6.மாய நிலா
ஷைலு இன்னும் நெருங்கி அவன் மீது சாய.. 'ஐயோ இவ வேற நேரம் காலம் புரியாம, இப்படி இருந்தா, நா எப்படி டி கண்ட்ரோலா இருக்குறது ராட்சசி' என்று புலம்பிக் கொண்டு இருந்தான்.
அவள் துக்கத்தில் ஏதோ பேச, ஆகாஷ் காதுக்கு சரியா கேட்கல சற்று குனிந்து கேட்டான் "மியாவ்.... ஐ லவ் யூ, வான்ட் டூ கிஸ் யூ, வான்ட் டூ ஹக் யூ... ஏன்டா தூரமா போற", என்று பேசிக்கொண்டு இருந்தவள் ஆகாஷை மொத்தமாக சாய்த்து பக்கத்துல படுத்துட்டா.
'அவ பேசுனதும், அடிஆத்தி விட்டா கனவுல குடும்பமே நடத்திடுவா போல' அதிர்ச்சில இருந்தவனை மொத்தமா சாச்சி மேல படுத்துட்டா, 'இவ வேற, ஷாக் மேல ஷாக் கொடுக்குறாளே' என்று ஆகாஷால் புலம்பத்தான் முடிந்தது.
"ஐயோ ஏதேதோ ஹார்மோன்ஸ் எக்குத்தப்பா வேகமாக வேலைசெய்யுதே, ஷைலு எந்திரி டி, புரிஞ்சிக்கோ எந்திரி' அவனும் தட்டி, கிள்ளி ஏதேதோ செஞ்சும் எந்திரிகல.
"ஆபத்துக்கு பாவம் இல்ல தள்ளி விட்டுடலாம்" என்று நினைத்தவன், அவள் முகத்தை பார்த்து என்ன நினைத்தானோ, அவன் மேலே இருதவளை கீழே தள்ளி முத்தமிடத் தொடங்கினான். மூச்சி மூட்டும்வரை தொடர்ந்தது அந்த இனிமையான போர்.
ஷைலு சிணுங்கவும் அவளை நொடி நேரத்தில் திருப்பிப் போட்டு சோபாவில் சாய்த்து படுக்க வைத்தான். ஷைலு மூச்சி வாங்கியபடி எந்திரித்து உட்காந்தா. அவளுக்கு தெளிந்தத பாத்துட்டு வேகமா சட்டையை சரி செஞ்சிட்டு, அவன் சேர்ல போய் சமத்தா உட்காந்துட்டான்.
மூச்சி வாங்கியபடி இருந்த ஷைலு, இப்போ ஆகாஷ் கிஸ் பண்ணது போல இருந்ததே, சுத்தி பார்த்தாள், ஆகாஷ் சமத்தா உட்காந்து வேலை பாத்துட்டு இருந்தான். ஷைலு அவள் தலையை அடித்துக் கொண்டு,
"ச்சை கனவா, கனவுல கூட இவன் தொல்லை தாங்கல" என்று ஏதோ நினைத்து சிரித்துக்கொண்டு இருந்தாள்.
அவளது செய்கையை பார்த்த ஆகாஷ், 'தப்பு பண்றோம், பாவம் பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருக்கா, நம்ம ஓவரா பண்றோம்' என்று நினைத்த ஆகாஷ் ஷைலுக்கு ஆதரவாக.
'ஆகாஷ் இனி அவ பக்கம் போகாத, டேஞ்சர் கொஞ்ச நேரத்துல அவளைபத்தி நினைக்க வச்சிட்டா, கண்ட்ரோல் டா' என்று மனதை சமநிலை படுத்தி.
"போ வீட்டுக்கு, ஆபீஸ் டைம் முடிஞ்சிடுச்சி," என்றான் ஆகாஷ்.
மந்திரித்து விட்ட கோழி போல தலையை ஆட்டிவிட்டு வீட்டுக்கு போய்ட்டா ஷைலு.
இங்க வீட்டில், அகிலா பக்கத்துல கிருஷ்ணன் அமைதியா உட்கார்ந்து இருந்தார்.
"யோவ்வ் அறிவு இருக்கா உனக்கு, புள்ள அப்படி இருக்கிறத பாத்துட்டு நாலு மொத்து மொத்தாம போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி இருக்க, விவஸ்த்தை கெட்ட மனுஷன்" என்று பொரிந்து தள்ளினார் கிருஷ்ணாவை.
"சரி, நா போட்டோ அனுப்பலன்னு வை, நான் வந்து சொன்னா நீ நம்பி இருப்பியா என்ன" என்றார்.
அகிலா இல்லை என்பது போல தலை ஆட்ட, "அதான் போட்டோ எடுத்தேன், அப்புறம் என்ன கேட்ட நாலு மொத்து மொத்தினா நீ சும்மா விடுவியா, என்புள்ளைய ஏன்டா அடிச்சனு, என் சட்டைய பிடிச்சி கேள்வி கேக்கமாட்ட நீ" என்றார் கிருஷ்ணன்.
அதுக்கும் அகிலா தலையை ஆட்ட..
"நல்லா மண்டைய மண்டைய ஆட்டு, நல்ல அம்மா நல்ல புள்ள" என்று கிருஷ்ணன் திட்ட.
"சும்மா என்னவே திட்டுறீங்க புள்ளய ஒழுங்கா வளர்க்கத் தெரில அப்படியே பேச வந்துட்டீங்க" என்று அனைத்து தப்பையும் கணவன் மீது போட்டார் அகிலா.
"ஆமாடி நல்ல பேர் எடுத்தா உன் புள்ள, கெட்ட பேர் எடுத்தா என் புள்ளையா? நல்லா இருக்குடி உன் லாஜிக்" என்றார் கிருஷ்ணன்.
"உங்களை போலத்தான் இருப்பான் உங்க புள்ள, பொண்ணுப்பாக்க வந்த அன்னைக்கே கிஸ் கொடுத்த ஆளுதான நீங்க" என்று கிருஷ்ணனனை அகிலா முறைக்க.
"இப்போ எதுக்கு நீ பழசை லா எடுக்கிற'' என்றார் கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே.
"டேய்ய் சிரிக்காதடா, உன்னால நா கொஞ்ச நஞ்சமா சங்கடப் பட்டேன், நீ பண்ண காரியத்தை பாத்த எங்க வீட்ல ஒரே வாரத்துல கல்யாணம் செஞ்சி கொடுத்துட்டாங்க, என் சுதந்திரம் அன்னைக்கே போயிடுச்சி" என்று ஆகிலா சலித்துக்கொள்ள.
"எது சுதந்திரம் உனக்கு போச்சா, எனக்குத்தான் போச்சி போடி, அகிலா ஒன்னு குடேன் இப்போ" என்று ரொமான்டிக் லுக் கிருஷ்ணன் விட.
"அப்பா மகன் ரெண்டு பேருக்கும் செருப்படி விழும் கொஞ்ச நேரம் இருங்க, இருக்கு ரெண்டு பேருக்கும்" என்று அகிலா பேச்சை மாற்றினார்.
'நல்லா பேச்சை மாற்ற, ஏதோ எனக்கு முன்னப்பின்ன குடுக்காதது போல' என்று நினைத்துக்கொண்டர் கிருஷ்ணா.
"ஹெய் கோவப்பட்டு காரியத்தை கெடுக்காத, அந்த பொண்ணு ரொம்ப நல்லப் பொண்ணு, இதான் சான்ஸ் ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சி வச்சிடலாம், இந்த போட்டோவ வச்சி புரியுதா." காலைல ஷைலு சொன்னது எல்லாம் அகிலாட்ட கிருஷ்ணன் சொல்ல.
"ஏங்க என் புள்ள அப்படியா சொன்னான்" என்று கண்கள் மின்ன.
"நீ வேற அவன் பிசினஸ்ல இருக்க ப்ராப்லம் சரிசெஞ்சிட்டு கல்யாணம் செஞ்சிக்கலாம்னு பிளான் போட்டு இருக்கான், அவன் பிரண்ட கேட்ட அப்போ சொன்னான்".
"ஆமா என் புள்ள ஒரு நல்லது சொல்லிற கூடாது, ஒடனே ஆராய்ச்சி செய்யவேண்டியது" என்று கிருஷ்ணனை செல்லமாக கிள்ளிவைக்க.
ஆகாஷ் வண்டி சத்தம் கேட்கவும் "சரி சரி ஒழுங்கா உங்க அப்பா பண்ண மாதிரி ஒரு வாரத்துல கல்யாணம் செஞ்சி வச்சிடலாம், இல்லனா உன் பையன் நழுவிடுவான்".
"சரிங்க", கோவமாக மூஞ்சை வச்சிக்கிட்டு அகிலா தயாரானார்.
ஆகாஷ் வந்ததும் அம்மா என்று சிறுபிள்ளை போல ஓடிவந்து பக்கத்துல உட்காந்து கட்டிக்கொண்டான். அகிலா பாசமாக பேச வர, கிருஷ்ணா அகிலாவை பார்த்துவிட்டு 'இவளுக்கு நடிக்க கூட தெரில' வலிக்காம அகிலாவுக்கு ஒரு கொட்டு வைத்தார்.
"என்னங்க" என்றாள் மெதுவாக.
ட்ராமா ஸ்டார்ட் பண்ணுடி என்று சைகை செய்து நினைவு படுத்த, அகிலா ஆரம்பித்தார்.
அகிலா ஆகாஷின் கையை தட்டிவிட்டார்.
"என்னாச்சி மா கிருஷ்ணா எதாவது சேட்டை செஞ்சி உங்களை கோபப் படுத்திட்டாரா" என்றான் அம்மா முகத்தை பார்த்துக் கொண்டு.
'ஆவுனா எல்லா பிரச்சனைக்கும் நான்தான் காரணம்னு அம்மா புள்ள பேசவேண்டியது' என்று நினைத்த கிருஷ்ணா, நடக்க போகும் ட்ராமாவை பார்க்க ஆர்வமாக இருவரையும் பார்த்தார்.
"உனக்கு ஒழுக்கத்தை பத்தி சொல்லிக்குடுத்தனா இல்லையா டா?"
"நிறைய சொல்லிக்குடுத்து இருக்கீங்க, இப்படி எதுக்கு கேக்குறீங்க".
"அப்போ எதுக்குடா பட்டப் பகல்ல அதும் ஆபீஸ்ல ஒரு பொண்ண கட்டிப்பிடிச்சிட்டு உட்காந்து இருக்க" என்று திட்டினார்.
ஆகாஷ் முழிக்கிறான் 'எப்படி இவங்களுக்கு தெரிஞ்சது, ஒருவேலை ஸ்பை வச்சி இருக்காங்களா' என்று நினைத்தவன், அம்மாவை சமாளிக்க ஆரம்பித்தான்.
"அம்மா, அது என் பிரண்டு மா'' என்றான் பாவமாக மூஞ்சை வச்சிட்டு.
"எப்படி எப்படி பிரண்டா, அடிவாங்காத யாருடா அவ".
"மா நீ நினைக்கிறது போல எல்லாம் இல்ல, கிளோஸ் பிரண்டு மா அவ".
"அதுக்குன்னு இவ்ளோ கிளோஸ்ஸா" கிருஷ்ணன் காலையில் அனுப்பி வைத்த போட்டோவை காமிக்க.
"போட்டோ நல்லா இருக்கே யார் எடுத்தது மா" என்றான் ஆகாஷ் சாதாரணமாக.
அகிலா முறைக்க, நல்லா வாய குடுத்து மாட்டிக்கிட்டானே, என்ன சொல்ல'.
அகிலாக்கு கோபம் வர "இருக்கும் இருக்கும் நல்லாத்தான் இருக்கும் உனக்கு, இன்னும் ரெண்டு நாளுல எங்கேஜ்மண்ட், ரெடி ஆகிக்கோ கூப்பிடனும்னு நினைக்கிறவங்கள கூப்புட்டுக்கோ, ரெடி ஆகு" என்று கோபமாக பேசிவிட்டு கிருஷ்ணனை பார்த்து கண்ணடிக்க. ஆகாஷ்க்கு தெரியாமல் கிருஷ்ணன் சூப்பர் சொல்ல. அழகான ட்ராமா சிறப்பாக முடிந்தது.
"நீங்க என்ன கிருஷ்ணா பாக்கிற, போ காப்பி போட்டு எனக்கு எடுத்து வா" என்று சொல்லிவிட்டு அகிலா கோவமாக ரூம்க்கு போய்ட்டார்.
ஆகாஷ் கிருஷ்ணாவை பாவமாக பார்க்க.
"என்ன டா மகனே?" என்றார் சிரிப்பை அடக்கிக் கொண்டு.
"அப்பா, அம்மாவை கொஞ்சம் சமாதானப் படுத்துங்க, இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்" என்றான் ஆகாஷ்.
"இப்போ மட்டும் உனக்கு அப்பா கண்ணுக்கு தெரியுதா மகனே" என்றார்.
"அப்பா ப்ளீஸ் பா சரக்கு அடிக்க கூட்டிட்டு போறேன்" என்று பேரம் பேசினான்..
"சரி சரி, நைட் பேசுறேன் அம்மாட்ட போதுமா".
"தேங்க்ஸ் நைனா" ஆகாஷ் கன்னத்தில் எச்சி செய்துவிட்டு போனான்.
"அட ச்சை அம்மாக்கும் மகனுக்கும் வேற வேலை இல்ல, கிஸ் கூட கொடுக்க தெரில எச்ச செஞ்சிட்டு போது பாரு எரும மாடு" என்றார் கிருஷ்ணன்.
அகிலா உள்ள இருந்து, "என்ன அங்க சத்தம்" என்றார்.
"காப்பி போட்டுட்டு இருக்கேன் மா" என்றார் கிருஷ்ணன் .
"எல்லாம் என் நிலைமை இவங்க ரெண்டு பேர்ட மாட்டிகிட்டேன்'' என்றார்.
ஆகாஷ் நகம் கடித்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தான், நைட் எப்போ வரும்னு. நைட் சரி செஞ்சிடலாம்னு சாப்பிட போனா அங்க ஒரு கூட்டமே டைனிங் ஹால்ல உட்காந்து பேசிட்டு இருக்காங்க.
ஆகாஷ் ஷாக்ல பாத்துட்டு நின்னுட்டான்.
அகிலா ஷைலு அப்பாக்கு அதை அனுப்பிவச்சிட்டாரு, சும்மா இருப்பாரா பழனி அடி பின்னிட்டார் ஒரு அடிக்கே சுருண்டுட்டா. அப்போதான் அகிலாவும் கிருஷ்ணனும் போன் செஞ்சி ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு பேசவும், பழனிக்கு அப்போதான் கோபம் குறைஞ்சது. எங்கேஜ்மண்ட் பத்தி பேச அகிலா இரவு உணவுக்கு வர சொல்லிட்டாங்க.
ஆகாஷ் ஷாக் குறையாம வரான், ஷைலு குடும்பமே உட்காந்து இருக்கு, ஷைலு மட்டும் கீழ பாத்துட்டு உட்காந்து இருக்கா.
'இவளுக்கு என்ன, சோகமா இருக்கா, பண்றதுலாம் பண்ணிட்டு உட்காந்து இருக்கிறத பாரு எருமை மாடு', மொறச்சிட்டே காலியான சேர்ல போய் உட்கார்ந்தான் ஆகாஷ்.
ஷைலு டாடி கொஞ்சம் ஜாலியாதான் பேசுவார், இன்னைக்கு பாத்து சைலன்ட்டா இருக்கவும் 'என்னாச்சி இவருக்கு, நம்ம மேல கோபமா இருக்காரோனு' யோசிச்சிட்டு இருக்கான்.
ஷைலு ஒரு முறை கூட நிமிரவில்லை, இவளுக்கு என்னாச்சின்னு ஆகாஷ் பார்க்க.
ஷைலு அப்பா பழனி "சாரி தம்பி" சொல்லிட்டு சாப்பிட ஆரம்பிக்கிறார்.
'இவர் என்ன சம்பந்தம் இல்லாம சாரி சொல்றாரு. பண்றத பண்ணிட்டு நல்லவ மாதிரி இருக்கா இவ, தனியா சிக்கும்போது இருக்குடி உனக்கு'.
எல்லோரும் சாப்டுட்டு எந்திரிச்சி போய் ஹால்ல இருக்காங்க, ஷைலு இன்னும் சரியா சாப்பிடவும் இல்ல எந்திரிக்கவும் இல்ல' என்னாச்சி இப்படி இருக்க மாட்டாளே'.
ஆகாஷ் எந்திரிச்சி போய்ட்ட அப்புறம் ஷைலு எந்திரிச்சி, கிட்சன்ல பிலேட் வைக்க போக".
ஷைலு போவதை பாத்த ஆகாஷ் கோவமாக பின் தொடர்ந்தான் 'இப்போ இருக்கு உனக்கு, தனியா மாட்னியா'
"ஷைலு எதுக்கு இப்படி செஞ்ச,"
"நான் எதுமே பண்ணல ஆகாஷ்". குரலே சரி இல்ல ஷைலுக்கு, அவ பேச்சில எப்போவும் ஒரு துள்ளல் இருக்கும், அது எங்க போச்சினு தெரில.
"எதுமே பண்ணலனு என்ன பாத்து சொல்லு," என்று மூஞ்ச நிமிர்த்தி பார்த்தான்.
நாலு விரல் அவள் கன்னத்தில் பதிந்து இருந்தது, ஆகாஷ் ஒரு அளவுக்கு யூகித்து விட்டான் அந்த போட்டோ பாத்து இருப்பார், போல பழனி அங்கிள்.
"யார் அடிச்சா,"
"யாரும் அடிக்கல" என்றாள் ஷைலு சற்று விசும்பிக் கொண்டு.
கையை பிடித்து இழுத்துட்டு போய், அங்கிள் இதெல்லாம் சரி இல்ல, நானும் தான் தப்பு செஞ்சேன் நீங்க என்ன அடிச்சி இருந்தா கூட நான் பொறுத்து இருப்பேன், அப்புறம் ஷைலுவ அடிக்கிற வேலைலாம் வேணா, லவ் பண்றவங்க ஹக் பண்றது ஒன்னும் கொலை குத்தம் இல்லனு" ஆகாஷ் பாட்டுக்கு கோவமா பேசிட்டு போனான், அவன் பிளான் செஞ்சி வச்சதை எல்லாம் மறந்து. ஷைலுக்கு ஒன்னு நடந்தது, ஆகாஷ் பொங்கிட்டான்.
ஷைலுக்கு ஷாக் 'அப்போ அப்போ... ஆகாஷ் என்ன லவ் பண்றான், அதுகூட தெரியாத முதல்ல இருந்து இருக்கேனேன்னு,' யோசிச்சிட்டே வானத்துல பாரக்குறா ஷைலு, ஆகாஷ பார்க்க.
ஷைலு பாக்கிறத பாத்த ஆகாஷ் "என்னடி அப்படி பாக்குற" என்றான்.
"என்ன லவ் செஞ்சயா நீ" என்றாள் ஆச்சரியமாக.
"ஐயோ ஒளறிட்டோமே" ஆகாஷ் முழிக்க.
ஆகாஷ் பேசினதை பார்த்து வாய் அடச்சி போய் இருந்த எல்லோரும், ''அப்புறம் என்ன மாப்பிள்ளைக்கு பிடிச்சி இருக்கு, ரெண்டு நாள்ல எங்கேஜ்மண்ட் அடுத்த மாசம் கல்யாணம்" என்று சொல்ல எல்லோருக்கும் சந்தோசம்.
ஆகாஷ் ஷைலு கைய பிடிச்சி அவன இழுத்துட்டு போறா அவன் ரூம்க்கு.
"ஹெய் ஆகாஷ் ஏன்டா முன்னாடியே சொல்லலை, நான் எவ்ளோ தவிச்சேன் தெரியுமா, ஆகாஷை கட்டிப்பிடிக்க போனாள்.
அவளை தடுத்த ஆகாஷ் "நீ என் பிரண்டு, என்னால உனக்கு கெட்டது நடக்க வேணான்னுதான் நான் அப்படி சொன்னேன், புரியுதா".
ஷைலுக்கு புஸ்னு போயிடுது "அவ்ளோதானா" என்றாள் ஷைலு சோகமாக .
"அவ்ளோதான் டி" என்றான் ஷைலு கண்களை பார்த்துக்கொண்டு.
'ஐயோ பப்பி பேஸ் வச்சி கொல்றாளே, ஆகாஷ் கண்ட்ரோல், எப்படியும் கல்யாணம் கான்பார்ம் இப்படியே இவள விட்டா இன்னும் டிஸ்டர்ப் செய்வா, ஒரு வருஷம் வர ஜாக்கிறதையா இருக்கனும்னு' யோசிச்சிட்டு இருக்கான்.
"ஆகாஷ் என் மேல லவ்வே வராதா உனக்கு" என்றாள் பாவமாக ஷைலு.
''ஷைலு, எனக்கு அந்த மைண்ட் செட் இல்ல டா, ஒன் இயர் டைம் குடுப்பியா எனக்கு, எனக்கு உன்ன பிடிக்கும், ஆனா அது லவ்னு எனக்கு தெரில, என் செல்ல ராட்சசிடி நீ" என்றான்.
"பிரண்டா ஆவது நினைச்சியே அதுவரை சந்தோசம்டா" என்று சோகமாக அந்த அறையை விட்டு வெளியே போகும்போது. ஆகாஷ் ஷைலு, கையை பிடித்து இழுத்து அவளுக்கு அடி விழுந்த கன்னத்தில் மெதுவாக முத்தம் கொடுக்க, மெதுவா ஆரம்பிச்சவன் அழுத்தமா கொடுக்க.
"டேய்ய் வலிக்குதுடா விடு, பிரண்டுன்னு சொல்றது, முத்தம் குடுப்பான் கட்டிப்பிடிப்பான், போடா, உன்னால் எனக்கு மண்டை குழம்புது" என்று ஷைலு புலம்பிவிட்டுச் சென்றாள்.
ரெண்டு நாள் ஆகாஷ் ஷைலு கூட ஷாப்பிங்க்கு போக பிளான் போட்டுட்டான், என்னதான் இருந்தாலும் லவ்வர் ஆச்சே, எங்கேஜ்மண்ட சும்மா ஏனோதானோன்னு நடக்க விட்டுடுவானா என்ன நம்ம ஆகாஷ்.
அவளுக்கு எல்லாமே பெஸ்டா பிடிச்சதை வாங்கனும்னு யோசிச்சிட்டே படுத்தான். ஏதோ பாரம் குறைந்தது போல பீல் ஆகாஷ்க்கு.
மாயா மாயம் செய்ய வருவாள்...