கூக்காலில் அமைந்துள்ள அக்குடிலின் வாயிலைவிட்டு இரண்டு எட்டு எடுத்து வைத்தால் நேரே மேலோகம் தான். அவன் முன்பொரு சமயம் அங்கு வந்தபோது கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சை உடுப்பணிந்த இளவரசிகள் பெல்லி டான்ஸராய் இடுப்பாட்டி போதையேற்றின. தற்போதோ மழை நின்று முகத்தை மறைக்குமளவு பனி சூழ்ந்ததில் ஏமாற்றமாய் உணர்ந்தான்.
ஆனாலும், அவளின் நலனில் கண்ணாக குடிலுக்குள் நுழைந்ததுமே சிராய்த்திருந்த இடத்தையெல்லாம் பார்வையிட்டு வெளியே சென்று தனக்கு தெரிந்த அளவில் சில மூலிகைகளைப் பறித்து வந்து அவற்றின் மீது கசக்கித் தேய்த்தான். அவளின் நாடியில், தோளில், முழங்கையில், கணுக்காலில் என்று வரிசையாக மூலிகை பரவ, எரிச்சலோடு அவன் விரல்படும் கூச்சமும் சேர்ந்து விலக முற்பட்டாள். அவன் வம்படியாய் உட்காரவைத்தான்.
வலியில் தன் அன்னையை கட்டிக்கொள்வது போல் அவனை அவள் கட்டிக்கொள்ள, தனக்கு உண்டான காயங்களை மறந்தான் விக்கி. மூலிகைச்சாறு அவள் கன்னங்களில் வழிந்தோடியது.
“எனக்கு ரொம்ப குளுருது விபூ”
மாவுக்கடையில் தும்மல் வரவில்லையென்றால் தான் அதிசயம். ஆனால், முழுதாக நனைந்து மாற்று உடையில்லாமல் அவள் பற்கள் விசைப்பலகை தட்டியபோது முன்னேற்பாடு எதுவும் செய்யாமல் வந்த தன் மடத்தனத்தை நொந்தான்.
மதியம் மூன்று மணியளவில் அவளை அங்கு அழைத்து வந்தவனுக்கு இப்போதே தங்களை இருள் சூழ்ந்தது வேறு அசௌகர்யமாய் இருந்தது.
எதிரிலிருக்கும் பள்ளத்தாக்கை குடில் வாயிலில் கால்களை தொங்கப்போட்டுக்கொண்டே ரசிக்கலாம்; இவ்வளவு நாள் பேசாத கதையெல்லாம் இன்று அவளிடம் மனம் விட்டு பேசலாம்; ஒரு மணி நேரத்திற்குப் பின் யார் கண்ணும் உறுத்தாதவாறு இருவரும் விடுதிக்கு திரும்பிவிடலாம் என்றவன் போட்டிருந்த திட்டத்தில் பெரிய ஓட்டையைப் போட்டது இந்த வானிலை மாற்றம்.
அந்தக்குடிலின் கயிற்றுக்கட்டிலில் கம்பளியொன்று கிடந்தது மட்டும் சற்று ஆறுதல். எடுத்து வந்து அவளுக்கு போர்த்தி விட்டான். இருளைக்கண்டு அவள் பயப்படக்கூடாதென்று அலைபேசியின் டார்ச்சையும் இயக்கினான்.
தன் பாக்கெட்டில் நனையாமல் இருந்த சிகரெட்டில் ஒன்றையெடுத்து பற்ற வைத்தவன் வெளியே செல்வதும் உள்ளே வருவதுமாக இருக்க, சுவாரசியம் கூடியது அவள் பார்வையில்.
வெளியே சூரியன் கொசுவத்தி பொருத்தியிருந்ததால் குடிலுக்குள்ளேயே சிறிதுநேரம் விரல்களைத் தடவி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடியிருந்தனர். மூடுபனியுடன் பரவிய ஒளிக்கீற்றுகளின் டச்சப்பில் இருவரின் கண்மணிகளும் இணைய, இதழ்கள் துடித்தன. தாளாமல் உடனே இருவரும் ஒரு உடலாய் மாறத் துடித்தனர்.
இவ்வளவு நேரமும் அவள் ஆடைகள் உறிஞ்சிய உஷ்ணத்தை அவன் விழிகள் உறிஞ்சத் தொடங்க, வெட்கம் பிடுங்கித் தள்ளியது. அடர்ந்த மரவேர்களின் சிக்குகளுக்கு போட்டியாய் அவர்களின் வேர்க்காத இடங்கள் மாறியது எப்போதோ இருவருக்கும் தெரியாது.
மழையில் முளைத்த இரண்டு அரிய வகை காளான்போல் மிருதுவாயிருந்த அவளின் அந்த உயர்ந்தப் பாகங்களிலேயே விக்கி வெள்ளி நீர்வீழ்ச்சியானவன் மெதுவாக குடை சாய்ந்தான். அவளுமே தன் அன்பை வட்டக்கனல் அருவி போல் வஞ்சமின்றி கொட்டினாள். அவனுக்கோ மீண்டு வரமுடியாத குணாக்குகையானது அவள் தேகக்குகை.
ஆதியாட்டத்தில் அவள் வலி பொறுக்காமல், “ஆ! ம்மா!” என்று அலற, சூடான பாலில் வாய்வைத்தவன் போல் உமிழ்ந்து விலகினான்.
அவளுக்கு கொஞ்சம் அவகாசமளித்து குடிலின் வெளியே சென்று வந்தவனுக்கு ரொம்ப குற்றவுணர்வாக இருந்தது.
“அனி நான் இதுக்காக உன்ன இங்க கூட்டிட்டு வரல.” என்றான் கம்மிய குரலில்.
“தெரியும்.”
கம்பளி போர்த்தி திரும்பி அமர்ந்திருந்தவளின் முகம் சரியாகத் தெரியவில்லை அவனுக்கு. ஆயினும் அக்குரலின் திடம் அவன் மீதான அவள் நம்பிக்கையை பறைசாற்ற, உச்சி குளிர்ந்தான். ஆனால், உடனே அந்த நிம்மதிக்கு ஆப்பு வைத்தான் ஆண்டவன்.
"காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா! அன்பென்றாலே அம்மா! என் தாய் போல் ஆகிடுமா?" என்ற அலைபேசியின் பாடலில் தானே ஆடிப்போன அனன்யா பவ்யமாக ஏற்றாள்.
“குட்டிமா எங்கலாம் போனீங்கடா? அம்மா உன் ஞாபகத்துல ஆனியன் பக்கோடா செஞ்சேன்டா இன்னைக்கு. ஆனா, நீ இல்லாம சாப்டவே பிடிக்கல. நீ ஸ்னாக்ஸ் எதுவும் சாப்ட்டியா? அம்மாவுக்கு உன்ன பாக்கனும் போலருக்கு. வீடியோ கால் வர்றியா?” என்றதும்,
“ம்மா அதுவந்து… என் பக்கத்துல ஆளுங்களா இருக்காங்க. நான் ரூமுக்குப் போனதும் உங்களுக்கு கால் பண்றேன்” என்றவள் அலைபேசியை அணைத்ததும் ஓவென்று கதறினாள்.
இதுதான் அவனுக்கு அவளிடம் பிடிக்காதது.
“இனி நான் என் அம்மா மூஞ்சில எப்படி முழிப்பேன்? அவங்களுக்கு நான் பெரிய துரோகம் பண்ணிட்டேன் விபூ. உடனே உங்க அப்பா அம்மாவ எங்க வீட்டுக்கு பொண்ணுக் கேட்டு வரச் சொல்லுங்க ப்ளீஸ்!” என்று அரற்றினாள்.
“நீ உன் அம்மா உம்மேல நம்பிக்க வச்சிருந்தாங்களேன்னு அழற. நான் நீ எம்மேல நம்பிக்க வைக்க மாட்டிக்கிறியேன்னு அழுகைய கன்ட்ரோல் பண்ணிட்டு நிக்கிறேன். அவ்வளவு தான் வித்தியாசம்.”
“நீங்க ஒரு பொண்ணா இருந்து பாத்தா தான் என் கஷ்டம் புரியும்.”
“இப்ப நடந்ததுல உனக்கு சந்தோசம்னா எனக்கும் சந்தோசம். உனக்கு கஷ்டம்னா எனக்கும் கஷ்டம். புரியுதா அனி?”
“அப்போ பொண்ணுக் கேட்டு வரமாட்டீங்களா?”
“உடனே வேண்டாம்னு சொல்றேன். இந்த ஐ.டி கம்பெனி ஆரம்பிக்க எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? சோப்புக்கம்பெனிய ஓரங்கட்டினதுக்கு இப்பவும் என் அம்மாக்கிட்ட மண்டகப்படி வாங்கிக்கிட்டிருக்கேன். ஏதோ இப்ப தான் எல்லாம் ஓரளவுக்கு செட்டாகிருக்கு. உனக்கும் இருபத்திமூன்ற வயசு தான ஆகுது? இன்னும் ஒரு நாலஞ்சு வருசம் போகட்டும். அப்பறம் மேரேஜ் பத்தி யோசிக்கலாம்.”
“உங்கம்மா சொன்னது உண்மையோன்னு எனக்கு பயமா இருக்கு விபூ.”
“அப்போ எதுக்கு நான் கூப்ட்டதும் கொடைக்கானல் வந்த? இந்த மாதிரி பேசும்போது தான் எனக்கு எரிச்சலாயிருக்கு. சும்மா சும்மா எங்கம்மா உங்கம்மாங்காத.”
அவன் வெளியேப்போய் உட்கார்ந்தான். பனித்திரை மெதுவாக விலகி அந்த அற்புதக்காட்சி கிட்டியது.
தன் கோபமெல்லாம் அவற்றுடனே விலக, “அனி! இங்க வந்து பாரேன்” என்றான் உற்சாகமாக.
முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு வந்தவளுக்கும், ‘வாவ்!’ என்று கண்கள் விரிந்தன.
கம்பளி போர்த்தியபடி அவனருகில் வந்து உட்கார்ந்தவளை தோளோடு அணைத்துக்கொண்டான் காதலன். ஊடலை காதல் மிஞ்சியது.
சென்ற இரண்டு மணி நேரத்திலேயே விக்கியும் அனன்யாவும் விடுதி திரும்பியபோது அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள் சுற்றுலாப் பிரியர்கள்.
“ஸிப்லைன், கயாக், ஹார்ஸ் ரைடிங்னு ஜாலியா எஞ்சாய் பண்ணலாம்னு பாத்தா இப்படி பண்ணிடுச்சேப்பா இந்த மழ?”
பேஸ்ட்ரி கார்னர் கேக், பப்ஸை சுவைத்துக்கொண்டே கதையளந்து கொண்டிருந்தவர்களின் கண்ணில் படாமல் செல்ல முற்பட்டவர்களை மகேஷ் மடக்கிவிட்டான். அவன் பார்வை முழுவதும் வாசலில் தானே இருந்தது!
அவர்களின் கலைந்த கோலம் குடும்பஸ்தனுக்கு பல கதைகளைச் சொல்ல அதிர்ச்சியாக, “என்ன விக்கி இப்படி பண்ணிட்ட?” என்றான்.
“என்ன பண்ணினாங்க? சும்மா கற்பனைய பறக்க விடாதடா.” என்றான்.
“அப்படியா? ரெண்டுபேரும் உங்க மொகத்துல பச்சையா தெரியுறத மொதல்ல தொடைங்க” என்றதும், மறுத்துக் கூற வார்த்தைகளின்றி சங்கடமாக நழுவினார்கள் இருவரும்.
மறுநாள் வருணன் ஓய்வெடுத்த காரணத்தால் மூன்று முக்கியமான இடங்களுக்கு மட்டும் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு ஹோம் மேட் சாக்லேட்டுகளோடு மதுரைக்குத் திரும்பினார்கள்.
மகள் வாங்கி வந்த ஸ்ட்ராவ்பெர்ரி, பட்டர் ஸ்காட்ச், கேரமல், ரம், ஹேசல்நட், வால்நட், பாதாம், ப்ரஸலியன் காஃபி மற்றும் முந்திரி சாக்லேட் வகைகளில் ஒன்றைக் கூட வாயில் வைக்கவில்லை கங்கா.
கலைடாஸ்கோப் திரும்பும்…