அத்தியாயம் - 6
மித்ரா, அபிமன்யுவின் செகரட்ரியாக பதவியேற்ற முதல் நாள். மிகுந்த சந்தோஷத்துடன் துள்ளிக் கொண்டு சென்று அபிமன்யுவின் அறைக்கு வெளியே இருந்த குட்டி ரிஷப்ஷனில் அமைக்கப்பட்டிருந்த கேபினெட்டில் தன்னுடைய பொருட்களையெல்லாம் அடுக்கிக் கொண்டிருந்தாள். இண்டர்காமில் அழைப்பு வந்தது. முதல் அழைப்பு... அபிமன்யுவாகத்தான் இருக்கும் என்று ஆவலுடன் எடுத்தாள். ஆனால் அழைத்தது நரேன். தன்னை வந்து சந்திக்கும்படி கூறினான்.
சின்ன ஏமாற்றத்துடன் பெருமூச்சு விட்டவள் எழுது அவனுடைய அறைக்கு சென்றாள். இருவருடைய அறையும் ரொம்ப தூரமெல்லாம் இல்லை. பக்கத்து அறைதான். படி ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை. உடனே வந்துவிடலாம் என்றெல்லாம் யோசித்தபடி நரேனை பார்க்க சென்றாள்.
"எக்ஸ்க்யூஸ் மீ சார்" என்று உள்ளே நுழைந்தவளை ஏறிட்ட நரேனின் கண்கள் ரசனையுடன் மலர்ந்தது.
அழகாக டிரஸ் பண்ணி இருந்தாள். கலையான முகம். குண்டு கன்னம்... கொஞ்சம் பூசினார் போல் உடல்வாகு. ஆசையாக பார்த்தான். அந்த பார்வைக்கான பிரதிபலிப்பு அவளிடம் சிறிதும் இல்லை. அவளுக்கு தன் மீது கொஞ்சமும் இன்ட்ரெஸ்ட் இல்லை என்பதை அவள் உடல் மொழியிலிருந்து அறிந்து கொண்டவனுக்கு பெரிய ஏமாற்றம் தான்.
"மித்ரா, கீப்லாக் செக்யூரிட்டி சர்வீசஸ்லேருந்து மீட்டிங் அப்பாயின்மென்ட் கேட்டுட்டே இருக்காங்க. அபிதான் அட்டென்ட் பண்ணனும். தள்ளி போட்டுட்டே இருக்கான். என்னன்னு பார்த்து டேட் ஃபிக்ஸ் பண்ணிடுங்க" என்று சொல்லிவிட்டு பார்வையை லேப்டாப் பக்கம் திருப்பிக் கொண்டான்.
'போடி போ... போயி அவன்கிட்ட நல்ல வாங்கு' என்று சபித்தது கோபம் கொண்ட அவன் மனது.
அவன் பேச்சில் இருந்த உள்குத்து தெரியாமல், உடனே "ஓகே சார்" என்று ஆர்வமாக தலையாட்டிவிட்டு துள்ளலாக அபிமன்யுவின் அறைக்கு சென்றாள்.
அவன் வெகு தீவிரமாக கணினி திரையில் மூழ்கி இருந்தான். இவள் உள்ளே நுழைந்ததை கூட அவன் பொருட்படுத்தவில்லை.
'அப்படி என்னத்த இவன் சின்சியரா பார்க்கறான்!'என்று எண்ணியபடி சற்று நேரம் அமைதியாக நின்றவள் பிறகு, லேசாக இருமி தன்னுடைய இருப்பை அவனுக்கு வெளிப்படுத்தினாள்.
அதில் கவனம் களைந்து ஆத்திரத்துடன் நிமிர்ந்தவன், "அறிவு இல்ல? உள்ள வரும் போது கதவை தட்டிட்டு வரணும்னு தெரியாது?" என்று அமர்ந்திருந்த சேரை பின்னல் தள்ளிவிட்டு வீறுகொண்டு எழுந்தான்.
'அரே சைத்தான் கி பச்சா! இப்படி நீ கொலகாண்டா ஆகற அளவுக்கு அப்படி என்னடா நா பண்ணிட்டேன் இப்ப… கரடி மூஞ்சா!!’ - கன்னாபின்னாவென்று வாயில் வந்தது அவளுக்கு. பேசிவிட்டு உயிர் பிழைக்க முடியும் என்று தோன்றவில்லை. எனவே வாயில் வந்ததை வாய்க்குள்ளேயே போட்டு மென்று விழுங்கிவிட்டு, "கீப்லாக் செக்யூரிட்டி சர்வீசஸ் கூட உங்களுக்கு மீட்டிங் அரேஞ் பண்ணனும் சார். டைம் சொன்னிங்கன்னா ஸ்கெட்யூல் பண்ணிடுவேன்" என்றாள்.
"நீ இப்போ இங்கேருந்து போகலேன்னா உன்னோட கடைசி நாளை நா ஸ்கெட்யூல் பண்ணிடுவேன். ‘ஃபியூ…' "என்று விசிலடித்து கட்டை விரலால் கழுத்தை அறுப்பது போல் சைகை காட்ட அவள் கண்களில் மரண பீதி.
"சாரி பாஸ்... கீப்லாக்கை நா வெளியவே லாக் பண்ணி வைக்கிறேன். யு ப்ளீஸ் கேரிஆன்... ஐ'ல் காட் யு ஃபிரம் அவுட்சைட்" என்று நல்ல பிள்ளை போல் பேசிவிட்டு நைசாக நழுவினாள்.
'ஆள் பார்க்க ஹேண்ட்ஸமா இருக்கானேன்னு நெனச்சது தப்பா போச்சு. இவன் ஹேண்ட்ஸம் சைக்கோ... பி எக்ஸ்டரா கேர்ஃபுல் மித்து...' என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு வெளிப்புறம் நோக்கி நடந்தவளை இடையிட்டது அவன் குரல்.
"ஹேய், வா இங்க"
'வாட்!' - வெடுக்கென்று திரும்பினாள். கோலி கண்கள் இரண்டும் இமைகள் விரிந்து உருண்டன. அந்த குண்டு முகத்தில் நிறைய கோபம்.
"என் பேரு மித்ரா... கொஞ்சம் ரெஸ்பெக்ட் கொடுத்தா நல்லா இருக்கும்" - கண்டிப்புடன் கூறினாள்.
"கொடுக்க முடியாது. என்ன செய்வ?" - நெற்றி நரம்பு புடைக்க பற்களை நறநறத்தான்.
மித்ரா, அவனை ஏறிட்டாள். அஃப்கோர்ஸ், அவன் இருக்கும் உயரத்திற்கு கழுத்து வலிக்க அண்ணார்ந்து தான் பார்க்க முடிந்தது. பார்த்த மாத்திரத்திலேயே அவளுக்கு தோன்றியது ஒன்று தான்...
'இதுக்கு மேல இவன் கோபத்தை தூண்டுற மாதிரி ஒரு வார்த்தை விட்டாலும் சேதாரம் நமக்குத்தான்' - வாயை இறுக்கமாக மூடிக் கொண்டாள். பிறகு வெகுநேரம் அண்ணார்ந்து பார்த்துக் கொண்டே இருக்க முடியவில்லை என்று தலையையும் குனிந்து கொண்டாள்.
அதை அடக்கம் என்று புரிந்துகொண்ட அபிமன்யு மெல்ல மலையிறங்கினான். ஆழ மூச்செடுத்து தன்னை சமன்படுத்திக் கொண்டு, தன் கையிலிருந்த அலைபேசியை அவளிடம் நீட்டினான்.
"இந்த வீடியோல இருக்கது யாரு?" – நான்கைந்து வீடியோ கிளிப்பிங்கை வெட்டி ஒட்டி ஒரே வீடியோவாக மாற்றி அவளிடம் காட்டினான். எல்லாம் அவர்கள் கம்பெனி வளாகத்திற்குள் எடுக்கப்பட்ட சிசிடிவி வீடியோஸ் தான்.
மிருதுளாவை பற்றி தனியாக விசாரிக்க மனமில்லாமல் பலரோடு ஒருவராக அவளை பற்றியும் விசாரித்து தெரிந்துகொள்ள முயன்றான். அந்த முயற்சி துல்லியமாக பலனளித்தது.
வீடியோவில் இருந்த ஒவ்வொருவரை பற்றியும் விளக்கமாக விபரம் கொடுத்தவள், மிருதுளாவை பார்த்ததும், "இவங்க மிருதுளா. 'கீப்லாக்' கம்பெனி எம்ப்லாயி. இவங்க தான் உங்க அப்பாயின்மென்ட்காக ஒன் வீக்கா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க" என்றாள்.
"வாட்!" - ஐஸ் பாறையை நெஞ்சுக்குள் வைத்து போல் சிலீரென்ற உணர்வு உள்ளே பாய குரலே எழும்பவில்லை அவனுக்கு.
மித்ரா அவனை புரியாமல் பார்த்தாள். ஒரே நொடியில் அவனிடம் தோன்றிய மாற்றம் அப்படி...
தாக்கத்தை சமாளித்து தன்னிலைக்கு மீள சில கணங்கள் பிடித்தது அபிமன்யுவிற்கு.
"என்னோட அப்பாயின்மென்ட்காகவா வெய்ட் பண்றா...ங்க?? ஐ மீன்... கிப்லாக் சர்வீஸஸ்..??" - உளறலை சமாளித்து பூசி மொழுகினான்.
"எஸ், அவங்க உங்க அப்பாயின்மென்ட்காக தான் வெய்ட் பண்ணறாங்க. அதைத்தான் நான் சொல்ல வந்தேன்"
" அப்போ சொல்ல வேண்டியது தானே?"
"நீங்க விட்டாதானே!!" - அவன் முடிப்பதற்குள் இவள் பதில் சொல்லி முடித்துவிட அவன் கொலை வெறியோடு அவளை முறைத்தான்.
'மாட்டிக்கினாரு ஒத்தரு... அவரை காப்பாத்தணும் கத்தரு!' - மனசாட்சி மைண்ட் வாய்ஸில் அவளையே கலாய்த்து மஜா பண்ண, 'மேடம்.. !! மைண்ட் வாய்ஸ் மேடம்..! ப்ளீஸ் கீப் கொயட் மேடம்...' என்று தனக்குள் கெஞ்சியவள், "சாரி சார்... சொல்ல தான் வந்தேன்" என்று தொடங்க, "கிழிச்ச...” என்று சீறினான் அவன்.
“இது எவ்வளவு முக்கியமான மீட்டிங் தெரியுமா?” - மித்ராவின் பார்வையில் சந்தேகம் ஏறியது. உடனே அவன் பேச்சின் போக்கு மாறியது.
“இங்க செக்யூரிட்டி பிரச்னை இருக்கு... அதை ஹேண்டில் பண்ணத்தான் நான் வந்திருக்கேன். உன்ன மாதிரி ஒரு யூஸ்லெஸ் செகரட்ரியை வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணறது!" என்று கத்தினான்.
அவன் பேசிய விதத்தில் தன் மீதுதான் தவறோ என்று அவளுக்கே ஒரு கணம் தோன்றிவிட்டது. 'அடேய்... நல்லா கழுவுறடா மண்டைய...’ - மனதிற்குள் திட்டிக் கொண்டாள்.
" சரி.. கால் பண்ணு"
"இப்பவேவா!"
"வேற எப்ப? நல்ல நாள் பார்க்கலாமா?" - கடுப்படித்தான்.
"நோ நோ நோ... அப்படிலாம் உடனே மீட்டிங் ஏற்பாடு பண்ண முடியாது. அவங்களோட மற்ற அப்பாய்ன்மெண்ட்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டு அவங்க சொல்லணும். அதுக்கு அப்புறம் தான்..." என்று சொல்லிக் கொண்டிருந்தவளை, பொறுமை இழந்து இடைவெட்டினான் அபிமன்யு.
"இடியட்... முதல்ல கால் பண்ணு. நா ஃபிரீன்னு சொல்லு. அதுக்கப்புறம் அவங்க பதிலை கேட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அப்பாயின்மென்ட் ஃபிக்ஸ் பண்ணு"
அவன் பேசும் விதம் அவளுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. 'திமிர் பிடிச்சவன்' என்று திட்டிக் கொண்டே போனை எடுத்தாள்.
"வெயிட் வெயிட்..." - அவளை தடுத்தவன், எதையோ யோசித்துவிட்டு, "என்னோட நேம் சொல்லாத. நா இங்க ஷேடோ பார்ட்னர்தான். நரேன் பேரையே யூஸ் பண்ணிக்கோ" என்றான்.
இப்போது மித்ரா முழுவதும் குழம்பி போனாள்.
"மீட்டிங் உங்க கூட தானே?" என்றாள்.
"கேள்வி கேட்காத. சொன்னதை செய்" – வார்த்தைகளை துப்பினான்.
அவனுடைய விசித்திர நடவடிக்கையை எண்ணிப் பார்த்தபடியே, 'கிப்லாக்' செக்யூரிட்டி கம்பெனியின் அலைபேசி எண்ணுக்கு அழைத்தாள்.
"நீங்க கூப்பிட்ட உடனே 'எஸ் மேடம்' னு சொல்லி அங்க வந்து நிக்கிறதுக்கு நா ஒன்னும் உங்களுக்கோ இல்ல உங்க கம்பெனிக்கோ அடிமை இல்ல. மூணு தரம் மீட்டிங் ஸ்கெடியுல் பண்ணி நான் அங்க வந்திருக்கேன். ஆனா மிஸ்டர் நரேனை பார்க்க முடியல. இனி எதுவா இருந்தாலும் ஈமெயில் பண்ணுங்க. நா ரிப்ளை பண்றேன். உங்க கம்பெனிக்கு என்னால வர முடியாது" - படபடவென்று பொரிந்து கொட்டியது அந்த பக்கத்திலிருந்து ஒரு பெண் குரல். கோபம்.. கடுமை.. கண்டிப்பு.. இதை தவிர வேறு எதுவும் இல்லை அந்த குரலில். வேறு யார் அப்படி பேசி இருக்கக் கூடும்! மிருதுளாவே தான்.
மித்ரா நொந்து போனாள். இரண்டு பக்கமும் இடி வாங்கும் மத்தளம் போலானது அவள் நிலை. பேசி... கெஞ்சி... சமாதானம் செய்து ஒரு வழியாக அடுத்த மூன்றாவது நாள் காலை பத்து மணிக்கு சந்திப்பை உறுதி செய்தாள்.
'அப்பாடா' என்று சாதித்துவிட்ட நிம்மதியோடு அவள் அபிமன்யுவை நிமிர்ந்து பார்க்க அவன் பெரிதாக அவளை பாராட்டவில்லை. பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை. முறைத்து வேறு பார்த்தான். மிருதுளாவை பார்க்க இன்னும் இரண்டு நாள் காத்திருக்க வேண்டுமே என்பது அவன் கவலை.