உனக்காகவே வந்தேனடா – 5
3594
3
அத்தியாயம் – 5
பிரபா, தேவிகாவின் முன் இளையவர்கள் நால்வரும் நின்றிருந்தனர். பிரபா நந்தனை முறைக்க, அவனோ சாக்ஷியை முறைத்தபடி இருந்தான். சாக்ஷியோ நந்தனையும் பாலாவையும் வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்து வைத்தாள். பாலாவோ ‘நானும் யாருக்கும் பொல்லாப்பு செய்யவில்லை’ என்பது போல் பரம சாதுவாய் நித்திலனின் கால் கீழ் கிடந்தது… அவனின் அருகில் சந்தோஷி.
கூடியிருக்கும் இந்த பஞ்சாயத்து சாக்ஷிக்கும் நந்தனுக்கும் நடந்த அடிதடியினால் தானே!!!
கொசுவர்த்தி சுருள் கொஞ்சம் பின்னோக்கி சுற்ற ஆரம்பித்தது!!!
“அறிவுகெட்ட பாலா…” என்று விளித்தபடி வந்த நந்தன், புதிதாக ஒரு பெண் இருப்பதை கண்டு கொண்டவன் முதலில் சந்தோஷியின் தோழி என்றே நினைத்தான்!!!
அதனால் அவளை கண்டு கொள்ளாமல், சந்தோஷியை வழக்கம் போல வம்பிழுக்க ஆரம்பித்தான்…
“டுபாக்கூர் பாலா பிசாசே… சோறு கண்ட இடமெல்லாம் சொர்கம்ன்னு திரியுறது!!! காலைலேயே கொட்டிக்க இவ வீட்டுக்கு தான் வரணுமா? நேத்து நமக்கு சோறு போட்டுட்டு நம்மளை என்ன பேச்சு பேசினா? மறந்து போச்சாடா உனக்கு… நன்றிகெட்ட பாலா!!!” என்று பாலாவை இழுத்து வைத்து பிரச்னையை இழுத்து வைத்து கொண்டான் நந்தன்!!!
‘அட போடா… இதெல்லாம் எனக்கு பழக்கம் தான்… கொஞ்ச நேரத்தில் நீயும் இங்கே தான கொட்டிக்க வருவ! உன்னை அப்போ பேசிக்கிறேன்!’ என்று அலட்சியப்படுத்தியபடி நகர தொடங்கியவளை நிற்க வைத்தது சாக்ஷியின் கேள்வி…
“என்ன பேர் சொன்னிங்க? பாலாவா?” என்று நந்தனின் முன் விரலை நீட்டியபடி நிறுத்தி நிதானமாக கேள்வி கேட்டவளை, நந்தன் புரியாமல் பார்த்து ‘ஆமாம்’ என்று தலையாட்ட, சந்தோஷியோ அப்பொழுது தான் கேள்வியையே உள்வாங்கினாள்.
‘அச்சச்சோ!!! இந்த பொண்ணு பேரும் பாலா தான!!’ என்று கைவைத்து வாயை மறைத்தபடி அதிர்ந்தவள்,
நந்தனிடம், “ஷ்ஷ்ஷ்… ஷூ…” என்று அவனை அடக்க, அதையெல்லாம் மேலும் மேலும் அலட்சியப்படுத்தியவனாய்,
“என்னடா முறைக்கிற? கருங்குரங்கு பாலா… காட்டெருமை பாலா…” என்று மேலும் மேலும் சாக்ஷியை அவள் யாரென்று அறியாமல் தெரியாமல் எரிச்சல் மூட்ட,
“டேய்… நந்தா… அந்த பொண்ணு பேரும் பாலா தாண்டா… சாக்ஷி பாலா!!!” என்று நண்பனின் காதில் மெல்லமாக தெரிவிக்க,
“அதுக்கு… நான் எழுவருஷத்துக்கு முன்னாடி யோசிச்சு யோசிச்சு வைச்ச பேர்… இதோ இங்கே நிற்கிறாங்களே இந்த அம்மாவுக்காக மாத்த முடியாது!!!” என்று அலட்சியமாய் பதிலளித்தான் நந்தன்.
‘மரியாதை கெட்டவன்’ என்று நொடிநேரத்தில் முடிவு கட்டிவிட்டாள் சாக்ஷி. பார்வை உக்கிரமாக மாற, நந்தனோ அதையெல்லாம் கருத்தில் வைத்து கொள்ளவில்லை.
அவனுக்கு வேண்டியது எல்லாம் சந்தோஷியை வம்பு செய்ய வேண்டும்… அதற்கு எந்த எல்லைக்கும் செல்வான்!!!
‘அடேய் நந்தா… இன்னைக்கு நீ ஆப்பத்துக்கு சொதியா ஆகப்போற!’ என்று தலையில் அடித்து கொண்ட சந்தோஷி, ‘ப்ரோசீட்…’ என்பது போல சாக்ஷியை பார்க்க, அவளோ நந்தனை நோக்கி,
“ஹவ் டேர் யூ? என் பேரை எப்படி உன்னோட நாய்க்கு வைக்கலாம்? நீ கூப்பிட்டதும் இல்லாம என்னை வேற மரியாதை இல்லாம பேசுற?” என்று ஏகவசனத்தில் எகிற,
“ஹலோ… நான் எழுவருஷமா இந்த பேரு சொல்லித்தான் மேடம் கூப்பிடுறேன்… உங்களுக்காக என் பாலாவோட பேரை மாத்த முடியாது!!! அண்ட் ஃபார் யுவர் கைண்ட் இன்பார்மேஷன்… நீங்க என்னை அதைவிட மரியாதை இல்லாம பேசுறிங்கன்னு தெரியலையோ??? என்னடா பாலா நான் சொல்றது சரிதானே???” என்று அலட்சியமாய் பதில் தந்தவன், அவனின் ‘பாலாவின்’ புறமும் திரும்பி ஒரு கேள்வியை எழுப்ப,
‘யாம் எதுவும் அறியவில்லை பராபரமே!’ என்ற ரீதியில் போஸ் கொடுத்தபடி நிமிர்ந்து அமர்ந்து விட்டது ‘பாலா’
“மறுபடியும்… மறுபடியும்… என் பேரை நாய்க்கு சொல்லுற?” என்று விடாமல் வாதிட்டவளிடம்,
“அப்படி தான் சொல்வேன்… உன்னால என்ன செய்ய முடியுமோ பண்ணிக்கோ!!!” என்று கண்களை மூடியபடி எமோஷனலாக சவால் விடவேண்டுமென்று வார்த்தைகளை சொல்லி கூட முடிக்கவில்லை…
நந்தனின் முகத்தின் மேல் கோலப்பொடி தெறித்து சிதறியது!!!
‘ஐயோ!!!’ என்று சந்தோஷி அதிர்ந்து நிற்க, பாலாவோ பதறிப்போய் பத்தடி தள்ளி நின்றது!!!
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்றிருந்தவளை உக்கிரமாக முறைத்தான் நந்தன்!!!
அவன் மட்டும் என்ன சும்மாவா நின்றான்… அங்கே அருகில் வண்ண வண்ண பொடிகளை நொடிநேரத்தில் சாக்ஷியின் மேல் வீசியிருந்தான்…
“ஹோ மை காட்!!!” என்று அதிர்ந்து நின்ற சாக்ஷியை விட இப்பொழுதும் சந்தோஷி தான் அதிர்ந்து நின்றாள் நண்பனின் செயலில்!!!
‘என்ன இவன்? சிறுப்பிள்ளை போல் புதிதாக வந்திருக்கும் பெண்ணிடம் வம்பு வளர்கிறான்?’ என்று குழம்பி நின்றவளுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை…
பாலாவோ இவர்கள் இருவரின் கலாட்டாவில் சத்தமாக குரைக்க ஆரம்பிக்க, அதைக்கேட்டு வேகமாக வெளியில் வந்தார் தேவிகா!!!
வந்தவர் மகளைவிட அதிர்வை உள்வாங்கி சமைந்து நிற்க, ஒருக்கட்டத்தில் பாலாவின் குரைப்பில் தன்னிலையில் இருந்து வெளிவந்த சந்தோஷி,
“பாட்டிடிடீடீடீடீ!!!” என்று ஹைடெசிபலில் கத்த ஆரம்பித்து இருந்தாள்.
******
நித்திலன் தனது அடக்க முடியா சிரிப்பை அடக்கிக்கொண்டு, “நாட்டாமை தீர்ப்பை சீக்கிரம் சொல்லு! கியூரியாசிட்டியை அடக்கமுடியல…” என்று நக்கல் செய்ய, இப்பொழுது அவனையும் சேர்த்து முறைக்க ஆரம்பித்தாள் சாக்ஷி.
‘அடங்கமாட்ரானே இந்த டாபர்மேனோட ஒனர்…’ என்று அடிப்பவள் போல் பார்த்து வைக்க, ஈயென்று இளித்த நித்திலன்,
“யூ மிஸ்டூக் மேடம்ஜி… இந்த டஸ்ட் பிடிச்ச டாபர்மேனோட ஓனர் நானில்லை… இவன் தான்” என்று நந்தனை கைக்காட்டியவன்,
“தேவிம்மா… இன்னைக்கு என்ன காலைல சாப்பாடு? ஏன் கேட்கிறேனா? நந்தனுக்கு அனேகமா இன்னைக்கு வீட்டு சாப்பாடு கிடையாதுன்னு தோணுது!” என்று நந்தனை ஓட்ட, எதையும் கருத்தில் கொள்ளாமல் நின்றான் நந்தன்.
“டேய்… வாயை மூடுறா… இருக்க கடுப்பில் உன்மேல பாயப்போறான்…” என்று ரகசியமாக எச்சரிக்கை விடுத்தாள் சந்தோஷி. கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டான் நித்திலன்.
“டேய் நந்தா! எதுக்குடா இப்போ அந்த பொண்ணை முறைச்சிட்டு நிக்கிற?” என்று பிரபா குரல் உயர்த்தி கடிய,
“நீங்க யாரை கேட்டு இந்த வீட்டை வாடகைக்கு விடுறிங்க? அதுவும் மேன்னர்ஸ் தெரியாத இந்த பொண்ணுக்கு???” என்று பதிலுக்கு அவரை எகிறினான் நந்தன்!!!
“யாரைடா கேட்கணும்…???”
“என்னை கேட்கணும்!!!”
“பிச்சுருவேன் ராஸ்கல்… பெரிய இவன் பாரு நீ… வீட்டை பூட்டி வைச்சு துருபிடிக்க வைக்கிறதுக்கு, பேசாம யாருக்காவது வாடகைக்கு விடலாம்…” என்று நியாயம் பேசினார் பிரபா.
“அதான் ஈவினிங் டியூஷன் நடக்குதுல!!! இனி பசங்க எங்கே போய் படிப்பாங்க???” பதில் நியாயம் கேட்டான் நந்தன்!!!
“நம்ம வீட்டில் இடமே இல்லை பாரு… ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நம்ம வீட்டில வந்து தான் பசங்க படிச்சாங்க… மறந்து போச்சா???” என்று நினைவு படுத்தியவரிடம்,
“அப்போ… இந்த வீட்டில் ஒரு ஃபேமிலி இருந்தாங்க… அவங்களுக்கு தொந்தரவு தர கூடாதுன்னு தான் நம்ம வீட்டில் டியூஷன் வைச்சோம்…” என்று பதிலுக்கு நினைவு படுத்தினான் நந்தன்.
“இப்போ என்னடா சொல்ல வர நீ???”
“எனக்கு இந்த பொண்ணு இங்கே இருக்கது சுத்தமா பிடிக்கலை… ஆயிரம் தான் இருந்தாலும் ரெண்டு வயசு பசங்க இருக்க வீட்டில் ஒரு வயசு பொண்ணை தங்க வைக்கிறது தப்பு…!!!” என்று அடித்து சொல்லியவனிடம்,
“அடேங்கப்பா… என்ன ஒரு அக்கறை??? ஏண்டா… புதுசா வந்து இருக்க பொண்ணுகிட்ட வம்பு வளர்த்தது நீ? சின்ன பிள்ளையாடா நீ? கோலப்பொடியை கொட்டி விளையாண்டு இருக்க?”
“அவ தான் என்மேல முதல்ல கொட்டுனா!!!” என்று புகார் வாசித்தான் நந்தன்!!!
“வாயை மூடுடா!!! சந்தோஷி சொல்லியும் நீ தான் பேசியிருக்க… அதனால தான் அந்தப்பொண்ணு அப்படி செஞ்சா… நீ மட்டும் பெரிய புத்த மகான்… அப்படியே கம்முன்னு நின்னுட்டு இருந்த பாரு!!!” என்று எகிறி நந்தனின் வாயை அடக்கினார் பாட்டி!!!
“இப்போ என்னதான் சொல்ல வரிங்க???” என்று எரிச்சல் கொண்ட நந்தனிடம்,
“நான் முடிவு பண்ணிட்டேன்… இந்த பொண்ணு இங்கே தான் இருப்பா!!!” என்று முடிவாக பிரபா கூற,
“இந்த வீட்டுல இந்த பொண்ணு இருந்தான்னா நான் இனி இங்கே இருக்கமாட்டேன்…” என்று நந்தன் கோபமாக சொல்லி முடிக்க கூட இல்லை…
“அப்படியா சரி… அப்போ நீ வீட்டை விட்டு கிளம்பு… நான் நீ இருக்க வீட்டையும் வாடகைக்கு விட்டு காசு சம்பாதிச்சுக்கிறேன்!!!” என்று ஒரே போடாக போட்டார் பிரபா!!!
“என்னாது? என்னாது?” என்று நந்தன் அதிர்ந்து போய் அவரை பார்க்க, அதில்… சந்தோஷியும் நித்திலனும் வாயை மூடிக்கொண்டு சிரிக்க, சாக்ஷியோ சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்!!!
அதில் கடுப்பான நந்தன் இப்பொழுது அனைவரையும் முறைக்க, சந்தோஷியும், நித்திலனும் கப்பென்று வாயை மூடிக்கொண்டனர்!!!
ஆனாலும் இருவருக்குள்ளும் ‘ஏனென்றால் நந்தன் இப்படியெல்லாம் வாக்குவாதம் செய்யும் ஆள் இல்லையே’ என்ற எண்ணம் ஓடியது!!!
‘சந்தோஷி!!!’ என்று ஜாடையாக தோழியை நித்திலன் அழைக்க… நெருங்கி நின்றவளிடம்,
“இவன் இப்படி எமோஷனலா ஹைபிட்ச்ல வெளி ஆளுங்க முன்னாடி பேசுற ஆளு இல்லைல!!!” என்று சந்தேகமுடன் கேட்ட நண்பனுக்கு,
“சத்தியமா இல்லை… ஆனா இவங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சண்டை போட்டது எல்லாம் ரொம்பவே சுவாரஸ்யமா இருந்துச்சு!!! இனி வரும் நாட்கள் எல்லாம் ரொம்ப செம்மையா போகும்ன்னு தோணுது!!! உனக்கு எப்படி தோணுது???” என்று சிறு சிரிப்புடன் தெரிவித்தவள் நண்பனின் புறமும் ஒரு கேள்வியை அனுப்பி வைக்க,
“நந்தன் உங்க டார்ச்சர் எல்லாம் தாங்க முடியாம சன்யாசம் வாங்கி கூடவே என்னையும் கூட்டிட்டு போகப்போறான்னு என்னோட ஞான கண்ணுல தெரியுது!!!” என்று பரிதாபமாக தெரிவித்தவனின் மண்டையில் நறுக்கென்று ஒரு குட்டு வைத்தாள் சந்தோஷி!!!
சாக்ஷிக்கோ பாட்டியின் துணை கிடைத்ததில் உச்சக்கட்ட சந்தோசத்தில் நின்றாள். அதனால் நந்தனின் மேல் நொடிநேரத்தில் ஒரு நக்கலான பார்வையை வீசியவள்,
“நான் வீட்டுக்கு கிளம்புறேன் பாட்டி… போய் குளிச்சிட்டு எல்லாத்தையும் எடுத்து வைக்கனும்!!!” என்றவள் பிரபாவிடம் அனுமதி பெற்றுக்கொண்டு செல்ல,
“டேய்!!! அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு… ஒழுங்கா இருந்துக்கோ… ஓவரா ஆட்டம் போடாத!!!” என்று சாக்ஷி சென்ற திசையின் பக்கம் இன்னமும் முறைப்பாக பார்வை வீசிக்கொண்டிருந்த நந்தனை கண்டு பாட்டி மிரட்ட,
“ஆமா நந்தா… எதுவும் செய்யாத!!!” என்று தன் பங்கிற்கு தேவிகாவும் மென்மையாக சொல்லியவர், பிரபாவை கூட்டிக்கொண்டு வீட்டினுள் சென்றார்… பின்னாடியே பாலாவும்!!!
“டேய்… நீயும் போய் குளிடா… நாம நம்ம வேலையை பார்ப்போம்…” என்று அறிவுறித்திய நண்பர்களின் மேல் ஒரு அனல் பார்வையை வீசியவன்,
“இவளை இந்த குரு பவனத்தை விட்டே அனுப்புறது தான் என்னோட முதல் வேலை… அப்பறம் தான் மத்த எல்லாம்!!!” என்று சூளுரைத்து தன்னுடைய வீடு நோக்கி சென்ற நந்தனை அதிர்வுடன் பார்த்தனர் நித்திலனும் சந்தோஷியும்!!!
3 Comments
No episode posted for a long time???
writer ah contact panna mudiyala pa…
Hi mam are you going to continue the story