Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL நிசப்தமே சப்தமாய் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
840
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Ashwathi Senthil

New member
Messages
4
Reaction score
6
Points
3
வணக்கம் மக்களே..🙏🙏🙏

"நிசப்தமே சப்தமாய் " கதையோடு உங்களை சந்திக்க வருவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நாயகன் : சக்திதரன்

நாயகி : அன்பரசி

குட்டி டீஸர்...

" இந்தா பாரு டி .நாளைக்கு என்னோட பெரிய மவன் வரான். நீ நாளைக்கு வெறாசா வந்து அவன் ரூம்ம சுத்த படுத்தி வை "

" சரிங்க அம்மா "

" இப்போ போய் உன் வேலையை பாரு " என துரத்தி விட்டார்.

பின் கட்டுக்கு வந்த அன்பு முகத்தை உர்றென்று வைத்து கொண்டு வாயில் முணுமுணுத்த படி இருக்க

அவளை நோக்கி வந்த அவளின் ஆருயிர் நண்பனான சிபி " சிலுப்பி ! என இந்த அருமையான மாலை நேரத்துல எங்க அம்மாவ வாய்க்குள்ள போட்டு அரைச்சிட்டு இருக்க போல " என கிண்டலாக பேசிய படி அவள் அருகே வந்து அவளின் உர்றென்றிருந்த முகத்தை சிரிக்க வைத்தான்.
.
.
.
அன்புவை தன் அறையில் கண்ட சக்தி கொதி நிலைக்கே சென்றிருந்தான்.

" ஹே..."

அவனை திரும்பி பாரத்தவள் ," சொல்லுங்க சின்ன ஐயா "

"இங்க என்ன பண்ற.?"

" ரூம் சுத்தம் பண்ண வந்தேன்.."

"ச்சீ, இனி நான் இருந்த ரூம் பக்கம் சுத்தம் பண்ண வந்தேன் அது பண்ண வந்தேன்னு நீ இந்த பக்கம் வந்த உன்ன என்ன பண்ணுவேனே தெரியாது " என அவளை பார்த்து மிரட்டல் விட்டான் சக்தி.

"சரிங்க சின்ன ஐயா " என்றவள் ஓடிவிட்டாள் .
.
.
.

" அம்மா..." என கத்திய கத்திலில் அவள் தொண்டைக்குள் ஏதோ வலி எடுக்க , அதனையும் பாராது தன் அன்னையை நோக்கி ஓடினாள் அன்பரசி.

பஞ்சாயத்து தகராறில் கைகளப்பு ஏற்பட்டு விட , அதில் ஒருவருக்கு ஒருவர் இருந்த பேச்சு வார்த்தைகளை குறைத்து விட்டு அருவா பேச்சையே பேசினர்.
.
.
.
திருமண கோலத்தில் கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்த அன்பை பார்த்து அழகாய் கறைபடிந்த பல்லை காட்டி ஈயென இழித்து வைத்தான் அவளின் மாமன்காரன்.

சிபி எவ்வளவு தடுக்க முயன்றும் அவனால் ஒன்றும் செய்ய முடியில்லை.

அடுத்த சில நிமிடத்தில் அவள் கழுத்தில் பொன் தாலி மின்னியது.
.
.
.
விரைவில்.......

கதைய கதையோட படிச்சா தான் புரியும் மக்களே..

நன்றி
வணக்கம்
 
Last edited:
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom