8..மருகும் மனதின் ரகசிய அறையில்...!
வீட்டிற்கு வந்த தேவ் நேராக தன் அறைக்கு செல்ல, அங்கே.. அவனுக்காகவே தயாராக காத்திருந்தாள் அன்பினி. அவளிடம் பத்து நிமிடம் டைம் கேட்டவன் குளியலறைக்குள் சென்று, சொன்னது போல் தயார் ஆகி வர... நடப்பதை நம்ப முடியாத அன்பினி அவனையே பார்த்திருத்தாள்
"நீ பண்ண வேலையால எனக்கு ரொம்ப தலைவலி. ஒரே ஒரு காபி மட்டும் குடிச்சிட்டு கிளம்பலாமா " கேட்க,
எதையும் யோசிக்காத அன்பினி
."நீ இங்கையே இரு அக்னி. நான் காஃபி எடுத்துட்டு வரேன்." என்றவள் சிறிது நேரத்திலே காஃபியோடு வர, அதை வாங்கி குடுத்தவன் அவளுடன் புறப்பட்டு சென்றான்.
காரில் மிதமான காதல் பாடல்கள் ஒலிக்க, மித வேகத்தில் காரை தேவ் இயக்கி கொண்டுவர, இந்தப் பயணம் இனிமையானதாக இருந்தது அன்பினுக்கு. அன்பினி கனவுகளில் ஒன்று திரும்பவும்... தேவ்வுடன் இம்மாதிரியான பயணங்கள் தான். அவள் வாழ்வில் இனி இல்லை என்று நினைத்த ஒன்று இப்போது நடப்பதால்... தன்னையே அறியாமல் ரசனையான பார்வையை தேவ் மீது செலுத்த, அதை அவன் உணர்ந்தாலும் வெளிக்காட்டாமல் சாலையில் கவனமானான். பார்வை நீண்டு கொண்டே செல்ல.... தேவ் தான்,
"இப்ப எதுக்கு என்னையே பாத்துட்டு வர."
"அக்னி.. இந்த மாதிரி எவ்வளவு நாளாச்சு . நம்ம ரெண்டு பேர் ஒண்ணா டிராவல் பண்ணி. இது இப்படியே போனா எவ்ளோ நல்லா இருக்கும். அன்பும் அக்னியும் மட்டும்..."
"தரலமா போலாம். ஆனா அக்னி செத்து ஏழு வருஷம் ஆச்சு. இனிமே நீ போகணும்'னா செத்த பிணத்தோட தான் போகனும். அது கூட உனக்கு பிரச்சனையா இருக்காது. யார் இருந்தா என்ன செத்தா என்ன. உனக்கு உன்னோட ஆசை, உன்னோட பழி வாங்குகிற புத்தி, உன்னுடைய ஈகோ மட்டும் போதும். " தேவ்வின் பேச்சில் மனம் வருந்திய அன்பினி மேற்கொண்டு வாதம் வளர்க்காமல் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.
ஷாப்பிங் மாலுக்கு முன்னால் காரை நிறுத்திய தேவ், "உன்னோட பர்ச்சேஸ் முடியை எவ்ளோ நேரம் ஆகும் . "
"எதுக்கு அக்னி கேக்குற." என்றவள் எதிரில் இருப்பவனின் முறைப்பை உணர்ந்து, "ஒரு மணி நேரம் ஆகும்." என்றாள்.
"சரி நீ ஷாப்பிங் பண்ணிட்டு இரு. அரை மணி நேரத்துல நான் வந்துடுவேன்."என்றவன் அங்கிருந்து புறப்பட,
தோள் இரண்டையும் குலுக்கி 'என்னமோ பண்ணு' என்ற பாவத்துடன் அவளும் ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்து கொண்டாள்.
சூர்யா,"விக்ரம்! அந்த சுரேஷ் நீ சொன்ன மாதிரி கரெக்டா பண்ணிட்டானா. கேட்டியா? இங்க பேசும்போதே அவன் முகம் சரியில்லை. பயத்துல ஏதாச்சும் சொதப்பி வைச்சிருக்க போறான்." கேட்க,
"கேட்டுட்டேன் சூர்யா. அந்த தேவ் ஆறு மணிபோல ஆபீஸ்ல இருந்து கிளம்பிட்டான் போல. சுரேஷ் ஏழு மணிக்கு அந்த மெயிலை மாற்றி அனுப்பி இருக்கான். இனி மத்ததெல்லாம் அந்தக் கான்ட்ராக்ட் கம்பெனில நம்ம செட் பண்ணி இருக்க ஆள் பார்த்துப்பான். கவலைப்பட வேண்டியதில்லை."என்ற விக்ரமுக்கு,
" இல்ல விக்ரம் . இதுல அவன் தோத்துட்டா.... அத அங்க இருக்க அன்பினி கிட்ட தான் அவன் காட்டுவான். அது மட்டுமில்லாம முன்ன விட இன்னும் வேகமா நம்மள பழிவாங்க ஆரம்பிச்சிடுவான். ஒருவேளை நாம போட்ட இந்த பிளான் சொதப்பிட்டா இன்னும் அந்த தேவ்வுக்கு கொழுப்பு கூடிடும். அவனுக்கு தொழில்ல மட்டுமில்ல சொந்த வாழ்க்கையிலும் நம்ம அடி கொடுக்கணும். ரெண்டு பக்கமும் நம்ம குடுக்குற பிரஷர் ல அவனுடைய மூளை யோசிக்கக்கூட தயங்கனும். அதான் என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன் விக்ரம்ம்ம்.." என மெதுவாக தேன் கலந்த விஷ பேச்சை விக்ரம் மனதில் ஓட விட....,
சூர்யாவின் வார்த்தைகளில் மயங்கிய விக்ரம்... தேவின் வாழ்வில் புயலை உருவாக்க வழி தேடிக் கொண்டிருக்க, சிறிது நேரம் அவன் சிந்தனையை கலைக்காமல் மனதினுள் சிரித்துக் கொண்டிருந்த சூர்யா மெல்ல.., "விக்ரம் எனக்கு ஒரு ஐடியா."
யோசனையில் இருந்தவன்.. நிகழ்வுக்கு வந்து "என்னவென" கேட்க,
"அந்த தேவ்வுக்கு ஒரு தங்கச்சி இருக்கா. நம்ம வீட்டு பொண்ண எப்படி அவன் டார்ச்சர் பண்ணி கல்யாணம் பண்ணானோ அதே மாதிரி அவன் வீட்டு பொண்ணுக்கும் நம்ம டார்ச்சர் பண்ணனும். அப்போதான் அவன் பண்ண தப்பு அவனுக்கு புரியும்." என்றவனின் பேச்சை மறுக்கும் விதமாக விக்ரம் முகபாவனை காட்ட, அதை புரிந்து கொண்ட விக்ரம் அவனை பேச விடாது, "அது மட்டும் இல்ல . நம்ம வீட்டு பொண்ணு அன்பினியை அவன் அவ்ளோ சாதாரணமா விடமாட்டான். இன்னிக்கு கூட உன் அம்மாவும், பாட்டியும் அன்பினியை பார்க்க வீட்டுக்கு போயிருக்காங்க. அவங்கள உள்ளேயே விடாம.. வாசல்ல நிக்க வச்சு அனுப்பி இருக்கான். இத நம்ம டிரைவர் தான் என்கிட்ட சொன்னான். தெரிஞ்சி இவ்வளவு கொடுமை நடக்குது தெரியாம அன்பினியை என்னென்ன கொடுமை பண்றானோ விக்ரம்."
"அம்மாவும், பாட்டியும் அங்கு போனது உண்மையா... சூர்யா. அவங்க எதுக்கு அங்க போகணும்... " என ஆத்திரமாக கேட்க,
"நீயும் அங்கிளும் அன்பினிய விட்ட மாதிரி ஆன்ட்டியால முடியாது விக்ரம் புரிஞ்சிக்க. என்ன இருந்தாலும் ஒரு அம்மாக்கு தன்னோட பொண்ணு எப்படி வாழுறான்னு பார்க்க ஆசை இருக்கும் . இப்போ நமக்கு அது முக்கியம். இதையே வளரவிட்டா..... நாளைக்கு உன் தங்கச்சி உனக்கு இல்ல ." என்றவனின் வார்த்தையில் இருக்கும் தீவிரத்தை உணர்ந்த விக்ரம்,
"நீ சொல்றது சரிதான் சூர்யா. என்ன இருந்தாலும் அன்பினி என்னோட தங்கச்சி. அவ அங்க கஷ்டப்படும்போது என்னால மட்டும் எப்படி சந்தோஷமா இருக்க முடியும். இந்த வீட்டில செல்லமா வளர்ந்த பொண்ணு. என் தங்கச்சி கஷ்டப்படும் போது அவன் தங்கச்சிய கஷ்டப்படுத்துறது ல தப்பே இல்லை."
சொன்னது போலவே அரை மணி நேரத்தில் வந்துவிட்ட தேவ் , போன் செய்து "எப்ப முடியும்" என அன்பினியே கேட்க,
அவளோ, "முடிஞ்சிருச்சி பில் போட லைன்ல நின்னுட்டு இருக்கேன்" என்று கூற ... சீக்கிரம் வர சொல்லிவிட்டு போனை அணைத்து விட்டான்.
நீண்ட வரிசையில் நின்றவள் தன் முறை வந்ததும்... பணத்தை செலுத்த பர்சில் இருக்கும் கிரெடிட் கார்ட் எடுக்க , அது பர்ஸில் இல்லை. பதறிவள் மற்றொரு கார்ட்டை தேட அதுவும் இல்லாமல் போனது. அங்கிருக்கும் சேல்ஸ்மேன் மணி ஆவதை உணர்த்த..., தனக்கு அடுத்தாக நிற்பவரை பணம் செலுத்த அனுப்பி விட்டு தனியாக வந்து நின்று மீண்டும் தன் பர்ஸை சோதித்து பார்க்க, அப்போதும் அவள் கைகளுக்கு கிடைக்கவில்லை. கார்ட் கையில் இருப்பதால் எப்போதும் பணம் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை அன்பினுக்கு. ஐபோன் வாங்க வந்தவள்... இது ஒரு பன்னாட்டு பொருளகமாக இருப்பதால் ஃபோனோடு சேர்த்து தனக்குத் தேவையான ஆடைகளையும், ஒப்பனை பொருட்களையும் வாங்கி குவித்து விட்டால் இரு லட்சத்தை தொடும் அளவிற்கு. அவளையே பார்த்துக் கொண்டிருந்த சேல்ஸ்மேன் பணத்தை கட்டச் சொல்லி மீண்டும் ஞாபகப்படுத்த..., சிறிது நேரம் யோசித்தவள், கிரெடிட் கார்ட் காரில் இருப்பதாக சொல்லி விட்டு நேராக தேவ்விடம் வந்து , "அக்னி.. கிரேடிட் கார்ட் பர்ஸ்ல தான் வைச்சிருந்த இப்போ எங்கன்னு தெரியல. உன்னோட கார்டு கொடு நான் வீட்டுக்கு வந்ததும் அமௌன்ட் கொடுக்கிறேன்." என்றவளுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் தன் கார்டை கொடுக்க,
"பொண்டாட்டி கேட்டதும் குடுத்துட்ட சோ ஸ்வீட் புருஷா... டா அக்னி நீ." என்றுவிட்டு உற்சாகமாக பணம் செலுத்த சென்றாள்.
அவள் சென்றதும் மௌனமாக சிரித்தவன் கண்களை மூடி இருக்கையில் சாய... நினைவுகள் அரை மணி நேரத்திற்கு முன்பாக சென்றது.
வீட்டிலிருந்து கிளம்பும்போதே அன்பினியிடம் வேண்டுமென்றே தலை வலிக்குது என்று சொன்னவன் அவள் காஃபி எடுத்து வர வெளியில் சென்றதும் .. அவளுடைய பர்ஸில் இருந்த கிரேடிட் கார்ட், டெபிட் கார்டுகள் அத்தனையும் எடுத்தவன் அமைதியாக இருந்து கொள்ள... அவளை இறக்கி விட்டதும் நேராக சென்றது நாகராஜ் வீட்டிற்கு தான்.
வந்தவன் யாரையும் கண்டுகொள்ளாமல் சோபாவில் அமர.. தேவ்வை கண்ட சாந்தி தான் வீட்டில் இருக்கும் அனைவரையும் அழைத்து இருந்தார். அதிகாரத் தோரணையாக அமர்ந்திருந்த தேவ்வை கண்ட நாகராஜ் கொதித்தெழ.. "போதும் போதும் ரொம்ப ஓவரா நடிக்காதீங்க நாகராஜ். நீ என் பொண்ணே இல்ல'ன்னு சொல்லிட்டு... அவ கையில இந்த கார்ட்லாம் எதுக்கு கொடுத்து விட்டீங்க. எதுக்கு இந்த இரட்டை வேஷம். குடும்பத்தோட சேர்ந்து சினிமால நடிக்க போங்க. நல்லா கல்லா கட்டும்." என்றவனிடம் சண்டைக்கு பாய வந்த விக்ரமை தடுத்த செவ்வந்தி, "விக்ரம் என்ன இருந்தாலும் அவரு நம்ம வீட்டு மாப்பிள்ளை. அவர அடிக்க கை ஓங்குறது தப்பு. தன்னோட பொண்டாட்டிக்கு எதுவா இருந்தாலும் தன்னுடைய காசுல செய்யணும்னு நினைக்கிறாரு. இதுல தப்பு ஒன்னும் இல்லையே. இனி அன்பினி அவரோட சொத்து." என்றவர் தேவ்விடம், "இதெல்லாம் அவ இங்க இருந்து போகும்போது எடுத்துட்டு போனது பா. நாங்க எதுவும் கொடுத்து விடல. நீ அதெல்லாம் இங்க வெச்சிட்டு உன் பொண்டாட்டிக்கு என்ன பண்ணனுமோ அதை உன் காசுல பண்ணு."
"இந்த வீட்டிலேயே உங்களுக்கு மட்டும்தான் கொஞ்சம் அறிவு இருக்கு. ஆனா, ஒரு சின்ன திருத்தம் அவ என்னோட பொண்டாட்டி இல்ல. என் பின்னாடி ஓடி வந்தவள். அவளுக்காக என் காச செலவு பண்ண மாட்டேன். வேணும்'னா மூணு வேளை சோறு போட்டு வீட்ல.............. போனா போகுதுன்னு தண்டமா வளர்க்கிறேன்." என்றவன் அங்கிருக்கும் சூர்யாவை ஒரு பார்வை பார்த்தவாறு புறப்பட்டான்.
ஏற்கனவே சூர்யாவின் வார்த்தையில் சிக்கியிருந்த விக்ரம் இப்போது தேவ்வியின் வார்த்தையில் முழுவதுமாக தன் நிலை மறந்து அவனை பழி வாங்கும் கைப்பாவையாக மாறி போனான்.
பணம் செலுத்த சென்ற அன்பினி தேவ்வின் கிரெடிட் கார்ட் டை கொடுக்க , அதை வாங்கிய சேல்ஸ்மேன் சில நொடியிலே "மேடம் கார்ட் டிக்லைன்னு வருது." என கூற, உடனே தேவ்வுக்கு அழைத்தாள்.
அவள் உள்ளே சென்றதும் அழைப்பாள் என்று அறிந்த தேவ் ஜீவாவிற்கு கால் செய்து லைனில் இருக்கும்படி உத்தரவிட்டு இருக்க..., போன் செய்து கொண்டிருக்கும் அன்பினிக்கு கால் வெயிட்டிங்கில் வரத் தொடங்கியயது.
பலமுறை முயற்சித்தும் தொடர்ந்து கால் எடுக்கப் படாமல் இருக்க... நேரமும் அரை மணியை கடந்தது. அங்கிருக்கும் வாடிக்கையாளர் முதல் விற்பனையாளர்கள் வரை எல்லோரும் அன்பினியவே பார்த்திருக்க... அவளுக்குத்தான் மனதில் சொல்லமுடியாத நிலை.
பணம் செலுத்தும் இடத்தில் வேலை பார்க்கும் நபர்.. அன்பினியிடம், "மேடம்.. பேமெண்ட் பண்றீங்களா இல்லையா.. ரொம்ப நேரமா உங்க பொருளாம் டேபிள் மேலேயே இருக்கு. சேல்ஸ் மேனேஜர் வேற இரண்டு தடவைக்கு மேல வந்து கேட்டாரு." என்றவருக்கு பதில் சொல்ல முடியாமல் கடைசியாக ஒருமுறை தேவ்விற்கு அழைக்க,
இந்தமுறை அழைப்பை ஏற்றான்.
"அக்னி போன் பண்ணா எவ்வளவு நேரமா வெயிட்டிங் ல போகுது. ஒரு நிமிஷம் எடுத்து பேசினா என்ன. இங்க நீ கொடுத்த கார்ட் ல பேமெண்ட் பண்ண முடியல. கொஞ்சம் மேல வரியா...." என்றவளின் வார்த்தையில் முதல் முறை அவமான சாயல் இருப்பதாக உணர்ந்த தேவ்,
"இரு நான் வர்றேன்."என்றுவிட்டு போனில் இருக்கும் கேமில் கவனம் செலுத்த,
அன்பினி தான் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் பணியாளரிடம் பத்து நிமிடம் டைம் கேட்டு இருந்தாள். அவள் கேட்ட நேரமும் சென்றிருக்க தேவ் தான் வந்தபாடில்லை. அப்படி இப்படி என ஒரு மணி நேரம் கழிந்து இருக்க... மீண்டுமொருமுறை அவனிற்கு அழைத்த அன்பினுக்கு,
"அச்சோ. மேல வர சொன்ன' ல மறந்தே போயிட்டேன் அன்பினி சித்திரை. போன்ல ஒரு புது கேம் விளையாட ஆரம்பச்சனா அப்படியே ஆர்வமாகி நீ சொன்ன விஷயத்தை மறந்தே போயிட்டேன். நான் ரொம்ப ஸ்வீட் புருஷன் தான. வேணும்'னா இப்ப வரவா அன்பினி சித்திரை."என்றவனின் வார்த்தையில் கண்ணில் நீர் கோர்க்க இவை அனைத்தும் தேவ் வேலை என்பதை புரிந்து கொண்டாள். காட்சி பொருளாக மாறியவள்..வாழ்வில் பார்க்காத அவமானத்தை உணர ஆரம்பித்தாள். எதுவும் பேசாமல் அவனது அழைப்பை துண்டித்து, அங்கு இருப்பவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு பொருட்களை வேண்டாம் என மறுக்க.. அவர்களோ அவளை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்து வைத்தனர். அதை உணர்ந்து மேலும் கூனிக்குறுகியவள் யாரையும் பார்க்காமல் வெளியேற ..., "அன்பினி" என்ற அழைப்பில் நின்றாள்.
"என்னம்மா என்ன ஆச்சு.இங்க நடந்தத நானும் பார்த்துட்டுதான் இருந்தேன். காசு எடுத்துட்டு வரலையா. நகராஜ் பொண்ணுக்கு இந்த நிலைமையா. நான் வேணும்'னா உனக்கு காசு தரவா. என்றவரை நிமிர்ந்து பார்த்தவள் கண்டு கொண்டால் அன்று மண்டபத்திலிருந்து வெளியேற்றிய மணமகளின் தந்தை காமராஜ் என்று. அவரின் பார்வையில் இருக்கும் கேலியை உணர்ந்தவளால் எதுவும் பேச முடியாமல் போக,
"அன்னைக்கு என் பொண்ண அவமானப்படுத்தி அனுப்புன. இன்னைக்கு பாரு.... இப்படி யாரு என்னன்னு தெரியாத மாச சம்பளத்துக்கு வேலை பார்க்கிறவங்க முன்னாடி அசிங்கப்பட்டு நிற்கிற. இதைப் பார்க்க என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு." என்றவருக்கு பதில் சொல்லும் நிலைமையில் இல்லாத அன்பினி மௌனமாக அவரை கடந்து கார் நிற்கும் இடத்திற்கு வந்தவள்... கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தவாறு "போலாம் " என தலைகவிழ்ந்து கூற,
"என்ன அன்பினி சித்திரை... நிறைய பொருள் வாங்கிட்டு வரீங்க போல. இப்படி தூக்க முடியாம தூக்கிட்டு வரீங்க. சொல்லி இருந்தா நான் உதவிக்கு வந்து இருப்பேனே ." தேவ் பேச்சில் இருக்கும் நக்கலை அறிந்தும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
"இதுதான் உனக்கு கடைசி. இன்னொரு தடவை என் வழியில நீ வந்த... இதைவிட மோசமான அவமானத்தை பார்க்க வேண்டிவரும். காலேஜ்ல பார்த்த அந்த அக்னி நான் இல்ல. இப்ப பாத்துட்டு இருக்க தேவ் உனக்கு அடங்கிப் போறவனும் இல்ல. என் வாழ்க்கையில எப்படி வந்தியோ அதே மாதிரி திரும்பி போயிடு. இல்லனா தினம் தினம் இந்த அவமானத்தை தான் நீ பார்க்கணும்.
தேவ்வின் வார்த்தை ஒவ்வொன்றும் கசப்பாய் அவள் நெஞ்சினில் இறங்க.. ஆரம்பித்தது. நினைவுகளோ, 'அன்பு... உன்னை விட்டு எப்பவும் போக மாட்டேன். உன்ன யாருக்காகவும், எதுக்காகவும் எந்த மாதிரி சூழ்நிலை வந்தாலும் விட்டுத்தரவும் மாட்டேன். என் மனசுல உனக்கான இடம் ரொம்ப பெருசு அன்பு. என் வாழ்க்கையில் வந்த முதல் பொண்ணு நீ தான். எப்பவும் என் வாழ்க்கையை விட்டு அனுப்ப மாட்டேன். நீ ஆசைப்பட்ட அத்தனையும் வாங்கி தருவேன் அன்பு. உன்னை ஒரு நாளும் அழ விட மாட்டேன் டி. கல்யாணத்துக்கு அப்புறமும் நீ எனக்கு குழந்தைதான். எவ்ளோ வயசு ஆனாலும் நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல வேற யாரும் வர கூடாது அன்பு. இப்பலாம் உன்ன பிரிஞ்சி இருக்கவே முடியல. காலேஜ் முடிஞ்சதும் வீட்ல சொல்லி ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்.' என பல்வேறு தருணங்களில் தேவ் பேசிய வசனங்களே மனதில் ஓடிக் கொண்டிருக்க.... எப்பேர்பட்ட அன்பை இழந்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தது.
அவள் மௌனத்தில் மகிழ்ந்த தேவ்க்கு கிளம்பும் போது இருந்த இறுக்கம் மாறி.... மனதில் சொல்ல முடியாத நிம்மதி பிறந்தது. அது அவன் இயக்கும் மகிழுந்து வேகத்திலேயே தெரிய ஆரம்பித்தது அன்பினி சித்திரைக்கு.
அம்மு இளையாள்.