தீராத காதல்…!
சிறிய முன்னுரை,
"காதல்".சிலருக்குவார்த்தை.
பலருக்கு உணர்வு.அதை உணர முடியும்.யார் மீது எல்லாம் ஓர் உண்மையான அன்பு இருக்கிறதோ அவர்கள் மீது எல்லாம்.
உண்மைக்கும் காதலும் ஒர் பிரிக்க முடியாத உறவு.உண்மை இல்லாத காதல் வாழ முடியாது. ஆனால் உண்மை காதலை யாராலும் பிரிக்க இயலாது.காதலர்கள் பிரிந்தாலும் அவர்கள் காதல் வாழுந்து கொண்டு இருக்கும்,பல கதைகளை பார்த்து இருப்போம்;கேட்டும் இருப்போம்;
இதுவும் அப்படிப்பட்ட கதையே..
நிறம்,மொழி, சாதி, மதம்,வசதி அனைத்தையும் கடந்ததே காதல்.
உண்மையான அன்பு கொண்ட இரு மனது இணையும் ஓர் உன்னதமான தருணம்.
அனைத்து காதலும் வெற்றி காணாது. சில காதலில் வலி,தோல்வி,பிரிவு,இழப்பு அனைத்தும் இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு காதல் கதை இது.
ஒரு பெண்ணின் வலி,தோல்வி,வெற்றி,மகிழ்ச்சி.., நாமும் அவள் உடன் பயணிப்போம்..
தீராத காதல்…!
அத்தியாயம்-1
கதிர்!.கதிரவன். வயது இருபத்தி ஒன்பது. இன்னும் நான்கு மாதத்தில் முப்பது. அதற்குள் திருமணம் ஆக வேண்டும் என்பது குடும்ப ஜோசியரின் கணிப்பு மற்றும் கட்டளை.
அளவான உயரம்,அதற்கு ஏற்ற உடல்வாகு.மாநிறம்.நெற்றியில் தவழும் முடி,அர்ஜுனன் வில் போல வளைத்து இணைந்த இருபுருவங்கள்,அழகான தெளிவான கண்கள்,காண்போர்
அனைவரையும் கண்டிப்பாக ஈர்க்கும்.செதுக்கிய மூக்கு மென்மையானஉதடு.உண்மையான நேர்மையான குணம்.
பெரிய நிறுவனதில் உயர்பதவி. வீட்டில் ஒரே செல்லபையன்.தேவைக்கு சற்று அதிகமான சொத்து.கல்லூரியில் காதல், அதில் தோல்வி.அதனால் திருமணத்தில் வெறுப்பு.
அம்மாவின்அழுகை,அப்பாவின் அறிவுரை,ஜோசியரின் நிபந்தனையில்,காலத்தின் கட்டாயத்தில்;இன்று "நித்யா!" வை பெண் பார்க்க வந்து இருக்கும் மாப்பிளையாக கதிர்…!
நித்யா!.தேவையானஉயரம்.செதுக்கிய உடல்.அளவாக வெட்டிய கூந்தல், மாநிறத்துக்கும் சற்று அதிக நிறம்,கலையான முகம்.மீண்டும் ஒரு முறை பார்க்க தூண்டும் அழகு. புடவையில் மகாலக்ஷ்மி.
ஆனால் கதிரை ஈர்த்தது அந்த பேசும் கண்களே..அந்த கண்கள் உடன் பேச வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.திரைப்படங்களில் வருவது போல பெண்ணும் மாப்பிளையும் பேச சில நிமிடங்கள் கிடைத்தது.
நித்யா-விற்கு வயது இருபது. ஒரே பெண் வீட்டிற்க்கு.கல்லூரி முடித்து ஓரிரு மாதங்களே இருக்கும். நடுத்தரகுடும்பம்.
அந்திசாயும்நேரம்!அழகியவானம்!
பச்சை வண்ணதோட்டம்!..
என்னருகே..அவள்...இளஞ்சிவப்பு ரோஜாவாக…
மாலை நேரத்தில் சூரியன் நீல நிற வானத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் ஓவியம் தீட்டி கொண்டு இருந்தான்.மழை காலம் என்பதால் தோட்டம் பசுமையாக இருந்தது.
ரோஜா,முல்லை,மல்லிகை பூக்கள் தோட்டத்தை அழகாழும் மணத்தாலும் நிரப்பிகொண்டுஇருந்தன.
வண்ணத்துப்பூச்சிகள் வட்டமடித்து கொண்டு இருந்தன.
மௌனத்தில்...சில நிமிடங்கள்… கரைந்தது.
மெல்ல கதிர் தன் பார்வையை அவள் பக்கம் ஆர்வத்துடன் திருப்பினான்.
ஆனால் அவள் பார்வையோ ஒரு வெள்ளை ரோஜாவை வெறித்து கொண்டு இருந்தது. கதிர்க்கு இதனால் சிறிய ஏமாற்றம் ஆத்திரம் அடைந்தான்.தனக்கு அவள் மீது ஏற்பட்ட போல அவளுக்கு தன் மீது ஏதும் இல்லை என்று ஏமாற்றம்..
ஆனால்,அவள் தேவதையாக தெரிந்தால்,அவன் கோபம் தெரியாமல் போனது.இவளே, பின்னாளில் தன் வாழ்க்கையில் புயலாக மாறுவள்,வாழ்க்கையை வெறுப்பாக மாற்றுவள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.
கதிர் "ஏதாவது பேசலமே!…"
அவள் திரும்பி ஒரு வெற்று பார்வை உதிர்தாள்.
அதற்குள் மழை பேச ஆரம்பித்து விட்டது.முதன்முதலாக மழையை வெறுதான் அவன்.
"சரி,மழை வருது.எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசலாம்." நித்யா.
"என்ன? முடிவு எடுத்து இருக்கீங்க அதை சொல்லிட்டு போங்க…" கதிர்
"நாளைக்கு பேசலனு சொன்னேன்ல!அப்புறம் என்ன?"
"நீ எப்பவும் இப்படி தானா?"
"எப்படி?"
"மொரசுட்டு,கோபமா,மூச்சிய உம்-னு வச்சுகிட்டு இருப்பியா"
"ஆமா, நா அப்படி தா புடிச்சா நாளைக்கு பேசு.இல்லனா புடிகலனு சொலிட்டு போயிரு".
கதிர் நிறைய படங்கள், அவன் நண்பர்கள் அனுபவங்களை கொண்டு நிறைய கற்பனைகள் உடன் வந்தான். ஆனால் அனைத்து கற்பனையாகவே போயிற்று.
அவள் தோற்றதை வைத்து அவளை யூகித்தது தன் முட்டாள் தனம் என்று எண்ணினான்.
மழை நின்று விட்டாலும் குளிர் காற்று
வீசியது. தவளைகள் இசை கச்சேரி நடத்தி கொண்டு இருந்தன.நிலா மெதுவாக உச்சிக்கு நகர்ந்து கொண்டு இருந்தது.ஊரே உறகத்தில் ஆழ்ந்து கொண்டு இருந்தது.
கதிர்க்கு வீட்டில் மிகவும் பிடித்த இடம் இந்த மொட்டைமாடி.
சிலருக்கும் மொட்டைமாடிக்கும் ஒரு உறவு இருக்கும்.சில சமயங்களில் நண்பனை போல, சில நேரங்களில் தாய் மடி போல.
கதிர்க்கு ,இந்த மொட்டைமாடி மீது ஒரு தீராத காதல். அவன் வெற்றி, தோல்வி,துன்பம்,மகிழ்ச்சி,சிரிப்பு,அழுகை அனைத்தும் அதற்கு தெரியும்.அவன் முதல் காதல் தோல்வி அனைத்தும் அத்துபடி. இப்போது அவனின் குழப்பமான முகத்தை பார்த்து கொண்டு இருக்கிறது.
மாடியை ஒரு இருபது முறையாவது சுற்றி வந்து இருப்பான். கால் தான் வழித்ததே தவிர, மனம் தெளிவடையவில்லை.
அவளோட,அந்த வெறுப்பான பார்வையே அவளுக்கு என்னைய சுத்தமா புடிகலனு சொலிருச்சு.ஆனா கீழே வந்து ஏன் எல்லார் கிட்டயும் என்னை புடிச்சுருக்கு சொன்னா?.
உண்மையா,அவளுக்கு என்னைய புடிசிருக்கா?இல்லையா?. ஒருவேளை, என்னோட இந்தவேலை,வயசு, ஏதும்
புடிகலயோ.கண்டிப்பா இருக்கலாம்.இந்த அம்மா கிட்ட சொன்னா கேக்குறாங்களா!..
எவ்வளவு தடவ சொன்னே.. "மா சின்ன பொண்ணு வேணா சரியா வராது".
"சரி,எதுவா இருந்தாலும் நாளைக்கு அவகிட்டயே கேட்டுக்கலாம்."அவனுக்கு அவனே ஆறுதல் சொல்லி உறங்க
சென்றான்.
சிறிய முன்னுரை,
"காதல்".சிலருக்குவார்த்தை.
பலருக்கு உணர்வு.அதை உணர முடியும்.யார் மீது எல்லாம் ஓர் உண்மையான அன்பு இருக்கிறதோ அவர்கள் மீது எல்லாம்.
உண்மைக்கும் காதலும் ஒர் பிரிக்க முடியாத உறவு.உண்மை இல்லாத காதல் வாழ முடியாது. ஆனால் உண்மை காதலை யாராலும் பிரிக்க இயலாது.காதலர்கள் பிரிந்தாலும் அவர்கள் காதல் வாழுந்து கொண்டு இருக்கும்,பல கதைகளை பார்த்து இருப்போம்;கேட்டும் இருப்போம்;
இதுவும் அப்படிப்பட்ட கதையே..
நிறம்,மொழி, சாதி, மதம்,வசதி அனைத்தையும் கடந்ததே காதல்.
உண்மையான அன்பு கொண்ட இரு மனது இணையும் ஓர் உன்னதமான தருணம்.
அனைத்து காதலும் வெற்றி காணாது. சில காதலில் வலி,தோல்வி,பிரிவு,இழப்பு அனைத்தும் இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு காதல் கதை இது.
ஒரு பெண்ணின் வலி,தோல்வி,வெற்றி,மகிழ்ச்சி.., நாமும் அவள் உடன் பயணிப்போம்..
தீராத காதல்…!
அத்தியாயம்-1
கதிர்!.கதிரவன். வயது இருபத்தி ஒன்பது. இன்னும் நான்கு மாதத்தில் முப்பது. அதற்குள் திருமணம் ஆக வேண்டும் என்பது குடும்ப ஜோசியரின் கணிப்பு மற்றும் கட்டளை.
அளவான உயரம்,அதற்கு ஏற்ற உடல்வாகு.மாநிறம்.நெற்றியில் தவழும் முடி,அர்ஜுனன் வில் போல வளைத்து இணைந்த இருபுருவங்கள்,அழகான தெளிவான கண்கள்,காண்போர்
அனைவரையும் கண்டிப்பாக ஈர்க்கும்.செதுக்கிய மூக்கு மென்மையானஉதடு.உண்மையான நேர்மையான குணம்.
பெரிய நிறுவனதில் உயர்பதவி. வீட்டில் ஒரே செல்லபையன்.தேவைக்கு சற்று அதிகமான சொத்து.கல்லூரியில் காதல், அதில் தோல்வி.அதனால் திருமணத்தில் வெறுப்பு.
அம்மாவின்அழுகை,அப்பாவின் அறிவுரை,ஜோசியரின் நிபந்தனையில்,காலத்தின் கட்டாயத்தில்;இன்று "நித்யா!" வை பெண் பார்க்க வந்து இருக்கும் மாப்பிளையாக கதிர்…!
நித்யா!.தேவையானஉயரம்.செதுக்கிய உடல்.அளவாக வெட்டிய கூந்தல், மாநிறத்துக்கும் சற்று அதிக நிறம்,கலையான முகம்.மீண்டும் ஒரு முறை பார்க்க தூண்டும் அழகு. புடவையில் மகாலக்ஷ்மி.
ஆனால் கதிரை ஈர்த்தது அந்த பேசும் கண்களே..அந்த கண்கள் உடன் பேச வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.திரைப்படங்களில் வருவது போல பெண்ணும் மாப்பிளையும் பேச சில நிமிடங்கள் கிடைத்தது.
நித்யா-விற்கு வயது இருபது. ஒரே பெண் வீட்டிற்க்கு.கல்லூரி முடித்து ஓரிரு மாதங்களே இருக்கும். நடுத்தரகுடும்பம்.
அந்திசாயும்நேரம்!அழகியவானம்!
பச்சை வண்ணதோட்டம்!..
என்னருகே..அவள்...இளஞ்சிவப்பு ரோஜாவாக…
மாலை நேரத்தில் சூரியன் நீல நிற வானத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் ஓவியம் தீட்டி கொண்டு இருந்தான்.மழை காலம் என்பதால் தோட்டம் பசுமையாக இருந்தது.
ரோஜா,முல்லை,மல்லிகை பூக்கள் தோட்டத்தை அழகாழும் மணத்தாலும் நிரப்பிகொண்டுஇருந்தன.
வண்ணத்துப்பூச்சிகள் வட்டமடித்து கொண்டு இருந்தன.
மௌனத்தில்...சில நிமிடங்கள்… கரைந்தது.
மெல்ல கதிர் தன் பார்வையை அவள் பக்கம் ஆர்வத்துடன் திருப்பினான்.
ஆனால் அவள் பார்வையோ ஒரு வெள்ளை ரோஜாவை வெறித்து கொண்டு இருந்தது. கதிர்க்கு இதனால் சிறிய ஏமாற்றம் ஆத்திரம் அடைந்தான்.தனக்கு அவள் மீது ஏற்பட்ட போல அவளுக்கு தன் மீது ஏதும் இல்லை என்று ஏமாற்றம்..
ஆனால்,அவள் தேவதையாக தெரிந்தால்,அவன் கோபம் தெரியாமல் போனது.இவளே, பின்னாளில் தன் வாழ்க்கையில் புயலாக மாறுவள்,வாழ்க்கையை வெறுப்பாக மாற்றுவள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.
கதிர் "ஏதாவது பேசலமே!…"
அவள் திரும்பி ஒரு வெற்று பார்வை உதிர்தாள்.
அதற்குள் மழை பேச ஆரம்பித்து விட்டது.முதன்முதலாக மழையை வெறுதான் அவன்.
"சரி,மழை வருது.எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசலாம்." நித்யா.
"என்ன? முடிவு எடுத்து இருக்கீங்க அதை சொல்லிட்டு போங்க…" கதிர்
"நாளைக்கு பேசலனு சொன்னேன்ல!அப்புறம் என்ன?"
"நீ எப்பவும் இப்படி தானா?"
"எப்படி?"
"மொரசுட்டு,கோபமா,மூச்சிய உம்-னு வச்சுகிட்டு இருப்பியா"
"ஆமா, நா அப்படி தா புடிச்சா நாளைக்கு பேசு.இல்லனா புடிகலனு சொலிட்டு போயிரு".
கதிர் நிறைய படங்கள், அவன் நண்பர்கள் அனுபவங்களை கொண்டு நிறைய கற்பனைகள் உடன் வந்தான். ஆனால் அனைத்து கற்பனையாகவே போயிற்று.
அவள் தோற்றதை வைத்து அவளை யூகித்தது தன் முட்டாள் தனம் என்று எண்ணினான்.
மழை நின்று விட்டாலும் குளிர் காற்று
வீசியது. தவளைகள் இசை கச்சேரி நடத்தி கொண்டு இருந்தன.நிலா மெதுவாக உச்சிக்கு நகர்ந்து கொண்டு இருந்தது.ஊரே உறகத்தில் ஆழ்ந்து கொண்டு இருந்தது.
கதிர்க்கு வீட்டில் மிகவும் பிடித்த இடம் இந்த மொட்டைமாடி.
சிலருக்கும் மொட்டைமாடிக்கும் ஒரு உறவு இருக்கும்.சில சமயங்களில் நண்பனை போல, சில நேரங்களில் தாய் மடி போல.
கதிர்க்கு ,இந்த மொட்டைமாடி மீது ஒரு தீராத காதல். அவன் வெற்றி, தோல்வி,துன்பம்,மகிழ்ச்சி,சிரிப்பு,அழுகை அனைத்தும் அதற்கு தெரியும்.அவன் முதல் காதல் தோல்வி அனைத்தும் அத்துபடி. இப்போது அவனின் குழப்பமான முகத்தை பார்த்து கொண்டு இருக்கிறது.
மாடியை ஒரு இருபது முறையாவது சுற்றி வந்து இருப்பான். கால் தான் வழித்ததே தவிர, மனம் தெளிவடையவில்லை.
அவளோட,அந்த வெறுப்பான பார்வையே அவளுக்கு என்னைய சுத்தமா புடிகலனு சொலிருச்சு.ஆனா கீழே வந்து ஏன் எல்லார் கிட்டயும் என்னை புடிச்சுருக்கு சொன்னா?.
உண்மையா,அவளுக்கு என்னைய புடிசிருக்கா?இல்லையா?. ஒருவேளை, என்னோட இந்தவேலை,வயசு, ஏதும்
புடிகலயோ.கண்டிப்பா இருக்கலாம்.இந்த அம்மா கிட்ட சொன்னா கேக்குறாங்களா!..
எவ்வளவு தடவ சொன்னே.. "மா சின்ன பொண்ணு வேணா சரியா வராது".
"சரி,எதுவா இருந்தாலும் நாளைக்கு அவகிட்டயே கேட்டுக்கலாம்."அவனுக்கு அவனே ஆறுதல் சொல்லி உறங்க
சென்றான்.