Gowsalya.m
New member
- Messages
- 8
- Reaction score
- 5
- Points
- 3
நாவல்: கண்ணின் மணி போன்றவளே
ஆசிரியர்: ரமணிசந்திரன்
நாயகன்: நரேந்திரன்
நாயகி: நிகிலா
கதை சுருக்கம்:
நிகிலா ஒரு அழகான புத்திசாலி பெண். அவள் தன் தாயுடன் வாழ்கிறாள். அவளுக்கு சுகேசன் என்பவருடன் நிச்சயமாகி இருக்கும். ஆனால் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன் தேவையான பணத்தை சேமித்து அதன் பிறகு திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் அவளுடைய கொள்கை.
அந்த சமயத்தில் நிகிலாவின் தாய் இறந்து விடுகிறார். அதன் பிறகு நிகிலா சென்னையில் இருக்கும் தன் சகோதரியின் வீட்டில் தங்குகிறாள். தன்னுடைய சம்பளத்தை சகோதரியிடம் கொடுத்து வருகிறாள். ஆனால் அவள் அந்த பணத்தை தன்னுடைய தேவைக்கே பயன்படுத்துகிறாள். நிகிலா தனக்காக ஏதாவது வாங்கினால் கூட பெரிய பிரச்சனையாக மாற்றுகிறார்கள்.
தன் திருமணத்திற்காக பணத்தை சேமிக்க விரும்பும் நிகிலாவிற்கு இது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. சகோதரியிடம் பேசினாலும் பயன் ஒன்றும் இல்லை. அவள் சுகேசனைப் பற்றியோ தங்கையின் திருமணத்தை பற்றியோ எதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.
நான்கு மாதங்களுக்கு பிறகு, நிகிலா இதைப் பற்றி கேள்வி கேட்க துவங்குகிறாள். அதனால் அவளது மாம அவளை வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார்.
ஒரு நாள் இரவு முழுக்க அவள் வீட்டுக்கே வெளியே கழிக்கும் நிலைக்கு தள்ளப் படுகிறாள். அதன் பிறகு, ஹாஸ்டலில் சென்று தங்க முடிவு செய்கிறாள்.
அதன் பிறகு தான் அவளுக்கு உண்மை தெரிய வருகிறது. அவளது சகோதரி நிகிலா பொறுப்பில்லாதவள் என்று நம்பவைத்து, அவளுடைய சம்பளத்தை நேரடியாக மேலாளரிடமிருந்து வாங்கி கொண்டிருந்திருக்கிறாள்.
அதனால் வேலையும் வேண்டாம், வீட்டிற்கும் திரும்பக்கூட வேண்டாம் என முடிவு செய்து, நேராக சுகேசனை நாடிச் செல்கிறாள்.
அங்கு சென்று பார்க்கும்போது, சுகேசன் வேறு ஒரு பணக்கார பெண்ணை திருமணம் செய்யப்போகிறான் என தெரிகிறது. அதனால் நிகிலா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்ய நினைக்கிறாள். அந்த தருணத்தில் நரேந்திரன் என்பவனை சந்திக்கிறாள். அவன் அவளை காப்பாற்றி அவள் சூழ்நிலையை அறிகிறான்.
நரேந்திரன் நிகிலாவுடன் பேசும்போது, அவளைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவிக்கிறார். இது தான் சுகேசனை பழிவாங்க சரியான வழி என்றும் கூறுகிறான்.
அதோடு சுகேசன் தனக்கு முக்கியமான ஒருத்தி பெண்ணையும் ஏமாற்றியிருப்பதை சொல்கிறான்.
நிகிலா, நரேந்திரன் பற்றி கேட்கும் போது அவன் தன்னை மாவட்ட ஆட்சியர் என அறிமுகப்படுத்துகிறான்.
இதைக் கேட்ட நிகிலா ஆச்சரியப்படுகிறார். ஆனால் பிறகு அவரைத் திருமணம் செய்ய முடிவு செய்கிறாள். இதன்பிறகு நரேந்திரன் – நிகிலா இடையே தோன்றும் உறவும், அவர்கள் சேர்ந்து சுகேசனிடம் எப்படிப் பழிவாங்குகிறார்கள் என்பதுதான் கதையின் மீதிப் பகுதி.
ஆசிரியர்: ரமணிசந்திரன்
நாயகன்: நரேந்திரன்
நாயகி: நிகிலா
கதை சுருக்கம்:
நிகிலா ஒரு அழகான புத்திசாலி பெண். அவள் தன் தாயுடன் வாழ்கிறாள். அவளுக்கு சுகேசன் என்பவருடன் நிச்சயமாகி இருக்கும். ஆனால் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன் தேவையான பணத்தை சேமித்து அதன் பிறகு திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் அவளுடைய கொள்கை.
அந்த சமயத்தில் நிகிலாவின் தாய் இறந்து விடுகிறார். அதன் பிறகு நிகிலா சென்னையில் இருக்கும் தன் சகோதரியின் வீட்டில் தங்குகிறாள். தன்னுடைய சம்பளத்தை சகோதரியிடம் கொடுத்து வருகிறாள். ஆனால் அவள் அந்த பணத்தை தன்னுடைய தேவைக்கே பயன்படுத்துகிறாள். நிகிலா தனக்காக ஏதாவது வாங்கினால் கூட பெரிய பிரச்சனையாக மாற்றுகிறார்கள்.
தன் திருமணத்திற்காக பணத்தை சேமிக்க விரும்பும் நிகிலாவிற்கு இது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. சகோதரியிடம் பேசினாலும் பயன் ஒன்றும் இல்லை. அவள் சுகேசனைப் பற்றியோ தங்கையின் திருமணத்தை பற்றியோ எதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.
நான்கு மாதங்களுக்கு பிறகு, நிகிலா இதைப் பற்றி கேள்வி கேட்க துவங்குகிறாள். அதனால் அவளது மாம அவளை வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார்.
ஒரு நாள் இரவு முழுக்க அவள் வீட்டுக்கே வெளியே கழிக்கும் நிலைக்கு தள்ளப் படுகிறாள். அதன் பிறகு, ஹாஸ்டலில் சென்று தங்க முடிவு செய்கிறாள்.
அதன் பிறகு தான் அவளுக்கு உண்மை தெரிய வருகிறது. அவளது சகோதரி நிகிலா பொறுப்பில்லாதவள் என்று நம்பவைத்து, அவளுடைய சம்பளத்தை நேரடியாக மேலாளரிடமிருந்து வாங்கி கொண்டிருந்திருக்கிறாள்.
அதனால் வேலையும் வேண்டாம், வீட்டிற்கும் திரும்பக்கூட வேண்டாம் என முடிவு செய்து, நேராக சுகேசனை நாடிச் செல்கிறாள்.
அங்கு சென்று பார்க்கும்போது, சுகேசன் வேறு ஒரு பணக்கார பெண்ணை திருமணம் செய்யப்போகிறான் என தெரிகிறது. அதனால் நிகிலா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்ய நினைக்கிறாள். அந்த தருணத்தில் நரேந்திரன் என்பவனை சந்திக்கிறாள். அவன் அவளை காப்பாற்றி அவள் சூழ்நிலையை அறிகிறான்.
நரேந்திரன் நிகிலாவுடன் பேசும்போது, அவளைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவிக்கிறார். இது தான் சுகேசனை பழிவாங்க சரியான வழி என்றும் கூறுகிறான்.
அதோடு சுகேசன் தனக்கு முக்கியமான ஒருத்தி பெண்ணையும் ஏமாற்றியிருப்பதை சொல்கிறான்.
நிகிலா, நரேந்திரன் பற்றி கேட்கும் போது அவன் தன்னை மாவட்ட ஆட்சியர் என அறிமுகப்படுத்துகிறான்.
இதைக் கேட்ட நிகிலா ஆச்சரியப்படுகிறார். ஆனால் பிறகு அவரைத் திருமணம் செய்ய முடிவு செய்கிறாள். இதன்பிறகு நரேந்திரன் – நிகிலா இடையே தோன்றும் உறவும், அவர்கள் சேர்ந்து சுகேசனிடம் எப்படிப் பழிவாங்குகிறார்கள் என்பதுதான் கதையின் மீதிப் பகுதி.