Parvathi Pazhani
Member
- Messages
- 40
- Reaction score
- 14
- Points
- 8
மயங்குகிறாள் ஒரு மாது - ரமணிசந்திரன்
துறுதுறுப்பான மாயா சுதாகரனை முதலில் சந்தித்தது ஒரு சினிமா தியேட்டரில் அப்போது அவன் பெண்களோடு சிலுமிஷம் செய்து கொண்டிருப்பான். அதோடு மற்ற பெண்களையும் பார்வையால் மேய்வான். அதை அருவெறுப்புடன் பார்த்த மாயா அம்மா சொன்ன நக்குகிற நாய்க்கு செக்கை தெரியுமா சிவலிங்கத்தை தெரியுமா என்கிற பழமொழியை நினைப்பாள்.
இன்னொரு நாள் அவனை ரகுவின் வீட்டில் பார்ப்பாள். அப்போது இவள் மரத்திலிருந்து கீழே விழுந்துவிடாமல் இருக்க அவன் தாங்கி பிடிப்பான். அப்போது கைகள் அவளிடம் சிலுமிஷம் செய்ய முயற்சிக்கும். அவள் கோபத்தில் அவனை அறைந்துவிட்டு, நக்கும் நாய் செக்கு பழமொழியை சொல்லி திட்டிவிடுவாள்.
அடுத்த சிலநாட்களில் அவன் மாயாவை கடத்தி மலை மேல் ஒரு மாளிகையில் சிறை வைத்துவிடுவான். பிறகு ஒவ்வொரு நாளும் கொடுமை நடக்கும். பட்டினி போடுவான். கையை உடைப்பன். குளிரில் வெளியே விட்டு கதவை மூடிவிடுவான். கடைசியாக பலவந்தபடுத்தி கர்பம் செய்தும் விடுவான்.
கிட்டத்தட்ட ஒரு வருடம் அவள் அவனிடம் சிறை இருப்பாள். பிறகு அவளை விட்டுவிடுவான். அவள் பெற்றோரை தேடி வந்தால் அவர்கள் இவளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குழந்தை பிறக்கும். அதை கொன்றுவிட்டு தானும் செத்துப்போகலாம் என்று முயற்சி செய்வாள். ஆனால் மனசு வராது.
குழந்தையை அவனிடம் கொடுத்துவிட்டு செத்துப்போகலாம் என்று அவனை தேடி வருவாள். அவன் திருமணம் செய்துகொள்ளலாம் என்று சொல்வான். அவள் முடியாது என்று சென்று நாயிடம் கடிபட்டு சாகக்கிடப்பாள்.
அவன் மனம் திருந்தி வருந்துவான். அவள் பிழைக்க தவம் கிடப்பான். அவளை காப்பாற்றி மன்னிப்பு கேட்டு இருவரும் சேர்வது போல முடியும் கதை.
துறுதுறுப்பான மாயா சுதாகரனை முதலில் சந்தித்தது ஒரு சினிமா தியேட்டரில் அப்போது அவன் பெண்களோடு சிலுமிஷம் செய்து கொண்டிருப்பான். அதோடு மற்ற பெண்களையும் பார்வையால் மேய்வான். அதை அருவெறுப்புடன் பார்த்த மாயா அம்மா சொன்ன நக்குகிற நாய்க்கு செக்கை தெரியுமா சிவலிங்கத்தை தெரியுமா என்கிற பழமொழியை நினைப்பாள்.
இன்னொரு நாள் அவனை ரகுவின் வீட்டில் பார்ப்பாள். அப்போது இவள் மரத்திலிருந்து கீழே விழுந்துவிடாமல் இருக்க அவன் தாங்கி பிடிப்பான். அப்போது கைகள் அவளிடம் சிலுமிஷம் செய்ய முயற்சிக்கும். அவள் கோபத்தில் அவனை அறைந்துவிட்டு, நக்கும் நாய் செக்கு பழமொழியை சொல்லி திட்டிவிடுவாள்.
அடுத்த சிலநாட்களில் அவன் மாயாவை கடத்தி மலை மேல் ஒரு மாளிகையில் சிறை வைத்துவிடுவான். பிறகு ஒவ்வொரு நாளும் கொடுமை நடக்கும். பட்டினி போடுவான். கையை உடைப்பன். குளிரில் வெளியே விட்டு கதவை மூடிவிடுவான். கடைசியாக பலவந்தபடுத்தி கர்பம் செய்தும் விடுவான்.
கிட்டத்தட்ட ஒரு வருடம் அவள் அவனிடம் சிறை இருப்பாள். பிறகு அவளை விட்டுவிடுவான். அவள் பெற்றோரை தேடி வந்தால் அவர்கள் இவளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குழந்தை பிறக்கும். அதை கொன்றுவிட்டு தானும் செத்துப்போகலாம் என்று முயற்சி செய்வாள். ஆனால் மனசு வராது.
குழந்தையை அவனிடம் கொடுத்துவிட்டு செத்துப்போகலாம் என்று அவனை தேடி வருவாள். அவன் திருமணம் செய்துகொள்ளலாம் என்று சொல்வான். அவள் முடியாது என்று சென்று நாயிடம் கடிபட்டு சாகக்கிடப்பாள்.
அவன் மனம் திருந்தி வருந்துவான். அவள் பிழைக்க தவம் கிடப்பான். அவளை காப்பாற்றி மன்னிப்பு கேட்டு இருவரும் சேர்வது போல முடியும் கதை.