Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. M

    கல்கியின் அலை ஒசை

    பதின்மூன்றாம் அத்தியாயம் வானம் இடிந்தது ராகவன் பேசத் தொடங்குவதற்கு ஒரு நிமிஷம் ஆயிற்று. பேசத் தொடங்கிய போதும் அவன் கேட்க விரும்பியதை உடனே கேட்க முடியவில்லை, பேச்சை வேறுவிதமாக ஆரம்பித்தான். "அம்மா! அங்கே யார்? இன்னும் யாராவது வந்திருக்கிறார்களா? புதிய குரல் ஏதோ கேட்டதே?" என்றான். "ஆமாண்டா...
  2. M

    கல்கியின் அலை ஒசை

    பன்னிரண்டாம் அத்தியாயம் கராச்சியில் நடந்தது 'தேவி ஸதன'த்தின் பின்கட்டில் ஒரு புறத்தில் சமையல் அறையும் அதற்கு எதிர்ப்புறத்தில் காமாட்சி அம்மாளின் பூஜை அறையும் இரண்டுக்கும் மத்தியில் விசாலமான கூடமும் இருந்தன. கூடத்தின் நடுவில் ஊஞ்சல் போட்டிருந்தது. ராகவன் பின்கட்டுக்கு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து...
  3. M

    கல்கியின் அலை ஒசை

    பதினோறாம் அத்தியாயம் "என்னைக் கேட்டால்....." ராகவன் சொன்னதற்குப் பதிலாக எதுவும் சொல்வதற்கு அங்கிருந்தவர்களில் யாருக்கும் நா எழவில்லை. அவனும் பதிலுக்குக் காத்திராமல் வீட்டின் பின்கட்டை நோக்கி விடுவிடு என்று நடந்து சென்றான். அவன் மறைந்த பிறகு காமாட்சி அம்மாள் கிட்டாவய்யரைப் பார்த்து, "நீங்கள்...
  4. M

    கல்கியின் அலை ஒசை

    பத்தாம் அத்தியாயம் காமாட்சி அம்மாள் வீட்டின் பின்கட்டிலிருந்து, "இதோ வந்து விட்டேன்" என்று ஸ்திரீயின் குரல் கேட்டது. சாஸ்திரிகள், "வா! வா! நீ வந்தால்தான் விஷயம் முடிவாகும்!" என்று உரத்துக் கூவினார். மறுபடியும் சுப்பய்யரைப் பார்த்துச் சாஸ்திரிகள் கூறினார்:- "இந்தக் கல்யாண 'டிபார்ட்மெண்'டை நான்...
  5. M

    கல்கியின் அலை ஒசை

    ஒன்பதாம் அத்தியாயம் கதவு திறந்தது வாசலில் வந்து நின்றவர்கள் யாசகர்கள் அல்ல, சந்தா வசூலிக்க வந்தவர்கள் அல்ல, பொங்கல் இனாம் கேட்க வந்தவர்களும் அல்ல என்பது நிச்சயமான பின், 'தேவி ஸதனத்'தின் வாசற் கதவு திறக்கப்பட்டது. "வாருங்கள், ஐயா! வாருங்கள், நீங்கள்தானா? யாரோ என்று பார்த்தேன். இந்தக் காலத்தில்...
  6. M

    கல்கியின் அலை ஒசை

    எட்டாம் அத்தியாயம் சௌந்தர ராகவன் ஐந்து அடி ஆறு அங்குலம் உயரமும் அதற்குத் தகுந்த வாட்டசாட்டமும் சிற்பி செதுக்கியதுபோல் கம்பீரமாக அமைந்த முகமும் கச்சிதமாகக் கிராப் செய்து நன்கு படியும்படி வாரிவிட்ட தலையும் நாகரிகமான உடையுமாக இதோ மேஜையருகில் நாற்காலியில் அமர்ந்திருப்பவன்தான் நம் கதாநாயகன்...
  7. M

    கல்கியின் அலை ஒசை

    ஏழாம் அத்தியாயம் பத்மாபுரம் சென்னைப் பட்டினத்தின் ஒரு புதிய பகுதியான பத்மாபுரத்தைப் பற்றி அறியாதவர்கள், அறியாதவர்களே ஆவர். தினப்பத்திரிகை வாசகர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் வெளியாகும் பத்திரிகையில் நகர நிகழ்ச்சிக் குறிப்புகளில் 'பத்மாபுரம்' என்ற பெயரைக் கட்டாயம் படித்திருப்பார்கள். ஒவ்வொரு...
  8. M

    கல்கியின் அலை ஒசை

    ஆறாம் அத்தியாயம் மந்திராலோசனை கிட்டாவய்யர் சாய்மான நாற்காலியிலிருந்து எழுந்த போது கீழே விழுந்த கடிதத்தை எடுத்து நின்ற வாக்கிலேயே அதைப் பிரித்துப் படித்தார். பாதி படிக்கும் போதே, "சீச்சீ! இங்கிலீஷ் படித்தவர்களுக்குப் புத்தியே இருப்பதில்லை. அதிலும் மதராஸில் குடியேறிவிட்டால், அவர்களுக்கு தலைகால்...
  9. M

    கல்கியின் அலை ஒசை

    ஐந்தாம் அத்தியாயம் கிட்டாவய்யர் குடும்பம் ராஜம்பேட்டை கிட்டாவய்யர் அவருடைய தந்தைக்கு ஒரே புதல்வர். தகப்பனார் அகண்ட காவேரிக் கரையில் தேடி வைத்திருந்த பல ஏக்கரா நன்செய் நிலத்துக்கும் கிராம முனிசீப் வேலைக்கும் உரிமை அடைந்தார். வளமான பூமி; பொன் போட்டால் பொன் விளையக்கூடியது. ஆயினும், அந்நிலத்தில்...
  10. M

    கல்கியின் அலை ஒசை

    நான்காம் அத்தியாயம் வாசலில் ரகளை கிட்டாவய்யரின் மனைவி சிறிது நேரம் வாசலில் கால்கடுக்க நின்று லலிதாவை எதிர்பார்த்தாள். பிறகு சற்று நேரம் திண்ணையில் உட்கார்ந்து பார்த்தாள். வீதியோடு யாராவது புருஷர்கள் சென்றால் உடனே எழுந்து ரேழியில் போய் நின்று கொள்வாள். இரண்டொரு தடவை வீட்டுக்கு உள்ளேயும் போய்...
  11. M

    கல்கியின் அலை ஒசை

    மூன்றாம் அத்தியாயம் பம்பாய்க் கட்டிடம் கிட்டாவய்யர் பட்டணத்து நாகரிகத்தைக் கிராமங்களுக்குக் கொண்டுவர ஆசைப்பட்டார். அந்த ஆசையின் அறிகுறியாகச் சில காலமாய் அவர் தமது மனைவியைப் பெயர் சொல்லி நாலு பேருக்கு முன்னால் கூப்பிடவும் அவளுடன் சங்கோசமின்றிச் சம்பாஷிக்கவும் ஆரம்பித்திருந்தார். பீஹார்...
  12. M

    கல்கியின் அலை ஒசை

    இரண்டாம் அத்தியாயம் தாயின் உள்ளம் ராஜம்பேட்டை அக்கிரகாரத்து வீடுகளில் சரிபாதி வீடுகளுக்கு மேலே பாழடைந்து கிடந்தன. உருப்படியாக இருந்த வீடுகளில் பட்டாமணியம் கிட்டாவய்யரின் வீடு இரட்டைக் காமரா அறைகளுடன் கம்பீரமாக நிமிர்ந்து நின்றது. வீட்டின் முன்கட்டில் செங்கல் - சிமெண்ட் தளம் போட்ட கூடத்தில்...
  13. M

    கல்கியின் அலை ஒசை

    பாகம் 1 - பூகம்பம் முதல் அத்தியாயம் தபால்சாவடி சாலையின் இரு புறத்திலும் ஆலமரங்கள் சோலையாக வளர்ந்திருந்தன. ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளைப் போல் அந்தச் சாலை எங்கே ஆரம்பமாகிறது, எங்கே முடிவாகிறது என்று தெரிந்துகொள்ள முடியாததாயிருந்தது. பகவானுடைய விசுவரூபத்தின் அடியும், முடியும்போல, இரு...
Top Bottom