Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Karambayam R Chandrasekar

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    உண்மைதான். ஆனால், அந்த இணைப்பை காலம் நிகழ்த்த வேண்டும் என்று விடுவது ஏன்? தவிர்க்க முடியாத ஒரு துரதிஷ்ட நிகழ்வுக்கு பரிகாரத்தை நாம்தான் தேட வேண்டும். காலம் செய்யும் வரை காத்திருப்பது ஞாயமல்ல!
  2. Karambayam R Chandrasekar

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    கதை ஒரு வழியாக முடிந்துவிட்டது. மிகவும் உணர்வு பூர்வமான கதை. அதுமட்டுமல்ல, கிராம கலாச்சாரத்தை வெளி உலகுக்கு எடுத்துக் காட்டும் சிறப்புக்கு உரிய கதை. ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள். உத்தமன் சுடருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் உணர்வு பூர்வமாக காட்சியமைக்கப் பட்டிருப்பது மிகவும் ரசிக்கும்படி...
  3. Karambayam R Chandrasekar

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    மிக அற்புதமான வார்த்தைகளால் கதை கட்டமைக்கப் படுவது என்பது எளிதில் எல்லோருக்கும் வராது. இதன் ஆசிரியர் கிராமத்து வார்த்தைகளை பிசிரில்லாமல் கூறுவது கிராமத்து மன உணர்வுகளையும் கலாச்சாரத்தையும் துல்லியமாக படம் பிடித்து காட்டுகிறது! இது உண்மையிலேயே பாராட்டுக்கு உரியது. உதாரணத்திற்கு சில வாசகங்கள்...
  4. Karambayam R Chandrasekar

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    கதையை படித்துவிட்டு மனம் கணத்து நீண்டநேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேன். மாணிக்கம் செய்த அநியாயத்துக்கு தகுந்த தண்டனைதான் என்றாலும் மனம் ஏனோ அவரது பிள்ளைகளை நினைத்து கஷ்ட படுகிறது! 'காலம் கடந்த ஞானம்' யாருக்கென்ன லாபம்? என்று ஆசிரியர், கேள்வி கேட்பதன் மூலமாக சமூகத்துக்கு அறிவுரை கூறுவதை பாராட்ட...
  5. Karambayam R Chandrasekar

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    யார் எழுத்தாளர்? நான் எழுத்தாளர் கிடையாது! இரண்டு புத்தகம் எழுதியிருக்கிறேன்தான்... ஆனால் நான் ஒரு எழுத்தாளர் என்று கூறிக் கொள்ள விரும்புவதில்லை! நான் ஒரு விவசாயி. விவசாயி என்பதே எனக்கு என்னைப் பொறுத்தவரை பெருமையாக நினைக்கிறேன்.
  6. Karambayam R Chandrasekar

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    கதை முடியும் தருணம் வந்துவிட்டது என நினைக்கிறேன். சுடரழகி திருமணத்துடன் 'சுபம்' போட போகிறீர்களோ? ".. அவளது மேனியில் நீர் இறங்கும் உணர்வானது, அன்று அவன், அவள் மீது மண்ணெண்ணெய் ஊற்றியதை நினைவுப் படுத்தியது." என்று எழுதுகிறார். அங்குதான் ஆசிரியர் தன் எழுத்து வல்லமையில் தனித்துவத்தை...
  7. Karambayam R Chandrasekar

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    கதை பரபரப்பின் உச்சத்தை தொட்டுள்ளது. சுடரழகியை அவளது பேச்சு மூலம் பாரதி கணவு கண்ட புதுமை பெண்ணாக்கி விட்டார் கதாசிரியர். "..நான் மரியாதை கொடுத்தாத்தான் இது தாலி கயிறு மஞ்சள் கயிறு மகிமை எல்லாம். இல்லன்னா இது வெறும் கயிறு..." என்று பேச வைத்து சமூகத்துக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளார். ஆமாம்...
  8. Karambayam R Chandrasekar

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    கிராமத்து மொழியில் வெகு அழகாக கதைச் சொல்வது ரசிக்கும்படியாக இருக்கிறது. சமூக நீதிக்கு போராடும் ஆசிரியரின் போராட்ட குணம் கதையில் வெளிபபடுகிறது! ".... பெரியப் பதவியில் இருக்குற பொம்பளய்ங்க காலுல ஒங்க ஆம்பளங்க போயி விழுறியளே, அப்ப எங்க போவுது ஒங்க ஆம்பள பொம்பள வித்தியாசம்?" என்று நச்சு என்று...
  9. Karambayam R Chandrasekar

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    "சமுதாயத்தில் புரையோடி கிடக்கும் கௌரவ சிக்கல்களில் பலியான பல உயிர்களில் அவரது உயிரும் சேர்ந்துக் கொண்டது" என்ற இந்த வார்த்தைகள் மூலம் ஆசிரியர் சமூக சிக்கல்களை பிரதிபலிப்பது, சமூகம் பற்றிய ஒரு கால கண்ணாடியாக எதிர்காலத்தில் இலக்கிய தகுதிப் பெற்று நிலைத்து நிற்கும்! அடுத்து, தன் மரணத்தின் போது...
  10. Karambayam R Chandrasekar

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    அற்புதமான கதை. இக்கதையின் மூலம், சமூகத்தில் நிகழும் அவலங்களை தோலுறித்து காட்டியுள்ளீர்கள். இதில் வெளிப்படும் உங்களது கோப உணர்வையும் சமூக அக்கரையையும் என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது! வாழாவெட்டியாய் வந்துள்ள சுடரழகியை கண்டு என் மனம் கணமாகி போனது. கதாசிரியர் மனமிறங்கி அவளை உத்தமனுடன் ஜோடி...
  11. Karambayam R Chandrasekar

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    கதை களம் நன்றாக சித்தரிக்கப் படுகிறது! கிராமத்து வாழ்வியல் முறையை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறீர்கள். பாராட்டுகள். அதேசமயம் கொலைதான் தீர்வு என்பதிலிருந்து தடம் மாறி சிந்திக்க.. அதாவது, பிரச்சினையை புதிய கோணத்தில் சிந்திக்க இளம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுங்கள். கதையை அற்புதமாகவும்...
  12. Karambayam R Chandrasekar

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    ஜோதியின் மர்ம புன்னகை வெளிப்படுத்துகிறது... அவளது பலிவாங்கும் உணர்வுகளை! அதுவே ஞாயமானது! அது உண்மையென்றால் கதையில் நீங்கள் சொல்ல வருவது அற்புதமான மற்றும் எனக்கு பிடித்த ஃபார்முலா.. பார்க்கலாம் என்ன நடக்க இருக்கிறதென்று. ரிதுவின் அம்மா தன் கணவரின் போட்டோவை பார்க்கும்போது ஏற்படும் உணர்வை ஆசிரியர்...
  13. Karambayam R Chandrasekar

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    "மனிதா! நீ ஆடு.. உன் ஆட்டத்தின் முடிவில் என் ஆட்டம் பாரு.." சூப்பர் பஞ்ச் டயலாக். அருமையாக அத்தியாயத்தை முடிக்கிறீங்க மேடம். கதையில் ரிதுபர்ணாவும் தயாளனும் வந்துவிட்டாலே, சுவாரஸ்யமும் மகிழ்ச்சியும் ஓடிவந்து மனதில் ஒட்டிக்கொள்கிற அளவுக்கு, அந்த இரு பாத்திரங்களுக்கும் உயிரோட்டம்...
  14. Karambayam R Chandrasekar

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    "சில நேரங்களில் சில மனிதர்களின் வார்த்தைகள்தான் காலத்தின் வழிகாட்டி" என்று ஆசிரியர் அத்தியாய நிறைவுப் பகுதியில் கூறியிருப்பது அற்புதமான ஞானத்தை வெளிப்படுத்தும் வரிகள். கிராமத்து பேச்சு வழக்குகளை இவ்வளவு தத்ரூபமாகவும் இயல்பாகவும் எழுதுவது என்பது சாதாரண விஷயமல்ல. அவர்கள் நம் கண் முன்னே நேரில்...
  15. Karambayam R Chandrasekar

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    கதை படிக்க விறுவிறுப்பாக போகிறது மேடம். அடுத்த அத்தியாயம் எப்ப வரும் என எதி்பார்க்க வைத்துள்ளீர்கள். எனக்கு இப்போதெல்லாம் நாவல் படிப்பதற்கெல்லாம் பொறுமை இருப்பதில்லை. ஆனால் அந்த எனது மனநிலையை நீங்கள் மாற்றிவிட்டீர்கள். அதற்கு காரணம் வெகு இயல்பாக கிராமத்து பேச்சு வழக்கை ரசித்து படிப்பது போல...
  16. Karambayam R Chandrasekar

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    ஓகே. நீங்கள் சொல்வதில் நூறு சதம் உண்மை இருக்கிறது. இதுபோன்ற சமூக விரோத செயல்கள் நிகழ்வதை தடுக்கும் நோக்கிலான விழிப்புணர்வை ஏற்படுத்தவதில் உங்களது எழுத்தாற்றல் வெற்றிப்பெறட்டும். வெற்றிப்பெறும்! அதற்கான தகுதி உங்களிடம் இருக்கிறது! ஆசிரியருக்கு மிக்க நன்றி...
  17. Karambayam R Chandrasekar

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    கதையை படிக்கும்போது மனம் கணக்கிறது. தீயின் நாக்கு நீளும் என்று வேறு பயமுறுத்துறீங்க! 'சாராயம் காரம் இல்லைடா..' என்று கூறுவது மிக எதார்த்தமா நிஜத்தில் உறையாடுவது போன்ற உண்மையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆசிரியருக்கு பாராட்டுகள். இதுவரை, கிராமத்து பேச்சு வழக்குகளும் உறையாடல்களும் அற்புதமாக...
  18. Karambayam R Chandrasekar

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    ஓகேதான். தண்ணீரில் மூழ்கி இறந்ததாக ஸ்பாட்டுக்கு வரும் போலீஸ் முடிவு செய்வது மட்டும் போதாது, சட்டப்படி. எனவ, வழக்கமான சம்பிரதாய நிகழ்வுகளை செய்துவிட்டு உடலை கொடுத்ததாக ஒருவரி சேர்த்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இயல்பாக இருந்திருக்கும். நான் சொல்வது ஒருவேளை தவறாக தெரிந்தால் பொறுத்தருளவும்!
Top Bottom