ரசிகையின் கவிஞன்
12
கவிஞனே...
உன் ரசிகையின்
வேண்டுகோள் இது...
கவியில் கண்ட உன் உருவத்தை
நிஜத்தில் காண விழைகிறேன்...
பாரதியின் படத்தில் மறைந்திருக்கும் என் பாரதியே...
உந்தன் காதலி தரிசனத்திறக்காய்
நீ ஏங்குகிறாய்....
உன் தரிசனத்திற்காய்
நான் ஏங்குகிறேன்..
என் செயல் கண்டு கோபம் கொள்ளாதே...
உன்னவள் ரொம்பவும் அகங்காரியோ..
என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை...
அவள் உன்னைப் புறக்கணிப்பதை..
கோவம் கொள்கிறேன் அவள்மீது...
உன் மீது காதல் கொள்ளத்தான் கொடுப்பினை இல்லை அவள் மீது கோபமாவது பட்டுக்கொள்கிறேனே...
உனக்காய் தவிக்கும் மனதினை அடக்க வழிதெரியாமல் தவிக்கிறேன்...
சிறிது சிறிதாய்
மாற்றிக் கொள்ள முயல்கிறேன்..
நிழற்படத்தை அனுப்பு இது நிஜமில்லை என்பதையாவது உணர்கிறேன்....
13
ரசிகையே..
என்னவளைக் கோபிக்காதே..
அவளின் எண்ணத்தில் நானில்லை என்பது என் தவறேயன்றி அவளது தவறில்லையே....
காதலின் காந்தவிசையை அவள் காணவில்லை என்னிடம்..
காதலுக்கு முக்கிய காரணியே
ஏதோ ஒரு ஈர்ப்பு தானே..
அவள் கண்களில் நான் கண்ட ஈர்ப்பை என்னில் எதிலுமே அவள் காணவில்லை போலும்
கோவிக்காதே பெண்ணே..
என் நிழற்படத்தை கண்டாவது நிஜத்தினை உணர்ந்து கொள்கிறேனென்றாய்...
இதோ என் முகநூலில் இன்று முதல் நான் நிஜமானவனாக...
என் தந்தைக்கு பிடித்த பாரதியும்
தாய்க்கு பிடித்த கண்ணனுமாய்
நான் பாரதிகண்ணன்
ஆனேன்..
இத்தனை நாட்களாய் கண்ணன் மறைந்து பாரதி மட்டுமே இருந்தான்
இனி பாரதி கண்ணனாய்...
14
இது நீயா..?
நிஜமாகவே நீயா...?
இத்தனை நாட்களாக
உனையா ஒதுக்கினேன்..?
உன் கவி முழுமைக்கும் சொந்தக்காரி நானா..?
அந்த அகங்காரி நானாய் போனேனா..?
நிச்சயமாய் நீ இவ்வளவு தூரம் என்னை காதலிப்பாய் என்பதை நேரில் நான் உணரவில்லை
பருவவயதுக் கிளர்ச்சியென
கடந்திட நினைத்தேன்.
நிச்சயமாய் நீயாய் இருப்பாயென நான் எண்ணவில்லை...
உன் கவிகண்டே காதல் கொண்டேன்...
அக்கவியே எனக்கென்று
அறியா பேதையாய் போனேனே..
ஆர்பறித்த கடலாய்
பொங்கிய மனம்
குற்றாலச் சாரலாய் குதுகலிக்கிறது..
உன்னை கண்ட நாட்களையெல்லாம்
திரும்ப ஓட்டிப் பார்க்கிறேன்
என் நினைவலைகளில்..
அடிக்கரும்பின் ருசியாய் இனித்துக்கிடக்கிறது இதயம்.
படபடத்துப் பறக்கும் பட்டாம்பூச்சியாய்
ஆகாச வீதியில் பறக்கிறேன்..
உனைக் காணத் இதயம் துடிக்கிறது..
இதோ ஒடித் திறக்கிறேன் இத்தனை நாட்களாய் திறந்திறாத என் வீட்டுச் சன்னலை..
உன் வீட்டு மாடியில் அமர்ந்திருக்கும் உன் கண்களில் பளிச்சென ஒரு மின்னற்கீற்று..
ஆணின் கண்கள் வசீகரமானதென்று உணர்கிறேன் இப்போது...
உனைக் கண்டு கொண்டதாய் காட்டிக் கொள்ளவில்லை நான்..
வெட்கத்தில் மருதாணி இல்லாமேயே சிவக்கிறேன்..
நாணத்தில் துடித்த இதழ்களை பற்களைக் கொண்டு கடிவாளமிடுகிறேன்..
மறைந்திருந்து நோட்டமிடுகிறேன் உன்னை..
உன் கண்கள் என்னை தேடித் தவிக்கின்றன..
உன் முகவாட்டம் எனை ஏதோ செய்ய என்றுமில்லாத் திருநாளாய்
இன்று என்வீட்டு ஜாதிக் கொடியில் பூப்பறிக்கவென மூங்கில் கூடையுடன் வாசலைடைகிறேன்..
உன் முகம் முழுக்க வானவில்லின் வர்ணஜாலம்...
காதல் இத்தனை இன்பமானதா..
ஒயிலாய் ஒவ்வொரு பூக்களாய் என் விரல்கள் பறிக்க
என் இதயத்தில் என் கண்ணனின் கவி எழுதும் விரல்களோடு என் விரல்கோர்த்திருந்தது.
கண்ணா..
நானே மீரா..
உன் மீரா..
ஆனால் உன்னிடம் கூறப் போவதில்லை நான்.
நீயாக என்னிடம் நேரில் கூறவேண்டும்..
ரசிகையாய் உன்னை காதலிப்பேன்..
மீராவாய் உன்னோடு கண்ணாமூச்சி ஆடப்போகிறேன்..
என் கண்ணனே
ஆடிப் பார்ப்போமா
காதல் கபடியை..
மீண்டும் ரசிக்கலாம்...