Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மர்மங்கள்

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
பாகம் 4
தன் கேபினிற்குள் அத்வேதா நுழைய அவளை வரவேற்றான் ஆதி.
"ஹாய் மேம்! குட் மார்னிங்" - ஆதி.
"எஸ் ஆதி! குட் மார்னிங்! அந்த வீடியோவை பார்க்க சொன்னேனே பார்த்தியா?" – அத்வேதா.
"வந்ததும் வராததுமா கேஸ் தானா? கொஞ்சம் ஜாலியா பேசலாமே மேம்" – ஆதிசேசன்.
"அவ கூட ஜாலியா பேசுனா உன் சோலி முடிஞ்சிடும் பரவாயில்லையா?" என்று சிருஷ்டன் கேட்க இருவரும் திகைப்போடு திரும்பினர்.
அங்கு சிருஷ்டன் நிற்க ஆதி எச்சில் விழுங்கினான். சிருவைப் பார்த்த ஆதி வேகமாக
"மேம்! இதுதான் ராகவன் வீட்டில் இருந்த கேமிராவில் பதிவாகி இருந்தது! நீங்க சொன்ன மாதிரி கொலை நடந்த நேரத்தில் கேமிரா ஆஃப் ஆகி இருக்கு! மறுபடியும் காலையில் ஆன் ஆகி இருந்திருக்கு!" என்று அவன் வேகமாக சொல்ல
"அது! அந்த பயம் இருக்கட்டும்"! என்று சொல்லிக் கொண்டே சிருஷ்டன் இவர்கள் அருகில் வந்தான்.
"ம்ப்ச்!" என்று சிருவை பார்த்து வேதா தன் அதிருப்தியை வெளிகாட்டினாள்.
அதை கண்டு கொள்ளாத சிருஷ்டன் "ம்ம் என்ன நடக்குது இங்க? குழந்தை பையா?"
"மேம்! ராகவன் சார் வீட்டில் ரெக்காட் செய்யப்பட்ட வீடியோவை பார்க்கச் சொன்னாங்க.. சார்" - ஆதி.
"ஓஹோ! என்ன கண்டுபிடிச்சீங்க வேதா ஜீ" – சிருஷ்டன்.
"சார்! ராகவன் சார் இறந்த அன்று கேமிரா ஆன் ஆகலை! யாரோ ஆஃப் பண்ணி வச்சிருந்திருக்காங்க" – அத்வேதா.
"ம்ம்ம் ஓ! ஆனா யார் அதை ஆஃப் பண்ணாங்க" – சிருஷ்டன்.
"அதை தான் ஆதிகிட்ட கேட்டிட்டு இருந்தேன்" என்று அத்வேதா சிருஷ்டனிடம் கூறிக் கொண்டிருக்கும் போதே
"மேம்! ராகவன் சார் வீட்டிற்கு வந்தவுடன் அவர் மேனேஜர் வந்து இருக்கார்! ஆனா அவர் வந்து போனதுக்கப்புறம் தான் மேம் கேமிரா வேலை செய்யலை! அவர் தான் அந்த ரூமை நோக்கி போறார்" என்று ஆதி சில காட்சிகளை காண்பிக்க
அதில் ராகவனின் மேனேஜர் வீட்டினில் உள்ளே வருவதும் போவதும் போன்ற காட்சிகள் அந்த கேமிராவில் பதிந்து போயிருக்க! அதை பார்த்த சிருஷ்டன் வேகமாக போனை எடுத்து கான்ஸ்டபிளிடம் மேனேஜரை பிடித்து வருமாறு தன் போனில் உத்தரவு பிறப்பித்தான்.
அப்போது அந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருந்த அத்வேதா ஆதியை ஒரு இடத்தில் வீடியோவை நிப்பாட்ட சொன்னாள். அதன்பின் அதை அவள் ஜூம் செய்யச் சொல்ல அந்த ஓவியம் அவள் பார்வைக்கு அருகில் வந்தது. அதில் சிருஷ்டனும் வேதாவும் அன்று ராகவன் வீட்டிற்கு விசாரிக்க சென்ற நாளின் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதில் வேதா சென்றதும் அந்த ஒவியத்தில் இருந்த கண்கள் நகர்ந்தது அத்வேதாவிற்கு தெரிந்தது.
"உனக்கு ஏதாவது தெரிந்ததா ஆதி" – அத்வேதா.
"இல்லையே? என்ன தெரிஞ்சது?" – ஆதி.
"அந்த வீடியோவை ரீவைண்ட் செஞ்சு பார், அதில் * செகென்ட் ல அந்த ஓவியத்தின் கண்கள் நகரும் அதைப் பாரு" என்று வேதா சொல்ல அந்த கண்களை பார்த்த ஆதிக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் திரும்ப அந்த கண்களை பார்த்த வேதா திகைத்தாள். அந்த கண்களில் இருந்து ரத்தம் வழிந்தது.
போன் பேசிவிட்டு வந்த சிருஷ்டன் "வேதா சீக்கிரம் வா! மேனேஜரை பிடிச்சாச்சு! கொலையாளி யார்னு அவனை கேட்டா தெரிஞ்சிடும்" என்று அவன் சொல்ல அத்வேதா அவன் பின்னால் சென்றாள்.
அங்கு லாக்கப்பில் மேனேஜர் பயத்தில் அமர்ந்து இருந்தான். அவனை பார்த்த சிருஷ்டன் அடிக்க செல்ல
"சிரு வேண்டாம் விட்டுங்க! அவனை" என்று கூறிய வேதா அவர் முன் சென்றாள்
"ராகவன் சார் இறந்த அன்னைக்கு நைட் என்ன பார்த்தீங்கனு கொஞ்சம் மறைக்காம சொல்ல முடியுமா?" – அத்வேதா.
"நான் அவரை எதுவும் செய்யலை மேம்!" – மேனேஜர்.
"தெரியும் நீங்க எதுவும் பண்ணலைனு! கொஞ்சம் நீங்க உண்மையை சொன்னா நல்லா இருக்கும்" – அத்வேதா.
"சொல்றேன் மேடம்!" – மேனேஜர்.
"என்ன நீ பாட்டுக்க அவன்கிட்ட கெஞ்சிட்டு இருக்க! இரண்டு போட்டா அவன் உண்மையை சொல்ல போறான்" என்று கூறியபடியே சிருஷ்டன்
அவரை அடிக்கச் செல்ல அத்வேதா அவனை தடுத்தாள்.
"விடு சிரு! அவர் சொல்லிடுவார்" – அத்வேதா.
"அய்யோ சொல்லிடுறேன் மேடம்! என்னை அடிக்காதீங்க" என்று கூறிய மேனேஜர் அன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தார்.
"ராகவன் சார்! எப்பவும் நைட் தண்ணி அடிக்குறது வழக்கம்! அவர் குடிக்குறது அவர் மனைவிக்குக் கூட தெரியாது! அதனால் அவர் யாருக்கும் தெரியாமல் குடிக்கிறதால அவர் குடிக்கிற நேரத்தில் ஹாலில் இருக்கும் கேமிரா எல்லாத்தையும் ஆப் பண்ணிச் சொல்லிடுவார்! அவர் குடிக்குறதுக்கு டெயிலி நான் தான் சரக்கு வாங்கிட்டு வருவேன் அன்னைக்கும் நான் சரக்கு வாங்கிட்டு போனப்ப...." என்று அவன் இழுக்க
"ம்ம்ம் சொல்லுங்க" – சிருஷ்டன்.
"ம்ம்ம் சொல்லிடுறேன் சார்!" என்று ஆரம்பித்தவன் "ராகவன் சார் இறந்த அன்னைக்கு நான் சரக்கு வாங்கிட்டு போய் கேமிரா எல்லாத்தையும் ஆப் பண்ணிட்டேன்! ஹாலுக்கு சரக்கோட போனேன் ஆனால் அவர் அன்றைக்கு குடிக்கவே இல்லை சார்! அதனால் நான் வாங்கிட்டு வந்த பாட்டிலை எடுத்துட்டு போய் ஸ்டோர் ரூம்ல என்னை சார் வைக்க சொன்னார். நானும் அவர் சொன்னார்னு வச்சிட்டு வந்து பார்த்தா... "
"அங்க நீ யாரை பார்த்தா! மறைக்காம சொல்லு!" – அத்வேதா.
"அது வந்து மேம்!" என்று அவன் தயங்க
"ஒரு பெண் ராணி கோலத்தில் வாளை இடுப்பில் சொருகியபடி நின்றாங்களா" என்று அத்வேதா சொல்ல அந்த மேனேஜர் திகைத்தான்.
"ஆமா மேம்! அந்த உருவம் அய்யா அருகில் வந்து நின்றது! அதை பார்த்து அவர் கத்த முயன்றார்.. ஆனா சத்தமே வரலை மேம்! அடுத்து என்னாச்சுனு தெரியலை அவர் கழுத்தை பிடிச்சுட்டு கொஞ்ச நேரத்தில் அவர் கீழே விழுந்திட்டார். அதை பார்த்ததில் இருந்து நான் பயந்து போய் இப்படி ஒளிஞ்சு வாழ்ந்துட்டு இருக்கேன்" – மேனேஜர்.
"யோவ்! என்ன பொய்யா சொல்ற! உன்னை" என்று சிருஷ்டன் அடிக்க முயல அத்வேதா அவனை தடுத்தாள்
அவர் சொல்றது உண்மைதான் என்று அத்வேதா சொல்ல
"உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு! இந்த யுகத்தில் ராணியாம்! வாளாம்!" – சிருஷ்டன்.
"உங்களுக்கு இது பொய்யா தெரியலாம்! ஆனா இது தான் உண்மை சார்!" – அத்வேதா.
"வில் யூ ப்ரூவ் இட்!" – சிருஷ்டன்.
"எஸ்! ஐ வில்! அதுக்கு முன்னாடி நாம வர்மா சாரை சந்திக்கணும்!" – அத்வேதா.
"வாட்! வர்மா வா! இந்த ஓவியம் வரைவாரே அவரா! யூ ஆர் டைவர்ட்டிங் கேஸ் அத்வேதா" – சிருஷ்டன்.
"நோ! சார்! அவரை சந்திச்சா! உங்க கேள்விக்கெல்லாம் விடை கிடைச்சிடும் சார்" – அத்வேதா.
"ஒகே தென் ஒய் வி ஆர் வெயிட்டிங்! வி மூவ்" – சிருஷ்டன்.
மறு நிமிடம் கிளம்பிய இருவரும் வர்மாவின் முன் அமர்ந்தனர்.
அவர்களை பார்த்த வர்மா "எஸ்! வாட் கேன் ஐ டூ பார் யூ"
அதற்கு சிரு வேதாவை பார்க்க வேதா அவரையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது வேதாவை சிருஷ்டன் இடிக்க தன் சுயத்திற்கு வந்த வேதா தன் செல்லில் வைத்திருந்த அந்த ஓவியப்பாவை புகைப்படத்தை காண்பித்தாள்.
அதை பார்த்த வர்மா, "நைஸ் பெயிண்டிங்! இதை எதுக்கு என்கிட்ட காண்பிக்குறீங்க?"
"இந்த புகைபடம் நீங்க தான வரைச்சீங்க வர்மா சார்! அதனால் இதை பத்தி சில டிடெயில்ஸ் எங்களுக்கு வேணும்! அதனால் தான் உங்களை தேடி வந்தோம் வர்மா ஜீ" – சிருஷ்டன்.
"நோ! நோ! இந்த புகைபடம் நான் வரையலையே! நானே இந்த புகைப்படத்தை இப்ப தான் முதன்முறையா பார்க்குறேன்" என்று வர்மா சொல்ல இருவரும் அதிர்ந்தனர்.
"வாட்! என்ன சொல்றீங்க ஜீ! இந்த புகைபடம் உங்களுடைய பெயிண்டிங்னு ராகவன் சார் வாங்கி இருக்கார்" – அத்வேதா.
"நோ! வே! இது மாதிரி நடக்க வாய்ப்பே இல்லை எங்கேயோ தப்பு நடந்திருக்கு! நீங்க எதுக்கும் ரமணாவை கேளுங்க" என்று வர்மா சொல்ல இருவரும் ஓவிய கண்காட்சி நடைபெற்ற இடம் நோக்கி விரைந்தனர்.
அங்கு ரமணாவிடம் விசாரித்ததற்கு அவர் "சாரி சார்! வர்மா சார் ஓவியம் தான் இது! இதை ஏன் அவர் இல்லைனு சொல்றார்னு தெரியல"
"அன்னைக்கு நடந்த நிகழ்ச்சியை கொஞ்சம் நல்லா ஞாபகப்படுத்தி பாருங்க ரமணண்! யாராவது மீட் பண்ணி இருப்பிங்க! நீங்க மறந்து கூட போயிருக்கலாம்" என்று அத்வேதா கூற
சற்று நேரம் யோசித்த ரமணா "ஆஃங் ஞாபகம் வந்திடுச்சு! அன்னைக்கு ஒருத்தர் வந்து இந்த ஓவியம் வர்மா சார் காரிலேயே விட்டுட்டு வந்ததா சொல்லி குடுத்திட்டு போனார்! அதன்பின் தான் ஏலம் விட ஆரம்பிச்சோம்" என்று கூற
"அவர் எப்படி இருப்பார்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?" – சிருஷ்டன்.
மீண்டும் சற்று நேரம் யோசித்தவர் "அவர் பேஸ் எனக்கு சரியா ஞாபகம் இல்லை!அவர் கேப் போட்டு முகத்தை பாதி மூடி இருந்தார் . அதனால் என்னால சரியா பார்க்க முடியல" என்று அவர் கூற அத்வேதா வேகமாக "அன்றைக்கு நடந்த விழா வீடியோவை நாங்க பார்க்கலாமா சார்?" என்று கேட்டாள்.
"ஓ! எஸ் மேம்!" என்று அவர் கூறிய ரமணா அந்த வீடியோவை போட்டு காண்பிக்க அதை பார்த்த சிருஷ்டன் ஒரு இடத்தில் நிறுத்தச் சொன்னான். அதில் கேப் போட்டு ஒருவன் கூட்டத்தில் ஐக்கியமாக அதை ஜூம் செய்து பார்த்த அத்வேதாவும், சிருவும் அதிர்ந்தனர்.
அதில் ராக்கி நின்று கொண்டிருந்தான்.
**
சிருவும், அத்வேதாவும் ராக்கி முன் நின்றனர்.
அவர்களை பார்த்ததும் அவன் பயப்பட அத்வேதா வேகமாக "ராக்கி நீங்க எதற்கு ஓவிய கண்காட்சிக்கு போனிங்க? நீங்க வரைந்த ஓவியமா இது!" என்று அவள் அந்த சித்திரப்பாவை ஓவியத்தை காட்ட அதை பார்த்த ராக்கி அலறினான்.
"நோ! அதை காண்பிக்காதீங்க!" என்று அவன் பயத்தில் கத்த
"என்னாச்சு ராக்கி! ஏன் இதை பார்த்து பயப்படுறீங்க? உங்களுக்கும் இந்த ஓவியத்திற்கும் சம்பந்தம் இருக்கா" என்று அத்வேதா கேட்டாள்
"இந்த ஓவியத்தால தான் என் பிரண்ட் நாலு பேரை நான் இழந்தேன்" என்று அவன் கூற அத்வேதாவும், சிருஷ்டனும் திகைத்துவிட்டனர்.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
பாகம் 5
தன் நண்பர்கள் இறந்து போனதற்கு அந்த ஓவியப் பெண் தான் காரணம் என்று ராக்கி சொல்ல
அத்வேதா வேகமாக "நீ என்ன சொல்லுற ராக்கி? கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு" என்று சொல்ல ராக்கி தன்னிடம் அந்த ஓவியம் வந்து சேர்ந்த தருணத்தை சொல்ல ஆரம்பித்தான்.
"நான், மாதவ் மற்றும் என் பிரண்ட்ஸ் இரண்டு பேரும் ஓவியக் கல்லூரி மாணவர்கள். அன்று நாங்க எங்க கிளாஸ்ல இருக்கும் போது எங்க புரோபசர் இந்த ஓவியத்தை எங்ககிட்ட காண்பிச்சு இது சித்திரப்பாவை ஒவியம்! இந்த ஓவியம் பல வருசம் பழைமை வாய்ந்தது. அப்ப வாழ்ந்த ராஜா பகதூர் தன் ராணியை ரொம்ப விரும்பினார். ராணியும் ராஜா மேல் பைத்தியமா இருந்தாங்க! அப்ப தான் ராஜாக்கு ஒரு ஆசை வந்துச்சு! தன் ராணியை ஓவியமா தீட்டி வைக்கணும்! ராஜாவும் தன் ஆசையை சொல்ல, அவர் அவையில் இருந்த அமைச்சர்கள் மக்களுக்கு தெரிவிக்க பலர் ராணியை ஓவியம் வரைய முன்வந்தனர். அவர்களுக்குப் போட்டிகள் வைக்கப் பட்டன. அவர்கள் வரைந்ததை வைத்து அவர்களில் ஒருவன் தேர்வு செய்யப்பட்டான். அவன் ராணியை நிற்க வைத்து ஓவியம் வரைய ஆரம்பித்தான். சுமார் 7 நாட்களுக்கு மேல் அவன் ஓவியம் வரைய தன் ராஜாவின் ஆசை நிறைவேற்றும் பொருட்டு ஆடாமல் , அசையாமல் அப்படியே நின்றாள் ராணி. அவரை பார்த்து ஓவியமாக ஓவியன் அவன் தீட்டிக் கொண்டிருக்க இறுதியில் கால் வரையும் நிலையில் ராணி கீழே விழுந்தார். அவரை அனைவரும் எழுப்ப முயல அவர் மீளா துயில் கொண்டிருந்தார். தன் ராணியின் பிரிவினை ஏற்க முடியாத ராஜா ஒரு காலை வேளையில் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார். ராணி இறந்தாலும் தன் கணவனின் ஆசையை நிறைவேற்றாமல் உயிர் பிரிந்ததால் இன்னும் அவர் ஆவியாக உலாவுறதா கதைகள் பல சொல்றாங்க!" என்று ராஜா பகதூர் பற்றி சொல்லி முடித்த புரோபஸர் மாணவர்களிடம்
"இப்ப இந்த ஓவியத்தை இங்க எதுக்கு கொண்டு வந்தேனா! இந்த ஒவியத்திற்கு மாடலாக நின்ற ராணி சாரா தேவியின் ஓவியம் முற்றுப் பெறவில்லை. அவரது கால்கள் இன்னும் வரையப்படாமல் இருக்கின்றது! ஆகையால் ஓவியத்தின் வல்லவர்களான உங்களில் யார் இந்த ஓவியத்தின் கால்களை வரைந்து இந்த ஓவியத்தை முடிக்கிறார்களோ அவர்களுக்கு தகுந்த சன்மானம் காத்துட்டு இருக்கின்றது!" என்று அவர் கூறி முடிக்க மாணவர்கள் பலர் அந்த போட்டியில் கலந்து கொள்ள பெயர் கொடுக்க! பல சுற்றுக்கள் வைத்து அந்த ஓவியப்பாவை ஓவியத்தை முடிக்கும் வாய்ப்பு ராக்கிக்கும் அவனது நண்பர்களுக்கும் தேடி வந்தது.
ராக்கியின் நண்பர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த ஓவியத்தின் கால்களை தத்ரூபமாக வரைய முடியாமல் போக இறுதியில் அந்த ஓவியம் ராக்கியிடம் வந்து சேர்ந்தது. ஆனால் அந்த ஓவியத்தை முடிக்க முயற்சி செய்தவர்களில் சிலர் பைத்தியம் பிடித்தும், சிலர் தற்கொலை செய்து கொண்டனர். அதனால் அந்த ஓவியத்தினால எங்களுக்கும் எதாவது ஆகிடும்னு பயந்து தான் நான் அந்த ஓவியத்தை எங்களை விட்டு விளக்க முயற்சி செய்தேன்.
"அப்ப தான் வர்மா சார் ஓவிய கண்காட்சி நடக்கும் விசயம் எங்களுக்கு தெரிந்தது. அதனால் அதை நான் பயன்படுத்துக்கிட்டேன்" என்று ராக்கி சொல்ல அத்வேதாவும், சிருஷ்டனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"அந்த ஓவியத்தை நீங்க வரைய முயற்சி செய்யலையா?" – அத்வேதா.
"இல்லை மேம்!" – ராக்கி.
"ஏன்?" – அத்வேதா.
"இல்லை மேம்! தினமும் நைட் ஒரு உருவம் வந்து என்னை வரைந்து கொடு என்று என்னை பயமுறுத்துகிறது! அதனால் நான் பயந்துட்டு அந்த ஓவியம் பக்கமே போகல மேம்" என்று அவன் கூற வேதா யோசனையோடு அந்த இடத்தைவிட்டு அகன்றாள். சிரு போன் கால் வர அதை எடுத்துக் பேசியபடி அவள் பின் சென்றான்.
சிருஷ்டனும், அத்வேதாவும் கிளம்பியதும் கதவை சாற்றிவிட்டு திரும்பிய ராக்கியின் முன் நின்றாள் பாவை அவள். அவளை பார்த்ததும் ராக்கி கத்த ஆரம்பிக்க அவன் தொண்டையில் இருந்து சத்தம் வெளிவர மறுத்தது.
வேகமாக திரும்பி கதவினை அவன் தட்ட முயல அவன் கைகள் செயலிழந்து போனது. அவன் முன் வந்து நின்ற பாவையவள் அவனிடம் வண்ண தூரிகையை நீட்ட அதை மறுகை கொண்டு வாங்கியவன் 'இல்லை' என்று தலையாட்டியதும் மூக்கில் இருந்து ரத்தம் வழிய அப்படியே அந்த ஓவியத்தின் மேலேயே விழுந்தான்.
வெளியே வந்த அத்வேதா சற்று தூரம் சென்றதும் நின்றாள். வேகமாக திரும்பிப் பார்க்க ராக்கியின் மூடிய ரூமின் கதவுகள் அவளுக்கு தெரிந்தது. அதை பார்த்தவள் வேகமாக ராக்கியின் ரூம் நோக்கி செல்ல முயல சிருஷ்டன் அவளை தடுத்தான்.
"வேதா அடாப்ஸி ரிப்போர்ட் வந்திடுச்சு!" – சிருஷ்டன்.
ஓ! என்ன வந்திருக்கு ரிப்போர்ட்ல!" – அத்வேதா.
"அவங்களுக்கே தெரியல வேதா! ஹார்ட் அட்டாக்கா இருக்கலாம்னு சொல்றாங்க! ஆனா அப்படி உறுதியா சொல்லவும் முடியாது! என்றும் போட்டிருக்கு! அவங்களால டெத்க்கான காரணம் கண்டுபிடிக்க முடியலை"என்று சிருஷ்டன் சொல்ல
அதை கேட்ட அத்வேதா "ஓ! நோ!" என்று ராக்கியின் அறை கதவை நோக்கிச் செல்ல அவளை பின்பற்றி சிருஷ்டனும் சென்றான்.
வேதா ராக்கியின் கதவை தட்ட ராக்கி கதவை திறக்காமல் இருக்க சிருஷ்டன் தன் பலம் கொண்டு கதவை தள்ள கதவு சட்டென்று திறந்தது.
கதவை திறந்து உள்ளே சென்றவர்கள் ராக்கியை பார்த்து அதிர்ச்சியாகினர். அங்கு ராக்கி மூக்கில் ரத்தம் வழிய கையில் தூரிகையோடு இறந்து கிடந்தான்.
காரில் அத்வேதா மவுனமாக வர, சிருஷ்டன் அந்த மெளனத்தை கலைத்தான்.
"இப்ப நடந்துட்டு இருக்குற விசயங்கள் எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?" – சிருஷ்டன்.
"சில விசயங்களை நம்பித்தான் ஆகணும் சார்!" – அத்வேதா.
"இப்ப அந்த சித்திரப்பாவைக்கு என்ன தான் வேணுமாம்?" – சிருஷ்டன்.
"அவங்க சித்திரம் முழுவதுமா வரையணும்னு ஆசைப்படுறாங்க?" – அத்வேதா.
"வாட்! நீ என்ன முட்டாளா? அப்படி வரையணும் நினைக்குறவங்களை தான் அந்த அம்மா கொன்னுட்டு இருக்கு! இனி எவன் வரைவான்?" – சிருஷ்டன்.
"ம்ம்ம் அதுவும் கரெக்ட் தான்! அப்ப நாம வேற வழி தான் கண்டுபிடிக்கணும்!" – அத்வேதா.
"ராக்கியையும் அவன் நண்பனையும் அந்த அம்மா கொன்னதுக்கு கூட எதாவது லாஜிக் இருக்கு! ஆனால் இந்த ராகவனை எதுக்கு இந்தம்மா கொன்னாங்க?" - சிருஷ்டன்
"அது..." என்று இழுத்த அத்வேதா "அந்த காலத்தில் ராணி சாராதேவியுடைய ஆத்மா திருப்தி இல்லாமல் அலையுதுனு அவரை பகதூர் பின் ஆட்சி செய்த ராஜா வம்சத்து ஆட்கள் எல்லாரும் சேர்ந்து சில மந்திரங்கள் மூலம் கட்டி வைத்தார்கள். ஆனா அந்த ப்ரொஃபெசர் எப்போ அந்த ஓவியத்த அந்த ஜமீனில் இருந்து கொண்டு வந்தாரோ அப்பவே அவங்க அந்த மந்திர கட்டுகளில் இருந்து வெளியே வந்துட்டாங்க, எப்ப ராணியோட ஓவியம் முற்றுப் பெறனும் ன்னு காலேஜ் பசங்கள் கிட்ட அவங்க ஓவியத்துல கால் வரைய சொன்னாறோ அப்பவே ராணியும் ராஜாவின் ஆசை நிறைவேற போதுன்னு நம்ப ஆரம்பிச்சாங்க! அந்த ஓவியம் போற இடங்களில் இருக்கும் எல்லாரையும் அவங்க காலை வரைய சொல்லிக் கேட்கிறாங்க, அவங்க பயந்துட்டு மாட்டேன்னு சொன்னதும் ராஜாவின் ஆசை நிறைவேற்ற முடியாத அந்த கோபத்தில் கொல்றாங்க." – அத்வேதா.
"அப்ப இதுக்கு ஒரு முடிவே இல்லையா?" – சிருஷ்டன்.
"ம்ம்ம்" என்று சற்று நேரம் யோசித்த வேதா "அதற்கு ஒரு முடிவு இருக்கு!" என்று சொல்ல சிரு அவளை கேள்வியாக பார்த்தான்.
"நாம் உடனே வர்மா சார் கிட்ட போகணும்" என்று அத்வேதா சொல்ல சிருஷ்டன் குழம்பியபடியே அவளைப் பார்த்தான்.
இருவரும் வர்மா சார் முன் நின்றனர். வர்மா அவர்களை குழப்பமாக பார்த்தபடி "திரும்பவும் நீங்களா? இப்ப எதற்காக இங்க வந்து இருக்கீங்க?"
"நீங்க எங்களுக்கு ஒரு உதவி செய்யணும் வர்மா சார்" - அத்வேதா கூற
"ம்ம் சொல்லுங்க? என்ன செய்யணும்." – வர்மா.
அதற்கு அத்வேதா கூறிய பதிலில் வர்மா மற்றும் சிரு அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
வர்மா அந்த ஓவியத்தின் கால்களை வரைய அந்த ஓவியம் முற்றுப் பெற்றது. அந்த ஓவியம் முற்றுப் பெற்றதும் அதை வாங்கிக் கொண்டு போன அத்வேதா அதை தீயினில் ஈட்டு எரித்தாள். அதை பார்த்த சிரு "இதை நீ மொதலையே செஞ்சிருக்கலாம்! எதற்கு தேவையில்லாம வரையணும்? எரிக்கணும்?" – சிருஷ்டன்
"வரையாமா இந்த ஓவியத்தை எரிச்சா அவங்க திரும்ப வந்திருப்பாங்க! அதனால் தான் நான் இப்படி செஞ்சேன்!" – அத்வேதா.
"இனி அவங்க வர மாட்டாங்களா!" – சிருஷ்டன்.
"வரமாட்டாங்க" – அத்வேதா.
"அதை எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற" - சிருஷ்டன்
"அவங்க நினைச்சபடி ஓவியம் முற்றுப்பெற்றிடுச்சு! அதே மாதிரி அவங்க அவர் கணவர் பகதூரையும் பார்த்துட்டாங்க! இனி அவங்க திரும்ப வர மாட்டாங்க" – அத்வேதா
"பகதூரா? யாரைச் சொல்ற நீ ! ஓ! அந்தம்மா ஓட ஆளா? ஆனா அவரை எங்க அந்தம்மா பார்த்துச்சு! நம்ம வர்மா சார் தான வரைந்தார்?" என்று ஆரம்பித்த சிருஷ்டன் பாதியிலேயே நிறுத்திக் கொண்டான்
"ஓ! அந்த அம்மாவை டைவர்ட் பண்ணத்தான் வர்மா சாரை ராஜா கெட்டப் போட்டு வரையச் சொன்னியா? நீ கில்லாடி டீ பேயவே ஏமாதிட்டியே?" என்று சிருஷ்டன் கூறிவிட்டு முன்னே செல்ல பின்னால் சென்ற அத்வேதாவிற்கு நினைவுகள் வர்மாவை தான் சந்தித்த நாளிற்குச் சென்றது.
வர்மாவைப் பார்த்த வேதா அதிர்ந்தாள். அவர் வேதா கண்களுக்கு ராஜ தோரணையில் ராஜா பகதூராக தெரிந்தது அவள் நினைவில் ஆட அதை நினைத்துக் கொண்டே சிருஷ்டன் பின்னால் சென்றாள் அத்வேதா .
பாவை தணிந்தாள்.
முற்றும்

விரைவில் அடுத்த மர்மத்தோடு சந்திக்க வருகிறேன்.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
மர்மம் 4 ஓஜா

அழகான அன்பர்களே!
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டீசர் போடலாம்னு இருக்கேன்
உங்கள் சிருஷ்டன் - அத்வேதாவோடு
மர்மம் 4 ஓஜா
அதிலிருந்து சிறு துணுக்கு எபி விரைவில்
இரவு 11.55 .சுமா, நேத்ரா மற்றும் ஆரவ் அந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் கீழே பார்க்க அவர்களின் முன் வீற்றிருந்தது ஓஜா போர்ட்.

“ நேத்ரா ! எனக்கு என்னவோ இதை பார்க்கவே ரொம்ப பயமா இருக்கு .பிளிஸ்... இதை இப்பவே ஸ்டாப் பண்ணிக்கலாம் ‘’ என்று ஓஜா போர்ட்டை குறிப்பால் காட்டி நேத்ராவிடம் கெஞ்சினாள். சுமா.

அடச்சீ ! சும்மா இரு .... ஆவி ...பூதம்னு... பிணாத்திகிட்டு இருக்க. உலகத்தில் பூதம் , ஆவி ஒன்று கிடையவே கிடையாது. . – நேத்ரா

என்ன நேத்ரா ? சுமா பயப்படுறா போல ? – ஆரவ்

நோ ! வே ஆரவ் ! ஐ வோண்ட் குயிட் . லெட்ஸ் ஸ்டார்ட் – நேத்ரா

ஆரவ் அந்த ஓஜா போர்ட்டில் தான் கையில் வைத்திருந்த சில்வர் காயினை எடுத்து போர்ட்டில் வைத்தான். சட்டென்று அந்த இடம் இருள் சூழ்ந்ததும் சுமா நேத்ராவின் கைகளை பயத்தில் பிடித்துக் கொண்டாள்

ஆரவ் வேகமாக அருகில் இருந்த தீப்பெட்டி கொண்டு மெழுகுவர்த்தியை ஏற்றினான். நீ வந்துட்டீயா ? என்று ஆரவ் கேட்டதும் காயின் நகர்ந்து அங்கு எழுதப்பட்டு இருந்த எஸ்ஸில் சென்று நின்றது. அந்த காயின் நகர்ந்து அங்கிருந்த ஒவ்வொரு எழுத்திற்கும் சென்று வந்தது. அந்த எழுத்தை ஆரவ் சத்தமாக படித்தான்

வி.... ன.... யா.... . ஓ ! உன் பேர் வினயாவா ? – ஆரவ்

அதற்கு ஆம் என்று சென்று நின்றது காயின்அதன்பின் நேத்ரா மெதுவாக

உன்னை நாங்க பார்க்கலாமா?

அவள் கேட்டதை தொடர்ந்து பலமாக காற்று அடித்தது. அதை தொடர்ந்து மூவரும் மூன்று மூலைகளில் தன் கால்களை கட்டிக் கொண்டு பயத்தில் சென்று அமர்ந்தனர். அப்போது ஒரு உருவம் அவர்களை நோக்கி வந்தது. அதை கண்ட மூவரும் வினயா என்று அலற….

########

ஆதியின் பார்வையை கண்ட அத்வேதா சிருஷ்டனிடம் பாய்ந்தாள் .ஹேய் யூ மேன் ? உனக்கு என்ன தான் வேணும் ? எப்ப பாரு என்னய்யவே டார்கெட் பண்ற ? – அத்வேதா

நீ தான் வேணும் – சிருஷ்டன்

வாட் ? – அத்வேதா

அட ஏன்மா ? எல்லாத்துக்கும் கத்துற. உன் அறிவு வேணும் . உன் கோ ஆப்பரேசன் வேணும்னு சொல்ல வந்தேன் – சிருஷ்டன்

திஸ் இஸ் த லிமிட் மிஸ்டர் சிருஷ்டன் – அத்வேதா

அடச்சீ ! உட்கார் ! என்று சட்டென்று சிருஷ்டன் கத்தி சொன்னதும் பயத்தில் வேகமாக அமர்ந்தாள் அத்வேதா
 
Top Bottom