ஷிவானி,
முத்து முத்தான தமிழ் எழுத்துகளில் நான்கு வரிக்கு மேல கமெண்ட்ஸை பார்க்கும் போதே எவ்வளவு சந்தோஷமா இருக்கு! உன்னோட ஒவ்வொரு கமெண்ட்டும் கண்ணுல பார்க்கவே ஆனந்தமா இருக்கு! அப்போ படிக்க எப்படி இருக்கும்! ரொம்ப ரொம்ப நன்றி தங்கச்சி... நான் 40 எபிஸோட்ஸ் மொத்தமா போஸ்ட் பண்ண பெரிய பூஸ்ட்அப் உன்னோட கமெண்ட்ஸ் தான்.. இப்போ மீதி உள்ள எல்லா அத்தியாயங்களும் போஸ்ட் பண்ணிட்டு இருக்கேன். என்ஜாய் பண்ணு...
சொக்கா, சொக்கா, அவ்வளவு பொற்காசும் ச்சே! அத்தனை அத்தியாயங்களுமா பதிவிட்டிருக்கீங்க😍😍😍 அய்யோ இப்போ நான் என்ன பண்ணுவேன்? யார்கிட்ட போய் இதை சொல்லுவேன்😘😘😘😘😘😘😘😘😘
லவ் யூக்கா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அர்ஜுன் மிருதுளா ரெண்டுபேரும் லவ்ல உருகி வழியுறாங்களே😍 ஆனா அர்ஜுன் தெளிவா அவளை மட்டும் தூண்டிவிட்டு தூண்டிவிட்டு லவ் சொல்ல வைக்கிறான். ஆனா அவன் லவ் பண்றான்னு சொல்ல மாட்டேங்கிறான்.
இந்த உல்ப் நல்ல பிள்ளையா சொன்னா கேட்க மாட்டான் போலயே?
விமானநிலைய காட்சிகள் எல்லாம் ஒருவித எக்ஸைட்மென்ட்டோடவே வாசிச்சேன் அக்கா.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு வாசிப்பு பழக்கத்தை கையிலெடுத்த எனக்கு நல்ல தீனியாக இந்த நாவல் இருக்கிறது.
ஆமா இந்த ப்ரொபசர் சொன்னதை நம்பி போறாளே மிருதுளா. அவர் நல்லவரா? கெட்டவரா? நான் போய் கதையை தொடர்கிறேன் அக்கா.
அர்ஜுன் ஒரு டெவில் மாதிரி இருந்தான் அக்கா ஐம்பதாவது அத்தியாயத்துல. மிருதுளா அவனை எவ்வளவு நெருங்கினாலும் அவன் மட்டும் அவனை பத்தின ரகசியம் எதையும் சொல்ல மாட்டேங்கிறான். ஆனா அவள் மட்டும் தன் கிட்ட எல்லாத்தையும் சொல்லனும்னு எதிர்பார்க்கிறான்.
மிருதுளா அம்மா ஷோபா சொன்ன விசயத்துல இருந்து வெளிய வர முடியலை அக்கா. உண்மையா இருக்க கூடாதுன்னு வேற இருக்கு. இந்த எபில தொடரும் போட்டிருந்தா உங்களை நான் நிம்மதியா தூங்க விட்டிருக்க மாட்டேன்😂
நிழல்நிலவு பாகம் 2 முதலிரண்டு அத்தியாயங்கள் வாசித்ததால் அந்த ப்ளூ ஸ்டார் யாரா இருக்கும்னு ஒரு கெஸ்ஸிங் இருக்கு அக்கா. ஆனால், ஆர்த்தியை தான் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பகவான் ஷோபா செயலையும் சகிக்க முடியவில்லை. அர்ஜுன் தான் ரொம்ப பாவம் இதில். இப்படி வித விதமா ட்விஸ்ட் வச்சு இதய துடிப்பை எகிற வைக்கிறீங்களே அக்கா.
என்ன! ஆர்த்தி சுக்லாவோட பொண்ணா? அக்கா என்ன இப்படியொரு குண்டை தூக்கிப் போடுறீங்க. இப்போ தான் அர்ஜுன் அவனை அங்கிள்னு கூப்பிட்டதுக்கு காரணம் புரியுது. ஆமா பகவான் எதுக்கு சுக்லாகிட்ட இருந்து எதிர்த்த குரூப்க்கு போனான்? இப்போ தன் பொண்ணுக்காக மிருதுளாவை சுக்லா கொன்னுட்டா? ஏகப்பட்ட கேள்வி அக்கா.
அப்பாடா ஒரு வழியா அந்த உல்ஃப் கதை முடிஞ்சது. இன்னும் அந்த சுக்லா, பகவான் அப்பறம் அவன் பாஸ் தான். மிருதுளா அந்த தூக்கமாத்திரையை வச்சு என்ன லூசுத்தனம் பண்ணப்போறான்னு ஒரு பக்கம் பதட்டமா இருக்கு. எல்லா பிரச்சினை யும் எப்படி முடிவுக்கு வரும்னு நினைச்சாலே தலை சுத்துதுக்கா.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.