சார். ஆனாலும் நீங்க உங்க தங்கச்சியே டேவில்னு சொல்லிட்டிங்களே. அவங்களுக்கு தெரிஞ்சா வருத்தபடமாட்டாங்க?"
"அவள பத்தி தெரியாம பேசுரிங்க. பிடிக்கலனா சினியர் யாரையும் மதிக்கவேமாட்டா அப்பாவுக்காக அததெல்லாம் பொருத்துப்பாங்க. அவ பாக்ஸிங்கல கோல்ட் மேடல்லாம் வாங்கிருக்கா. 22 வயசுலே ஐ..பி.எஸ் பாஸ் பண்ணி எ.எஸ்.பியா ஜாயின் பண்ணா ரெண்டே வருசத்துல எஸ்.பி. அங்க அவ ஆட்டம் தாங்க முடியாம அவ கேட்வுடனே டரன்ஸ்பர் பண்ணிட்டாங்க." சிரித்துக்கொண்டே சொன்னான் அவன். அதில் அவளை நினைத்து அவன் பெருமையாக சொன்னது போலதான் தெரிந்தது முரளிக்கு.
"என்ன விஷ்ணு நீங்க எல்லாருக்கும் ஈசியா கேட்டிங்க ஏன் அந்த பொண்ணு ஆராதனாக்கு மட்டும் கஷ்டமா கேட்டிங்க?" இன்டர்வியூ முடிவினை சரிபார்த்துக்கொண்டே கேட்டான் புவி.
"நான் ஈசியா கேட்டா அவங்க வேலையே வேண்டாம்னு போய்டுவாங்க அதான் கஷ்டமா கேட்டேன் சார்" மிக பவ்வியமாக சொன்னான் அவன்.
ஏன் என்பது போல திரும்பி பார்த்தான் புவி.
" Aradhana is my junior சரர்." அவன் கண்களில் எரித்த பல்பே வெறும் ஜூனியர் மட்டும் இல்லை என்பதை அப்பட்டமாக காட்டியது.
"junior மட்டும் தானா…?" கோப்பை மூடி வைத்துவிட்டு திரும்பி பார்தான்.
"கொஞ்சம் special சார்" தயக்கமாக பார்த்தான் விஷ்ணு.
"அப்போ உங்களுக்கு தான் இது happy news"
"sir அப்ப ஆராதனா…?"
"அவங்க தான் கிண்டி பிரான்சுக்கு மேனேஜர்" என எழுந்துக் கொண்டான் புவி.
"இத அண்ணாகிட்ட காமிச்சிட்டு சைன் வாங்கி எல்லாருக்கும் ஆர்டர் அனுப்பிருங்க." அவன் கையில் கோப்பை தினித்துவிட்டு கதவை திறந்துக்கொண்டு வெளியில் வந்தவனது அழைப்பேசி சினுங்க அதை அட்டன் செய்தவன் "சாரி இன்னைக்கு வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வராங்க சோ என்னால வரமுடியாது" பேசி கொண்டு சென்றான் புவி.
_______
"அம்மா மாஆஆ" கத்தி கொண்டே உள்ளே சென்றாள் ஆராதனா. கிச்சனில் இருந்து எட்டி பார்த்தார் துர்கா.
உள்ளே ஓடி வந்தவள் சந்தோசமாக துர்காவை கட்டி கொண்டாள். அவள் தலையை வருடிவிட்டு "என்ன பாப்பா?" என்றார்.
"அம்மா உங்க பொண்ணு இனிமே மேனேஜர் ம்மா. சம்பளம் எவ்வளவு தெரியுமா? உன் பையனை விட 20000 அதிகம். இனிமே எப்படி நம்மள திட்டுறாங்கனு பாக்குறேன்" கண்கள் ஒளிர துர்காவின் கைகளை பிடித்துக் கொண்டு குதித்தாள் ஆராதனா.
திக்கென்று இருந்து துர்காவுக்கு.
"பாப்பா உன் சம்பளம் பத்தி மட்டும் உன் அண்ணனுக்கு தெரிஞ்சது உன்ன வேலைக்கு போக விடமாட்டான். நீ அதிக சம்பளம் வாங்கினா அவனுக்கு அசிங்கம்னு அப்பா கிட்ட சொல்லி பிரச்சனை பண்ணுவான் மா. உன் அப்பாவும் அவனுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவார்" பாவமாக பார்த்தார் துர்கா.
"ஏன் மா ஆம்பளைங்கள விட பொண்ணுங்க நிறைய சம்பாதிச்சா அசிங்கம்னு சொல்றாங்க?" முகம் வாடினால் அவள்.
"என்னதான் பொண்ணுங்க சுகந்திரமா இருந்தாலும் இன்னும் இது ஆண்களுக்கான உலகம்தான் பாப்பா. இந்தியானு இல்லை எல்லா இடத்திலும் இது தான் நிதர்சனம் பாப்பா"
"இது மாறவே மாறாதா மா?"
"தானா எதுவும் மாறாது பாப்பா. நம்மதான் மாத்தணும்"
அதற்குள் கதவு திறக்கும் சத்தம் கேட்க இருவரும் எட்டி பார்த்தனர். ராகவன்தான் வந்துக்கொண்டு இருந்தார். அவரை பார்த்தவுடன் இருவரும் அமைதி ஆகிவிட்டனர்.
அவர்கள் அமைதியானதை பார்த்த ராகவன் மிதப்பாக வந்து சோபாவில் அமர்ந்தார். அவர்கள் அமைதியை அவருக்கான பயம் என்று தவறாக நினைத்தார். அது மாரியாதை என்று கூட சொல்ல முடியாத செயல் என்று யார் எடுத்து சொல்வது. இது அதித பெண்களிடம் இருக்கும் சகிப்புத்தன்மை. பல குடும்பங்கள் இன்றும் குடுபங்களாகவே இருப்பதற்கான மேடை இரகசியம் சகிப்புதன்மை.
"என்ன ரெண்டு பேரும் ஏதோ பேசிட்டு இருந்திங்க?" மிடுக்காக கேட்டார் ராகவன்.
"சும்மாதன்ங்க… பேசிட்டு இருந்தோம்"
"பொம்பளைங்க சேர்ந்தாலே எதாச்சும் புரனிதானே பேசுவிங்க?"
"ஆமா நாங்க புரனி பேசுரோம் இவர் மட்டும் இந்தியாவ வல்லரசாக்க கூட்டம் போட்டு கூவுறாங்க. இவங்கள பத்தி நமக்கு தெரியாதா?" மனதில் நொடித்து கொண்டாள் ஆராதனா.
பல விசயங்களில் ஒதிங்கி போனாலும் சிலவற்றிருக்கு நறுக்குக்கென்று குட்டுவைக்காவிட்டால் அவளுக்கு அன்று தூக்கம் ஏது.
"ஏன் ப்பா.. ரகு அங்கிள் நேத்துதானே நம்ம பக்கத்து வீட்டு ரம்யா யாரையோ லவ் பண்றானு சொன்னார். அந்த பையனோட அவள பாத்ததா வேற சொன்னாரே" குற்றி காட்டினாள்.
அவர் அவளை முறைத்து பார்க்க. இன்னும் இருக்கு என்பது போல ஒரு பார்வையோடு "அது ரம்யா தம்பியாம் சித்தி பையனாம் இன்டர்வியூக்கு வந்துருக்கான் அதான் பர்சேஸ் போயிருக்காங்க. அவங்கள பார்த்துதான் ரகு அங்கிள் உருஃபுள்ளா புரனி பேசிட்டு இருந்தார். இன்னைக்கு அவரு பையன் ஏதோ இரண்டு பொண்ணுங்க கிட்ட லவ் பண்றனு ஏமாத்தி காசு வாங்கி பிரச்சனை ஆகிட்டாம். வர வழிலே அவரை பார்த்தேன். போலீஸ் ஸ்டேஷன் போகனுமாம் அதான் அங்கிள் உங்கள தேடி வந்தார். நான் தான் எங்க அப்பா அங்க எல்லாம் வர மாட்டாங்க அது கவுரவ குறைச்சல்னு நினைப்பாங்க சாரி அங்கிள்னு சொல்லிட்டேன். அடுத்தவங்கள பார்த்த நேரத்துல அவரு பையன கவணிச்சிருந்தா இதெல்லாம் நடந்திருக்காது. புரனி பேசுரதே வேலை" முகமும் குரலும் என்னவோ அப்பாவியாக தான் இருந்தது ஆனால் அவள் கண்களில் தெரிந்த நக்கலில் வாயை மூடிக் கொண்டார் ராகவன்.
அவளை எதுவும் செய்ய முடியாமல்
"துர்கா வந்தோனே காஃபி தரமாட்டியா?" என மனைவியை அதட்டினார்.
"கொண்டுவரேன்" அவசரமாக கிட்சனில் நுழைந்தார் அவர் ஒரு ஏளன சிரிப்புடன் உள்ளே சென்றுவிட்டாள் ஆராதனா.
_______
தன் எதிரே எரிந்து கொண்டு இருந்த மெழுகுவர்தியை பார்த்து கொண்டு இருந்தான் அதியன். அது ஒரு 5 star hotel.
அவன் மட்டும் தான் அங்கு இருந்தான் அவன் நினைவு முழுக்க ஆராதனாவை சுற்றிதான். ஏன் என்றே தெரியாமல் அவளை நினைத்தான். அந்த ஹாலில் மெல்லிய சத்ததுடன் ஒரு இசை ஒலித்துகொண்டு இருந்தது. அந்த இடத்தை சுற்றி மெழுகுவர்தியில் இருந்து கமழ்ந்த அரோமா ஒரு மாய உலகையே உருவாக்கி கொண்டு இருந்தது. கழுத்தில் இருத்த செயினில் இருந்த வித்தியாசமான டாலரை பிடித்து இழுத்து கெண்டே திவிரமாக ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தான்.
இதற்க்கு முன்பே இருமுறை அவளை பார்த்திருக்கிறான். அவளும் அவனை பார்த்திருக்கிறாள். இரண்டு முறையும் சொல்லேன்னா ஒரு உணர்வு அவனுக்குள். அன்று அதை அவன் ஆராயவில்லை இன்று அதனை அப்படியே விட முடியவில்லை. தான் மனக்கவிருக்கும் பெண் அருகில் இருக்கும் போது மனம் ஆராதனாவை நாடியதை அவன் உணர்ந்தே இருந்தான். அது உண்மை என்றால் பவித்ராவை விட்டுவிலகவும் அவனுக்கு தயக்கம் இல்லை.
ஒரு முறை வேதா இம்போட்ஸ் அண்ட் எக்ஸ்போட்ஸ் கம்பேனி எம்.டியை பார்க சென்ற போது தன்னிடம் வாலாட்டிய மேனேஜரை கன்னம் மாற்றி கன்னம் பழுக்க அனைவர் முன்னிலையில் அறைந்துக்கொண்டு இருந்தாள். அங்குதான் ஆராதனாவை முதல்முறை பார்த்தான். அன்று அவளை பார்த்தகோலம் இன்றும் கண்ணில் வந்து நின்றது. இதழ் ஓரத்தில் ஒரு புன்னகை உதித்தது அவனுக்கு. எழுத்து பார்க்கிங் நோக்கி சென்றான்.
காரில் எரியவன் தன் கழுத்தில் இருத்த டாலரில் உள்ள பட்டனை அழுத்தி ஆஃப் செய்தவன் தன் மொபைலில் பதிவாகி இருந்த அன்றைய தின நிகழ்வை ஒட விட்டான்.
அது அதியனிடம் உள்ள பழக்கம் எப்போதோ ஆரபித்தது. அவன் கழுத்தில் அணிந்திருந்த செயினில் ஒரு மினி கேமராவை டாலராக மாட்டிருந்தான் அதனுடன் மைக்ரோ போனும். அவன் பார்க்கும் பேசும் அனைத்தும் அவன் போனில் பதிவாகி இருக்கும். அதனை காரில் செல்லும் போது கேட்பது அவனுக்கு பழக்கம். அனைத்தையும் மேமரிகாடுகளில் பதிந்து நாள் குறிப்போடு வைத்திருப்பான். இது யாருக்குமே தெரியாதது.
இன்று காலையில் நடந்ததில் இருந்து அதில் ஒடியது அப்போதுதான் கவணித்தான் அவன் கோபம் டென்சன் எல்லாம் ஆராதனாவை பார்த்த பிறகு தான்.
பவித்ரா வரமுடியவில்லை என்று சொன்னதால் தான் என்று நினைத்து இருந்தான். ஆனால் ஆராதனாவை விஷ்ணுவுடன் பார்த்துதான் அதற்தக்கு காரணமோ என்று இப்போது தோன்றியது.
"ஆராதனா... ஆரா... ஆரு" மெதுவாக சொல்லி பார்த்தான். காற்றில் மிதப்பது போல் தொன்றியது.
இப்போதும் அவன் அதை காதல் என்று நினைக்கவில்லை ஆராதனா மீது ஒரு crush…என்று மட்டுமே நினைத்தான். அதை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த அவளுடன் பழக நினைத்தான்.
பவித்ராவை வேண்டாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டான் அதை உறுதி படுத்துவது போல அந்த காணோளி ஒடியது. அதில் பவித்தரா அதியனை விட வசதியான இளைஞன் ஒருவனுடன் மிக நெருக்கமாக இழைந்துக் கொண்டு இருந்தாள். அதியனின் செயின் கழண்டு விட அதை டேபிலில் வைத்துவிட்டு அவன் கைகழுவ சென்றநேரம் அது நடந்திருந்தது. அதை பார்த்து ஏளனமாக சிரித்தவன் வீடியோவை ஆஃப் பண்ணிவிட்டு புவிக்கு அழைத்தான்.
"ஹலோ அதி எப்போ வருவிங்க?" போனை எடுத்தவுடன் எதிர் முனையில் கத்தினான் அவன்.
"நான் தனியாதான் வருவேன் புவி"
"பவித்ரா எங்க? இன்னைக்கு டின்னர்னு சொன்ன? அப்பா அம்மா தாத்தா லாம் வெயிட் பண்றாங்க"
"அவ வரமாட்ட... நான் வரேன் நம்ம சேர்ந்து சாப்பிடலாம்"
"ஹோஒஒ எதாச்சும் ஒர்க்கா?"
"ப்ச் ஆமா"
"சரி இன்னோர் நாள் இன்வைட் பண்ணிக்கலாம்.. நீ சீக்கிரமா வா"
"நோ இனிமே அவ வரவேண்டாம்"
"என்ன அதி எதாச்சும் சன்டையா? அவசரபடாத அப்பறம் பேசிக்கலாம்."
"இனிமே பேச ஒன்னும் இல்ல. நான் முடிவு பண்ணிட்டேன் புவி" ஒரு நிமிடம் இருவரிடமும் அமைதி நிலவியது.
"சரி அதி நீ என்ன பண்ணாலும் சரியாதான் இருக்கும் என் சப்போர்ட் உனக்குதான். அப்பா கிட்ட பேசிக்கலாம் நீ வா"
"தங்க்ஸ் டா புவி"
"ஒகே ப்ரோ எல்லாரும் வெய்டிங்"
"ஒகே சியு" போனை வைத்தவன் சாலையில் கலந்தான்.
______
செடிகள் மரங்கள் என தங்க நிற சீரியல் பல்புகள் மினுக்க தோட்டத்தில் ஆங்காங்கே வட்ட மேஜைபோட்டு உணவு வகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எல்லோரும் தங்கள் குடும்பங்களுடன் வந்திருந்தனர். சிலர் ரெட் வொயின் கேப்பையுடன் நிற்க சிலர் குளிர்பானத்தை ஏந்தி சலசலத்துக் கொண்டு இருந்தனர். குழந்தைகள் துள்ளி குதித்து விளையாட அவர்களுக்கு இணையாக முயல் குட்டிகளும் ஓடி கொண்டு இருந்தது. அங்கு இருந்தவர்களில் பாதிபேர் காவல் துறை உயரதிகாரிகள் அரசியல் வாதிகள் மற்றவர்கள் பிஸ்னஸ் பிபுள்ஸ் இளைஞர்கள் அனைவரும் ராஜா வீட்டு கண்ணு குட்டிகள் என ஆடம்பர விருந்துகான அத்தனையும் இருந்தது.
அது ஒரு பார்ட்டி நடக்குமிடம். மெல்லிய இசை அவ்விடத்தை நிரப்பி கொண்டு இருந்தது. அனைத்தையும் பாத்து கொண்டு நடந்தார் முரளி.
"யாரு வீடு பா இது? ரெம்ப பெருசா இருக்கு" அந்த பங்களாவை விரல் நீட்டி காண்பித்து கேட்டாள் முரளியின் 7 வயது மகள்.
"இது home minister வீடு டி." தன் தங்கைக்கு பதில் சொன்னான் 12 வயது ரித்திக்.
அதற்குள் அவர்களை பார்த்த விமலன் வரவேற்று பரஸ்பர விசாரிப்பிற்க்கு பின் நகர்ந்தான்.
முரளியின் கண்கள் அந்த எஸ்.பி மேடம் யார்? என்பதை தான் தேடியது. அவரை காக்கவைக்காமல் விமலன் மைக்கை பற்றி பேச ஆரம்பித்தான்.
அவன் ஆரம்பிக்கும் போதே அவன் அருகில் முட்டி வரை மட்டும் உள்ள பேபி பிங் கவுன்அணிந்த பெண் ஒருத்தி வந்து நின்றாள் அவள் காலில் வொயிட் கலர் பாயின்ட் ஹீல்சும் கழுத்தில் இருந்து முழுகை வைத்து இடுப்பிற்க்கு மேலே நின்று போன வொயிட்கலர் லெதர் கிளிட்டர் ஓவர்கோட்டை அணிந்து இருந்ததாள். இடைவரை இருக்க வேண்டிய முடியை சுருட்டி முதுகில் அடக்கிய சீகை அலங்காரம். அதிகம் மேக்கப் இல்லாத முகம். மொத்ததில் பார்பதற்கு பார்பி டால் போல இருந்தாள். பவ்வியமான அழகு.
"வெல்க்கம் ஆல் நான் இன்வைட் பண்ணதை மதிச்சு என் சிஸ்டர்ரோட பிறந்தநாள் விருந்துக்கு வந்தற்க்கு என்னோட நன்றி. அப்பாக்கு ஒரு இம்பாடன்ட் மீட்டிங் அதுனால அவர் கலந்துக்க முடியல ரியலி சாரி பார் தட்."
"சாருக்கு எத்தன தங்கச்சி? ஒருத்தவங்க ரொம்ப சாது போல? இவ்வளவு அமைதியா இருக்காங்க. எங்க அந்த பொண்ண காணும்?" சுற்று முற்றும் தேடியவருக்கு ஏமாற்றமே விமலன் சொல்லிய ஒப்புமையோடு அவர் கண்ணுக்கு ஒரு பெண்ணும் தட்டுபடவில்லை.
"தீ கம்" அந்த பார்பி பெண்ணை அழைத்து அவளை தோளோடு அனைத்தவன்
"உங்கள்ல பாதிபேருக்கு என் சிஸ்டர் யார்னு தெரியாது. அவ இப்போதான் தமிழ்நாட்டுக்கே வந்துருக்கா. ஒகே லெட் மீ இன்ரோடியூஸ் மை டியர் சிஸ்டர் தீ. தக்ஷினா முத்துவேல் ஐ.பி.எஸ் Sp in crime against women and children special wing"
நிமர்ந்து பார்த்தாள் அவள். கண்களில் ஒரு அலட்சியம். கூடவே பிறந்தது போன்ற ஒரு திமிர். வராதசிரிப்பபை வம்படியாக ஒட்டவைத்தது போன்ற ஒரு பாவனை. இப்போது அவர் கண்ணுக்கு முழுவதும் வேறாக தெரிந்தாள் தக்ஷினா.
"அவங்கதான் இவங்களா? இல்ல இவங்கதான் அவுங்களா?" எப்பொழுதும் போல குழம்பியது நம் முரளியேதான்.
.
போகாதடி என் பெண்ணே!
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம், வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது. உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
www.sahaptham.com
By Naney than