Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


இவள் ஒரு புதுக்கவிதை - ரமணிசந்திரன்

Messages
40
Reaction score
14
Points
8
நாயகன்: யுகேந்திரன்
நாயகி : மாதங்கி

யுகேந்திரனுக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று மாதங்கியிடம் தெரியப்படுத்தி, திருமணத்தை நிறுத்த சொல்கிறான். மறுநாள் திருமணம், முதல் நாள் இரவு நிறுத்த சொன்னால் எப்படி செய்வது என்கிற கேள்வியோடு அவனுடைய வேண்டுகோளை மறுத்துவிடுகிறாள் மாதங்கி. இருவரும் விருப்பம் இல்லாத திருமணத்தில் இணைகிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் வாக்குவாதம் செய்துகொள்ளும் போது, யுகேந்திரன் திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லாதமைக்கு காரணம் சொல்கிறான். அவன் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறான். அபீதா. வடகித்தி பெண்.

கணவனின் ஆதரவு இல்லை என்று தெரிந்ததும் புகுந்த வீட்டில் அவளை ஒருவரும் மதிப்பதில்லை. வேலைக்காரி கூட தன்னுடைய வேலையை வீட்டு மருமகளிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்படுகிறது. அதனால் மாதங்கி தன்னுடைய அலுவலக வேலையை திருமணத்திற்கு பிறகும் தொடர்கிறாள்.

நாத்தனார் மாமியார் இருவரும் ஒத்த குணம் உடையவர்கள். அவனை கொடுமை படுத்த காரணம் தெடிக் கொண்டே இருப்பார்கள். நாத்தனார் ஊர்வசி அவளுடைய ஆடைககளை அனுமதி இன்று எடுத்து உடுத்துவாள். தட்டி கேட்டால் கத்தி கார்ப்பாட்டம் செய்து அவளை அவமானம் செய்வாள். மாதங்கி தன்னுடைய அலமாரிக்கு போட்டு போடும் நிலை வரும்.

இதை பற்றி யுகேந்திரனிடம் சொன்னால், நீங்கள் கண்டுபிடித்த மருமகளை நீங்களே சமாளித்துக்கொள்ளுங்கள் என்று அவன் போய்விடுவான்.

இருவரும் ஓட்டுதல் இல்லமால் வாழ்கிறார்கள். மாந்தகி தன்னுடைய இரண்டு தங்கைகளும் திருமணம் செய்துகொள்ளும் வரை இந்த வாழ்க்கையை சகித்துக்கொள்ளும் முடிவில் இருக்கிறாள்.

ஒருநாள் அந்த காதலி அனிதாவை பார்க்கில் சந்திக்கிறாள். வாக்குவாதம் நடக்கிறது. அதன் பிறகு அடிக்கடி அப்படி நடக்கும். இவளுக்கு வீட்டுக்கு வரவே பிடிக்காது. அதனால் அடிக்கடி பார்க்கில் அமர்ந்துவிட்டு வருவாள்.

மாமியாரும் நாத்தனாரும் அவள் ஊர் சுற்றுகிறாள் என்று பேர் கட்டிவிடுவார்கள். அவனுடைய அகாதலியும் அவள் பார்க்கில் ஆண்களோடு சிறிது பேசுகிறாள் என்று யுகேந்திரனுக்கு ஏற்றிவிடுவாள். அந்த கோவத்தில் ஒரு நாள் அவள் அவளை கைநீட்டி அடித்துவிடுவான். முகத்தில் முதுகில் வயிறில் என்று எல்லா இடத்திலும் மாட்டை அடிப்பது போல் அடித்து துவைத்துவிடுவான்.


மாதங்கி அவமானத்தில் வலியிலும் நொந்து போய் வீட்டைவிட்டு வெளியேறி தோட்டத்தில் அமர்ந்து அழுவாள். அப்போது அவளுடைய மைத்துனன் வந்து அவளுக்கு ஆறுதல் சொல்லுவான். வீட்டுக்குள் அழைத்தால் வரமாட்டாள்.

உன் அன்னான் என்னை கொலை செய்ய கூட யோசிக்க மாட்டான். அவனை நம்பி நான் அவனுடைய அறையில் தூங்க மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டு இருட்டுக்குள் அமர்ந்திருப்பாள்.

அப்போது யுகேந்திரன் அவளுக்கு தம்பியின் அறையை கொடுக்க சொல்லுவான். அதன் பிறகு மறுநாளிலிருட்னது அவளிடமிருடந்த்து ஒதுங்கி போவான். வீட்டில் உள்ளவர்களும் அவளிடம் வன்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

அவன் அடித்துவிட்டான் என்கிற கோபத்தை தவிர வீட்டில் வேறு பிரச்னை இல்லாமல் சுமூகமாக போகும்,

அந்த அநேரத்தில் நாத்தனார் ஊர்வசிக்கு திருமணம் நடக்கும். அப்போது மகனும் மருமகளும் தனி தனி அறையில் இருக்க கூடாது என்று இருவரையும் ஒன்றாக ஒரே அறையில் மீண்டும் தங்கும்படி வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்ல, யுகேந்திரனும் அதையே அவளிடம் கேட்ப்பான்.

அவள் சரி என்று ஒத்துக்கொள்வாள். ஆனால் ஒரு நிபந்தனை வைப்பாள். தன்னுடைய பிறந்த வீட்டுக்கும் சரியான முறையில் மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொல்வாள்.

எல்லோரும் அதை ஏற்று கொள்வார்கள். யுகேந்திரன் எதிர்பார்த்ததைவிட மிகவும் நல்ல முரையில் நடந்துகொள்வான். அப்புறம் அவனுடைய தங்கை திருமணம் முடியும். ஆனால் அவள் வாழ்க்கை நன்றாக இருக்காது.

நம் வீட்டுக்கு வந்த பெண்ணை ஒழுங்காக நடத்தவில்லை. அதுதான் நம்முடைய பெண்ணுக்கும் இப்படி ஆகிவிட்டது என்று எல்லோரும் பயப்படுவார்கள் அதனால் அவளிடம் மன்னிப்பு கேட்டு பரிகாரம் செய்ய நினைப்பார்கள். அவள் கணவனின் முகத்தில் விழிக்க வேண்டாத நிலை வேண்டும் என்று கேட்ப்பாள்.

அடிபட்ட வலியோடு யுகேந்திரன் வீட்டைவிட்டு போய்விடுவான். பிறகு அவள் மனம் மெல்ல மாறும். கோபம் குறைந்து கணவனை தேடி அவன் இருக்கும் ஊருக்கு போவாள். அவன் மன்னிப்பு கேட்டு மனைவியோடு இணைந்துவிடுவான். சுபமான முடிவு.​
 

Latest posts

New Threads

Top Bottom