Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெண்ணிலவுக்கு வானத்தை பிடிக்கலையா?- Comments thread

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
"வெண்ணிலவுக்கு வானத்தை பிடிக்கலையா"

மோதலில் ஆரம்பித்து நாயகனை தவறாகவே நினைத்து அந்த நிலையிலேயே திருமணமும் முடிந்து பின் நிறைய சம்பவங்களுக்கு பின் இறுதியில் ஒருவரை ஒருவர் புரிந்து இணையும் கதை

வர்மா வர்ணிகா பெயர் பொருத்தம் அருமை.

முதல் சந்திப்பு மோதலில் ஆரம்பித்தாலும் சில சந்திப்புகள் அதுவே தொடர்ந்தாலும் கடைசி வரை காதலை காட்டுகிறான் வர்மா.

முதலில் வர்மாவை தவறாக நினைத்தாலும் கடைசியில் அவனை புரிந்து மனம் மாறுகிறாள் வர்ணிகா.

கண்ணபிரான் ராமராஜ் போன்றவர்கள் தந்தைக் குலத்தின் சாபக்கேடு என்றால் சதீஷ் முருகேசன் போன்றவர்கள் நண்பர்களில் வரம்

சிவாவில் தான் ஏதோ ப்ரச்சனை இருக்கிறது என நினைத்தால் நட்பாக கருதியவர் வில்லன் கோஷ்டியில் இணைவது வருத்தமே.

இறுதியில் ரேக்ளா ரேஸ் helicoptor rescue என பல தளங்களில் பயணித்து நிறைவாக முடிகிறது கதை

மொத்தத்தில் a feel good love story .

இன்னும் சிறந்த படைப்புகள் பலவற்றை படைத்திட வாழ்த்தும்
தூரிகா
 
Top Bottom