திகில் நிறைந்த திருப்பங்களை கொண்டு பரபரப்பாக கதை செல்கிறது. கிராமத்து நிகழ்வுகளை எல்லாம் தத்ரூபமாக, வெகு இயல்பாக படம் பிடித்து நேரில் காட்டுவது போல் எழுதக்கூடிய அற்புதமான திறமை இந்த கதாசிரியருக்கு இருக்கிறது!
ஒப்பாரி சூப்பர். பாச உணர்வுகளை அப்படியே சிதைக்காமல் இலக்கிய நயத்துடன் காட்டும்...
சுவராஸ்யமாக படித்துக் கொண்டே வந்தேன்... நிறைவு பகுதிக்கு வந்ததும்..
குளத்துக்குள் எதோ தட்டுபடுது என பயந்தவர்கள் அந்த காளையர்கள் மட்டுமல்ல... நானும்தான்!
ஷோபாவில் சாய்ந்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்த நான், திடுக்கென பயத்தில் ஷோபாவில் நிமிர்ந்து உட்கார்ந்தேன்!
என்னம்மா இப்படி பயமுறுத்துறீங்க!
கிராமத்து பேச்சு வழக்குகளையும் பழக்க வழக்கங்களையும் நயம்பட எழுதுகிறீர்கள். பாராட்டுகள்.
கதை வெகு இயல்பாக, நிஜ நிகழ்வுகள் நம் முன்னே நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை உங்கள் கதை தருகிறது! இதில்தான் உங்களது எழுத்தாற்றலும் கதை எழுதும் நுணுக்கமும் வெளிப்படுகிறது!
"... தயாளன் கைகொடுத்து தூக்கும்போது...
கதையின் நிகழ்ச்சிப் போக்குகள் நம் கண்முன்னே நிகழ்வது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு கதையை அருமையாக கொண்டு போகிறீர்கள்.
மேலும் கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்துவதில் உங்களின் மதிநுட்பம் தெரிகிறது!
கிராமத்து பேச்சுவழக்குகள் கண கச்சிதமாக தத்ரூபமாக ஒரு உண்மையான நிகழ்வுபோன்று எண்ண...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.