Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சது(ரங்கம் )

Status
Not open for further replies.

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
19

திருமணம் முடிந்த பிறகு,திருமணத்துக்கு வந்தவர்களையெல்லாம் இரண்டு குடும்பத்தினரும் ஒன்றாக நின்று நன்றி சொல்லி வழியனுப்பி வைத்தார்கள். திருமண மண்டபத்தின் வாயிலில் தாம்பூலம் கொடுக்க தனியாக கல்யாண காண்ட்ராக்டரின் ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். இன்னும் பதிநைந்து நாட்களில் தேர்தல் பற்றிய அறிவிப்புகள் கட்சித் தலைமையிடம் இருந்து வரவிருப்பதால் அந்த அறிவிப்பு வந்த பிறகு இன்னும் பிரமாண்டமாய் வரவேற்பு நிகழ்ச்சி வைத்துக்கொள்ளலாம் என்று அருணாச்சலம் முடிவு செய்துவிட்டார். அதனால் திருமணம் முடிந்த அன்று மாலையே எல்லோரும் அவரவர் வீட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான்.

மணமக்கள் பால்பழம் எடுத்துக்கொள்ள
-வெல்லாம் சிவனின் வீட்டிற்கு வர முடியாது என்று தீர்மானமாக மறுத்து கொண்டிருந்தான் குருபரன். அவன் மணமகன் அறையில் பேசிக் கொண்டிருப்பது அதற்கு எதிரில் இருந்த மணமகள் அறையில் அமர்ந்து கொண்டிருந்த சிவனின் காதுகளிலும் விழுந்தது. அவர் பக்கத்தில்தான் உமாவும் உட்கார்ந்து கொண்டிருந்தாள். சிவனின் முகம் விழுந்துவிட்டது. அவர்கள் வீட்டில் அவனது அலட்சியம் தெரிந்ததுதான். இன்றும் இப்படியா என்பதுதான்.
மண்டபத்தில் அதிகம் யாரும் வெளி ஆட்கள் இல்லாததால் பிரச்சனை ஒன்றும் பெரிதாக இல்லை. அருணாச்சலம் பதிலுக்கு அவனிடம் கத்திக் கொண்டிருந்தார். இனி, நீ ஒத்துக்கொண்டாலும் இல்லாட்டாலும் சிவன் தான் உன் மாமனார். அந்த மனுஷனுக்கு அதற்கான மரியாதையை கொடுத்துதான் ஆகணும். உமாவை கூட்டிக்கிட்டு இன்னும் அரை மணி நேரத்துல கிளம்ப வேண்டும் என்று.
கல்யாணத்திற்காய் சமையல் செய்து மீந்துபோன சாப்பாட்டையெல்லாம் சிவனின் வீட்டிற்கு கொஞ்சம் எடுத்து பாறுவிடம் கொடுத்துவிட்டு, தங்களுக்குத் தேவையான வற்றையும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு, மீதி இருந்தவற்றை , தங்கள் வீட்டிலும் பண்ணையிலும் வேலை செய்பவர்களுக்கும் கொடுத்து அனுப்பி விட்டு அன்னபூரணி மணமகன் அறைப்பக்கம் வருவதற்கும், பாறுக்குட்டி அதே சமயம் மணமகள் அறைப் பக்கம் வருவதற்கும் சரியாக இருக்க,குருபரன் பேசிக்கொண்டிருந்த வார்த்தைகள் கேட்டு இருவரும் திகைப்பூண்டு மிதித்தார் போல அங்கே வாயிலிலேயே நின்று விட்டார்கள்.அவன் வார்த்தைகள் அவ்வளவு ஏளனம் செய்தது சிவன் குடும்பத்தை.உமாவின் அம்மாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரிய இடம்... மிகப் பெரிய இடம் என்று ஆசைப்பட்டு திருமணம் செய்து கொடுத்தது எவ்வளவு பெரிய பிழை என்றே இந்தக் கணம் அவள் புரிந்து கொண்டாள். குருவிடம் தன் மகள் இன்னும் எவ்வளவு சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டியது வருமோ... என்று அந்த தாய்க்கு பயம் வேறு வந்துவிட்டது.கைகால்கள் நடுங்க சுவற்றை பற்றிக்கொண்டு நின்று கொண்டாள்.
அவளது நிலையை புரிந்து கொண்ட அன்னபூரணி ஆதரவாக அவளது தோள்களைப் பற்றி, 'கவலைப்படாதீங்க சம்பந்தி அம்மா, நான் இனிமே உங்க மகளை என்னோட சொந்த பொண்ணாவே பாத்துக்குறேன். இன்னைக்கு கண்டிப்பா குரு வருவான் உங்க பொண்ண கூட்டிக்கிட்டு. அப்படியே மறுத்தாலும் ஓரிரு நாள்களில் அவனை சரி பண்ணி மறுவீடு சடங்குக்கு நிச்சயம் அனுப்பி வைக்கிறோம் ' என்று ஆறுதல்படுத்த முனைய,பாறுவின் மனது சமன படுவதாக இல்லை.

பாறுவும் மகள் அறைக்குள் நுழைய, அங்க உமாவோ தன் அப்பாவிடம்,' இந்த இடம் நீங்க பார்த்து முடித்து வைத்ததுதான் அச்சா... ஒரு வார்த்தையும் மறுபேச்சு பேசாமல் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன், எனக்கு இஷ்டம் இல்லாட்டியும்.அவரைப் பற்றி ஏற்கனவே தெரிந்து தானே இப்படி, இவரோட கல்யாணம்னு எனக்கு முடிவு செஞ்சிங்க?
இப்போ அதுக்கான விலை கொடுப்போம். இனி நான் அந்த வீட்டு... ம்ஹும்... உங்க முதலாளியோட மருமகள்தானே தவிர, உங்க பொண்ணுங்கற அதிகாரம் முடிஞ்சுது. எந்த காரணத்தை கொண்டும் வேலைய மட்டும் விட்டுடாதீங்க. நாளை பின்னைக்கு எனக்கு ஏதாவது ஆனாலும் உங்களுக்கு தெரியணும்... என்றவளின் கண்களில் வலி. முகம் உணர்ச்சிகளை துடைத்து... மடியில் கோர்திருந்த விரல்களை வெறித்து கொண்டிருந்தவளின் மனம் அவள் கைகளில் போட்டிருக்குற மருதாணி சிவப்பிற்கு குறைந்தாதில்லை.அவள் மனம் எதையோ மனகண்ணில் கண்டது.மகள் சொல்லிய ஒவ்வொரு வார்த்தைகளும், அவளது வெறித்த பார்வையும் பெற்ற வயிற்றில் தீயை மூட்டியது. கலியாண வீட்டின் அந்த அறை துக்கம் நிறைந்து. சாந்தாவுக்கு அவர்கள் பேசுவது புரியாவிட்டாலும், இந்த கலியாணம் அக்காவின் சந்தோஷத்திற்கு இல்லை என்று புரிந்து கொண்டவள் இனி, இந்த ஜென்மம் முழுவதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். படித்து வெளிநாடு சென்று விடுவேன் என்று முடிவெடுத்தாள். இந்த யோசனையில் இருக்கும் பெண்ணின் வயசு வெறும் பதிநான்கு.

குருவை மேலும் கத்த விட்டு மிச்ச சொச்ச மானத்தை இழக்க அருணாச்சலம் விரும்பவில்லை. எல்லோரும் சத்திரம் விட்டு கிளம்ப உமா உணர்வுகளை வெளிப்படுத்தாமல் கவனமாய் நடந்துகொண்டாள். அவள் முகத்தில் ஏதேனும் வலி தென்படுகிறதா என்று கவனித்துக் கொண்டிருந்த குருவுக்கு பெருத்த ஏமாற்றம்! இதை அவன் அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

மெலிதாக அவள் காதுகளில், பிறருக்கு கேட்காமல், உனக்கு உங்க வீட்டுக்கு போகணும்னு தோணலையா,என்றவனுக்கு நிச்சயம் அவளின் உணர்வுகளின் மேல் ஆதிக்கம் செலுத்தும் ஈடுபாடு புலபட, அவனிடம் அடி மன உணர்வுகளை காண்பிக்காமல் 'இனி, நீங்க இருக்கும் வீடு தான் என் வீடு 'என்றவளை வியப்பு மீற பார்த்து கொண்டு நின்றான் குரு. அவள் வார்த்தைகளில் ஏதோ அர்த்தம் ஒளிந்திருப்பதாகவே அவனுக்கு தோன்றியது.இவர்கள் இருவரின் உரையாடல் யாருக்கும் கேட்கவில்லை. இதையெல்லாம் அருகே நின்று கவனித்துக் கொண்டிருந்த அருணாசலத்திற்கு சற்றே மன நிறைவு. வந்திருக்கும் பெண்ணாவது குடும்ப மானத்தை கட்டி காப்பாற்ற முயற்சி செய்வாள், நாசுக்கு தெரிந்து நடக்கிறாள் என்பது அவருக்கு சந்தோஷமாய் இருந்தது.

சிவன் குடும்பம் முழுவதும் வருத்தம் மிக கிளம்பினார்கள். சிவன் ஆட்டோ கூட்டி வந்தார். அவர்கள் உடைகள் கொண்ட பெட்டியும், சாப்பாடு கூடையும் மட்டுமே அவர்களுடன்... வெறும் மூன்று பேர். திருமணத்திற்கு வந்த சிவனின் உறவுகள் சொற்பம். அவர்களும் கிளம்பியாயிற்று. மணமக்கள் வரப் போவதில்லை என மதியம் அவர்களை வேறு சொல்லி அனுப்பிவிட்டார் சிவம் . பெரும்பாலும் அவர் சொந்தங்கள் அவரின் சொந்த மண்ணில். ரத்னா வேறு வராதது அவர்களுக்கு மனதில் வருத்தம். சாந்தா கண்ணீரில் கரைய, உமாவின் கண்களில் கலக்கம். ஆனால், தங்கையை தாங்க அவள் முனையவில்லை. அன்ன பூரணிதான் சாந்தாவை சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று. குரு முகத்தில் உமா பற்றிய ஆராய்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது. அதற்கெல்லாம் உமா அசையவில்லை.

அன்று இரவே முதலிரவு வைத்தாக வேண்டும் என குரு ரகளை செய்துவிட்டான். அன்று சாந்தி முஹூர்த்தம் செய்ய நேரம் ஏற்றதல்ல என ஜோசியர் சொல்ல கேட்பேனா என்றான் குரு. அருணாச்சலம் தம்பதி செய்வதரியாது நிற்க, உமா மெல்ல குருவிடம் 'மாமா, எனக்கு அந்த மூன்று நாட்கள் நெருங்குது என்று மெல்ல அவனிடம் கூறினாள் அவர்கள் தனியறையில் . ஸோ ஒரு வாரம் கழிச்சு இதெல்லாம்... என்று மெல்ல கொஞ்சி கொஞ்சி அவனிடம் பேச, சந்தேகமாய் அவளை பார்த்தவனுக்கு பாதியில் ஏதாவது ஆகிதொலைந்தால் என்று எண்ணம் எழ சரி அடுத்த வாரமும் ஏதாவது சாக்கு சொல்லாத என்று கடுப்புடன் வெளியே சென்று விட்டான். அவள் சொல்வது உண்மையா இல்லை தன்னை தவிற்கும் வழியா... பொறுத்திருந்து பார்ப்போம் என்று யோசித்தான் குரு.உமாவின் மாமா எனும் அழைப்பு உள்ளே தேனை வார்க்க மௌனமாய் தோப்பு வீட்டுக்கு சென்று படுத்துவிட்டான், அதிசயமாக தனியாளாய்.
இன்னும் பதிநைந்து நாட்கள் கழித்துதான் முஹூர்த்தம் இருக்காம் என்றாள் அன்னபூரணி. எனக்கும் இன்னும் ஒரு வாரம் கழிச்சு தான் நாள் அத்தை என்றாள் உமா. இருவரும் சிரித்துகொண்டனர்.

குரு தன் புது மனைவியை அதிகம் கண்டுகொள்ளவில்லை. அவளை ஆழம் பார்த்தான். அவளாக அவனிடம் வந்து பேசினாள். திருமண நிகழ்வுக்கு முன்னர் இருந்த தயக்கம் அவளிடம் இல்லை. நாடகம் செய்கிறாளா என யோசித்தால், அப்படியும் தெரியவில்லை. சிவன் அடுத்த நாளே வேலைக்கு வந்து விட்டார். அவருடன் அப்பா என்று நிற்கவில்லை பெண். மறுவீடு செல்ல கேட்கவும் இல்லை.குருவுக்கு அவளை புரிந்துகொள்ள முடியவில்லை. பிறந்தகம் போகணும் என்று அவள் கேட்கவில்லை, அந்த ஆசை இருப்பதாகவே தெரியவில்லையே!அவள் மனதில் என்ன என்று தெரியாமல் குழம்பினான் குரு. சரியாக ஒரு வாரம் கழித்து மாத விடாய் என்று ஒதுங்கினாள் உமா. குரு மனதில் மீண்டும் எதிர்பார்ப்பு. ஐந்து நாட்கள் ஒன்றும் சரிவராது என்றுவிட்டாள் உமா.. மேலும் மூன்று நாட்கள் தள்ள, முதலில் குல தெய்வ கோயில் செல்ல வேண்டும். பிறகு எல்லாம் பார்க்கலாம், தலைமை முடிவு சொல்லும் நாளில் கோயில் செல்ல முடிவெடுத்தார் அருணாச்சலம். குருவுக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை. மீண்டும் ரகளை. ஆனால் பயனில்லை. எப்படியோ நாட்கள் நகர ஜோசியர் சொன்ன அந்த நாள் வந்தது.

அருணாச்சலத்துக்கு எம் எல் ஏ சீட் தர மேலிடம் ஒப்பு கொண்டது. வென்றால் அமைச்சர் பதவி எனும் நிலை. அவருக்கு நிலை கொள்ளவில்லை. முதல் முறையாக சட்ட சபை தேர்தலில் நிற்கிறார்.

முதல் இரவு நாளுக்கென குரு உமாவுக்கு தங்க கொலுசு பரிசளித்தான். உமா எந்த மறுப்பும் இன்றி தன்னையே அவனுக்கு பரிசாக அளித்தாள். அவள் வேண்டுமென்றே இந்த சடங்கு நிகழாமல் தள்ளி போடுகிறாள் என்று நினைத்திருந்தவனுக்கு அவளின் ஒத்துழைப்பு போதை கூட்டியது. முதலில் வன்மையாக கையாண்டவன் பிறகு என்ன நினைத்தானோ, அவளை ராணி போல் நடத்த அவளுக்கு ஆச்சர்யம். அவளின் கூசி குழைந்த தந்த நிற தேகம் அவனுக்குள் மோகம் எனும் நெருப்பை கொழுந்து விட்டு எரிய செய்தது.

இது வரை அவன் மற்ற பெண்களிடம் காணாத ஏதோ ஒன்று மனைவியிடம் கண்டவனுக்கு கொண்டாடி தீர்க்க அந்த இரவு போதவில்லை. முதலில் கஷ்ட பட்டவளுக்கு வலியில் கண்ணீர் வர, இவனுக்கு தன் கண்ணீரை காட்ட கூடாது எனும் அவளின் தீர்மானம் நினைவு வர தன்னை
நிதானித்து கொண்டாள். அவனின் மோகம் நிறைவதாய் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் உமா அவனுக்கு புதியதாய் தெரிய பித்து பிடித்தவன் போல் ஆனான்.
சொத்து நிர்வாகம் பார்க்க உமா அவனை கட்டாயபடுத்தி அனுப்பி வைத்தாள். வேலை
முடிந்தவுடன் நல்ல கணவனாய் மாலை வீடு வரும் அவனைப்பார்த்து அருணாசலத்துக்கும், அன்னபூரணிக்கும் வியப்பு தாங்க முடியவில்லை.
ஆனால், அவனது பலவீனம் உமாவுக்கு நன்றாக புரிந்தது. அவன் தன்னை விட்டு வேறு பெண்களிடம்
செல்லக்கூடாது. வேறு ஒருத்தியின் நியாபகம் கணவனுக்கு எந்த காலத்திலும் ம்ஹும்... கூடாது என்று யோசித்தவள் மனதிற்குள் அந்த முடிவை இறுக்கி பதிய வைத்தாள்.
தினமும் உடல் பயிற்சி செய்ய ஜிம் செல்ல ஆரம்பித்தாள். உணவு கட்டுபாடும் சேர்ந்து இன்னும் அவளின் அழகு கூடியது. அவள் உடை அலங்காரம் என்று முழுவதும் மாறினாள்.
அந்தரங்கத்தில் கணவனுடன் ஒன்றி அவனை சந்தோஷம் கொள்ள செய்தாள். அவனால் இரவு அவள் இல்லாமல் இருக்க முடியாது எனும் அளவிற்கு அவளுள் மூழ்கினான். ஆனால், அவளுள் மரித்த அவள் எழவே இல்லை. இயந்திரதனமாய் இருந்தது அவனுடனான அவளது கூடல்.

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று அவனது மோக வலை அறுந்து விழ அவள் எப்போதும் சம்மதிக்க தயாராக இல்லை.
அவளது முயற்சிகளை அன்னபூரணியும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். ஒரு தாயாக அவளுக்குள்ளும் தன் மகன் திருந்தி நல்ல குடும்ப வாழ்வு வாழவேண்டும் என்ற பிரார்த்தனைகள் உண்டு. அதனாலேயே, உமாவின் வழியிலேயே அவளை விட்டு விட்டாள். மெல்ல மெல்ல, உமாவை வீட்டு நிர்வாகத்திற்கும் பழக்கினாள் அன்னபூரணி. சிவனுக்கு தன் மகள் எடுத்து வைக்கும் அடிகள் மிகுந்த மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. மருமகன் என்னதான் திமிர் பிடித்தவனாக நடந்துகொண்டாலும் மகளிடமும் தன்மையாக நடந்து கொள்வது மனதிற்கு ஆறுதலாக இருந்தது. பாறுகுட்டியும் சரி, நகல் இங்கே வராவிட்டால் கூட நல்ல வாழ்வு அவளுக்கு அமையப் பெற்றால் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டாள். சிவன் தினமும் அங்கே நடப்பவற்றை சொல்லும்போது, விவரிக்க முடியாத எண்ணங்கள் அவளுக்குள் எழும். மகளுக்கு சந்தோஷத்தை கொடு தேவி என்று பிரார்த்தனை செய்வதைத் தவிர அந்த தாய்க்கும் வேறுவழியில்லை.

தேர்தல் முடிவுகள் வந்து அருணாச்சலம் எம்எல்ஏ ஆகிவிட்டார். மருமகள் வந்த நேரம் தன் வாழ்வில் ஏற்றங்கள் என்று அவளை கொண்டாடினார் அருணாச்சலம். குருவும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். அருணாசலத்திற்கு அமைச்சர் பதவியும் கிடைக்க, காவல்துறையும், சுகாதார துறையும் அவரின் நிர்வாகத்தில் இயங்கத் தொடங்கியது. குருவுக்கு தந்தைக்கு கிடைத்த பதவி இன்னும் கொஞ்சம் திமிரை அதிகப்படுத்தியது. மறைமுக தொழிலில் தைரியமாக இறங்கி விட்டான். அவனது தொழில் ரகசியங்கள் பற்றி உமா, அன்னபூரணி, அருணாச்சலம் யாருக்குமே தெரியாது.
சிவனுக்கு மட்டும் தன் மருமகன் ஏதோ தவறான செயல்களில் ஈடுபடுகிறான் என்ற அச்சம் மனதில் இருந்தாலும் வாய்விட்டு இன்னும் அவர் எதையும் கூறவில்லை.
அருணாச்சலம் அமைச்சரானவுடன் அவரது குடும்பம் சென்னைக்கு இடம் பெயர சிவனும் தனது குடும்பத்துடன் சென்னை செல்லலானார். சிவனை இப்பொழுதும் தன்னுடனேயே வைத்துக் கொண்டிருக்கிறார்
அருணாச்சலம் . சம்பந்தி என்ற மரியாதை சிவனுக்கு என்றும் கிடையாது. ஆனால் உண்மையான விசுவாசியை எங்கே வைத்திருக்க வேண்டும் என்பது அறிவார் அருணாச்சலம். சிவனுக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
அருணாச்சலதுடன் சென்னைக்கு வந்துவிட்டமற்றொரு நபர் வீரன். அருணாசலத்திற்கு தன் உயிரைக் காப்பதற்கு மட்டும் காவலுக்கு தன்னுடன் ஆள் தேவைப்படவில்லை. தேவைப்படும் பொழுது தன் உயிரைத் தரவும் விசுவாசி தேவைப்படுகிறது. அதற்கு வீரன் சரியான ஆள் தான். அவருக்கு உயிர் பயம் இப்போது அதிகமாகி விட்டது. பதவி வந்தவுடன் அவர் ஆளும் அதிகம் மாறிப்போனார்.

ரத்னா திருச்சூரில் கல்லூரி சேர்ந்தாயிற்று. சங்கரனும் திருச்சியில் கிளை திறந்து நிர்வகிக்க ஆள் நியமனம் செய்துவிட்டான். அவர்கள் வாழ்வு காதலின் முதல் படியில். இன்னும் அவர்கள் திருமண வாழ்வுக்குள் புகவில்லை. அவள் படிக்க வேண்டிய சிறு பெண். சம்சார பாரம் இப்போது வேண்டாம் என யோசிக்கிறான் சங்கரன். ஆனால், அந்த சிறு பெண்ணுக்குள் திருமண சம்மந்தமான ஆசைகள் எழும்ப தொடங்கிவிட்டது.
**********************************************************

சாதுர்யா தன் ஆசைப்பட்டபடி அரசியல் அறிவியலில் சேர்ந்து கொண்டாள். வீட்டிலுள்ளவர்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்கும் அளவில் அவள் இல்லை. தான் பிடித்தால் பிடித்தது தான் எனும் முரட்டு பிடிவாதம்!

ரங்கன் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்றுவிட்டான். இன்னும் ஒரு மாதத்தில் அவன் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்கிறான். சாதுர்யா மனதில் எப்படியாவது ரங்கனிடம் தன் மனதை விரைவில் பதியவைக்க வேண்டும் என்ற துடிப்பு அதிகமாக இருந்தது. அவளுக்கு நிச்சயமாய் தெரிந்துவிட்டது ரங்கன் மீது தனக்கு இருப்பது காதல் தான் என்று. அது அத்தானுக்கும் தெரிந்திருக்கும். ஆனாலும் ஏன் தன்னை தவிர்க்கிறார் என்றது அவளுக்கு புரியவில்லை. தன்னை புரிய வைத்துவிடும் வேகம் அவளுக்கு அதிகமாகிவிட்டது.

ரங்கனை சனிக்கிழமை மாலையில், கல்லணைக்கு போய் வரலாம் என்று கூப்பிட்டு கொண்டு சென்றாள்.அவள் ஏதோ பேச விரும்புகிறாள் என அவனுக்கு புரிந்து போனது.
'நான் திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பேன்' என்று அவள் சொன்னது ரங்கனை அன்றே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. அவளிடம் அதுபற்றி கேட்டுவிட வேண்டும் என்று பல நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறான்.
இன்று இருவரும் ஒருவர் மனதில் இருக்கும்
அந்தரகங்கத்தை இன்னொருவர் அறிய பகிர்ந்து கொள்வதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் ரங்கனே பேச்சை நேரடியாக தொடங்கிவிட்டான். படிப்பு முடிந்த பிறகு நீ கட்டாயம் கல்யாணத்துக்கு ஒத்துக்கணும், வேற காரணங்கள் சொல்லி கல்யாணத்தை தள்ளி போடக்கூடாது சாதுர்யா என்றவனை தீர்க்கமாக பார்த்தபின் பெண் சொன்னது, 'அத்தான் மணமகன் நீங்கன்னா கண்டிப்பாக நான் உங்கள கல்யாணம் செஞ்சுக்குவேன்' என்று. சட்டென்று அவள் அவ்வாறு சொல்வாள் என்று ரங்கன் எதிர்பார்க்கவில்லை. இதற்கு மேல் காலதாமதம் செய்ய கூடாது என்று அவள் முடிவு செய்து கொண்டுதான் வந்திருந்தாள். வெகு காலமாய் மனதில் பூட்டி வைத்த ரகசியம், இன்று எப்படியோ தைரியத்தை கூட்டி கொண்ட சொல்லி விட்டாள்.
இருவரும் திரும்பி வரும்போது மௌனம் மட்டுமே இருவருக்கும் நடுவில். ரங்கன் தனது பதிலை இன்னும் எதுவும் சொல்லவில்லை. அவள் வார்த்தைகள் அவனுக்கு ஒரு ஆயிரம் குழப்பங்களை விதைத்திருக்கிறது. அவன் முடிவு என்ன என்பது காத்திருந்த தான் தெரிந்து கொள்ள வேண்டும். அவன் மனதில் அவள் சிரித்தாள். அவனால் அவளது சிரிப்புக்கு பதில் சொல்ல முடியவில்லை.ஆனால், யார் அவள், அவனுக்குள் சிரித்து, சில சமயம் அழுது அவனை பல வருஷங்களாய் தூக்கம் கெடுக்கும் பெண்?
 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
20


சாதுர்யா இவ்வளவு சீக்கிரம் தன் மனதில் இருப்பதை சொல்லி விடுவாள் என்று ரங்கன் சிறிது கூட எதிர்பார்க்கவில்லை. காரில் வரும்போதெல்லாம் இருவருக்கும் மௌனம் மட்டுமே மொழியாக! ஏனோ அந்த பெண்ணுக்கு தன் அத்தானிடம் தன் காதலை இப்பொழுது சொல்லவில்லை என்றால் எப்பொழுதுமே சொல்ல முடியாமல் போய்விடுமோ என்ற ஒரு தவிப்பு. என்றைக்கு ஆனாலும் சொல்லித்தான் தீரவேண்டும் என்றால் இன்று சொன்னால் என்ன தவறு என்ற மூளையின் கேள்வி அவளை இன்று ஒருவழியாக பேச வைத்துவிட்டது. தன் மனதில் உள்ளதை அவனிடம் சொல்லி விட்டதாலோ என்னவோ இரவு தூக்கம் அவளை வேகமாக தழுவிக்கொண்டது. ஆனால் ரங்கனுக்கு தான் மனசு ஒரு நிலையில் இல்லை. அவனுக்கு தீர்மானமாக தெரியும் இதெல்லாம் சரியாக வராது என்று. இருவருக்கும் படிக்க வேண்டிய வயது, மனதை சிதற விட்டால் சரியான தருணம் இது இல்லை . அவள் சொல்வதற்கு எல்லாம் சரி என்று சொல்லி விட்டாலும் கூட வெளிநாடு சென்று வந்த பிறகு நிலைமை எப்படி இருக்கப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது. இப்போதைக்கு ஒரு மாதத்திற்கு வேண்டுமானால் அவளது கேள்விக்கு பதில் ஆமாம் என்று விடலாம்.ஆனால் பிறகு? நிச்சயம் இதற்கெல்லாம் மாலதி சம்மதிக்க போவதில்லை. தன் அண்ணன் மகனுக்கு தன் மகளை திருமணம் முடிப்பது பற்றி மாலதிக்கு கனவு உண்டு. அதுபற்றியும் ரங்கனுக்கு தெரியும்.

சரி தவறு என்பதை பற்றிய ஆராய்ச்சி செய்வதைவிட இந்த பிரச்சனையை இப்போதைக்கு வாயை மூடி கொண்டுவிட்டு கடந்து சென்று விடலாம். அவளுக்கு எந்த பதில் கொடுத்தாலும் அது தவறாகத்தான் முடியும். சொந்தங்களுக்குள் விரிசல் வருவதை ரங்கன் விரும்பவில்லை. இன்னும் சரியாக ஒரே மாதத்தில் அவனும் கிளம்பிவிட போகிறான். அவன் எண்ண
அலைகள் மீண்டும் மீண்டும் தன் மாமன் மகளையே சுற்றி சுற்றி வந்தது.
அவள் சொன்ன விதத்தையும் அவள் தைரியத்தையும் மனதில் எண்ணி எண்ணி சிரித்துக் கொண்டான். அது அவனுக்கு பிடித்துதான் இருக்கிறது. மறுப்பதற்கில்லை. பெண்ணும் அழகிதான், அவள் காதல் சொன்ன விதம் இன்னும் அழகு. சடங்கு அன்று அவன் வாங்கிக் கொடுத்த பாவாடை தாவணியை உடுத்திக் கொண்டு இருந்த அந்த பருவப்பெண்ணின் உருவம் அவன் மனதை சிதறடித்தது. தலையை உலுக்கிக் கொண்டு, தூங்கச் சென்றால் இரவு முழுவதும் அவள் நினைவுகள் அவனை துரத்தின. விடியும் வேளையில் தான் லேசாக தூக்கம் வந்தது. இனி,இந்த நினைவுகள் சரிவராது என்று தனக்குத்தானே யோசித்தவன் வெளிநாடு செல்லும் முன் நண்பர்களை பார்த்து விட்டு வருகிறேன் என்று ஒரு வாரத்திற்கு சென்னை சென்று விட்டான்.
செல்லும்பொழுது அந்தப் பெண்ணிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அவன் பதில் சொல்லாத விதமே அவள் மனதில் ஆழ்ந்த காயத்தை உண்டு பண்ணியது. அவளைப் பொறுத்த வரைக்கும் மறுப்பதற்கு காரணங்கள் ஏதும் கிடையாது. அவள் மனதில் ஆழப்பதிந்து இருப்பது அவன் முகமே. முதல் காதலும் இதுதான்... அவளது முடிவான காதலும் அவன் மீதுதான்! அவனுக்கு இது புரியவில்லை என்றால் கூட சரி. எல்லா காதலும் திருமணத்தில் தான் முடிய வேண்டும் என்ற சட்டம் எழுதப்பட்டுள்ளது? அத்தான் அவன் மறுத்து விட்டால் இருக்கவே இருக்கு படிப்பு. அன்று சொன்னது போல் கல்யாணமே செய்துகொள்ளாமல் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று வாழ்க்கையை வேறு விதத்தில் அமைத்துக் கொள்ளலாம் என்று எண்ணினாள் அந்தப் பெண். அவன் விலகிச் சென்றாலும் அவள் மனதிற்குள் இருக்கும் இந்த உணர்வு அவளுக்கு பெரிய பலத்தை தருகிறது. எப்பொழுதும் அவன் தன்னுடனே இருப்பது போன்ற ஒரு மனத் தோற்றம். இது காட்சி பிழையோ கருத்து பிழையோ அல்ல... காதல் பிழை!

இது ஹார்மோன் செய்யும் வேலை என ஒப்புக்கொள்ள அவள் முட்டாள் இல்லை. புரியாத வயதிலும் அவன் பிரிவு அவளுக்கு மனதை இறுக்கி பிடித்தது. கடினமான பள்ளித் தேர்வுகள் சமயத்தில் அவன் முகம் பார்த்ததும் புத்தகம் பூக்கள் பூத்து புது உலகம் காட்டியது.
அத்தனை நாட்களாக பூபெய்தாத பெண்மை அவன் வீட்டில்,அவன் கைகள் பட்டவுடன் மலர்ந்தது. அவள் அணிந்த முதல் தாவணி அவன் வாங்கியது... இன்னும் எத்தனை உணர்வுகுவியல்!

ரங்கனுக்கு சென்னை வந்த பிறகும் கூட அவளது நினைவுகள் அவனை எந்த விஷயங்களிலும் ஈடுபட விடாமல் தவிக்க செய்தது. அவனுக்கு இந்த உணர்வு புதிதல்ல. அவன் காதலிக்கும், அவன் மனதில் எப்பொழுதும் பாவாடை தாவணியுடன் சிரிக்கும் ஒரே பெண் இவள் தான். இன்று நேற்றல்ல... அவன் விடலைப்பருவத்தில் அரும்பு மீசை வளர தொடங்கும் பொழுதே சாதுர்யாவின் உருவத்தை மனதில் பச்சை குத்தி கொண்டு விட்டான். என்னதான் மனது அவள் சிறு பெண் பள்ளிக்கூடம் படித்துக் கொண்டிருக்கிறாள். தானும் சிறுவன்தான் என்றெல்லாம் நினைத்தால்கூட வேறு எந்தப் பெண்ணின் முகமும் அவனுக்குள் பதியவில்லை. மாலதி ஏதேதோ காரணங்கள் சொன்னபோது கூட அவன் கட்டப்பட்டிருந்தது தன் காதல் அவர்கள் இருவர் வாழ்க்கையில் விளையாடி விட கூடாது என்னும் எண்ணத்தில் தான்.புரியா வயதில் வந்த அந்த காதல், அவளுக்கு தன்னை புரியா விட்டால் என்ன செய்வது எனும் யோசனை, பெரியவர்களுக்கு முக்கியமாக அப்பாவுக்கு தெரிந்தால் எனும் பயம் என்று எத்தனையோ...
என்று அவன் கைகளில் அவள் பூத்தாளோ , அந்த நொடியே முடிவு செய்துவிட்டான் யாரும் அருகில் இல்லை என்றால் கூட அவளை தேவதை போல காப்பேன் என்று. பெரிய பெண்ணாகி அவள் முதன்முதலில் அணியும் ஆடை தான் வாங்கிக் கொடுப்பதாக இருக்க வேண்டும் என்று தான் அவசர அவசரமாக கடைக்கு சென்றான். அவளுக்கு அணிவிக்கவே நகைகள் வாங்கினான். அவளை காதலியாக அல்ல. மனையாளாக நினைக்க தொடங்கி பல மாதங்கள் ஆகிறது.பெண்ணும் புரிந்து கொண்டாள். மாலதி மாமியை நினைத்துதான் அவனுக்கு யோசனை. ஆனால், அதற்காகவெல்லாம் பெண்ணவளை
விட்டுக்கொடுக்க முடியாது.அதற்கு முதலில் படித்து முடித்தாக வேணும். என்னை மறுக்க அவர்களுக்கு காரணங்களும் வாய்ப்புகளும் தரக்கூடாது. மாமிக்கு மட்டும் இல்லை. என் அப்பாவும் பெண்ணை மறுக்க காரணம் இருக்கக்கூடாது பெண்ணே!என்று மனதில் நிச்சயம் செய்தவன் தெளிவுடன் ஸ்ரீ ரங்கம் சென்றான்.

தான் நினைப்பதை அவளுக்கும் புரிய வைக்கும் அவசரம் அவனுக்குள்.

கல்லூரி சென்றிருந்த பெண்ணுக்குள் ரங்கத்தான் தவிர ஒன்றும் புரியவில்லை. அவன் அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னை சென்றது மனச்சோர்வில் அவளை அழுத்தியது. அவன் வெளிநாடு சென்றபின் எப்படி சமாளிப்பேன் என்று தன்னையே கேட்டுக்கோண்டாள்.அத்தான் ஒப்புக்கொள்ள மறுத்தால் மாற்று வழி செல்வேன் என்ற தீர்மானம் அபத்தமாய் தோன்றியது. அவனின்றி நானா என மறுக தொடங்கிவிட்டாள்.
இவள் வருவதற்கு முன்பே பாட்டி வீட்டுக்கு வந்து விட்ட ரங்கன் தன் மன நிலையை மெல்ல பெரியவர்களுக்கு புரிய வைக்க முயன்றான். அவனுக்கு தான் செய்வது தவறாக இருந்தால் எனும் எண்ணம்.
அவன் சொல்ல சொல்ல பாட்டியும் தாத்தாவும் அர்த்தம் பொதிந்த புன்னகை பூத்தார்கள். இவ்வளவு தூரம் அவள் மீது ரங்கன் நேசம் வைத்திருக்கிறான் என்று தெரியாவிட்டாலும், அவர்கள் மனதிற்குள் ஒரு ஊகம் இருக்கத்தான் செய்தது.

பேரனை நினைத்து இருவரும் சிரித்துக் கொண்டார்கள். அவன் மனநிலை தெரிந்துதான் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்திருந்தார்கள் வீட்டுப் பெரியவர்கள்.
இவர்கள் இருவரும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் மாலதிக்கும் வெங்கடேசனுக்கும் மறுப்பதற்கு வழி கிடையாது.
தன் மனது செல்லும் பாதை சரியா தவறா என்று குழப்பத்தில் தவித்துக் கொண்டிருந்தான் ரங்கன்.
நா உங்க பாட்டிய கல்யாணம் செஞ்சுட்டு கொஞ்ச நாள் அவ அவங்கம்மா வீட்ல இருந்தா... அப்போ என் மனசு ஏதோ இழந்தா மாதிரி இருக்கும். அவ இங்க வந்த பிறகு அவளை பிரிய விட்டதில்ல. மூணு பிரசவமும் இங்க தான். நா டிரான்ஸ்பெர் ஆகி வெளியூர் போகும்போது கூடவே கூட்டிகிட்டு சுத்துவேன். அவளும் அலுத்தது இல்ல... என்று அவர் சொல்ல சொல்ல அவனுக்குள் ஏதோ நெகிழ்ந்தது.
'நா யு.எஸ் போயிட்டு வர வரைக்கும் அவளை பத்திரமா பாத்துக்கோங்க பாட்டி'என்றவனின் கண்கள் கலங்க,'அவ என்க பேத்தி டா 'என்று சிரித்தார் தாமோதரன்.

கல்லூரி முடிந்து வீடு வந்தவளை வீட்டின் அருகிருக்கும் காவிரி கரைக்கு அழைத்து சென்றான் ரங்கன். அவன் மீது கோவம் கொண்டிருக்கும் பாவை அவன் சொல்வதை புரிந்து கொள்வாளா?

***************************************************************************************

சங்கரன் சற்று ஒதுங்கி செல்வதை முதலில் புரிந்து கொள்ளாத ரத்னாவின் மனது நிதானமாய் அவனை கணக்கிட்டது. திருமணம் முடிந்து இங்கே வந்த பத்து நாட்களில் கல்லூரி
திறக்கப்பட, அங்கு பேசும் மலையாளம் அவளுக்கு புரிப்படவில்லை. வீட்டில் தாய்மொழி பேசப்பட்டாலும் அதில் தமிழ் மொழியின் ஆதிக்கம் அதிகம். சங்கரன் பேசும் மலையாளம் இவர்கள் வீட்டில் பேசுவது போல் இருக்கும். அது இவளுக்காகத்தான் என்பது இப்போது புரிந்தது.
முதலில் சற்றே அழுகை எட்டி பார்த்தாலும், வேறு வழி இல்லை. இனி இங்கு தான் என்று தேற்றிக்கொண்டாள். என் பெற்றோர் தமிழகம் வந்த போது அவர்களும் இப்படித்தான் பாவித்திருப்பார்கள் என யோசித்தாள்.

இப்போதெல்லாம் சங்கரன் வெளியூர் செல்வதில்லை. இரவுக்குள் வீடு திரும்பியும் விடுகிறான். சிறு பெண், இனி என் வாழ்நாள் முழுவதும் என் பொறுப்பு என்ற எண்ணம் அவனுள்.தன்னை முழு குடும்பஸ்தனாய் உணர்ந்தான்.

ரத்னாவுக்கு முப்பது நாட்களில் மலையாளம் புத்தகம் வாங்கிக்கொடுத்து தன்னால் முடிந்த நேரத்தில் கற்றுக்கொடுத்தான். முதலில் தமிழகம் சேர்ந்தவள், திருமணம் முடித்தவள் என்று நட்புகள் கிடைக்க கஷ்டம். பிறகு இவளின் அறிவுகூர்மை, எளிமை கண்டு சரியாகிவிட்டது.
ரத்னா இப்போது த்ரிசூர்வாசியாகிவிட்டாள். நடுவில் அம்மாவும் சாந்தாவும் அலைபேசியில் அழைப்பார்கள். நடுவில் உமா பற்றிய பேச்சின் பொழுது குருபரன் மாப்பிள்ளை இப்போதெல்லாம் சரியாகி விட்டார். உமாவை விட்டு நகர்வதில்லை. ஆனால், உமா ஏனோ இங்கு வருவதில்லை. பணம் வந்த பிறகு மாறிவிட்டது அவள் மனம் என்றாள் பாறுக்குட்டி. குரு வாராவிட்டாலும் உமா வரலாமே என்றது பெற்றவள் மனம்.

இரண்டு பெண்கள் திருமணம் முடிந்தபிறகு தங்கள் பெண்ணாக இங்கே வரவில்லை என்பது அவளை அவ்வாறு யோசிக்க வைக்கிறது.
ரத்னா இது போன்ற தருணங்களில் எதுவும் சொல்வதில்லை.

திருமணம் முடிந்த பெண்ணாக தோழியர் இவளிடம் அந்தரங்கம் பேச, நிஜமாகவே அதுபற்றி ஒன்றும் புரியாமல் நோக்கினாள் ரத்னா. ஆனால், அவளுக்குள் ஏதோ எதிர்பார்ப்பு. சங்கரன் மறந்தும் இவளை தொடுவதில்லை. திடீர்னு அத்தானுக்கு தன்னை பிடிக்காமல் போனதென்ன என்று ஏங்கினாள் ரத்னா.
இரவு இருவர் தனித்தனி பாய்தான்.
இரண்டோர் முறை அவனை தொட முயற்சி செய்தவளுக்கு அவன் இடம் அளித்தானில்லை. அவனது இந்த நடவடிக்கைகள் அவளுக்குள் ஏதேதோ குழப்பங்களை அவளுக்குள் விதைத்தது என்னவோ நிஜம்.
ஏறக்குறைய ஒரு வருடம் இவற்றை பொறுத்து கொண்டவளுக்கு பிறகு பொறுமை இல்லை. அவனிடம் வாய்விட்டு கேட்டே விட்டாள்.
' உங்களுக்கு நான்
தொடுவது பிடிக்கலையா, இல்ல இவனை கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டேன் என்று யோசிக்கிறீங்களா? கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க காட்டின காதல் இப்போ உங்களுக்கு என் மீது இல்லைனு எனக்கு தோணுது... என்று ஏதேதோ சொன்னவளுக்கு நிஜமாக தான் எதிர்பார்ப்பதை வாய்விட்டு சொல்லுவதற்கு வெட்கம் தடுத்தது.
ஆனால், மனைவி எதிர்பார்ப்பது என்ன என்பது அவள் கணவனுக்கு நன்றாகவே புரிந்தது. இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. சாதாரண கணவன்-மனைவிக்குள் இருக்கும் உறவு தான் அது. இது பற்றி தன் மனைவியிடம் முதலிலேயே பேசி இருக்க வேண்டுமோ என்ற தயக்கம் இப்போது சங்கரனுக்குள் வந்துவிட்டது. அவர் கேட்கும் அளவிற்கு விட்டு வைத்தது தவறு. இனி தான் என்ன சொன்னாலும் எடுபடாது என்பதுவும் புரிந்தது.
ஆனாலும், மனைவியிடம் இது பற்றி பேசாமல் ஒருதலைப்பட்சமாக தான் மட்டுமாக முடிவு எடுத்தது தவறு என்பதனையும் சங்கரன் உணர்ந்தே இருந்தான்.
லேசாக தொண்டையை கனைத்துக் கொண்டு « மனதை வருடும் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான். எப்பொழுதுமே அவன் அப்படித்தான்! அவன் பேசுவது ஆழமானதாக இருக்கும். லேசில் கோபம் வராது. இப்பொழுதும் அவன் குரலில் தேனுண்ட வண்டாக மயங்கிக் கிடந்தாள் ரத்னா.
" கவனி ரத்னா,இப்ப நீ ரொம்பவும் சின்ன பொண்ணு. இது உனக்கு படிக்கிற வயசு. இந்த நேரத்தில் வேற உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்தா படிப்பில் உனக்கு புத்தி குறைஞ்சிரும். நான் வெறும் பத்தாவது வகுப்பு தான். அதான் உன்னை தொல்லை செய்ய எனக்கு இஷ்டம் இல்ல...அத்தோட கரு தங்கினா அப்புறம் படிக்க ஒண்ணு பிடிக்காது, இல்லனா உடம்புக்கு முடியாது. பார்த்துக்கவும் இப்போதைக்கு யாரும் நமக்கு இல்லை. அதுதான், இந்த மூணு வருஷம் முடிஞ்சா உனக்கும் கொஞ்சம் பக்கம் வந்துடும். படிப்பு முடிச்சு ருவ... நம்ம உறவுகளும் சேர்ந்துரும்னு ஒரு நம்பிக்கை" என்று நீளமாக பேசியவனை ஏதோ பொருட்காட்சியில் இருக்கும் பொருளைப் பார்ப்பதுபோல் பார்த்தாள் ரத்னா. இவ்வளவு நல்லவனா டா நீ எனும் அர்த்தம் கொண்ட பார்வை அது. சங்கடமாக உணர்ந்த சங்கரன் தலை முடியை லேசாக கோதிக் கொண்டான். திடீரென்று தான் ஏதோ முட்டாள்தனமாக முடிவெடுத்துவிட்டாற் போல மனதில் ஒரு பதட்டம்.

ரத்னா மனதில் தனக்காக கனவு இவ்வளவு யோசிக்கிறார், இது காதலின்றி வேறில்லை என்ற தீர்மானம் வலுப்பெற, கூடவே கோபம் தலைக்கேற மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீங்க அத்தான். கல்யாணமான கணவன் மனைவிக்குள்ள இதுவும் ரொம்ப முக்கியம் தான்! இது வெறும் உடல் தேவை மட்டும் இல்ல அத்தான். ஒருத்தருக்கு ஒருத்தர் நான் இருப்பேன்ங்குற தைரியத்தையும், பரஸ்பரம் அன்பையும் நம்பிக்கையும் கூட்டுற கூடிய விஷயம் இது. வாய் மொழியை விட உடல் மொழி ரொம்ப பவர்ஃபுல்.குழந்தை பிறப்பைத் தள்ளிப் போட ஆயிரம் வழி இருக்கு. இதையெல்லாம் ஆம்பள உங்களுக்கு நான் சொல்லித் தர வேணாம்.

தன் உடல் தேவையை வாய்விட்டு கூறுவதால் ஆணோ பெண்ணோ தரம் இறங்கி விடுவது இல்லை. சொல்லாமல் மனதிற்குள் குடைவது உறவை சிக்கலாகிவிடும்.

அவள் பேச்சில், தனது தேவை என்ன என்பதையும், மனதளவிலும் உடல் அளவிலும் தான் தயாராக இருப்பதையும் தெளிவாக சொல்லிவிட்டாள். அவள் மனதிலோ தனக்காக தன் கணவன் மூன்று நெடிய வருஷங்கள் பிரம்மசரியம் கடைபிடிப்பது கூடாது எனும் தீர்மானம்!
ஒருவருக்கு ஒருவராய் ஆனபின் உடல் விலகியிருப்பது அவசியம் இல்லை தான்! சில சமயங்களில் இதுபோன்ற விலகல்கள் தேவையில்லாத சந்தேகத்தையும் குடும்பத்தில் குழப்பத்தையும் விளைவிக்க கூடும்.

ரத்னா சொல்வது சரிதான், திருமணம் செய்து கொண்ட பின்னர் உடல் தேவையை தீர்த்துக் கொள்வதில் தவறென்ன?
தாம்பத்திய உறவுக்கும் அவள் படிப்பதற்கும் என்ன சம்பந்தம்?

அவளுக்காக யோசித்த அவள் கணவன், மனைவி சொல்வதில் உள்ள ஞாயம் புரிந்தவனாக, வயதிற்கே உண்டான தேவை முன்னே நிற்க ' நான் மெடிக்கல் ஷாப் போயிட்டு வரேன் ரத்னா' என்றான்.

வெள்ளிக்கிழமை, பௌர்ணமி நிலவு சாட்சியாக முதன்முறை கணவன் தீண்ட அந்த பெண்ணின் மலர் மலர்ந்தது. முதன் முதலாக பெண் சுகம் என்ன என்று அந்த ஆண் மனைவியிடம் கற்றுக்கொண்டான். நிறைய தடுமாற்றங்கள். புரியாத அழகிய தவறுகள். அர்த்தம் இல்லா பிதற்றல்கள், அழகிய சங்கமம்!

பூங்குவளையில், ஒரு மலர் மஞ்சத்தில் கசங்கி, கணவனின் கைத்தேர்ந்த மன்மத கூர் அம்புகளால் கிழிப்பட்டு, சோர்ந்து உறக்கம். அது 'உறக்கமா' இல்லை 'மயக்கமா'என்று தெரியவில்லை. அவளை விட்டு அகலாத இரவுகள். மாதம் மூன்று நாட்கள்தான் அந்த மங்கைக்கு விடுப்பு.அவள் உமா.
 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
21

உமாவின் நாட்கள் கடந்த ஒரு வருடமாக இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. ஒரு நாளும் இடை விடா கணவன்.தன்னைப் பெற்றவளை பாதுகாப்பது முதல் கொண்டு செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தன்னை என்றும் விலக விடாமல் தன் மனதில் மேற்கொண்ட சத்தியத்தை இன்று வரை காப்பாற்றி வருகிறாள் அவள். எத்தனையோ பெண்களை காப்பாற்றுவதற்காக தன்னையே களபலி கொடுத்த பின்னும் அவளுக்கான கடமைகள் ஓய்வதாய் இல்லை.

காலையில் எழுந்தவுடன் உடல் தொய்ந்து விழுந்தாலும் கூட தனது அன்றாட வழக்கங்களை மாற்றிக்கொள்ளவில்லை. கொஞ்சநேரம் உடற்பயிற்சி நடைப்பயிற்சி மாமியாருடன் சேர்ந்து அவர் கற்றுத் தரும் நிர்வாகப்பயிற்சி, இரவு நேரம் முழுவதும் கணவனுக்கு மட்டுமாய். இவளின் அழகும் மிளிர்வும் கூடக்கூட குருபரன் இவளை இவளுக்குள் தேடும் நேரமும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

இப்போதெல்லாம் தனக்குள் இருக்கும் மொத்த சக்தியும் உறிஞ்சி எடுக்கப்படுவதாக உணர்கிறாள் உமா. தனிமையில் வரும் கண்ணீர் இன்னும் நிற்கவில்லை.
என்னை ஏன் இப்படிப்பட்ட காமுகனுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறீர்கள் என்று மனதில் தன் பெற்றோரையும் அவள் கேட்காத நாளே இல்லை. ஆனால் விடை தருவார் யார்? அவளுக்குள் ஆயாசமும் சலிப்பும். மற்ற பெண்களின் வாழ்க்கை போல் தன் வாழ்க்கையை தன்னால் அமைத்துக் கொள்ள முடியாது. திருமணத்திற்கு முன் அவளுக்கும் கல்யாணம் குழந்தை குடும்பம் என்று நீண்ட வரிசை கனவுகள் இருந்தது. இப்போதோ இருபதுநான்கு மணி நேரமும் கணவனை எப்படி தன் கட்டுப்பாட்டில் தக்க வைத்துக்கொள்வது என்று யோசனை ஆகிவிட்டது.
திருமணம் அன்று அவன் தன் அன்னையை பார்த்த பார்வையை இன்று நினைத்தால் கூட உமாவின் உடல் கூசுகிறது.அசல் துஷ்சாசனன் பார்வையது.இதிலிருந்து அவனுக்கு வயது வித்தியாசம், உறவு முறை இவை எல்லாம் ஒரு பொருட்டல்ல என்பதை தெள்ளதெளிவாய் தெரிந்து கொண்டாள் உமா.
பேருந்தில் யாராவது இடித்தாலே பொறுக்கி என்ற திட்டும் நாட்கள் போய், அவனுடனேயே குடித்தனம் செய்ய வேண்டிய நிர்பந்தம் வரும் என்று அவள் என்னாளும் நினைத்திருக்கவில்லை.


அன்னபூரணிக்கு தன் மருமகளின் நிலை புரிகிறது தான். ஆனால் அவரைப் பொறுத்தவரை மகன் வெளியில் சென்று இவ்வாறான விஷயங்களில் ஈடுபடாமல் (ஊர் மேயாமல்?) தன் மனைவியுடன் மட்டும் தன் அந்தரங்க விஷயங்களை முடித்துக் கொள்வது வரை அன்னப்பபூரணிக்கு திருப்திதான். அதனாலேயே மருமகளை அவள் ஒரு வார்த்தை சொல்வதில்லை. ஒரு பெண்ணாக தன் மருமகள் மீது அன்னபூரணிக்கு பரிதாபம் உண்டுதான். மறுப்பதற்கில்லை. ஆனால் அருணாச்சலம் -அன்னபுரணி அவர்கள் இருவரின் விருப்பு வெறுப்பு எல்லாமே குருபரனின் வாழ்க்கை சார்ந்தது மட்டுமே!
இன்று கால மாற்றத்தால் குருவின் செயல் குற்றமாக நம் கண்களுக்கு தெரிந்தாலும் இப்போதும் நான்கு குழந்தைகள் பெறும் பெண்கள் உண்டு. ஐம்பது வருஷங்களுக்கு முன்பெல்லாம் பதினாறு குழந்தைகள் பெற்று திண்டாடிய பெண்கள் நிலை? எத்தனை வீடுகளில் மாமியாருக்கு வீட்டு மருமகள் பிரசவம் பார்த்திருப்பாள்?
'கணவனின் ஆசைப்படி, அவர் மனம் கோணாமல் நடந்து கொள்'என்பது மட்டுமே அறிவுரை. எனில் பெண்ணவளின் மனம், மெய் ?
இப்போதும் உமா இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்று வர முடியுமா? பெண்கள் பலரது நிலை அப்படித்தான் இருக்கிறது.

அருணாசலத்திற்கு இவற்றையெல்லாம் கவனிக்க நேரமில்லை. அமைச்சரும் ஆகிவிட்ட பிறகு அவருக்கு இங்கு பூங்குவளையில் இருப்பதை விட சென்னையில் இருக்கும் நேரம்தான் அதிகரித்துவிட்டது. குருவை யோசித்துதான் இன்னும் இங்கேயே. நடுவில் கொஞ்சகாலம் சென்னைக்கு குடும்பத்தை மாற்றியவருக்கு குருவின் செய்கைகள், அத்துமீரல்கள் பிடிக்கவில்லை. திரும்ப இங்கே வந்தாயிற்று.ஆனால் என்றாயினும் சென்னை அவர்களை இழுத்துக்கொள்ளும். சிவன் குடும்பம் சென்னையில் தங்கி விட்டது. சாந்தா படிக்கிறாள்.
சொந்த மண்ணில் இருந்தாலும் கூட அருணாச்சலத்தால் மகனின் அந்தரங்க விஷயங்களில் எல்லாம் தலையிட்டு கருத்து சொல்ல முடியாது. மருமகளுக்கு ஆறுதல் சொல்லும் நிலையிலும் அவர் இல்லை. அருணாச்சலத்தின் மனதளவில் தன் மனைவி சந்தோஷமாக இருப்பது மட்டுமே பிரதானம்.


சிவம் இங்கு வேலை செய்து கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். தன் மகளின் கண்களில் காணப்படும் சோர்வு அவருக்கு உள்ளூர குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது. அதனாலேயே அருணாச்சலத்துடனேயே அவரது பயணம்.
குருபரன் என்ன செய்து கொண்டிருக்கிறான்,தன் மகளுடன் ஒழுங்காக இருக்கிறானா என்று கண்காணிக்கும் வேலை வேறு இப்போது சிவத்திற்கு கூடி விட்டது. சாந்தா இப்பொழுது பத்தாம் வகுப்பு படிக்கிறாள். அவளை மேற்கொண்டு படிக்க வைக்க வேண்டும்.
அதைப்போல உமாவும் வேலையை விட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாள். இதுபோன்ற விஷயங்கள் இராமல் இருந்திருந்தால் சிவன் என்றோ வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்திருப்பார். அவரால் தன் மூத்த மகளை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.


காலம் மிக வேகமாக பயணம் செய்கிறது. இதோ அதோ என்று உமாவுக்கும் சரி ரத்னாவுக்கும் சரி திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது.
இன்னும் இரண்டு மாதங்களில் ரத்னா தனது இளநிலை பட்டப் படிப்பை முடித்து விடுவாள். இத்தனை வருடங்களில் சங்கரன் மீதான காதல் அவளுக்கு வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. சங்கரன் போன்ற கணவன் கிடைக்கத் 'தான்' நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று அவள் நினைக்காத நாளே இல்லை. அவர்களது உறவு இயற்கையிலேயே அவ்வளவு கச்சிதமாக பொருந்தி விட்டது.
திலகா விற்கு தன் அண்ணன் மகள் மீது கோபம் இருந்தாலும் கூட இப்போதெல்லாம் இவர்கள் வீட்டிற்கு வந்து உறவாடி விட்டு செல்கிறாள். அவள் எப்போது வந்தாலும் அவளுடன் சங்கரனின் தங்கையும் வருகிறாள். அவளுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்ப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க ரத்னாவும் சரி சங்கரனும் சரி தயாராக இல்லை. உறவுகள் இன்றி தன்னந்தனியாக இருப்பது அவர்கள் இருவருக்குமே கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்னதான் திருமணம் முடிந்து விட்டாலும் இருவருமே பக்குவம் போதாத சிறுவயதினர்தான். அதனால் உறவு என்று வருபவர்களை இரு கைகள் நீட்டி அணைத்துக் கொள்ளவே இருவரும் விரும்புகிறார்கள். திலகாவின் வார்த்தைகள் பல சமயங்களில் விஷம் தடவிய கூர் ஆயுதமாக தாக்கினாலும் கூட ஏதோ ஒரு வகையில் அவள் வருவது ஆறுதல் அளிக்க இருவரும் அவளுக்கு பணிந்து செல்ல தொடங்கினார்கள். இதனாலேயே எல்லாம் திலகா தன் கோபத்தை மறப்பதாக இல்லை. தங்கைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது சங்கரனின் கடமை. எங்கே தான் இங்கே வந்து செல்லாவிட்டால் தன் கடமையை உதறிவிட்டு விடுவானோ மகன் என்ற யோசனையில் தான் அவள் இங்கு வந்து செல்வதே! திலகாவை பொருத்தவரைக்கும் சங்கரன் தேவைதான். அவன் சம்பாதிக்கும் பணம் அவனை விடப் பெரியது. ஆனால், ரத்னா... அவள்மீது தீராத வன்மம் கொண்டார்கள் திலகாவின் குடும்பத்தினர். ஏதாவது ஒரு சந்தர்ப்பம் வாய்க்குமானால், ரத்னாவின் நிலை சொல்லுவதற்கில்லை.

குழந்தை பேறு பற்றிய பேச்சுகள் இரு இடங்களிலும் தொடங்கி விட்டது. அன்னத்தின் கண்களில் எதிர்பார்ப்பு அப்பட்டமாய் தெரிந்தாலும் அவற்றை எல்லாம் லட்சியம் செய்யும் நிலையிலும் உமா இல்லை.

அவள் மனதில் இரண்டு விஷயங்கள் ஒன்று குழந்தை பிறக்கும் சமயம் குரு கைமீறி போய்விடக்கூடும் என்ற பயம். மற்றொன்று இவனைப் போல ஒரு குழந்தை பிறந்து விட்டால் என்ன செய்வது என்ற தயக்கம். இவனுக்கு அப்பா ஆகும் தகுதி இல்லை என்று அவள் தீர்க்கமாய் நம்பினாள். இதையெல்லாம் வாய் விட்டு சொல்ல அவளால் இயலவில்லை. குழந்தை பிறக்காமல் இருப்பதற்காக மூன்று வருடங்களாய் அவள் மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறாள். இது அவளுக்கு மருத்துவருக்கும் உண்டான ரகசியம். உனக்கு குரு மீது ஒரு சதவிகிதம் கூட நம்பிக்கை வரவில்லை.

இங்கு திருச்சூரில், திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகியும் இன்னும் ஒரு புழு பூச்சி கூட வழி இல்லை என்று ரத்னாவின் மாமியார் அவளை ஏளனம் செய்ய ஆரம்பித்துவிட்டாள். இவ்வாறு திலகா பேசும்போதெல்லாம் ரத்னா அமைதியாகி விடுவாள். குழந்தை போது வேண்டாம் என்பது சங்கரன் எடுத்த முடிவு. அதற்காக முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருப்பவனும் அவனே. என்று குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஒரு விரும்புகிறானோ அப்பொழுது அவனது தடைகளை தூக்கி எறிந்துவிட போகிறான். இவற்றையெல்லாம் திலகாவின் முன் கடை விரிக்க ரத்னாவுக்கு இஷ்டமில்லை. அவளது படிப்பு முடிந்து விட்டது. இனி சங்கரன் தான் யோசிக்க வேண்டும். குழந்தை பெற்றுக்கொள்வது அவர்கள் இருவரின் தனிப்பட்ட, அந்தரங்க விஷயம் என்று ரத்னா நினைத்தனாலயே இதைப்பற்றி வேறு யாரிடமும் எதுவும் பேசவில்லை.
மாமியாரிடம் இதை பற்றி நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் என்று ஒரு நொடியில் அவள் கூறி விடுவாள் தான். சங்கரன் இதனால் மனம் சுணங்கு வானோ என்று வாளா இருக்கிறாள். அத்தோடு தன் மகன் முன் இதையெல்லாம் பேசும் தைரியம் திலகத்திற்கு கிடையாது. ஒருவேளை மகன் நேரடியாகவே சொல்லி விடக் கூடும் என்று வராதீர்கள் என்று. திலகத்தின் கணவர் இன்னும் தன் நிலையில் இருந்து இறங்கி வரவில்லை. சிவனுக்கு தன் தங்கையின் மகன் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக மனதில் ஒரு சுணக்கம் அதனால் அவரும் தன் மகளுடனோ தன் மருமகனுடனோ எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை.

நிதானமாக ரத்னா தன் கணவனிடம் குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி பேச தொடங்கினாள். அதுவும் அவன் இளகி இருக்கும் கூடலின் சமயத்தில்.

'யோசிக்கிறேன் ரத்னா'என்றவனுக்கு யோசிக்க எந்த தயக்கமும் இல்லை போலும்! தடை சாதனத்தை அப்போதே நீக்கிவிட்டான். குழந்தை பெற்றுக் கொள்வதற்கான முயற்சி அந்த நிமிடத்தில் இருந்து அவர்களுக்குள் தொடங்கியது. தடையற்ற முதல் கூடல். என்றும் போல் சந்தோஷமாகவே அவனது ஆசைகளுக்கு இடம் அளித்தாள் பெண். அவளது பிதற்றல்களை சங்கீதம் என ரசித்து அவளை சந்தோஷத்தின் உச்சியில் நிறுத்திகொண்டாடினான் சங்கரன்.

மத்திய அரசு வேலைகளுக்கான தேர்வுகள் எழுத தொடங்கி இருந்தாள் ரத்னா. சங்கரனின் தொழிலிலும் ஏற்றம் தான். மேலும் வருடம் ஒன்று கடந்த பிறகும் கூட ரத்னா கரு தரிக்கவில்லை. இருவரும் மருத்துவரிடம் சென்று காண்பிக்க, குழந்தை பிறப்பில் எந்த பிரச்சனையும் இல்லை தானே நிகழும். அதுவரை காத்திருங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார் மருத்துவர்.

வயது அதிகம் இல்லை என்பதால் இருவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ரத்னாவுக்கு அவள் விரும்பியபடி பணி கிடைத்துவிட அவர்களின் வாழ்வு மிகவும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது. ரத்னாவும் பகல் பொழுதுகளில் வேலைக்கு சென்று விடுவதால் அவளை கொம்பு சீவி விடும் வாய்ப்புகள் திலகாவுக்கும் அவள் மகளுக்கும் கிடைக்கவில்லை. சங்கரன் எதிரில் ரத்னாவை பேசும் தைரியம் யாருக்கும் இல்லை.

இங்கு, கட்சியில் மேல் இடத்துடன் ஏற்பட்ட உரசலால் அருணாச்சலம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்தும் தன்னை தனியாக பிரித்து தனிக்கட்சி தொடங்கி விட்டார். கட்சியின் பாதி ஆதரவாளர்கள் இவர்களது கட்சியில் சேர்ந்து கொண்டு விட்டார்கள். வரும் தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனியாகவே போட்டியிடுவது என்றும் திட்டவட்டமாக முடிவு செய்துவிட்டார் அருணாச்சலம். கட்சியை மேலும் விஸ்தரிப்பது சம்பந்தமாக அருணாசலத்திற்கு வேலை கூடிப்போய் விட்டது. சிவனும் தீரனும் இருபத்தி நான்கு மணி நேரமும் அவருடனேயே தங்கினார்கள். பழைய கட்சியின் விசுவாசி ஒருமுறை அருணாசலத்தை கத்தியால் வயிற்றில் குத்த வர, தீரன் இடையிட்டு அந்த கத்திகுத்தை தனதாக்கிக் கொண்டான்

வீரனை மருத்துவமனையில் சேர்த்து இருப்பதை செய்தி மூலமாக தெரிந்துகொண்ட ராகாயிக்கு அவனுடன் இருந்த அவனுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க மனம் ஏங்கியது. கொள்ளை நோயில் தீரன் தனது மனைவியையும் மகளையும் இழந்து பல வருடங்கள் ஆயிற்று. இன்று அவன் யாருமற்ற அனாதை தான். தான் போனால் அது சரியாக வராது என்று புரிந்த ராக்காயி கண்ணீரில் அவனுக்கு மருந்து இட முற்பட்டாள். பத்து வயது நிரம்பியதான ராகாயியின் மகள் தன் தாய் அழுவதை பார்த்து தானும் அழுதாள். ராக்காயி மனதில் காதல் இன்னும் அழியவில்லை. தொழில் மாறினாலும் பெண்ணின் மனம் மாறுமா?

திருச்சியிலிருந்து பெங்களூரு செல்லும் வழியில் தன் அப்பாவுக்கு தெரியாமல் கஞ்சா தோட்டம் வாங்கி போட்டிருக்கிறான் குரு. அடிக்கடி அங்கே போவது அவன் வழமையே. அப்படி செல்லும் தருணங்களில் அங்குள்ள தனது சகாக்களுடன் மது அருந்திவிட்டு சீட்டு ஆடுவதும், பெண்களை வரச் சொல்லி குத்தாட்டம் போடுவதும் அவர்களின் பொழுது போக்கு. உமாவை கலியாணம் முடித்த பிறகு மங்கையர் சகவாசம் மட்டும் தாற்காலிக விடுமுறை எடுத்து சென்றுள்ளது.
இந்தமுறை தன் தனி தோட்டம் வந்த பொழுது அரை போதையுடன் சீட்டாடிகொண்டிருக்கும் பொழுது....



 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
எபி 22

திருச்சியில் இருந்து பெங்களூர் செல்லும் வழியில் குருபரனுக்கு சொந்தமாக கஞ்சா தோட்டம் இருக்கிறது. அங்கே செல்லும் போதெல்லாம் நண்பர்களுடன் கூடிக் குலாவும் அந்த நேரம் குருவுக்கு மிகவும் பிடித்தமானது.
ஒருவரோடு ஒருவர் குடிப்போதை பாதி ஏறியும் பாதி சுய புத்தியுமாய் சீட்டு ஆட உட்கார்ந்து கொண்டும் பேசிக் கொண்டும் ஒரு கலவையான நிகழ்வுகள் அங்கே.
அங்கே பேசிக் கொள்வது அவரவருக்கு ஒன்றும் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் உணர்வுகள் தங்கள் எல்லைகளை மீறி ஒருவித பிரயாணம். மிஞ்சிப்போனால் ஆறு பேர் அங்கு அமர்ந்து இருக்கலாம். சீட்டு மும்முரத்தில், ஒருவன் வென்று விட மற்ற ஐவரும்,அவன் மீது பாய திரும்பவும் அந்த ஆட்டத்தை கலைத்து இன்னொரு ஆட்டம். இந்த அழகில் குருவின் இன்னொரு நண்பன் இரண்டு பெண்களுடன் அங்கு வந்து சேர்ந்தான். குரு முழுதாக என்றுமே திருந்த போவதில்லை. அதில் இந்த கதையை வாசிப்பவர்களுக்கு என்றுமே சந்தேகம் வேண்டாம். அவன் என்றும் அக்மார்க் ****தான். ஆனால் உமாவை திருமணம் செய்தபின்னர் ஒரு சிறு மாற்றம். அங்கு ஊரில் இருக்கும்போது வேறு எந்த பெண்களையும் நாடிச் செல்வதில்லை. அதைப் போல் இங்கு வந்தாலும்கூட எல்லா நேரங்களிலும் பெண்களுடன் சல்லாபம் என்பதை மாற்றிக் கொண்டிருக்கிறான். ஏனோ எல்லா பெண்களிடமும் அவன் மனம் உமாவைதான் தேடுகிறது. அதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
' பெண்களை கூட்டி வந்த நண்பன் முதல் சாய்ஸ் குருவுக்கு தான். குரு எந்த பெண்ணை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று சொல்ல குரு இன்று எனக்கு மூடு இல்லை என்று மறுத்து விட்டான். அவன் சொன்னதைக் கேட்டதும் போதையில் மற்றும் நண்பர்கள் அவனை கலாய்க்க தொடங்க, பெண்களை கூட்டி வந்த நண்பனும் இதில் சேர்ந்துகொண்டு பேச, பேச்சின்போது ஒரு நண்பனின் பேச்சு ,திருமணம் முடிந்து நான்கு வருடங்களாகியும் குருவால் 'ஒரே ஒரு குழந்தையைக் கூட பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதில் வந்து நின்றது. இன்னொரு நண்பன், குருவுக்கு ஒருவேளை பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்குத் தான் தகுதி இருக்கோ?குழந்தை பெற்றுக்கொள்வதற்கு தகுதி இல்லையோ... என்று சிரித்துக்கொண்டே நக்கலடிக்க குருவின் குரங்கு மனம் அவர்கள் பேச்சில் இன்னும் எரிச்சல் அடைந்தது. கோபத்தை அடக்கமுடியாமல் கையிலிருந்த சீட்டுகளை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு, தன் அருகில் இருந்த பாட்டிலிலிருந்து முழுவதுமாக தன் வாய்க்குள் சரித்துக் கொண்டான். வந்திருந்த இரு பெண்களும் அவனுடன் இருக்க தயாராக, அவளில் ஒருத்தியை அணைத்துக்கொண்டு அங்கிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான். ஏனோ நண்பர்களுடன் சண்டையிட்டால் தன் பக்கம் இன்னும் கீழ் சாய்ந்து விடும் என்று நினைத்தானோ என்னவோ அவர்களுடன் மேலும் பேச்சை வளர்க்க அவனுக்கு இஷ்டமில்லை. ஆனால் திருமணம் ஆகி நான்கரை வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் ஏன் மனைவி கருதரிக்கவில்லை என்னும் கேள்வி அவனை யோசனையில்
ஆழ்த்தியது.ஒரு வேளை நண்பர்கள் சொல்லுவது போல்... அவனுக்கு குழந்தை பெற தகுதி இல்லையோ எனும் சந்தேகம் அவனுக்கே வந்துவிட்டது.

உடன் வந்த பெண்ணுடன் மனசு லயிக்காமல் அவளுடன் பாதியிலேயே விட்டுவிட்டு தன் சட்டைப்பையில் இருந்த பணத்தை அவள் கையில் திணித்து விட்டான்.
நீ இதுக்கு கூட லாயக்கு இல்லையா என்ற ஒரு பார்வை அவளிடமிருந்து வருவதுபோல் இவனுக்கு ஒரு மாயத்தோற்றம். மறுநாள் விடிகாலையிலேயே நண்பர்கள் ஒருவருடனும் எதுவும் பேசிக் கொள்ளாமல் தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான். போதை இன்னும் முழுதாய் தெளியவில்லை. ஆனாலும் அவன் இங்கு வரும் நேரமெல்லாம் டிரைவரை கூட்டிக்கொண்டு வர மாட்டான். தானே தான் காரை ஓட்டிக்கொண்டு வருவான். அதனால் திரும்பி செல்வதும் அவனே தான் சென்றாக வேண்டும் எனும் நிலை. விடிகாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லாததால் அவன் கைகளில் கார் பறந்தது. நடுவில் இரண்டு முறை போலீசில் மாட்டினான். தன் அப்பாவின் பெயர் சொன்னதும் அவனை போலீஸ்காரர்கள் நீங்க போங்க சார் என்று மரியாதையாய் அனுப்பிவைக்க தன் அப்பா தனியாய் கட்சி ஆரம்பித்ததுமே இவ்வளவு மரியாதை இருக்கிறதே, இன்னும் அவர் முதலமைச்சர் ஆனால் எப்படி இருக்கும் என்று அவனுக்குள் ஒரு சில கணக்குகள். கனவிலேயே அவ்வளவு சந்தோஷம் அவனுக்குள். பணம்- சொத்து- ஆட்சி- அதிகாரம் இவை சேர சேர ஏறும் போதை எத்தனை சரக்கு உள்ளே சென்றாலும் வரப்போவது இல்லை என்று நினைத்துக்கொண்டான் குரூ. ஒருவிதத்தில் அதுவும் நிஜம்தான்!

நேரே பூங்குவளை வீட்டுக்கு வந்தவன் வீட்டில் யாரும் இல்லாததை கண்டு, தங்கள் தனி அறையில் மனைவியை தேடிக்கொண்டு சென்றான். அவளோ, தனக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு இருந்த ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தாள். என்றுமே அவனை நகர விடாமல் செய்யும் அவளது வடிவழகு இன்று ஏனோ வேலை செய்யவில்லை. அவளிடம் இன்றைய குழந்தை பற்றிய பேச்சுக்களை முடித்து விட வேண்டும் என்ற துடிப்பு குருவிடம். கணவனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்த உமாவுக்கு அவன் தோற்றம் சிறு யோசனையை கொடுத்தது. நீங்க குளிச்சிட்டு வாங்க. நான் காபி டிபன் எடுத்து வைக்கிறேன் என்றுவிட்டு ஜிம்மிலேயே தனியாக இருந்த அவளது பாத்ரூமிற்குள் தன்னை நுழைத்துக் கொண்டாள். அவன் எதை பேச காத்துக் கொண்டிருக்கிறான் என்பது சுத்தமாக தெரியவில்லை. ஆனால் உமாவின் மனமோ படபடவென்று அடித்துக்கொண்டது. ஏதோ மீள முடியாத சூழலில் சிக்கப் போவது போன்ற உணர்வு. மிகவும் தவித்துப் போனாள். அன்னபூரணியோ தன் மகனுக்கு சீக்கிரம் புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று கோவிலில் தொட்டில் கட்டி விட்டு வருகிறேன் என்று சென்றிருக்கிறாள்.
இதை எல்லாம் நினைத்து உமாவுக்கு உள்ளூர உதறல் தான். வெளியே காண்பித்து கொள்ள விருப்பம் இல்லை அவளுக்கு. இவள் சொன்னபடிக்கு குருவும் தங்களது அறைக்கு சென்று குளித்துவிட்டு தயாராகி வந்தான். அவனுக்கும் கொஞ்சம் மனதை சமப்படுத்திக் கொள்ள நேரம் தேவைப்பட்டது. நண்பர்கள் எவ்வளவுதான் இழிவாக கிண்டல் பண்ணினாலும் கூட அவற்றையெல்லாம் அப்படியே தூக்கி மனைவி மீது சுமத்த அவனுக்கு இஷ்டமில்லை. அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்பது முதலில் தெரிய வேண்டும். ஒருவேளை அவளுக்கு குழந்தை மீது விருப்பம் என்றால் இருவருமாக முதலில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இதற்கு மேல் காலத்தை தள்ளிப் போடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. குருவை பொருத்தவரை பேர் சொல்லும் பிள்ளை என்றெல்லாம் அவனுக்கு பெரிதாக ஈடுபாடு இல்லை. தான் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை ஆள்வதற்கு வாரிசு வேண்டும் என்ற எண்ணம்.. ம்ஹும் அதுவும் இல்லை. ஆனால் தான் 'ஆண்தான்' என்பதற்கு சாட்சி சொல்ல பிள்ளை வேண்டும். மற்றபடிக்கு அவனுக்கு இந்த நிலையே பிடித்துதான் இருக்கிறது. எந்த தொல்லையும் இல்லை. விருப்ப நேரத்திற்கு மனைவி. அவனைப் பொறுத்தவரை மது எப்படியோ, கஞ்சா எப்படியோ, பிற பெண்கள் எப்படியோ அப்படித்தான் உமாவும். "போதை தரும் பேதை" ஆனால் உமா மட்டுமே அவனுக்கே அவனுக்கானவள்.
இதுநாள்வரை அவன் பிள்ளை பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. வாழ்க்கை அவன் எண்ண போக்கிற்கு தகுந்தபடி சிறு கற்கள் கூட இல்லாமல் பதவிசாகதான் சென்று கொண்டிருக்கிறது. பணம் -காசு ஆடம்பர வாழ்வு எதற்கும் குறைவில்லை. இன்று மற்றவர்கள் கைநீட்டி கேள்வி கேட்கும் வரை குழந்தை இல்லாததின் ஆழத்தைப் பற்றிய சிந்தனை எல்லாம் அவனுக்கு கிடையாது. இப்போது நிலையே வேறு. என்னதான் நண்பர்கள் குடிபோதையில் பேசியிருந்தாலும் மற்றவர்களும் இதே போல் தான் இவனுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லை என்று பேசிக்கொண்டிருப்பார்கள்இன்னும் கால தாமதப்படுத்தி தனது ஆண்மையை பற்றி கேள்விகள் எழுவது அவனைப் பொறுத்த வரைக்கும் பெரிய அடி. தட்டில் இட்லியை வைத்துக்கொண்டு இருந்தாள் உமா. அவளை வெறித்து பார்த்துக் கொண்டே குருவின் சிந்தனைகள் இவ்வாறாக சென்று கொண்டிருந்தது. கைகள் தாமாகவே இட்லியை விண்டு வாயில் போட்டுக்கொண்டது. குருவின் ஆழ்ந்த மௌனம் உமாவுக்கு பயத்தை கொடுத்தது . திருமணம் முடிந்து இத்தனை வருடங்களில் மௌனியாய் ஒருநாளும் இருந்ததில்லை. வீட்டின் நடு கூடம் என்றும் கூட பார்க்காமல், கூடத்திலேயே அவளிடம் சீண்டல்களை தொடர்ந்து கொண்டிருப்பான். குரு சாப்பாட்டு கூடத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவன் பெற்றோர் கூட கூடத்திற்குள் வரமாட்டார்கள்.அவனது நடவடிக்கைகள்...தானும் லஜ்ஜையற்று நடந்துகொண்டு
உமாவையும் சேர்த்து தரம் இறக்கி காட்டி விடுவான்.ஆனால் இன்று நிலைமை முற்றிலும் வேறாக இருக்கிறது. ஆனால் உமாவால் நிம்மதி அடைய முடியவில்லை.

ஒருவழியாக சாப்பிட்டு முடித்து உமாவை கூட்டிக்கொண்டு தங்களது அறைக்குள் சென்றவன், நேராகவே' நாம குழந்தை பெத்துக்கலாம் உமா என்றான்'. எந்த பீடிகையும் அலங்கார வார்த்தைகளும் , கொஞ்சல்களும் அதில் இல்லை. அதைவிட அவளிடம் அபிப்ராயம் கேட்கும் குரல் தொனியும் இல்லை. அதிர்ச்சி அதிகமாகி உறைநிலை எட்டியிருந்தாள் பெண். கணவனின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. வீட்டில் உள்ள அன்னபூரணி முதல் அவளை சுற்றியுள்ள தெரிந்தவர்கள் எல்லோரும் கேட்பது தான். எல்லோருக்கும் சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவாள். இப்போது கணவனை எவ்வாறு சமாளிப்பது?
அவனையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள் உமா. அவளுக்கு வாயில் வார்த்தைகள் வரிசை கட்டிக் கொண்டு காத்திருக்கிறது. ஆனால் சொல்லத்தான் முடியாது. உள்ளூர ஒரு ஆசை உண்டு அவளுக்கு. அது 'உன்னை மாதிரி பொறுக்கிக்கு, ரவுடிக்கு குழந்தை பெத்து தரது ஒரு கேடா 'என்று கேட்க வேண்டுமென. கேட்க முடியாமல் தான் இத்தனை வருஷங்களாக அவள் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொண்டாள்.
நேரடியாக அவன் கேள்வியை மறுக்க இயலாமல் 'நாம நல்லா தானே இருக்கோம் டார்லிங்... இப்போ என்ன அவசரம்? குழந்தை பிறந்தா உடம்பு அழகு குறைஞ்சு போய்டும். ஸோ கொஞ்ச வருஷங்கள் ஆகட்டுமே 'என்று கிள்ளை மொழியில் கொஞ்சி பேச, அவனோ அவளது குரலும் உடல் மொழியும் கூறும் செய்தியில் மயங்கினான். முதல் நாள் அந்த பெண்ணிடம் தேடியதை இங்கே தொடர்ந்தான். கூடலின் முடிவில் அவனுக்கு நிறைவுக்கு பதிலாக நண்பர்களின் கிண்டல் ஞாபகம் வர, ஒரு பிடிவாதத்துடன் 'நாம இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள குழந்தை பெத்துக்கணும் உமா. உன்னால முடியாதுன்னா முதல்ல டாக்டர பாப்போம். இன்னும் தள்ளி போனா நா உன்ன தள்ளி வச்சிட்டு இன்னொரு கல்யாணம் செஞ்சுக்குவேன். ஹாங்... கவலை படாதே, வேற எவ வந்தாலும் கூட உன்கிட்டயும் வந்து போக இருப்பேன் 'என்றவனை கண்டு அவளுக்கு உள்ளே அருவருப்பு. அவன் சொன்ன கடைசி வார்த்தை... கடவுளே!எனக்கு ஏன் இப்படி ஒரு கல்யாண வாழ்க்கை என்று மருகினாள்.

மனைவிக்கு குழந்தை பெறுவதில் விருப்பம் இல்லை என புரிந்துகொண்டான் குரு.

மனதை தேற்றிகொண்டு அடுத்த நாளே பெண் மருத்துவரை அணுகி, குழந்தை பிறக்க தேவையான விஷயங்களை கேட்டாறிந்தாள் உமா . குழந்தை என்ன கத்தரிக்காயா கேட்டவுடன் கிடைக்க?
அடுத்த அவளது மாதந்திர நாட்களில் வெளிப்படையாகவே தனது கோவம் ஆத்திரம் எல்லாவற்றையும் அவள் மீது இறக்க தொடங்கிவிட்டான் குரு. அவனது இந்த முகத்தையும், குழந்தை பெற்றுக் கொள்வதில் இருக்கும் தீவிரத்தையும் கண்டு அதிர்ச்சி அடைந்தாள் உமா. கணவனின் இந்த பரிமாணம் அவளுக்கு புதியது. அவனுக்குள் இருக்கும் வேறு ஒரு நபர் பார்க்கும் குருவை விட கொடூரமானவன் என்று அவளுக்கு புரிந்தது. ஒவ்வொரு மாதமும் இதுவே தொடர்கதையாக குறிப்பிட்ட ஒரு வருடத்திற்குள் குழந்தை இல்லை என்றால் மறுமணம் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் அவன். தன் மனைவியின் மீது இருந்த மோகத்தை விட தனது சுய கவுரவம் முக்கியம் என்பது போல அவன் நடத்தை.

இன்னொருபுறம் அருணாச்சலம் சென்னையில், மிகத் தீவிரமாக தனது கட்சியை முன்னேற்றுவதில் ஈடுபட்டிருந்தார். தேர்தலில் எப்படியும் முதலமைச்சர் பதவியை பெறுவது அவரது நோக்கமாக இருந்தது. அதற்கு தகுந்தாற் போல அவர் போகும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் அவருக்கு நம்பிக்கை கொடுத்தது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே என்ற நிலையில் வெகு அபூர்வமாக சிவனையும் கூட்டிக்கொண்டு வீரம் துணையுடன் தன் மனைவியை சந்திக்க பூங்குவளை வந்தார் அருணாச்சலம். மனைவி யை விட்டுவிட்டு தனியாக சென்னையில் இருப்பது அவருக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. என்னதான் வயதாகி விட்டாலும் தனக்கான துணை தனது மனைவி தான் என்று தீர்மானம் என்றுமே ஒரு உண்டு.

குரு கொடுத்த நேரப்படி பன்னிரெண்டு மாதங்களில், இப்போது பதினோராவது மாதம். குரு சொன்னதை செய்து விடுவானோ என்ற பயம் உமாவை ஆட்டிப்படைத்தது. சிவனிடம் அவள் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனாலும் அவளது முகத்தைப் பார்த்து ஜீவன் வெகுவாக கவலை அடைந்தார். சாந்தா இப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில் சேர்ந்து விட்டாள். அந்த தகவல்களை தன் மகளுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பது சிவனின் விருப்பமாக இருந்தாலும் கூட உண்மை இவற்றைப் பற்றியெல்லாம் கேட்டுக் கொள்ளும் நிலையில் இல்லை. அவளைப் பொருத்தவரை சிவன் எந்த வீட்டில் வேலை செய்யும் கணக்குப்பிள்ளை மட்டுமே. இப்படிப்பட்ட ஒருவனுக்கு தெரிந்தே தண்ணி திருமணம் முடித்து வைத்த தந்தை பற்றி அவளுக்கு மரியாதை விட்டுப் போயிற்று. அதனால் தந்தையையும் தாயையும் தூர நிறுத்திய பழகிக் கொண்டாள்.

ஒருவழியாக, தேர்தல் நாள் வர, அருணாச்சலம் தன் தொகுதியில் மீண்டும் எம் எல் ஏ வாக நிற்க, வீட்டிலோ உமா மயங்கி விழுந்து இருந்தாள்.

உமா மீண்டும் எழுந்து கொள்வாளா?









 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
23

மயங்கி விழுந்தவளை தன் கைகளில் தாங்கி கொண்டான் குருபரன். அவன் மனதிற்குள் இந்த முறை நிச்சயம் மனைவி கரு தரித்து இருக்கலாம் என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. அருணாச்சலம் தனது அலுவலக அறைக்குள்ளேயே தான் இருந்தார். வெளியே வாக்கு பதிவு நடந்து கொண்டிருந்ததால், தன் வீட்டிற்குள் இருந்தவருக்கு நிஜமாலுமே டென்ஷன்தான். புதிதாக கட்சி தொடங்கி தனியாக தேர்தலில் களம் காண்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் அவர் கட்சி தொடங்கி வெறும் இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. இந்த முறை அவர் பெறும் வாக்குகள் தான் அவரது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தலையெழுத்து. அது அவருக்கு புரிந்தது,
அதனாளேயே பதட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் மருமகளும் மயங்கி விழுந்தது அவருக்கு ஏதோ ஒரு விதத்தில் பயத்தை உண்டு பண்ணியது. உடனடியாக குருவை அழைத்து,' உன் பொண்டாட்டிய கூட்டிட்டு லேடி டாக்டர்கிட்ட போயிட்டு வந்துடு குரு என்றார்.
அன்னபூரணிக்கு தன் மகனுடன் மருமகளை மருத்துவ மனைக்கு கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசைதான். ஆனால், கணவர் தனியாக வீட்டில் இருப்பார் என்ற எண்ணத்தினால் குருவை கிளம்ப சொல்ல, அங்கே கூடத்தின் ஒரு ஓரத்தில் தனக்கு தன் மகளுடன் எந்த சொந்தமும் இல்லை என்ற மன வருத்தம் முகத்தில் தெரிய கைகளை பிசைந்துகொண்டு நின்றுகொண்டிருந்தார் சிவம். அன்னபூரணியோ மருமகள் உமா தனது தந்தையிடம் நடந்து கொள்ளும் முறையை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். இத்தனை வருடங்களில் தனது மருமகளின் இந்த முகம் அவருக்கு வித்தியாசமாக தோன்றியது உண்டு. இத்தனை வருடங்கள் ஒருவராலும் மனதில் உள்ள வெறுப்பையும் ஆதங்கத்தையும் தக்கவைத்துக் கொள்ள முடியுமா...என்ற ஆச்சரியம் எப்போதுமே அன்னபூரணிக்கு உண்டு. அவளைப் பொறுத்தவரை குருபரன் தன் மனைவியுடன் நன்றாகத்தான் நடந்து கொள்கிறான். மனைவியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறான். அவளது கண் பார்த்து நடக்கிறான் என்று கூட சொல்லலாம். அப்படி இருந்தும் இந்த பெண்ணிற்கு இவ்வளவு தந்தை மீதான வெறுப்பு ஏன் என்றுதான் புரியவில்லை. தனது மனதில் இந்தப்பெண் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்?அருணாச்சலத்தோடு அன்னபூரணி இதையெல்லாம் பகிர்ந்து கொண்டது கிடையாது. சிவம் இப்பொழுது அருணாச்சலத்தின் கட்சியில் முக்கிய நபர் ஆகிவிட்டார். கட்சியில் தனது அதிகாரத்தை சிவன் காட்டவில்லையே தவிர, அவர் அருணாச்சலத்தின் சம்பந்தி என்பதும், இவரது ஒற்றைச்சொல் அருணாச்சலத்தை ஆட்டுவிக்கும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
உண்மையை சொல்லப்போனால் அருணாசலத்துடானான இந்த நெருக்கம் உமாவின் திருமணத்திற்கு பிறகு வந்ததுதான். அதற்கு முன்பு வரை சிவன் சாதாரண கணக்கப்பிள்ளை. உண்மை விசுவாசி மட்டுமே!
ஆனால், இன்றோ சிவனின் மரியாதை எவ்வளவு கூடிவிட்டது? அற்ப விஷயங்களுக்காக உமாவை சிவன் குரு போன்ற ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்தது
உமாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உள்ளுர அந்தரங்க அறையில் வெறும் சதை சுகம் கொடுக்கும் தாழ் நிலை தானே எனக்கு என்ற எண்ணம் அவளை பெற்றவருடன் இணங்க விடவில்லை. இந்த திருமணத்தினால் தானே அம்மாவுடனும் தங்கைகளுடனும் நான் விலகி இருக்க வேண்டியதாகி விட்டது என்ற கோபம் வேறு அவளுள். பணக்கார வீட்டில் அலங்காரப் பொருட்களுடன் ஒன்றாக பொம்மை போல் சதாசர்வகாலமும் அலங்காரம் செய்துகொண்டு குருபரன் முன்னெப்போதும் நின்றுகொண்டு கணவன் என்ற உரிமையில் நடந்து கொள்ள முடியாமல், அவநம்பிக்கையுடன் காலம் கடத்துவது உமாவின் மனதில் அருவருப்பை கொடுத்தது. இதையெல்லாம் ஒரு பெண்ணான அன்னபூரணி யார் கூட புரிந்துகொள்ள முடியாத பொழுது வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்?

நடக்கும் நாடகங்களை பலகாலமாக அன்னபூரணி பார்த்துக் கொண்டிருந்தாலும் சிவனின் மீது அவளுக்கு ஒரு பரிதாப உணர்வு என்றுமே உண்டு. அந்த குடும்பத்தை பொருத்தவரை சிவன் ஒரு நன்றியுள்ள விசுவாசி, இன்று நேற்றல்ல...வெகுகாலமாக.
சட்டென்று முடிவெடுத்தவளாக அன்னபூரணி சிவனிடம்
' நீங்களும் போயிட்டு வாங்களேன் சிவம். ரெண்டுபேருக்கும் பதட்டம் குறையும் 'என்று அவர்களுடன் அனுப்பி வைக்க, சிவன் முன்னிருக்கையில் டிரைவருடன் அமர்ந்துகொள்ள குருபரன் உமாவும் பின்னிருக்கையில். முன்னே இருக்கும் கண்ணாடி வழியாக உமா தன் தந்தையை பார்த்துக்கொண்டுதான் வந்து கொண்டிருந்தாள். அவளது கண்களில் தொக்கி நிற்கும் கேள்விகளுக்கு சிவனிடம் பதில் இல்லை. தலையைத் தொங்கப் போட்டவாறு தான் அவர் பயணம். உமாவின் பார்வையோ உணர்வுகளை தொலைத்து வெறுமையாய் அவரைப் பார்த்துக் கொண்டு வந்தது. குருவின் கண்களில் தெரியும் அலட்சியம் அவள் மனதை சுட்டாலும் சிவனுக்கு இது கண்டிப்பாய் தேவை என்று அவள் மனம் வாதிட்டது. வாய்விட்டு பாசத்துடன் அப்பா என்று அழைக்க அவளுக்கு நா வரவில்லை.

மருத்துவமனைகளில் மருத்துவர் பல்வேறு சோதனைகள் செய்தனர் முடிவு, நேர்மறை தான். உமா நாற்பது நாள் கர்ப்பம் என்று உறுதிப்படுத்தினார் பெண் மருத்துவர் . குருபரனுக்கு தான் ஜெயித்து விட்ட மகிழ்ச்சி. ஊர் முழுவதும் மைக் வைத்து ஒலி பெருக்கி வழியாக 'நான் ஆம்பள தாண்டா, என் பொண்டாட்டிய கர்ப்பமாகிட்டேன் டா 'என கத்தும் வெறி.
முதலில் கொஞ்ச நாட்களுக்கு இரண்டு பேருக்குள் இரவு பேச்சு எதுவும் கூடாது என்று மருத்துவர் சொல்லி விட்டதால் குரு அமைதியாகி விட்டான். ஆனால் மாதங்கள் செல்லச் செல்ல அவளது வயிறு பெரிதாகி கொண்டிருப்பதை பார்த்து அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் சொன்னது போல அவளது வடிவழகு எங்கே காணாமல் போனது என்று அவனுக்கு மிகவும் வருத்தம் ஆகிவிட்டது.
சிவன் சொன்ன விஷயத்தைக் கேட்டு இருந்த அவர் மனைவிக்கும் தனது மகளைப் பார்க்கும் ஆவல் மிக தொலைபேசியில் பேசும்போது,' நீங்க யாரும் தயவு செய்து வரவேண்டாம் என்று தீர்மானமாக கூறிவிட்டாள் உமா.' மீண்டும் சென்னையில் சிவனிடம் கொட்டி தீர்த்தாள் பாறு.சிவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. மகளுக்கு தன் மீதான கோபம் என்று தெரியும். ரத்னாவை திருமணம் செய்து அனுப்பு ஆகிவிட்டது. இத்தனை வருடங்கள் கழித்தும் இந்த பெண் பெற்றவர்கள் உறவு வேண்டாம் என்று நிதானமாக இருப்பது ஏன் என்று தான் அவருக்குப் பிடிபடவில்லை. காலமெல்லாம் புண்களையும் ஆற்றும் என்று அவர் நம்பியிருந்தார் சிவம். நிதர்சனத்தில் உமாவுக்கு மனதில் ஏற்பட்டிருக்கும் காயம் ஆறாது போலிருக்கிறதே என்று அவருக்கு மனக் கிலேசம். ரத்னாவும் அம்மா தங்கையுடன் பேசுகிறாளே தவிர தன்னுடன் பேசுவது இல்லை. உமாவின் திருமணத்தின் மூலம் இரு பெண்களை இழந்து விட்டோம் என்ற குற்ற உணர்வு அவருக்குள் வந்து பல காலம் ஆகிவிட்டது. ஆனால் இந்த வித உணர்ச்சிகள் தாமதமாக வந்து பிரயோஜனம்?

தனது மனைவியின் தாய்மையின் அழகையும் தாய்மையின் பூரிப்பையும் ரசிப்பவன் ஆக குருபரன் இல்லை. மாறாக குழந்தை எப்போது பிறக்கும், தன் மனைவி எப்போது மீண்டும் தனக்கு கிடைப்பாள் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டான். அவனை சொல்லி குற்றமில்லை அவன் பிறப்பு அப்படிதான்!

இன்னொரு புறம் அருணாசலத்திற்கு ஒன்னரை மாதங்கள் கழித்து தேர்தல் முடிவுகள் வர, அவருக்கு சராசரி ஓட்டுகள் கிடைத்தது. முதலமைச்சராக முடியாவிட்டாலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை கிடைத்துவிட்டது. ஏறக்குறைய எழுபது தொகுதிகளில் அருணாச்சலம் அவர் கட்சியினரும் என்று எதிர்க்கட்சி அந்தஸ்தில் அமர, அவர் முன்பு அமைச்சராக இருந்த கட்சி ஆளும் கட்சியாக .

அருணாசலத்திற்கு இந்த அளவுக்கு மக்களிடம் தனக்கு ஆதரவு இருக்கும் என்பதே பெரிய பலமாக தோன்றியது.அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று இப்போதிலிருந்தே திட்டம் தீட்டத் தொடங்கினார்.தன் மருமகள் கர்ப்பமாக இருப்பது கூட நல்ல சகுனமாக அவருக்கு தோன்றியது .
மருமகளுக்கு தேர்தல் முடிந்ததும் வைர அட்டிகையை பரிசாக அளித்தார். குடும்ப வாரிசு சுமப்பவள் மட்டுமல்ல அவள். குருபரனை நம்பி தான் உருவாக்கி வளர்க்கும் கட்சியை நிச்சயம் கொடுக்க முடியாது. எனவே உமாவின் வயிற்றில் பிறக்கும் வாரிசுதான் கட்சிக்கும் வாரிசு என்று முடிவு செய்துகொண்டார் மனதிற்குள்.
ஒருவேளை அவர் போடும் கணக்கீடுகளை பார்த்து தெய்வம் சிரித்திருக்கலாம்.

திருச்சூரில் ரத்னாவுக்கு வேலைக்கு செல்வதும் நேரம் கிடைக்கும் பொழுது களில் சங்கரனின் தொழில் கணக்குகளை பார்ப்பதுமாக நேரம் பறந்தது. யார் என்ன சொன்னாலும், கருத்தரிப்பதும் விதை நெல் விளைவதும் ஈசன் கையில். அவள் மனதில் எந்த பதட்டமும் தயக்கமும் இல்லை. சங்கரன் தன் தங்கைக்கும் திருமணம் செய்து அனுப்பி ஆயிற்று. திருமணத்திற்கு சிவன் தன் மனைவியுடன் வந்திருந்தார். சாந்தா வரவில்லை. ரத்னாவும் சரி சங்கரனும் சரி தனது பாறுவிடம் பேசி அளவிற்கு சிவனிடம் பேசவில்லை. உள்ளூர சிவனுக்கு ஏக்கம் தலைதூக்கியது. திலகாவும், திலகா வின் கணவரும் ஒப்புக்குத்தான் அவர்களை அழைத்திருந்தார்கள். இருவரும் இதுதான் சாக்கென்று மகளை பார்க்க கிளம்பி வருவார்கள் என்று அவர்கள் நினைக்கவில்லை. ரத்னாவிடம் ஏதேனும் விசேஷம் உண்டா என்று அவள் அம்மா கேட்டதற்கு நடக்கும் விஷயங்கள் தானே நடந்தே தீரும். அதைப்பற்றி எல்லாம் யோசிக்க என்னால் முடியாது என்று விட்டு நகர்ந்து விட்டாள். அவளது அந்தரங்கத்தை பற்றி யாராகிலும் பேசுவதற்கு அவளால் அனுமதிக்க முடியாது.
இதே ஒற்றுமையுடன் தான் சங்கரனும் அவளும் இத்தனை வருடங்களாக குடும்பம் நடத்தி வருகிறார்கள். ஒருவருக்கு ஒருவர் எங்கும் யாரிடமும் விட்டுக் கொடுத்ததில்லை.

விதி அவர்களையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறது. கால ஓட்டம் அவளை எங்கு எடுத்துச் செல்ல போகிறது என்பது யாருக்கும் தெரியாது. விதியை மதியால் வென்றவர் யாரும் இதுவரை பூமியில் பிறக்கவில்லை. ஏனெனில் வெல்வதற்கு விதி கண்ணுக்கு தெரிவதில்லை. எப்பேர்பட்ட மனிதனுக்கும் போராட்டம் போராட்டம் மட்டுமே கடைசிவரை.
*****************************
@@@@@@@@@@@@@@@@
*****************************
சாதுர்யா தனது விடாமுயற்சியால் ரங்கனின் மனதை தன்னிடம் மட்டுமே லயிக்கும்படி செய்துவிட்டாள். ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று தனது மனதில் உள்ளவற்றையும் இப்போது உள்ள நிலையையும் சொல்லி புரிய வைக்கலாம் என்று தான் அவளை கூட்டிக்கொண்டு சென்றான் ரங்கன். அவளிடம் மனதை மறைத்து கண்ணாமூச்சி ஆட முடியாது என்பது அவனுக்குத் தெளிவாக தெரிந்துவிட்டது. அவளை கோபத்துடனும் சாதாரணமாக கூட அவனால் பார்க்க முடியவில்லை கண்களில் காதல் வழிந்தது. அவளைப் பற்றி பேசும் போது முகம் பிரகாசம் அடைவதையும் சிரிப்பு வாய் கொள்ளாமல் வருவதையும் எப்படி அவன் தவிர்க்க முடியும்? சிரித்துக்கொண்டே கோபத்தை காட்டினால் அந்த பெண் எப்படி நம்புவது? காதல் அவனை பொம்மலாட்டத்தில் இருக்கும் பொம்மை ஆகிவிட்டது.

விலகிச் செல்லலாம் என்று பெண்ணை கூட்டிக் கொண்டு சென்றவன் விளங்கா பொருளோடு அவளிடம் மயங்கி நின்றான். அவளது காதல் அவனை பித்தனாக்கியது.

அவள் கையை பிடித்து கூட்டிக் செல்லும்போதே கைகளில் ஐஸ் கட்டியை வைத்தது போன்ற மெல்லிய குளிர். அவளது தளிர் கரங்கள் இவனது உணர்வுமிக்க வெம்மையை கண்டுகொண்டது.
பேச ஆரம்பிப்பதற்கு முன்னாடியே, அவளது பார்வை இவன் பார்வையில் கலக்க முழுதாகச் சரணாகதி ஆகிவிட்டான். பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. வரும் வார்த்தைகளும் தந்தியடிக்க, காதலையும் சொல்ல முடியாமல், விலகலையும் விளக்க முடியாது திணறினான் ரங்கன். பல வருடங்களாக சிறு பெண்ணாக தெரிந்தவள் இன்று பாரதியின் கண்ணம்மா வாக தெரிவது காதலின்றி வேறென்ன?

அவனைப் பொருத்தவரை இந்த ஜென்மத்தில் அவளைத் தவிர இன்னொருத்தியை மனதாலும் தீண்ட முடியாது.

மாமன் மகளிடம் பேச வந்தவன், மனைவியிடம் பேசுவது போல் பயந்து பயந்து ஆரம்பிக்க, சாதுர்யாவே ' நீங்க என்ன என்னதான் கன்வின்ஸ் பண்ண நினைச்சாலும், என்னால உங்கள பிரிஞ்சு இருக்க முடியாதுத்தான். நீங்க ரெண்டு வருஷம் படிச்ச முடிச்ச வரவரைக்கும் தான் உங்களுக்கு டைம். பிறகு யாரு சம்மதிச்சாலும் சரி இல்லை என்றாலும் சரி நீங்க என் கழுத்துல தாலி கட்டி ஆகணும். இல்லனா இந்த ஜென்மத்துல நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் இது உங்க மேல சத்தியம் என்றவளை அடுத்து என்ன சொல்வது என்று புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தான் ரங்கன்.
சொல்வது எல்லாம் சொல்லி விட்டு அவனது அதிர்ச்சியை நீக்குவதற்கு அவனது கன்னத்தில் முதல் முத்தத்தை பதித்து விட்டாள் அவள். அவன் இனி எங்கு பேசுவது... உறைநிலையில் உறைந்திருக்கும் அவளது அத்தானை அவள்தான் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று.

அதற்குப் பிறகு அவர்களது ஆற்றங்கரை சந்திப்புகள் தொடர,முத்தங்களும் மூச்சு காற்று பரிமாற்றமும் வெகுவாக நடந்தன. பெண்ணவளுக்கு ரங்கனிடம் எந்த தயக்கமும் பயமும் இல்லை. நாணம் அதை மீறும் அத்தான் மீதான காதல். ரங்கனுக்கு அவளது தன்மீதான நம்பிக்கையே யானை பலம். காதல் எல்லை மீறிய போதும் காமம் எல்லை கடக்காமல் அவன் பார்த்துக் கொள்ள, பெண்ணுக்கு ஆணின் மீது நம்பிக்கை வைக்க வேறென்ன வேண்டும்? அவனது தூய காதலில் தன்னை முழுமையாக இழந்தாள் சாதுர்யா. அவன் வைத்த முத்தங்கள் ஒவ்வொன்றையும் பொக்கிஷமாய் தனது மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டு ரசித்தாள்.
அவனுக்கு அத்தை மகள் வெறும் பொக்கிஷம் அல்ல... அவன் வாழ்க்கை. அவன் நீண்ட நாள் காதல்... தான் மரித்தாலும் மீண்டெழ வைக்கும் சஞ்சீவனி அவனது சாதுர்யா.

திடீரென ஒருநாள் உறையூருக்கு போகலாம் என்று கூட்டிக் கொண்டு சென்றவள் கமலவல்லி நாச்சியார் சன்னதியில் கொடுத்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொள்ளாமல் வெளிப்பிரகாரம் வரும்வரை காத்திருந்து, அவளும் ரங்கனும் உட்கார்ந்திருக்கும்போது அவனிடம் தன் கைகளை நீட்டி குங்குமத்தை வகிட்டில் வைத்து விடுமாறு கண்கள் கலங்க கேட்க, அவளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் வகுட்டில் இப்போது வேண்டாம் 'சாதுர்யா... உச்சி குங்குமம் ஊரறிய வச்சு விடுவேன்'. இப்போ என்று அவள் நெற்றியில் மட்டும் குங்குமத்தை வைத்து விட்டான். எப்படியும் குங்குமம் நெற்றியில் அத்தான் வைத்து விடுவது கூட திருமணத்திற்கு சமம்தான் என்று மனதை தேற்றிக் கொண்டாள். அவளது கண்கள் கலங்கியிருந்தது.
ஆனால் அன்று வரை தன் மனைவியாக மனதளவில் நினைத்துக்கொண்டிருந்த ரங்கனுக்கு இந்த நிகழ்வு அவளிடம் மனைவிக்கான உரிமையை கொடுத்தது. அவளது இரு கண்களும் கலங்கி இருந்தது. முகத்திலும் குழப்பம். லேசாக கண்களிலிருந்து கண்ணீர் கூட வந்தது . அவளுக்குத் தன் உணர்வுகளை மனதில் இருப்பதை வார்த்தைகளால் வடித்து சொல்ல முடியவில்லை.

ஒரு வழியாக ரங்கன் வெளிநாடு செல்லும் நாளும் வர, தன்னிடமிருந்து உயிரை உருவி விடுவது போல இருவருமே உணர்ந்தார்கள். இது தற்காலிக பிரிவு தான் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாலும் ஒருவருடன் ஒருவர் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம். பெண்ணிருக்கு படிப்பு முடிய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது. அதுவரை அவளை சம்சார சாகரத்தில் தள்ளிப் போடக் கூடாது என்பதில் மட்டும் ரங்கன் தீவிரமாக இருந்தான். அத்துடன் அவளது கொள்கையும், ஐஏஎஸ் அதிகாரி ஆகும் அவள் கனவும் கூட அவனுக்கு தெரியும். ஒரு கணவனாக மனைவியின் முன்னேற்றத்தின் பின்னாடி நிற்பது அவனது கடமை என்றும் நினைத்தான். அதனாலேயே கிளம்பி போனான். சில சமயங்களில் எடுக்கும் முடிவுகள் தவறாகிப் போகக்கூடும்.

சாதுர்யா அவன் கிளம்பிய பிறகு இன்னும் கலங்கிப் போனாள். ஏனோ ரங்கன் தன்னை விட்டு போய்விடுவானோ, தானும் தனது அத்தானும் பிரிந்து விடுவோமோ என்ற அவளது பயத்தின் விளைவுதான் உரையூர் நிகழ்வு.
ஆனால் சில சமயங்களில் நாம் என்னதான் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டாலும் அதற்கும் மீறி நடக்கும் நிகழ்வுகளை யாராலும் மாற்ற முடியாது. அவளது அந்த கலக்கம் அவளது உள்ளுணர்வு தான். அனேகமாக உள்ளுணர்வு பொய்ப்பது கிடையாது.
எனக்கும்கூட ரங்கன் அல்லது இருக்க வேண்டுமா என்று தோன்றுகிறது.
நடக்கப்போவது நடந்தே தீரும்.
 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
இதோ அதோ என்று நாட்கள் ஓட, உமாவிற்கு பேறுகாலம் இன்னும்
பதினைந்து நாட்களில் வந்து நின்றது. மருத்துவ தலை பிரசவம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் ஒரு வாரம் முன்னதாகவே மருத்துவமனைகளில் வந்து சேருமாறு சொல்லிவிட, குருவுக்கு சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி. குழந்தை வெளி உலகத்திற்கு வரப்போகிறது என்றல்ல. இனியாவது மனைவி எந்தத் தொல்லையும் இல்லாமல் தனக்கு கிடைப்பாள் என்பது தான் அவனுக்கு. குழந்தை பிறந்த பிறகு அதற்கு பாலூட்டுவது பற்றியெல்லாம் அவனுக்கு எந்த யோசனையும் கவலையும் இல்லை. நடுவில் இரண்டு மூன்று முறை மனைவிடம் நெருங்க முயன்று பார்த்தும் கூட அவளால் முடியவில்லை. 'வலிக்குதுங்க 'என்று அவள் தன்னை மறந்து, கணவனின் குணம் மறந்து சொல்லும் பொழுது அவனது உணர்வுகள்
வடிந்து தான் போகும். தனக்கு தேவை என்றால் மற்ற பெண்களிடம் போபவன் தான். ஆனால் சமீபகாலமாக அருணாச்சலத்தின், எதிர்க்கட்சியில் அமர்ந்து இருக்கும் நிலை அருணாச்சலத்தின் மகனை சும்மா இருக்க செய்தது. கொஞ்ச காலத்திற்குத் 'தான்' எந்த பிரச்சனையிலும் மாட்டினால் தன் தந்தைக்கு சட்டசபையில் பிரச்சனை வருமோ, என்ற யோசனையில் அவன் அமைதியாக இருந்தான். அப்பா மீதான பிரியத்தை விட அப்பாவின் பதவி மீதான பிரியமும் கட்சி தனக்குப் பிற்காலத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்ப்பும் அவன் கைகளை கட்டிப் போட்டது. முதலமைச்சராக ஆவது பற்றி அவன் கனவு காணத் தொடங்கிவிட்டான்.
இப்பொழுதெல்லாம் கஞ்சா தோட்டத்திற்கு செல்லும் போது தனது தோழமைகளை கூட கூப்பிட்டு கொள்வதில்லை. வெளியே தெரிந்தால் பிரச்சனை தீவிரம் என்பதாலேயே அவன் தன் போக்கை சிறிது காலத்திற்கு மாற்றி இருக்கிறான். தன் அப்பா முதலமைச்சராக முடியவில்லை என்றாலும் கூட தனக்காவது அந்த பதவி வேண்டும் என்ற எண்ணம் உள்ளே வேரூன்றிவிட்டது. தன் தந்தை தனது மனதில் பேரன் தான் இந்தக் கட்சிக்கான அரசியல் வாரிசு என்று முடிவெடுத்து இருப்பது தெரிந்தால் ஒருவேளை அவன் குழந்தையின் கழுத்தை நெரித்து கூட கொன்று விடக் கூடும். அந்த அளவிற்கு அவனது மனதில் பாசம் அன்பு போன்ற உணர்வுகள் எல்லாம் காணாமல் போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. ஒருவேளை அவன் அருணாச்சலத்தை கூட இல்லாமல் செய்யக்கூடும். அருணாச்சலம் கட்சி தொடங்கும் பொழுதே, குருவுக்கு நிழல் உலகத் தொடர்புகள் அதிகமாகிவிட்டது. கஞ்சா கடத்தல் மட்டுமல்ல, இன்னும் பல பல வேலைகளை அருணாசலத்தின் அரசியல் பலம் கொண்டு அவருக்கே தெரியாமல் குரு செய்து வருகிறான். இவனால் வாழ்க்கையை தொலைத்த பெண்கள் ஏராளம். வெளிவராத வரை குருவும் நல்லவன்தான்!

குழந்தைப் பேறு கால சமயத்தில் தான் வருவதாக உமாவின் அம்மா எவ்வளவோ கெஞ்சியும் கூட உமா நிச்சயமாக மறுத்துவிட்டாள். அவள் அடி மனதில் பயம்! பயம்! கணவனை பற்றி முழுமையாக தெரிய விட்டாலும் அவள் பெண்கள் விஷயத்தில் திருந்தவில்லை என்பது அவளுக்கு கண்டிப்பாக தெரியும். ஆனால் அவளது அந்த மறுப்பை புரிந்துகொள்ளும் நிலையில் அவளது அம்மா இல்லை என்பது அவளது துர்ப்பாக்கியமே!
பிரசவத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் சமயத்தில், உமா தனது மாமனாரை பார்க்க விரும்பினாள். சாந்தா இப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டாள். அதனால் இதற்கு மேல் அவளை இங்கு தமிழ்நாட்டில் இருக்க விட உமாவுக்கு மனதில்லை. எப்படியோ ரத்னாவை ஒரு வழியாக திருமணம் செய்து அனுப்பி ஆயிற்று. அடுத்தது சாந்தா. ஆனால் இங்கு சிறு பெண்ணுக்கும் திருமணம் ஒரு வழியாக அமையும் என்று உமா இப்போது நம்பவில்லை.
அப்போது இருந்த மன கலக்கத்தில் அப்படி ஒரு முடிவு எடுத்து இருந்தாள். ஆனால் இந்த நான்கரை வருடங்களில் உமாவுக்கும் நிதானமும் பக்குவமும் வந்துவிட்டது.

தன் மனைவியுடன் மருமகளை காணவந்த அருணாசலத்திடம் உமா, தன் தங்கையை சாந்தாவை யாரும் அறிவதற்கு முன்னதாக ஏதேனும் ஒரு வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக கூற, தன் மகனைப் பற்றி எந்த புகாரும் சொல்லாமலேயே மருமகள் எடுக்கும் இந்த முடிவு அருணாசலத்திற்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சி தான். குருவை பற்றி அன்னபூரணிக்கு தெரிந்ததை விட அருணாசலத்திற்கு அதிகம் தெரியும். அதையும் விட அதிகம் தெரிந்தவள் உமா. ஆனால் இவர்களையெல்லாம் ஏமாற்றும் அளவிற்கு மோசமானவன் குரு. அவன் எவற்றையெல்லாம் செய்வான் என்பது ஓரளவுக்கு மட்டுமே இவர்களுக்கு தெரியும். ஆனால் எந்த எல்லை வரை செல்வான் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.

உமாவிடம், குழந்தை பிறந்து ஓரிரு மாதங்களுக்குள் சாந்தாவை வெளிநாடு அனுப்பி படிக்க வைப்பதாகவும் அவரது பாதுகாப்புக்கு அருணாச்சலம் பொறுப்பு என்றும் சத்தியம் செய்த பிறகுதான் உமா நிம்மதியாக குழந்தை பிறப்புக்கு தன்னைத் தயார் செய்து கொண்டாள். அருணாசலத்திற்கு உள்ளூர வருத்தம்தான். தன் மகனைப் பற்றி தெரிந்தும் இப்படி ஒரு திருமணத்தை செய்வதற்கு தான் ஒப்புக் கொண்டிருக்க கூடாது. மேலும் இப்பொழுது உமாவின் குடும்பத்தில் உள்ள எல்லா பெண்களையும் தூக்கி சுமக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு விட்டார் அருணாச்சலம். அவரது நியாய புத்தி அவருக்கு நல்லதை எடுத்துச் சொன்னாலும் இத்தனை வருட அரசியல் வாழ்க்கை அவருக்கு மற்ற கெட்ட குணங்களையும் ஏற்றி வைத்திருந்தது. மருமகளின் இந்தநிலையில் அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஒப்புக்கொண்டார். மேலும் அவர் கொடுத்த சத்தியத்தை மீறுவதற்கு அன்னபூரணி என்றுமே ஒப்புக் கொள்ள மாட்டாள். அதனால் குழந்தை பிறந்த பிறகு மாறுவது என்பது முடியாது. எத்தனை உயரத்திற்கு தன் கணவர் வந்துவிட்ட பிறகும் அன்னபூரணி மாறவே இல்லை.

உமாவுக்கு ஆண் குழந்தை பிறக்க, அருணாசலத்திற்கு இந்த குழந்தையையாவது சரியாக வளர்க்க வேண்டும். தன் மகனிடம் நிகழ்ந்த தவறுகள் இந்த குழந்தையிடம் கூடாது என்று நினைத்துக் கொண்டார்.

குழந்தை பிறந்த இரண்டொரு நாட்களில் வீடு வந்து சேர்ந்த உமாவிடம் கூட துடித்தான் குரு. ஆனால் அன்னபூரணியின் கண்காணிப்பின் கீழ் இருந்த உமாவை குருவால் நெருங்க கூட முடியவில்லை. இரண்டு மாதங்கள் கடுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் அன்னபூரணி.குழந்தையை கொஞ்ச அவனுக்கு அவ்வளவு பிரியம் இல்லை.தன் மகனைப் பற்றி தெரிந்ததனாலேயே அதிக எச்சரிக்கையுடன் நடந்து கொண்டார் அன்னம் . அருணாச்சலம் பழையபடி சென்னைக்கும் பூங்குவளைக்குமாக சென்று வந்துகொண்டிருந்தார். சிவனும் எப்போதும் போல் அவருடனே.இதற்கு நடுவே சொன்னபடியே சாந்தா விற்கு கனடாவில் படிப்பதற்கு அருணாச்சலம் ஏற்பாடு செய்து விட, இத்தனை சிறு பெண்ணை தனியாக அனுப்ப வேண்டாம் என்று பாறுவுக்கும் அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
ஆனால் எந்த வித காரணத்தைக் கொண்டும் சிவனை அங்கு அனுப்புவதற்கு அவருக்கு மனதில்லை. அரசியல் வாழ்வில் சிவன் கிட்டத்தட்ட அருணாச்சலத்தின் பாதி ஆகிவிட்டார்.

'மகளின் வாழ்வுதான் முக்கியம். அவளுக்கு இவ்வளவு நல்ல படிப்பும் எதிர்காலமும் அமைய இருக்கும் போது அதை தடுக்க கூடாது என்பதற்காக சிவனும் இதற்கெல்லாம் ஒப்புக்கொண்டு விட்டார். கணவரை சொல்லை மீறி பழக்கப்படாத அவர் மனைவி தனது மகளுடன் கனடாவிற்கு பயணம் செய்ய சிவனுக்கு முதன் முதலில் தனிமை என்றால் என்ன என்பது புரிந்தது.
தனிமை தாங்க முடியாமல் கட்சி வேலைகளில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு விட்டார் அவர்.
திருச்சியில் இருக்கும் ராகாயியை இப்பொழுது சென்னைக்கு கூட்டி வந்து, அவளுக்கு தொழிலை இன்னும் கொஞ்சம் விரிவு செய்து கொடுத்து,
அவளது மகளையும் நல்ல பள்ளியில் சேர்த்து விட்டார் சிவன். ஒருவேளை அந்தப் பெண் குழந்தை குருவின் குழந்தையாக இருக்குமோ என்பது அவருக்கு சந்தேகம். ஆனால் அதையெல்லாம் வாய்விட்டு சொல்ல கூடிய தைரியம் அவருக்கு இல்லை.

ராகாயியும் சென்னை வந்த பிறகு கட்சி பணியில் அதிகம் ஈடுபட்டாள். கட்சி சம்மந்தமான விஷயங்களுக்கு உணவு விநியோகம் செய்யும் காண்ட்ராக்ட் அவளது. சிவனின் ஏற்பாடு. அவளுக்கும் நேர்மையாக பிழைக்க வழி கிடைத்த சந்தோஷம். வீரனும் அவளும் அடிக்கடி பார்த்துக்கொள்கிறார்கள். வீரனுக்கு அவள் வாழ்க்கை சீரடைந்த திருப்தி.

பூங்குவலையில் இரண்டு மாதங்கள் எப்படியோ தாக்குபிடித்த குருவால் அதற்குமேல் முடியாது என்று தோன்றிவிட்டது. அன்னபூரணி கோயிலுக்கு சென்றிருக்கும் நேரத்தில் தன் மனைவியை வற்புறுத்த தொடங்கினான். ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாமல் உமாவும் ஒப்புக்கொண்டாள்.

ஆனால் தாய்ப்பால் கொடுக்கும் அவளிடம் வீசும் பால் வாசனையும், இன்னும் முழுமையாக வடிந்து விடாத அவளது அவளது வயிறும், அதிலிருந்த கோடுகளும், அவனுக்கு சந்தோஷத்தை தரவில்லை. அவளைப் பார்க்கும் போது ஒருவித அருவருப்பு அவனுக்கு வந்தது.
அப்படியும் பொறுத்துக்கொண்டு மேலே முயன்றவனுக்கோ குழந்தை பிறப்பதற்கு முன் அவளிடம் கிடைக்கும் சுகம் இதுவல்ல என்று தோன்ற, உன் *****முன்னே மாதிரி இல்லடி என்றுவிட்டு அதற்கு மேல் அவளுடன் கூட விருப்பமில்லாமல், எழுந்து சென்று விட்டான். ஆனால் அவன் அடி வரை அந்த அருவருப்பும் ஏமாற்றமும் தங்கிவிட இதற்கு மேல் இவள் வேலைக்கு ஆக மாட்டாள் என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.
'இப்ப குழந்தை எதுக்கு டார்லிங் என்று உமா கேட்ட வாசகம் திரும்பத் திரும்ப அவன் காதுகளில் எதிரொலித்தது.'

சற்று நேரம் புகை பிடித்தவன் ஏதோ யோசித்தவனாக தோப்பு வீட்டுக்கு சென்றுவிட்டான்.
உமாவுக்கு அவன் மனதை முழுமையாக புரிந்து விட்டதில் ஓய்ந்து போனாள். இதற்காகத்தான் யோசித்து அவள் இத்தனை காலமாக குழந்தை வேண்டாம் என்று இருந்தது. அவளுக்கு தெளிவாக தெரிந்தது இனி தன் எதிர்காலம் முழுமையும் இந்த குழந்தையுடன் மட்டும்தான் என்று. அவளை விட்டுச் சென்ற குரு இனி அவளை நாடி வரப்போவதில்லை. அவனுக்கு தேவை கட்டுடல் விட்டிராத புது மலர்கள்.

உமாவின் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. இதை உணர்ந்து கொண்டதோ என்னமோ உமாவின் குழந்தை ஸ்கந்தன் வீறிட்டு அழத் தொடங்கிவிட்டான். குழந்தை அழுவதை கவனித்த உமா இனி இந்த வாழ்க்கை இப்படித்தான் செல்ல போகிறது என்பதில் அழுது என்ன பயன்? எப்போதுமே நான் அழ மாட்டேன் என்று தீர்மானித்துக் கொண்டாள்.

ஆம், அருணாச்சலம் எதிர்பார்த்த அரசியல் வாரிசு 'ஸ்கந்தன்'தான். ஆனால்...

**********************************************************

சாதுர்யா ரங்கன் வெளிநாடு சென்றதிலிருந்து கூட்டு பறவையாகி போனாள். அவளுக்கும் இந்த உலகத்தில் எதுவுமே ரசிக்கவில்லை. பசலை நோய் கொண்டாள். நிஜமாகவே உடல் இளைத்து அவளது வளையல்கள் கழன்று வர ஆரம்பித்துவிட்டது. கண்களில் எப்போதும் ஒரு சோகம். முன்பெல்லாம் நிறைய சிரித்துக் கொண்டிருந்த பேத்தி இப்போதெல்லாம் சிரிப்பதை நிறுத்தி விட்டாள். சரியாக சாப்பாட்டில் கவனம் இல்லை. பரீட்சை நேரத்தில் கூட புத்தகங் களை எடுப்பதில்லை. பெண்ணுக்கோ புத்தகங்களை தொட்டாலே ரங்கன் தனக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தது ஞாபகம் வந்து படுத்தியது. அவனது முத்தத்திற்காக அவள் மனம் ஏங்கியது. அவளது மனம் புரிந்தவனாக ரங்கனும் தினமும் வீடியோ காலில் அழைத்து பேசி விடுகிறான். ஆனாலும் பெண்ணும் மனதில் வைக்காமல் அப்படியே குழப்பிக் கொண்டு இருக்கிறாள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த லட்சுமி அம்மாளுக்கும் தாமோதரனுக்கும் பேத்தியை எப்படி தேற்றுவது என்பதே தெரியவில்லை. இன்னும் இவர்கள் இருவரும் நெற்றியில் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டதை பற்றி பாட்டி தாத்தாவிற்கு தெரியாது.

ரங்கனும் சாதுர்யாவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்பது வரைதான் அவர்களுக்கு தெரியும். இதைப்பற்றி ரேணுகாவிடமும் அவள் கணவரிடமும் தாமு மேம்போக்காக சொல்லிவிட அவர்கள் இருவருக்கும் ரங்கன் -சாதுர்யா திருமணம் பற்றி எந்த ஆட்சேபனையும் இல்லை. ரங்கன் படிப்பு முடியட்டும். இந்த பெண்ணும் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்தாக வேண்டும். அதற்கெல்லாம் காலம் இருப்பதால் இப்பொழுது இதைப் பற்றி மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம் வெங்கடேசனிடமும் பேச வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தார்கள்.
ஆனால் லட்சுமி அம்மாளுக்கும் ஜோசியர் சொன்ன விஷயங்கள் உள்ளூர ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. இதைப்பற்றி இன்னும் அவர் கணவரிடம் சொல்லவில்லை. சொன்னால் வீணாக அவருக்கும் தனது மன வருத்தம் தொற்றிக்கொள்ளும் என்ற பயம் தான்.

ஆனால் ரங்கன் தான் தனது பேத்தியின் கணவனாக போகிறான் என்பது பற்றி பேச்சு வந்தபிறகு ஓரளவுக்கு லக்ஷ்மி அம்மாளுக்கு மன ஆறுதல்.

படிக்க அமெரிக்கா சென்றிருக்கும் ரங்கனுக்கு, தனக்கு திருமணம் ஆகிவிட்டது.இனி மனைவி தன் பொறுப்பு. அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள தான் அதிகம் மெனக்கெட்டாக வேணும் என்ற எண்ணத்தில் அதிகமாக உழைத்தான். பகல் நேரங்களில் படித்துக்கொண்டு மாலை நேரத்தில் ஏதோ ஒரு இடத்தில் வேலை செய்து தன் மனைவிக்கு அந்த பணத்தை அனுப்பி வைத்தான். மனையாளின் செலவுகள் அவனுடையது என்று அவன் யோசனை.மனைவி என்றுதான் அவன் நம்புகிறான். அவளுக்கு செய்வதற்கு தனக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது என்பது அவன் எண்ணம். இவையெல்லாம் இவர்கள் இருவரும் மட்டுமே அறிந்த ரகசியம். ரங்கனின் இந்த சைகை வேறு பெண்ணின் மனதில் ஆழமாய் புதைந்தது.
அவளைப் பிரிந்து வந்து விட்டோம் என்ற எண்ணம் ரங்கனுக்கு இல்லை. அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான் அவனுக்கு.

கணவனுக்குமாக சேர்த்து வருத்தப்பட்டது மனைவியின் மனம்.

இதுபற்றியெல்லாம் வெங்கடேசன் - மாலதி இருவருக்கும் எதுவுமே தெரியாது. தெரிந்தால் என்னவாகுமோ?

_----_-------------------------------------------
உமா குழந்தை பெற்று இதோ இரண்டு வருஷங்கள் நிமிடமாய் ஓடி விட்டது.
திடீரென
ரத்னா தன் அக்காவின் மகவை பார்க்க தமிழ்நாடு செல்வேன் என அடம்பிடிக்க, சங்கரன் மறுத்துவிட்டான். அவளுக்கும் புரிகிறது. ஆனால், பிறந்த வீட்டு தொடர்பே இன்றி வேறு ஊரில் கணவனின் துணை மட்டும் கொண்டு, அவளுக்கு கண்ணீர் வந்தது.
எல்லாவற்றிற்கும் விட்டு கொடுக்கும் கணவனின் கடுமை அவளை வாட்டியது.

நாளும் தள்ளிப்போக இன்னும் ஆகவில்லையே எனும் எரிச்சல் வேறு. ஏற்கனவே அவளுக்கு மாதா மாதம் ஆகாது. இரண்டு மாதம் இல்லை நாற்பத்தைந்து நாட்கள் என படுத்தும். அதனாலேயே அவளால் சரியாக யோசிக்க முடியவில்லை.

முன்பு போல அம்மாவுடனும் தங்கச்சியுடனும் பேசவும் முடிவதில்லை. கனடா போன பிறகு நேர வித்தியாசம். தவித்து போனாள் ரத்னா.
இப்போதெல்லாம் சங்கரனுடன் சண்டை பிடிக்கிறாள்.
தனியாய் உணர்ந்தாள் அவள். நிகழ போவது தெரிந்தால் அவள் நிலை?

 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
காலங்களின் ஓட்டத்தில் உமாவின் மகன் ஸ்கந்தனுக்கு இப்போது முழுதாக ஐந்து வயது ஆகிவிட்டது. அவனுக்கு அம்மாவின் மீது அளவு கடந்த பிரியம். அதைப் போன்று தந்தையை கண்டால் ஏனோ அவனுக்கு அந்த வயதிலேயே பிடிக்காமல் போய்விட்டது. குருவுக்கும் குழந்தை மீதோ மனைவி மீதோ எப்போதுமே பெரிய அளவில் பிடித்தம் எதுவும் இருப்பதில்லை. ஊரில் சொல்லிக் கொள்வதற்காக ஒரு குழந்தை பெற்று ஆயிற்று.
அருணாச்சலம் அன்னபூரணி இருவருக்கும் தன் பேரன் மேல் பிரியம் அதிகம். அதிலும் தனக்குப் பிறகு அரசியல் வாரிசாக அருணாச்சலம் தனது பேரனை தான் நினைத்து இருப்பதால் அவனுக்கு சலுகைகள் அதிகம் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் எவ்வளவுதான் சலுகைகள் கொடுத்தாலும் வீட்டில் இருக்கும் இரு பெண்களும் குழந்தைக்கு அப்போதே நல்லது கெட்டவைகளை சொல்லிக் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். ஐந்து வயது சிறுவனுக்கு வயதுக்கு மீறிய மனப்பக்குவம் உண்டு. தவறு நடந்தால் அதை பொறுத்துக் கொள்ளும் சக்தி அந்த வயதிலேயே அவன் மனதிற்கு இல்லை. தவறுகளுக்கு தண்டனை ஒன்று தான் சரியான தீர்வு என்று ஆழமாக நம்பினான் சிறுவன். இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட சிறுவனுக்கும், இதற்கு அப்படியே எதிராக குணங்களைக் கொண்ட அவன் தந்தைக்கும் ஒத்துப் போவது என்பது கனவிலும் நிகழப் போவதில்லை. ஒருவேளை 'இரணியகசிபுவுக்கு பிறந்த பிரகலாதன் இவனோ' என்ற எண்ணம் அடிக்கடி உமாவிற்கு வருவதுண்டு. அருணாச்சலத்திற்கும் ஸ்கந்தன் பிறந்தபிறகு அரசியல் வாழ்வில் பெரும் ஏற்றம். மத்திய அமைச்சரவையிலும் பங்கு வகிக்கும் அவர் தனது கட்சியில் இருந்து மூவரை மத்திய அமைச்சர்கள் ஆக்கியிருக்கிறார். கை சுத்தமானவர், நேர்மையானவர் என்ற பெயரை சம்பாதித்திருக்கும் அருணாசலத்திற்கு வரும் தேர்தலில் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.
அதற்காகவே குரு இப்போதெல்லாம் செய்யும் தவறுகள் வெளியுலகிற்கு தெரியாத அளவிற்கு செய்கிறான்.

குழந்தையை கைதேர்ந்த நிபுணனாகவும் சிறந்த மனிதனாகவும் வளர்ப்பதற்காக வீட்டிலுள்ள மூவரும் அயராது பாடு படுகிறார்கள். குருவின் விஷயத்தில் விட்ட கோட்டையை பிடிக்க பேரன்தான் துருப்புச் சீட்டு.

சிவனின் மகள் சாந்தா இப்போது கனடாவில் முழுமையாக தன்னை பொருத்திக் கொண்டு விட்டாள். தனது அம்மாவை திரும்பவும் இந்தியா அனுப்பி வைக்கும் எண்ணம் அவளுக்கு சற்றும் இல்லை. தனது வாழ் நாள் மட்டுமல்ல இனி தனது அம்மாவின் வாழ்நாளும் இறுதி வரை இந்து தான் என்று அவள் முடிவு எடுத்து விட்டாள். சிவனுக்கு இதற்கெல்லாம் என்ன சொல்வது என்பது தெரியவில்லை. சிவன் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தன் மனைவி மகளுடன் இருந்துவிட்டு திரும்பவும் வந்துவிடுகிறார். அவர் இல்லாத சமயங்களில் அருணாசலத்திற்கு கை உடைந்தது போல கஷ்டம் தான் ஆனாலும் சிவன் எத்தனை காலம் குடும்பத்தை விட்டு இருக்க முடியும்?
மருமகள் சொன்ன உண்மை புரிந்த காரணத்தினாலேயே அருணாச்சலம் வாயை திறக்க முடியவில்லை. சிவனும் கனடாவில் பத்து நாட்களுக்கு மேல் தங்குவதில்லை. அவரின் மன குற்ற உணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம். சாந்தாவிற்கு தனது தந்தை செய்த காரியம் எவ்வளவு ஆழமானது என அந்த வயதில் புரியவில்லை.ஆனால், வெளியுலகு புரிந்து, அந்நிய தேசத்தில் தனது எதிர்காலத்தை
ஊன்றியவளுக்கு விஷயத்தின் வீரியம் எவ்வளவு என்று தெரிந்த- -தனாலேயே அவள் மனதிலும் சிவன் மீது மரியாதை குறைந்துவிட்டது. அக்காவின் வாழ்வு இன்று கேள்வி குறியாக இருப்பதற்கு காரணம் தன் தந்தையே என்ற எண்ணம் அவளை அப்பாவிடமிருந்து தூர நிறுத்தியது. சிவனுக்கு இதெல்லாம் புரிந்திருந்தாலும் இதற்கு மேல் அவர் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. சாந்தா பொறியியல் முடித்துவிட்டு இப்பொழுது மேல் படிப்பிற்கு அமெரிக்கா செல்வது பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறாள். கனடாவிலிருந்து அமெரிக்கா செல்வது ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. இன்னொருபுறம் அவளுக்கு கனடாவை பிடித்துதான் இருக்கிறது. இங்கேயே படிக்கலாமா என்றும் யோசிக்கிறாள்.
இதுபோன்ற மேல்நாட்டு படிப்பெல்லாம் தனக்கு கிடைக்கக்கூடும் என்று அவள் கனவிலும் நினைத்தது இல்லை. தன்னையும் திருமணம் செய்து அனுப்பி வைக்காமல் உமா அக்கா தன்னை இவ்வளவு தூரம் படிக்க வைத்து இருப்பது சாந்தாவுக்கு அவள்மீது பன்மடங்கு மரியாதையை உண்டுபண்ணியது. உமா மெழுகாய் தன்னை உருக்கி தன்னையும் ரத்னா அக்காவையும் வார்த்திருக்கிறாள் என்று ஆத்மார்த்தமாய் உணர்ந்தாள் சாந்தா. பெற்றவர்கள் செய்ய வேண்டியவற்றை உடன்பிறப்பு செய்யும் பொழுது அவர்கள் நம்மை பெற்றவர்களை விட ஒரு படி உயர்ந்து தெரிகிறார்கள்.
அக்காவின் கணவன் எவ்வளவு மோசமானவன், அவனிடமிருந்து அக்கா தன்னையும் ரத்னா அக்காவையும் எப்படி காத்திருக்கிறாள் என்பதெல்லாம் அவளுக்கு நன்றி விசுவாசத்தை கூட்டியது. தாங்கள் அம்மாவுக்கும் தனது அக்காவின் முடிவுகள் பற்றி மெதுவாக புரிய வைக்க முயன்று கொண்டிருந்தாள். உமா பணம் அதிகம் வந்துவிட்டதால் இவ்வாறெல்லாம் நடந்து கொள்ளவில்லை. அப்படி நடந்து கொள்வதாக இருந்திருந்தால் தனது புகுந்த வீட்டினரிடம் சொல்லி நமக்கு இவ்வளவு அகலமான வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்க மாட்டாள் என்று மெதுமெதுவே சொல்ல சொல்ல பாறு குட்டிக்கும் உமாவின் மீதிருந்த வருத்தங்கள் குறையத்தான் தொடங்கியிருக்கிறது.

அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு என்று தொகுதிகள் ஒதுக்கப்பட உமாவை களமிறக்கிய அருணாச்சலம், சென்னையில் ராக்காயியையும் தேர்தலில் நிற்க வைத்தார்.
மகனால் நிரப்ப முடியாத இடத்தை மருமகள் மற்றும் பேரனால் நிரப்ப முடிவு செய்திருந்தார் அருணாச்சலம். இதில் தவறு ஏதும் இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை.

ஆனால் இன்னொருபுறம் குருவின் மனதில் வண்ணம் அதிகரித்துக்கொண்டே சென்றது. மனைவியின் மீது அவனுக்கு பொறாமை. ஏற்கனவே அவள் உடம்பு மீது இருந்த பிடிப்பு நீங்கிவிட்டிருக்க, இப்போது அவள் மீதி இருப்பது வெறும்
காழ்புணர்ச்சி மட்டுமே!
மனைவி தன்னை விட முதல் நிலையில் இருப்பது ஒரு ஆணாக அவனுக்கு அடி என்று நினைத்தது ஒரு புறம் என்றால் தன்னை தன் அப்பா ஓரம் கட்டுவதாக அவனுக்கு புரியவாரம்பிக்க அடுத்து தான் காய்களை எப்படி நகர்த்தி கட்சியை தானதாக்கி கொள்வது என்று அவன் புத்தி யோசிக்க ஆரம்பித்தது.தீர்வுதான் தெளிவாக தெரியவில்லை. ஆனால், அவன் செய்யும் மூன்றாம் ரக வேலைகள் தடையின்றி நடக்க கொஞ்ச காலம் அமைதியாய் இருக்க முடிவு செய்து கொண்டான். அடியாட்களை கொண்டு வேலை சாதிக்க பழகி இருந்ததால் வளரும் மாஃபியா தலைவன் அவன். சிவனின் கண்காணிப்புக்கெல்லாம் அவன் சிக்கவில்லை.

கல்யாணம் முடிந்து ஏழு வருஷங்கள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்னும் தவிப்பு சங்கரன் ரத்னா தம்பதிக்கு உண்டு. ரத்னாவுக்கு இப்போது எரிச்சலும் கோவமும் அதிகமாகிவிட்டது. காண்பிக்க இடம் இன்றி சங்கரனை உலுக்கி எடுக்கிறாள். அவனுக்கும் புரிகிறது அவள் நிலை. என்ன செய்ய என்று புரியாமல் அமைதி காக்கிறான். திலகாவோ வேறு திருமண உறவுக்கு அவனை வற்புறுத்தி பார்க்கிறாள். அது வேறு ரத்னாவுக்கு மன உளைச்சலை அதிகப்படுத்தி விட்டது.குழந்தை பிறக்க வேண்டுமானால் தவிப்பு இருந்தாலும் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டுமல்லவா? இதுதான் அவர்கள் இருவருக்கும் புரியவில்லை. சங்கரனுமே அம்மாவின் பேச்சுகளில் மிகவும் சோர்ந்து போனான். அவனால் மனைவிக்கும் அம்மாவுக்கும் நடுவில் பந்தாக உருள முடியவில்லை. அவனுக்கு மன உளைச்சல் தான். ரத்னாவுக்கோ எங்காவது தன்னையும் சங்கரனின் பிரித்து விடுவார்களோ என்ற பயம், அதை யாரிடம் காண்பிப்பது என்று தெரியாமல் அவனிடமே சண்டை. இருவருக்கும் அமைதியாக இருக்க உதவி செய்யும் இடம் வேலை செய்யும் இடமே!
இருவரும் சந்திக்கும் நேரங்களை குறைத்து கொண்டு இரவில் மட்டுமே வீட்டில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது என்ற நிலைமையில் வந்து நின்றது அவர்களது பந்தம்.இருவருக்குமே இந்த மையப் புள்ளியில் சலிப்பு தட்டியது. காதல் எனும் உணர்வில் தான் இருவரும் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அங்கே தேவைப்படுவது புரிதல். அது வாய்த்து விட்டால் குழந்தை பிறக்கும் போது பிறக்கட்டும் என்று பக்குவம் வந்து விடுமே!
*****************************

சாதுர்யா அடிக்கடி தன் பெற்றோரிடம் பேசினாலும் கூட முன்பு இருந்த அளவிற்கு அவளால் ஈடுபாட்டுடன் அவர்களுடன் பேச முடியவில்லை. எங்காவது தனக்கும் ரங்கனுக்கும் இடையேயான காதலைப் பற்றி பேசி விடுவோமோ என்ற பயம் அவளுக்குள். மாலதியின் எண்ணம் அவளுக்கு தெரியும். இரண்டு மூன்று முறை மாலதியும் மகளை திருநெல்வேலி சென்று விட்டு வருமாறு வற்புறுத்தி பார்த்தும் கூட பெண் அசைந்து கொடுத்தாளில்லை.
அங்கிருந்துகொண்டு எதுவும் செய்ய முடியாமல் மாலதி தன் மாமியாரிடம் சொல்ல, அனுப்பி வைப்பதாக லக்ஷ்மி அம்மாளும் ஒப்புக்கொண்டார். ஆனால் பெண்ணோ ஏதோ ஒரு காரணம் காட்டி போவதை தவிர்த்துக் கொண்டே இருந்தாள்.
இவளது மதிப்பெண்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டே வந்த ரங்கனும் அவளை வெகுவாக திட்டிவிட்டான்.
' இப்படி எல்லாம் மார்க் வாங்குவது உனக்கு இது படிப்புல எண்ணம் குறைஞ்சுட போகுதுன்னு சொல்லிட்டுத்தான் நான் விலகி விலகி போனேன். இங்க படிச்சுகிட்டே என்னோட பொண்டாட்டி செலவெல்லாம் நானு பார்த்துக்கணும்னு வேலைக்குப் போயி உனக்கு பணம் அனுப்புறேன். நீ... பொறுப்பில்லாம இப்படி இருக்க' என்று.அவன் சொல்வதில் இருக்கும் உண்மை புரிந்ததாலேயே சாதுர்யா அமைதியாக இருந்தாள்.

அவனே தொடர்ந்தான்... நா ஆசை பட்டது இந்த சாதுர்யாவ இல்ல. நிமிர்ந்து பாத்து பேசும், கல்யாணம் இல்லன்னாலும் அப்பா மாதிரி சிவில் சர்வீஸ் எழுதி கலெக்டர் ஆகிடுவேன்னு சொன்னவளை தான்.அதுக்கு வழிய பாரு. நா அங்கே வர வரைக்கும் உன்கிட்ட பேச மாட்டேன். உன்னியல்பை தொலைக்க நா விரும்பல. பை என்று வைத்து விட்டான். அலைபேசியை வெகுநேரம் வெறித்து பார்த்தவளுக்கு புரிந்து போயிற்று அவன் மிகவும் தீர்மானமாக தான் சொல்கிறான் என்று. உள்ளூர அழுகை வந்தபோதும் அடக்கி கொண்டவளாக, இனியாவது நன்றாக
படிப்போம் என்று முடிவு செய்து கொண்டவளுக்கு அவள் அத்தான் இனி நினைவுகளிலிருந்து தன்னை மீட்டு எடுத்துக் கொள்வது அவ்வளவு சுலபமாக இல்லை. முதல் வருடம் முழுவதும் மார்க்குகள் வெகுவாக குறைந்துவிட்ட நிலையில், இரண்டாம் வருடத்தில் முதல் செமஸ்டர் முடிந்துவிட்டது. அடுத்த செமஸ்டரிலும் விட்டுவிட்டால் கண்டிப்பாக மூன்று வருட மதிப்பெண்களை கூட்டும்போது இரண்டாம் வகுப்பு தான் கிடைக்கும். எப்படியோ தன்னை கொஞ்சம் கொஞ்சமாக சுதாரித்து படிப்பிற்குள் தன்னை நுழைத்துக் கொண்டாள். தாமோதரன் மூலம் ரங்கன் அவளைப்பற்றி கேட்டுத் தெரிந்து கொள்கிறான். இருவழி பாட்டி தாத்தா அத்தை மாமா இன்று எல்லோருடனும் சந்தோசமாக வாரம் ஒருமுறை பேசும் ரங்கன் அவளிடம் மற்றும் பேசுவதை அறவே நிறுத்திவிட்டான். அவளை நிலை அவனுக்கு புரியாமல் இல்லை. இது நிறைவேறுமா, நிறைவேறாதா என்ற தெரியாமலேயே பல வருடங்களாக மனதில் அவள் மீதான காதலை பொத்தி பொத்தி வைத்திருந்தவன் அவன். அவனுக்கு இல்லாத மன வலியா? அவள் சொல்வதற்கெல்லாம் அசைந்து கொடுத்தது தவறு என்பது ரங்கனின் இப்போதைய எண்ணம். படிக்க வேண்டிய வயதில் இதெல்லாம் தேவையா என்று கூட அவனுக்கு சலிப்பு வந்துவிட்டது. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்காது போல இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் கழித்து தன் மனதில் இருப்பதைச் சொல்லி இருக்கலாம். இப்போதைய சொன்னதுதான் அவளது இந்த மாற்றத்திற்கு பெரிய காரணமாகிப் போயிற்று என்ற எண்ணம் அவனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கேள்விகள் கேட்டது.

அவளது மனம் போல் நெற்றியில் குங்குமம் வைத்து விடுவது எல்லா பெரிய விஷயமாக இதற்கு இவ்வளவு அழுத்தம் கொடுத்து யோசிக்க வேண்டாமா என்று யோசித்தாலும்,இன்னொரு பக்கம் கணவன் மனைவி உறவை உறுதி செய்வது கணவன் மனைவியின் நெற்றியில் குங்குமம் தானே, தாலிக்கயிறு என்ற ஒன்று வெளி உலகத்தில் பெண்ணின் திருமணத்தை அறிவிக்க தானே, குங்குமம் தானே இருவரது உறவையும் உறுதிப்படுத்துகிறது. இந்த உறவு எவ்வளவு தூரம் சரியானது என்றெல்லாம் தனிமையில் அவனுக்கு குழப்பம்தான் அதிகரித்தது. மனதளவில் இருவரும் கணவன் மனைவி தான். அதற்கு ஊரை கூட்டி சாட்சி சொல்ல வேண்டியதில்லை. ஆனால், படிக்கும் நேரத்தில் எல்லோரும் இந்தப் பெண் என்னையே நினைத்துக் கொண்டிருந்தால், கல்வி என்றானாலும் முக்கியம் ஆயிட்டே... என்று மனதினுள் மருகினான்.
ஆனால் இவ்வளவுக்குப் பிறகும் கூட இவர்களது காதல் தோற்கக் கூடும் என்று தெரிந்திருந்தால், காந்தர்வ திருமணம் செய்து கொண்டதை அவளே மறுக்கக் கூடும் என்று வருங்காலத்தில் அறியும் சக்தி அவனுக்கு இருந்திருந்தால் அவர்கள் வாழ்க்கை பாதை முள்ளால் இல்லாமல் மலரினால் அலங்கரிக்க பட்டிருக்கலாம். இவர்கள் வாழ்க்கையில் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறதா இல்லை நரகத்திலா...

















 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
26


சாதுர்யா படிப்பில் தன்னை முழுமையாக நுழைத்துக் கொண்ட போதிலும், ரங்கனின் ஞாபகங்களில் இருந்து வெளிவந்த படிப்பை உள்ளே செலுத்துவது அவனுக்கு மிகவும் கஷ்டமாகத் தான் இருந்தது. ரங்கன் இப்போதெல்லாம் அவளிடம் சுத்தமாகவே பேசுவதை தவிர்த்து வருவதன் பலனாக அவனது கோபத்தின் அளவு அவளுக்கு தெளிவாக புரிகிறது. இப்போது இவ்வளவு கடுமையாக நடந்து கொள்ளும் ரங்கன் அந்தப் பெண்ணின் காதலனோ கணவனோ இல்லை. அவள் மீது ஆழமான பிரியம் வைத்திருக்கும் அவளது அத்தான். அவனுக்கு இந்த பெண் ஒழுங்காக படித்தாக வேண்டும். சமூகத்தில் அவளுக்கென்று ஒரு இடம் இருத்தல் வேண்டும். படிப்பதற்கு ஏதேனும் லடாய் செய்தால் சிறுவயதிலிருந்தே கணக்குப் பாடத்தை எடுத்துக் கொண்டு இவளுடன் அமர்ந்து விடுவான் ரங்கன். படிப்பு என்றும் அமர்ந்துவிட்டால் அவன் கடுமையான ஆசிரியன். இப்பொழுதும் இவளிடம் அதே கடுமையை காட்டுகிறான். பெண் உள்ளுக்குள் தவித்தாலும், அவன் அவள் மீது கொண்டிருக்கும் வாஞ்சையை நினைத்து பெருமை கொள்கிறாள். முதல் வருட பாடங்களிலிருந்து எடுத்து அவற்றை ஊன்றிப் படித்து விட்டு இரண்டாம் வருட பாட புத்தகங்களை எடுத்து வைத்தாள். இப்பொழுது படிக்கும்போது பாடங்கள் என்றால் புரிவது போல் இருந்தது. கூடவே தன் அருகிலேயே ஆஸ்தானம் அமர்ந்திருப்பது போல் யோசனை செய்து கொண்டே படித்ததனால் இன்னும் கொஞ்சம் சுலபமாகவே பாடங்கள் புரிந்தன. தன்னை நினைத்து தன் மனதிற்குள்ளேயே சிரித்துக்கொண்டாள் சாதுர்யா.
தில்லியில் இருந்தவரை நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை யாருக்கும் அஞ்சாத மனம் என்றெல்லாம் பாரதியின் புதுமைப் பெண்ணாக இருந்தவள், இன்று ஏன் இப்படி ஆகிவிட்டாள் என்பது அவளுக்கே புரியாத புதிராக இருக்கும் போது வெளியில் அவள் மாற்றத்தைப் பற்றி பேசுபவர்களை என்ன சொல்வது?
சாதுர்யாவிற்கு நிச்சயம் தெரியும் ரங்கன் விரும்பியது அந்தப் பெண்ணைத் தான். இப்படி காதலாகி கசிந்துருகி நிற்கும் பெண்ணை அவனுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. தன்னைத் தொலைத்து வாங்கப்படும் காதலில் அவனுக்கு உடன்பாடு இல்லை. 'நீ நீயாக இருக்கணும் சாதுர்யா, எல்லாத்துக்கும் என்னோட முகத்தை பார்ப்பதை முதல்ல நிறுத்து ' என்று அவன் வெளிநாடு செல்லும் முன்பே சத்தம் போட்டு இருந்தான். அவள் தன் இலட்சியங்களை விட்டுவிட்டு தன்னுடன் வர வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவன் பார்த்து பிறந்த குழந்தை அவள். அவளை ரங்கன் முழுமையாக காதலிப்பதால் தான் அவள் மீதான பொறுப்பையும் அதிகமாக காட்டுகிறான். அவன் வெளிப்படுத்தும் விதம் வழக்கத்திற்கு மாறாக இருக்கலாம். ஆனால், காலம் எவ்வளவுதான் மாறினாலும் மனம் ஒரு முறை தடம் மாறிவிட்டால் வாழ்க்கைப் பாதையும் நிச்சயம் மாறிவிடும்.
காதலும் திருமணமும் நமக்கு எந்தவிதத்திலும் முன்னேற்றத்தை தடை படுத்துவதாக அமைந்துவிடக்கூடாது. ரத்னாவும் கூட திருமணத்திற்குப் பிறகுதான் தனது இளங்கலை பட்டப் படிப்பை முடித்து இன்று பல இளம் சேர்ந்து விட்டாள்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் மட்டும் பெண் இருந்து பயனில்லை. அவனுடனேயே அவளும் பிரயாண படவேண்டும். அதற்குப்பின் எப்பொழுதும் தன்னை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ரங்கனின் அம்மா ரேணுகா தன் கணவனின் தொழிலுக்கு தன்னால் இயன்றவரை நிர்வாகத்தில் உதவி செய்கிறாள்.
ரங்கன் மற்றும் சாதுர்யாவின் பாட்டி லட்சுமி அம்மாள் கணவனுக்கு துணையாக தான் இருக்கிறாள். அவர் சிறந்த நிர்வாகி என்று தாமோதரன் நினைக்கும் அளவிற்கு.
இப்படி பெண்களை பார்த்தவனுக்கு மனதின் எதிர்பார்ப்புகள் எத்தகையதாக இருக்கக் கூடும்?
அவன் யோசிப்பதில் என்ன தவறு?அவள் மீது தீராக்காதலை கொண்டுள்ளவன் அவள் தனக்குக் கீழே இருக்கவேண்டும் என நினைப்பானா என்ன?

பெண்ணை ஆண் அடிமையாக்கலாம்... அன்பால், காதலால்!அப்படி பார்த்தால் அவளும் அவனும் ஒருவருக்கொருவர் அடிமைகள்தான். இருவரின் உயிர் மூச்சு உள்ளவரை. அவர்கள் பிரிவை சந்தித்தாலும் காதல் குறையாது.

சாதுர்யா பிடிவாதமாக படித்தாள். அவனை, அவனது கோவத்தை வெற்றி கொண்டு தன்னுள் அவனை சிறை கொள்வதற்காக. நேற்றும் அவளுக்கு ரங்கனின் கோபத்தை கண்டால் பயம் தான். இன்றும் வரும் காலத்திலும் கூட அவனுக்கு கோபத்தைக் கண்டு அவளுக்குள் ஒரு நடுக்கம்தான். ரங்கனுக்கு எப்போதும் கோபம் வெளிவராது. வந்துவிட்டால்... அது வேறுதான்.

அந்த செமஸ்ட்டரில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்ததால் அவள் மனதிற்குள் நம்பிக்கை காலூன்றி விட்டது. தனது அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்த சாதுர்யா தனது மதிப்பெண்களையும் ரங்கனுக்கு இமெயில் செய்துவிட்டாள் . தனிமையில் இருக்கும்போது ஆற்றங்கரையில் அவன் கொடுத்த முத்தத்தின் எச்சங்கள் அவளை தூங்கவிடாமல் செய்கிறது. தன்னை விட்டுவிட்டு அவன் எப்படி இருக்கிறான் எனக்கு மட்டும் ஏன் இப்படி... என் சுயத்தை தொலைத்து எப்படி அவனை மட்டும் யோசிப்பவள் ஆனேன் என்ற பெண்ணின் மனதில் எக்கச்சக்க கேள்விகள். காமனின் கணைகளை தனியாக என்று சமாளிக்க முடியாமல் திணறினாள் பாவை. இரவுகளில் அவனின் அணைப்புக்காக, பகல்களில் அவனின் அழைப்புக்காக ஏங்கினாள் அவள்.
நாளை வேலை முடித்து வந்தவனுக்கு அவளது இமெயில் முகத்தில் சிரிப்பை வரவழைத்தது. யூ நாட்டி என்று கொஞ்சியவன் மதிப்பெண்களை பார்த்துவிட்டேன். இது தொடர வாழ்த்துக்கள் என்று மட்டும் பதிலுக்கு ஈமெயில் செய்துவிட்டு வேலைகளைக் கவனிக்கச் சென்று விட்டான். அவனுக்கும் பரீட்சைகள் நெருங்கிக்கொண்டிருந்தது. இரவும் பகலும் அவன் படித்தாக வேண்டும். என்றடா தன் மனைவியை பார்ப்போம் என்று அவன் மனமும் பேயாட்டம் தான் போடுகிறது. இளமையின் வேகம், இரவிலும் பகலிலும் அவள் துணையை மனம் தேடுகிறது. அவளை தன்னுடன் இறுக்கிக் கொள்ள, அவளின் கழுத்தில் வாசம் பிடிக்க, அவளின் மடியில் கிறங்கி கிடக்க இளமை அவனை அலைக்கழிக்கிறது. முத்தத்தில் பெண்மை அவனை பாடாய் படுத்துகிறது.
ஆனால், படித்து முடித்துவிட்டு ஒரு வருடம் ஸ்பெயின் சென்று அத்தையிடம் கொஞ்சம் தொழில் கற்றுக் கொள்ளலாம் என்று அவன் யோசித்து இருக்கிறான். என்றும் ஏட்டுச்சுரைக்காய் மட்டும் கறிக்கு உதவப் போவதில்லை அனுபவ பாடமே ஒருவனை செதுக்கும் என்ற தீவிர நம்பிக்கை அவனுக்கு உண்டு. மேற்கத்திய நாடுகள் முழுவதும் தனது தொழிலை பரப்ப வேண்டும் என்ற வெறி அவனுக்குள். பெண்ணின் காதல் அவனை போராடி ஜெயிக்க தூண்டுகோள். யார் சொன்னது காதலில் விழுந்தவர் வாழ்க்கையிலும் விழுவார் என்று... 'நான் வெற்றிக்காக பிறந்தவன் என்று அடிக்கடி மனதிற்குள்ளும் சொல்லிக் கொள்வான்.
ஆனால், அவன் வாழ்க்கையில் அவன் சந்திக்க போகும் பெரிய தோல்வி அவனை எங்கு கொண்டு சேர்க்கும்... அவன் கரை சேர வேண்டுமென்று நான் யாசிக்கிறேன்.
**********************************************************

உமாவும் சரி,ராகாயியும் சரி, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்கள். உமாவுக்கு வெளி உலகம் புதிதாய் தெரிகிறது.
ராகாயியிக்கு வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கும் நேரம் இது. உமாவின் வெற்றிக்கு அருணாச்சலம் காரணமென்றால் ராகாயிக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு தேடிக் கொடுத்தது சிவம்.
இப்போதெல்லாம் வீரனும் ராக்காயியும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகிவிட்டது. அவளின் பழைய வாழ்க்கை பற்றி அவனுக்கு எந்த கவலையும் இல்லை. அவளது இப்பொழுது வாழும் நேர்மையான வாழ்வு அவனுக்குள் மன திருப்தியை கொடுக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால், கட்சிக்குள் நுழைந்த பிறகு அவளுக்கு வேறு விதமான தொந்தரவுகள் ஆரம்பமாகிவிட்டது. அவளது பெண்ணும் வளருகிறாள். ராக்காயி மனதுள் ஆயிரம் பயங்கள். அவளது வாழ்க்கை பற்றியும் தனது கடந்த காலத்தை பற்றியும் அவள் எண்ணி மருகாத நாட்களே இல்லை. அது மனதில் கலகத்தை உண்டு பண்ணியிருக்கிறது. ஒரு பெண்ணாக பெண்கள் சந்திக்கும் ஆயிரம் கொடூரங்கள் அவளுக்கு தெரியும். இப்பொழுது அவளுக்கும் அவள் பெண்ணுக்கும் தேவை தகுந்த துணை. வீரனை அவள் மனம் விரும்புகிறது தான். ஆனால் நிஜம் வேறு.

உமாவுக்கு தேர்தலில் கிடைத்த வெற்றி ஒரு பக்கம் குருவின் மனதில் அமிலத்தை ஊற்றினாலும் இன்னொரு பக்கம் மனைவியின் பதவியை வைத்து தான் பெறும் லாபங்கள் என்ன என்று அவன் மனது கணக்கிட தொடங்கிவிட்டது.
அவனால் முடிந்த அளவில் மனைவியின் பெயரை வைத்து எதை எதை சாதித்து கொள்ள முடியுமோ அதை எல்லாம் செய்ய தொடங்கி விட்டான். ஆற்றங்கரையில் மணல் கொள்ளை ஆரம்பித்து, கஞ்சா விற்பனை போதைப்பொருள்கள் கடத்துவது பெண்களைக் கூட சமயத்தில் வெளிநாடுகளுக்கு விற்பது என்று அவன் அக்கிரமங்கள் அரக்கனை விட மோசமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. மனைவியின் பதவி வைத்து இப்பொழுதெல்லாம் அவனை கட்டப்பஞ்சாயத்து செய்து வைக்கவும் அழைக்கிறார்கள். சமயத்தில் தனது அப்பா பங்கேற்கும் கூட்டங்களில் கல்லெறிதல் அழுகிய முட்டையை, தக்காளியை மேடை நோக்கி வீசுதல் போன்ற விஷயங்களையும் தனது ஆட்களை வைத்து செய்கிறான். இது அருணாசலத்திற்கு சிவனுக்கும் தெரியும் தான். இதை வைத்து ஆளும் கட்சி மீது வீண் பழிகளை சுமத்தி அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார் அருணாச்சலம்.

*****************************
ரத்னா தன் தங்கை சாந்தாவிடனும் அம்மாவுடனும் வாரம் ஒரு முறை பேசுவது அவள் வழக்கம். சமயத்தில் சங்கரனும் அவர்களுடன் பேசுவான். அப்படி பேசிக்கொண்டிருக்கும்போது ரத்னா குழந்தை மீதான தனது ஏக்கத்தை பற்றி சொல்லிக்கொண்டே அழுது விட்டாள். அவள் அழுவதைப் பார்த்த சங்கரனுக்கும் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்துவிட்டது. இதை ஸ்கைப்பில் பார்த்துக் கொண்டிருந்த சாந்தாவுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.ரத்னாவை விட சிறியவள். திருமணம் முடிக்காதவள் அவர்களுக்கு என்ன சொல்லிவிட முடியும். அந்தரங்கத்தையும் பேசுவதற்கு அவளால் முடியாது. இருந்தாலும் ஒருவாறு தன்னை தயார்படுத்திக்கொண்டு
"அக்கா நா சொல்றத கேளுங்க. குழந்தை எப்போ பிறக்குமோ அப்ப பிறக்கட்டும். உங்க ரெண்டு பேருக்கும் இன்னும் இளமை இருக்கு. மனசு போட்டு அலட்டிக்காதீங்க. ரெண்டுபேரும் ரிலாக்ஸா இருங்க. பீச்சுக்கு போயிட்டு வாங்க. ரெண்டு பேரும் நிறைய ஒண்ணா நேரத்தை செலவு பண்ணுங்க. குழந்தைய பத்தி பேசாதீங்க. நீங்க ரெண்டு பேரும் குழந்தை பெத்துக்க கல்யாணம் பண்ணிக்கல. ஒண்ணா வாழ்க்கை வாழ கல்யாணம் பண்ணி இருக்கீங்க. புரிஞ்சுக்கோங்க கா"
என்றுவிட்டு அலைபேசியை வைத்துவிட்டாள். அவள் சொல்வதில் இருப்பதில் இருக்கும் நியாயம் இருவருக்குமே புரிந்தது. கொஞ்ச நாட்களாய் குழந்தை ஏக்கத்தில் அவர்கள் செய்ய விட்டிருந்தது என்ன என்பதும் புரிந்துவிட்டது. ஊர் உலகத்துல
இருக்குறவங்களுக்காக நாம வாழ முடியாது. காதலை விட்டு கல்யாண வாழ்க்கை ஜெயிக்காது, இனிமே நாம காதல தொடர்வோம் ரத்னா என்றான் சங்கரன்.
அதன் பிறகு இருவரும் புதிதாய் திருமணமான ஜோடி போல தங்களை பாவித்துக் கொண்டார்கள். வாழ்க்கை அவர்களுக்கு ஆனந்தமாய் போய்க்கொண்டிருந்தது. கணவனது அன்பில் மூழ்கி எழுந்தாள் ரத்னா. குழந்தை பற்றி இருவருமே யோசிப்பதில்லை. திலகாவும் திலகாவின் கணவரும் அப்ப போது சங்கரனின் மனதை மாற்றுவதற்கு எவ்வளவு முயற்சி செய்தும் அவன் மனைவி விட்டு நகர்வதற்கு கூட தயாராக இல்லை. இவையெல்லாம் சேர்ந்து திலகாவின் மீதான வன்மையை கூட்டி விட்டது திலகாவின் குடும்பத்தினருக்கு. சங்கரன் இவர்களுடன் வந்து தன் மனைவியுடன் வாழ்வதற்கு தயாராக இல்லை. ரத்னாவிற்கு நல்ல சம்பளம் வருகிறது தான். ஆனால் அவளும் தனது சம்பளம் பற்றி எல்லாம் திலகா குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதில்லை . மொத்தத்தில் திலகா குடும்பத்தைப் பொறுத்தவரை ரத்னாவை சங்கரனிடமிருந்து பிரிப்பது தான் முக்கிய தேவை என்றாகிவிட்டது.
இரண்டாம் திருமணம் பற்றி வீட்டிற்கு வந்திருந்த திலகாவும் திலகா கணவரும் பேசப் பேச ரத்னாவுக்கு கண்களில் கண்ணீர். இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சங்கரனுக்கு டென்ஷன் அதிகமாகி வீட்டில் பெரிய சண்டை. இப்பொழுதுதான் ரத்னாவும் சங்கரனும் மனதிற்கு துன்பம் தரும் விஷயங்களை தூர ஒதுக்கிவிட்டு இன்பமாக வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். அது பொறுக்காதது இப்படி ஒரு சண்டை. எப்படியும் சங்கரன் மறுப்பான் என்று தெரிந்தே, வீடு தேடி வந்து சங்கரனிடம் திலகா இந்த பிரச்சனையை ஆரம்பிக்கிறாள். கணவனும் மனைவியும் சந்தோஷமாக இருப்பது அவளுக்கு சற்றும் பொறுக்கவில்லை. குழந்தையை மையமாக வைத்து பேசும் போது வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் இருக்கும் சந்தோஷமான நிலை மாறிவிடும் என்பது அவளின் கணக்கு. இது அடிக்கடி நடப்பதுதான். என்றும் அதுதான் நடந்தது.
தமிழ்நாட்டிற்கு லோடு ஏற்றி செல்ல வேண்டிய டிரைவர் வராத காரணத்தினால் இன்று சங்கரனே வண்டியை எடுப்பதாக இருந்தது. திலகா தான் வந்த வேலையை வெற்றிகரமாக முடித்து விட்டு கணவருடன் கிளம்பிவிட்டாள். சங்கரனுக்கு தான் உள்ளூர பதட்டம். ரத்னா எவ்வளவு சொல்லியும் தானேதான் போயாக வேண்டும் வேறு யாரையும் அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டு சங்கரன் கிளம்புவதற்கு தயாராகிறான் முதன் முறையாக தன் மனைவியின் பேச்சை மிரி கொண்டு அவன் எடுக்கும் முடிவு இது .
ரத்னா விற்கு ஏனோ கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது. வயிற்றில் ஏதோ பிசையும் உணர்வு. அவளை மெல்ல மெல்ல சமாதானம் செய்ய முற்படுகிறான் கணவன். அவன் கிளம்பி ஆகவேண்டும். இருவரும் இரவு உணவு சாப்பிட உட்காருகிறார்கள். வழக்கம்போல தன் தட்டில் சோற்றைப் பிசைந்து கவளங்களாக்கி மனைவியின் வாயில் ஊட்டி விடுகிறான் கணவன். ரத்னாவினால் அதை விழுங்க முடியவில்லை. திலகா வந்து செல்லும் நேரங்களில் இப்படித்தான். சங்கரனால் பெற்றவளை வராதே என்று சொல்ல முடியாது. வாயை திறக்காமல் இருந்துவிடுவது என்று முடிவு செய்துவிட்டான்.

சாப்பிட்டுவிட்டு சங்கரன் கிளம்ப, தலையில் பல்லி வேகமாக விழுகிறது. அது என்னவென்று கூட பார்க்காமல் வேகமாக வெளியே செல்கிறான். பின்னாடியே வந்த ரத்னாவுக்கும் கால் தடுக்கி நகம் பெயர்ந்து அங்கேயே அமர்ந்து விடுகிறாள்.

விடிகாலையில், அவளது அலைபேசி மணி எழுப்ப சங்கரன் தான் அழைக்கிறான் என்று நினைத்துக்கொண்டு அவசரமாக அலைபேசியை காதில் வைக்கிறாள்.
மறுநாள் காலையில், சங்கரன் உடம்பு முழுக்க கட்டுகளுடன் நடுவீட்டில் படுக்க வைக்கப்படுகிறான். தலைமாட்டில் யாரோ விளக்கு ஏற்றி வைக்கிறார்கள். விட்டத்தை வெறித்து பார்த்துக்கொண்டு தாங்கள் இருவரும் சாப்பிட இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள் ரத்னா. நடந்தது எதுவும் அவளுக்கு புரியவில்லை. திலகா எல்லாவற்றுக்கும் காரணம் ரகுநாதனின் என்று பழி சுமத்துகிறார்கள். அது எல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் பெண் இல்லை. அவள் அழவில்லை. சிலைகள் என்றும் அழுவதில்லை. அவள் அலுவலகத்திலிருந்து உடன் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் அவளை அணைத்துக் கொண்டு அழ வைக்க முயற்சி செய்கிறார்கள். சிவனும் கூட வந்துவிட்டார். அவருடன் உமாவும் கூட வந்து இருக்கிறாள். ரத்னா என்ன தான் அதிர்ச்சியில் உறைந்து இருந்தாலும், அவள் உடலோ தன் வேலையை செவ்வனே செய்தது. அவள் வயிற்றில் பூத்திருந்த சிறு மொட்டு ரத்தமாய் கீழே. ஆனால் அதை உணரும் நிலையிலும் கூட அவள் இல்லை. அதைப் பார்த்தவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி. எல்லோரும் கண்ணீரில் கரைய, உயிரை உருக்கி விட்ட நிலையில் ரத்னா.

பத்து நாட்கள் சடங்கில் கூட கலந்து கொள்ள விடாமல் ரத்னாவை விரட்டியடித்தார்கள் திலகாவின் குடும்பத்தினர். சங்கரனின் உடல் எடுத்த உடனேயே கிளம்பி விட்டாள் உமா. அவளைக் கொண்டுபோய் விட்டுவிட்டு திரும்ப வருவதாக சொல்லிவிட்டு சென்ற சிவனுக்கும் திருச்சி செல்லும் போது உடலுக்கு சற்று முடியாமல் போக வரும் வழியிலேயே சிவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தாள் உமா. ரத்னாவின் வாழ்க்கை இப்படி முடிந்து விடும் என்று உமா கனவில் கூட நினைக்கவில்லை. இதற்காகவா இந்த பெண்ணுக்கு இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து அனுப்பி வைத்தோம் என்ற எண்ணம் அவளை கூறு போட்டது. இந்த சிறுவயதில் அடுத்து இந்த பெண் என்ன செய்யப்போகிறாள் என்று துடித்தது உமாவின் மனம்.

பத்து நாட்கள் எப்படியோ அங்கு சமாளித்து இருந்தவளுக்கு, சங்கரன் உடன் வாழ்ந்த வீட்டிற்குள், நுழைவதே பெரும் பாடாகி போயிற்று. கணவனுடன் வாழ்ந்த காதல் வாழ்க்கை அவளை அணு அணுவாக கொன்றது. அவன் கொடுத்து விட்டுச் சென்ற ஈர முத்தங்களும் காதல் மொழிகளும் அவளை மூச்சுத் திணற வைத்தது.
திலகாவின் வீட்டினர் சங்கரனின் சொத்துக்கள் எதிலும் ரத்னாவுக்கு பங்கு கிடையாது என்று அவளை துரத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். சங்கரனும் அதற்கு ஏற்றார்போல் தொழில் எல்லாவற்றிலும் திலகாவின் பெயரில்தான் தொடங்கியிருந்தான். சிவமும் உமா குடும்பத்தினரும் தமிழ்நாட்டில் அவ்வளவு செல்வாக்கு இருந்தாலும் அவர்களாலும் கூட ஒன்னும் செய்ய முடியாது.

கணவனே போயாயிற்று. அவன் கொடுத்திருந்த கருவும் போயிட்டு. இனி இந்த சொத்துக்களை வைத்துக்கொண்டு மட்டும் என்ன செய்வது என்ற மனநிலையில் இருந்தாள் ரத்னா . அவளுக்கு போராட சுத்தமாக இஷ்டமில்லை.

கணவனுடன் காதல் வாழ்க்கை வாழ்ந்த திருச்சூரில் இருப்பதற்கும் ரத்னாவால் முடியவில்லை.

அம்மாவும் தங்கையும் கனடாவிலிருந்து வர இயலாத சூழ்நிலை. சிவனுக்கும் திருச்சூர் வருவதற்கு அந்த சமயத்தில் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. சங்கரனின் மரணம் அவர் தலையில் பெரிய இடியை இறக்கி இருந்தது. ரத்னா அவருக்கு துணையாக இருக்க வேண்டியவர் மருத்துவமனையில். இந்த சமயம் நிஜமாகவே அனாதையாகி போனாள் ரத்னா.

அடுத்து என்ன என்று ரத்னா யோசித்துக் கொண்டிருக்கும்போது, சென்னைக்கு மாற்றலாகி உத்தரவு வந்தது.

இந்த உத்தரவு தானாக வந்ததா... இல்லை தடிகொண்டு கனிய வைக்கப்பட்டதா?

தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது என்று உமா இவளை சங்கரன் என்னும் காதலை வைத்து பூட்டி இருந்தாள். ஆனால் இனி அந்த பூட்டி இல்லை.

இனி ரத்னா நிலை... நெஞ்சு நடுங்குகிறது.
 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
குழந்தை வளர வளர இந்த வாழ்க்கையில் இதுவே பெரிய சந்தோஷம் என்று மௌனமாகவே இருக்க பழகிக் கொண்டாள் உமா. ஸ்கந்தன் தனது விளையாட்டால், அறிவார்ந்த அவனது பேச்சால் வீட்டிலிருந்து பெரியவர்கள் எல்லோரையும் கட்டிப் போட்டான். பள்ளியிலும் நன்றாக படிப்பவன் என்பதால் அவன் மீது இதுவரை எந்த புகார்களும் பள்ளியிலிருந்து வரவில்லை. அரசியல் தொடர்பு கொண்ட குடும்பம் என்பதாலோ என்னமோ அவனுக்கு நண்பர்கள் மட்டும் அமையவில்லை. அதற்கும் சேர்த்து வீட்டில் அம்மா பாட்டி இருவரின் உடனேயே உரையாடுதல், விளையாட்டு என்று நேரத்தை போக்குதல்,பாட்டி தாத்தாவிடம் கதை கேட்டல் என்பது போன்ற விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். தாத்தா அருணாச்சலம் இப்போது அடுத்த தேர்தல் வேலையில் மும்மரமாக இருப்பதாலோ என்னவோ பேரன் மீது அவ்வளவு தூரம் ஈடுபாட்டை காண்பிக்க முடியவில்லை. இவர்களது குடும்பம் இன்னும் சென்னை வரவில்லை. திருச்சியில் தான் ஸ்கந்தனின் படிப்பு. தினமும் ஸ்கந்தன் பள்ளி செல்லும் போது அம்மாவும் அவனுடன் காரில் சென்று விட்டு வருவாள். அம்மா பிள்ளை இருவருக்கிடையே பாசத்தின் முடிச்சு இறுகி இருந்தது. இவ்வளவு காலத்திற்கு பிறகும் கூட குரு திருந்துவதாக இல்லை. மனைவிடம் திரும்புவதாகவும் இல்லை. அவளிடம் தனிச்சிறப்பாக மற்ற பெண்களிடம் இல்லாதது எதுவும் இருப்பதாகவும் அவனுக்கு தோன்றவில்லை.
உமா ஊராட்சி மன்ற தலைவியாக இருக்கிறாள். ஆனால் பெயரளவுக்குத்தான். அவளுக்குள் இருக்கும் சுயத்தை தேடித்தேடி அவளும் களைத்து போனாள் . வெறும் அவளிடம் கொடுக்கப்படும் கோப்புகளில் மட்டும்தான் கையெழுத்து போட அவளுக்கு அனுமதி. மற்ற எல்லா விஷயங்களையும் கட்சி கவனித்துக் கொள்ளும். அவளுக்கு தன் மாமனார் சொன்ன படிக்கு இந்த தேர்தலில் நின்றிருக்கக்கூடாது என்று காலம் கடந்து தான் தோன்றியது. அருணாச்சலம் அவரது பதவியை தன் முழு அரசியல் செல்வாக்குக்குள் முடக்கி விட்டிருந்தார். உமாவால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. பல விஷயங்கள் அவள் கையை மீறி சென்றுகொண்டிருந்தது. அவளுக்கு தெரிந்திருந்தும் அவளால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலை. வெறும் பொம்மை போல் இயங்கிக் கொண்டு இருந்தாள். அவள் தலையிடக் கூடிய ஒரே விஷயம் ஸ்கந்தன் தான். அன்னபூரணிக்கும் இப்போதெல்லாம் உடம்பு அவ்வளவாக சரியில்லை. கொஞ்ச நாளாக வெகுவாகவே மனதை அலட்டி கொள்கிறாள். காரணங்கள் யாருக்கும் விளங்கவில்லை.

சிவனை கூட்டிக்கொண்டு எப்பொழுதும் கணக்கு பார்க்க தோப்புகளுக்கு சென்று பார்வையிடுவது அனுப்புவது வழக்கம். ஆனால் கடந்த சில வருடங்களாகவே இதையெல்லாம் செய்வதற்கு சிவனால் அவளுடன் கூட வர முடிவதில்லை. முன்பெல்லாம்
உமாவையாவது கூட கூட்டி செல்ல முடியும். இப்போதெல்லாம் அலுவலகம் செல்வது அத்துடன் குழந்தையின் பொறுப்பு என்று உமாவை நேரம் தனக்குள் இழுத்துக் கொண்டது.

இதுபோல், இந்த முறையும் தான் மட்டுமே டிரைவரை அழைத்து கொண்டு மாந்தோப்புக்கு கணக்கு வழக்குகள் பார்க்கவந்த அன்னபூரணி கண்டது குருபரன் மது -மாது என்ற இருவித போதைகளுடன் தன்னை மறந்து லயித்திருந்தது தான். எப்பொழுதும் குரு இங்கு வரும் பொழுதெல்லாம் தோட்டத்திற்கு காவல் இருக்கும் காவலாளியை விடுப்பு கொடுத்து அனுப்பி விடுவான். வெளி உலகத்திற்கு தெரியாமல் செய்ய வேண்டிய பல விஷயங்களை அவன் செய்வது இங்கிருந்துதான்.
பெற்ற மகனை எந்த கோலத்தில் காணக்கூடாதோ அந்த கோலத்தில் கண்ட தாய்க்கு, இத்தனை வருஷங்கள் ஆகியும் மகன் திருந்தவில்லை என்பது அடி ஆழம்வரை ரணமாக தாக்கியது. ஏற்கனவே உடல் சோர்வு, காரணம் தெரியா மனச்சோர்வு... இத்துடன் இதனைக் கண்டவளுக்கு படபடப்பாய் இருக்க ஒரு வழியாக சுதாரித்துக்கொண்டு காரில் வீடு திரும்பி விட்டாள்.

உமாவும் குருபரனும் ஒற்றுமையாக குடும்பம் செய்யவில்லை என்பது அன்னத்திற்கு தெரியும். ஆனால் மருமகள் என்றுமே எதையுமே காட்டிக் கொண்டதில்லை. குருவை இதுவரை உமா குறை சொல்லி யாரும் கேட்டிருக்க முடியாது. அப்படி என்றால் மருமகளின் சம்மதத்தின் பேரில் தான் இத்தனையும் நடக்கின்றது என்ற யோசனைக்கு சென்றுவிட்டாள் அன்னம். பிறகு தன்னைத்தானே தேற்றியவாறு தன் கணவன் மற்ற பெண்களுடன் கூத்தடிப்பது எந்த பெண்ணாலும் சகித்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தவளாய், வெகு காலம் கழித்து, தன் மருமகளுக்கு இந்தத் திருமணத்தின் மூலம் தான் பெரிய துரோகம் இழைத்து விட்டோம் என்ற எண்ணமே அன்னத்திற்கு நெஞ்சு வலியை வர வைத்து விட்டது. ஒருவாரம் குழப்பத்துடனேயே சுற்றிக்கொண்டிருந்த அன்னம் துக்கம் தாங்காமல் தூங்கும் பொழுது உயிர் உடலை விட்டு சென்றுவிட்டது. மனதில் நினைப்பவற்றை எல்லாம் முன்புபோல் அருணாசலத்திடம் பகிர்ந்து கொள்ள முடியாமல் போனது கூட இன்னொரு காரணமாக இருக்கலாம். அரசியலுக்காக அருணாச்சலம் இதுவரை இரண்டு விஷயங்களை பலி கொடுத்துவிட்டார். ஒன்று குருவின் வாழ்க்கை. இதோ இப்பொழுது அன்னத்தின் உயிர்.
என்றுமே அன்னபூரணி தன் மருமகளிடம் மனம் விட்டு பேசியது கிடையாது. 'அவள் அடிமனதில் 'தான்'மாமியார், அதிலிருந்து கீழே இறங்கி வர கூடாது என்ற எண்ணம் இருக்கத்தான் செய்தது'. அன்னபூரணி எவ்வளவோ நல்லவள் தான். ஆனாலும், அவள் முடிவு கணவன்- மகன்- மருமகள் -பேரன் பணம்- நகைகள் சொத்து அந்தஸ்து -எல்லாமும் இருந்துகூட மன நிம்மதியின்றி துயரத்தில் தனிமையில். அவ்வளவு சொத்துக்களையும் கட்டி ஆளத் தெரிந்த அந்த பெண்மணிக்கு மகனை திருத்தி கொண்டுவரும் திறமை மட்டும்
வாய்த்திருக்கவில்லை. அதில் அவளது உயிர் பறிபோய் விட்டது.

வழக்கம்போல் சாந்தாவும் பாறு குட்டியும் இந்தியா வரவேண்டாம் என்று உமா சிவன் மூலம் கண்டிப்பாக சொல்லிவிட்டாள். உமா அவள் மனதில் ரத்னா சென்னை வந்திருப்பது பற்றிய க்லேசம் உண்டு. தன் அப்பாவுடன் ரத்னா இங்கு வந்துவிட வேண்டாம் என்று உமாவுக்கு ஆயிரம் பிரார்த்தனைகள் மனதில். ஆனால் அவற்றையெல்லாம் வாய்விட்டு சொல்வதற்கு அவளுக்கு இஷ்டமில்லை. மகனை கையிலேயே பிடித்துக் கொண்டு மாமியாருக்காக கடமைகளை நிறைவேற்றினாள் அந்த பெண். குரு அவன் எங்கே என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு எப்படி அம்மாவின் இறப்பு பற்றி தகவல் தெரிவிப்பது?
மனைவியின் இழப்பில் தன்னை மறந்து அமர்ந்துவிட்டார் அருணாச்சலம். இறுதிக் காரியங்களை யார் செய்வது என்ற சலசலப்புக்கு நடுவே தானே தனது மாமியாருக்கு கொள்ளி இடுவதாக சொல்லிவிட்டாள் உமா. சிவன் ஸ்தம்பித்து போனார். சிவனுடன் வந்திருந்த ரத்னாவுக்கு தன் அக்காவைப் பார்த்து உடம்பு சிலிர்த்தது. உமா எவ்வளவு சொல்லியும் ரத்னா இந்த விஷயங்களில் இதற்குமேல் விட்டுக்கொடுக்க முடியாது என்றுவிட்டு சென்னையில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு இங்கு வந்து இருந்தாள். இரண்டு பெண்களிடமுமே மறுத்துக் கூறும் தைரியம் சிவன் அவருக்கு இல்லை. அவருக்கு மட்டுமல்ல...அங்கு இருக்கும் யாருக்குமே அருணாச்சலத்தின் மருமகளிடம் பேசும் தைரியம் இல்லை.
தர்ம சாத்திரம் உறவுகளில் முப்பத்து ஆறு பேருக்கு கொள்ளியிடும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறது. நெருங்கிய உறவுகளான மகன், மகள், கணவன், மனைவி,மகன் அருகில் இல்லாவிட்டால் மருமகளும் கூட கொள்ளியிடலாம். காலமாற்றத்தில் பல விஷயங்கள் மாறியது போல, பெண்ணுக்கான இந்த அதிகாரமும் மறுக்கப்பட்டு விட்டது. இதுபோல் நடக்கும் விஷயங்கள் தர்மத்திற்கு புறம்பானதாகவும், புரட்சிகரமான விஷயங்களாகவும்
சித்தரிக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு விட்டது. சமூகம் ஆணை மட்டுமே சார்ந்ததாகி விட்டது. உலகம் முழுவதும் இப்படித்தான். இனம், மதம், நாடு எந்த பாகுபாடும் இன்றி பெண் ஆணுக்கு கீழேதான். போகப்பொருள் பெண் என்று விதைக்கப்பட்டு இன்று இவ்வாறு...

வந்திருந்த அனைத்து கட்சிக்காரர்களுக்கும் உமா செய்வது சரியா தவறா என்ற குழப்பம். அவர்கள் வீட்டு விஷயத்தில் வாயை விட முடியாது என்ற எண்ணம். எதிர்கட்சியில் இருந்து வந்திருந்தவர்களுக்கு குரு எங்கே போனான் என்பது பற்றி அறியும் ஆர்வம்... இப்படியாக, ஸ்கந்தன் நெய் பந்தம் தூக்க, உமா என்னும் நெருப்பு தன் மாமியாருக்காக இடுகாடு சென்றது.

அருணாச்சலத்தை, சிவனும் வீரனும் கைத்தாங்கலாக கூட்டி சென்றார்கள்.
அவர் மனம் முழுவதும் அன்னபூரணிக்காக கதறிக் கொண்டிருந்தது. முதன்முறையாக இனி வாழ்வில் தனிமையை எப்படி எதிர்கொள்வது என்று பயந்தார்.

உமாவின் அந்த செய்கை அரசியல் அளவில் பெரும் பரபரப்புகான விஷயம் ஆகிவிட்டது. எல்லாம் முடிந்து பதினாறு நாட்கள் ஆன பிறகு, நிதானமாய் தம்மை தேற்றிக்கொண்டு அருணாச்சலம், இனி மகனை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற தீர்க்க முடிவுக்கு வந்திருந்தார். நடந்த விஷயங்கள் அவருக்கு தன் மகனைப் பற்றிய நன்றாகவே புரிய வைத்து விட்டது. ஒரு மாதம் கழித்து வந்த குருவுக்கு தாயின் மறைவு பெரிய தாக்கத்தை ஒன்றும் ஏற்படுத்திவிடவில்லை. பத்தோடு பதினொன்று போல அப்படியா... என்று விட்டு சென்றுவிட்டான். இது அருணாசலத்திற்கு அதிர்ச்சியாகிவிட்டது. உமா வழக்கம் போல் விழுங்கிக்கொண்டாள்.

மனைவி மறைந்த பிறகு இனி அங்கு இருக்க முடியாது என்று முடிவு செய்து அருணாச்சலம் மொத்த குடும்பத்தையும் சென்னைக்கு மாற்றிவிட்டார். இந்த புதிய சூழல் உமாவுக்குமே தேவையாகத்தான் இருக்கிறது. ஆனால் உவப்பாக இல்லை. ரத்னா என்ன... குருவின் கண்களிலா படப் போகிறாள் என்று கொஞ்சம் தைரியத்தை வரவைக்க முயற்சி செய்தாள். அதற்கு ஒரு காரணமும் உண்டு. ரத்னா சிவனுடன் அவரது வீட்டில் வசிக்கவில்லை. சிவன் இருப்பது தென்சென்னையில். ரத்னா இருப்பது வடசென்னையில் தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கிறாள். அப்பாவுடன் இருப்பதற்கு அவள் ஒத்துக் கொள்ளவில்லை.

ஆனால் உமாவின் நினைப்பையே பொய்யாக்கும் படியாக கணவன் இறந்த பிறகு பிறகு ரத்னா சென்னை வந்திருப்பதை பற்றி அறிந்துகொண்ட குரு ரத்னாவை பற்றிய மீதி விவரங்களை தனது கூலிப்படை ஆட்கள் மூலம் தெரிந்து கொண்டான். அவசரப்பட்டு எதுவும் செய்துவிட வேண்டாம் என்று கொஞ்ச காலம் தள்ளி போட்டான். அம்மாவின் இறப்பு அன்று யார் யார் வந்தார்கள் என்று வீட்டில் இருக்கும் சிசி டிவி மூலம் பார்த்தவனுக்கு ரத்னாவின் அழகு பித்தம் கொள்ள செய்வதாய் இருந்தது. குரு உமாவை திருமணம் நிச்சயம் செய்து கொள்ளும்போது ரத்னா சிறு பெண்ணாக பள்ளி சென்று கொண்டிருந்தாள். பிறகு ஏனோ அவளுக்கு முதலில் திருமணம் செய்வித்து கேரளா அனுப்பி விட்டார்கள்.இத்தனை வருட திருமண வாழ்க்கையும், வயதும் கேரள மண்ணும் அவளின் வனப்பை மெருக்கேற்றி விட்டிருந்தது. கணவன் மறைந்து ஒரு வருஷம் முடிந்த பிறகும் அவளால் சங்கரனின் இழப்பை ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவள் சோகத்தை அவள் கண்களும் வாடிய முகமும் களை இழந்த நெற்றியும் பறை அறிவித்தது. அவற்றை எல்லாம் ஆராயும் நிலையில் குரு இல்லை. அவன் கண்கள் முழுவதும் அவளது இளமை அழகை ஸ்கேன் எடுத்து ரசித்தது. அவளை என்று சுகிப்போம் என்றே யோசனை.

இவற்றை எல்லாம் அறியாத ரத்னாவும் சரி, உமாவும் சரி வாழ்க்கை பாதை நேராக செல்வதாகவே உணர்ந்தார்கள்.
அன்னபூரணியின் இறுதிக்கு வந்திருந்த ராகாயியும் ரத்னாவும் தோழிகள் ஆகிவிட்டார்கள். வாழ வேண்டிய வயதில் ரத்னாவின் இழப்பு நாற்பதுகளின் இறுதியில் இருக்கும் ராகாயிக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. சிவன் மீதும் அவளுக்கு வருத்தம் உண்டு. இப்போது உமா நிமிர்ந்து விட்டதை பார்த்து சந்தோஷிக்கும் ஒரு ஜீவன் அவள்.
அருணாச்சலம் மீதும் சிவன் மீதும் உள்ள விஸ்வாசத்தை மீறி, அந்த பெண்களிடம் இவளுக்கு ஒரு உணர்வு, பரிவு உண்டாகிவிட்டிருந்தது. ரத்னாவை பார்க்கும் போது தன் மகளின் ஞாபகம் ராக்காயி மனதில்.
--------------------------------------------------

சாதுர்யா ரங்கனின் மிரட்டலில் இப்போது நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்து விட்டாள். காதல் வாழ வைக்க... வீழ வைக்க அல்ல என்று அவளுக்கு ஒருவாறாக புரிய ஆரம்பித்துவிட்டது. அத்தானின் பாரா முகம் மனதுக்குள் பாரமாய் அழுத்தினாலும் அவனுக்கும் இதே பிரிவு தானே... அவன் மட்டும் என்னை விட்டு நிம்மதியாக இருக்கிறானா என்ன என்று தனக்குள்ளே கேள்வி பதில் நடத்திக்கொண்டாள்.
இருவருக்குமே மனதில் வெறுமை பரவும் பொழுது அவர்களுக்கே உரிதான அந்தரங்க சீந்தல்கள், காயாத முத்தத்தின் எஞ்சியிருக்கும் எச்சில் ஈரம் தான் ஆறுதல். அவற்றை நினைத்து மனதில் உற்சாகம் எழ மெல்லிய நகையுடன் அடுத்த விஷயம் நோக்கி பிராயாணம். சாதுர்யா சொன்னபடிக்கு சிவில் சர்வீஸ் எழுத தன்னை தயார் செய்ய ஆரம்பித்தாள். மனம் கொஞ்சம்
சஞ்சலத்திலிருந்து மீண்டது. பெரும்பாலும் கல்லூரி நூலகம் அவளை விழுங்கி கொண்டது. இத்தனை பொக்கிஷங்கள் படிக்க என்று மலைத்துபோனாள்.

பொருளாதாரமும் அரசியல் சார்ந்த சமூகமும் எவ்வாறு ஒன்றோடு ஒன்று பிணைந்து செல்கிறது, இந்தியாவின் தற்போது உள்ள அரசியல் நிலைக்கும் முந்தைய நிலைகளுக்கும் என்ன வித்தியாசம் என்றெல்லாம் படிக்க தொடங்கியவளுக்கு உலக அளவிலான பொருளாதாரமும் அரசியல் சூழ்நிலைகளும் இந்தியாவுடனான ஒப்பீடுகளும் இன்னும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டின.
சமூகம் என்பதில் பெண் ஒதுக்க பட முடியாது. பெண்களின் நிலை பற்றிய தொகுப்புகளையும் அவள் விட்டு வைக்கவில்லை.

அவள் எங்கோ இழுத்துபட அவற்றின் போக்கில் நீந்துகிறாள். தான் ஆட்சியில் இருந்தால், இவற்றை சரி செய்வேன். அப்படி இப்படி என ஆயிரம் யோசனைகள்.

ஆட்சிகட்டிலில் அமர்வது அவ்வளவு சுலபமா?ஆனால்...














 
Status
Not open for further replies.
Top Bottom