- Messages
- 25
- Reaction score
- 23
- Points
- 6
அத்தியாயம் :1
"விநாயகனே வினை தீர்ப்பவனே"
என்று விநாயகர் கோவிலில் பாடல் ஒளித்து கொண்டிருக்க அதற்கு போட்டியாக அருகில் இருந்த திருமண மண்டபத்தில்
"அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது"
என்று பாடி கொண்டிருந்தது.
வெளிச்ச புள்ளிகள் தோன்றி காரிருளை ஒளி வெள்ளமாக்கும் முயற்சியில், சூரியன் தன் பொற்கிரகணங்களை பூமி மீது மெதுவாக பாய்ச்சி கொண்டிருந்தான்.
அந்த திருமண மண்டபம் ஜெகஜோதியாய் மின்னியது .மாவிலை தோரணங்களும்,
வாழைமரங்களும், வாசலில் வரவேற்பாய் நிற்க. மண்டபத்திற்கே உள்ள கலகலப்பும், குழந்தைகளின் விளையாட்டும், பெண்களின் பட்டுப்புடவை சரசரப்பும், ஆண்களின் கிண்டல், கேலி பேச்சுகளும். இருபாலரின் அரட்டையும் என்று திருவிழா கோலம் பூண்டிருந்தது.
மணமகள் அறையில், நம் கதையின் நாயகி ஜானகி தயாராகிக்கொண்டிருந்தாள்.உறவினர்களுக்கு ஜானகி ,பெற்றவர்களுக்கு ஜானு, தோழிகளுக்கு கி (key ),Jk இப்படி விதவிதமாக அழைக்கப்படுபவள் .
பியூட்டி பார்லர் பெண் அவளை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அருகில் அவள் தோழிகள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள்.
ஜானகி ,அலமேலு ,வாசுதேவனின் ஏக சீமந்த புத்திரி. 21 வயது சிலை. மிகவும் உயரம் என்றும், மிகவும் குள்ளம் என்றும் சொல்ல முடியாத உயரம்.சிகப்பிற்கும் மாநிறத்திற்கும் இடைப்பட்ட நிறம். பெரிதும் அல்லாது சிறிதும் இல்லாத துறுதுறு கண்கள். குட்டி மூக்கு, அளவான உதடு என்று பிரம்மன் செதுக்கிய சிலை.
அவளை ஜாலி type , மூடி type என்று எந்த வரையறைக்குள்ளும் அடக்கி விட முடியாது. எப்போ கோவப்படுவா, எப்போ பம்முவானு, அவளுக்கே தெரியாது. அவ அம்மாட்ட அவளை பத்தி கேட்டா, ஒரே வார்த்தையில் சிம்பிளா, தனிப்பிறவினு சொல்லிட்டு போய்டுவாங்க. அவளை பத்தி போதும் .ரெம்ப சொன்னா ஹீரோ கோச்சுப்பார்.
மணமகள் அறைக்குள் நுழைந்த அவள் அன்னை அலமேலு,
"என்ன தயாராகியாச்சா ,சீக்கிரம் சீக்கிரம் ஐயர் கூப்டுடுவார். முகூர்த்தத்துக்கு கொஞ்ச நேரம் தான் இருக்கு"என்று அவசரப்படுத்தினார் .
"முடிஞ்சுது mam"
என்று பியூட்டி பார்லர் பெண் கூறிக்கொண்டிருக்கும் போது ஜானகியின் ஒன்று விட்ட அத்தை அங்கு வந்தார்.
"ஏண்டி அலமு நான் கேள்விப்பட்டது உண்மையா??இது லவ் marriage ஆமே???.ஹ்ம்ம்..எங்கக்காலத்துலேல்லாம் மாப்பிள்ளை முகத்தையே சரியாய் பாக்க 1 வருஷம் ஆச்சு. இப்போ அப்படியா?? பிள்ளைங்க, அதுங்களே மாப்பிள்ளை பாத்துக்குதுங்க..கலிகாலம்!!" என்று அங்கலாய்த்தார்.
அலமேலு சங்கடமாய் அவரை பார்த்து முறுவலித்து விட்டு திரும்பி தன் மகளை முறைத்தார்.
அதுவரை இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ஜானு, அன்னை தன்னை முறைக்கவும் சட்டென திரும்பி தன் அருகில் இருந்த ஆருயிர் தோழி ப்ரியாவை முறைத்தாள். இவள் பார்வையை கண்ட பிரியா, அருகில் இருந்த பெட்டியில் ஏதோ தேடுவது போல் குனிந்து கொண்டாள் .அவளிடம் இருந்து தன் பார்வையை திருப்பிய ஜானு,
"அப்படி தான் அத்தை, மாமாவும் சொன்னார். நீ கொடுத்து வச்சவ ஜானு, உன் கணவரை நீயே தேர்ந்தெடுக்க முடியுது, எங்க காலத்துலயெல்லாம் கழுதையை கட்டிவச்சா கூட எதுவும் சொல்லமுடியாதுனு ,நீங்களும் அதையே சொல்லுறிங்களே!! நீங்களும் மாமாவும் செம்ம ஜோடி அத்தை "
எனவும் அவர் தோள்பட்டையில் முகவாயை இடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.
அவர் சென்றதும், அவள் அன்னை
"உன்னை என்னடி சொல்லி இருக்கேன் ,வாயை அடக்கு, அடக்கஒடுக்கமா இருன்னு சொன்னேனா இல்லியா? ?"என்று கடிந்தார்.
இதை நீ அந்த அத்தை கிட்ட தான்மா முதல்ல சொல்லணும்" என்றதும்,
"உன்னை திருத்த முடியாது. தயவு செஞ்சு இன்னிக்கு மட்டுமாவது அடங்கி இரு,இவங்க ஒருத்தங்க கிட்ட பேசிட்டா போதுமா ??மண்டபம் முழுசும் தான் பேசுது" என்று கூறி விட்டு சென்றார்.
அவர் சென்றதும் திரும்பி ப்ரியாவை முறைக்க ஆரம்பித்தாள்.அந்த பார்வை கேட்டது
"இது லவ் marriage ஆஹ் டி ??"என்று.
அதை கண்ட பிரியா, என் yellow clip அண்ணா ரூம் ல விட்டுட்டேன் போல, போய் எடுத்துட்டு வந்துடுறேன் என்று பொதுவாக சொல்லிவிட்டு, விட்டால் போதும் என்று நடையா?? ஓட்டமா?? என்று தெரியாத அளவுக்கு சென்றாள். ஜானகியின் தோழியும், நம்ம ஹீரோ மணமகன் அர்ஜுனின் தங்கையுமான பிரியா. கிரேட் எஸ்கேப்.
............தொடரும்
"விநாயகனே வினை தீர்ப்பவனே"
என்று விநாயகர் கோவிலில் பாடல் ஒளித்து கொண்டிருக்க அதற்கு போட்டியாக அருகில் இருந்த திருமண மண்டபத்தில்
"அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது"
என்று பாடி கொண்டிருந்தது.
வெளிச்ச புள்ளிகள் தோன்றி காரிருளை ஒளி வெள்ளமாக்கும் முயற்சியில், சூரியன் தன் பொற்கிரகணங்களை பூமி மீது மெதுவாக பாய்ச்சி கொண்டிருந்தான்.
அந்த திருமண மண்டபம் ஜெகஜோதியாய் மின்னியது .மாவிலை தோரணங்களும்,
வாழைமரங்களும், வாசலில் வரவேற்பாய் நிற்க. மண்டபத்திற்கே உள்ள கலகலப்பும், குழந்தைகளின் விளையாட்டும், பெண்களின் பட்டுப்புடவை சரசரப்பும், ஆண்களின் கிண்டல், கேலி பேச்சுகளும். இருபாலரின் அரட்டையும் என்று திருவிழா கோலம் பூண்டிருந்தது.
மணமகள் அறையில், நம் கதையின் நாயகி ஜானகி தயாராகிக்கொண்டிருந்தாள்.உறவினர்களுக்கு ஜானகி ,பெற்றவர்களுக்கு ஜானு, தோழிகளுக்கு கி (key ),Jk இப்படி விதவிதமாக அழைக்கப்படுபவள் .
பியூட்டி பார்லர் பெண் அவளை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அருகில் அவள் தோழிகள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள்.
ஜானகி ,அலமேலு ,வாசுதேவனின் ஏக சீமந்த புத்திரி. 21 வயது சிலை. மிகவும் உயரம் என்றும், மிகவும் குள்ளம் என்றும் சொல்ல முடியாத உயரம்.சிகப்பிற்கும் மாநிறத்திற்கும் இடைப்பட்ட நிறம். பெரிதும் அல்லாது சிறிதும் இல்லாத துறுதுறு கண்கள். குட்டி மூக்கு, அளவான உதடு என்று பிரம்மன் செதுக்கிய சிலை.
அவளை ஜாலி type , மூடி type என்று எந்த வரையறைக்குள்ளும் அடக்கி விட முடியாது. எப்போ கோவப்படுவா, எப்போ பம்முவானு, அவளுக்கே தெரியாது. அவ அம்மாட்ட அவளை பத்தி கேட்டா, ஒரே வார்த்தையில் சிம்பிளா, தனிப்பிறவினு சொல்லிட்டு போய்டுவாங்க. அவளை பத்தி போதும் .ரெம்ப சொன்னா ஹீரோ கோச்சுப்பார்.
மணமகள் அறைக்குள் நுழைந்த அவள் அன்னை அலமேலு,
"என்ன தயாராகியாச்சா ,சீக்கிரம் சீக்கிரம் ஐயர் கூப்டுடுவார். முகூர்த்தத்துக்கு கொஞ்ச நேரம் தான் இருக்கு"என்று அவசரப்படுத்தினார் .
"முடிஞ்சுது mam"
என்று பியூட்டி பார்லர் பெண் கூறிக்கொண்டிருக்கும் போது ஜானகியின் ஒன்று விட்ட அத்தை அங்கு வந்தார்.
"ஏண்டி அலமு நான் கேள்விப்பட்டது உண்மையா??இது லவ் marriage ஆமே???.ஹ்ம்ம்..எங்கக்காலத்துலேல்லாம் மாப்பிள்ளை முகத்தையே சரியாய் பாக்க 1 வருஷம் ஆச்சு. இப்போ அப்படியா?? பிள்ளைங்க, அதுங்களே மாப்பிள்ளை பாத்துக்குதுங்க..கலிகாலம்!!" என்று அங்கலாய்த்தார்.
அலமேலு சங்கடமாய் அவரை பார்த்து முறுவலித்து விட்டு திரும்பி தன் மகளை முறைத்தார்.
அதுவரை இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ஜானு, அன்னை தன்னை முறைக்கவும் சட்டென திரும்பி தன் அருகில் இருந்த ஆருயிர் தோழி ப்ரியாவை முறைத்தாள். இவள் பார்வையை கண்ட பிரியா, அருகில் இருந்த பெட்டியில் ஏதோ தேடுவது போல் குனிந்து கொண்டாள் .அவளிடம் இருந்து தன் பார்வையை திருப்பிய ஜானு,
"அப்படி தான் அத்தை, மாமாவும் சொன்னார். நீ கொடுத்து வச்சவ ஜானு, உன் கணவரை நீயே தேர்ந்தெடுக்க முடியுது, எங்க காலத்துலயெல்லாம் கழுதையை கட்டிவச்சா கூட எதுவும் சொல்லமுடியாதுனு ,நீங்களும் அதையே சொல்லுறிங்களே!! நீங்களும் மாமாவும் செம்ம ஜோடி அத்தை "
எனவும் அவர் தோள்பட்டையில் முகவாயை இடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.
அவர் சென்றதும், அவள் அன்னை
"உன்னை என்னடி சொல்லி இருக்கேன் ,வாயை அடக்கு, அடக்கஒடுக்கமா இருன்னு சொன்னேனா இல்லியா? ?"என்று கடிந்தார்.
இதை நீ அந்த அத்தை கிட்ட தான்மா முதல்ல சொல்லணும்" என்றதும்,
"உன்னை திருத்த முடியாது. தயவு செஞ்சு இன்னிக்கு மட்டுமாவது அடங்கி இரு,இவங்க ஒருத்தங்க கிட்ட பேசிட்டா போதுமா ??மண்டபம் முழுசும் தான் பேசுது" என்று கூறி விட்டு சென்றார்.
அவர் சென்றதும் திரும்பி ப்ரியாவை முறைக்க ஆரம்பித்தாள்.அந்த பார்வை கேட்டது
"இது லவ் marriage ஆஹ் டி ??"என்று.
அதை கண்ட பிரியா, என் yellow clip அண்ணா ரூம் ல விட்டுட்டேன் போல, போய் எடுத்துட்டு வந்துடுறேன் என்று பொதுவாக சொல்லிவிட்டு, விட்டால் போதும் என்று நடையா?? ஓட்டமா?? என்று தெரியாத அளவுக்கு சென்றாள். ஜானகியின் தோழியும், நம்ம ஹீரோ மணமகன் அர்ஜுனின் தங்கையுமான பிரியா. கிரேட் எஸ்கேப்.
............தொடரும்