- Messages
- 130
- Reaction score
- 162
- Points
- 43
அத்தியாயம் 50
அடுத்த நாள் மதியத்திற்கு மேல், பயணத்தில் வாடி வதங்கிப் போயிருந்தனர் ஸ்வேதாவும் ரோஷினியும். வருணிடம் மறுபேச்சுக் கூடப் பேச முடியாமல், அவனது தோளில் சாய்ந்தபடி நடந்து கொண்டிருந்தாள் ஸ்வேதா.
"இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்" என்று ஸ்வேதா கேட்க
"அதோ அந்த முந்திரித் தோப்பைத் தாண்டுனா வந்துடும். முன்னாடியே சொல்லிருந்தா பைக் வந்துருக்கும் கூப்பிட்டுப் போக" என்றான் வருண்
"அப்போ அவங்களுக்குத் தெரியாதா, நாம வரோம்ணு" என்று ஸ்வேதா கேட்டிட
"நான் வரேன்னு தெரியும்..." என்று இழுத்தான் வருண்
"என்ன நிறைய பேர் இருக்காங்க. எதாவது ஃபங்க்ஷனா" என்ற ஸ்வேதா வருணிடம் இருந்து விலகி நடக்க
அவளது கையை இழுத்துத் தன் தோளில் வைத்துப் பிடித்துக் கொள்ளச் செய்த வருண் "ஆமா நிச்சயதார்த்தம்" என்று பதில் மொழிந்தான்
"யாருக்கு உங்க தம்பிக்கா" என்று ஸ்வேதா கேட்க, வருண் மெதுவாகப் புன்னகைத்துத் தலையாட்டினான்
"இன்னும் கொஞ்சம் முடி வளந்த பிறகு வந்துருக்கலாம். எல்லாரும் விநோதமா பாக்கப் போறாங்க" என்றபடி ஸ்வேதா தனது தலையை வருடிக் கொள்ள
"போதும் போதும். இப்போ தான் பெங்களூர் ஃபிகர் மாதிரி இருக்க" என்று கண் சிமிட்டினான் வருண்
"ரோஷினி முன்னாடி..." என்று ஸ்வேதா சீற்றத்துடன் முறைக்க
"இப்படிலாம் பேசக் கூடாதா. அவளுக்குக் காதுல விழுந்துருக்காது விடேன்" என்றான் வருண்
"உங்கள அப்புறமா கவனிச்சுக்குறேன்" என்று ஸ்வேதா முணுமுணுக்க, சுற்றி இருந்தவர்கள் இவர்களையே கவனிக்க ஆரம்பித்தனர்
"இவங்களாம் உங்க சொந்தக்காரங்க தான. ஏன் பேச மாட்டங்குறாங்க" என்று ஸ்வேதா கேட்க
வருணின் அருகில் அவசரமாய் வந்த அவனது தம்பி, அவனது பெட்டியை வாங்கிக் கொண்டபடி
"எவ்ளோ மெதுவா வர. என் வாழ்க்கையே அங்க ஊசலாடிட்டு இருக்கு. ஏன்டா இதுலயுமா லேட் பண்ணுவ" என்று பதற்றத்துடன் கேட்டான்
"அதான் வந்துட்டேன்ல... இது" என்று வருண் அறிமுகப்படுத்த நினைக்க
"எனக்குத் தெரியும். ஸ்வேதா அண்ணியும் ரோஷினியும் தான. ஹாய் அண்ணி, நாம அப்புறம் பேசலாம்" என்றவன் அவர்களிடம் இருந்து நழுவிக் கொண்டான்
வருண் வாசலில் போய் நிற்க, அனைவரின் பார்வையும் அவர்களின் மீதே இருந்தது. அவள் மெதுவாகத் தன் கையை விலக்க முயல, அவனோ விடாமல் பிடித்துக் கொண்டான்.
வெளியில் வந்த வருணின் அப்பா "யாருடா இது... உன் ஃப்ரெண்டா" என்று கூர்ந்த பார்வையுடன் கேட்க
வருணோ ரோஷினியைக் கையில் தூக்கிக் கொள்ள, கொட்டாவி விட்டபடி இருந்தவள் "தூக்கம் வருதுப்பா" என்றபடி அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்
அடுத்த நிமிடம் அங்கு பெரிய சலசலப்பு ஏற்பட, ஸ்வேதா முதலில் எதையும் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தாள். வருணின் தந்தை சத்தம் போட, பதிலுக்கு இவனும் பேச, நடுவில் வந்த வருணின் தாயார் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தபோது தான் சற்றே இரைச்சல் அடங்கியது. அவர்கள் பேசியதில் இருந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிச்சயதார்த்தம் வருணுக்காக தான் என்பதை ஸ்வேதாவால் புரிந்து கொள்ள முடிந்தது.
இறுதியாக அந்தப் பெண்ணின் தந்தை "உன்ன நம்பி தான அவள வச்சிருந்தேன். இப்போ திவ்யாவ யாரு கட்டிப்பா" என்று முறையிட
"நான் இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லனு எத்தனையோ தடவ சொல்லிட்டேன் மாமா. என்னால தான் உங்க பொண்ணு வாழ்க்கைக் கெட்டுப் போச்சுனு சொல்லாதீங்க. எனக்கு பதிலா என் தம்பி அவளைக் கட்டிப்பான்" என்று வாக்களித்தான் வருண்
"நீயே இப்படிக் கல்யாணம் ஆனதைக் கூட மறைச்சுப் பிள்ளையோட வந்து நிக்குற. உன் தம்பிய மட்டும் எப்படி நம்புறதாம்" என்று திவ்யாவின் தாய் வாய்ப் பொத்தி அழ
"தருண்... இங்க வாடா. இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதம் தான" என்று வருண் சத்தமாகக் கேட்டான்
"நீங்க சொன்னா சரிங்க தான் அண்ணா" என்று தருண் பவ்யமாகக் கூற
"அப்புறம் என்ன மாமா. இதே வீடு வாசல்ல அவனுக்கும் பங்கு இருக்கு. நல்ல வேலைலயும் இருக்கான். உங்க பொண்ணுக்கு வேணா விருப்பமானு கேட்டுக்கோங்க. என் தம்பி நான் சொல்லுறத மீற மாட்டான்" என்று வருண் சொன்னான்
"என் பொண்ணும் என் பேச்சை தான் கேப்பா" என்றபடி துண்டை உதறித் தோளில் போட்டார் வருணின் மாமா
மாலைக்குள் தருணுக்கும் திவ்யாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிய, ரோஷினியைத் தன் தாயிடம் தூங்க வைத்த வருண் ஸ்வேதாவை அழைத்துக் கொண்டு முந்திரி தோப்பினுள் சென்றான்
வருண் ஒரு மரத்தின் மேல் ஏறி அமர, "இங்க என்ன தான் நடக்குது. எனக்கு ஒன்னும் புரியல" என்றாள்
ஸ்வேதா சலிப்புடன்
அவளின் கையைப் பற்றி மேலே தூக்கியவன் "ஷார்ட்டா சொல்லணும்னா, எங்க அம்மாவுக்கும் தம்பிக்கும் எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு, குழந்தை இருக்குனு ரொம்ப நாள் முன்னவே சொல்லி வச்சுட்டேன். திவ்யாவும் தருணும் லவ் பண்ணிட்டு இருந்தாங்க, அவங்களையும் இப்போ சேத்து வச்சாச்சு. அவ்ளோ தான்" என்றான் காதருகில்
"அவ்ளோ தான் உங்க வீட்டுல இருக்கறவங்களோட ரியாக்ஷனா... ரோஷினி உன் குழந்தைனு சொன்னதும் நம்பிட்டாங்களா" என்று ஸ்வேதா வியப்புடன் கேட்க
"நான் வருஷக் கணக்கா ஊர்ப் பக்கமே வரல. அதனால உடனே நம்புறாங்க. அது தான நமக்கும் வேணும்" என்றவன் அவளது இடுப்பைப் பற்றி அருகில் இழுக்க, கால்களில் இருந்த செருப்பு நழுவிக் கீழே விழுந்தது
"ஹே... என்ன பண்ணிட்டு இருக்க நீ. விழுந்துடப் போறோம். கைய எடு" என்று ஸ்வேதா முதல் தொடுகைக்கே சிணுங்க
"ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... சத்தம் போடாத. யாராச்சும் கேட்டா தப்பா நினைப்பாங்க" என்றவன் அவளை இறுக்கி அணைத்தான்
அவளுக்கு உடலெல்லாம் கூசி, வெட்கம் பொங்கி வழிந்த கணத்தில் "ஆஹ்ஹ்ஹ்" என்று கத்தி வைத்தாள்
அவள் காதோரம் முகத்தை வைத்தவன் "இன்னும் எதுவுமே பண்ணலையே" என்றான் கிசுகிசுப்பாய்
"ம்ப்ச்ச்... கட்டெறும்பு கடிச்சுருச்சு" என்றாள் ஸ்வேதா வலியில் முகம் சுளித்து
"எங்க" என்றவன் எறும்பு கடித்து வீங்கியிருந்த தோள்பட்டையில் அதை விட வலுவாகக் கடித்து வைக்க, எறும்பு கடித்த விறுவிறுப்பிலும் இவன் செய்ததால் ஏற்பட்ட குறுகுறுப்பிலும் தாமதிக்காமல் மரத்திலிருந்து கீழே குதித்து இருந்தாள் ஸ்வேதா
"ஏய், எங்க போற" என்று வருண் பரிதாபமாகக் கேட்க
"போடா ஃப்ராடு" என்றவள் தோள்பட்டையைத் தேய்த்தபடி வீட்டை நோக்கி ஓடினாள்
வீட்டினுள் நுழைந்தவளை வருணின் அப்பா முறைத்துப் பார்க்க, அங்கு வந்த வருணின் அம்மா "வாம்மா குளிக்கப் போகலாம்" என்று அழைத்துச் சென்றார்
"நீயும் இதுக்கெல்லாம் கூட்டா... நடத்துடி நடத்து" என்று தந்தை சிடுசிடுப்புடன் கூற
"அவரு கிடக்குறாரு. முரட்டு மனுஷன் எப்பவும் இப்படி தான் பேசுவாரு" என்ற வருணின் அன்னை ஸ்வேதாவுடன் சிறிது நேரத்தைக் கழித்தார்
நன்றாகக் குளித்து உண்டு முடித்த ஸ்வேதா அப்படியே படுத்து உறங்கியும் போனாள். அவள் எழுந்த போது அருகில் தூங்கிக் கொண்டிருந்த ரோஷினியைக் காணவில்லை. ரோஷினி எங்கே என்று ஸ்வேதா தேடிச் செல்ல, அவளோ வருணின் உறவினர் ஒருவர் வைத்திருந்த குழந்தையின் அருகில் அமர்ந்து இருந்தாள்.
"தம்பிய என் கிட்டத் தாங்க" என்று ரோஷினி கேட்க
"இது தம்பி இல்ல பாப்பா" என்றார் அக்குழந்தையின் அம்மா
"எனக்குத் தம்பி தான் வேணும்" என்று ரோஷினி சொல்ல
அருகில் இருந்த தருண் "உனக்குத் தம்பி தான வேணும்" என்று கேட்டபடி அவளைத் தூக்கிக் கொண்டு, தங்கள் தாயிடம் பேசிக் கொண்டிருந்த வருணிடம் சென்றான்
"டேய் அண்ணா... ரோஷினிக்கு என்னமோ வேணுமாம் கேளு" என்று தருண் சொல்ல
பின்னாலே வந்து நின்றிருந்த ஸ்வேதா அவசரமாய் "அதெல்லாம் எதுவும் இல்ல. ரோஷினி வா கார்ட்டூன் பாக்கலாம்" என்றாள் முந்திக் கொண்டு
"அம்மா... என்னமா அண்ணி இப்படி வெக்கப்படுறாங்க" என்று தருண் புன்கையுடன் சொல்ல
"ஏன் என்ன நடந்துச்சு. ரோஷினி தங்கம் என்ன வேணும்... கேளுமா" என்றார் வருணின் தாய்
"எனக்கா... தம்பி வேணும்" என்று ரோஷினி உரக்கச் சொல்லிக் கொண்டிருக்க, ஸ்வேதா அங்கிருந்து வேகமாக நழுவினாள்
தெடர்ந்து வந்த அவர்களின் சிரிப்பொலியோ அவளைத் தூங்க விடாமல் செய்து கொண்டிருந்தது. இப்போது கண்களைக் கூட மூட முடியாமல், ஸ்வேதா படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். நேரம் கழித்து ரோஷினியோடு வருண் உள்ளே வர, உடனே கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். ரோஷினியை அவளுக்கு அருகில் படுக்க வைத்தவன், அதற்கு பிறகு எந்தச் சத்தமும் எழுப்பவில்லை. என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக ஸ்வேதா திரும்ப, வருண் அப்போது தான் வெறும் வேஷ்டியுடன் நின்றபடி அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.
மறுபடியும் கண்களை மூடிக் கொள்ளலாம் என அவள் திரும்ப "தூக்கம் வரலையா" என்று கேட்டான் வருண்
ஸ்வேதா முகத்தை அவனுக்குக் காட்டாமல் அமைதியாகவே படுத்திருக்க, "ஏமாத்துக்காரி" என்று இதழ் விரித்துச் சொல்லியபடி அருகில் வந்தான்
"ஏய் எழுந்திருடி" என்று அவன் சொல்ல, போர்வையை இழுத்து முகத்தில் மூடிக் கொண்டாள் ஸ்வேதா
வெட்கத்தில் சுருண்டு கிடந்தவளை அப்படியே தூக்கியவன், கட்டிலில் இருந்து தள்ளிச் சென்று அவளைக் கீழே கிடத்தினான்
அவளுடன் அவன் ஒரு போர்வையில் தஞ்சம் புக "உங்களுக்குத் தூக்கம் வரலையா" என்றாள் ஸ்வேதா வேறெங்கோ பார்த்தபடி
அவளது முகத்தை நேராக்கிப் பார்த்தவன் "நான் சொன்ன நாள் வந்துடுச்சு பாப்பு. இனி என் கிட்டருந்து தப்பிக்க முடியாது" என்றான் மர்மப் புன்னகையுடன்
"ரோஷினி சின்ன பொண்ணு. விவரம் தெரியாம கேட்டுட்டா" என்று ஸ்வேதா சமாளிக்க
"சரி விடு. எத்தன நாளைக்கு தான் இப்படியே இருக்கன்னு பாக்குறேன்" என்றவன் அவளிடம் இருந்து விலகி எழுந்தான்
எழ முயன்றவனைத் தோளோடு இறுக்கிப் பிடித்தவள் உணர்ச்சி வசத்தில் அவன் முதுகில் முத்தம் பதித்து ஒன்றினாள்
"பெரிய பாப்பாக்கும் எதோ தரணும் போலவே" என்றவன் அவள் இதழ்களை வலிக்க வலிக்கப் பருக, வலி கலந்த சுகத்தில் கண்களை மூடிய ஸ்வேதா அதற்கு பிறகு கண்களைத் திறக்கவே இல்லை
இருவரும் ஒருவரின் உள் மற்றவர் வெளிவர முடியாமல் புதைய முயல, நேரம் அவர்களது நெருக்கத்தின் தகிப்பில் கரைந்தோடியது. வருண் அவனது வேகத்தைக் காட்டிக் கொண்டிருக்க, இரு மடங்காகத் தன்னை இழந்து கொண்டிருந்தாள் ஸ்வேதா. மனமும் உடலும் ஒருவித திருப்தி நிலையை அடைய, ஒருவர் அணைப்புக்குள் மற்றொருவர் அடைக்கலம் புகுந்தனர்.
அவனது மார்பில் படுத்துக் கொண்டு நிமிர்ந்து முகம் பார்த்த ஸ்வேதா "எதுக்காக உண்மைய சொல்லாம, ரோஷினிய உன் குழந்தைனு சொல்லிட்டு இருக்க. இதனால உனக்குத் தேவையில்லாத கெட்டப் பேரு தான்" என்றாள் வருந்தி
"உண்மைய தான சொன்னேன். ரோஷினி என்னோட பொண்ணு" என்று வருண் உறுதியாய் சொல்ல
"டூ ஐ டிசர்வ் யூ" என்றாள் ஸ்வேதா மெல்லியக் கலக்கத்துடன்
"லூசு பாப்பா... வி ஆர் க்யூட் அன்ட் ஸ்வீட் லிட்டில் ஃபேமிலி, ரைட்" என்று வருண் கனிவாகக் கேட்டிட
"தெரியுமா... லவ் யூ சோ மச்" என்றவள் அவன் உதட்டில் தீமூட்டி மீண்டும் அவனிடம் தொலையத் தயாரானாள்
எத்தனை நாள் ஏக்கம்
என்னில் உந்தன் தாக்கம்
மீள முடியா தயக்கம்
தந்து போனாய் மயக்கம்
அடுத்த நாள் மதியத்திற்கு மேல், பயணத்தில் வாடி வதங்கிப் போயிருந்தனர் ஸ்வேதாவும் ரோஷினியும். வருணிடம் மறுபேச்சுக் கூடப் பேச முடியாமல், அவனது தோளில் சாய்ந்தபடி நடந்து கொண்டிருந்தாள் ஸ்வேதா.
"இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்" என்று ஸ்வேதா கேட்க
"அதோ அந்த முந்திரித் தோப்பைத் தாண்டுனா வந்துடும். முன்னாடியே சொல்லிருந்தா பைக் வந்துருக்கும் கூப்பிட்டுப் போக" என்றான் வருண்
"அப்போ அவங்களுக்குத் தெரியாதா, நாம வரோம்ணு" என்று ஸ்வேதா கேட்டிட
"நான் வரேன்னு தெரியும்..." என்று இழுத்தான் வருண்
"என்ன நிறைய பேர் இருக்காங்க. எதாவது ஃபங்க்ஷனா" என்ற ஸ்வேதா வருணிடம் இருந்து விலகி நடக்க
அவளது கையை இழுத்துத் தன் தோளில் வைத்துப் பிடித்துக் கொள்ளச் செய்த வருண் "ஆமா நிச்சயதார்த்தம்" என்று பதில் மொழிந்தான்
"யாருக்கு உங்க தம்பிக்கா" என்று ஸ்வேதா கேட்க, வருண் மெதுவாகப் புன்னகைத்துத் தலையாட்டினான்
"இன்னும் கொஞ்சம் முடி வளந்த பிறகு வந்துருக்கலாம். எல்லாரும் விநோதமா பாக்கப் போறாங்க" என்றபடி ஸ்வேதா தனது தலையை வருடிக் கொள்ள
"போதும் போதும். இப்போ தான் பெங்களூர் ஃபிகர் மாதிரி இருக்க" என்று கண் சிமிட்டினான் வருண்
"ரோஷினி முன்னாடி..." என்று ஸ்வேதா சீற்றத்துடன் முறைக்க
"இப்படிலாம் பேசக் கூடாதா. அவளுக்குக் காதுல விழுந்துருக்காது விடேன்" என்றான் வருண்
"உங்கள அப்புறமா கவனிச்சுக்குறேன்" என்று ஸ்வேதா முணுமுணுக்க, சுற்றி இருந்தவர்கள் இவர்களையே கவனிக்க ஆரம்பித்தனர்
"இவங்களாம் உங்க சொந்தக்காரங்க தான. ஏன் பேச மாட்டங்குறாங்க" என்று ஸ்வேதா கேட்க
வருணின் அருகில் அவசரமாய் வந்த அவனது தம்பி, அவனது பெட்டியை வாங்கிக் கொண்டபடி
"எவ்ளோ மெதுவா வர. என் வாழ்க்கையே அங்க ஊசலாடிட்டு இருக்கு. ஏன்டா இதுலயுமா லேட் பண்ணுவ" என்று பதற்றத்துடன் கேட்டான்
"அதான் வந்துட்டேன்ல... இது" என்று வருண் அறிமுகப்படுத்த நினைக்க
"எனக்குத் தெரியும். ஸ்வேதா அண்ணியும் ரோஷினியும் தான. ஹாய் அண்ணி, நாம அப்புறம் பேசலாம்" என்றவன் அவர்களிடம் இருந்து நழுவிக் கொண்டான்
வருண் வாசலில் போய் நிற்க, அனைவரின் பார்வையும் அவர்களின் மீதே இருந்தது. அவள் மெதுவாகத் தன் கையை விலக்க முயல, அவனோ விடாமல் பிடித்துக் கொண்டான்.
வெளியில் வந்த வருணின் அப்பா "யாருடா இது... உன் ஃப்ரெண்டா" என்று கூர்ந்த பார்வையுடன் கேட்க
வருணோ ரோஷினியைக் கையில் தூக்கிக் கொள்ள, கொட்டாவி விட்டபடி இருந்தவள் "தூக்கம் வருதுப்பா" என்றபடி அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்
அடுத்த நிமிடம் அங்கு பெரிய சலசலப்பு ஏற்பட, ஸ்வேதா முதலில் எதையும் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தாள். வருணின் தந்தை சத்தம் போட, பதிலுக்கு இவனும் பேச, நடுவில் வந்த வருணின் தாயார் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தபோது தான் சற்றே இரைச்சல் அடங்கியது. அவர்கள் பேசியதில் இருந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிச்சயதார்த்தம் வருணுக்காக தான் என்பதை ஸ்வேதாவால் புரிந்து கொள்ள முடிந்தது.
இறுதியாக அந்தப் பெண்ணின் தந்தை "உன்ன நம்பி தான அவள வச்சிருந்தேன். இப்போ திவ்யாவ யாரு கட்டிப்பா" என்று முறையிட
"நான் இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லனு எத்தனையோ தடவ சொல்லிட்டேன் மாமா. என்னால தான் உங்க பொண்ணு வாழ்க்கைக் கெட்டுப் போச்சுனு சொல்லாதீங்க. எனக்கு பதிலா என் தம்பி அவளைக் கட்டிப்பான்" என்று வாக்களித்தான் வருண்
"நீயே இப்படிக் கல்யாணம் ஆனதைக் கூட மறைச்சுப் பிள்ளையோட வந்து நிக்குற. உன் தம்பிய மட்டும் எப்படி நம்புறதாம்" என்று திவ்யாவின் தாய் வாய்ப் பொத்தி அழ
"தருண்... இங்க வாடா. இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதம் தான" என்று வருண் சத்தமாகக் கேட்டான்
"நீங்க சொன்னா சரிங்க தான் அண்ணா" என்று தருண் பவ்யமாகக் கூற
"அப்புறம் என்ன மாமா. இதே வீடு வாசல்ல அவனுக்கும் பங்கு இருக்கு. நல்ல வேலைலயும் இருக்கான். உங்க பொண்ணுக்கு வேணா விருப்பமானு கேட்டுக்கோங்க. என் தம்பி நான் சொல்லுறத மீற மாட்டான்" என்று வருண் சொன்னான்
"என் பொண்ணும் என் பேச்சை தான் கேப்பா" என்றபடி துண்டை உதறித் தோளில் போட்டார் வருணின் மாமா
மாலைக்குள் தருணுக்கும் திவ்யாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிய, ரோஷினியைத் தன் தாயிடம் தூங்க வைத்த வருண் ஸ்வேதாவை அழைத்துக் கொண்டு முந்திரி தோப்பினுள் சென்றான்
வருண் ஒரு மரத்தின் மேல் ஏறி அமர, "இங்க என்ன தான் நடக்குது. எனக்கு ஒன்னும் புரியல" என்றாள்
ஸ்வேதா சலிப்புடன்
அவளின் கையைப் பற்றி மேலே தூக்கியவன் "ஷார்ட்டா சொல்லணும்னா, எங்க அம்மாவுக்கும் தம்பிக்கும் எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு, குழந்தை இருக்குனு ரொம்ப நாள் முன்னவே சொல்லி வச்சுட்டேன். திவ்யாவும் தருணும் லவ் பண்ணிட்டு இருந்தாங்க, அவங்களையும் இப்போ சேத்து வச்சாச்சு. அவ்ளோ தான்" என்றான் காதருகில்
"அவ்ளோ தான் உங்க வீட்டுல இருக்கறவங்களோட ரியாக்ஷனா... ரோஷினி உன் குழந்தைனு சொன்னதும் நம்பிட்டாங்களா" என்று ஸ்வேதா வியப்புடன் கேட்க
"நான் வருஷக் கணக்கா ஊர்ப் பக்கமே வரல. அதனால உடனே நம்புறாங்க. அது தான நமக்கும் வேணும்" என்றவன் அவளது இடுப்பைப் பற்றி அருகில் இழுக்க, கால்களில் இருந்த செருப்பு நழுவிக் கீழே விழுந்தது
"ஹே... என்ன பண்ணிட்டு இருக்க நீ. விழுந்துடப் போறோம். கைய எடு" என்று ஸ்வேதா முதல் தொடுகைக்கே சிணுங்க
"ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... சத்தம் போடாத. யாராச்சும் கேட்டா தப்பா நினைப்பாங்க" என்றவன் அவளை இறுக்கி அணைத்தான்
அவளுக்கு உடலெல்லாம் கூசி, வெட்கம் பொங்கி வழிந்த கணத்தில் "ஆஹ்ஹ்ஹ்" என்று கத்தி வைத்தாள்
அவள் காதோரம் முகத்தை வைத்தவன் "இன்னும் எதுவுமே பண்ணலையே" என்றான் கிசுகிசுப்பாய்
"ம்ப்ச்ச்... கட்டெறும்பு கடிச்சுருச்சு" என்றாள் ஸ்வேதா வலியில் முகம் சுளித்து
"எங்க" என்றவன் எறும்பு கடித்து வீங்கியிருந்த தோள்பட்டையில் அதை விட வலுவாகக் கடித்து வைக்க, எறும்பு கடித்த விறுவிறுப்பிலும் இவன் செய்ததால் ஏற்பட்ட குறுகுறுப்பிலும் தாமதிக்காமல் மரத்திலிருந்து கீழே குதித்து இருந்தாள் ஸ்வேதா
"ஏய், எங்க போற" என்று வருண் பரிதாபமாகக் கேட்க
"போடா ஃப்ராடு" என்றவள் தோள்பட்டையைத் தேய்த்தபடி வீட்டை நோக்கி ஓடினாள்
வீட்டினுள் நுழைந்தவளை வருணின் அப்பா முறைத்துப் பார்க்க, அங்கு வந்த வருணின் அம்மா "வாம்மா குளிக்கப் போகலாம்" என்று அழைத்துச் சென்றார்
"நீயும் இதுக்கெல்லாம் கூட்டா... நடத்துடி நடத்து" என்று தந்தை சிடுசிடுப்புடன் கூற
"அவரு கிடக்குறாரு. முரட்டு மனுஷன் எப்பவும் இப்படி தான் பேசுவாரு" என்ற வருணின் அன்னை ஸ்வேதாவுடன் சிறிது நேரத்தைக் கழித்தார்
நன்றாகக் குளித்து உண்டு முடித்த ஸ்வேதா அப்படியே படுத்து உறங்கியும் போனாள். அவள் எழுந்த போது அருகில் தூங்கிக் கொண்டிருந்த ரோஷினியைக் காணவில்லை. ரோஷினி எங்கே என்று ஸ்வேதா தேடிச் செல்ல, அவளோ வருணின் உறவினர் ஒருவர் வைத்திருந்த குழந்தையின் அருகில் அமர்ந்து இருந்தாள்.
"தம்பிய என் கிட்டத் தாங்க" என்று ரோஷினி கேட்க
"இது தம்பி இல்ல பாப்பா" என்றார் அக்குழந்தையின் அம்மா
"எனக்குத் தம்பி தான் வேணும்" என்று ரோஷினி சொல்ல
அருகில் இருந்த தருண் "உனக்குத் தம்பி தான வேணும்" என்று கேட்டபடி அவளைத் தூக்கிக் கொண்டு, தங்கள் தாயிடம் பேசிக் கொண்டிருந்த வருணிடம் சென்றான்
"டேய் அண்ணா... ரோஷினிக்கு என்னமோ வேணுமாம் கேளு" என்று தருண் சொல்ல
பின்னாலே வந்து நின்றிருந்த ஸ்வேதா அவசரமாய் "அதெல்லாம் எதுவும் இல்ல. ரோஷினி வா கார்ட்டூன் பாக்கலாம்" என்றாள் முந்திக் கொண்டு
"அம்மா... என்னமா அண்ணி இப்படி வெக்கப்படுறாங்க" என்று தருண் புன்கையுடன் சொல்ல
"ஏன் என்ன நடந்துச்சு. ரோஷினி தங்கம் என்ன வேணும்... கேளுமா" என்றார் வருணின் தாய்
"எனக்கா... தம்பி வேணும்" என்று ரோஷினி உரக்கச் சொல்லிக் கொண்டிருக்க, ஸ்வேதா அங்கிருந்து வேகமாக நழுவினாள்
தெடர்ந்து வந்த அவர்களின் சிரிப்பொலியோ அவளைத் தூங்க விடாமல் செய்து கொண்டிருந்தது. இப்போது கண்களைக் கூட மூட முடியாமல், ஸ்வேதா படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். நேரம் கழித்து ரோஷினியோடு வருண் உள்ளே வர, உடனே கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். ரோஷினியை அவளுக்கு அருகில் படுக்க வைத்தவன், அதற்கு பிறகு எந்தச் சத்தமும் எழுப்பவில்லை. என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக ஸ்வேதா திரும்ப, வருண் அப்போது தான் வெறும் வேஷ்டியுடன் நின்றபடி அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.
மறுபடியும் கண்களை மூடிக் கொள்ளலாம் என அவள் திரும்ப "தூக்கம் வரலையா" என்று கேட்டான் வருண்
ஸ்வேதா முகத்தை அவனுக்குக் காட்டாமல் அமைதியாகவே படுத்திருக்க, "ஏமாத்துக்காரி" என்று இதழ் விரித்துச் சொல்லியபடி அருகில் வந்தான்
"ஏய் எழுந்திருடி" என்று அவன் சொல்ல, போர்வையை இழுத்து முகத்தில் மூடிக் கொண்டாள் ஸ்வேதா
வெட்கத்தில் சுருண்டு கிடந்தவளை அப்படியே தூக்கியவன், கட்டிலில் இருந்து தள்ளிச் சென்று அவளைக் கீழே கிடத்தினான்
அவளுடன் அவன் ஒரு போர்வையில் தஞ்சம் புக "உங்களுக்குத் தூக்கம் வரலையா" என்றாள் ஸ்வேதா வேறெங்கோ பார்த்தபடி
அவளது முகத்தை நேராக்கிப் பார்த்தவன் "நான் சொன்ன நாள் வந்துடுச்சு பாப்பு. இனி என் கிட்டருந்து தப்பிக்க முடியாது" என்றான் மர்மப் புன்னகையுடன்
"ரோஷினி சின்ன பொண்ணு. விவரம் தெரியாம கேட்டுட்டா" என்று ஸ்வேதா சமாளிக்க
"சரி விடு. எத்தன நாளைக்கு தான் இப்படியே இருக்கன்னு பாக்குறேன்" என்றவன் அவளிடம் இருந்து விலகி எழுந்தான்
எழ முயன்றவனைத் தோளோடு இறுக்கிப் பிடித்தவள் உணர்ச்சி வசத்தில் அவன் முதுகில் முத்தம் பதித்து ஒன்றினாள்
"பெரிய பாப்பாக்கும் எதோ தரணும் போலவே" என்றவன் அவள் இதழ்களை வலிக்க வலிக்கப் பருக, வலி கலந்த சுகத்தில் கண்களை மூடிய ஸ்வேதா அதற்கு பிறகு கண்களைத் திறக்கவே இல்லை
இருவரும் ஒருவரின் உள் மற்றவர் வெளிவர முடியாமல் புதைய முயல, நேரம் அவர்களது நெருக்கத்தின் தகிப்பில் கரைந்தோடியது. வருண் அவனது வேகத்தைக் காட்டிக் கொண்டிருக்க, இரு மடங்காகத் தன்னை இழந்து கொண்டிருந்தாள் ஸ்வேதா. மனமும் உடலும் ஒருவித திருப்தி நிலையை அடைய, ஒருவர் அணைப்புக்குள் மற்றொருவர் அடைக்கலம் புகுந்தனர்.
அவனது மார்பில் படுத்துக் கொண்டு நிமிர்ந்து முகம் பார்த்த ஸ்வேதா "எதுக்காக உண்மைய சொல்லாம, ரோஷினிய உன் குழந்தைனு சொல்லிட்டு இருக்க. இதனால உனக்குத் தேவையில்லாத கெட்டப் பேரு தான்" என்றாள் வருந்தி
"உண்மைய தான சொன்னேன். ரோஷினி என்னோட பொண்ணு" என்று வருண் உறுதியாய் சொல்ல
"டூ ஐ டிசர்வ் யூ" என்றாள் ஸ்வேதா மெல்லியக் கலக்கத்துடன்
"லூசு பாப்பா... வி ஆர் க்யூட் அன்ட் ஸ்வீட் லிட்டில் ஃபேமிலி, ரைட்" என்று வருண் கனிவாகக் கேட்டிட
"தெரியுமா... லவ் யூ சோ மச்" என்றவள் அவன் உதட்டில் தீமூட்டி மீண்டும் அவனிடம் தொலையத் தயாரானாள்
எத்தனை நாள் ஏக்கம்
என்னில் உந்தன் தாக்கம்
மீள முடியா தயக்கம்
தந்து போனாய் மயக்கம்