- Messages
- 845
- Reaction score
- 1,132
- Points
- 93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 31
அனன்யாவை சந்தித்துவிட்டு தனது அன்னையைப் பார்க்க வீட்டிற்கு வந்த உத்ரா அனைவரையும் நலம் விசாரித்துவிட்டு நேரே படுக்கையறை சென்றாள்.
அங்கு குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தவளால் அனன்யா கூறியதை ஜீரணிக்கவே முடியவில்லை. கண்ணாடியைப் பார்த்து வசைபாடினாள்.
“எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே பொண்ணு இல்லனு சொல்லுவா? அவளுக்கு நான் யாருன்னு காட்டாம விடப்போறதில்ல. என்ன சொன்னா? இன்னும் அவள அவன் நெனச்சிக்கிட்டிருக்கதால தான் எம்மேல இன்ட்ரெஸ்ட் காட்டலனு சொன்னா இல்ல? விக்கியப் பத்தி இவளுக்கு என்ன தெரியும்? ஆனா அவ சொல்ற மாதிரி என்கிட்ட மட்டும் ஏன் இவன் ஒதுக்கம் காமிக்கிறான்? இவன் மனசுல அவ இல்லங்கறத எப்படியாவது நாம கன்ஃபார்ம் பண்ணி அவ மூஞ்சில கரியப் பூசனுமே!” என்று சிந்தனையில் இறங்கியவளை கதவருகில் கேட்ட சிரிப்புச் சத்தம் கலைத்தது.
கையில் பொம்மையோடு அவளருகில் வந்த அமிகா, “என்ன பண்ற உதி? எப்பப் பாத்தாலும் யாரையாவது திட்டிட்டே இருப்ப. இன்னைக்கு திட்ட யாருமில்லனு உன்னயே கண்ணாடிப் பாத்து திட்டிட்டு இருக்கியா?” எனவும்,
“அடி!” என்று விரட்டினாள்.
ஓடிச்சென்று பானுமதியின் பின்னே ஒளிந்து கொண்டவளை கைகளை பின்னால் கொண்டு சென்று பிடித்துக் கொண்டவர் கலக்கமாகப் பேசினார்.
“உதி, அமிகா கேஸ் இப்ப என்ன நெலமைலமா இருக்கு? வக்கீல் குருமூர்த்திக்கிட்டருந்து தகவல் எதுவும் வந்துச்சா? எல்லாம் நமக்கு சாதகமாத் தான இருக்கு? அமிகாவ நம்மக்கிட்டருந்து யாரும் பிரிச்சிரமாட்டாங்கல்ல?”
“எம்மேல நம்பிக்கை இல்லயா உங்களுக்கு? என்ன விடுங்க உங்க மாப்பிள மேல? இந்த விசயத்துல நீங்க கவலப்படவே தேவையில்லம்மா. அவன் நம்ம அமிகாவ யாரையும் நம்மக்கிட்டயிருந்து பிரிக்க விடமாட்டான். போதுமா?”
“உதி!”
“சரி, பிரிக்க விட மாட்டார்ர்ர்ர்ரு. போதுமா?”
உடனே பானுமதியின் முகம் தெளிர்ச்சி பெற்றது.
அப்போது வீட்டிற்குள் நுழைந்த கவிலயா பொட்டலம் ஒன்றை பிரித்துக்கொண்டே வர, “இன்ஸ்டாகிராம்லருந்து எவனாவது என்னத்தையாவது அனுப்பிருப்பான்.” என்று முகத்தை நொடித்தார் பானுமதி.
உத்ராவும் அதை ஆர்வமாகப் பார்க்க, இளஞ்சிவப்பு நிற சாட்டின் துணியாலான இரவு உடை ஒன்று உள்ளேயிருந்தது. விறுவிறுவென அவளருகில் சென்ற பானுமதி அதைத் தன் கையில் வாங்கிப் பார்த்தார். நூறுகிராம் தான் இருக்கும் போலத் தோன்றியது.
தானும் அதை கூர்ந்துப் பார்த்தாள் உத்ரா. உடனே யோசனை ஒன்று உதயமான பிரகாசம் அவள் முகத்தில். அதை அணிந்தால் காலின் முக்கால்வாசி பளீரிடுவது நிச்சயம். அதுவும் துணியின் இயல்பிற்கு உடம்பை ஒட்டிக்கொண்டு தெரியும். இதில் தோள்களில் வேறு மெலிதான பின்னற்பட்டிகள் தாம். அதை அணிந்து காணொளி எதுவும் எடுக்கக்கூடாதென்று தான் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருந்தார் பானுமதி.
நான் அணிவேன் என்று பிடிவாதம் செய்து கொண்டிருந்த கவிலயா உத்ராவிடம் சென்று, “அக்கா பாருக்கா! இந்த ட்ரெஸுக்கு என்ன கொற?” என்று புகார் வாசித்தாள்.
உத்ராவோ திடீர் பல்டியடித்தாள்.
“இங்கப்பாரு லயா! இன்னும் நீ சின்னப்பொண்ணு கெடையாது. ஒழுங்கு மரியாதையா அம்மா சொல்றதக் கேளு. இந்த மாதிரி ஒடம்ப எக்போஸ் பண்ற ட்ரெஸெல்லாம் போடக்கூடாது. அத மொத என்கிட்டக் குடு. போற வழில குப்பைல போட்டுடுறேன். அப்பறம் இந்த பலூன் அக்கா, டெய்லர் அக்கா, டிவோஷனல் அக்கா வரிசைல நீயும் நைட் ட்ரெஸ் அக்காவாகிடுவ பாத்துக்க. அக்காவுக்கு உண்டான மரியாதையேப் போச்சு.” எனவும்,
‘பின்ன நீ இப்டில்லாம் பேசினா’ என்று மனதுள் சலித்தாள் தங்கை.
அப்போது கவின் இடைபுகுந்தான்.
“நல்லா சொல்லுக்கா. மொத இந்த கேக் பிசினஸ நிப்பாட்டச் சொல்லுக்கா இவள. வீட்ல எங்கப் பாத்தாலும் எறும்புத் தொல்ல.” என்று தன் பங்கிற்கு அலுத்துக்கொண்டான்.
“உன்னாலயும் தான் எனக்கு கொசுத்தொல்ல. நான் என்ன வெளிய சொல்லிட்டு இருக்கேனா?” என்று இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட, தன் அன்னையின் கையிலிருந்த இரவு உடையை வாங்கிய உத்ரா படுக்கையறைக்குள் நழுவினாள்.
பானுமதி உத்ராவை இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தான் அவள் புகுந்த வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்த, அவளும் சரியென்று நிதானமாகச் சென்றாள்.
அவள் வந்த நேரம் இரவு உணவை முடித்த விக்கி தங்கள் டிடெக்டிவ் ஏஜென்சிக்கு மறுதிறப்புவிழா வைக்கும்போது யாரையெல்லாம் அழைக்க வேண்டும் என்ற பட்டியலை மடிக்கணினியில் தயாரித்துக் கொண்டிருந்தான். அவனின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் கவர்ச்சியாக அந்த இரவு உடையை அணிந்துகொண்டு வந்தாள் உத்ரா. இதை மட்டும் கவிலயா பார்த்திருந்தால் கத்தி கூச்சல் போட்டிருப்பாள்.
விக்கி அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஆச்சரியத்துடன், “என்ன எங்கம்மாவோட நைட் ட்ரெஸெல்லாம் போட்ருக்க? நீயும் அவங்களும் ராசியாகிட்டீங்களா?” என்றதும், உத்ராவின் காதுகளிலிருந்து புகை கிளம்பியது.
இருப்பினும் தன் நோக்கத்தினை எண்ணிப் பார்த்து கட்டிலில் அவனருகில் வந்து அமர்ந்தாள். அவன் வேலையே கண்ணாக இருந்தான். அவள் திடீரென தனது கண்ணில் தூசு விழுந்தது போல் நடித்தாள். குளிரூட்டப்பட்ட அறையில் திடீரென தூசு எங்கிருந்து வந்தது என அவன் சுற்றி முற்றிப் பார்க்க, நொந்துகொண்டாள்.
அவன் மீண்டும் தன் வேலையைத் தொடர, “விக்கி எனக்கு ரொம்ப போரடிக்குது. நம்ம ரெண்டுபேரும் சேர்ந்து ஒரு கேம் வெளையாடுவோமா?” என்று ஆசைக்காட்டினாள்.
அவன், “என்ன கேம்?” என்றான் மடிக்கணினியை மூடி வைத்து.
“அது வந்து ரெண்டுபேரும் இப்படி எதுத்தாப்ல உக்காந்துக்கிட்டு ஒருத்தர் மொகத்த இன்னொருத்தர் கண் சிமிட்டாமப் பாக்கனும். யார் மொதல்ல கண் சிமிட்டுறாங்களோ அவங்க அவுட்டு” என்றாள்.
“உன் மூஞ்செல்லாம் ரெண்டு செகண்டுக்கு மேல பாக்க முடியாது உதி. சாரி, வேற கேம் இருந்தா சொல்லு”
“வெவ்வெவ்வே! வேற கேம்னா.... நீ வந்து என் முதுகுக்குப் பின்னாடி உன் வெரல வச்சு உனக்கு தோணுறத எழுது. நான் என்னனு சரியா கெஸ் பண்றேன்.”
“சாரி, எனக்கு எப்பவும் ஒருத்தர முஞ்சிக்கு நேரா ஃபேஸ் பண்ணி தான் பழக்கம்.”
“காலக்கொடும!”
“என்ன முணுமுணுக்குற?”
“ஒன்னுமில்ல, இன்னொரு வெளையாட்டு சொல்றேன்.” என்று ஆரம்பித்தவள் அப்படியே கால் மணி நேரமாக ஒவ்வொரு விளையாட்டுகளாக சொல்லி அயர்ந்துவிட, அவன் கொட்டாவி விட்டான்.
இது சரி வராது என்று கழிவறை செல்வதுபோல் எழுந்து படக்கென்று தரையில் உட்கார்ந்துகொண்டு கால் சுளுக்கிவிட்டதாக அவள் நாடகமாட, அவன் குதூகலமானான்.
“உண்மையாவே கால் சுளுக்கிக்கிச்சா உதி? உன்னால எந்திரிக்கவே முடியாதா? இந்தா பெட்ஷீட். அப்டியே படுத்துத் தூங்கு. இங்க பக்கத்துல படுத்து என்ன நீ ஒதைக்கிற ஒத இருக்கே? கழுத தோத்துடும் போ. இன்னைக்கு எம்மேல கருண வச்சி கடவுளா அமைச்சுத் தந்துருக்கற நல்ல ஆப்பர்சுனிட்டி இது. இத நான் மிஸ் பண்றதாவே இல்ல. ஹாவ்! கொட்டாவியா வருது பாரு. உன்ன நான் காலைல மீட் பண்றேன். பாய்” என்று சொல்லி திரும்பி படுத்துவிட்டான்.