Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    குழந்தை வளர வளர இந்த வாழ்க்கையில் இதுவே பெரிய சந்தோஷம் என்று மௌனமாகவே இருக்க பழகிக் கொண்டாள் உமா. ஸ்கந்தன் தனது விளையாட்டால், அறிவார்ந்த அவனது பேச்சால் வீட்டிலிருந்து பெரியவர்கள் எல்லோரையும் கட்டிப் போட்டான். பள்ளியிலும் நன்றாக படிப்பவன் என்பதால் அவன் மீது இதுவரை எந்த புகார்களும் பள்ளியிலிருந்து...
  2. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    26 சாதுர்யா படிப்பில் தன்னை முழுமையாக நுழைத்துக் கொண்ட போதிலும், ரங்கனின் ஞாபகங்களில் இருந்து வெளிவந்த படிப்பை உள்ளே செலுத்துவது அவனுக்கு மிகவும் கஷ்டமாகத் தான் இருந்தது. ரங்கன் இப்போதெல்லாம் அவளிடம் சுத்தமாகவே பேசுவதை தவிர்த்து வருவதன் பலனாக அவனது கோபத்தின் அளவு அவளுக்கு தெளிவாக புரிகிறது...
  3. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    காலங்களின் ஓட்டத்தில் உமாவின் மகன் ஸ்கந்தனுக்கு இப்போது முழுதாக ஐந்து வயது ஆகிவிட்டது. அவனுக்கு அம்மாவின் மீது அளவு கடந்த பிரியம். அதைப் போன்று தந்தையை கண்டால் ஏனோ அவனுக்கு அந்த வயதிலேயே பிடிக்காமல் போய்விட்டது. குருவுக்கும் குழந்தை மீதோ மனைவி மீதோ எப்போதுமே பெரிய அளவில் பிடித்தம் எதுவும்...
  4. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    இதோ அதோ என்று நாட்கள் ஓட, உமாவிற்கு பேறுகாலம் இன்னும் பதினைந்து நாட்களில் வந்து நின்றது. மருத்துவ தலை பிரசவம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் ஒரு வாரம் முன்னதாகவே மருத்துவமனைகளில் வந்து சேருமாறு சொல்லிவிட, குருவுக்கு சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி. குழந்தை வெளி உலகத்திற்கு...
  5. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    23 மயங்கி விழுந்தவளை தன் கைகளில் தாங்கி கொண்டான் குருபரன். அவன் மனதிற்குள் இந்த முறை நிச்சயம் மனைவி கரு தரித்து இருக்கலாம் என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. அருணாச்சலம் தனது அலுவலக அறைக்குள்ளேயே தான் இருந்தார். வெளியே வாக்கு பதிவு நடந்து கொண்டிருந்ததால், தன் வீட்டிற்குள் இருந்தவருக்கு நிஜமாலுமே...
  6. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    எபி 22 திருச்சியில் இருந்து பெங்களூர் செல்லும் வழியில் குருபரனுக்கு சொந்தமாக கஞ்சா தோட்டம் இருக்கிறது. அங்கே செல்லும் போதெல்லாம் நண்பர்களுடன் கூடிக் குலாவும் அந்த நேரம் குருவுக்கு மிகவும் பிடித்தமானது. ஒருவரோடு ஒருவர் குடிப்போதை பாதி ஏறியும் பாதி சுய புத்தியுமாய் சீட்டு ஆட உட்கார்ந்து கொண்டும்...
  7. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    21 உமாவின் நாட்கள் கடந்த ஒரு வருடமாக இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. ஒரு நாளும் இடை விடா கணவன்.தன்னைப் பெற்றவளை பாதுகாப்பது முதல் கொண்டு செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தன்னை என்றும் விலக விடாமல் தன் மனதில் மேற்கொண்ட சத்தியத்தை இன்று வரை காப்பாற்றி வருகிறாள் அவள். எத்தனையோ பெண்களை...
  8. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    20 சாதுர்யா இவ்வளவு சீக்கிரம் தன் மனதில் இருப்பதை சொல்லி விடுவாள் என்று ரங்கன் சிறிது கூட எதிர்பார்க்கவில்லை. காரில் வரும்போதெல்லாம் இருவருக்கும் மௌனம் மட்டுமே மொழியாக! ஏனோ அந்த பெண்ணுக்கு தன் அத்தானிடம் தன் காதலை இப்பொழுது சொல்லவில்லை என்றால் எப்பொழுதுமே சொல்ல முடியாமல் போய்விடுமோ என்ற ஒரு...
  9. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    19 திருமணம் முடிந்த பிறகு,திருமணத்துக்கு வந்தவர்களையெல்லாம் இரண்டு குடும்பத்தினரும் ஒன்றாக நின்று நன்றி சொல்லி வழியனுப்பி வைத்தார்கள். திருமண மண்டபத்தின் வாயிலில் தாம்பூலம் கொடுக்க தனியாக கல்யாண காண்ட்ராக்டரின் ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். இன்னும் பதிநைந்து நாட்களில் தேர்தல் பற்றிய...
  10. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    18 ஒருவழியாக ரத்னா திருமணம் முடிந்து திருச்சூர் சென்ற பிறகு, சிவனின் வீடு நடந்தவற்றை ஜீரணம் செய்து கொண்டு வழக்கத்திற்கு மாறியது. திருமணம் நடந்தது பற்றி அவர்கள் வீட்டில் யாருக்கும் வருத்தம் இல்லை. ஆனால் அது நடந்த விதம் சிவனுக்கும் அவரது தங்கை திலகா விற்கும் இடையே பெரிய மன பிளவை ஏற்படுத்தி...
  11. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    17 சங்கரனுக்கு உமா சொன்னவற்றைக் கேட்டபின்பு இரவு உறக்கம் வருவதாய் இல்லை. பணத்திற்கு ஆசைப்பட்டு பெற்று வளர்த்த பெண்ணை விற்பதை கூட அவன் கேள்வி பட்டு இருக்கிறான். சில இடங்களில் பெண்கள் இரண்டாம் தாரமாய் வசதியான வயது முதிர்ந்தவர்களுக்கு திருமணம் செய்து அனுப்பப்பட்டு இருக்கிறார்கள் என்பதும்...
  12. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    16 சாதுர்யா ஒரு வழியாக ஸ்ரீ ரங்கம் வந்து சேர்ந்தாள். மாலதிக்கு அவளை எப்படியாவது தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும் இல்லை எனில் திருநெல்வேலியில் தன் பிறந்த வீட்டிலாவது விட வேண்டும் என்ற யோசனை. இதற்கெல்லாம் சாதுர்யா மசிந்தால்தானே! யார் சொன்னாலும் கேட்டு நடக்கும் நிலையில் பெண் இல்லை. பரீட்சை முடிந்து...
  13. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    15 பண்ணிரண்டாம் வகுப்பின் வருஷம் முடியும் வரை பொறுமை காத்த சாதுர்யா கல்லூரி படிப்புக்கு ஸ்ரீ ரங்கம் செல்வதாக தேர்வு முடிந்த அன்றே தன் அம்மா மாலதியிடம் சொல்ல வீடு பூகம்பம் நடக்கும் இடமானது. இத்தனை வருஷங்களில் மன எண்ணங்களையும், புழுக்கங்களையும் மாலதியிடம் சாதுர்யா பகிர்ந்து கொண்டது இல்லை...
  14. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    திருச்சூரில் இருந்து பூங்குவளை வந்ததில் இருந்து ரத்னாவுக்கு கல்யாணம் பற்றிய எண்ணங்களும் குழப்பங்களும் சுற்றி வளைத்தது. அவளுக்கு சங்கரன் பற்றிய யோசனைகளும் தயக்கங்களும், பயமும் உண்டு. விழா முடிந்து பத்து நாட்களில் சங்கரன் வந்தான். வந்தவன் ரத்னாவை கிணற்றடிக்கு அழைத்து சென்று, அவளுடன் தனியாக பேச...
  15. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    13 வீட்டில் சடங்குகள் எல்லாம் முடிந்து விட்டது. அவரவர் விழா முடிந்த பிறகு ரேணுவின் வீட்டிலிருந்து கிளம்பி விட்டார்கள். இப்பொழுது வீடு வழக்கம்போல் அமைதியாக இருந்தது. விழா முடிந்த அன்று அங்கு இருந்த பொருட்களை எல்லாம் சரி செய்து விட்டு அமர்கையில் எல்லோருக்குமே களைப்பு ஓங்கியிருந்தது. மறுநாள்...
  16. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    ரங்கன் சொன்ன விஷயம் கேட்டு, முதலில் அதிர்ச்சி அடைந்த லட்சுமி அம்மாள் பிறகு தன்னை சுதாரித்தவராக, முதலில் ரங்கனை பெண்ணை கூட்டிக்கொண்டு ஸ்ரீரங்கம் வரச்சொல்லி, தானே அனைத்தையும் பார்க்கலாம் என்று நினைத்தவர், பின்னர் இந்த நிலையில் துணைக்கு வேறு பெரியவர்களும் யாருமில்லா சமயத்தில் பூப்பெய்தியிருக்கும்...
  17. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    ரயில் பயணம் நீள்வது போல் உமாவின் பயமும் நீண்டுகொண்டே போகிறது. அவளுக்கு குருவை திருமண உறவில் நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் ரத்னா சங்கரனை தவிர வேறொன்றும் நினைவில்லாமல் நிச்சய நாளுக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள். இதில் எதிலும் சிக்காமல் சந்தோஷ சிறகுகள்...
  18. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    எபி 10 ரத்னாவுக்கு திருமணத்திற்கு முன்னரே பெரிய அளவில் நிச்சயம் செய்ய வேண்டும் என்று திலகாவும் அவள் கணவரும் ஆசை பட்டதால், சிவனும் சரி சொல்லிவிட்டார். நிச்சயதார்த்தம் திருசூரில் நடந்தால் உறவினர் பலர் வர முடியும் என்று திலகா சொன்னதால் விட்டுபோன பல சொந்தங்களை தேடி சிவன் கிளம்பிவிட்டார். அவர்கள்...
  19. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    சிவனின் நிர்பந்தத்தின் பெயரில் அவரது மொத்த குடும்பமும் குருபரனை ஏற்க தயாராகிவிட்டது. மணப்பெண் உமா முகத்தில் பெயரளவுக்கு கூட சிரிப்பில்லை . திருமணத்திற்காக அந்த வயதில் ஏற்படும் ஆயிரம் கனவுகள் வெறும் கானல் நீர்தான் என்பது எவ்வளவு பெரிய துக்கம். அவளால் அவளது ஏக்கங்கள் கடைசி வரை வெறும்...
  20. Subageetha Sundararajan

    சது(ரங்கம் )

    சதுரங்கம் 8 வீட்டுக்கு வந்த சிவனின் மனம் முழுவதும் எப்படி ஆரம்பித்து, எதை மனைவியிடம் பேசுவது என்றே ஓடிக் கொண்டிருந்தது. சாப்பிடும் பொழுது வாய்ப்பு தானாகவே அமைந்து வந்தது. மூன்று பெண்களையும் தனது கணவரையும் அமரவைத்து உணவு பரிமாறிய சிவனின் மனைவி பாறுக்குட்டி உணவு பாத்திரத்தில் உள்ள பதார்த்தங்களை...
Top Bottom