- Messages
- 25
- Reaction score
- 23
- Points
- 6
அத்தியாயம்-11
"வைத்த கண் ,வைத்தது தானோடி
அப்படியே நிற்கின்றாய்!!
தைத்த முள் ,தைத்தது தானோடி
சொக்கியே போகின்றாய்!!!
அர்ஜுனன், உன்னை பெண் பார்க்க
அவசரம் நீயும் பூ பூக்க!!
யுத்தங்கள் செய்திட யுவதியோ வந்தாளே!!!
ஜானகியின் தோழிகள், அவளை சுற்றி அமர்ந்து அவளை கேலி செய்து பாடி கொண்டிருந்தார்கள்.
"சொன்ன மாறியே அருண்பாண்டியன கல்யாணம் பண்ணிக்க போற."
"யாருடி,அருண்பாண்டியன்??"-பிரியா
"இவ்ளோ நாள் உனக்கு இது தெரியாதா??உன் அண்ணா தான். முதல் முதலா நம்ம காலேஜ் ல பாத்துட்டு ஜானு வச்ச பேர்."
பிரியா ஆர்வமாக,
"அப்படியா டி??"
"இவளுங்க கிடக்குறாளுங்க.இவளுங்க பேச்செல்லாம் பெருசா எடுத்துக்காத."
"பாரு டி, நம்ம ஜானுக்கு வெட்கத்தை."
'இவளுங்க வேற டார்ச்சர் பண்ணுராளுகளே'
"மாப்பிள்ளை பேர் வர மாறி பாடிட்டோம், இவ பேரு அதுல இல்லைனு கோவம் போல"
"அப்போ,இவளுக்கு தகுந்த மாறி ஒரு 80's பாட்டு பாடுங்கடி"
"ஜானகி தேவி ராமனை தேடி
இரு விழி வாசல் திறந்து வைத்தாள்!!
ராமன் வந்தான் மயங்கிவிட்டாள்!!
தன் பேரை கூட மறந்துவிட்டாள்!!"
"என்னடி எல்லா பாட்டுலயும் இவளே மயங்குறா,சொக்குறா, மாப்பிள்ளை மயங்க மாட்டாரோ??"
"அவரை பார்த்தா மயங்குற மாறி தெரில,மயக்குற மாறி தெரியுறார்"
என்று சொல்லி சிரித்தார்கள்.
'ஹ்ம்ம்..அந்த காரக்குழம்பு,மயக்கிட்டாலும்'
என்று நொடித்து கொண்டாள்.
இரண்டு பெண்களையும் அழைத்து வரும்படி ஐயர் சொல்வதாக ,அலமு வந்து இருவரையும் அழைத்தார்.
இருவரும் வந்து சபையில் வணங்கி, மாப்பிள்ளைகள் எடுத்து கொடுத்த புடவையை வாங்கி கொண்டு சென்றனர்.
சிறிது நேரத்தில்
அதை கட்டிக்கொண்டு வந்தார்கள்.முதலில் பிரியா,விஜயின் திருமண ஒப்புதல் வாசிக்க பட்டு இருவரின் கைகளிலும் மோதிரம் கொடுத்து மாற்றி கொள்ள சொன்னார்கள்.
தன் அன்னை பார்க்காத போது ப்ரியாவை, கண்களில் நிரப்பி கொள்வதில் விஜய் கில்லாடியாய் இருந்தான்.
இருவரும் கண்களாலேயே பேசிக்கொண்டார்கள்.
மோதிரம் மாற்றயில் யாருக்கும் தெரியாமல், அவளின் விரல்களை வருடி ,ஒரு அழுத்தம் கொடுத்து விடுவித்தான் விஜய்.
உதட்டில் ஒரு மென்னகை தவழ்ந்தது இருவரிடமும்.
அவர்கள் மோதிரம் மாற்றியதும்,ஜானகி அர்ஜுனின் ஒப்புதல் வாசிக்கப்பட்டு, இருவரிடமும் மோதிரம் கொடுத்து மாற்றி கொள்ள சொன்னார்கள்.
அதுவரை அவனை நிமிர்ந்து பார்க்காத ஜானு,அவனை நிமிர்ந்து பார்த்தாள்.லைட் ப்ளூ ஷர்ட்,டார்க் கிரெய் பேண்ட்டிலும் அம்சமாய் இருந்தான் அர்ஜுன்.
அவனை விட்டு கண்களை அகற்ற முடியாமல் பார்த்து நின்றவளின் காதருகே,
"ஒழுங்கு மரியாதையா குனிஞ்சு நில்லு,எங்க மானத்தை வாங்காத"
என்ற மெல்லிய முணுமுனுப்பு கேட்டது.வேற யாரு அலமு தான்.
'ஆண்டவா,இப்படியா பார்ப்பேன்.இன்னிக்கு விடிய,விடிய ராமாயணம் இருக்கு.'
அர்ஜுன்,தன் கடமையை ஒழுங்காக செய்தான். அதாங்க மோதிரம் போட்டு விடுறது.
இவளை பார்த்தானா என்று யாருக்கும் தெரியாது.
இவள் அறைக்கு வந்த மறுநிமிடம் இவள் முன் ப்ரஷணமான அலமு,
"அந்த பிரியா பொண்ண பாருடி குனிஞ்சதலை நிமிர்ந்துச்சா??.மாப்பிள்ளை முகத்தை கூட பார்க்கல. நீ விரும்புன பையனுக்கு தானே உன்னை கல்யாணம் பண்ண போறோம்.சபையிலே இப்படியா வாயில ஈ போறது தெரியாம பார்ப்ப??"
'ஸ்டார்ட் மியூசிக்…'
'அப்டியா பார்த்தோம்.இந்த அலமு ஓவர் அஹ் buildup கொடுக்குது..சரி விடு அரசியல்லா இதெல்லாம் சாதரணமப்பா'
அவளை திட்டி முடித்து அலமு சென்றதும்.பிரியாவையும், அந்த அறைக்கு அழைத்து வந்தார் கோமதி.
"விஜய்,உன்னை பாக்கலைன்னு,நீ ஒன்னும் வருத்த பட்டுக்காத மா, அவன் கொஞ்சம் கூச்ச சுபாவம்"
"பரவால்ல அத்தை"
ஜானுவிற்கு மட்டும் பார்வையில் எரிக்கும் சக்தி இருந்தால் இருவரையும் பஸ்பமாக்கி இருப்பாள்.
அவர் சென்றதும்,இவளை திரும்பி பார்த்த பிரியா, இவள் பார்வையின் பொருள் உணர்ந்து.
'நண்பேண்டி'
என்று தோள் அணைத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் இருவரையும் சாப்பிட அழைத்தார்கள்.பந்தியில், அருகருகே இரு ஜோடியும் சாப்பிட அமர்ந்தார்கள்.
அர்ஜுன் இலையை விட்டு பார்வையை திருப்பாமல் கடமை வீரனாக சாப்பிட்டான்.
'சாப்பாட்டயே கண்ணுல பாக்காத மாறி சாப்டுது பாரு,உன் தலைவிதியை யாரு மாத்த முடியும்.நீயும் உன் வேலைய பாரு ஜானு, உனக்கு பிடிச்ச ஐட்டம் எல்லாம் நெறைய இருக்கு.'
என்று மனத்தை தேத்தி கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
பிரியாவும்,விஜயும் பார்வையாலேயே அடுத்தவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு, ரசித்து சாப்பிட்டார்கள்.
கோமதி இடையில் வந்து
"பொண்ணை, இப்போவாச்சும் நல்லா பார்த்துக்க பா, அப்புறம் கல்யாணத்துல பொண்ணு தெரியாம முழிக்க போற"
'இந்தம்மா வேற இடையில, இடையில வந்து காமெடின்் னு மொக்கை போடுது'
ஒரு வழியாய், நிச்சயம் முடிந்தது.கல்யாணத்திற்கு,
நிச்சயத்திற்கும் இரண்டு மாத இடைவெளி இருந்தது.இருவருக்கும், இரண்டு மாதத்தில் படிப்பு முடியவும் ,வரும் முகூர்த்தத்தில் திருமணம் வைப்பதற்கு பேசப்பட்டிருந்தது.
இடையில் புடவை,நகை எடுப்பதற்கு சந்தித்து கொண்டார்கள்.
புடவை கடையில் ,விஜய்க்கு பிடித்த புடவையை கண்களால் கேட்டறிந்து தேர்ந்தெடுத்தாள் பிரியா.
'இதுங்க மட்டும் எப்பிடி கண்ணுலயே பேசிக்குதுங்க. நாமளும் ட்ரை பண்ணுவோம்.'
என்று அர்ஜுனை நிமிர்ந்து பார்த்து ,கழுத்து வலி வந்தது தான் மிச்சம்.அவன் தங்கையின் புறமும் ,விஜயின் புறமும் பார்வையை வைத்திருந்தான்.
'அதானே,இந்த தத்தி கிட்ட கண்ணுல பேசிட்டாலும் விளங்கிடும்.பேசாம நேர்லயே கேட்டுடு'
"இந்த புடவை நல்லா இருக்கா??"
பெரிய மனது பண்ணி பார்வையை திருப்பிய அர்ஜுன்
"கட்டிக்க போறது நீ,என்னை ஏன் கேக்குற"
'நீயும் கட்டிக்குவேணு தான்.. மூஞ்சியை பாரு..உன்னை கேட்டேன் பாரு, என்னை சொல்லணும். ஜடம்,ஜடம்'
என்று மனதுள் அவனை அன்பாக அர்ச்சித்து விட்டு, பிறகு அவன் புறம் திரும்பாமல், கடனே என்று அலமு தேர்ந்தெடுத்த புடவைக்கு தலையாட்டினாள்.
நகை கடையிலும், முன் அனுபவத்தால், அவன் புறம் திரும்பாமல், இவளுக்கு தோணியதை எடுத்தாள்.
அர்ஜுனும், ப்ரியாவுக்கு தேர்ந்தெடுக்க உதவிக் கொண்டிருந்தான்.
'தங்கச்சிக்கு மட்டும் எடுக்க தெரியும்.இத மட்டும் இவனா போட போறான்'.
'.ஏய்!!என்ன நீயும் சராசரி அண்ணி மாறி, நாத்தனார் மேல பொறாமை படுற,அவ உன் தோழி அப்புறம் தான் இந்த உறவு'
மனம் தெளிந்த ஜானு,பிறகு ப்ரியாவிற்கு தேர்ந்தெடுக்க உதவினாள்.
இடையில் அர்ஜுன், இவளிடம் அலைபேசியில் கூட பேச முயற்சிக்காதது, இவளுக்கு வருத்தமாக இருந்தது.
.'சரியான ரூல்ட் ஷீட்' என்று திட்டிக் கொண்டாள்.
நாட்கள் விரைந்து, திருமணமும் முடிந்து, சென்னை வாசமும் ஆரம்பித்து விட்டது.இன்னும் இந்த ஹிட்லர் மனசை புரிஞ்சுக்க முடியலையே.
Flashback எல்லாம் முடிந்து ஜானகி நிகழ்காலத்திற்கு வந்த போது ,மதிய உணவுடன் அர்ஜுன் காலிங் பெல்லை அழுத்திக்கொண்டிருந்தான்.
"வைத்த கண் ,வைத்தது தானோடி
அப்படியே நிற்கின்றாய்!!
தைத்த முள் ,தைத்தது தானோடி
சொக்கியே போகின்றாய்!!!
அர்ஜுனன், உன்னை பெண் பார்க்க
அவசரம் நீயும் பூ பூக்க!!
யுத்தங்கள் செய்திட யுவதியோ வந்தாளே!!!
ஜானகியின் தோழிகள், அவளை சுற்றி அமர்ந்து அவளை கேலி செய்து பாடி கொண்டிருந்தார்கள்.
"சொன்ன மாறியே அருண்பாண்டியன கல்யாணம் பண்ணிக்க போற."
"யாருடி,அருண்பாண்டியன்??"-பிரியா
"இவ்ளோ நாள் உனக்கு இது தெரியாதா??உன் அண்ணா தான். முதல் முதலா நம்ம காலேஜ் ல பாத்துட்டு ஜானு வச்ச பேர்."
பிரியா ஆர்வமாக,
"அப்படியா டி??"
"இவளுங்க கிடக்குறாளுங்க.இவளுங்க பேச்செல்லாம் பெருசா எடுத்துக்காத."
"பாரு டி, நம்ம ஜானுக்கு வெட்கத்தை."
'இவளுங்க வேற டார்ச்சர் பண்ணுராளுகளே'
"மாப்பிள்ளை பேர் வர மாறி பாடிட்டோம், இவ பேரு அதுல இல்லைனு கோவம் போல"
"அப்போ,இவளுக்கு தகுந்த மாறி ஒரு 80's பாட்டு பாடுங்கடி"
"ஜானகி தேவி ராமனை தேடி
இரு விழி வாசல் திறந்து வைத்தாள்!!
ராமன் வந்தான் மயங்கிவிட்டாள்!!
தன் பேரை கூட மறந்துவிட்டாள்!!"
"என்னடி எல்லா பாட்டுலயும் இவளே மயங்குறா,சொக்குறா, மாப்பிள்ளை மயங்க மாட்டாரோ??"
"அவரை பார்த்தா மயங்குற மாறி தெரில,மயக்குற மாறி தெரியுறார்"
என்று சொல்லி சிரித்தார்கள்.
'ஹ்ம்ம்..அந்த காரக்குழம்பு,மயக்கிட்டாலும்'
என்று நொடித்து கொண்டாள்.
இரண்டு பெண்களையும் அழைத்து வரும்படி ஐயர் சொல்வதாக ,அலமு வந்து இருவரையும் அழைத்தார்.
இருவரும் வந்து சபையில் வணங்கி, மாப்பிள்ளைகள் எடுத்து கொடுத்த புடவையை வாங்கி கொண்டு சென்றனர்.
சிறிது நேரத்தில்
அதை கட்டிக்கொண்டு வந்தார்கள்.முதலில் பிரியா,விஜயின் திருமண ஒப்புதல் வாசிக்க பட்டு இருவரின் கைகளிலும் மோதிரம் கொடுத்து மாற்றி கொள்ள சொன்னார்கள்.
தன் அன்னை பார்க்காத போது ப்ரியாவை, கண்களில் நிரப்பி கொள்வதில் விஜய் கில்லாடியாய் இருந்தான்.
இருவரும் கண்களாலேயே பேசிக்கொண்டார்கள்.
மோதிரம் மாற்றயில் யாருக்கும் தெரியாமல், அவளின் விரல்களை வருடி ,ஒரு அழுத்தம் கொடுத்து விடுவித்தான் விஜய்.
உதட்டில் ஒரு மென்னகை தவழ்ந்தது இருவரிடமும்.
அவர்கள் மோதிரம் மாற்றியதும்,ஜானகி அர்ஜுனின் ஒப்புதல் வாசிக்கப்பட்டு, இருவரிடமும் மோதிரம் கொடுத்து மாற்றி கொள்ள சொன்னார்கள்.
அதுவரை அவனை நிமிர்ந்து பார்க்காத ஜானு,அவனை நிமிர்ந்து பார்த்தாள்.லைட் ப்ளூ ஷர்ட்,டார்க் கிரெய் பேண்ட்டிலும் அம்சமாய் இருந்தான் அர்ஜுன்.
அவனை விட்டு கண்களை அகற்ற முடியாமல் பார்த்து நின்றவளின் காதருகே,
"ஒழுங்கு மரியாதையா குனிஞ்சு நில்லு,எங்க மானத்தை வாங்காத"
என்ற மெல்லிய முணுமுனுப்பு கேட்டது.வேற யாரு அலமு தான்.
'ஆண்டவா,இப்படியா பார்ப்பேன்.இன்னிக்கு விடிய,விடிய ராமாயணம் இருக்கு.'
அர்ஜுன்,தன் கடமையை ஒழுங்காக செய்தான். அதாங்க மோதிரம் போட்டு விடுறது.
இவளை பார்த்தானா என்று யாருக்கும் தெரியாது.
இவள் அறைக்கு வந்த மறுநிமிடம் இவள் முன் ப்ரஷணமான அலமு,
"அந்த பிரியா பொண்ண பாருடி குனிஞ்சதலை நிமிர்ந்துச்சா??.மாப்பிள்ளை முகத்தை கூட பார்க்கல. நீ விரும்புன பையனுக்கு தானே உன்னை கல்யாணம் பண்ண போறோம்.சபையிலே இப்படியா வாயில ஈ போறது தெரியாம பார்ப்ப??"
'ஸ்டார்ட் மியூசிக்…'
'அப்டியா பார்த்தோம்.இந்த அலமு ஓவர் அஹ் buildup கொடுக்குது..சரி விடு அரசியல்லா இதெல்லாம் சாதரணமப்பா'
அவளை திட்டி முடித்து அலமு சென்றதும்.பிரியாவையும், அந்த அறைக்கு அழைத்து வந்தார் கோமதி.
"விஜய்,உன்னை பாக்கலைன்னு,நீ ஒன்னும் வருத்த பட்டுக்காத மா, அவன் கொஞ்சம் கூச்ச சுபாவம்"
"பரவால்ல அத்தை"
ஜானுவிற்கு மட்டும் பார்வையில் எரிக்கும் சக்தி இருந்தால் இருவரையும் பஸ்பமாக்கி இருப்பாள்.
அவர் சென்றதும்,இவளை திரும்பி பார்த்த பிரியா, இவள் பார்வையின் பொருள் உணர்ந்து.
'நண்பேண்டி'
என்று தோள் அணைத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் இருவரையும் சாப்பிட அழைத்தார்கள்.பந்தியில், அருகருகே இரு ஜோடியும் சாப்பிட அமர்ந்தார்கள்.
அர்ஜுன் இலையை விட்டு பார்வையை திருப்பாமல் கடமை வீரனாக சாப்பிட்டான்.
'சாப்பாட்டயே கண்ணுல பாக்காத மாறி சாப்டுது பாரு,உன் தலைவிதியை யாரு மாத்த முடியும்.நீயும் உன் வேலைய பாரு ஜானு, உனக்கு பிடிச்ச ஐட்டம் எல்லாம் நெறைய இருக்கு.'
என்று மனத்தை தேத்தி கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
பிரியாவும்,விஜயும் பார்வையாலேயே அடுத்தவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு, ரசித்து சாப்பிட்டார்கள்.
கோமதி இடையில் வந்து
"பொண்ணை, இப்போவாச்சும் நல்லா பார்த்துக்க பா, அப்புறம் கல்யாணத்துல பொண்ணு தெரியாம முழிக்க போற"
'இந்தம்மா வேற இடையில, இடையில வந்து காமெடின்் னு மொக்கை போடுது'
ஒரு வழியாய், நிச்சயம் முடிந்தது.கல்யாணத்திற்கு,
நிச்சயத்திற்கும் இரண்டு மாத இடைவெளி இருந்தது.இருவருக்கும், இரண்டு மாதத்தில் படிப்பு முடியவும் ,வரும் முகூர்த்தத்தில் திருமணம் வைப்பதற்கு பேசப்பட்டிருந்தது.
இடையில் புடவை,நகை எடுப்பதற்கு சந்தித்து கொண்டார்கள்.
புடவை கடையில் ,விஜய்க்கு பிடித்த புடவையை கண்களால் கேட்டறிந்து தேர்ந்தெடுத்தாள் பிரியா.
'இதுங்க மட்டும் எப்பிடி கண்ணுலயே பேசிக்குதுங்க. நாமளும் ட்ரை பண்ணுவோம்.'
என்று அர்ஜுனை நிமிர்ந்து பார்த்து ,கழுத்து வலி வந்தது தான் மிச்சம்.அவன் தங்கையின் புறமும் ,விஜயின் புறமும் பார்வையை வைத்திருந்தான்.
'அதானே,இந்த தத்தி கிட்ட கண்ணுல பேசிட்டாலும் விளங்கிடும்.பேசாம நேர்லயே கேட்டுடு'
"இந்த புடவை நல்லா இருக்கா??"
பெரிய மனது பண்ணி பார்வையை திருப்பிய அர்ஜுன்
"கட்டிக்க போறது நீ,என்னை ஏன் கேக்குற"
'நீயும் கட்டிக்குவேணு தான்.. மூஞ்சியை பாரு..உன்னை கேட்டேன் பாரு, என்னை சொல்லணும். ஜடம்,ஜடம்'
என்று மனதுள் அவனை அன்பாக அர்ச்சித்து விட்டு, பிறகு அவன் புறம் திரும்பாமல், கடனே என்று அலமு தேர்ந்தெடுத்த புடவைக்கு தலையாட்டினாள்.
நகை கடையிலும், முன் அனுபவத்தால், அவன் புறம் திரும்பாமல், இவளுக்கு தோணியதை எடுத்தாள்.
அர்ஜுனும், ப்ரியாவுக்கு தேர்ந்தெடுக்க உதவிக் கொண்டிருந்தான்.
'தங்கச்சிக்கு மட்டும் எடுக்க தெரியும்.இத மட்டும் இவனா போட போறான்'.
'.ஏய்!!என்ன நீயும் சராசரி அண்ணி மாறி, நாத்தனார் மேல பொறாமை படுற,அவ உன் தோழி அப்புறம் தான் இந்த உறவு'
மனம் தெளிந்த ஜானு,பிறகு ப்ரியாவிற்கு தேர்ந்தெடுக்க உதவினாள்.
இடையில் அர்ஜுன், இவளிடம் அலைபேசியில் கூட பேச முயற்சிக்காதது, இவளுக்கு வருத்தமாக இருந்தது.
.'சரியான ரூல்ட் ஷீட்' என்று திட்டிக் கொண்டாள்.
நாட்கள் விரைந்து, திருமணமும் முடிந்து, சென்னை வாசமும் ஆரம்பித்து விட்டது.இன்னும் இந்த ஹிட்லர் மனசை புரிஞ்சுக்க முடியலையே.
Flashback எல்லாம் முடிந்து ஜானகி நிகழ்காலத்திற்கு வந்த போது ,மதிய உணவுடன் அர்ஜுன் காலிங் பெல்லை அழுத்திக்கொண்டிருந்தான்.