Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


"இனிதா மோகன்-மாறாத நேசம்!_கதை திரி"

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
391
Reaction score
114
Points
93
Hi friends,
எல்லாரும் எப்படி இருக்கீங்க.. அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல் வாழ்த்துகள்💐பொங்கல் அன்று என் புதிய கதை "மாறாத நேசம் ! முதல் யூடி போடுகிறேன்.
நாளை கதையின் டீசர்(முன்னோட்டம்) பதிவிடுகிறேன்..வழக்கம் போல் தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
391
Reaction score
114
Points
93
Hi friends,
மாறாத நேசம்!

நாயகன்: சீர்மதியன்

நாயகி: தண்மதி


டீசர்(முன்னோட்டம்)


சீர்மதியன் பண்ணையிலிருந்து இருசக்கர வாகனத்தில் தாய் சொன்னதையே அசைபோட்டபடியே திரும்பி வந்து கொண்டிருந்தான்.


அப்போது அவனின் சிந்தனையை கலைத்தது வெள்ளி சலங்கையை உதிர்த்து விட்டாப் போல் சிரிப்பொலி ! சிந்தனை கலைந்து பார்த்தவனின் பார்வையில், இடை வரை ஆடிய பின்னலில் அணிவகுத்து நின்ற மல்லிகைச் சரமும் , அதை சூடியிருந்தவளின் அன்ன நடையும், அவனின் கவனத்தை ஈர்த்தது.


பார்த்தவுடனேயே அவனுக்கு அவள் யார் என்று தெரிந்து விட்டது. அவனது தூக்கத்தை இடைவிடாமல் கெடுக்கும் அவனின் மாமன் மகள் 'தண்மதி ' தான் !


அவளின் வானர கூட்டத்துடன் பேசி சிரித்த படி சென்றவளின் குறுக்கே, தன் வண்டியை அவள் வழியை மறித்து நிறுத்தினான்.


தண்மதியோ, யார் குறுக்கே வண்டியை நிறுத்துவதென்று நிமிர்ந்து பார்த்தாள்.


அங்கே சீர்மதியனைக் கண்டதும் அவள் சொல்ல முடியாத கோவத்துடன் முகம் இரத்தமென சிவக்க..பற்களை நறநறவெனக் கடித்த படி,


"எவ்வளவு திமிர் இருந்தால் இப்படி வழி மறித்துக் கொண்டு நிற்பீங்க.." என்று கோபமாக கத்தினாள்.


அவனோ, அவளின் கோபத்தை துளியும் மதிக்காமல் " ம்ம்..! உன் தாத்தன் போட்ட சோத்தில் வந்த திமிர் .." என்றான் நக்கலாக,


அவளோ, " மரியாதையாக வழி விடுங்கள்! இல்லை நடப்பதே வேறு.." என்றவளிடம்,


"என்ன செய்வே ?"என்று அவளின் ஆத்திரத்தை மேலும் கிளப்பினான்.


அவளும் , அவனுக்கு சளைத்தவள் இல்லை என்பதை போல்.. "என் அண்ணனுக்கு மட்டும் இது தெரிந்தால் ? உங்களைக் கண்ட துண்டாம வெட்டி போட்டுறுவாங்க.. ஞாபகம் வச்சுக்கோங்க.."


" யாரு உங்கண்ணன் என்னை வெட்டுவானா? அவனே ஒரு வெத்து வேட்டு! அவன் என்னை வெட்டற வரைக்கும் என் கை என்ன பூ பறிக்குமா? இந்த பூச்சாண்டி காட்டற வேலை எல்லாம் வேறு யாருகிட்டயாவது வச்சுக்கோ !" என்றவனிடம்,


தன் அண்ணனை சொன்ன கோபத்தில், " எங்க அண்ணனையா வெத்து வேட்டுங்கிறீங்க..? மாடு மேய்க்கிற உனக்கே இத்தனை திமிர் இருந்தா ! எங்க அண்ணாவுக்கு எத்தனை திமிர் இருக்கும்.." என்று ஆத்திரத்தில் அவனை ஏகவசனத்தில் பேசியவள், குறுக்கே வண்டியில் நின்ற அவனைச் சுற்றிக் கொண்டு.. ஒதுங்கி நின்று இவர்கள் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தோழிகளிடம், " வாங்க டீ போலாம்.." என்று கூறியபடி நடையே வேகமாக்கினாள்.


சீர்மதியன் அவளின் வார்த்தைகளைக் கேட்டு எரிமலையாய் குமரியவன்.. "போடி போ.. இந்த மாட்டுக்காரன் தான், உனக்கு மூக்கனாங்கயிறு போடப் போறேன் பார்த்துட்டே இரு.." என்று ஆத்திரத்தில் கத்தினான்.


தண்மதியோ, அவன் சொன்னதற்கு நடந்து கொண்டே " அது இந்த ஜென்மத்தில் நடக்காது..கனவு காணதே.." என்றபடி வேகமாக நடந்தாள்.
 

Latest posts

New Threads

Top Bottom