சொப்பனத்தில் வரும் சுந்தரனே
குட்டி டீஸர்
"டேய் மச்சான்... இந்த ஃபார்ம் ஃபில் பண்ண முடியலை..." என்று சொல்லி ஒரு பேப்பரை தூக்கி கொண்டு அவனிடம் வந்தான் மெல்வின்...
"நாயே என்ஜினீயரிங் படிச்சி முடிச்சி தானே வேலைக்குச் சேர்ந்த... அதுவும் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருஷம் ஆக போகுது... இன்னும் உனக்கு ஒரு ஃபார்ம் ஃபில் பண்ண துப்பில்லை..." என்று அவனை பார்க்காமல் கத்தினான் அவன்...
"அடேய் நல்லவனே... நான் ஃபார்ம் ஃபில் பண்ண தெரியலை என்று சொல்லலை பக்கி... உன் ஃபார்மை ஃபில் பண்ணவே முடியலை அப்படின்னு மட்டும் தான் சொன்னேன்..." என்று கடுப்புடன் சொன்னான் மெல்வின்...
"ஓஹோ... ஆமா என்ன ஃபார்ம் அது..." என்றான் அவன்...
"தெரியாது... அந்த சொட்ட தலை தான்... இது ஏதோ டேக்ஸ் ஃபார்ம் ஆஆ... எல்லாருக்கும் ஃபார்ம் ஃபில் பண்ண சொல்லி என்னிடம் சொன்னான்..." என்று சொல்லி விட்டு அவன் அருகே உட்கார்ந்தான்...
அவன் பார்வை கணினியில் படிந்து இருக்க "அப்படியா..." என்று பதில் அளித்தான்...
"டேய் மச்சான்... உன்ன எவன் டா... ஆரன் செழியன் நந்தியவர்மன் என்று முழம் நீட்டுக்கு பேரை வைக்க சொன்னது... ஆமா உன் ஆதார் கார்டு ரேஷன் கார்டில் எல்லாம் உன் பேருக்கு இடம் பத்துதா..." என்று வேண்டுமென்றே அவனை வம்பு இழுத்தான் மெல்வின்...
இதை கேட்டு மெல்வினை பார்த்தவன்... "அடிங்க... இதோ பாரு மெல்லு... என் பேரு வெறும் ஆரன் செழியன் மட்டும் தான்... இந்த நந்தியவர்மன் ஆரியவர்மன் எல்லாம் யாருக்கு வேணும்... இதை வீட்டில் கேட்டா பெருசா மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை என்று சொல்லி வெட்டி பில்டப் வேற.. என்னோட பேருக்கு பின்னாடி அது இருந்தே ஆகணுமா... அது எனக்கு சுத்தமா பிடிக்கலை..." என்று கோபத்துடன் சொன்னான் ஆரன்...
"விடு ஆரன்... அது உன் குடும்பத்தோட (surname ) குடும்ப பெயர்... அதை நீ யூஸ் பண்ணி தானே ஆகணும்..." என்றான் மெல்வின்...
"வேணா மெல்லு... இங்க எனக்கு அட்வைஸ் பண்றேன்னு... அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருந்த... உனக்கு வாய் இருக்கும் ஆனால் திறக்க முடியாது... கம் எடுத்து கொட்டி விட்டு விடுவேன்... சோ... பீ கேர் ஃபுல் மெல்லு..." என்று சொல்லி எச்சரித்தான் ஆரன்...
"ஆரன்... ஆரன்... எனக்கு இன்னும் இருபது நாள்ல கல்யாணம் டா... அப்படி எல்லாம் பண்ணி வச்சி என் வாழ்க்கையில் கேம் ஆடாத... இந்த வாயை வச்சி தான் என் டார்லிக்கு நிறைய உம்மா எல்லாம் தரணும்..." என்று பாவமாக சொன்னான் மெல்வின்...
"அரென்ஜ் மேரேஜுக்கு இவ்வளவு பில்டப்... போடா இடியட்.." என்று சொல்லி விட்டு அவன் வேலையை தொடர்ந்தான் ஆரன்...
"என்னடா பொசுக்குனு இப்படி சொல்லிட்ட..." என்று நெஞ்சில் கை வைத்தான் மெல்வின்...
***********
"அம்மா..." என்று வீடே அலறும் படி கத்தினாள்...
"என்ன டி மேகா..." என்று சொல்லிக் கொண்டே வந்தார் மலர்மதி...
அவளுடைய நிலையை பார்த்து மதிக்கு சிரிப்பு தான் வந்தது...
"என்னடி உன் மனம் கவர்ந்த சுந்தரன் இன்னைக்கும் வந்தானா..." என்று மகளை பார்த்து கேட்டார் மலர்மதி...
"அம்மா தானே நீ..." என்று இடுப்பில் கை வைத்து கொண்டு சொன்னாள் மேகா மலர்குழலி....
"நான் உன் அம்மா தானே டி..." என்று பாவமாக கூறினார் மதி...
"ஒருத்தன் ஒரு வருஷமா என்னைய தினம் தினம் டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான்... அவனை யாரும் ஏன்னு கேட்காதீங்க..." என்று மேகா கோபத்துடன் சொல்ல...
மகளை கண்டு சிரிப்பு வந்தாலும் அதை கட்டுப் படுத்திக் கொண்டு அவளை சமாதானம் செய்தார் மலர்மதி...
"ஆமா மதிமா... அப்பு எங்க..." என்று கேட்டாள் மேகா...
"மேகா அப்பு சொல்லாத அப்பா சொல்லு என்று சொன்னால் கேட்கவே கூடாதுன்னு இரு டி..." என்றார் மலர்மதி...
"அட... சின்ன புள்ளையில் நீங்க தானே எப்படி வேணாலும் கூப்பிடு ன்னு சொன்னீங்க... போ மா... என் அப்பாவை நான் எப்படி வேணாலும் கூப்பிடுவேன்..." என்று சொல்லி பழிப்பு காட்டினாள் மேகா...
அவளை பார்த்து மதியும் சிரித்துக் கொண்டே... "உன் அப்பாக்கு ஆஃபிஸில் ஏதோ முக்கியமான மீட்டிங்கா அதான் போய் இருக்காங்க..." என்று சொன்னார்...
"ஓஓ... சரி சரி..." என்று அமைதியாக இருந்தாள் மேகா மலர்குழலி...
**********
இந்த கதையின் டீஸர் எப்படி இருந்தது என்று சொல்லி விட்டு போங்கள்...
இந்த கதை அடுத்த மாதம் தான் ஆரம்பம் ஆகும்... அப்ப சொல்றேன் வேணும் என்றால் படிங்க செல்லம்ஸ்
Urs...
Kani
சொப்பனத்தில் வரும் சுந்தரனே! - Comments