- Messages
- 11
- Reaction score
- 3
- Points
- 1
என்னை எங்கிருந்தோ
இயக்குபவளே
கண்மூடிப் படுத்திருந்தால்
கனவாய் வந்து
என்னை உறங்கவிடாமல்
செய்பவளே
ஐம்புலன்களை
அடக்கி ஆளும்
வித்தையைக்
கற்றுக்கொடுத்து
ஐம்பூதங்களையும்
கவிதைக்குள்
அடக்கும் மந்திரத்தைச்
சொல்லிக்கொடுத்து
என்னை அசைக்கமுடியா
கவியரசனாக மாற்றிய
மங்கையே
முகத்தில் புகம் புதைத்து
கண்ணீர் வழிய கவிழும்
என் தலையின் பின்புறத்தை
தட்டி எழுப்பி
நீதானடா என் தலைமகன்
தலை கவிழக்கூடாது
தலைநிமிர்ந்து செல்
என்று தன்னம்பிக்கை
கொடுப்பவளே
எடுத்த எடுப்பிலே
என்னை உயரத்திற்கு
அனுப்பிவிட்டு
அன்னாந்து பார்த்து
என்னழகை ரசிப்பவளே
என் கருத்தை
எதிர்மறை இன்றி
ஏற்றுக்கொள்ளும்
ஆண்கள் விரும்பும்
நன்பனாய் என்னை
உருவாக்கியவளே
கன்னியரின்
கடைவிழியை
மட்டும் பார்
கழுத்தின் கீழே
கவிதையாக மட்டும் பார்
பழகும் விதத்தில்
தோழனாக இரு
பாதுகாப்பில்
தகப்பனாக மாறு
என என்னை
தன் பிள்ளையாய்
பெருமையோடு
ஏற்றுக்கொண்ட
தமிழன்னையே
ஒவ்வொரு நாளும்
என் தொடக்கமும்
என் முடிவும்
உன்னை எழுதியபின்பே
நிறைவடைகிறது...
கவிஞர் க.மணிஎழிலன்
இயக்குபவளே
கண்மூடிப் படுத்திருந்தால்
கனவாய் வந்து
என்னை உறங்கவிடாமல்
செய்பவளே
ஐம்புலன்களை
அடக்கி ஆளும்
வித்தையைக்
கற்றுக்கொடுத்து
ஐம்பூதங்களையும்
கவிதைக்குள்
அடக்கும் மந்திரத்தைச்
சொல்லிக்கொடுத்து
என்னை அசைக்கமுடியா
கவியரசனாக மாற்றிய
மங்கையே
முகத்தில் புகம் புதைத்து
கண்ணீர் வழிய கவிழும்
என் தலையின் பின்புறத்தை
தட்டி எழுப்பி
நீதானடா என் தலைமகன்
தலை கவிழக்கூடாது
தலைநிமிர்ந்து செல்
என்று தன்னம்பிக்கை
கொடுப்பவளே
எடுத்த எடுப்பிலே
என்னை உயரத்திற்கு
அனுப்பிவிட்டு
அன்னாந்து பார்த்து
என்னழகை ரசிப்பவளே
என் கருத்தை
எதிர்மறை இன்றி
ஏற்றுக்கொள்ளும்
ஆண்கள் விரும்பும்
நன்பனாய் என்னை
உருவாக்கியவளே
கன்னியரின்
கடைவிழியை
மட்டும் பார்
கழுத்தின் கீழே
கவிதையாக மட்டும் பார்
பழகும் விதத்தில்
தோழனாக இரு
பாதுகாப்பில்
தகப்பனாக மாறு
என என்னை
தன் பிள்ளையாய்
பெருமையோடு
ஏற்றுக்கொண்ட
தமிழன்னையே
ஒவ்வொரு நாளும்
என் தொடக்கமும்
என் முடிவும்
உன்னை எழுதியபின்பே
நிறைவடைகிறது...
கவிஞர் க.மணிஎழிலன்